வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, September 14, 2011

தாமோதரதாஸ் மோடி தேசிய அரசியலில் குதிக்கப் போகிறாராம்


பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளாக இருந்தாலும் சரி, குஜராத்தில் கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான தாக்குதலுக்குக் காரணமான குற்றவாளிகளாக இருந்தாலும் சரி (2002) இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும்கூட சட்டத்தின் பிடியில் சிக்காமல், குற்றங்களுக்கான தண்டனைகளையும் அனுபவிக்காமல் சுதந்திர மனிதர்களாக - கொஞ்சம்கூட கூச்சநாச்சமில்லாமல் ராஜநடை போட்டுத் திரிகிறார்கள் என்றால் இதைவிட இந்தியாவுக்குத் தலைக் குனிவும், வெட்கக்கேடும் வேறு என்னதான் வேண்டும்?

இதுபற்றி திருச்சிராப்பள்ளியில் ஞாயிறு அன்று நடை பெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் ஒரு தீர்மானமும்கூட நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவர்களின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண் டனையையும் பெற்றுத் தராவிட்டால், நிருவாகம், சட்டம், நீதி இவற்றின்மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமலேயே போய்விடும் என்பதோடு, வன்முறைக்கு ஊக்கம் தரும் என்றும் அந்தத் தீர்மானத்தில் அழுத்தமாகச் சுட்டிக் காட்டப்பட்டும் உள்ளது.

நேற்று மாலை ஏட்டில் வெளிவந்துள்ள செய்தி - குஜராத் மாநில முதல்வராக இருக்கிற நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடி தேசிய அரசியலில் குதிக்கப் போகிறாராம். பி.ஜே.பி.க்கு அடுத்த அகில இந்தியத் தலைவர் அவர்தானாம். பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளரும் அவரேதானம்.

பாரதீய ஜனதா கட்சியின் யோக்கியதை எந்தத் தரத்தில் இருக்கிறது என்பது ஒரு புறம்; இந்தியாவின் அரசியல் தன்மை எவ்வளவுக் கேவலமாக உச்சக்கட்ட டிகிரியில் இருக்கிறது என்பது இன்னொரு புறம்.
காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இஹ்சான் ஜாப்ரி என்பவர் குஜராத் கலவரத்தில் மிகக் குரூர மான முறையில் கொல்லப்பட்டார். டயரைக் கொளுத்தி ஜாப்ரி யின் கழுத்தில் மாட்டி கொடுவாளால் நெஞ்சைப் பிளந்தார்கள். பின்னர் பெட்ரோலை ஊற்றியும் கொளுத்தினார்கள்.

இதுபற்றி மனைவியான ஜாக்சியா காவல்துறையிடம் புகார் கொடுத்தார். காவல்துறை ஒத்துழைப்புடன் மோடி ஆட்சியில் எல்லா வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன. புகார் செய்து என்ன பலன்?

உச்சநீதிமன்றம் சென்றார். இப்பொழுது கீழ்க் கோர்ட்டிலேயே வழக்கைத் தீர்த்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. (என்னே காருண்யம்!)

அவ்வளவுதான். குற்றத்திலிருந்து விடுதலையானது போன்ற உணர்ச்சியுடன் பி.ஜே.பி.யினரும், சங்பரிவார்க் கும்பலும் குதியாட்டம் போடத் துவங்கிவிட்டனர்.

இவ்வளவுக்கும் கீழ்க் கோர்ட்டில் இனிமேல்தான் விசாரணையே தொடங்கப்படவேண்டும். மோடி ஆட்சியில் கீழ்க்கோர்ட்டு எப்படி இருக்கும் என்று இப்பொழுதே முடிவு செய்துவிட்டார்கள் என்று தெரிகிறது.

இனி பிரச்சினை இல்லை. மோடி அகில இந்திய அர சியலுக்கு வரப்போகிறார் என்று டாம் டாம் அடிக்கத் தொடங்கி விட்டார்கள். சோ போன்ற பார்ப்பனர்களை இனிமேல் கையால் பிடிக்க முடியாது.

ஆக, இந்தியாவில் ஒருவர் அகில இந்தியத் தலைவராக வேண்டுமானால், அடுத்த பிரதமராக ஆக வேண்டுமானால், அவர் அதற்கு முன்னால், ஒரு மாநிலத்தில் முதலமைச்சராக இருக்கவேண்டும்; குறைந்த பட்சம் 2000 பேர்கள் படு கொலைகளுக்குக் காரணமான சூத்திரதாரியாக இருக்க வேண்டும். தங்களுக்கு வேண்டாதவர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் இடித்துத் தரை மட்டம் ஆக்கப்பட வேண்டும்.

14 பேர்களை விறகுகள் போல ஒரே கட்டாகக் கட்டி பேக்கரி அடுப்பில் எரியூட்ட வேண்டும். கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து அந்தக் கருவை எடுத்து நெருப்பில் போட்டுப் பொசுக்க வேண்டும்.

வெளிநாட்டுக்கு அந்த முதலமைச்சர் போக விரும்பினால், அந்த நாட்டு அரசாங்கம் எங்கள் நாட்டுக்குள் நுழையக் கூடாது என்று சொல்லவேண்டும். அதுதான் உலகளாவிய மகத்தான கவுரவமாகக் கருதப்படவேண்டும்.

அந்த முதலமைச்சரின் இத்தகைய செயலைக் கண்டு அந்த நாட்டின் பிரதமர் தன் தலையில் அடித்துக் கொள்ள வேண்டும். எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாடுகளுக்குச் செல்வது என்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழவேண்டும்.

யார் பாதிக்கப்பட்டார்களோ அவர்களைப் பொடாவில் கைது செய்யவேண்டும். முகாம்களில் சரணடைவோரைக் கேவலமாக, கொச்சைத் தனமாக விமர்சிக்கவேண்டும்.

இத்தகைய விஸ்தாரமான கல்யாண திருக்குணங்கள் இருந்தால்தான் இந்தியாவில் ஒருவர் தேசிய அரசியலில் நுழைவதற்கான அனுமதிச் சீட்டு கிடைக்கும். அதற்குப் பின் பிரதமர் நாற்காலியில் அமருவதற்கான தகுதியும் வந்து சேர்ந்துவிடும். அப்படித்தானே?
பாரத புண்ணிய பூமியின் யோக்கியதையைக் கண்டு ஆடுங்கள்- பாடுங்கள் - ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று கூவுங்கள்!

இந்த நாட்டு ஊடகங்கள் எவ்வளவு தூரம் சங்கை கெட்டுப் போயிருந்தால், மோடி போன்ற கொடூரங்களைத் தோளில் தூக்கிச் சுமக்கும்? திருவாளர் பொதுமக்கள் சிந்திக்கட்டும்!

---விடுதலை தலையங்கம்,14-09-2011


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]