வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, September 13, 2011

முத்தையா முதலியார் வாழ்க, வாழ்கவே!

இந்நாள் - ஒடுக்கப் பட்ட மக்களால் என்றும் மறக்கப்படவே முடியாத - மறக்கப்படவே கூடாத பொன்னாள். ஆம். இந் நாளில்தான் (1928) மரி யாதைக்கும், மிகுந்த போற்றுதலுக்கும் உரிய எஸ்.முத்தையா முதலியார் அவர்களால் முதன் முத லாக வகுப்புவாரி உரிமை ஆணை பிறப்பிக்கப்பட்ட நாள். இதற்காக தந்தை பெரியார் குடிஅரசு இதழில் (11-11-1928) மந்திரி எஸ். முத்தையா முதலியார் வாழ்க, வாழ்கவே! என்று எழுதினார்.

1921 முதல் நீதிக்கட்சி ஆட்சியில் பல்வேறு சட் டங்கள் இந்த வகையில் பிறப்பிக்கப்பட்டாலும், 1928 இல் நீதிக் கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் தலைமையிலான அமைச் சரவையில் இடம் பெற்ற எஸ்.முத்தையா முதலியார் அவர்களால் கொண்டுவரப் பட்ட இந்தச் சட்டம்தான் (ஆணை எண். 744 பொது, நாள் 13-9-1928) முறை யான வகுப்புவாரி பிரதி நிதித்துவத்தை நிர்ண யித்து செயல்படுத்தப்பட்ட தாகும்.

அதன்படி மொத்தம் 12 இடங்கள் என்றால் அதில், இந்து பார்ப்பனரல்லாதா ருக்கு 5 இடங்கள், பார்ப் பனர்களுக்கு 2 இடங்கள், இசுலாமியர்களுக்கு 2 இடங்கள், கிறித்துவர் களுக்கு 2 இடங்கள், ஆங் கிலோ இந்தியர் உட்பட பிறருக்கு 1 என்று ஆணை பிறப்பித்தார்.

சுதேசமித்திரன், இந்து ஏடுகள் எகிறிக் குதித்தன. அக்னி அபிஷேகம் செய் தன. (அக்னி புத்திரர்கள் அல்லவா?) முத்தையா முதலியாருக்கு வகுப்புப் பித்தம் தலைக்கேறியது என்று தன் பூணூலுக்கு ஒரு தடவை முத்தம் கொடுத்துவிட்டு எழுதியது - அல்ல, அல்ல - சாடியது. சுய ஜாதிமித்திரன்.

இந்து என்ன எழுதி யது தெரியுமா? முத்தையா முதலியார் செய்தது தேசத் துரோகம், அநீதி, வகுப்புப் பித்தம் - மக்கள் இதனைக் கண்டிக்கின்றனர் என்று எழுதியது.

மக்கள் என்றால் எந்த மக்களோ! அவாளுக்குத் தெரிந்ததெல்லாம் அக்கிர காரத்து - பிர்மா முகத்தில் உள்ள பிறப்பு உறுப்பி லிருந்து பிறந்தவர்கள் தானே! சூத்திரர்களுக்குக் கல்வியும், வேலைவாய்ப்பும் கிடைக்கப்பெற்றால் ஏற்றியா போற்றுவார்கள்?

1928 இல் அமைச்சர் எஸ். முத்தையா முதலியார் அவர்களால் கொண்டு வரப்பட்ட அந்த ஆணையைத் தான் 1950 இல் (ஜூலை 27) சென்னை உயர் நீதி மன்றம் செல்லாது என்று கூறி, ஒடுக்கப்பட்ட மக் களின் உரிமைக் கழுத்தை (சூத்திரன் சம்பூகன் கழுத்தை மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமன் வாளால் வெட்டி வீசி எறிய வில்லையா?) வெட்டி வீழ்த்தியது.

அப்படி வெட்டியது சரி என்று உச்ச நீதி மன்றமும் (உச்சிக்குடுமி மன்றம் என்று அப்பொழுதே பேர் சூட்டப்பட்டுவிட்டது) விசிறிவிட்டது.

தந்தை பெரியார் என்ற தன்னிகரற்ற முழு முதல் புரட்சியாளராலும், தமிழ் நாட்டில் கிளர்ந்தெழுந்த உணர்ச்சிப் பூகம்பத்தாலும் இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டு - அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட் டில் இன்றைய தினம் கல்வி, வேலை வாய்ப்பு களில் ஒடுக்கப்பட்ட மக்கள் 69 விழுக்காடு இடங்களை அனுபவித்து வருகின்றனர்.

இதற்கெல்லாம் அதி காரபூர்வமாக அஸ்திவாரம் போட்ட அய்யா முத்தையா முதலியாரை மீண்டும் ஒரு முறை வாழ்க, வாழ்க என இந்நாளில் வாழ்த்து வோமாக!

- மயிலாடன்,விடுதலை 13-09-2011


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]