வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, November 04, 2010

கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதத்தைப்பற்றி மட்டும்தானா எழுதினார்?

கவிஞர் கண்ணதாசன் 54 வயதுவரைதான் வாழ்ந் தார். அதனால் அவரால் 4000 பாடல்கள்தான் எழுத முடிந் தது. அவர் மேலும் உயிரோடு இருந்திருந்ததால் 20 ஆயிரம் பாடல்கள் எழுதியிருப்பார் அவரது அர்த்தமுள்ள இந்து மதம் வாழ்க்கை நெறிமுறை களை விளக்கும். எனக்கு அதிகாரம் இருந்தால், அந்த நூலை பல்கலைக் கழகங் களில் பாட நூலாக்கியி ருப்பேன்.

- (தினமலர், 28.10.2010)
என்று கவிஞர் வாலி கூறி யுள்ளார்)

கண்ணதாசன் எவ்வ ளவோ பாடல்களை எழுதிய வர்தான். அர்த்தமுள்ள இந்து மதத்தைப்பற்றி மட்டும்தானா எழுதினார்? அர்த்தமற்ற இந்து மதத்தையும் குடைந்து எடுத்துத் தள்ளியுள்ளாரே!

ஆடுமாடுகள் முன் நடந்திட
ஆரணங்குகள் பின் தொடர்ந்திட
காடு யாவையும் கடந்து சிற்சிலர்
கன்னியத் தாயக
எல்லை தொட்டனர்
மஞ்சள் மேனியும்
வஞ்சக நெஞ்சமும்
மானமென்னும் ஓர்
எண்ணம் இன்மையும்
கொஞ்சும் வார்த்தையும்
கொண்டவர் - தமிழ்க்
கோட்டை வாசற்படியை
மிதித்தனர்
சொந்தமாக ஓர்
நாடில்லாதவர்
தொட்ட பூமியில்
சூழ்ந்து வாழ்பவர்
எந்த நாடும் தன்
சொந்த நாடென
ஏற்று மாந்தரை
மாற்றி ஆள்பவர்
சொத்து என்பதோ
தர்ப்பை ஒன்றுதான்
தூய்மை என்பதோ
துளியும் இன்மையாம்
வித்தை யாவையும்
சூழ்ச்சிப் பள்ளியில்
விரும்பிக் கற்றதாம்
வேறு என் சொல!
நச்சரவுகள் மனித
மேனியில்
நடமிடும் கதை
இவர்கள் கதையாம்
அச்சமிக்கவர் கோழையர்;
ஆயினும்
அடுத்து வீழ்த்திடும்
திறமை மிக்கவர்!
(கண்ணதாசன் கவிதைகள், பக்கம் 162-163).

என்றெல்லாம் விலாவாரி யாக ஆரியப் பார்ப்பனர் கள்பற்றி எழுதி இருக்கிறார் - முடிந்தால் கவிஞர் வாலி இதனையும் பல்கலைக் கழ கங்களில் வைத்திட சிபாரிசு செய்யலாமே!

சூழ்ச்சி வென்றது!
நாடு காய்ந்ததே!
கடவுள் வாசலை
காத்தனர் ஆரியர்
வீரம் முற்றும்
ஒழிந்தது ஏட்டிலே!
தீரம் மாண்டு ஆரியர்
சாத்திரத்
தீக்குழியிடைச்
சாய்ந்தனர் தென்னவர்
என்று முழங்கினார் கண்ணதாசன்.

இன்னும் அந்த நிலை இருப்பதை கவிஞர் வாலிகள் மறுக்க முடியுமா?
கடவுள் வாசலைக் காக் கும் வேலையில் உள்ளவர் கள் அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை உண்டு என்று சட்டம் செய் தால், அதனைத் தடுத்து நிறுத்திட உச்சநீதிமன்றம் வரை சென்று கொண்டு தானே இருக்கிறார்கள்?
கேட்டால் இதுதான் அர்த்தமுள்ள இந்து மதம் என்று கூறுவார்கள். அந்த அர்த்தமுள்ள இந்து மதத் தின் ஆணிவேரைப் பொசுக் கும் நெருப்புப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் தீட்டி யுள்ளார் என்பதை வாலிகள் அறிவார்களாக!

-  மயிலாடன், விடுதலை (04-11-2010)

4 comments:

tamilan said...

"இந்து மதம் எங்கே போகிறது? " - தாத்தாச்சாரியார். வேதங்களை எல்லாம் கற்ற இவரை தவிர யாராலும் வேதங்களில் உள்ள தவறுகளை சுட்டி காட்ட முடியாது. பிராமணராக இருந்தாலும் அவர் எழுத்துக்கள் பகுத்தறிவு சிந்தனை கொண்டதாக உள்ளது.

சடங்குகள் மந்திரங்கள், ஸ்லோகங்கள் அர்த்தம் தெரியாமல் சொல்கிறார்கள் புரியாமல் செய்கிறார்கள் என்று விளக்குகிறார்.

இந்து மதச்சடங்குகளை புட்டுப்புட்டு வைத்துள்ளார்.

சங்கர மடங்களின் சங்கராச்சாரியார்களின் இந்து மத வருணவெறி மற்றும் சூழ்ச்சிகளைத் தெரிந்துகொள்ள பெரிதும் உதவும்.

எந்தக் காலத்திற்கோ ஏற்படுத்தப்பட்ட சமஸ்கிருத சடங்குகளை தமிழர்கள் இன்னும் சுமந்து கொண்டு திரிய வேண்டுமா? தூக்கி எறிய வேண்டாமா? என்ற கேள்வியே இந்நூலைப் படித்த போது எழுகிறது

இத்தளத்தில் தொடரை படித்து வாருங்கள்

--> இந்து மதம் எங்கே போகிறது? <--

பரணீதரன் said...

உங்கள் பின்னூட்டம் மிகவும் நன்றாக உள்ளது...என்னிடம் தாத்தாசரியரின் அந்த இரண்டு தொகுதிகளும் நூலாகா வைத்துள்ளேன்.....இந்த வலைபூவும் மிக அருமை .....படித்து தெளியட்டும் மக்கள்.....பார்ப்பனியத்தின் பிடியில் இருந்து மீளட்டும்.

ஒசை said...

கவிஞர் கண்ணதாசன் இன்னும் நிறைய சொல்லி இருக்கார். பகுத்தறிவாளர்கள் குறித்து, வனவாசம், மனவாசம் படிங்க. விலைமாது வீட்டுக்கு போயிட்டு பணம் கொடுக்காம்ம வந்த பகுத்தறிவு பிரபலமும் அதில் அடக்கம்.

நம்பி said...

//ஒசை. said...

கவிஞர் கண்ணதாசன் இன்னும் நிறைய சொல்லி இருக்கார். பகுத்தறிவாளர்கள் குறித்து, வனவாசம், மனவாசம் படிங்க. விலைமாது வீட்டுக்கு போயிட்டு பணம் கொடுக்காம்ம வந்த பகுத்தறிவு பிரபலமும் அதில் அடக்கம்.
4:59 AM //

அது எப்படி அவருக்கு தெரிஞ்சது?...அவரும் வாடிக்கையாளரா? இல்லை அடுத்த நாள்....விலைமாதர் வீட்டுக்கு "ஒசை"ப்படாமல் போய் தெரிஞ்சுகிட்டாரா...?

பிரச்சினையே...இது தானா...?

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]