வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, October 30, 2010

காமக் களி யாட்டப் புகழ் ஜெயேந்திரர்கள்தான் கர்ப்பக் கிரகம் செல்லத் தகுதி படைத்தவர்களா?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்காகத் தந்தை பெரியார் குரல் கொடுத்தார்; அதற்காகவே களம் கண்டார்; தந்தை பெரியார் அவர்களின் உரிமைக் குரலுக்கு மதிப்பளித்து முதல்வர் கலைஞர் இருமுறை தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமும், தீர்மானமும் நிறைவேற்றியதுண்டு.

12 பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று அந்தச் சட்டத்தை முடக்கிவிட்டனர். காஞ்சி சங்கராச்சாரியார், ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) முதலியோர் இதன் பின்னணியில் இருந்தனர்.

2006 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அய்ந் தாவது முறையாகப் பதவியேற்ற கலைஞர் அவர்கள் தேர் தலுக்கு முன்னதாக திராவிடர் கழகத்தின் நிபந்தனைக்கு மதிப்புக் கொடுத்தபடி, அமைச்சரவையின் முதல் கூட்டத் தில் முதல் தீர்மானமாக இதுகுறித்துத் தீர்மானம் நிறை வேற்றி, மீண்டும் சட்டப்பேரவையில் மசோதா புதுப்பிக்கப் பட்டது (22.8.2006).

69 விழுக்காடு இட ஒதுக்கீடுப்படி அர்ச்சகர் பயிற்சிக்கு விளம்பரம் செய்யப்பட்டது. சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, பழனி, மதுரை, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் பயிற்சியும் அளிக்கப்பட்டு, சான்றிதழ்களும் வழங்கப்பட்ட நிலையில், வழக்கம்போல பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று முட்டுக்கட்டை போட்டுள்ளனர். மதுரை அர்ச்சகர்களும், பட்டர்களும் இதில் ஈடுபட்டனர்.

வழக்கு உச்சநீதிமன்றத்தின் கிடப்பில் கிடக்கிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கை விரைவுபடுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதியாக வந்தார்; இதில் கருத்தூன்றுவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. வழக்கை ஒத்தி வைப்பதில்தான் மிகக் கவனமாக இருந்தார் என்பது வேதனைக்கு உரியதாகும்.

பயிற்சி பெற்ற 200-க்கும் மேற்பட்ட பல ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண் டுள்ளனர். திராவிடர் கழகம் இதுகுறித்து அரசின் கவனத் துக்கும், உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லும் வகையில் மாநாடுகளில் தீர்மானங்களை நிறைவேற்றியது.

இதற்கிடையில், திருவண்ணாமலையில் ஒரு நிகழ்வு - தமிழர்களைத் திடுக்கிட வைக்கக் கூடியதாகும். இவ் வாண்டு தந்தை பெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்த நாளன்று, அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் திரு. அரங்க நாதன் தலைமையில், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பார்ப்பனர்கள் பரபரப்பு அடைந்தனர். பெரியார் சிலைக்கு மாலையா? அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களா? இதனை எப்படி அனுமதிப்பது என்று ஆத்திரம் கொண் டனர். இந்து முன்னணிக்காரர்களைக் கிளப்பி விட்டனர். தந்தை பெரியார் சிலைக்கு மாலைஅணிவித்த - அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனர் அல்லாதவரான அரங்கநாதனை இந்து முன்னணியினர் தாக்கியுள்ளனர். காவல் நிலை யத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சரியான நடவடிக்கை இல்லை என்ற மனக்குறை தோழர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இதே திருவண்ணாமலையில், அர்ச்சகர் பயிற்சி கொடுத்த ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டார் என்பது நினைவூட்டத்தக்கதாகும்.

இந்துக்களே ஒன்று சேர்வீர் என்று குரல் கொடுக்கும் இந்து முன்னணி வகையறாக்கள், அர்ச்சகர் பயிற்சி பெற்ற இன்னொரு இந்துவைத் தாக்குகிறார்கள் என்றால் இதன் பொருள் என்ன?

இந்து மதம் என்றால், அது பார்ப்பனர்களின் ஆதிக்கத் திற்கும், உயர்ஜாதித் தன்மையைக் காப்பதற்கு மட்டுமே உள்ளது. மற்றவர்கள் அவர்களுக்கு அடிமையாகக்கிடக்க வேண்டியவர்கள் என்ற இறுமாப்பும், எண்ணமும்தான் பார்ப்பனர்களை ஆட்டிப்படைக்கிறது என்பதுதானே இதன் பொருள்?

அர்ச்சகர் பயிற்சி பெற்ற தமிழர்களைத் தாக்குகிற அளவுக்குப் பார்ப்பனர்கள் வந்துள்ளனர் என்றால், பதிலுக்குப் பதில் தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்தால் பார்ப்பனர்களின் கதி என்ன என்று சிந்திக்கவேண்டாமா? தந்தை பெரியார் மறைந்திருக்கலாம்; ஆனாலும், அவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் தமிழர்களைத் தாக்கு கிறார்கள் என்றால், பெரியார் ஒவ்வொரு நொடியும் பார்ப் பனர்களால் சீரணிக்கப்பட முடியாதவராகவே இருக்கிறார் என்பதுதான் முக்கியம் ஆகும்.

இவ்வளவுக்கும் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் நாத்தி கர்களா? கடவுள் மறுப்பாளர்களா? இல்லையே - ஆன்மிக வாதிகள்தானே! பக்தியில் மூழ்கியிருக்கும் பார்ப்பனர் அல்லாதார் - தமிழர்கள் இதுகுறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டாமா?

தேவநாதன் போன்ற பார்ப்பனர்கள்தான் அர்ச்சகர் களாக இருக்க உரிமை படைத்தவர்களா? காமக் களி யாட்டப் புகழ் ஜெயேந்திரர்கள்தான் கர்ப்பக் கிரகம் வரை உள்ளே செல்லத் தகுதி படைத்தவர்களா?

கோயிலுக்குள் இருக்கும் மூலக் கடவுள்கள் திருடு போவதற்குக் கோயில் அர்ச்சகர்களே உடந்தை என்று எத்தனை எத்தனை செய்திகள் வெளிவந்து கொண்டி ருக்கின்றன.
இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாதார் கருவறைக்குள் நுழைந்து அர்ச்சனை செய் தால் சாமி தீட்டுப்பட்டுவிடும். சம்ப்ரோட்சணம் செய்யவேண்டும் என்று சொல்லுகிறார்கள் என்றால், இதனை இன்னும் எத்தனைக் காலத்துக்கு அனுமதிப்பது?

பக்தித் தமிழனாக இருந்தாலும் சரி, பகுத்தறிவுத் தமிழனாக இருந்தாலும் சரி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடலைத்தான் கவனத்தில் கொள்ளவேண்டும்.
பார்ப்பான் பால் படியாதீர்!
சொற்குக்கீழ்ப் படியாதீர்!
உம்மை ஏய்க்கப் பார்ப்பான்
...... ........... .............
பார்ப்பானின் கையை - எதிர்
பார்ப்பானையே பார்ப்பான்
தின்னப் பார்ப்பான்
தமிழர்கடன் பார்ப்பானைத்
தரைமட்டம் ஆக்குவதே
என்றுணர்வீர்!
------------------- விடுதலை தலையங்கம் (30-0ct-2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]