வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, October 29, 2009

தினமலத்தின் ஜாடை...........

வெள்ளை மாளிகையில் குத்து விளக்கு ஏற்றி வைத்து ஒபாமா தீபாவளி கொண்டாடியிருக்கிறார். உண்மையான ஜனநாயகம் அமெரிக்காவில்தான் நடக்கிறது. கிறித்துவ மதத்-தைச் சார்ந்தவராக இருந்-தாலும் மத வித்தியாசம் பார்க்க-வில்லை அமெரிக்க அதிபர்.

இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகை வெகு விமரிசையாக அரசியல்-வாதிகள் கொண்டாடும்-போது இங்குள்ள தலைவர்கள், மக்களுக்கு வாழ்த்துச் செய்திகூட வெளியிடாமல், இருப்பது ஏன்? என்று தினமலர் சிண்டைப் பிய்த்துக் கொள்கிறது.

இப்படி வாயிலும், வயிற்-லும் அடித்துக்கொள்ளும் தினமலர் கூட்டத்தை நோக்கி திருப்பி அடிக்கி-றோம். அதற்கு முதலில் பதில் சொல்லட்டும்!

கிறித்துவரான அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்குப் பெருந்தன்மை இருக்கிறது. அதே பெருந்தன்மை தின-மலர் கூட்டத்துக்கு உண்டா?

ஜனவரி முதல் தேதி ஆங்-கில வருடப் பிறப்பன்று கோயில்களுக்குச் சென்று இந்துக்கள் வழிபட்டு வரு-கிறார்கள். அதுகுறித்து காஞ்சி சங்கராச்சாரியார் என்ன சொன்னார்?

கிறித்துவ ஆண்டு பிறப்-புக்காக இரவு நேரத்தில் கோயிலைத் திறந்து வைப்-பதா? இது ஆகமத்துக்கு விரோதம், விரோதம் என்று கூக்குரல் போட்டாரே _ நினைவிருக்கிறதா?

இன்னொரு முக்கியமான தகவல் உண்டு. தலாய்லாமா இந்தியா வந்தார். அவர் அனைத்து மதக் கோயில்-களுக்கும் செல்ல விரும்பி-னார். கேரளாவில் புகழ்-பெற்ற செயின்ட் ஜோசப் சர்ச்சில் சிவப்புக் கம்பளம் கொடுத்து வரவேற்கத் தயார் என்று கூறினார்கள். பாளயம் மசூதி இமாம் தலாய் லாமாவை மகிழ்ச்சியுடன் வரவேற்கத் தயாராக இருப்-பதாகவும், காலை சிற்றுண்டி அளித்து உபசரிக்க விரும்-புகிறோம் என்றும் அறி-வித்தார்.

அர்த்தமுள்ள இந்து மதத் தலைவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

தலாய்லாமா ஹிந்து மதத்தை ஏற்காதவர். அவரது பாரம்பரிய மத ரீதியான ஆடைகளைக் களைந்து-விட்டு, காலணிகளை வெளியே விட்டுவிட்டு வந்தாலும் எந்த இந்துக் கோயிலுக்குள்ளும் நுழைய தலாய்லாமாவை அனுமதிக்க-மாட்டோம் என்று சொன்-னார்-களே! (ஆதாரம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ், 18.12.1992).

ஒபாமா தீபாவளி கொண்-டாட தயாராகிறார். இந்-துக்களோ தலாய்லாமாவை கோயிலில் உள்ளே நுழை-யக்கூட தடை போடுகிறார்-கள்.

இரண்டு மதங்களுக்கும் உள்ள வேறுபாடு இதில் தெரியவில்லையா?

ஒபாமாவின் ஜனநாயகத்-தைப் பாராட்டும் தகுதி தினமலர் வகையறாக்-களுக்கு உண்டா?

முதலமைச்சர் கலைஞர் தீபாவளி வாழ்த்துச் சொல்ல-வில்லையாம் _ அதற்குத்-தான் தினமலர் ஜாடை பேசுகிறது!

தீபாவளி கொண்டாடாத தீரர்களின் பட்டியலைச் சேர்ந்தவராயிற்றே கலைஞர் _ எப்படி தீபாவளி வாழ்த்து கூறுவார்?

நன்றி விடுதலை 28.10.09

2 comments:

ttpian said...

தமிழ் செம்மொழி:
கனிமொழி என் மகள்
அழகிரி மந்திரி
மஞசள் துண்டு:கதை விசனம்
மீனவன் இருந்தால் என்ன? செத்தால் என்ன?
தமிழ் வழ்க:மு.க வாழ்க!
மு.க மனைவிகள் வாழ்க!

Robin said...

//ஒபாமாவின் ஜனநாயகத்தைப் பாராட்டும் தகுதி தினமலர் வகையறாக்-களுக்கு உண்டா?// நியாயமான கேள்வி.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]