வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, September 03, 2010

பெரியார் சிலையைச் சேதப்படுத்தினால் கழகம் சோர்ந்துவிடாது

மூன்று இடங்களில் பெரியார் சிலை அடுத்தடுத்து சேதப்படுத்தப்பட்டிருப்பது திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட சதியே!
காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்
கழகத் தோழர்களே, அழுக்குருண்டை பிள்ளையார்பற்றி பிரச்சாரம்
புயல் வேகத்தில் நடக்கட்டும்! நடக்கட்டும்!!
தந்தை பெரியார் பிறந்த நாளை தமிழின விழாவாக வீட்டுக்கு
வீடு கொண்டாடுவோம், கொண்டாடுவோம்! தமிழர் தலைவர் அறிக்கை

தந்தை பெரியார் சிலை மூன்று இடங்களில் சேதப்படுத்தப்பட்டது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:

திருச்சி அண்ணா நகரில் இருந்த தந்தை பெரியார் சிலையும், அந்தப் பகுதியிலே உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அரசு சார்பில் திறக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையும் ஒரே சமயத்தில் (கடந்த செவ்வாய்க் கிழமை இரவு) விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

திட்டமிட்ட வகையிலான விஷமம்

இந்தப் பதற்றம் அடங்குவதற்குள், நெல்லை மாவட்டம் கடையநல்லூரையடுத்த மங்கலாபுரம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் இருந்த தந்தை பெரியார் சிலை செப்டம்பர் முதல் தேதி இரவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இது ஏதோ எதிர்பாராவிதமாக நடந்த அசம்பாவித மாகக் கருதப்பட முடியாது. அடுத்தடுத்து இரண்டு நாள்களில் மூன்று இடங்களில் இது நடந்திருக்கிறது.
திட்டமிட்ட வகையில் இதன் பின்னணியில் ஒரு சதிக் கும்பல் இருந்திருக்கிறது என்று கருதுவதற்கு நிச்சயம் இடம் உண்டு. காவல்துறை திசை திருப்ப முயற்சிக்கக் கூடாது.

தமிழினத்துக்கே அறைகூவல்!

தந்தை பெரியார் சிலையைச் சீண்டுவது என்பது ஒட்டுமொத்தமான தமிழினத்திற்கு விடப்பட்ட அறை கூவலாகும்.

தந்தை பெரியார் ஒரு கட்சிக்கோ, ஓர் இயக் கத்துக்கோ சொந்தமானவர் அல்லர். ஒட்டுமொத்த தமிழினத்திற்கு உயிர் போன்றவர். தமிழினத்திற்குச் சுயமரியாதையையும், பகுத்தறிவையும் ஊட்டி, இனப் பகையின் ஆதிக்க வேரையறுத்து, புத்துணர்வை ஊட்டிய உலகத் தலைவர் அவர்.

எதிர்நீச்சல் போட்ட தலைவர்

அவர் வாழ்ந்த காலத்திலும் எதிர்நீச்சல் போட்டவர் அவர் மறைந்த இந்தக் காலகட்டத்திலும் அவரை மய்யப்படுத்தியே சர்ச்சைகளும், சிந்தனைகளும் சுழன்று கொண்டிருக்கின்றன. தந்தை பெரியாரின் தேவை மிக அதிகமாக உணரப்படும் காலகட்டம் இது.

மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் காவித் தீவிரவாதம்பற்றி கூறிய கருத்தினை வரவேற்று சிதம்பரம் அவர்கள் சொன்னதில் என்ன குற்றம் என்று விடுதலையில் அறிக்கை வெளியிட்ட ஒரு சில நாள்களில் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை இந்தக் கண்ணோட்டத்தில் பிரச்சினையை அணுகுவது அவசியம்.

காவல்துறையின் கவனத்திற்கு...!

யாரையோ இரண்டொருவர் மீது வழக்குப் போட்டு கோப்பினை முடிவுக்குக் கொண்டுவரும் சம்பிரதாயமான நடைமுறையை தந்தை பெரியார் சிலை சேதப் படுத்தப்பட்ட இந்தப் பிரச்சினையிலும் உள்ளூர்க் காவல் துறையினர் கடைப்பிடித்தால், அதனைத் தமிழகம் ஏற்காது.

திருச்சியில் தந்தை பெரியார் சிலை தகர்க்கப்பட்ட 24 மணிநேரத்தில் அதே இடத்தில் சிலையைக் கழகத் தோழர்கள் வைத்துவிட்டனர்; அது வேறு செய்தி.
செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும் என்று கவிஞர் கருணானந்தம் அவர்கள் கூறியதுபோல, தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான அய்யா சிலைகளை நிறுவிட கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள்.

எந்த எண்ணத்தின் அடிப்படையில்?

தந்தை பெரியார் சிலையைத் தகர்க்கவேண்டும் என்று நினைக்கிற செயல்படுகிற அந்த எண்ணம் எந்த அடிப்படையில், எந்தப் பின்னணியில் என்பதுதான் முக்கியமானதாகும்.
தீவிரமான முறையில் கொள்கைப் பிரச்சாரம் செய்து வந்த தந்தை பெரியார் வன்முறையை ஒருபோதும் தூண்டியதில்லை பிள்ளையார் உடைப்புப் போராட் டத்தை அறிவித்த நேரத்தில்கூட கோயில்களில் உள்ள சிலைகளை உடைக்கச் சொல்லவில்லை. காசு கொடுத்துக் கடைகளில் வாங்கி, அதனைத்தான் உடைக்கச் சொன்னார்.

கோயில் சிலைகளை உடைக்க முடியாதா?

கோயில்களில் இருக்கும் சிலைகளை உடைப்பது என்பது பெரிய காரியமல்ல! அப்படி உடைக்கவேண்டும் என்றால், முன்னதாகவே அறிவித்து நாள் குறிப்பிட்டு, அந்தக் காரியத்தை எங்களால் நிச்சயம் செய்ய முடியும்.

ஆனால், அதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை; மக்கள் மனதில் உள்ள அறியாமை இருட்டை பகுத்தறிவின் அடிப்படையில் விரட்டுவதன் மூலமாகத்தான் நிரந்தரமான தீர்வைக் காண முடியும் என்பது தந்தை பெரியார் அவர்களின் அணுகுமுறை அதைத்தான் இன்றளவும் கழகம் பின்பற்றி வருகிறது.

முளையிலேயே கிள்ளி எறிக!

தமிழ்நாட்டின் அமைதிச் சூழலைக் கெடுக்க இத்தகு வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்று காவல்துறையைக் கேட்டுக்கொள்கிறோம்.

பெரியார் சிலையைச் சேதப்படுத்தினால் கழகம் சோர்ந்துவிடாது; மாறாக வீறுகொண்டு எழுந்து, கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தை, கா(லி)விகளின் பிற்போக்குச் சனாதனத்தைத் தோலுரிக்கும் பிரச்சாரத்தைப் பன்மடங்கு மேற்கொள்வோம்.

குற்றவாளிகளை விரைவில் கைது செய்து சட்ட ரீதியான கடமையினைச் செய்ய அரசுக்கு விட்டுவிடு வோம்.

திராவிடர் கழகம் கலைஞர் அரசுக்கு அரணாக இருப்பதை மாற்றவும், இப்படி ஒரு நிலையை உருவாக்கி, ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கப் பார்க்கின்றன ஆரியமும், அதன் கூலிகளும்!

எங்கள் பணியால், பிரச்சாரத்தால் சட்டம் ஒழுங்கு கெடாது; கெடவும் அனுமதிக்க மாட்டோம்.

அழுக்குருண்டை பிள்ளையார்பற்றி பிரச்சாரம் வேகமாக நடக்கட்டும்!
விநாயகர் சதுர்த்தி வரும் இந்தக் காலகட்டத்தில் அதனை மய்யப்படுத்தி, கழகத் தோழர்களே, நமது பிரச்சாரம் புயலாக நாலா திசைகளிலும் சுழன்று அடிக்கட்டும். அழுக்குருண்டைப் பிள்ளையார்பற்றி அதிவேகத்தில் பிரச்சாரம் நடக்கட்டும்; துண்டு அறிக் கைகளை வீட்டுக்கு வீடு விநியோகியுங்கள். சுவரெழுத்து, தட்டி வாசகம் எங்கும் நீக்கமறக் காணப்படட்டும்!

தந்தை பெரியார் சிலையைச் சேதப்படுத்திய காரணத்தால் ஓய்ந்து போனோமா மாறாக ஓங்கி எழுந்தோமா என்பதை நாடு காணட்டும்!
பெரியார் பிறந்த நாளினை பெருஞ்சிறப்புடன் கொண்டாடுவீர்!

வட்டியும் முதலுமாகச் சேர்த்து தந்தை பெரியார் அவர்களின் 132 ஆம் ஆண்டு பிறந்த நாளினை தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவர் வீட்டிலும் கொண் டாடவேண்டும்.
தமிழர்களை ஒருமுனைப்படுத்தும் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை அந்தக்
கண்ணோட்டத்தில் வளர்த்தெடுப்போம்!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே என்ற புரட்சிக்கவிஞரின் வரிகளை நிலைப்படுத்துவோம்!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!

---நன்றி விடுதலை 

தலைவர்,
திராவிடர் கழகம்.


13 comments:

ஒசை said...

காந்தியார் சிலைகளை உடைக்க சொன்னவர்கள், பெரியார் சிலை உடைப்பட்டதும் பொங்குகிறார்கள். தேவையற்ற பதட்டத்தை உருவாக்கும் தலைவர்களின் சிலைகளை ஒட்டு மொத்தமாக அகற்ற சொன்னால், அது தான் பகுத்தறிவு. தலைவர்கள் சிலை வேண்டுமென்று யார் அழுதது.

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

தலைவருக்கு சிலை வேண்டுமா ? என்று நினைக்காதீர் ஓசை அவர்களே !.. சாதி ஒற்றுமைக்காக எவரேனும் ஒரு தலைவர் குரல் கொடுத்து இருக்காரா ?.. பெரியாரை பற்றியான தவறான என்னத்தை மாற்றி கொள்ளுங்கள் ??.. எதிர்ப்பை நடுங்க வைத்த தன்மான தலைவர் !.. ஏன் என்று கேட்பதில் வைர நெஞ்சம் உடையவர் ! உங்களை போல நானும் பெரியாரை பற்றி தவறாக எண்ணியவன் தான்

Muthukumara Rajan said...

பிள்ளையார் சிலையை அவமதிப்பது சரி என்றால் இதுவும் சரியே ..

என்னை பொருத்தவரை இரண்டுமே தவறு ..


----/*
சாதி ஒற்றுமைக்காக எவரேனும் ஒரு தலைவர் குரல் கொடுத்து இருக்காரா ?.. */
---
உங்கள் வரலாறு அறிவு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது ..
=----
/*நானும் பெரியாரை பற்றி தவறாக எண்ணியவன் தான்*/

இன்னமும் அந்த நிலை தான் தொடர்கிறது \

பரணீதரன் said...

/*இன்னமும் அந்த நிலை தான் தொடர்கிறது*/

யாருக்கு உங்களுக்குத்தானே?

பரணீதரன் said...

/*
சாதி ஒற்றுமைக்காக எவரேனும் ஒரு தலைவர் குரல் கொடுத்து இருக்காரா ?.. */
---
உங்கள் வரலாறு அறிவு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது ..
--------------

ஒரு பார்ப்பானை அடையாளம் காட்டுங்கள்...அதனை நேரடியாக சொல்லாமல் வேணு மறைமுகமாக நாகரிகமாக கேட்டுள்ளார்....அவளவே.

கேட்ட பார்ப்பனர் உழுகிறார் என்று நகைசுவை பாணியிலே ஏதேனும் பதில் சொல்லாமல் உருப்படியா எதாவது சொல்லுங்கள்...

பரணீதரன் said...

/*தலைவர்கள் சிலை வேண்டுமென்று யார் அழுதது. */

இல்லாத கடவுளுக்கு சிலை வைத்து மக்களை கூமுட்டை ஆக்கும் போது....காலமெல்லாம் மக்களுக்கு உழைத்த தலைவர்களுக்கு சிலை வைப்பதில் தவறேதும் இல்லையே ஓசை..

Muthukumara Rajan said...

/*
இல்லாத கடவுளுக்கு சிலை வைத்து மக்களை கூமுட்டை ஆக்கும் போது....காலமெல்லாம் மக்களுக்கு உழைத்த தலைவர்களுக்கு சிலை வைப்பதில் தவறேதும் இல்லையே ஓசை..
*/

மேலே சொன்ன பதில்லை திரும்பவும் சொல்றிறேன்

பிள்ளையார் சிலையை அவமதிப்பது சரி என்றால் இதுவும் சரியே ..


/*ஒரு பார்ப்பானை அடையாளம் காட்டுங்கள்...அதனை நேரடியாக சொல்லாமல் வேணு மறைமுகமாக நாகரிகமாக கேட்டுள்ளார்....அவளவே.
*/

மகாகவி பாரதியார்

/*
*இன்னமும் அந்த நிலை தான் தொடர்கிறது*/

யாருக்கு உங்களுக்குத்தானே?*/

என் நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை நான் மிக தெளிவாக இருக்கிறேன்
-----

எனக்கு சிலை வேண்டுமென்று
நல்ல தலைவர்கள் எவரும் அழவில்லை
சாமிக்கு சிலை வைக்க சாமியும் அழவில்லை

பரணீதரன் said...

/* மகாகவி பாரதியார்*/

தெரியும் தெரியும் இப்படி பதில் வரும் என்று...அமாம் அமாம் எத்தனை போராட்டங்கள் அவர் தொண்டர்களுடன் செய்துள்ளார்.....பாரதி சாதியை ஒலித்த லட்சணம் இதோ..

ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே

இது கொஞ்சம்தான்....ஒரு சாம்பிள் மாறி...நிறைய இருக்கு......பார்ப்பனப் பற்று சும்மாவா?

பரணீதரன் said...

/*எனக்கு சிலை வேண்டுமென்று
நல்ல தலைவர்கள் எவரும் அழவில்லை
சாமிக்கு சிலை வைக்க சாமியும் அழவில்லை*/

நல்ல தலைவர்களுக்கு சிலை வைப்பது அவர்கள் கொள்கை எதிர்கால சந்ததியருக்கு சேர வேண்டும் என்பதற்காக.......பார்ப்பனியம் போல குத்துக்கல்லை வைத்து சூத்திரப்பட்டம் சூட்ட அல்ல

பரணீதரன் said...

/*பிள்ளையார் சிலையை அவமதிப்பது சரி என்றால் இதுவும் சரியே .. */

நீங்க என்ன பண்ணுக முத்து குமார்.... காசு கொடுத்து ஒரு பெரியார் சிலைய வாங்கி சேதபடுத்துங்க....உங்க இஷ்டம்..யாரும் கேட்க போறதுல்ல ......அத விட்டு பொது இடங்களில் வைத்திருக்கும் சிலையை ஏன் சேதபடுத்த வேண்டும்...அது கண்டிக்க தக்கது...

Muthukumara Rajan said...

பாரதியை பற்றி பேசி பாரதிதாசன் இடம் வாங்கி கெட்டி கொண்டது போதாதா .

உங்ககிட்ட பாரதியை பற்றி பேசுவது செவிடர் காதில் சங்கு ஒதுவதுக்கு சமம்

/*
காசு கொடுத்து ஒரு பெரியார் சிலைய வாங்கி சேதபடுத்துங்க....உங்க இஷ்டம்..யாரும் கேட்க போறதுல்ல */


அரசு அமைத்த சிலை பணத்தில் என் வரி உள்ளது ஐயா. சேதப்படுத்தலாமா

பரணீதரன் said...

/* உங்ககிட்ட பாரதியை பற்றி பேசுவது செவிடர் காதில் சங்கு ஒதுவதுக்கு சமம் */

உங்ககிட்ட பெரியாரையும், பாரதியும் பற்றி பேசுவது செவிடர் காதில் சங்கு ஒதுவதுக்கு சமம்

/*அரசு அமைத்த சிலை பணத்தில் என் வரி உள்ளது ஐயா. சேதப்படுத்தலாமா */

உங்கள் வரிபணத்துடன் என்னுதும் சேர்ந்து உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்...பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக உளற வேண்டாம்

நம்பி said...

ஒசை. said..

//தலைவர்கள் சிலை வேண்டுமென்று யார் அழுதது. //

அப்புறம் எதற்கு இந்த சிலைக்காக கவலைப்படுகிறாய்?....அழுவது போல் நடிக்கிறாய்....? இவர் தலைவர் இல்லையா?

ஒசை. said..
//காந்தியார் சிலைகளை உடைக்க சொன்னவர்கள்//

ஏதாவது ஒன்றிலாவது உருப்படியாக கவலைப்படேன்!...ஒன்னும் பாதியுமாக கவலைப்படுகிறாயப்பா....?

பிறகு பகுத்தறிவுக்கும் புத்திசாலித்தனத்திற்கும் உள்ள வேறுபாட்டை புத்திகெட்டுப் போதிக்கிறாய்...கேட்டால் இதுவும் புத்திசாலித்தனம் என்கிறாய்...உன் புத்திசாலித்தனம் மண்டையை தாண்டி வெளியே வழிகிறதய்யா? முதலில் அதை துடைக்கலாமே! மெய்சிலிர்க்குதப்பா!

ஒசை. said..
//தேவையற்ற பதட்டத்தை உருவாக்கும் தலைவர்களின் சிலைகளை ஒட்டு மொத்தமாக அகற்ற சொன்னால், அது தான் பகுத்தறிவு. //

காந்தியை கொன்றவர்களுக்கே "காந்தியார் சிலையை உடைக்க சொன்னபோதே" பதட்டத்தை உருவாக்கினால்...

பெரியார் தொண்டர்களுக்கு பெரியார் சிலையை அகற்றினால் பதட்டத்தை உருவாக்காதா...?

அவரவர் தலைவர்கள் அவரவருக்கு உசத்தியப்பா! இதில் கூடவா உன் சர்வாதிகாரத்தை நுழைப்பாய்.

என்ன செய்வது? நான் செய்த களிமண் "புள்ளார்" பொம்மையை என்னிடமிருந்தே வாங்கி, அதை மசூதிக்கு முன்னால் கொண்டு போய் போலை காட்டி கலவரத்தை உருவாக்குபவர்கள் தானே..சிறு பிள்ளைகளை போல....போல காட்டிவிட்டு அதை நீயே கடலில் கொண்டு போய் உடைப்பாய் கிணற்றில் தூக்கிப்போடுவாய்! அதற்குள் ஒரு கலவரத்தை உருவாக்குவாய்! இதற்காகத் தானே உன் பக்தி...உனக்கென்ன கடவுளிடம் பயமா? என்ன? ஒன்றும் கிடையாது.

"பெருமைக்கு "பீ" துன்னும் கூட்டங்கள் தானே"...அப்படித்தான் இருக்கும்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]