வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, September 06, 2011

கல்லை கல்லுன்னு நீ சொன்ன என்ன - நான் சொன்ன என்ன?

 முதலாளி: கடை வீதியிலே யாருட்டேயோ சொன்னியாமே - எங்க எஜமான் ஊருக்கு நல்லதுதான் செய்றாரு.ஆனா கோயிலில் இருக்கிறேதேல்லாம் கல்லுன்னு சொல்லுறாருன்னு சொன்னியாமே! அப்படியா சொன்னே கோயில்லே கல் இல்லாம வேற என்னாட இருக்கு?

வேலை ஆள்: சாமிதானுங்க எசமான் இருக்கு

முதலாளி: சாமியா? இங்கே வாடா (வருகிறான் பக்கத்தில்) ஒரு காலைத் தூக்குடா. கையை இப்படி வைடா. (நடராஜர் சிதம்பரத்திலிருப்பதுபோல் நிற்க்கச் செய்கிறார்). நிற்கிறான் வேலை ஆள். பத்திரிகை படித்துகொண்டு இருக்கிறார் முதலாளி.(வேலை ஆள் காலை ஊண்டுகிறான்). டேய் தூக்குடா காலை. நில்லுடா (மறுபடியும் காலை தூக்கி சிறிதுநேரம் நின்று விட்டு காலை ஊண்டுகிறான்). டேய் ஏண்டா உண்டுன. தூக்குடா காலை.

வேலை ஆள்:  காலை வலிக்குதுங்க எஜமான்

முதலாளி: ஏண்டா ரெண்டு நிமிஷம் நிக்கிறதுக்கு காலை வலிக்குதுன்னு சொல்றியே - அப்ப தூக்கின காலை இன்னும் கீழே ஊண்டாமே இருக்குதேடா?

வேலை ஆள்:  அது கல்லு எஜமான்

முதலாளி: என்ன அது கல்லா? ஏண்டா கல்லுன்ன சொன்ன? கல்லை கல்லுன்னு நீ சொன்ன என்ன - நான் சொன்ன என்ன? நான் சொன்ன ஏனடா எங்க எஜமான் கல்லுன்னு சொல்லுறாருன்னு எல்லார்கிட்டயும் போய் சொல்லுறே?

வேலை ஆள்:  இனிமே சொல்லமாட்டேனுங்க எஜமான்.

---------- அறிஞர் அண்ணாவின் சந்திரோதயம் நாடகத்தில் இருந்து ஒரு பகுதி.


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]