வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, February 09, 2011

ஓம் ஆல் ரவுண்டராய நமஹ

உலகக் கோப்பை கிரிக் கெட் வரும் 19 ஆம் தேதி துவக்கப்படுகிறது. இந்த முறை இந்தியாதான் கோப் பையைத் தட்டிப் பறிக்கப் போகிறது என்று மூக்கை சொறிந்து விடுகிறார்கள் விமர்சகர்கள்.

அதற்குள் மும்பையில் இந்தியா கோப்பையை வென் றெடுக்க வேண்டும்  என்பதற் காக சித்தி விநாயகர் கோயி லில் விசேஷ பூஜை நடத்தப் பட்டதோடு, சாமி ஊர்வலத் தையும் நடத்தியுள்ளனர்.

இந்துத்துவா மனப் பான்மை என்ற ஒன்று இருக் கிறது. எதிலும் பக்தி ஆஷா டத்தைத் திணிப்பது என்பது அதன் ஆசாரக் குணமாகும். மனிதனின் திறமை, தன் னம்பிக்கை, உழைப்பு இவற் றின் மரியாதையைக் குலைப் பது என்பதுதான் அதன் திரிசூலமாகும்.
கடவுள் சக்தியால் இந் தியா வெற்றி பெறவேண்டும் என்றால், வெற்றி எப்படி விளையாட்டு வீரர்களுக்குச் சொந்தமாக முடியும்?

வெற்றிக்குக் காரணம் கடவுள் சக்தியென்றால், தோல்வி அடையும்போது கடவுளின் தோல்வி என்று ஒப்புக்கொள்வார்களா? அத்தகைய அறிவு நாணயம் எல்லாம் இந்த இந்துத்துவா பார்ப்பனீய மரபில் கிடையவே கிடையாது.

கடந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாதான் கோப்பையை வெல்லப் போகிறது என்று பிரபல ஜோதிடர்கள் எல்லாம் துண் டைப் போட்டுத் தாண்டினார் கள். தோல்வியில் முடிந்தது என்றவுடன், துண்டைக் காணோம், வேட்டியைக் காணோம் என்று குதிகால் பிடரியில் இடிபட ஓடினார்கள்.

சென்னை அண்ணா நகரில் கடந்த உலகக் கோப் பையின் போது கிரிக்கெட் விநாயகர் கோயிலே உரு வாக்கப்பட்டது. வலது கையில் மட்டை (பேட்) வைத்திருப்பதுபோல ஒரு விநாயகரும், இடது கையில் மட்டை (பேட்) வைத்திருப்பது போல மற்றொரு பிள்ளை யாரும் பிரதிஷ்டை செய்யப் பட்டன.

பிள்ளையாரைத் தோத் தரிக்கும் பாடல்கள் அடங் கிய குறுந்தகடு (சி.டி.) வெளியிடப்பட்டது. இந்தி யிலும், சமஸ்கிருதத்திலும் அந்தப் பாடல்கள் அமைந்த திலிருந்தே பார்ப்பனர்கள் தான் இதன் பின்னணியில் இருக்கின்றனர் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. (கிரிக்கெட்டே பார்ப்பனர்களுக்கான தனி உடைமைதானே!)

குறுந்தகடில் இடம் பெற்ற கிரிக்கெட் பஜன் வருமாறு:

ஏகாதச சிரச கிரிக்கெட் கணபதி
ஸ்வாகதம் சரணாகதம்
தஷிண நான திரிலோச்சன
கிரிக்கெட் கணபதி ஸ்வாகதம்
சரணாகதம்
வாமஹஸ்த திரிலோச்சன கிரிக்கெட்
கணபதி ஸ்வாகதம் சரணாகதம்
ஓம் பவுண்டரி மார்னே வாலே நமஹ
ஓம் சிக்சர் மார்னே வாலே நமஹ
ஓம் ஆல் ரவுண்டராய நமஹ
ஓம் கேட்ச் பக்கட்னே வாலே நமஹ
இந்தி, சமஸ்கிருதத் துக்கு இடையிடையே இங் கிலீஷும் வேறு.
அத்தோடு விட்டார்களா?


சென்னை குரோம் பேட்டை எஸ்.சி.எஸ். மெட்ரி குலேசன் மேல்நிலைப்பள்ளி யில் சிறப்பு யாகம் ஒன்றையும் நடத்தினார்கள். 1500 மாண வர்கள் அதில் கலந்துகொண் டனர். (ஆதாரங்கள்: இந்தியா டுடே, 21.3.2007).

இவ்வளவு செய்தும் இந்திய அணி ஊத்திக்கிட்டது தான் மிச்சம்!

கிரிக்கெட் மட்டுமல்ல, பார்ப்பனிய இந்துத்துவாவின் கடைசி வேர் இருக்கும் வரைக்கும் வீரம், விவேகம், கம்பீரம், தன்னம்பிக்கை அனைத்தும் காயடிக்கப்பட்டு விடும் என்பதை உணர்க!

---------- விடுதலை, மயிலாடன்,09-02-2011


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]