வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, September 17, 2010

கிருமிலேயர் வேண்டுமாம் தினமணி சொல்லுகிறது...

இடஒதிக்கீடு என்றாலே பார்ப்பனர்களுக்கும் அவா நாளேடுகளுக்கும் அடிவயிற்றை முறுக்குவது வழக்கம். அதன் படி நேற்றைய (17-09-2010) தினமணி "ஏன்? எப்படி? எதற்கு?"  என்று ஒரு தலையங்கம்...இதில் கிருமிலேயர் முறை ஒத்துகொள்வார்களா? என்று கேள்வி...தினமணி ஆசிரியருக்கே தெரிகிறது ஒப்புகொள்ள மாட்டார்கள் என்று...பிறகு எதற்கு அந்த கேள்வி....முதலில் இந்த  தினமணி சாதிவாரி கணக்கெடுப்பே வேண்டாம் என்று கூச்சல் போட்டது....பிறகு இவர்களுடைய கூச்சல் எடுபடவில்லை என்றதும்  இப்பொழுது சாதி ஒழிய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாதாம்...அனால் கிருமிலேயேர் கொண்டு வரவேண்டும் என்று தினமணி  கூப்பாடு போட ஆரம்பித்திருக்கிறது.....அப்படி ஒரு கூப்பாடு எங்கிருந்து கிளம்பவேண்டும்? யாரால் கிளப்பப்பட வேண்டும்? பிற்படுத்தப்பட்டவர்கள் அல்லவா? வழக்கு போட்ட முன்னேறிய சாதியினருக்கு என்ன இதில் அக்கறை? ஆடு நினைகிறதே என்று ஓநாய் அழுத கதை போன்ற தல்லவா இது? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேட்ட கேள்வி தான் நமக்கு நினைவு வருகிறது.....அனால் இது தினமணிக்கு நினைவு வருமா?  

முதலில் தினமணி ஆசிரியருக்கு பொருளாதாரம் ஏற்ற இறக்கம் உடையது ஆனால் சாதி மாறாதது என்பது தெரியும்.. இருந்தும் இனப்பற்று இப்படி தலையங்கம் தீட்டச்சொல்லி தூண்டுகிறது...என்ன செய்ய எல்லா அவா மயம் மாறி வரும் சூழலில் இப்படி அவா கூட்டம் ஆட்டம் போடுவது வழக்கம்தானே... இடஒதிக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டம் இல்லை...அது காலம் காலமாக எங்களுக்கு மறுக்க பட்டு வந்த உரிமைகளை பெற உதவும் ஆயுதம்.....வீணாக தினமணிகள் கூச்சல் போடவேண்டாம்..


4 comments:

smart said...

"ஆடு நினைகிறதே என்று ஓநாய் அழுத கதை போன்ற தல்லவா இது? " சாதி ஒழிக்க வேண்டும் என்று கூறி சாதி ஓதிக்கீடும் கேட்டும் உங்களுக்குத் தான் பொருந்தும்.

நல்ல உதாரணம் கொடுத்ததற்கு நன்றி

http://smarttamil.wordpress.com/2010/09/17/birthday/
பகுத்தறிவு இருந்தால் இதற்கு ஒரு பதில் சொல்லவும்.

பரணீதரன் said...

உங்கள் ப்ளாக் படித்து பதில் கொடுத்து விட்டேன்...சாதி ஒழிய வேணும் என்று இட ஒதிக்கீடு கேட்பது..முள்ளை முள்ளால் எடுப்பது......இடஒதிக்கீடு என்பது சாதியினால் மறுக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் அதே சாதியை வைத்து பெற முயற்சிக்கும் ஆயுதம்...

Kartheesan said...

சுதந்திரம் கிடைக்கும் தருவாயில், இதுகாறும் துன்புற்ற தீண்டத்தகாதவர்கள் பயனடையும் விதத்தில் காந்தி பத்து வருடங்கள் மட்டுமே இட ஒதுக்கீடு கொடுத்தார். ஆட்சித்திறன் இல்லாத காங்கிரஸ் கட்சியால் ஓட்டுக்காக இந்த ஒதுக்கீடு நீட்டிக்கொண்டே போகிறது. இன்னுமா இவர்கள் முன்னுக்கு வரவில்லை. ஒரு நன்கு படிக்கும் மாணவன் அருகில், படிக்காத ஒரு மாணவன் இடஒதுக்கீடு மூலம் அருகில் வந்து உட்கார்ந்தால் அவனுக்கு எப்படி இருக்கும். முன் ஜென்மத்தில் எங்கள் தலைமுறை படிக்கவில்லை அதற்கு உங்களது தலைமுறை காரணம் அதற்கு இப்போது எங்களுக்கு இட ஒதுக்கீடு என்றா சொல்லமுடியும். இது வெட்ககேடு. இப்படி பிழைப்பதற்கு வேறு தொழில் செய்யலாம்.

நம்பி said...

//Kartheesan said...

சுதந்திரம் கிடைக்கும் தருவாயில், இதுகாறும் துன்புற்ற தீண்டத்தகாதவர்கள் பயனடையும் விதத்தில் காந்தி பத்து வருடங்கள் மட்டுமே இட ஒதுக்கீடு கொடுத்தார். ஆட்சித்திறன் இல்லாத காங்கிரஸ் கட்சியால் ஓட்டுக்காக இந்த ஒதுக்கீடு நீட்டிக்கொண்டே போகிறது. இன்னுமா இவர்கள் முன்னுக்கு வரவில்லை. ஒரு நன்கு படிக்கும் மாணவன் அருகில், படிக்காத ஒரு மாணவன் இடஒதுக்கீடு மூலம் அருகில் வந்து உட்கார்ந்தால் அவனுக்கு எப்படி இருக்கும். முன் ஜென்மத்தில் எங்கள் தலைமுறை படிக்கவில்லை அதற்கு உங்களது தலைமுறை காரணம் அதற்கு இப்போது எங்களுக்கு இட ஒதுக்கீடு என்றா சொல்லமுடியும். இது வெட்ககேடு. இப்படி பிழைப்பதற்கு வேறு தொழில் செய்யலாம். //

இடஒதுக்கீடு பற்றி தத்து பித்து என்று எதையோ உளறிவிட்டு, அப்புறம் நீயே தொழில் செய்யறதுக்கு இட ஒதுக்கீடு பன்ற.....

இன்னும் நிறைய படிக்க வேண்டும்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]