வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, December 24, 2009

பகுத்தறிவு பகலவனுக்கு மறைவு உண்டா?


தந்தை பெரியாரின் நினைவு நாள் இன்று. அவர் இறந்து 36 வருடங்கள் ஆகியும் இன்னும் அவரின் கொள்கைக்கு எதிர்ப்புகள் எவலோவ வந்து கொண்டுதானிருக்கிறது. எனவே பெரியார் இறந்தும் நம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார், அவரின் கொள்கை வழியாக எல்லா தமிழரின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பெரியார் சிந்தனைகள் முழுவதும் படித்து சுவைக்க ஏட்டில் எழுத பட்டவை மட்டும் அல்ல அவர் தான் சொன்ன சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்க பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல.

பெரியாரின் அரிய சிந்தனையில் உதித்த சில திட்டங்களைப் பார்ப்போம்.

சாதிமுறை அடியோடு களையப்பட வேண்டும். கோயில்கள் கூடாது. பொதுவாக பிராத்தனை மண்டபங்கள் கட்டலாம்.

பெற்றோர்கள் பெண்களை 21 வயதுவரை நன்கு படிக்க வைக்க வேண்டும். அந்தப் பெண் வேலைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

பிறக்கின்ற குழந்தைகளை அரசே ஏற்றுக்கொண்டு அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

எல்லோரும் ஒரே மாதிரி ஆடை அணிய வேண்டும்.

அதிக மதிப்புள்ள தங்க நகைகளைப் பெண்கள் அணிவதை தடை செய்ய வேண்டும்.

அரசாங்க வேலை வாய்ப்புகிளல் பெண்களுக்கு (பார்ப்பன பெண்களும் அடங்குவர்...இதனை ஏன் சொல்லுகிறோம் என்றல் பார்ப்பன எதிரி பெரியார் என்று சொல்லி திரியும் அன்பர்களுக்கு) சம உரிமை வழங்க வேண்டும்.

கோயில் திருவிழாக்களை நிறுத்தி, சமூகவியல், அறிவியல், பொருளியல் கண்காட்சிகள் நடத்த வேண்டும்.

பெரியாரின் புரட்சிக் கருத்துகள் அன்று பலருக்கு எரிச்சலை அளித்தது. ஆனால், இன்று அவரது சிந்தனைகள் படிப்படியாக செயல் வடிவம் பெற்று வருகிறது என்பதையும் நாம் அறிவோம்.

மேலும் பெரியார் என்றவுடன் அவரது கடவுள் மறுப்புக் கொள்கைதான் நினைவுக்கு வரும். அதே போல் பெரியார் என்றவுடன் நமக்கு அவரது சிக்கனமும் நினைவுக்கு வரும். வர வேண்டும்.

பொதுவாழ்வில்…. பணிபுரிபவர்கள் அனைவரும் இதை (சிக்கனம்) எண்ணிப்பார்க்க வேண்டும். பொதுப் பணத்தை தண்ணீராகச் செலவழிப்பவர்கள் இன்று பெருகிவிட்டார்கள். பெரியார் சிக்கனக்காரர் மட்டும் அல்ல. வரவு செலவுக் கணக்கு எழுதி வருபவர். ஐந்து பைசா என்றாலும் கணக்கு எழுதிவிடுவார் பெரியார்.

பயணத்தின்போது விலை குறைந்த உணவுப் பண்டங்களைத்தான் வாங்கிச் சாப்பிடுவார்.

உடைகள்பற்றிக் கவலை கொள்ளமாட்டார். முடிவெட்டுவதோ, முகம்மழிப்பதோ அவருக்கு பிடிக்காது. நேரமும், காசும் வீணாகும் என்பார். எப்பொழுதும் தாடிதான். வெற்றிலைப்பாக்கு பழக்கம் கூடக் கிடையாது. சோப்பு, பவுடர் தொடவேமாட்டார். குளிப்பது கூட வார்ம ஒருமுறைதான். தன் உடல் நலம் குறித்து அக்கறையே கொள்ளமாட்டார்.

கழகக் கூட்டங்கள்பற்றிய “வால்போஸ்ட்”களை விடுதலை அலுவலகத்திலேயே அச்சடிப்பார். வண்ணத்தில் போஸ்டர்கள் அடிக்க சம்மதிக்கமாட்டார்.

அலுவலகத்திற்கு வரும் பார்சல் கள்ளிப் பெட்டிகளைக் கொண்டே மேஜை, நாற்காலிகள் செய்யச் சொல்வார்.

அலுவலகத்திற்கு சுண்ணாம்பு அடிப்பதைக்கூட குறைந்த கூலியில் செய்து முடித்து விடுவார்.

எடைக்கு எடை பெரியாருக்குப் பரிசுகள் வழங்குவார்கள். அதையெல்லாம் அவர் கட்சி நிதியில் சேர்ந்து விடுவார். அவருக்கு அளிக்கப்படும் கறுப்புத் துணிகளைத் தொண்டர்களுக்கு கொடுத்து விடுவார்.

அலுவலகத்திற்கு வரும் தபால் உறைகளை குப்பைத் தொட்டியில் போடமாட்டார். அலுவலகப் பையன்களைகொண்டு அவற்றை மீண்டும் பிரித்து ஒட்டி புதிய உரை தயார் செய்து விடுவார்.

இப்படி எல்லா வகையிலும் மிகவும் சிக்கனத்தை கடைப்பிடித்தவர் பெரியார். அதனால்தான் இன்று திராவிடர் கழகம் விழுதுகள் ஓடி மிகப் பெரிய ஆலமரமாக ஓங்கி வளர்ந்து நிற்கிறது.

பல கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள்… ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்…. என கல்விப் பணியில் கழகம் கடமை ஆற்ற முடிகிறது.

பின்தங்கிய மாணவர்களின் அறிவுக் கண்களை திறக்க பெரியாரின் சிக்கனமே உறுதுணையாயிற்று என்பதை நாம் உணரலாம்.

பெரியார் மிகுந்த கோபக்காரர். வாய்மையும், தூய்மையும் நமது இரு கண்கள் என போற்றினார். நேர்மையில்லாதவர்களைக் கண்டால் கடுமையாகக் கோபிப்பார். ஆனால், அதே சமயம் அடுத்தவர்களின் சுயமரியாதையை மிகவும் மதிப்பார்.

பண்பாட்டின் சிகரமாகத் திகழ்ந்த பெரியார் தனது இறுதி மூச்சுவரை ஓயெவுன்றித் தொண்டாற்றினார்.

பெரியாரின் புரட்சிகரமான போராட்டங்கள் தொடர்ந்தன.

26-1-70 இல் தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்; 22-1-71இல் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு; 30-9-73இல் கறுப்புச் சட்டை மாநாடு; என தொடர்ந்து மக்கள் விழிப்புணர்வு போராட்டங்களைப் பெரியார் நடத்தினார்.

18-11-72 முதல் 28-11-1973 வரை நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார். சாதி ஒழிப்புப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இதற்கா மதுரையில் மாபெரும் மாநாட்டைக் கூட்டினார். பெரியாரின் உடல்நிலையும் மோசமாகி வந்தது. ஆனால், பெரியார் அவர்கள் தனது நோய்பற்றியோ உடல் பலவீனம் ஆவது குறித்தோ கடுகளவும் அஞ்சவில்லை.

சென்னையில் 19-12-1973 இல் தியாகராஜா நகரில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பெரியார் நீண்ட நேரம் சொற்பொழிவாற்றினார். அடுத்த நாள் பெரியாரின் உடல் நலம் மிகவும் நலிவடைந்தது. உடனடியாக வேலூர் கிறித்தவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலன் தரவில்லை.

தந்தை பெரியார் 24-12-1973 காலை ஏழரை மணி அளவில் மறைந்தார். மானிட சமுதாயம் சமத்துவமாக வாழ-தன்னையே அர்ப்பணித்த அந்தப் பகுத்தறிவு பகலவன் மறைந்தது.

பகலவனுக்கு மறைவு உண்டா?

“சிவந்த மேனி, தடித்த உடல், பெருந்த தொந்தி, நல்ல உயரம், வெளுத்த தலைமயிர், நரைத்த மீசை, நடுத்தரமான தாடி, திரண்டு நீண்ட மூக்கு, அகன்ற நெற்றி, உயர்ந்த மயிர் அடர்ந்த புருவங்கள், ஆழமான கண்கள், மெதுவான உதடுகள், செயற்கைப் பற்கள், ஒரு சாதாரண மூக்குக் கண்ணாடி.

இடுப்பில் எப்போதும் ஒரு நான்கு முழத்துணி. காலில் செருப்பு. முக்கால்கை வெள்ளச்சட்டை. சட்டைக்கு ‘மேல் ஐந்து முழப் போர்வை. காப்பி நிறக்கலர். கையில் எப்போதும் மொத்தமான தடி.

இவர்தான் பெரியார். தமிழரின் தலைவர் என்று பெரியாரை நம் மனக்கண்முன் படம் பிடித்துக்காட்டுவார் சாமி சிதம்பரனார்.

“வயதில் அறிவில் முதியோர் - நாட்டின்
வாய்மைப் போருக்கென்றும் இளையார்!
உயர் எண்ணங்கள் மலரும் சோலை!”

என்று பாடுவார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

தந்தை பெரியார் -
பகுத்தறிவுப் பெட்டகம்
 தந்தை பெரியார் -

மூடநம்பிக்கைகளை வேரோடு களைந்த சமூகச் சிந்தனையாளர்.
பெரியாரின் தத்துவங்களைப் பின்பற்றினால், சிறியார் எல்லாம் பெரியார் ஆவார்....

தொகுப்பு உதவி: தந்தை பெரியார் இணையத்தளம்

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]