வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, February 26, 2011

னமணி வைத்தியநாதய்யர்களோ, சோ இராமசாமிகளோ ஆவணி அவிட்டம் கொண் டாடுகிறார்களா, இல்லையா?

தினமணி ஏடு ஜாதி அரசிய லைப்பற்றி எழுதுகிறது. பல கட்சி களுக்கும் இப்பொழுதுதான் தங் களது சுயமரியாதை நினைவுக்கு வரும். ஜாதி பலமும், வாக்கு பலமும் வாக்கு வங்கிப் புள்ளி விவரங்களும் பயன்படும் என்றெல்லாம் தினமணி ஆவர்த்தனம் பாடுகிறது (7.2.2011). எந்தெந்தத் தொகுதிகளில் வன்னியர் கள் ஓட்டு இருக்கிறது என்றெல்லாம் முடி பிளந்து ஆய்வுக் கட்டுரை எழுதுகிறது.

ஜாதியைப் பற்றி எழுதட்டும். சுயமரியாதைப் பற்றியும் தாராளமாக எழுதித் தள்ளட்டும். காகிதம் இருக் கிறது _ எழுதுகோல் இருக்கிறது _ கணினி இருக்கிறது _ அச்சு இயந் திரம் இருக்கிறது _ அடித்துத் தள் ளட்டும்.

இதைப்பற்றியெல்லாம் எழுதுவதற் கான தகுதி தினமணிக்கு உண்டா என்ற ஒரு கேள்வி எழுகிறதே.

ஜாதி வேண்டாம் அது கூடாது _  என்பது தினமணியின் கருத்தா _ தினமணி வக்கீலாக இருக்கும் -_ வைத்தியநாதய்யர்கள் மாய்ந்து மாய்ந்து தூக்கிப் பிடிக்கும் இந்து மதத்துக்கோ, சங்கர மடத்துக்கோ ஜாதி பற்றிய கருத்து என்ன என் பதை முதலாவதாகத் தெரிவித்து விட்டல்லவா கோதாவில் குதிக்க வேண்டும்?

தினமணி வைத்தியநாதய்யர்களோ, சோ இராமசாமிகளோ,  கோயங்கா வீட்டுக் கணக்குப் பிள்ளை குருமூர்த்திகளோ, சு.சாமி களோ ஆவணி அவிட்டம் கொண் டாடுகிறார்களா, இல்லையா? பூணூல் அணிந்து கொண்டு இருக் கிறார்களா, இல்லையா? என்ற கேள்விக்குப் பதில் சொல்லி விட்டு, ஜாதியைப்பற்றி என்ன வேண்டு மானாலும் எழுதித் தொலையட்டும் -_ நமக்கு ஒன்றும் அட்டியில்லை.

ஜாதியையும் தாண்டி தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் சங்கராச்சாரியாரை லோகக் குரு என்று துதிபாடுவதற்கு வெட்கப் படாதவர்கள் ஜாதி வாக்கு வங்கி பற்றி எழுதுவதற்கு என்ன யோக் கியதை இருக்கிறது? ஒரு பெரியார் தோன்றாமல் இருந்திருந்தால், திராவிடர் கழகம் என்ற ஒன்று உருவெடுக்காமல் இருந்திருந்தால், விடுதலை போன்ற ஏடுகள் விழிப் புணர்வை உண்டாக்காமல் இருந் திருந்தால் இந்தக் கேள்விகள்கூட பிராமணோத்தமர்களை நோக்கி எழுந்திருக்க வாய்ப்பில்லை.

பூணூல் போட்ட பார்ப்பனர் களைப் பார்த்து கும்பிடுகிறேன் சாமி, தோப்புக்கரணம் இதோ, சாமி! என்று கூப்பாடு போட்ட கால மும் துண்டை எடுத்துச் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு சேவகம் செய்த காலமும் மலையேறி விட்டது என்று தினமணிகளுக்குத் தெரியாதா?

ஜாதி வாக்கு வங்கி என்றெல்லாம் குறைகூறும் தினமணி, ஆச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் 1967 தேர்தலில் பூணூலைப் பிடித்துக் கொண்டு உதய சூரியனுக்கு ஓட்டளியுங்கள் என்று பார்ப்பனர்களுக்குக் கட்டளையிட் டாரே - _ அதற்கு என்ன பெயராம்? அதற்குப் பெயர் ஜாதி அரசியல் இல்லையா?

ஒவ்வொரு தேர்தலிலும் பார்ப்பனர் சங்கம் மாநாடு கூட்டி அல்லது சங்கக் கூட்டம் நடத்தி பிராமணர் கள் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு என்றும், பி.ஜே.பி.க்கு என்றும் தீர்மானம் போடுகிறார்களே _ அப்பொழுது இந்த உலக்கைக் கொழுந்துகள் எங்கே தீவட்டிகளைத் தூக்கிக் கொண்டு திரிந்தன?

அக்ரகாரவாசிகளே, இது ஆகாது, ஆகாது; கூடாது, கூடாது. இதுபோல் தீர்மானம் போட்டு உங்களைத் தனியே பிரித்துக் காட்டிக் கொள்ளா தீர்கள். அது ஆபத்தில்  போய் முடி யும்! என்று மண்டையில் அடித்தது போல தினமணி தலையங்கம் தீட்டி யிருந்தால் அல்லது ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருந்தால் ஜாதி வாக்கு வங்கி பற்றி எழுதிட அதற்கு அருகதை உண்டு.

காலமெல்லாம் பார்ப்பனர்களின் தாசானு தாசராகவும், திராவிட இயக்க வீராதி வீரருமாக விளங்கிய தொங்கு மீசைக்காரர் ம.பொ.சிவ ஞான கிராமணியார் 1971-இல் மயி லாப்பூர் தொகுதி சட்டமன்ற தேர் தலில் போட்டியிட்டபோது கற்ப காம்பாள் கோயிலில் அர்ச்சனை செய்யுமாறு அர்ச்சகரை வேண்டிக் கொண்டபோது, அந்த அர்ச்சகப் பார்ப்பான் அவரை எதிர்த்து நின்ற வேட்பாளரான டி.என். அனந்தநாயகி அம்மையாருக்காக மாற்றி அர்ச் சனை செய்தார் என்று ம.பொ.சி. புலம்பினாரே! ஆரிய தம்பிரானுக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களின் நிலை என்ன? கோயில் அர்ச்சகர்ப் பார்ப்பானுக்குக்கூட இனவுணர்வு _ ஜாதி உணர்வு இருக்கும்போது மற்றவர்களுக்கு இருக்கக் கூடாதா?

வெகு தூரம் போக வேண்டாம் _ நடந்து முடிந்த மக்களவைத் தேர் தலில் திருச்சித் தொகுதியில் என்ன நடந்தது?

திருச்சி மக்களவைத் தொகுதியில் திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும் பூர், கந்தர்வக்கோட்டை, புதுக் கோட்டை, சிறீரங்கம் ஆகியவை அடங்கியவை.

சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக காங்கிரசும், அ.இ.அ.தி.மு.க. வும் பெற்ற வாக்குகள் விவரம்:

திருச்சி கிழக்கு காங்கிரஸ் - _ 51340 அ.தி.மு.க.,  -_ 48,954
திருச்சி மேற்கு காங்கிரஸ்  _ 50,890
அ.தி.மு.க., _ 50,698
திருவெறும்பூர்
காங்கிரஸ் _ 56,312
அ.தி.மு.க., _ 49,657
கந்தர்வக்கோட்டை
காங்கிரஸ் _ 41977
அ.தி.மு.க., _ 41236
புதுக்கோட்டை
காங்கிரஸ் _ 42,228
அ.தி.மு.க., _ 37,095
சிறீரங்கம்
காங்கிரஸ் --_  50,767
அ.தி.மு.க., -_ 70,949
இந்தப் புள்ளி விவரத்தைக் கவனமாகப் பார்க்க வேண்டும். ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகளில் 5 தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பா ளர் சாருபாலா தொண்டமான் அதிமுக வேட்பாளர் திரு ப. குமாரை விட அதிக வாக்குகள் பெற்றுள் ளார்.

சிறீரங்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்குக் கிடைத்த அதிக வாக்குகள் - _ மேற்கண்ட அய்ந்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வாக்குகளையும் கீழே தள்ளி, அதற்குமேலும் 4335 வாக்குகளை அதிகமாக அளித்து வெற்றி பெறச் செய்ததே -_ இதற்குப் பெயர் என்னவாம்? எல்லோருக்கும் தெரிந்த செய்திதானே? அக்கிரகார வாசிகள் அதிகம் நிறைந்த தொகுதி அல்லவா? சிறீரங்கம் தொகுதி உணர்த்தும் பாடம் என்ன?

ஒன்று திரண்டு ஒரே அடியாக வாக்குகளை அதிமுகவுக்கு அள்ளிப் போட்டுள்ளதில் ஜாதி உணர்வு கிடையவே கிடையாது என்று தினமணி சத்தியம் செய்யப் போகி றதா? துண்டை விரித்துத் தாண்டப் போகிறதா?

இதைப்பற்றி அப்பொழுது தினமணி எழுதியதுண்டா?

தமிழர்களே, தமிழர்களே!

பார்ப்பனர்களைப் பார்த்தாவது இனவுணர்வு கொள்ளுங்கள் என்ப துதான் கருஞ்சட்டை தொண்டர் களின் கனிவான வேண்டுகோள்.

நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைகூட ஆரியர் _ திராவிடர் போராட்டமாகத்தான் அமையப் போகிறது.

தினமணி, துக்ளக் கல்கி வகையறாக்கள் அதற்கான யாகக் குண்டத்தை வளர்க்க குச்சிகளைப் பொறுக்க ஆரம்பித்துவிட்டனர்; தூபக்கால் தயாராகி விட்டது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

கலைஞரைப் பார்த்து ஜென்மப் பகைவர் என்று சொன்ன ஆரியகுலத் திலகம் எதிர் அணியில். மீண்டும் ஆரியம் அரியணை ஏறலாமா? அதனை அனுமதிக்க லாமா?

மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வந்தாரே, நினைவிருக் கிறதா?

ராமன் கோயிலை அயோத்தியில் கட்டாமல் வேறு எங்கு போய் கட்ட முடியும் என்று வினா தொடுத்தாரே அந்த அம்மையார் _ அதனை மறுந்துவிடலாமா?

ஆரிய கலாச்சாரங்களான யாகம், யோகம் இவற்றைப் புதுப்பிக்கும் போக்குக்குச் சிகப்புக் கம்பளம் விரிக்கலாமா?

ஆமாம், நான் பாப்பாத்தி தான்! என்று சட்டப் பேரவையிலே ஆடித் தீர்த்தாரே ஆரிய குல மங்கை _  நெஞ்சில் நிறுத்துங்கள்.

அன்று புத்த மார்க்கத்தை ஊடுருவி ஆரியம் அழித்தது _ இன்று திராவிட இயக்கத்திலே ஊடுருவி திராவிடத் தத்துவத்தைக் கபளீகரம் செய்கிறது. மீண்டும் மனு தர்மமா?

தந்தை பெரியார் உழைத்ததும், அறிஞர் அண்ணா பிரச்சாரம் செய்ததும், தன்மான உணர்வுத் தீயை வளர்த்ததும் எல்லாம் பாழுக்குப் போய் விடலாமா?

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

இந்தத் தேர்தலில் திரண்டெழுகிற தமிழர்களின் இனவுணர்வு எரிமலை யால் காலா காலத்திற்கும் காகப்பட் டர் பரம்பரை எழுந்திருக்கக் கூடாது.

உணர்வு பெறுவீர்! உறுதி கொள்வீர்!

ஓங்கட்டும் இனமானம்!
ஒழியட்டும் ஆரியம்!

------------ விடுதலை மலர்,26-02-2011


3 comments:

அ.முத்து பிரகாஷ் said...

நலம் தானே தோழர்!

திருப்பதி ஏழுமலையான் அவர்களை தரிசித்த பின்னர் கேப்டன் எடுத்த முடிவை பார்த்தோம் தானே ... அதுவே சொல்ல வில்லையா நடைபெற இருக்கின்றது ஆரிய திராவிட யுத்தத்தின் நவீன வடிவம் தான் என்று ...

பரணீதரன் said...

நலம் நியோ..முடிந்தால் தொடர்புகொள்ளுங்கள்

thiyagarajan.s said...

பெரியார் புத்தகம் சம்பந்தமா.....வீரமணிக்கும்ம்ம்ம்,திருவாரூர் தங்கராசுவுக்கும்ம்ம்ம்,கொளத்தூர்மணிக்கும்ம்ம்ம் சண்டை முடிஞ்சு போச்சா....??????

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]