வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, September 19, 2011

என்றும் வேண்டும் திராவிடர் கழகம்

வீழ்ந்த துன்றன் பகைப் புலம்
வாழ்ந்தனர் திராவிட மக்கள் இனிதே!

தாழ்வுற்றுக் கிடந்த திராவிடரின் தலை நிமிரச் செய்த இயக்கம் திராவிடர் கழகம். திராவிடர் சமுதாயத்தின் மானத் தையும், அறிவையும் மீட்டெடுத்திட உருவானதோர் இயக்கம் திராவிடர் கழகம். தந்தை பெரியார் என்ற ஒற்றை மனிதரின் சுயசிந்தனையின் வடிவம்தான் திராவிடர் கழகம். தமிழர்கள் சுய மரியாதையோடு இன்றும், என்றும் வாழ்ந்திட இக்கழகம் நின்று நிலை பெற்றிட வேண்டும். அதற்கான காரணி கள் அன்றைய நாளினைப் போல் இன்றும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. திராவிடர் கழகத்திற்கு முன்னோடியான நீதிக்கட்சி தோன்றிய தற்கான காரணங்களைத் தெரிந்தோ மாயின் இன்றும் நம் இன எதிரிகளாம் ஆரியப் பார்ப்பனர்கள் தங்களை மாற்றிக் கொள்ளவே இல்லை என்பது தெரியும்.

இன்றையத் தமிழின இளைஞர்கள், மாணவர்கள் நம் இனநலம் காக்கப் புறப்பட்ட முன்னோடிகள் கடந்து வந்த கரடுமுரடான, முட்புதர்களாலான பாதைகளை, வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். அப்பொ ழுதுதான் முகப்பூச்சுப் பொடிகளால் புனைந்து கொண்டு புவனத்தை ஏமாற்றும் எத்தர்களைப் புரிந்து கொண்டு விலகிச்செல்ல முடியும்.

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்,
என்பார் திருவள்ளுவர்.
பேராசைக் காரனடா பார்ப்பான்...
என்பார் பார்ப்பனப் பாரதியார்.
அன்று, சென்னை நிருவாகசபை அங்கத்தினரான சர். அலெக்சாண்டர் கார்டியூ என்ற வெள்ளையர் சர்வீஸ் கமிசன் முன் சாட்சியமாகச் சொன் னார்,

1892-_க்கும் 1904_க்கும் இடைப்பட்ட காலத்தில் மாகாண சிவில் சர்வீஸ் தேர் வில் வெற்றி பெற்றோர்.

16 பேரில் 15 பேர் பார்ப்பனர்கள். சென்னை உதவிப் பொறியாளர் தேர்வில் வெற்றி பெற்றோர்

21 பேரில் 17 பேர் பார்ப்பனர்கள். துணையாட்சியர் 140 பேரில் 77 பேர் பார்ப்பனர்கள்.

1913-இல் மாவட்ட முன்சீப்கள் 128 பேரில் 93 பேர் பார்ப்பனரே இஃது எத்தனைக் கொடுமை என்றார்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி யில் ஆங்கிலேயருக்கு மொழிபெயர்ப் பாளர்களாக இருந்தவர்கள் பெரும் பாலோர் பார்ப்பனரல்லாதாரே. கம் பெனியின் இராணுவத்தில் பெரும்பா லோர் சூத்திரரும், பஞ்சமருமேயாவர். ஆனால், ஆட்சிப் பணியில் ஏமாற்றமே. சமஸ்கிருதவழிக் கல்வியைக் கொண்டு வந்து படித்தவர்கள் அனைவரும் பார்ப் பனரே. குறைந்த அளவு முஸ்லிம்கள் அரபு வழியில் பயின்றனர். தாய் மொழிவழிக் கல்வி இந்தியர்க்குச் சரிவராது எனக் கூறி ஆங்கில வழிக் கல்வியை மெக்காலே மூலம் 1835இல் நடைமுறைப்படுத்தினர். அடுத்த புத்தாண்டுக்குள் 17,630 பேர் கற்றுத் தேர்ந்தனர். இதில், இந்துக்கள் 13,699 பேர், முஸ்லிம்கள் 1636 பேர். இவ் விரண்டிலும் பார்ப்பனர்களே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றனர். குறைந்த அளவிலான 236 பேர் மட்டுமே கிறித்தவர்கள் தேர்வாயினர்.

பார்ப்பான் பால் படியாதீர்; சொற் குக் கீழ்ப்படியாதீர் என்பார் புரட்சிக் கவிஞர்.

1906இல் சென்னை நகராட்சியி லிருந்து ஓர் உறுப்பினரை அனுப்பிட வேண்டுமென்ற சூழலில் டாக்டர் டி.எம். நாயர், சிவஞான முதலியார், பி. தியாக ராசச் செட்டியார், வி.சி. தேசிகாச்சாரி யார் வாக்கு வேண்டி நின்றனர். வருகை தந்த 32 உறுப்பினர்களில் 16 வாக் கினைப் பெற்றோர் சட்டமன்றம் செல்ல வேண்டிய நிலை. முதல் முறை, இரண்டாம் முறையென வாக்குப் பதிவு நடந்து, மீண்டும் மீண்டும் குறைவான வாக்குப் பெற்ற ஆச்சாரியாரை வில கிடச் சொல்ல, அவர் மறுத்தார். அடம் பிடித்தவரால் சட்டமன்றத்திற்கு ஆள் அனுப்ப முடியாமல் போய் விடக் கூடாதே என்று பெருமகனார் டி.எம். நாயர் அவர்கள் விலகிக் கொண்டார். தேசிகாச்சாரி வெற்றி பெற்றார். இரு முறையும் அதிக வாக்குகள் பெற்றவர் நாயரே. நாயர் அவர்கள் ஆன்டிசெப்டிக் என்ற ஆங்கில முதல் மருத்துவ நூல் எழுதிச் சிறப்புப் பெற்ற மகான்.

இந்தியரென்றால் பார்ப்பனர்கள் தான். இந்தியமயமாக்கலென்றால் பார்ப்பனமயமாக்கல்தான். பணி வாய்ப்புப் பார்ப்பனரல்லாதோர்க்குக் கிட்டவில்லை. கிடைத்த குறைந்த இடத்திலும் பார்ப்பனர்களால் தொல் லைகள். வழக்காடும் தொழிலிலும் நெருக்கடிகள். பொறுத்தது போதும் பொங்கி எழு என வழக்கறிஞர்கள் பி. சுப்பிரமணியம், எம். புருஷோத்தம நாயுடு தி மெட்ராஸ் நான்பிராமின் அசோஸியேசன் என்ற அமைப்பை உருவாக்கி, ஆயிரம்பேருக்குமேல் சேர்த்தனர்.

இந்நிலையில்தான் 1912இல் மெட் ராஸ் யுனைடெட் லீக் எனும் பார்ப் பனரல்லாதார் சங்கம் அதாவது சென்னை திராவிடர் சங்கம் துணை யாட்சியர் தஞ்சை சரவணப் பிள்ளை, நாராயணசாமி நாயுடு, ஜி. வீராசாமி நாயுடு, பொறியியல் துறை துரைச்சாமி முதலியார் ஆகியோரால் தொடங்கப் பட்டது. தனியார் மருத்துவராகப் பணி யாற்றிய டாக்டர் சி. நடேசனார் செய லாளராகப் பொறுப்பேற்றார். பின் னாளில் தலைவரானார். கருணாகர மேனன், பனகல் அரசர் ராமராய நிங்க ரும் உறுதுணையாகச் செயல்பட்டனர்.

மேல்படிப்பிற்காகச் சென்னை சென்ற திராவிடர் தமிழர்கள் சோறின்றி உறைவிடமின்றித் திண் டாடினர். பெரும்பாலோர் சொந்த ஊர் திரும்பினர். இந்தியாவின் முதல் நிதி யமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட் டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டி.எம். நாரா யணசாமிப் பிள்ளை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணிய நாடார் போன்றோர் பார்ப்பனரால் படிக்க வழியின்றித் திகைத்து நின்றோராவர்.

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்

அருமை உடைய செயல் என்னும் குறள்நெறிக்கேற்ப சி. நடேசனார் அவர்கள் திராவிட மாணவர் விடுதி ஒன்றினைத் திருவல்லிக்கேணி அக்பர் சாகிபுத் தெருவில் நிறுவினார். அவ்விடு தியில், புறக்கணிக்கப்பட்டோரெல்லாம் சேர்ந்து, தங்கிப் படித்துத் திரும்பினர்.

பார்ப்பனரல்லாதார் சங்கத்தைப் பாரதியார் கேலியும், கிண்டலும் செய்து பார்ப்பனப் பாணியில் இந்தியா ஏட்டில் எழுதினார். பார்ப்பனரல்லா தார் சபையைப் பின்பற்றிச் செட்டி யல்லாதார், முதலியல்லாதார், பிள்ளை யல்லாதார், நாயுடு அல்லாதார் சபை களாக ஏற்பட்டு, மற்றோர்க்கு மனப் புண்ணை ஏற்படுத்துமே; பாரத மகா ஜாதி என ஒன்றுபடுதல் வேண்டாமோ என்றார். வேதம் ஓத வேண்டிய பார்ப்பான் வேறொருவர் பணியை ஏன் பறிக்க வேண்டும்? என்று எழுத வக்கில்லாத பாரதியார்.

ஆன்மீகவாதியாக, தெய்வ பக்தி மிக்கவராக, தன் வீட்டுச் சமையலைக் கூடப் பார்ப்பனரைக் கொண்டு சமைத்து உண்ட, தேசியவாதியான பி.டி. தியாகராயர் 1914இல் சென்னை வந்த காந்தியாருக்கு வரவேற்புத் தந்து சிறப்பித்தவர். அவரே, மயிலாப்பூர் கோவில் நிகழ்ச்சிக்குப் பெருந் தொகையினை நன்கொடை தந்தார்; விழாவுக்குச் சென்றார்; தனக்குக் கீழ்ப் பணியாற்றிய குமாஸ்தா பார்ப்பானால் மேடையின்கீழ் அமர வைக்கப்பட்டார்.

சூத்திரனென்பதால் பெருமைக்குரி யோர் அவமதிக்கப்படுவதும், சிறுமைக் குரியோர் மேடையை அணியப்படுத் துவதும் கண்டு வெகுண்டார். பார்ப் பனரல்லாதார் சங்கத்தில் தன்னை அய்க்கியப்படுத்தினார். விளைவு, 20.11.1916இல் சென்னை, வேப்பேரி, எத்திராஜுலு முதலியார் இல்லத்தில் இராஜரத்தின முதலியாரை முதல் தலைவராகக் கொண்ட தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் தோன்றியது. அலைகடலில் தத்தளித்த திராவிடர் தமிழர்க்குக் கரை விளக்குத் தென் பட்டது. அதுவே, நீதிக்கட்சியாய், திராவிடர் கழகமாய், திராவிட முன்னேற்றக் கழகமாய் இன்று பரிணாமம் பெற்றுள்ளது.

அன்றைய நெருக்கடிகள் இன்றும் ஆரியப் பார்ப்பனர்களால் தொடர் கின்றன. விழிப்போடு செயல்பட வேண்டிய நிலை நம் தமிழர் தலைவ ருக்கும், திராவிடர் கழகத்திற்கும். மக்கள் தொகை பெருகிய நிலையில் கூட்டிட வேண்டிய 69 விழுக்காடு ஒதுக்கீடு, தேவையா? சட்டத்திற்குக் கூடுதல் இல்லையா? கிரீமிலேயர் வைக்கலாமே! என்ற பார்ப்பனீய ஓலங்கள்.

இந்திய அளவிலான 27 விழுக்காடு ஒதுக்கீடு கொடுக்கவே கூடாதென்ற கூக்குரல்கள். தொழிற் கல்வி பயில நுழைவுத் தேர்வு வேண்டு மென்ற காட்டுக் கூச்சல்கள், பொதுத் துறைகளையெல்லாம் தனியார்த் துறைகளாக்கி இடஒதுக்கீட்டை ஒழித்திட எத்தனித்தல். திராவிடர் இயக்க வரலாற்றுச் சாதனைகளையே இந்தத் தலைமுறை தெரியக் கூடாதென்ற வரலாற்று அழிப்புகள். சமச்சீர்க் கல்வி ஏன்? குலக்கல்வியே வேண்டுமென்ற அதிகாரத் திமிர்கள். ஒற்றைப் பார்ப்பனராய் ஏழு கோடித் தமிழர்களையும் இளித்தவாயினராய் எண்ணி ஆட்சி என்ற பெயரில் அலைக்கழித்திடும் அவலங்கள்.

இத்தனையையும் எதிர்கொண்டு திராவிடர்த் தமிழர் நலன் பேணிட வேண்டும் அக்கிரகாரச் சேரியை நோக் கித் திருப்பிடத் தமிழர் தலைவரை விட்டால் ஆளில்லை. அதனால்தான் சொல்கிறோம் ஆரியம் அழியாத வரைத் திராவிடர் கழகம் என்றும் வேண்டும்.

வீழ்ந்தவர் பின்னர் விழித்ததற்கே அடையாளம் -_ வாய்
விட்டிசைப்பீர் சுயமரியாதை எக்காளம்.

என்றும் வேண்டும் திராவிடர் கழகம்


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]