வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, November 06, 2010

பசியாத வரம் தாரேன் தாயே, கொஞ்சம் பழைய சோறு போடு...

இன்று கந்தசஷ்டி திரு விழா தொடங்குகிறதாம். சிவபெருமான் நெற்றிக்கண் ணின் தீப்பொறியில் இருந்து தோன்றியவன் முருகபெரு மான் (ஸ்கந்தனாகிய இவன் சிவபெருமானின் இந்திரிய வெள்ளத்திலிருந்து தோன்றி யவன் என்பது இன்னொரு கதை!)

அவன் சூரபத்மனோடு போரிட்டு வதம் செய்த நாள் தான் இந்தக் கந்த சஷ்டியாம்.
தீபாவளி என்று சொல்லி நரகாசுரனை வதைத்து நேற்று தீபாவளி கொண்டாடி யாயிற்று. இன்றோ சூரபத் மன் என்ற அசுரனைக் கொன்று கந்தசஷ்டி விழா - ஆறு நாள்கள் முருகன் கோயில்களில் தடபுடலாக விழா நடக்கும். எதையாவது காரணம் சொல்லி, கோயில் சுரண்டல் சாங்கோபாங்க மாக நடந்தாக வேண்டுமே!

கடவுள்களுக்குச் சக்தி யிருந்தால் சண்டை போட் டுத்தான் கொல்லவேண்டுமா என்று யாரும் கேள்வி கேட்டு விடக் கூடாது - அப்படி கேட்டால், நாஸ்திக வாதம் என்று வாய் நீளம் காட்டு வார்கள். பதில் சொல்ல சரக்கு இல்லாதவர்கள் வேறு எதைத்தான் சொல்லி சமாளிப்பார்கள்?

ஒரு மனிதனுக்கு ஒரு பிறப்புதான் இருக்க முடியும். மாற்றிச் சொன்னால் சந் தேகப்படுவார்கள் - கொச் சையாகப் பேசுவார்கள். ஆனால், முருகன் பிறப்பாக இருந்தாலும் சரி, அவன் சகோதரன் விநாயகன் பிறப் பாக இருந்தாலும் சரி பல பல தகவல்கள் - ஆபாசச் சாக் கடைக் குட்டைகள்!

கடவுள் சமாச்சாரம் ஆயிற்றே - யார் கேள்வி கேட்கப் போகிறார்கள். பக்தி என்று சொன்னால், மாட்டு மூத்திரம், சாணம், பால், தயிர், வெண்ணெய் ஆகிய வற்றைப் பஞ்ச கவ்யம் என்று சொல்லி தட்சணை கொடுத் துக் குடிப்பவர்களிடத்தில் அறிவையும், மானத்தையும் தான் எதிர்பார்க்க முடியுமா? பக்தி வந்தால் புத்தி போகும் என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சும்மாவா சொன்னார்?

இந்தக் கந்த சஷ்டியைப் பற்றி ஆன்மீகக் கர்த்தாக் கள் ஒரு வியாக்கியானம் சொல்லுவார்கள்.

சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இந்தப் பழமொழியே தவறு. சஷ்டியில் இருந்தால் அகப் பையில் வரும் என்பதுதான் உண்மையான பழமொழி.

சஷ்டியில் முருகப்பெரு மானை வேண்டி, திருமணம் ஆன பெண்கள் விரதம் இருந்தால், அவர்களது கருப் பையாகிய அகப்பையில் குழந்தை வரும் என்பதுதான் இதன் உண்மையான பொருள் என்று கூறுகிறார் கள்.

அது சரி, அந்த சஷ்டி கதாநாயகனான முருகப் பெருமானுக்கு வள்ளி, தெய் வானை என்று இரண்டு பெண்டாட்டிகள் இருந்தும், குழந்தை இல்லையே - அவரா மற்றவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கொடுப் பார்?

பசியாத வரம் தாரேன் தாயே, கொஞ்சம் பழைய சோறு போடு என்கிற பிச்சைக்காரனுக்கும், இவர் களுக்கும்தான் என்ன வித்தியாசம்?

- மயிலாடன், விடுதலை (06-11-2010)
                                                                                                   

1 comment:

மதுரை சரவணன் said...

புராணத்தை இந்த் ஓட்டு ஓட்டுறிங்க...

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]