வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, April 01, 2009

சுயமரியாதை என்பதே நம் பெரும்சொத்து!

சென்னை அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் நேற்று (31.3.09) மாலை ஒரு "திருவிழா!" கொள்கை விழா - புத்தம் புதிய தகவல்களை வரலாற்றுக்கு வாரி வழங்கிய காப்பிய விழா!
"முரசொலி அறக்கட்டளை - 2008" ஆம் ஆண்டுக்கான கலைஞர் விருது, முரசொலி மாறன் சிறப்பு விருது, ஒரு லட்ச ரூபாய் பொற்கிழி வழங்கும் விழாவும் வெகுநேர்த் தியாக நடைபெற்றது.

மாலை 4 மணிமுதலே அரங்கத்திற்குள் மக்கள் அமர்ந்த வண்ணமேயிருந்தனர்.
விழா தொடங்கப் படும்போது கூட்டம் அலைமோதியது. அரங்கத்தின் வெளியிலும் மக்கள் கூட்டம்.
கண் பார்வையற்றவர்கள் - ஆனால் அகத்தில் ஒளி நிறைந்த சோதரிகள் பங்கேற்ற இன்னிசை விழா தேன் மாரியாகப் பொழிந்து கொண்டிருந் தது. ஆட்டோ கிராப் திரைப்படப் புகழ் கோம கனின் ராகப்பிரியா குழு வினர், கலைஞர் ஆட்சி யின் சாதனைகள், கொள் கைகள் அடங்கிய பாடல் களைப் பாடி மக்கள் மன் றத்தைக் கிறங்க வைத் தனர்.

சரியாக மாலை 6 மணிக்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் விழா மேடைக்கு வருகை தந் தார்.
முரசொலி அறக்கட் டளையின் தலைவரும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரையாற்றினார். முரசொலி அறக்கட் டளை கடந்த காலத்தில் அளித்த விருதுகள் விவ ரங்களைத் தொகுத்துத் தந்தார்.
தந்தை செல்வாபடத் திறப்பு
ஈழத் தந்தை செல்வா அவர்களின் 112 ஆம் ஆண்டு பிறந்த நாள் என்பதால் முதலாவதாக அவரின் உருவப் படத் தினை முதலமைச்சர் கலைஞர் திறந்து வைத் தார்.
1972 இல் தந்தை செல்வா அவர்கள் தந்தை பெரியார் அவர்களையும் தம்மையும் சந்தித்த விவ ரங்களைப் பசுமையாக நினைவு கூர்ந்தார் முத லமைச்சர்.
ஈழ தமிழர் தம் சோக வரலாற்றினையும் எடுத் துக்கூறி அங்கே அவதி யுறும் நம்மின மக்களுக் காக திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகத் தொடர்ந்து பாடுபட்டு வரும் போர்க்குரல் கொடுத்து வருகிற பெற் றியையும் குறிப்பிட்டுக் கூறினார்.
ஒரு இயக்கம் திரா விடர் இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம் இந்த இரட்டைக் குழல் துப் பாக்கிகள்தான் ஈழத் தமி ழர்களுக்காக அன்றும், இன்றும் விழித்துக் கொண்டிருக்கிறது - பாடு பட்டுக் கொண்டிருக் கிறது என்பதை ஞாபகத் தில் வைத்துக் கொள் ளுங்கள் என்று பசுமரத் தாணிபோல பதிய வைத்தார் .

மக்களை திசை திருப்ப ஈழத் தமிழர்ப் பிரச்சினையைப் பயன் படுத்திக் கொள்ளும் போக்கினைச் சுட்டிக் காட்டிய மானமிகு கலை ஞர் அவர்கள் தமிழர்கள் ஏமாந்துவிடக்கூடாது என்றும் எச்சரித்தார்.
வரலாறு தெரியாதவர் கள் ஈழத் தமிழர்களுக் காக நாம் போராடிய போது, பொது வாழ்வுக் களத்திலே இல்லாதவர் கள் எல்லாம் இன்று எகிறிக் குதிப்பதையும் நாசுக்காகவும் கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத் துவர் இராமதாசு எல் லோரையும் எடுத்தேன் - கவிழ்த்தேன் என்ற போக் கிலே பேசுகிறாரே - கடந்த காலத்தில் அவ ரின் நிலைப்பாடு என்ன?
பா.ம.க.வின் அதி காரப்பூர்வமான கட்சி ஏடாகவிருந்த தினப் புரட்சி (29.6.1989) என்ன எழுதியது?
தமிழகத்தில் மத்திய போலீஸ் மற்றும் புல னாய்வுத் துறையினர் அதி களவில் குவிக்கப்பட்டு இருப்பதால் விடுதலைப் புலி தலைவர்களான கிட்டு, யோகி ஆகியோர் கருணாநிதியின் பாரா ளுமன்ற செயலாளர் எல். கணேசன் வீட்டில் தங்கி யிருப்பதாகக் கூறப்படு கிறது என்று செய்தி வெளியிடவில்லையா?
இதைவிட காட்டிக் கொடுக்கும் எட்டப்பத் தனம் வேறு எதுவாகத் தானிருக்க முடியும்?

இந்த எடுத்துக் காட்டை முதல்வர் கலை ஞர் அவர்கள் விழாவில் கூறவில்லையென்றாலும், இன்றைக்கு இவர்கள் தான் ஈழத் தமிழர்களுக் காகப் பாடுபடுவதாகக் கூறி, மற்றவர்களை மட் டந்தட்டும் போக்கில் பேட்டிகளைக் கொடுக்கி றார்களே - அதற்காகத் தான் இந்த எடுத்துக் காட்டு.
நேற்றைய விழாவில் ஈழத் தந்தை செல்வா அவர்களின் மகன் சந்திர காசன் அவர்களும் கலந்து கொண்டு ஈழத் தமிழர்க ளுக்காக தி.மு.க.வும், அதன் தலைவர் கலைஞர் அவர் களும் தொடர்ந்து ஆதர வுக்கரம் கொடுத்துக் கொண்டிருப்பதையும், இந்த இக்கட்டான கால கட்டத்தில் அந்த உதவி தொடரவேண்டும் என் றும் உருக்கமுடன் கேட் டுக்கொண்டார்.

விருதுகள் பொற்கிழிகள் அளிப்பு
திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலை வர் கி. வீரமணி அவர் களின் சாதனைக் குறிப் பினை தளபதி மு.க. ஸ்டா லின் படித்தார். சிறப் பான தகவல்களை அது உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது.
முதலமைச்சர் கலை ஞர் அவர்கள் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்குப் பொன் னாடை போர்த்தி, கலை ஞர் விருதினை வழங்கி ஒரு லட்ச ரூபாய்க்கான பொற்கிழியையும் காசோலையாக அளித் தார்.
அதுபோலவே - பழம்பெரும் எழுத்தாள ரான சோலை அவர் களுக்கும், புகைப்பட நிபுணர் யோகா அவர் களுக்கும் விருதும், ஒரு லட்ச ரூபாய்க்கான பொற்கிழியும் கலைஞர் அவர்களால் அளிக்கப் பட்டன.

முரசொலி மாறன் சிறப்பு விருது திரைப்பட நடிகர் தியாகு அவர் களுக்கு முதல்வர் கலை ஞர் அவர்களால் அளிக் கப்பட்டது. ரூபாய் ஒரு லட்சத்துக்கான பொற் கிழியும் வழங்கப்பட் டது. இவர்களின் சாத னைக் குறிப்புகளையும் தளபதி மு.க. ஸ்டாலின் படித்தார்.
தமிழர்களில் ஆற்ற லாளர்களை- உயர்த் தப்படவேண்டியவர் களை - உயர்த்தும் இன மானப் பெருவிழா என்று இதனைக் கூற வேண்டும்.
தமிழர் தலைவர் ஏற்புரை
விருது அளிக்கப்பட் டவர்களின் சார்பில் திராவிடர் கழகத் தலை வர் - தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் செறி வாக உரையாற்றினார்.
எடுத்த எடுப்பிலேயே, முரசொலி ஏடு என்பது கலைஞர் அவர்களின் பிள்ளைகளில் மூத்த பிள்ளை என்பதைக் குறிப் பிட்டபோது அரங்கமே எழுந்து கரவொலி எழுப் பியது.

கலைஞர் அவர் களால் கையேடாகத் தொடங்கப்பட்ட முர சொலியின் வயது 67; தந்தை பெரியார் அவர் களின் விடுதலைக்கு வயது 75 என்பதை எடுத் துக்காட்டி, முரசொலி அறக்கட்டளை தமக்கு (விடுதலை ஆசிரியருக்கு) விருது வழங்கும் நாள் - தன் வாழ்நாளில் என் றென்றைக்கும் மறக்க முடியாத நாள் என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.
சாதனைக் குறிப்பு களில் கூறப்பட்ட புகழ் மொழிகள் - அடக்க வுணர்ச்சி காரணமாக தாம் குனிந்து கொண்டி ருந்ததாகத் தமிழர் தலை வர் குறிப்பிட்டார் (பழைய காலத்து மணப் பெண்போல).
சாதனைக் குறிப்பு களைப் படித்த - முர சொலி அறக்கட்டளை யின் தலைவர் மு.க. ஸ்டா லின் அவர்களைப்பற்றி முக்கியமான ஒன்றை, குறிப்பிடத் தவறவில்லை திராவிடர் கழகத் தலை வர்.

மிசா கைதியாக சென்னை மத்திய சிறைச் சாலையில் அடைக்கப் பட்டபோது நடை பெற்ற ஒரு கொடிய நிகழ்வை நினைவுபடுத் தினார்.
ஒன்பதாம் எண் பிளாக் - இரவு ஒன்பது மணி - ரத்தம் சொட்டச் சொட்ட என்மீது ஒரு உருவம் வந்து விழுந்தது. (வஞ்சம் தீர்க்கும் கொடிய மிருகங்களால் தாக்கப் பட்ட நிலையில்) அந்த உருவம் வேறு யாருமல்ல - இங்கே சாதனைக் குறிப்புகளைப் படித் தாரே - எதிர்காலத்தில் மிகவும் நம்பிக்கையோடு எதிர்ப்பார்க்கப்படுபவராக விருக்கிறாரே - அந்தத் தளபதிதான் ரத்தம் சொட் டச் சொட்ட என்மீது தூக்கி எறியப்பட்டவர்தான்.
இன்றைக்கு மாண்பு மிகுவாக அவர் இருக்க லாம். இந்த மாண்புமிகு களுக்குப் பின்னால் தியாக வரலாறு இருக் கிறது என்பதைச் சுட்டிக் காட்டினார் தமிழர் தலை வர்.

இதுவரை ஏட்டில் வெளிவராத புத்தம் புதிய தகவல் ஒன்றை வெளிப்படுத்தி பல்லாயி ரக்கணக்கான பார்வை யாளர்கள் மத்தியிலும், ஏன் பத்திரிகையாளர் கள் மத்தியிலும் ஒரு ஆச் சரியக் குறியை ஏற்படுத் தினார் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.

தி.மு.க.வையும், அ.தி. மு.க.வையும் மீண்டும் ஒன்றிணைக்கும் ஏற்பாடு பற்றிய தகவல் அது.
எழுத்தாளர் சோலை இதோ இங்கே வீற்றிருக் கிறார். சரியான சாட்சியத் தோடுதான் கூறுகிறேன் என்ற பீடிகையோடு ஆரம்பித்தார்.
ஒரு நாள் எழுத்தாளர் சோலை விடுதலை அலு வலகத்துக்கு வந்தார். வந்தவர் சாதாரணமாக வரவில்லை; ஒரு முக்கிய தகவலைச் சுமந்து வந்த தூதுவராக வந்தார்.
முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தங்களை அழைத்து வரச் சொன்னார் என்பதுதான் அந்த அரிய தகவல். அதன்படி ராமாவரம் தோட்டத்துக்கு ஆசிரி யர் வீரமணி சென்றார். தம்மோடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டு பேச்சை ஆரம்பித்தார்.
தி.மு.க.வோடு அ.தி. மு.க. இணையவேண்டும் என்று விரும்புகிறேன் என்ற கருத்தை வெளி யிட்டார். அந்தத் தக வலை கலைஞர் அவர் களிடத்தில் தொலைப் பேசிமூலம் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி அவர்கள் தெரிவித்தார்.
கலைஞர் அவர்கள் அப்பொழுது வைத்த நிபந்தனைகள் கட்சியின் பெயர் - அண்ணாவால் உண்டாக்கப்பட்ட அந்த தி.மு.க. என்றேயிருக்க வேண்டும். கொடியில் அண்ணாவின் உருவம் இருப்பதால் இன்றைய அ.தி.மு.க. கொடி அப் படியே இருக்கவேண் டும். முதலமைச்சராக எம்.ஜி.ஆர். அவர்களே தொடரட்டும்.
திராவிட இயக்கப் பின்னணி அய்யா, அண்ணா ஆகியோர் களின் சிந்தனைகள், இலட்சியங்கள் என்ற பார்வையில், அதன் தன்மை கட்டிக் காக்கப்பட வேண்டும் என்ற அவசி யத்தில் நான் கட்சியின் தலைவராகயிருப்பேன்; திராவிட இயக்க சமூக நீதிக் கொள்கையின்படி வருமான வரம்பு ஆணை ரத்து செய்யப்படவேண் டும் என்று கலைஞர் அவர்கள் கூறினார்.

அப்பொழுது ஒரு கருத்தையும் கலைஞர் அவர்கள் கூறினார்கள். இதற்கு முன்பும் இத்த கைய முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன; பலர் முயன்றார்கள். கடைசி யில் அவர்கள் ஏமாற்றப் பட்டனர். நீங்கள் எந்தப் பட்டியலில் இருக்கிறீர் கள் என்று எனக்குத் தெரியாது என்று கலை ஞர் அவர்கள் கூறியதை யும் கூறினார் தமிழர் தலைவர்.

இந்தத் தகவல்களை ஒவ்வொன்றாக அவர் எடுத்துச் சொல்லிக் கொண்டு வந்தபோது, அடுத்து என்ன சொல் லப் போகிறார்? அடுத்து என்ன சொல்லப் போகி றார்? என்ற ஆவல் ஏதோ மர்ம நாவலைப் படிப்பதுபோல பார்வை யாளர்கள் ஆர்வத்தின் பிடியிலே சிக்கிக் கொண் டனர் (இதன் தொடர்ச் சியாக நிறைவுரையில் மேலும் பல தகவல் களைக் கூறினார் கலை ஞர்).
விருது பெற்ற தமிழர் தலைவர் அவர்கள் திரு வாரூரில் கலைஞர் அவர் கள் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து 1945 (மே 1) இல் நடத்தப்பட்ட தென் மண்டலத் திரா விட மாணவர் மாநாட் டுக்கு தாம் அழைக்கப் பட்டதையும், புகை வண்டி நிலையத்திலி ருந்து மேள தாளங்களு டன் அழைத்துச் செல் லப்பட்டதையும் (மற்ற தலைவர்களோடு) மாநாட்டில் நாகூர் அனிபா அவர்களோடு தாமும் பாட்டுப் பாடிய தையும் போர்க்களம் நோக்கி என்ற தலைப் பில் மாநாட்டில் பேசி தையும் தமிழர் தலைவர் - குடிஅரசு இதழிலிருந்து (12.5.1945) மலரும் நினை வுகளாக எடுத்துக்காட்டி னார்.
85 அகவை நிறைந்த கலைஞர் அவர்களுக்கும் 75 அகவை நிறைந்து விட்ட மானமிகு வீர மணி அவர்களுக்கும் உள்ள உறவு வைர விழா வையும் (60 ஆண்டு) கடந்தது என்பது குறிப் பிடத்தக்கதாகும்.
மற்றொரு முக்கிய அறிவிப்பினை ஏற்புரை யில் வெளியிட்டார்; தனக்கு அளிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு அளிக்கப்படும்.

இதழியல் துறை ஒன்று அப்பல்கலைக் கழகத்தில் தொடங்கப் பட்டு அதில் மாணவர் கள் தயாரிக்கப்படுவார் கள். இந்தத் துறையில் தமிழர்கள் பின்தங்கிய நிலையில்தான் உள்ளனர். இந்த நிதி இந்தத் துறைக் குப் பயன்படுத்தப்படும். இந்த முயற்சிக்கான புர வலராக இதழியில் துறை யில் மூத்தவரான மான மிகு கலைஞர் அவர்களே இருப்பார்கள் என்று தமிழர் தலைவர் அறி வித்தபோது பலத்த கர வொலிமூலம் வரவேற்பு இருந்தது.
இந்தத் துறையில் ஆனந்தவிகடன்களும், இந்துவும்தான் ஆதிக் கம் செலுத்தி வருகின் றன. இந்த நிலையில் தமி ழர் தலைவர் அறிவித்தது காலத்தாற் மேற்கொள் ளப்பட்ட அரிய முயற்சி என்று தமிழின எழுத்தா ளர்கள், இதழியலாளர் களின் கருத்தாகவே இருக்கிறது.

இனமானப் பேராசிரியர் அன்பழகனார்
மாணவர் பருவந் தொட்டு வீரமணி அவர் கள் இந்த இயக்கத்தில் வீறுநடை போட்டு வரு பவர். பெரியார் கொள் கைகளைப் பரப்புவதில் உறுதியாகவும் இருக்கக் கூடியவர். அந்தக் கொள் கைகளைப் பரப்புவது தான் தனது ஒரே கடமை என்பதிலே உறுதியாக இருக்கக் கூடியவர்.
திராவிட முன்னேற் றக் கழகம் அரசியலில் இருந்து தன் பணிகளைச் செய்துகொண்டிருந்தாலும் அதற்கு அடிப்படை யான சமூகப் பணி ஆற் றுவதற்குத் திராவிடர் கழகத்தின் பணி அவசிய மாகிறது என்றும், சமூக அரசியல் அடிப்படைத் தளத்தை அருமையாகச் சுட்டிக்காட்டினார்.
மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர்
தம் உடல்நலம் குன்றி யிருப்பதால், சக்கர நாற் காலியில் வந்தாலும் எனக்கு மாமருந்து என் பது நீங்கள்தான்; மாலை நேரப் பொதுக்கூட்டங் கள்தான் - மக்களைச் சந்திப்பதுதான் என்று சொன்னாரே முதல்வர் கலைஞர் - அருமை, அருமை, இது அருமை யிலும் அருமையாகும்.
தமது தலைவர் தந்தை பெரியார் அவர்களிடம் கற்றுக்கொண்ட ஈரோட்டு மூலிகையின் இரகசியம் இது!

தமிழர் தலைவரைப் பற்றிக் கூறும்போது திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தர் என்று அறிஞர் அண்ணா அவர்களால் வீரமணி சிறுவனாகியிருந்தபோதே அடையாளம் காட்டப் பட்டவர் என்பதை நினைவுபடுத்தினார்.

ஈரோட்டுக் குருகுலத் தில் மாணவர் சுற்றுப் பயணத்தில் வீரமணி யோடு கலந்துகொண்ட தையெல்லாம் மகிழ்ச்சி யோடு நினைவு கூர்ந்தார்.
வீரமணி என்றால் இரட்டைக் குழல் துப் பாக்கியில் ஒரு குழல் அது. இன்னொரு குழல் தி.மு.க.; வீரமணியின் ஆரம்ப கால ஆரோக்கியமான பகுத் தறிவும் இன் றைக்கு அவர் அந்தப் பகுத்தறிவைப் பரப்புகிற எடுத்துக் கொள்கிற முயற்சிகளும், பெரியார் அவர்கள் விட்டுச் சென்றிருக்கிற அந்தப் பெரும் சொத்தும் - வீடு வாசல் அல்ல, இயந்திரங் கள் அல்ல, பத்திரிகைகள் அல்ல, சுயமரியாதை என் கிற அந்தப் பெரும் சொத்தை இன்றைக்குக் காப்பாற்றி வருகிற ஒரு பெருமகனாக வீரமணி விளங்குகிறார். எனவே, அவருக்கு விருது அளிப் பதில் நாங்கள் பெருமை அடைகிறோம். முர சொலி அறக்கட்டளை பெருமை அடைகிறது என்று நறுக் குத் தெறித்த சொல் மணி களால் அடிப்படைச் சித் தாந்தத்தின் சித்திரத்தை வரைந்து காட்டினார் வாழும் திராவிட இயக்க மூத்த தலைவரான கலை ஞர் அவர்கள்.
பழம்பெரும் எழுத் தாளர் சோலை, ஒளிப் பட நிபுணர் யோகா, திரைப்பட நடிகர் தியாகு ஆகியோர் குறித்தும் சிறப்பான பாராட்டுகள் விழாவில் வழங்கப்பட் டன.

ஏதோ ஒரு பாராட்டு விழா - விருது வழங்கும் விழா, பொற்கிழி அளிக் கும் விழா என்ற அளவில் இல்லாமல், ஒரு இன மான திருவிழாவாகவும் பகுத்தறிவுச் சங்கநாதம் ஒலிக்கும் அரங்கமாக வும், திராவிட இயக்கச் சித்தாந்தத்தின் இலட் சியச் சுடரை ஏந்தும் எழுச்சி விழாவாகவும் தமிழர்களை அடையா ளம் கண்டு தம் தோளில் தூக்கிக் காட்டி தமிழர் தம் ஆற்றலை அறிவிப் பது - பாராட்டுவது - ஊக்குவிப்பது தமிழர்தம் கடமை என்பதை தமி ழர்களுக்கு உணர்த்தும் உன்னத விழாவாக இவ் விழா அமைந்திருந்தது என்றே கூறவேண்டும்.

தமிழா இன உணர்வு கொள்! தமிழா தமிழனாக இரு!! என்ற இரு வரி வெளிச்சத்தைத் தமிழர்களுக்கு தந்தை பெரி யார் வழியில், விழியில் தந்தவர் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள்.
அவருக்குப் பாராட்டு என்பது இந்தக் கொள்கைகளுக்குப் பாராட்டு என்றுதானே பொருள்!
நன்றி : விடுதலை


Wednesday, March 04, 2009

பெரியார் நூல்கள் நாட்டுடைமை:யாரும் கவலைப்படத் தேவையில்லை

தந்தை பெரியார் பற்றி ஒரு சிறப்புக் கட்டுரையை எழுதித் தாருங்கள். தினமணி வெளியிடுகிறதா என்று பார்ப்போம். அதே நேரத்தில் பெரியார் கண்ட இயக்கத்தையும் தந்தை பெரியாரால் அடையாளங் காட்டப்பட்ட தலைவரைக் குறித்தும் வேண்டுமென்றே கெட்ட நோக்கத்தோடு யாரேனும் ஒருவர் கட்டுரை எழுதினால்,அதனை எடுப்பாக வெளியிட தினமணி தயாராக இருக்கிறது.
பார்ப்பனர்களைப்பற்றியும், பார்ப்பனர்களுக்குத் துணை போகக் கூடிய நபர்களைப் பற்றியும் இதன் மூலம் நன்றாகவே அடையாளம் காண முடியும்.
திரு எஸ்.வி. ராஜதுரைஎன்பார் எழுதிய கட்டுரை இந்த வகையில்தான் தினமணியில் (26.2.2009) வெளியிடப்பட்டுள்ளது.
பெரியார்: நாட்டுடைமையாக்குதலின் அரசியல் - என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. தலைப்பே குழப்பமாக உள்ளது; உள்ளடக்கத்தைக் கேட்கவும் வேண்டுமா?
பெரியாரின் பேச்சுகள் காலவரிசைப்படி வெளியிடப்பட வேண்டுமா? தலைப்பு வாரியாக வெளியிடப்பட வேண்டுமா என்ற சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
காலவரிசைப்படி என்று கூறி ஆயிரம் ஆயிரம் பக்கங்களில் பெரிய பெரிய தொகுதிகளாக அதிக விலை போட்டு வெளியிட்டால் அது கண்டிப்பாக அலமாரியில் தான் தூங்கிக் கொண்டிருக்கும்!
ஏதோ அறிவு ஜீவிகள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வேண்டுமானால் பயன்படக் கூடும். ஆனால் வெகு மக்களுக்குத் தந்தை பெரியார் அவர்களின் கருத்து போய்ச் சேராது.
தலைப்பு வாரியாகப் போட்டு, 300 பக்கங்களுக்கு மிகைப்படாமல் மலிவு விலையில் வெளியிடும்போதுதான் கடைகோடி பொது மக்களுக்கும் போய்ச் சேர முடியும்.
திராவிடர் கழகம், பெரியார் கொள்கைகள் மக்களுக்குப் போய் சேருவதைப்பற்றி கவலை கொண்டுள்ள இயக்கமாகும். வேறு சிலருக்கோ பெரியார் கொள்கை பொது மக்களுக்குப் போய் சேர்ந்துவிடக் கூடாது; அது அலமாரிகளில் முடக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது அல்லது போதிய புரிதல் இல்லாமல் அப்படி கூறிக் கொண்டிருக்கின்றனர் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெரியாரைப்பற்றி கவலைப்படுவதுபோல காட்டிக் கொள்ளும் இவர்கள், தந்தை பெரியார் காலத்தில் உயிருடன் உலவவில்லையா? அந்தக் கால கட்டத்தில் காதொடிந்த ஊசி முனை அளவுக்காவது உதவிகரமாக இருந்தவர்கள் தானா? இப்பொழுது என்ன திடீர் பக்தி பீறிட்டுக் கிளம்புகிறது என்று தெரியவில்லை.
அதுவும் இவர் யார் என்றால், பெரியார் திடலில் உள்ள நூலகம் - ஆய்வகத்தை முழுமையாகப் பயன்படுத்தி நூல் எழுதி முடித்து, விற்பனையாக்கி அந்த நூலகத்தையே குறைகூறும், தலை சிறந்த நன்றிக்குரிய பெரும்பண்பு படைத்தவர்! இவருக்குத் தோழி யார் என்றால் ஒரு பார்ப்பன அம்மையார். இதுதான் இவர் பெரியாரின் கொள்கையை உள்வாங்கிக் கொண்ட தன்மையின் இலட்சணம்!
பெரியார் கொள்கையை அது பிறந்தகத்திடமிருந்து விடுவிக்க வேண்டும் என்று அந்தப் பார்ப்பன அம்மையார் எழுதுகிறார்.
பெரியார் கொள்கைக்காக அந்த அம்மையார் அரும்பாடுபட்டு உழைத்திருக்கின்றார் என்று நம்புவோமாக! நாளைக்கே பெரியாரின் கொள்கைகளை மீட்டு பட்டிதொட்டி எங்கும் பெரியார் கொள்கையைப் பரப்பிட அபாரத் திட்டங்களையும் தூக்க முடியாமல் கழுத்து வலிக்க சுமந்து கொண்டு நிற்கிறார் என்று கூட நம்புவோமாக! போராட்டங்களை முன்னெடுத்து சிறைச்சாலைக்குக்கூட சிரித்தமுகத்துடன் கிளம்ப இவர்கள் தயாராக இருப்பதாகவும் நம்புவோமாக!
எப்படிப்பட்டவர்கள் எல்லாம் பெரியார் கண்ட இயக்கத்தையும், அதன் தலைவரையும் விமர்சனம் செய்யப் புறப்பட்டு இருக்கிறார்கள் பார்த்தீர்களா?
பெரியார் எழுத்துகளை அரசுடைமை ஆக்க வேண்டும் என்று முதல் அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.
இவர்கள் எந்த உலகத்தில் சஞ்சரிக்கிறார்கள்? முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் பெரியார் கருத்துகளைப் பரப்புவதில் அதன் தலைவர் வீரமணி எப்படியெல்லாம் செயல்பட்டு வருகிறார் என்பதைத் தெளிவாகச் சொன்ன பிறகும் எதற்கு இவர்களுக்கு இந்த வீண் வேலை?
2008 பிப்ரவரி 18-ஆம் நாள் செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க 80-ஆம் ஆண்டு விழாவில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களே - திராவிடர் கழகம் பெரியார் நூல்களை - கருத்துகளை வெளியிட்டு வருவது குறித்து தெளிவாகக் கூறினாரே!
உலகத்திலே உள்ள எல்லா கட்சி அமைப்புகளைப்பற்றியும் சொல்ல வேண்டுமேயானாலும், எந்த ஒரு அமைப்பிலும் இவ்வளவு விஷயங்களை சேகரித்து வைத்து, அதை எதிர்காலத்துக்குத் தரக்கூடிய இந்த ஆற்றல் நம்முடைய வீரமணியாருக்கு இருப்பதைப் போல வேறு யாருக்கும் இருப்பதாக நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். அவரிடத்திலே எங்களைப் போன்ற கட்சிகளெல்லாம் - இதற்காகப் பாடம் படிக்க வேண்டும் - என்று கூறி விட்டாரே!
இவ்வளவு தெளிவாக இருக்கக்கூடிய ஒரு முதலமைச்சரிடம் இவர்கள் வேண்டுகோள் வைப்பது - அவர்களின் அறியாமையைத்தான் வெளிப்படுத்தும்.
கால வரிசை கால வரிசை என்று கிளிப்பிள்ளைபோல பாடம் படிக்கிறார்களே, கடவுள், மதம், பெண்ணுரிமை, ஜாதி தீண்டாமை போன்ற தலைப்பில் வெளியிடப்படும் தொகுதிகளில் அடங்கியுள்ள கட்டுரைகள் எல்லாமே கால வரிசைப்படி தொகுக்கப்பட்டவைதான் என்பதை மறைக்கப் பார்ப்பது - ஏன்?
இன்னொன்றையும் சொல்கிறார்கள் - பெரியாரின் எழுத்துகள், பேச்சுகள் ஆகிய அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட வேண்டும்; அதுவும் காலவரிசைப்படியான தொகுப்புகளாக என்பதுதானேயன்றி பெரியாரின் நூல்களை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்பதல்ல - என்று எழுதுகிறார் திருவாளர் ராஜதுரை. இந்த வகையைச் சார்ந்தவர்களுக்குள்ளேயே ஏகப்பட்ட முரண்பாடா?
பெரியாரின் நூல்களில் அவரின் எழுத்துகள்; பேச்சுகள் இல்லையா? இதுவரை 31 தொகுதிகளை வெளியிட்டுள்ளோமே எல்லாம் பெரியாரின் எழுத்துகளும் பேச்சுகளும் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டு இருக்கவில்லையா?
எதையோ நினைத்துக் கொண்டு - அவலை நினைத்து உரலை இடித்த கதையாக கதைக்கிறார்களே தவிர அவற்றில் நியாயமோ, தர்க்கமோ, கொள்கை நோக்கோ, உண்மையோ அறவே கிடையாது.
பெரியார் என்ற முழுப் புரட்சியாளரின் ஒவ்வொரு எழுத்தும் மிக முக்கியமானவை, ஒரு அரைப்புள்ளிகூட முக்கியத்துவம் வாய்ந்தது.
தந்தை பெரியார் வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வந்த இன எதிரிகளோ நாணயமற்றவர்கள்; எதையும் திரித்து வெளியிடும் திரிநூலர்கள்; அவர்களுக்கு வசதி செய்து கொடுக்க சிலர் புறப்பட்டுள்ளார்களோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.
சேலத்தில் 1971-இல் தந்தை பெரியார் அவர்களால் நடத்தப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பெண்ணுரிமைபற்றிய புரட்சிகரமான தீர்மானத்தை இந்து தினமணி துக்ளக் உட்பட எப்படியெல்லாம் திரித்து ளியிட்டன!
தந்தை பெரியார் உயிரோடு இருக்கும்போதே இந்த வேலையைச் செய்தவர்கள், பெரியாரின் எழுத்துகளை, பேச்சுகளை யாரும் வெளியிடலாம் என்று திறந்து விட்டால் சகட்டுமேனிக்குத் திரிபு வேலையைச் செய்திட உரிமம் அளித்ததுபோல ஆகிவிடாதா? அப்படி திரித்து வெளியிட்டால் மறுத்து எழுதுவதுதானே நமது வேலை என்று தங்கள் விவாதத்துக்கு முட்டுக்கால் கொடுக்கிறார்கள் - எந்தெந்த இடங்களில் எல்லாம் இவை நடக்கின்றன என்று, அறிவது சாத்தியப்படக் கூடியதுதானா? பட்டுப்புடவையை இரவல் கொடுத்து சீமாட்டி செல்லும் இடமெல்லாம் பாயைத் தூக்கிக் கொண்டு அலைந்த கதை என்று தந்தை பெரியார் சொன்னதுதான் இங்கு நினைவிற்கு வருகிறது.
இந்து போன்ற ஏடுகள் தந்தை பெரியாரின் தீர்மானத்தை திரித்து வெளியிட்ட போது இவர்கள் எல்லாம் உயிரோடு இல்லையா? அல்லது பிறக்கவேயில்லையா? எந்தவகையில் தந்தை பெரியாருக்குத் துணையாக நின்றவர்கள் இவர்கள்? தமிழர் தலைவர்தான் நீதிமன்றம் வரை சென்று இந்துவை மன்னிப்பு வாங்கச் செய்தார் என்ற வரலாறெல்லாம் தெரியுமா?
ஏதோ இந்து ஏடு கண்ணுக்குத் தெரிந்து எழுதியது - எதிர்த்தோம் முடிந்தது; மூலைமுடுக்கில் நடக்கும் எத்துவேலைகள் எல்லாம் நம் கவனத்துக்கு வருமா?
பாரதியார் அப்படி ஒன்றும் புரட்சிவாதியல்ல; அப்படியிருந்தும் பாரதியார் நூல்களை வெளியிடுபவர்கள் பாரதியார் கருத்துகளைத் திரித்து வெளியிட்டுள்ளதாக, பாரதியாரின் பெயர்த்தி விஜயபாரதி என்பவர் குமுறியுள்ளாரே! தஞ்சைப் பல்கலைக் கழகம் 1970-இல் பதிப்பித்து வெளியிட்டுள்ள பாரதி பாடல்கள் - ஆய்வுப் பதிப்பு எனும் நூலில் பாரதி எழுதாத படைப்புகள் அவர் எழுதியதாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல்களைக் கூறியுள்ளாரே! (Sunday Express) - 18.1.2009)
இதற்கு என்ன பதிலை வைத்துள்ளார்கள் ராஜதுரைகள்? நம் கண் முன்னே காணும் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
பெரியார் வாழ்ந்த காலத்திலேயே பெரியார் பொன் மொழிகள் என்ற ஒரு நூலை திருச்சியில் தனியார் பதிப்பகத்தார் வெளியிட்டனர். அந்த நூலில் இடம் பெற்ற கருத்துகளுக்காக தந்தை பெரியார் தண்டனை விதிக்கப்பட்டாரே! சிறை சென்றாரே! அந்த நூலில் இடம் பெற்ற கருத்துகள் தமது ஒப்புதலைப் பெற்றவையில்லை - சரியானவை என்றும் கூற முடியாது - அவர்களாகவே வெளியிட்டது என்று தந்தை பெரியார் கூறிடவில்லையா?
பகுத்தறிவுவாதியான புத்தர் கருத்துகளையே பாட பேதம் செய்துள்ளனரே - இந்த வரலாற்றுப் பாடத்தைத் தெரிந்து கொண்டவர்கள் மாபெரும் புரட்சியாளரான தந்தை பெரியார் கருத்துகளை வெளியிடும்போது போதிய பாதுகாப்பும், விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் பெற்றிருக்க வேண்டாமா?
தந்தை பெரியார் நூல்களை விற்பதால் கிடைக்கும் வருமானத்தைப் பொறுத்தா பேசுகிறோம்? இன்னும் சொல்லப் போனால் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடுகள் போல மலிவான விலையில் நூல்களை வெளியிடுவோர் யார்? வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசிவிடலாமா? எழுதிவிடலாமா?
தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட நிறுவனம் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம். அந்த நிறுவனத்திலிருந்து பெரியார் இட்ட கட்டளைப்படி நூல்கள் முறையாக வெளியிடப்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் கொண்டு செல்ல செறிவான ஏற்பாடுகளும் இருந்து வருகின்றன.
பல தலைவர்களுக்கு இந்த வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியிருக்கலாம். தந்தை பெரியார் அவர்களுக்கு அந்த நிலை ஏற்படவில்லை - காரணம் தொலைநோக்கோடு தந்தை பெரியார் ஏற்பாடுகளைச் செவ்வனே செய்து வைத்துள்ளார். அதற்கேற்றவர்களையும் தயாரித்துஅறிமுகப்படுத்தியும் இருந்தார். அதன்படி செயல்பாடுகளும் நடந்து வருகின்றன.
எனவே, இந்த வகையில் யாருடைய அறிவுரையும் எங்களுக்குத் தேவைப்படவில்லை.
இடைஇடையே இது போல் வந்து போகும் குறும்புகளையும், குறுக்குச் சால்களையும் கடந்துதான் இந்த இயக்கமும், இயக்கத் தலைமையும் இலட்சியப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றன.
எதை எந்த நேரத்தில் எப்படிசெய்ய வேண்டும் என்ற எண்ணமும், திட்டமும் இயக்கத்திடம் நிரம்பவே இருக்கின்றன. எங்கள் பயணம் தொடரும். பெரியார் கருத்து நாட்டு மக்களுக்கு உரியதுதான். அந்தக் கருத்துகளை நாட்டு மக்களுக்குக் கொண்டு செல்லும் பணியைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம். அதுபற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை.
எத்தனையோ விளக்கங்களை எடுத்துக் கூறியிருந்தும் வீம்புக்காக இந்தப் பிரச்சனையை சிலர் கூறிக் கொண்டிருப்பதும், அதற்குப் பார்ப்பன ஊடகங்கள் மூக்கைச் சொரிந்து விடுவதும் நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தமிழர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்பதில் அய்யமில்லை.

----------------------------------- நன்றி - விடுதலை

Wednesday, February 04, 2009

முதல்வருக்கு சந்திரகாசன் கடிதம் - தங்கள் உடல்நலனும் ஆட்சியும் முக்கியம்!

முதலமைச்சர் கலைஞர் அவர்களின் உடல்நல னும் மிக முக்கியம் என்று ஈழ அகதிகள் மற்றும் மறுவாழ்வுக் கான அமைப்பின் பொறுப்பாளரான சா.செ. சந்திரகாசன் (ஈழத் தந்தை செல்வா அவர்களின் மகன்) அவர்கள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடிதம் வருமாறு:-

வணக்கம். தாங்கள் முதுகுவலி காரணமாக மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருப்பது அறிந்து துடித்துப் போனோம். இம்மடல் தங்கள் கைக்குக் கிடைப்பதற்கு உள்ளாகவே தாங்கள் முழு நலம் பெற்று திரும்பிவிட்டீர்கள் என்ற நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்புகின்றோம். தங்கள் உடல்நலத்தையும், உள நலத்தையும் கெடுக்கக்கூடிய எத்தனையோ நிகழ்வுகள். எனினும், தங்கள் நலத்தில்தான் தமிழ்கூறும் நல்லுலகத்தின் நலனே தங்கியுள்ளது என்பதால், உங்கள் உடல் - உள நலம் உங் களுக்கு மட்டுமல்ல, தமிழின நலத்திற்கும் இன்றியமையாதது. ஆகவே, அருள்கூர்ந்து முதற்கண் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டுகிறோம்.


தங்களின் ஆட்சி முக்கியம்
ஈழத்தமிழர் இன்னல், அதையொட்டித் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு இவையெல்லாம் தங்களைப் பாதிக்கும் என்பதை அறிவோம். ஆயினும், தாங்கள் ஆட்சியிலிருப்பதால்தான் இலங்கையில் சிங்களப் பேரினவாதம் ஓரளவுக்கேனும் அடக்கி வாசிக்கிறது. உலகத் தமிழர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளி யிட முடிகின்றது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று நடத்தி, தங்கள் ஆதங்கத்தை உலகிற்குத் தெரிவிக்க முடிகிறது. இந்தியாவும், உலகமும் மெல்லவேனும் இலங்கைத் தமிழர் உயிர்க் காப்பிலும், உரிமைக் காப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றன.

எனவே, தங்கள் உடல் நலத்தைப் போலவே தமிழகத்தில் தங் களுடைய ஆட்சியும் - நலமும் பலமும் பெற்றுத் தொடர்வது இன்றியமையாததாகும். தடாகத்தில் நீர் இருந்தால்தான் தாமரை மலரும். மீன் வளம் பெருகும். பறவைகள் நாடிவரும். சூழவுள்ள நிலங்களில் செழிப்புத் திகழும். அதுபோல் தமிழாய்ந்த தமிழராகிய, மொழி உணர்வும், இன உணர்வும், மாந்த நேயமும் கொண்டவராகிய தங்கள் ஆட்சி தொடர்வது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, இங்குள்ள தமிழர்களுக்கும், எங்குமுள்ள தமிழர்களுக்கும் இன்றியமையாததாகும்.

ஈழத்தமிழர் உரிமைகளைப் பாதுகாக்க, அவர்களுக்கு எதிரான போரை நிறுத்தத் தாங்கள் பதவி துறக்க வேண்டு மென்ற கோரிக்கை அறியாமையில் இருந்து எழுவதாகும். ஈழத் தமிழர்களே அதை விரும்பவில்லை. ஈட்டி இழந்த நிலையில் கேடயத்தையும் தூக்கியெறிய வேண்டுமென்று கேட்பது போன்றதாகும் அது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பதை எவர் மறுத்தாலும் அதனை ஏற்க முடியாது.


பாராட்டுதலுக்குரிய கலைஞரின் அணுகுமுறை
இந்திய நடுவண் அரசை எங்களுக்காக - ஈழத் தமிழர்களுக் காக இயங்கச் செய்வதில் உங்கள் பங்கு முக்கியமானது. தமிழக அரசில் தாங்கள் தொடர்ந்தால் அதனை சிறப்பாகச் சாதிக்க முடியும் என்பதைத் தமிழீழ மக்களும், தமிழக மக்களும் உணர்ந்தே இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். மிக ஆழமான சிந்தனையுடன் கூடிய மிகப்பக்குவமான உங்கள் அணுகுமுறையைப் பாராட்டுகிறோம்.

தற்போதைய குழப்பங்களும், கொந்தளிப்புகளும் முடிவுக்கு வந்து, இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு கண்ட பின், நாட் டைக் கட்டியெழுப்புவது என்பது பெரும் பணியாகும். இவ் வளவு பெரிய தமிழ்நாட்டை, இன்னும் சொன்னால் இந்தி யாவையே எத்தனையோ பிரச்சினைகளுக்கு நடுவில் புதிய புதிய திட்டங்கள்மூலம் வானளாவ உயர்த்தியிருக்கும் தங்களின் வழிகாட்டுதலும், உதவிகளும் எங்களுக்கு இன்றியமையாதவை யாகும். அவற்றை வழங்கி ஊக்குவிக்கவேண்டும் என்று நாங்கள் இப்போதே விண்ணப்பித்துக் கொள்கிறோம்.

ஆதலால், சவாலை, அழுத்தங்களைக் கண்டு கவலை கொள்ளாமல், தமிழின நலன்களையும், தங்கள் நலன்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் தங்களை நேரில் வந்து காண ஒரு சில நிமிடங்களை ஒதுக்கி ஒப்புதல் தரவேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

------------------------------------------------------------

மேலே உள்ள கடிதத்தின் மூலம் நாம் தெரிந்துகொள்வது உண்மையில் யாருடைய ஆதரவு இருந்தால் தமிழ் ஈழம் பெறலாம் என்பது. ஆனால் இங்குள்ள தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் உண்மையில் தன்னை ஈழ போராட்த்திர்க்காக குரல் கொடுப்பவர்கள் என்று சொல்லி கொள்பவர்களின் ஒரே குறிக்கோள் கலைஞர் ஆட்சியை கவிழ்த்து ஒரு நாசமா போன ஈழத்திற்கு எதிராக போராடக்கூடிய ஒரு ஆட்சியை கொண்டு வரத்தான் படுபட்டுகொண்டிருக்கிரர்கள், இந்த உண்மை குரல் ஈழ விரும்பிகள்.

இந்த ஈழ மக்களுக்க (இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்) குரல் கொடுக்கும் ஒரு அரசியல் கட்சியாவது , முதல்வரிடம் போயி நீங்கள் காங்கிரசிடம் இருந்து பிரிந்து அதரவை வாபஸ் வாங்குங்கள், நாங்கள் இருக்கிறோம் உங்கள் மாநில ஆட்சியை பாதுகாக்க என்று கூறி இருப்பர்கலேயனால், நாம் நினைக்கலாம் இவரால் உண்மையிலேயே ஈழ மக்களுக்காக தான் குரல் கொடுக்கிறார்கள் என்று . இவர்கள் முதல்வர் சொன்னதுபோல் அண்ணன் எப்போ சாவன் திண்ணை எப்போ காலியாகும் என்று இருப்பவர்கள் தானே

இவர்கள் நினைப்பது போல் அவர் வாபஸ் பெற்றால் எல்லாம் நடந்து விடுமா? 1991 நடந்தது என்ன? தமிழில விடுதலைப்புலிகளின் நடமாட்டம் தமிழ்நாட்டில் அதிகரித்து விட்டதாக கூறி தி.மு.க ஆட்சியை கலைத்தார்கள், அதன் பிறகு நடந்ததது என்ன அம்மாவின் ஆட்சியில். எனவே தமிழ் ஈழத்திற்கும், ஈழ போராளிகளுக்குமாக தனது ஆட்சியை கலைஞர் இழந்து அந்த அனுபவம் எல்லாம் பெற்றுவிட்டார். எனவே இப்போ பொழுது ஆட்சியை இழந்தால் ஈழ போராளிகளுக்கும் , ஈழ மக்களுக்கும் இன்னும் கொடுமை மிக அதிகரிக்குமே தவிர ஒன்றும் குறைந்து விடாது .

காங்கிரசில் இருந்து தி.மு.க வெளியில் வந்தால் நிச்சயமாக அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமையும். இந்த கூட்டணியை ரொம்பவே தமிழ் ஈழத்திற்க்கும் அதன் போராளிகளுக்கும் ஆதரவானது. அப்புறம் உள்ளதும் போச்சடா நொள்ள கண்ணா என்று எல்லா தமிழ் மக்களும் வாயில் விரலை வைத்துக்கொண்டு தங்களுடைய கொஞ்ச நஞ்ச உணர்வுகளை கூட வெளி படுத்தும் வாய்ப்பு இல்லாமல் போக வேண்டிய நிலைமை தான் ஏற்படும்.அப்புறம் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள் எல்லாம் மேடையில் நின்று கை உயர்த்த முடியாது. மாறாக சிறையில் நின்றுதான் கை உயர்த்த முடியும்.

தமிழீழ தேசிய தலைவர் கூறுவது போல நம்முடைய தாகம்... தமிழில தாயகம்!

எனவே தமிழக முதல்வரின் உணர்வுகளை புரிந்து கொண்டு நாமும் சில விடயங்களில் அவருடன் ஒத்துழைக்கவே வேண்டும் இது போன்ற இக்கட்டான நிலைகளில்.



Thursday, January 08, 2009

தமிழர் திருநாள் - பகுத்தறிவு பொங்கல் பொங்குக!....

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பார்பனர்கள் தான் சங்கராந்தி என்று கூறி தங்களது ஆரியக் கலாச்சாரத்தையொட்டி - வடமொழியில் பெயரிட்டு சங்கராந்திதான் கொண்டாடு வார்களே தவிர - ஒருபோதும் பொங்கல் என்று வாய் தவறியும் சொல்லிவிடமாட்டார்கள்!
அதனிலும் மதச்சேற்றைப் போட்டுக் குழப்பி சங்கராந்தி என்றும் பெயரிட்டு தங்கள் முத்திரையைக் குத்தி வைத்து இருக்கின்றனர். அந்த மதநாற்றத்தை இதோ கேளுங்கள்

சூரியன் தனுர்; ராசியில் சஞ்சரிக்குங் காலம் இது தேவர்களுக்கு விடியற் காலம். மகாசங்கிராமே சக்தி எனும் சக்தி தட்சீணாயனம் ஆறு மாத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்தபடியினால், அத்துன்பம் ஈஸ்வரானுக்கிரகத் தால் நீங்கினதால், தை மாதம் முதல் தேதி ஜனங்கள் அக்காலத்து விளைந்த புதுப்பொருள்களால் சூரியனை ஆராதித்தனர். அச்சக்தி பசுக்களைப் புலியுருவமாய் அதஞ்செய்திருந்த படியால் அப்பசுக்களைக் கொண்டு அப்புலியுருக்கொண்ட சக்தியை ஓட்டின நாள். இதனை மாட்டுப்பொங்கல் சொல்லுவார்களாம்.

இவ்வாறு அன்றி, இந்திரன் மழை வருஷிப்பவன் ஆதலால், அவன் செய்த நன்மையின் பொருட்டு தைமாதம் முதலில் அறுத்த, முதற்பயிரை மழைக்கடவுளாகிய இந்திரனுக்கு ஆராதித்து வந்தனர் எனவும், அது கிருஷ்ணமூர்த்தி அவதரித்தபின் அவர் அதை நாராயணனுக்குப் படைக்கக் கட்டளை இட்டனர் எனவும், அதனால் இந்திரன் கோபித்துப் பெருமழை பெய்விக்க, குடிகள் நிலைகுலைந்து மாடுகள் கன்றுகளை இழந்து தடுமாற , கண்ணன் கோவர்த்தனம் எடுத்துக் குடிமக்களைக் காத்தான் எனவும், அதனால் இந்திரன் வெட்கி வேண்ட, சங்கராந்திக்கு முன்னால் அவன் பெயரால் பண்டிகை அமைந்ததாம். அது போகிப் பண்டிகை எனவும், மறுநாள் சங்கராந்திப் பண்டிகை எனவும், மறுநாள் மழையால் வருந்திய மாடு கன்றுகளைத் தலை அவிழ்த்துவிட்டுக் களித்தமையால் மாட்டுப் பொங்கல் எனவும், மறுநாள் மழையால் உண்டாகிய சுகாசுகங்களை ஒருவரையொருவர் விசாரித்ததால் காண்பொங்கல் எனவும் சொல்லுவார்களாம்.

இப்படி மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட்டு வருணபகவான், சூரியன் என்று கூறி நம் தமிழர் திருநாளை மதத்தோடு தொடர்பு படுத்தி வைத்து இங்கு நம் தமிழர்களை முட்டாளாக்கி வைத்து அவர்கள் குளிரக்காயகிரர்கள். இது தெரியாமல் நம் மக்களே சிலர் கூமுட்டைகலாகி, அவர்களின் மூட விலங்கினில் இருந்து வெளிய வரமுடியாமல் தவிக்கிறார்கள்.

இந்த அடிமட்ட கூமுட்டை மக்களுக்கு எவளவு கூறினாலும் நீ பெரியார் இயக்கத்தை சேர்ந்தவன் தானே அதனால் தான் இப்படி சொல்லுகிறாய் நாங்கள் நம்ப தயாராக இல்லை என்று சொல்லுவதோடு மட்டும்மல்லாமல், நாத்திகம் பேசும் நீ ஏன் இந்த விழாவை கொண்டாடுகிறாய் என்கிற ஒரு வக்கிர புத்தி யோசனையில் ஒரு கேள்வி வேறு நம்மிடம் கேட்கிறார்கள் இந்த அதிபுத்திசாலி மூட அடிமைகள்.

படிக்கதவர்கள்தான் இதனை நம்புகிறார்கள் என்றால், படித்த நம் அறிவுசிவிகளும் இதற்க்கு விதிவிலக்கல்ல. இந்த கல்வியறிவு இல்லாதவர்கள் கூட நம் கருத்தை சற்று யோசித்து ஏதோ சரி போல தெரிகிறதே என்று ஏற்க தயாராகிறார்கள். அனால் இந்த படித்த அறிவுசிவிகள் நாம் சொல்லுவதையும் ஏற்க மறுத்து வேதண்டவதம் செய்வார்கள். சரி அதற்க்கு ஆதாரமான நூலை தருகிறேன் உன்றி படித்து உண்மையாவது தெரிந்துகொள் என்று அவர் வழிக்கு விட்டாலும், எ அப்பா இந்த வெட்டி வேலை (ஒருமணி நேரத்துக்கு மேல் போனில் கடலை போடுவது, செக்ஸ் புக் படிப்பது, இன்னும் எவலோவோ...... இதெல்லாம் பயனுள்ளது அனால் நல்ல நூல்களை படித்து பகுத்தறிவை வளர்ப்பது இவர்கள் பாசையில் வெட்டி வேலை.) எல்லாம் எங்களுக்கு எதுக்கு.

பெரியார் இயக்கத்தை சேர்ந்த யார் எழுதும் நூலும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று புலம்பல் வேறு. என்னமோ பெரியாரும் அவர் வழிவந்தவர்களும் புத்தகம் எழுதி பிழைப்பு நடத்த வந்தவர்கள் போல. இந்த அடிமட்ட கூமுட்டைகளை பார்பனர்களின் மூட சூழ்ச்சி நூல்களில் (உதாரணம்: பகவத்கீதை, ராமாயணம், மகாபாரதம் ...........நீளும்) இருந்து மீட்டு எடுத்து, சூத்திர பட்டதை ஒழித்து, அறிவும், நாணமும் கொண்ட சுயமரியாதை உள்ளவர்களாக்க தானே பெரியாரும் அவர் தொண்டர்களும் பாடுபட்டார்களே தவிர வேற என்ன வெங்காயம். சும்மோ ஏதோ கேள்வி கேட்க வேண்டும் வாதம் செய்ய வேண்டும் இல்லாமல் இதோ தமிழர் திருநாளான பகுத்தறிவு பொங்கல் என்ன என தெரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே!.....

(அறிஞர் அண்ணாவின் பொங்கல் மலர் கட்டுரையில் இருந்து ......)

பொங்கல் புதுநாளின் கருத்து மிக அழகியது. பொருள் ததும்புவது.

ஆரியர் கொண்டாடும் ஆபாசப் பண்டிகைபோல எதிரியை எப்படியோ வதைத்து விடடதற்காகக் கொண்டாடும் நாளன்று! ஆரியர் பண்டிகை, வெறியாட்டம்! அவைகள் சூதும் சூழ்ச்சியும் வீரத்தை வாட்டி வதைத்ததை விளக்கும் பண்டிகைகள். பொங்கற் புதுநாள் அத்தகைமைத்தன்று.
பாடுபட்டால் பலன் உண்டு! உழைத்தால் வாழ்வுண்டு! என்ற மூலக் கொள்கைக்கு ஏற்றநாள் அது.

காட்டைத் திருத்தி, நிலமாக், மேட்டை அகற்றிக் குளமாக்கி, கரடுமுரடைப் போக்கி வாய்க்கால்களாக்கி, வயல்கள் பலவும் அமைத்து வரப்புகள் தொகுத்து, உழுது நீர்பாய்ச்சி, களை எடுத்துக் காப்பாற்றி, முற்றிய கதிரை அறுத்து வந்து முற்றத்தில் கொட்டி, அளந்து எடுத்து ஆனந்தத்துக்கு அடிகோலும் நாளாகும் அந்நாள்.

உழைப்பின் பயன் இதுவென உணர்ந்து, மகிழ்ச்சி பொங்குகிறது என்பதை மனதில் இருத்த வேண்டி, பாற்கொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல்! எனத் தீந்தமிழ் மொழி புகன்று, தித்திக்கும் பண்டமுண்டு திருநாள் கொண்டாடும் நாளாகும்.அந்நாள், தமிழர் தமது உள்ளத்தில் ஒரு விஷயத்தை நினைவிலிருத்துவர் என நம்புகிறோம்.திருந்தாத வயலில் உழவு இல்லை. நம்நாடு திருந்தாத வயலாகவே இன்னமும் உள்ளது. எனவேதான் இங்கத் தன்னாட்சி முளைக்கவில்லை.

வரம்பு கட்டாவிடில் வயலுக்கு வயல் வம்பு வளரும். அஃதே போலத்தான், தமிழர் தம்நாட்டின் வரம்பு கட்டத் தவறி, அதாவது தமிழ்மொழி, கலை, மார்க்கம் ஆகியவைகள் ஆரியத்தால் சிதைக்கப்படாதிருக்கவேண்டித் தன்மானம் எனும வரம்பு கட்டத் தவறியதால், இன்று நமது நாடு பிறருக்கே சந்தையாகிவிட்டது.

உழுது நீர்பாய்ச்சிக் களை எடுக்கா முன்னம், பச்சைப் பயிர் பார்க்க முடியுமா? செந்நெல் தேட இயலுமா? நாம் இங்கே நம் நாட்டுக் களைகளைப் போக்கினோமா! இல்லையே! அதோ தீண்டாமை எனும கோரமான களை இருக்கிறது. பார்ப்பனீயம் எனம் பண்டைப் பயங்கரப் பாசி அடிமுதல் நுனிவரை படர்ந்தருக்கிறது. பித்தலாட்டக் கொள்கைகள் எவ்வளவு! பாமரர் ஏய்க்கப்படுவது எத்துணை. குருட்டுக் கொள்கையும், முரட்டுப் பிடியும், வரட்டு வீரமும் கிழட்டுப் போக்கும், பகட்டுப் பேச்சும், இங்கேயுள்ள களைகள்! இவைகள் போக்கப்படா முன்னம், பயிர் ஏது? இவகைளைக் களைவதன்றோ, பண்ணையில் அக்கரை கொண்டோரின் கடன்.

எனவே பொங்கல் பண்டிகை என்பது அறிஞர் அண்ணா கூறியது போல பழயன கழிதலும் புதுவென புகுதலும் ஆகும். எனவே ஒவ்வொரு பொங்கலுக்கும் புதிய சிந்தனை பொங்கி பழைய சிந்தனைகளை வேறுடன் அறுத்து ஆண்டுதோறும் பகுத்தறிவு பொங்கலாக கொண்டாடுவோமாக!.....

புத்துயிர் பெறட்டும் பகுத்தறிவு பொங்கல் !
புதுமை பொங்கட்டும் !

(தமிழக முதல்வரின் முயற்சியால் இவ்வாண்டு பொங்கல் தமிழ் புத்தாண்டோடு சேர்ந்துவருவது தேனினும் இனிமையான புதுமை பொங்கல்)

Tuesday, January 06, 2009

உத்தரவாதம் கொடுப்பார்களா ராஜபக்சேயின் பக்தர்கள்?....

இலங்கை தலைநகரான கொழும்புவில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களை அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ளவேண்டும் என மகிந்தா ராஜபக்சேயைக் குடியரசுத் தலைவராகக் கொண்ட சிங்கள வெறி அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில், இது மூன்றாவது முறையாகத் தமிழர்களை இழிவுபடுத்தவும், அச்சத்திற்கு உள்ளாக்கவும் விடுக்கப்பட்டுள்ள உத்தரவு ஆகும் (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 4).

காலை 6 மணிமுதல் குளிரையும் பொருட்படுத்தாது, பெண்கள், சிறுவர், சிறுமியர் உள்பட அனைத்துத் தமிழர்களும், கொழும்பு காவல் நிலையங்களுக்குமுன் காணப்பட்டனர்; மாலை நெடு நேரங்கழித்தும் பதிவு வேலை நடந்தது.

கிளிநொச்சியைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிவிட்டதாக, சிங்களவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்துவரும் சூழல்; அந்நிலை யில் இதுநாள்வரை ஈழத்தை ஆதரிக்காத தமிழரும்கூட, பதிவு செய்யும் அவமானத்துடன் வாழ்வதைவிட, எப்படியும் ஈழத்தை அடைந்துவிட்டால் மானத்தோடு வாழலாமே என எண்ணத் தொடங்கிவிட்டனர் எனச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறீலங்கா எல்லாச் சமூகத்தினருக்கும் உரியது எனில் தமிழ ருக்கெதிராகத் தொல்லை தரவும், அவமானம் உண்டாகவும் வகை யிலான நடவடிக்கைகள் ஏன்? எனக் கேட்கத் தொடங்கிவிட்டனர், கொழும்புவாழ் தமிழர்கள்.
மேற்கண்ட செய்தியை டெக்கான் கிரானிக்கல் ஆங்கில ஏடு முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது (5.1.2009).

ராஜபக்சேயின் சிங்களவெறி ஆட்சிக்காக பாதப்பூஜை செய்யும் இந்நாட்டுப் பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் இந்த நிலைக்கு என்ன நியாயத்தைக் கற்பிக்கப் போகிறார்கள்?

இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள்தானே தமிழர்கள். அப்படியிருக்கும்பொழுது காவல் நிலையத்துக்குச் சென்று ஏன் அவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் - தங்களைப்பற்றிய தகவலைத் தெரிவிக்கவேண்டும்?

அப்படியென்றால், இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் அனை வரும் கிரிமினல்களா? குற்றவாளிகள் குறிப்பிட்ட இடத்தில் தங்கிக் கொண்டு நாள்தோறும் காவல் நிலையத்துக்குச் சென்று கையொப்ப மிட வேண்டும் என்று நீதிமன்றங்கள் ஆணை பிறப்பிப்பதுண்டு - அதே நிலைதான் கொழும்பில் வாழும் தமிழர்களுக்குமா?

சில ஆண்டுகளுக்குமுன் கொழும்பில் வந்து உற்றார், உறவினர்கள், தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என்ற உத்தரவு போட்டது மட்டுமின்றி பலாத்காரமாக வெளியேற்றிய வெறியர்தான் இந்த ராஜ பக்சே. கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பிய நிலையில், உச்சநீதி மன்றம் எச்சரித்த நிலையில், ஆச்சரியமாக இந்தியாவும் குரல் கொடுத்தவுடன், அந்த நிலை பின்வாங்கப்பட்டது.

விடுதலைப்புலிகளிடம் இருந்த ஒரு பகுதி தங்கள் வசம் வந்துவிட்டது என்ற இறுமாப்பின் அடுத்தகட்டமாக குடிமக்களான தமிழர்களின் பக்கம் அவர்களின் கவனம் திரும்பியிருக்கிறது போலும்! விடுதலைப்புலிகளை எதிர்ப்பதாகக் கூறி தமிழர்களான குடிமக்களைக் கொன்று குவித்தும் இன்னும் வெறியடங்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

இராணுவத்தின்மூலம் தீர்வு ஏற்படாது என்ற இந்திய நிலையில் மாற்றம் இல்லை என்றும், அரசியல் தீர்வுதான் சரியானது என்றும் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கரமேனன் நேற்றுகூட கிளிப்பிள்ளைபோல சொல்லியிருக்கிறார்.

அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு அரசே முதலமைச்சர் தலைமை யில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரைச் சந்தித்து, போரை நிறுத்த வழி செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டும் இலங்கையில் நடந்தது என்ன? போரைத் தடுக்க இந்திய அரசு மேற் கொண்ட நாணயமான செயல்முறை என்ன? வெளியுறவுத் துறை அமைச்சரை அனுப்புவதாகக் கூறிய பிரதமரின் வாக்குறுதி என்னாயிற்று?

அதற்குப் பின்னாலே வெளியுறவுச் செயலாளர் இவ்வாறு கூறுவதைக் கண்டு சம்பந்தப்பட்ட மக்கள் நகைக்க மாட்டார்களா? இந்தியாவின் நம்பகத்தன்மையே கூட இப்பொழுது கேள்விக் குறியாகி விட்டதே!
கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில், ஈழத்தமிழர்ப் பிரச்சினை யில் இந்திய அரசு நடந்துகொண்ட தன்மையில் கடும் வெறுப்பும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் இருக்கிறது என்பதை இந்திய அரசு உணருமா?
போராளிகளை ஒழித்துக் கட்டிவிட்டதாக விவாதத்துக்காக ஒப்புக்கொள்வதாகவே வைத்துக்கொள்வோம் - அடுத்து ராஜபக்சே ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையான உரிமைகளைக் கொடுக்கப் போகிறார்கள்? ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தமான வடக்கு கிழக்கு மாகாண இணைப்புகளை உறுதிப்படுத்துவாரா?

ராஜபக்சேவுக்குக் காலைக் கழுவிவிடும் பக்தர்கள் அதற்கு உத்தரவாதம் கொடுப்பார்களா?

நன்றி: விடுதலை



Saturday, December 27, 2008

பெரியாரின் நூல்கள் நாட்டுடமை ஆவதும் மற்ற தலைவர்களின் நூல்கள் நாட்டுடமை ஆவதற்கும் உள்ள வேறுபாடு ......

பெரியாருக்கும் மற்ற சமுக சிந்தனை உள்ள தலைவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மற்ற தலைவர்கள் தங்கள் கருத்துகளை மறைமுகமாகவும், எதிரிகளுக்கு சொல்லும் பதிலில் சில வரைமுறைகளை கடைபிடித்து தாக்க கூடியவர்கள். உதாரணத்திற்கு மார்க்ஸ், எங்கல்ஸ் அவர்கள் எல்லாம் எதிரிகளை தாக்குவதற்கு சில மறைமுக சொற்களை உபயோகிப்பவர்கள். ஏன் அண்ணா, அம்பேத்கார் மற்றும் பாரதிதாசன் கூட அப்படியே. அதனால் தான் அண்ணா அவர்கள் பிற்காலத்தில் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று சொல்லி பிரிந்து சென்றார். எனவே தான் சிலர் நாத்திக வேகம் குறைந்ததாக சொல்லுவார்கள். ( அனால் அண்ணா அவர்கள் அப்படியல்ல என்பது திராவிட இயக்க வரலாறு தெரிந்தவர்கள் அறிவர்) .

உதாரணத்திற்கு ஜாதியை வலியுறுத்தும் அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை 26.11.1957 அன்று தந்தை பெரியார் நடத்தினார். அப்பொழுது
நேரு எதற்கெடுத்தாலும் தமிழ்நாட்டவர்களை காட்டுமிராண்டி என்று அர்த்தமின்றி சொல்லி வருகிறார்.

இதை யாருக்கும் தைரியமாக எதிர்க்கின்ற துணிவு வருவதில்லை.
பெரியார் தான் நேரு அஞ்சி நடுங்கும் வண்ணம் சுடச்சுட பதில் தருகிறார்.
மற்றவர்கள் காட்டுமிராண்டி என்று அதிகார ஆணவத்துடன் சொல்லும் நேரு, பெரியாரிடம் சொல்லும் போது நடுங்கிக் கொண்டேதான் சொல்ல முடியும்.
பெரியாரிடம் தான் நேரு பயப்படுகிறார். பெரியாருக்குத்தான் வடநாட்டு ஆதிக்கத்தை நடுங்க வைக்கும் ஆற்றல் உண்டு என்பன போன்ற ஆழ்ந்த கருத்துடன் உள்ள கார்ட்டூன் வரையப்பட்டிருக்கிறதை மேல இணைத்துள்ளேன்.


இன்னும் விளக்கமாக சொல்லவேண்டுமானால், சிலர் அம்பேத்கரும் பெரியாரும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல என்று நினைக்கிறார்கள் ஆனால் அதில் எனக்கு சிறிதளவும் உடன்பாடு இல்லை. அய்யா அவர்கள் மதமே கூடாது என்றவர்கள் அனால் அண்ணல் அவர்கள் புத்தமதத்தில் தன்னை இனயிது கொண்டவர். இருவரின் பாதையில் சிர் சில வேறுபாடுகள் இருபினும், சேரும் இடம் ஒன்று என்பதை ஒப்புக்கொள்கிறேன். அப்படியே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று வைத்துகொண்டல் கூட நாணயத்தின் ஒரு புறத்தில் பூ இருக்கும் மறுபுறம் உங்களுக்கே தெரியும் (தலை அதுவும் சற்றும் பயமுறுத்தும் படி இருக்கும்) அதுதான் அய்யா அவர்கள். எதையும் கம்பிரமாக, எதிரிகள் கூனி குறுகி மற்றும் வெட்க பட கூடிய அளவிற்கு பதில் அளிக்க கூடியவர். அவருடைய அணைத்து சொற்பொழிவுகள் மற்றும் எழுத்துகளும் அப்படியே.

இன்னும் சொல்ல போனால் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தான் ஒரு பார்ப்பான் ( அண்ணல் அவர்களை லண்டனில் லா படிக்க வைத்தவர் ) மூலமாக அடிமை படுத்தி அவன் இழிவாக பேசியதால் தான் பார்பன எதிர்பிற்கும் தன் இன மக்களுக்கும் போராட வந்தார். அதனை போலவே காந்தி அடிகள் தன் தாயாருக்கு மது , மாது ஆகியவற்றை விட்டுவிடுவேன் என்று சத்தியம் செய்து கொடுத்து அதனை காப்பாற்ற தான் அதனை எதிர்த்தார் மற்றும் சமூகத்திற்கும் அதனை வலியுறுத்தினார். அதனை போலவே தெனாபிரிக்கா பயணத்தில் தானும் அங்கெ பாதிக்கப்பட்டதால் தான் ஒரு பெரிய போராட்டத்தில் இறங்க வேண்டியவராக ஆகினார் காந்தி அடிகள். ஆனால் அய்யா பகுத்தறிவு பகலவன் அது போல எதுவும் தனக்கென்று தனிப்பட்ட பாதிப்பு இல்லாமல் நல்ல உயர் வகுப்பில் பிறந்து நன்றாக சொகுசு வாழ்கை வாழ்ந்தவர். அப்படிப்பட்டவர் நம் மக்கள் இழி மக்களாக வாழ்வதை பார்த்து , திராவிட மக்கள் அனைவர்க்கும் ஒன்றாக போராட தனக்கு இருந்த பதவிகள் அனைத்தையும் இழந்து பொது வாழ்க்கைக்கு வந்தவர். அதனால் நாம் அய்யாவை யாருடனும் ஒப்பிட தேவையில்லை தயவு செய்து யாருடன் நம் அய்யாவை இணைக்காதிர் அவர் ஒரு சுய சிந்தனையாளர் அதோடு பார்பனர் எதிர்ப்பை மிக மிக வலிமையாக எடுத்து கூறியவர்.

உதரனத்திற்க்கு அய்யாவின் கடவுள் மறுப்பு வாசகங்கள் அவரின் அணைத்து சிலைகளுக்கும் கீழே பொறிக்கப்பட்டிருக்கும் (அந்த வாசகங்கள் உங்களுக்கு தெரிந்ததே). அதனை முதல் முதலில் சிலையின் கீழ் பொரிக்க பட்டபோது அதனை பொரிக்க கூடாது, அது எங்களையும் மற்ற இறை நம்பிக்கை உள்ள அனைவரையும் இழிவாகவும் புண்படுத்தும் படியும் இருப்பதாக சொல்லி ஒரு கூட்டம் நீதிமன்றத்திற்கு ஓலை கொண்டுசென்று அதில் தோல்வியும் கண்டது. இப்படி அய்யாவின் ஒரு சிறிய வாசகத்திற்கே இந்த ஆட்டம் போட்ட கூட்டம் அய்யாவின் மற்ற சொற்பொழிவுகளிலும் நூல்களிலும் வரும் கடுன்சொர்களை எப்படி அப்படியே பயன்படுத்தும் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும். மேலும் காந்தி அடிகள் கோவிலை பற்றி கூறிய ( கோவில்கள் குச்சிகாரிகளின் விடுதி ) வாசகங்கள் கூட நான் பெரியார் பேசியதன் தொகுப்பின் வாயிலாக அறிந்தேனே ஒழிய காந்தி அடிகளின் எந்த நூலிலும் இதனை குறுப்பிட்டு எழுதியதாக எந்த பதிபகமும் வெளியிட்டதாக தெரியவில்லை.

இப்படியான அய்யாவின் எழுத்துகளை , சொற்பொழிவுகளை நம் சக தோழர்களே சில இடங்களில் பேசும்போது சென்சார் செய்து விட்டுதான் பேசுகிறார்கள். மற்றபடி எழுதும்போது எளிதிவிடுகிரர்கள். அய்யாவின் குட்டையில் ஊறி சிலரே இப்படியாக இருக்க மற்ற நய வஞ்சக கூட்டம் நடத்தி வரும் பதிபகங்கள் எப்படி இவைகளை அப்படியே மக்களிடம் கொண்டு சொல்லும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்.

அய்யாவின் சொற்பொழிவுகளிலும் எழுத்துகளிலும் வரும் சொற்கள் யாவும் அய்யாவின் சொற்பொழிவு கேட்டவர்கள் அல்லது படித்தவர்கள் அறிந்தவை அகவே நான் நெனைக்கிறேன் இருந்தும் சிலவற்றை தந்துள்ளேன் .
- உங்களை யாராவது சூத்திரன் என்றல் வாட தேவடியாள் மொவனே என்று கூர் என்றார் .

- அலங்காரம் பண்ணும் பெண்கள் என்னை பொறுத்த வரை தாசிகளுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை என்றார்.

- ராமன் ஒரு குடிகாரன் சீதை ஒரு விபச்சாரி என்றார். மேலும் ராமன் படத்தை செருப்பால் அடித்தேன் எதற்காக என்று முழுவதும் விளக்கி உள்ளார்

இவை மிகவும் சிலவே . மேல் சொன்னவை போல எந்த ஒரு சமுக சிந்தனையாளரும் பேசியதாக இல்லை. இவற்றை இந்த நய வஞ்சக பதிப்பக கூட்டம் அப்படியே மக்களிடம் கொண்டு செல்லுமா ?

நாட்டுடமை ஆக்கினால் யார்வேண்டும் ஆனாலும் வெளியிடலாம் அதனால் எண்ணிக்கை (Quantity) அதிகமாகும் என்று நாம் நினைக்க கூடும் . ஆனால் நாம் எண்ணிக்கையை அதிக படுத்துவதை விட குறைந்த அளவில் வெளியிட்டாலும் அதில் உண்மை போய்விடாமல் (Quality ) பார்த்துக்கொள்ள வேண்டும்

அய்யாவின் எழுத்துகள், சொற்பொழிவுகள் அனைத்தும் மற்ற எல்ல தலைவர்களின் எழுத்துக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இதனை மற்றவர்கள் வெளியிட்டால் தன் கருத்துகளை மாற்றி திரிதுவிடுவர்கள் என்ற என்னதிளும்தான் அய்யா அவர்களே பெரியார் சுயமரியாதை நிறுவனத்தை நிறுவி உள்ளார் என்று நான் நினைக்கிறன். அய்யா அவர்கள் பிற்காலத்தில் வருவதை முன்கூடியே சிந்திக்க கூடியவர். ( "இனி வரும் உலகம்" என்ற நூல் ஒரு உதாரணம் ). அதனால் தான் நய வஞ்சக கூட்டத்திடம் இருந்து தனுடைய கொள்கைகளை நிலைநாட்ட அன்றே இதனை செயிதுள்ளார்கள் என்பதே என் கருது.

எனவே நாட்டுடமை ஆக்கினால் , பெரியாரியம், புத்தமதம் எப்படி கடவுள் மதமாக (ஹினயானம் - உருவ வழிபாடு , மகாயானம் - உருவம் இல்லாதது. இந்த பிரிவினை செய்ததும் ஒரு பார்ப்பான் தான் அந்த கதை தேவை பட்டாள் விளக்குகிறேன் ) சித்தரிக்க பட்டு, புத்தர் என்ற பகுத்தறிவு வாதியை கடவுளாய் சித்தரிக்கப்பட்டு நம் முன் நிறுத்தியதை போல சில நூட்ரண்டுகளில் ஏன் சில வருடங்களில் நம் எதிர்கால சந்ததியினருக்கு பெரியார் சாமியார் ஆகி பூஜை போட சொல்லி கொடுத்துவிடுவார்கள். ( அதுவும் தாடி வைத்திருப்பதால் மிகவும் சில மதங்களிலே சாமியார் ஆக்கிவிடும் இந்த வஞ்சக கூட்டம்).

எனவே பெரியாரிய கொள்கையை பின்பற்றும் நாம் பெரியாருக்கு செய்யும் தொண்டாக நினைத்து அவரை பிற்கால சந்ததியினருக்கு ஒரு நல்ல சமுக சீர்த்திருதவதியாக அடையாளம் காண்பிக்க வழிவகுப்போம்.

Thursday, December 25, 2008

தினமலத்தின் ஆவேசம்.......

ஏய் தினமல பார்பன முண்டமே நீ கருத்துப்படம் வெளியிட்டு தஞ்சாவூரில் வாங்கிகொண்டது பத்தாத இன்னும் உனக்கு வேண்டுமோ.


சம்பதமே இல்லாமல் வம்புக்கு இழுத்து உள்ளது இன்றைய(26-dec-2008) தினமலம். அதாவது கி.வீரமணி தன்னுடைய பெயரை நியூமரலாஜி பார்த்து மீ.கி வீரமணி என மாற்றி உள்ளாராம்.

யாரிடம்,எந்த சவண்டி பார்ப்பானிடம் போய் ஆசிரியர் வீரமணி அவர்கள் நியூமரலாஜ் பார்த்தார் என்பதை வெளியிட்டால் நாங்கள் எங்களுடைய பகுத்தறிவு பணியை விட்டுவிட்டு உன்னுடன் சேர்ந்து பி பொறுக்க வருகிறோம். நியூமரலாஜ் பார்த்த செய்தியை வெளியிட்ட உனக்கு நிச்சயம் எந்த மடயனிடம் பார்த்து என்பதும் திரிந்திருக்க வேண்டும்.

எப்படி சிண்டு முடியலாம், எப்படி வம்புக்கு இழுக்கலாம் என்று இருந்த உனக்கு கலைங்கரின் பேட்டி வாயில் அவல் போட்டது போல ஆயிற்று. நீ என்னதான் உன் சிண்டுமுடியும் முள்ளமாரி தனத்தை கண்பித்தலும் எங்களின் பகுத்தரிவுபணி ஒற்றுமையை பிரிக்கமுடியாது. கனவு காணாதே.

உண்மை போன்ற சவண்டி,முள்ளமரிகளுக்கு தெரியவில்லை என்றால் எங்களிடம் கேட்டால் சொல்லுகிறோம் ஆசிரியர் எப்பொழுது எங்கே எதற்க்காக பெயரை மாற்றினார் என்று. அதனை விடு விட்டு உன் பி திங்கும் புத்தியை கண்பிகிரையே ஏன். ஆமாம் அந்தந்டையும் உனக்கு பகுத்தறிவு இருந்தால் தானே சிந்திப்பதற்கு. உண்மையை சொல்லுகிறேன் கேட்டுக்கொள். சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் இனி எல்லா பெண்களும் தன் குழந்தைகளுக்கு தன்னுடைய பெயரையும் சேர்த்து எழுதுங்கள் என்று தீர்மானம் போட்டு, இனி தன் பெயருக்கு முன்னால் மீ என்று தனது தாயின் பெயரை போட்டுகொல்பதாக அறிவதேரே ஒழிய வேற என்ன வெங்காயம் வேண்டியிருக்கு. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல உன் பின் புத்திக்கு நியூமேரலாஜ் தவிர வேறு என்ன பகுத்தறிவு சிந்தனை தோன்ற போகிறது அல்லது தோன்றி இருந்திருக்கிறது.



Monday, December 15, 2008

புலிகள் இராணுவம் போர் வீடியோ



Thursday, December 11, 2008

புலிகளின் அனுபவமுள்ள படையணிகளாலேயே எமக்கு அதிக இழப்புக்கள்: சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருக்கும் அனுபவமுள்ள படையணிகளால்தான் படைத்தரப்பினர் அதிக இழப்புக்களைச் சந்தித்து வருகின்றனர் என்று சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் 'பிஸ்னஸ் ருடே' இதழுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்த முக்கிய பகுதிகள் வருமாறு:

போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த போது நான் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதியாக இருந்தேன்.
போர் நிறுத்த காலகட்டத்தில் படையினருக்கான பயிற்சிகளை நான் அதிகரித்திருந்தேன். போரை நாம் எதிர்பார்த்தோம்.
இராணுவத்தளபதியாக நான் பதவி ஏற்றதும் துருப்புக்களுடன் தயாராக இருந்தேன். இராணுவத்தின் சிறப்பு அணிகள் பலவற்றை விடுதலைப் புலிகளின் பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருந்தேன்.
எனது சிந்தனைகள் மரபு வழியிலானது அல்ல, அது வேறுபட்டதாகவே இருந்தது. இளநிலை அதிகாரிகளை களமுனை கட்டளை அதிகாரிகளாக நியமித்தேன்.


உதாரணமாக, ஐந்தாவது நிலையில் உள்ள மூத்த அதிகாரியையே யாழ். குடாநாட்டின் கட்டளை அதிகாரியாக நியமிப்பது வழக்கம்.
ஆனால், மூத்த அதிகாரிகளின் நிலையில் 15 ஆவது இடத்தில் இருந்தவர் யாழ். குடாநாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன. ஆனால் அதன் பலா பலன்கள் அதிகம்.
அதனைப் போலவே 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சவீந்தர் சில்வா மூப்பு அடிப்படையில் 45 ஆவது இடத்தில் இருப்பவர். அவர், தற்போது பூநகரியை கைப்பற்றியுள்ளார்.
இதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவின் ஆதரவும் எனக்கு இருந்தது. நாம் இருவரும் இணைந்து தேவையான ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் கொள்வனவு செய்ததுடன், பயிற்சி மற்றும் உத்திகளையும் வடிவமைத்திருந்தோம்.
பதவிக்கு நாம் வந்த போது 40,000 சிப்பாய்களுக்கு தலைக்கவசம் கிடையாது, பலரிடம் ஒரு தொகுதி சீருடைகளும், ஒரு சோடி சப்பாத்துக்களுமே இருந்தன. 40,000 பேருக்கான அங்கிகளுக்கும் தட்டுப்பாடு காணப்பட்டது. எல்லாவற்றையும் நாம் சீர் செய்தோம்.
படையினரின் எண்ணிக்கையிலும் நாம் பலவீனமாக இருந்தோம், சில பற்றலியன்கள் சிதைவடைந்திருந்தன. ஐந்து டிவிசன்களை நான் உருவாக்கியுள்ளேன்.
முன்னர் ஒரு வருடத்திற்கு 3 ஆயிரம் பேரையே படையில் சேர்க்க முடிந்தது, தற்போது நாம் ஒரு மாதத்திற்கு அதனை எட்டி வருகின்றோம்.
கடந்த வருடம் 32 ஆயிரம் படையினரையும் இந்த வருடம் 34,000 ஆயிரம் படையினரையும் சேர்த்துள்ளோம்.


பதவிக்கு நான் வரும்போது இராணுவம் 1 லட்சத்து 16 ஆயிரம் பேரைக் கொண்டிருந்தது. தற்போது அது 1 லட்சத்து 70 ஆயிரம் பேரைக் கொண்டுள்ளது. நான் 50 பற்றலியன்களை உருவாக்கியுள்ளேன்.


தற்போதைய போரில் விடுதலைப் புலிகள் தம்மை தயார்படுத்தவில்லை. போர் ஆரம்பிக்கும் போது அவர்கள் 10 ஆயிரம் பேரை கொண்டிருந்தனர்.
பின்னர் மேற்கொண்ட படைச் சேர்ப்புக்களால் அவர்களின் பலம் 15 ஆயிரமாக உயர்ந்தது. ஆனால் அவர்களில் 12 ஆயிரம் பேர் தற்போது கொல்லப்பட்டு விட்டனர்.


எனவே, அவர்களில் தற்போது 2,500 பேரே எஞ்சியுள்ளனர். அவர்களுக்கு ஆட்பற்றாக்குறை உள்ளது.

எனினும், விடுதலைப் புலிகள் வசம் அனுபவமுள்ள படையணிகள் உள்ளன. எனவே தான் படைத்தரப்பு அதிகம் இழப்புக்களை சந்தித்து வருகின்றது.
மிதிவெடிகளில் சிக்கி 500 படையினர் கால்களை இழந்துள்ளனர். வன்னியில் ஒவ்வொரு அங்குல நிலமும் பொறிவெடிகளால் சூழப்பட்டுள்ளது. எனவே, அது இலகுவான நடவடிக்கை அல்ல என்றார் அவர்.

நன்றி: புதினம்



Tuesday, December 09, 2008

பெண் ஏன் அடக்கப் பட்டாள்..? ஏன் ஒடுக்கப் பட்டாள்..?

எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்னும் பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் மனப்பாங்கு சமூகத்தில் இருந்து விலகவில்லை. பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைப்போடும் நிலையும் மாறவில்லை. அவளின் அசைவுகள் கூட அலசப் படுகின்றன. உடைகள் பற்றிப் பேசப் படுகின்றன. அணிகலன்கள் பற்றி ஆராயப் படுகின்றன.

பெண்களை நாங்கள் வெளியில் போக விடுகிறோம். விரும்பிய உடைகளை அணிய விடுகிறோம். பல்கலைக்கழகம் வரை படிக்க விடுகிறோம். வேலை செய்ய விடுகிறோம். ஏன்.. கணினியில் கூட எழுத அனுமதிக்கிறோம். இன்னும் என்ன வேண்டுமென்று இவர்கள் ஆர்ப்பாட்டக் கொடி பிடிக்கிறார்கள்.. என்ற ஆணாதிக்கம் தொனிக்கும் கேள்விகள் கூட சில ஆண்களிடம் இருந்து சினத்தோடு எழுகின்றன.

பெண்விடுதலை என்றால் என்ன? அதன் தார்ப்பரியம் என்ன? என்பவை பற்றி சில ஆண்களுக்கு மட்டுமல்ல. பல பெண்களுக்குமே புரியவில்லை.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வெகுவாக முன்னேறி விட்டார்கள்தான். அதை யாரும் இல்லையென்று சொல்ல முடியாது. தனது பதினோராவது வயதிலேயே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு தாய்மை என்னும் புனிதத்தையோ அன்றிப் புளகாங்கிதத்தையோ உணர முடியாத குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தையைத் தான் சுமந்து தாயான லிபேரியக் கறுப்புஇனஇளம் பெண்போராளி ஒருத்தி சொல்கிறாள் ஒரு ஆணை விட ஒரு பெண்ணினால்தான் முழுமன ஈடுபாட்டுடனும் வீரியத்துடனும் புத்தி சாதுரியத்துடனும் போராட முடியுமென்றும் ஒரு ஆணை விடப் பெண்ணிடம்தான் வலிமை அதிகம் என்றும்.

அது உண்மைதான். பெண்களின் பங்கு என்பது உலகில் மிக முக்கியமானது.அவர்கள் இல்லாமல் ஆண்களால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது.

இருந்தும் பெண் ஏன் அடக்கப் பட்டாள்..? ஏன் ஒடுக்கப் பட்டாள்..?

ஆதிகாலத்தில் வேட்டையாடுவதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ மனிதர்கள் காடு மேடு கடந்து பல தூரங்களுக்குப் போக வேண்டிய நிலையும், போனவர்கள் அன்றே திரும்ப முடியாமல் போன இடத்திலேயே தங்க வேண்டிய நிலையும் இருந்தன. இந்த சந்தர்ப்பங்களில் அவர்கள் தம்மை விடப் பலமான விலங்குகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இருந்தது.

இங்குதான் பெண்கள் மெதுமெதுவாக வீட்டுக்குள் ஒடுங்க வேண்டிய காரணி உருவாகத் தொடங்கியது.

குழந்தை பிறந்திருக்கும் சமயங்களில் பெண்களில் குருதி வாடையும், பால் வாடையும் இருக்கும். அதே போல மாதாமாதம் வெளியேறும் சூல்முட்டைகளின் காரணமாகவும் பெண்களில் அந்த நாட்களில் குருதி வாடை இருக்கும். இந்த வாடையை முகர்ந்தறிந்து மனிதர்களின் இருப்பிடத்தையோ அல்லது வரவையோ அறிந்து கொள்ளும் திறன் விலங்குகளுக்கு உண்டு.

ஆரம்பத்தில் பெண்கள் ஆண்கள் என்று எல்லோரும் ஒன்றாகச் சென்று வேட்டையாடி, ஒன்றாக உண்டு, போற போற இடங்களிலேயே குழந்தைகளைப் பெற்றெடுத்துத்தான் வாழந்தார்கள். ஆனால் எவ்வளவு பாதுகாப்பாக ஒழிந்திருந்தும் எப்படி விலங்குகள் தம்மைக் கண்டு பிடித்து அழிக்கின்றன என்ற ஆராய்ச்சியை அவர்கள் மேற்கொண்ட போதுதான் இந்தக் குருதி வாடையை வைத்து விலங்குகள் தம்மை மோப்பம் பிடிப்பதை அறிந்து கொண்டார்கள்.

அதன் பிறகுதான் அந்தக் குறிப்பிட்ட நாட்களில் பருவமெய்திய பெண்களையும், குழந்தை பெற்ற பெண்களையும் வீட்டிலே விட்டு மோப்பம் பிடித்து வரக் கூடிய விலங்குகளால் அவர்களுக்கு எந்த வித ஆபத்துக்களும் ஏற்படாவண்ணம் காவலும் வைத்து விட்டு மற்றவர்கள் வேட்டைக்குச் சென்றார்கள்.

இது மனிதர்கள் மத்தியில் மட்டுமல்ல. விலங்குகளிடமும் இருந்தது. மிக மிக ஆதிகாலத்திலிருந்தே தம்மை விடப் பலமான விலங்குகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ள குட்டி போட்ட பெண் விலங்குகளை தமது இருப்பிடங்களில் விட்டுப் போக வேண்டிய கட்டாயம் விலங்குகளுக்கும் இருந்தது.இந்த விலங்குகளிடமிருந்தான பாதுகாப்புத் தேடல்தான் மெதுமெதுவாக பெண்கள் வீட்டுக்குள் முடங்க வேண்டியதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தத் தொடங்கியது.

காலங்காலமாக இந்த நடை முறை தொடர்ந்த போது - எப்படித் தோல் நாட்டின் சீதோசண நிலைக்கேற்ப இசைவாக்கம் பெற்றதோ அதே போல மூளையும் மெது மெதுவாக இசைவாக்கம் பெறத் தொடங்கியது. ஆண்களின் மூளை வேட்டைக்குப் போகும் பாதையை நினைவு படுத்தி வைப்பதிலும் வேட்டையாடுவதிலும்............. என்று ஒரு விதமான ஒற்றைப் பாதையில் திடமாக கூர்மையான அவதானத்துடன் நின்ற போதுபெண்களின் மூளையோ தமது குழந்தைகளைப் பாதுகாப்பதிலும், குடும்பத்தின் உள் விடயங்களைக் கவனிப்பதிலும்........... என்று சற்றுப் பரந்து விரிந்தது.

இங்கே பாதுகாக்கும் தன்மை என்பது ஆண்களால் வெறுமனே ஒருவரை காவலுக்கு விடுவதுடன் நின்று விட்டது. ஆனால் பெண்களிடமோ தம்மைத் தாமே பாதுகாப்பது மட்டுமன்றி, மிக மிக அவதானத்துடன் எந்த விலங்கிடமும் தமது குழந்தையும் பறி போய் விடாத படி தாமே பாதுகாக்கும் தன்மையும் தம்மை அண்டியுள்ள மற்றைய பெண்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்படாத படி பாதுகாப்புக் கொடுக்கும் தன்மையும் என்றிருந்தது. அதுவே அவர்களிடம் ஒரு குழுமமாகச் செயற்படும் தன்மையை ஏற்படுத்தியது.இதுவே மனிதன் விலங்குகளிலிருந்து தன்னை வேறு வழிகளில் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய நிலை வந்த பின்னும் தொடர்ந்தது. தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மாதவிலக்கு என்று சொல்லி பெண்ணைத் தனியாக பாதுகாப்பாக விடுவதற்கும்,மாதவிலக்கு நாட்களில் பெண் தனியே வெளியே போனால் பேய் பிடிக்கும் என்று சொன்னதற்குமான அடிப்படைக் காரணிகள் இவையே. அங்கே பிடிக்கப் போவது பேயல்ல, விலங்குகள். ஆதிகாலத்தில் - அந்த நேரத்தில் விலங்குகளிடமிருந்து பெண்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே பெண்களிடம் ஒரு பெரிய இரும்பைக் கொடுத்து வைத்தார்கள். இங்கே இரும்பு ஒரு தற்பாதுகாப்பு ஆயுதமாகவே இருந்தது. சில இடங்களில் உலக்கையையும் கொடுத்தார்கள்.

இன்று மாதவிலக்கான பெண்களைத் தேடி வரும் தொலைவில் விலங்குகளே இல்லை. மிருகக்காட்சிச் சாலையில் விலங்குகளை அடைத்துக் காட்சி வைக்கும் அளவுக்கு அவைகளை எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து விட்டு வாழ்கிறோம்.இந்த நிலையில் ஏன் எதற்கு என்ற சிந்தனைகள் எதுவுமின்றி இன்றும் இப்படியான அர்த்தமற்ற செயற்பாடுகள் தொடர வேண்டிய அவசியமில்லை.

ஏட்டில் எழுதிய நாம் இன்று கணினியில் எழுதுகிறோம்.புறாவைத் தூது விட்ட நாம் மின்னஞ்சலில் அசத்துகிறோம்.பெண்ணை மட்டும் அடங்கு என்று சொல்ல இன்னும் என்ன நாம் காட்டிலா வாழ்கிறோம். அல்லது எம்மைச் சுற்றி விலங்குகளா நடமாடுகின்றன.காட்டு வாழ்க்கையை விட்டு நாட்டில் வீடு கட்டி பாதுகாப்பாக வாழும் நிலைக்கு நாம் என்றைக்கோ வந்து விட்டோம்.

இருந்தும் மூளையில் பதியப் பட்ட அடிப்படையான ஆதிகாலப் பிரச்சனையை கருத்தில் கூடக் கொள்ளாமல் இன்னும் பெண்கள் வீட்டுக்குள் ஒடுங்க வேண்டியவர்கள்தான் எனக் கண்மூடித்தனமாக் கருதுகிறோம்.அன்று சூழல்நிலை கருதி - பாதுகாப்புக் கருதி குழந்தை பெற்ற பெண்கள்... வீட்டினுள் தங்கினார்கள் என்றால், இன்று அந்த எந்தக் காரணங்களும் இல்லாமலே பெண்கள் வீட்டுக்குள் அடங்க வேண்டுமென நினைக்கிறோம்.

உண்மையில் ஒரு ஆணை விட ஒரு பெண்ணால்தான் ஒரு வியாபார ஸ்தலத்தையோ, அல்லது ஒரு பெரிய நிறுவனத்தையோ கூட்டாகக் கொண்டு நடத்தி கூடுதலாக வெற்றி பெற வைக்க முடியும். ஒரு சொல்லை ஒரு ஆணிடம் சொன்னால் - அவனால் அந்தச் சொல்லுக்கு ஒரு அர்த்தம்தான் கண்டு பிடிக்க முடியும் என்றால் அதையே ஒரு பெண்ணிடம் சொன்னால் அவள் அது பற்றி நன்கு யோசித்து பல கோணத்தில் பல அர்த்தங்கள் கண்டு பிடிப்பாள். ஓரு விடயத்தைச் சொன்னால் அதைக் கிரகித்து அதற்குப் பதில் சொல்லும் தன்மை ஆண்களின் மூளையில் ஒரு பங்கு என்றால் அதைக் கிரகித்து பதில் சொல்லும் தன்மை பெண்களின் மூளையில் ஆறு பங்கு. இவைகள் ஆய்வாளர்களின் கண்டு பிடிப்புகள்.

ஓரு ஆணின் மூளை ஓரு பெண்ணின்; மூளையை விட 130கிராம் நிறை அதிகமானது. ஆனால் இரு மூளைகளினதும் செயற்பாடுகள் - ஆதிகாலத்திலிருந்து இன்றைக்கு வரைக்குமான சூழ்நிலைகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்குமேற்ப இசைவாக்கம் பெற்று வௌ;வேறு வழிகளில் செயற் படுகின்றன. இங்கு ஆண் உசத்தி என்றோ பெண் உசத்தி என்றோ எதுவும் இல்லை.

அன்றைய காலத்தில் தேவை கருதி வீட்டுக்குள் இருந்த பெண்களிடமிருந்து மெதுமெதுவாக சுகங்களை அனுபவிக்கத் தொடங்கிய ஆண்கள் ஒரு காலகட்டத்தில் பெண்களை வெறும் சுகபோகப் பொருட்களாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார்கள். சுயநலம் கருதி உளவியல் ரீதியான தாக்கத்தைக் கொடுத்து பெண்களை அடிமைப் படுத்தியும் விட்டார்கள். இதனால் வீட்டுக்குள்ளேயே இருந்து இருந்து இசைவாக்கம் பெற்ற மூளையிடமிருந்து விடுதலை பெற முடியாத பெண்கள் - தாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியவர்கள்தான் என்று நினைத்து விட்டார்கள். அடங்கி அடங்கியே வாழ்ந்ததால் தாம் அடங்க வேண்டியவர்கள்தான் என நினைத்து தமக்குத் தாமே விலங்கிட்டு அடங்கியும் விட்டார்கள்.

இதே நேரம் இவையெல்லாம் பிழை. முன்னர் நாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியதற்கு காரணங்கள் இருந்தன. இன்று வெளியே சென்றாலும் எம்மால் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். என்று சில பெண்கள் சிந்திக்கவும் தவறவில்லை. சிந்திக்கத் தொடங்கிய இப் பெண்களின் விழிப்பு நிலையே இன்று சில ஆண்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. பெண்களிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தை ஆண்களின் மூளை ஏற்றுக் கொள்ள முடியாமல் திண்டாடுகிறது.

இந்த உண்மைக் காரணங்களை ஆண் பெண் இருபாலாரும் உணர்ந்து செயற்படும் பட்சத்தில் இந்தப் பெண்ணடிமை, பெண்அடக்குமுறை, பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் தன்மை எல்லாமே அர்த்தமற்ற செயல்கள் என்பது நன்கு புலப்படும்.இப்போது கூட உங்கள் மனதில் எங்கே பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். அவர்கள் சுதந்திரமாகத்தானே திரிகிறார்கள் என்ற சிந்தனை ஓடலாம். ஆயுதந் தூக்கிப் போரிடுகிறார்கள் என்ற பிரமிப்பு ஏற்படலாம். இத்தனை சலுகைகள் கொடுத்து விட்டோமே..! இன்னுமா திருப்தியில்லை என்ற எரிச்சல் எழலாம்.

உண்மையில் பெண்ணுக்கு இன்னும் முழுமையான விடுதலை கிடைக்கவில்லை. வெறும் சலுகை மட்டும் வாழ்க்கையில்லை. அவள் சுயம் பேணப்பட வேண்டும். அவள் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். பெண் இப்படித்தான் வாழ வேண்டு மென்று சமூகத்தின் அடி மனதில் எழுதி வைக்கப் பட்ட சில எழுதாத சட்டங்கள் அழித்தொழிக்கப் படவேண்டும். அவள் அவளாக வாழ அவள் மனதில் தைரியம் வரவேண்டும். இது பற்றியதான சிந்தனை சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவரிடமும் எழ வேண்டும்.

கருப்பையில் மூன்று மாதக் கருவாக இருக்கும் போதே ஒரு குழந்தை தாயின் உணர்வுகள், தாயைச் சுற்றி ஒலிக்கும் குரல்கள்.. என்று எல்லாவற்றையும் கிரகிக்கத் தொடங்கி விடும். வெளியில் கேட்கும் சினிமாப் பாடலைக் கூட மனப்பாடம் செய்யத் தொடங்கிவிடும். இது இன்றைய ஆய்வாளர்களின் கண்டு பிடிப்பு.இதன் விளைவுகளை பெற்றோர்கள் சரியான முறையில் சிந்தித்து ஒரு பெண் தாயாகத் தொடங்கியதிலிருந்தே ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் இதை கருவுக்குள் உருவெடுத்திருக்கும் எமது பிள்ளையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்ற எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும். பிறந்த பின்னும் குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கும் போதே ஒவ்வொரு விடயத்திலும்; ஆண் குழந்தை பெண் குழுந்தை என்ற பேதமின்றி பாரபட்சமின்றி அவர்களை வளர்க்க வேண்டும். அவர்கள் முன் பேசுவது கூட நான் ஆண் என்றோ, அல்லது நான் பெண் என்றோ எந்த விதமான தாழ்வு மனப் பான்மையையும் அவர்கள் மனதில் விதைக்கப் படாத விதமாக இருக்க வேண்டும்.

இப்படியான அவதானம் மிகுந்த செயற்பாடுகள் மனித மூளையில் ஆழப் பதிந்திருக்கும் பெண் அடங்க வேண்டியவள்தான் என்ற உள்ளுணர்வை அழித்தொழிக்க ஏதுவாக அமையும்.காலப்போக்கில் ஆண்களின் மூளையும் இந்த நடைமுறையுடன் இசைவாக்கம் பெற்று விடும். அப்போதெல்லாம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளில் ஆண் பெண் மூளை பற்றியதான முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கும்.

ஈழமுரசு (3.3.2004 - 9.3.2004)



Thursday, November 27, 2008

வீடியோ பிரபாகரன் மாவீரர் தின உரை - 2008



படிப்பது ஜாதியை வளர்ப்பதற்கல்ல!

சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் ஜாதி அடிப்படையில் நடந்த மோதல்கள் உள்ளபடியே வெட்கப்படத் தக்கதாகும்.
எதிர்கால உலகைப் படைக்கக்கூடியவர்கள் என்று கணிக்கப்படக்கூடிய மாணவர்கள் - அதுவும் சட்டம் படிக்கும் மாணவர்களின்அறிவு எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும்பொழுது வெட்கமும், வேதனையும் கலந்து நம்மைத் தாக்குகின்றன; தலையைத் தொங்கப் போடவும் வைக்கிறது.
தாழ்த்தப்பட்ட மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட மாணவர் களும் கல்வி, வேலை வாய்ப்புகளில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வளர்ச்சிப் பாதையில் புலிப் பாய்ச்சலாக அமையவேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் பாடுபட்டார். அவர் கண்ட இயக்கம் அன்று முதல் இந்தச் சமூக விழிப்புணர்வுப் பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறது.
தாழ்த்தப்பட்டவர்களும் சரி, பிற்படுத்தப்பட்டவர்களும் சரி, பார்ப்பனிய வருணாசிரம அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள்தாம். கல்விப் பக்கம் அவர்கள் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்பதிலே பார்ப்பனர்கள் குறியாக இருந்தவர்கள்தாம்.

இரண்டு முறை சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்துக்கு முதலமைச்சராக இருந்திருக்கிறார். அந்த இரண்டு முறையுமே கிராமத்துப் பள்ளிகளை இழுத்து மூடுவதில்தான் குறியாக இருந்தார். காரணம், கிராமங்களில் தான் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்ட வர்களும் படிக்கக் கூடியவர்கள்.

இரண்டு முறையும் அவரைப் பதவியிலிருந்து விரட்டியவர் தந்தை பெரியார் அவர்கள்தான். 1952 இல் குலக்கல்வி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி அப்பன் தொழிலைப் பிள்ளைகள் கற்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்த மகானுபாவரும் அவரேதான்.

தீப்பந்தமும், தீப்பெட்டியும் தயாராக இருக்கட்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் ஆணையிட்ட பிறகே, தனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி முதலமைச்சர் பதவியை விட்டு விலகினார் என்ற வரலாறுகள் எல்லாம் - தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை.

வைக்கத்திலே தீண்டாமையை ஒழிக்க தந்தை பெரியார் எப்படியெல்லாம் பாடுபட்டார் என்பதுகூட நம் பாடத் திட்டங்களில் இடம்பெறுவது இல்லை.
மாணவர்களிடையே நடந்த இந்த ஜாதி மோதலுக்குப் பிறகாவது பாடத்திட்டத்திலே சமூகச் சீர்திருத்தம், தீண்டாமை, ஜாதி ஒழிப்புப்பற்றிய பாடங்களைச் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்யப்படவேண்டும்.
கிராமப்பகுதிகளிலே ஜாதியை வளர்க்கும் அமைப்புகள் ஊர் நாட்டாமைகள் இன்னும் இருக்கின்றன. இந்தப் பகுதியிலிருந்து கல்லூரிகளுக்கும் படிக்க வரும் மாணவர்கள் அந்தத் தொற்று நோயைச் சுமந்து வருகிறார்கள். எனவே, இதன் மூலத்தையும் அறிந்து அதில் கைவைக்க வேண்டும்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இட ஒதுக்கீடு கொடுப்பதால்தான் ஜாதி வளர்கிறது என்கிற ஒன்றைக் கிளப்பிட முயலுகிறார்கள்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் சென்னையில் இதுகுறித்து நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மாநில வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஒருவர் - தலித் மாணவர்களுக்கு மாநில அரசு இட ஒதுக்கீடு கொடுத்து ஒதுக்கி வைத்துவிட்டது (தீக்கதிர், 26.11.2008, பக்கம் 6) என்று குற்றப்பத்திரிகை படித்துள்ளார்.

இட ஒதுக்கீடு என்பது உரிமைகள் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் உதவியே தவிர, ஜாதியை வளர்ப் பதற்கான கூறு அல்ல. இட ஒதுக்கீடு விஷயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை - அணுகுமுறை மாறி யிருக்கிறதா? என்று தெரியவில்லை.

அதேபோல, சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை - உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள், நுழைவுத் தேர்வு முறை தேவை என்ற ஒரு யோசனையைக் கூறியிருக்கிறார்.
நுழைவுத்தேர்வு வைத்து மாணவர்களைத் தேர்வு செய்த நேரத்தில், சட்டக் கல்லூரி மாணவர்கள் மத்தியிலே தகராறுகள், அடிதடிகள் நடக்கவில்லையா?
ஒரு அரசு சட்டம் இயற்றி, நீதிமன்றமும் ஒப்புக்கொண்ட ஒன்றை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மறுதலித்துப் பேசுவது நியாயமும் அல்ல, நீதியும் அல்ல.

மனித உணர்வுக்கும், உறவுக்கும் ஜாதி தீங்கானது என்பதை மாணவச் சமுதாயம் உணர்ந்திட வேண்டும்.

படிப்பது - பகுத்தறிவை வளர்ப்பதற்கேயன்றி, பிளவுபடுத்தும் ஜாதிச் சாக்கடையில் வீழ்வதற்கல்ல!

நன்றி : விடுதலை (27.11.2008)



Wednesday, November 26, 2008

எதிர்பாரப்பை உருவாக்கியுள்ள மாவீரர் நாள்......

மற்றொரு மாவீரை நாளை அனுட்டிக்க உலகம் வாழும் ஈழத் தமிழ் மக்கள் கரம் கோர்த்து நிற்கின்றார்கள். வழக்கமான மாவீரர் நாளை விட இம்முறை மாவீரர் நாள் அதிக எதிர்பார்ப்புக்கள் நிறைந்ததாக இருக்கின்றது. குறிப்பாக மாவீரர் நாள் உரையில் தேசியத் தலைவர் என்ன கூறப்போகின்றார் என்பதை அறிய தமிழ் மக்கள் மட்டுமன்றி ஈழ அரசியலில் அக்கறை கொண்ட அனைவருமே ஆவலாகக் காத்திருக்கின்றனர்..மேலும்

நன்றி : நிலவரம்



Tuesday, November 25, 2008

மனைவியை விற்கும் வேதனைக் கணவர்.....

மனைவி என்னதான் தலையை விரித்துப்போட்டு திருப்பாச்சி சாயாசிங் போல் ஆடினாலும் முதல்மரியாதை வடிவுக்கரசி போல் திட்டி தீர்த்தாலும், மாயி கோவை சரளா போல பறந்து, பறந்து தாக்கினாலும் இந்திய கணவர்கள் வெளியே பேச்சு மூச்சு விட மாட்டார்கள்.

அனால், மேலைநாட்டுக்காரர்கள் அப்படி அல்ல சாம்பாருக்கு சரியாக மசாலா போடாவிட்டால் கூட மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு இளம் பெண்ணுடன் கைகோத்துக்கொண்டுவிடுவார்கள்.

கனடா நாட்டை சேர்ந்த அலெக்ஸ் என்பவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளால் பெருந்தொல்லை. பொருத்து பார்த்த அவர் மனைவிக்கு சரியான சாட்டையடி தர நினைத்தார்.

இதற்க்காக அவர் செய்த காரியம் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அங்குள்ள பிரபலமான கார் விற்பனை இணையத்தளத்தில் மனைவி விற்பனைக்கு என்று விளம்பரம் கொடுத்துவிட்டார். இணையத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள விவரம் வருமாறு.

1. என் மனைவி விற்பனைக்கு !
2. மாடல் 1983
3. நன்றாக இயங்கும் நிலையில் குட் கண்டிசன்.
4. இதுவரை ஒரே ஆள்தான் ஒட்டியது. நீங்கள் இரண்டாவது ஒனேர்.
5. 3 வயது, 5 வயதில் டூல்ஸ் பாக்ஸ் உண்டு.
6. குறைந்தபட்ச விலை ஆயிரம் டாலர்.

இப்படிப்பட்ட விளம்பரத்தை பார்த்துவிட்டு ஏராளமான பேர் அவரை தொடர்பு கொண்ட வண்ணம் உள்ளனர். அனால் ஆயிரம் டாலருக்கு குறைவாக கேட்பதால் இன்னும் அவர் யாருக்கும் விற்க வில்லை.

என்ன ஒரு வில்லத்தனம்.....இந்த கணவனாக வொர்க் பன்னுவருக்கு.....

Monday, November 17, 2008

தினமலத்தின் சிண்டு முடித்தனம்......

வழக்கம் போல தினமலம் தன் சிண்டு முடிதனத்தை காண்பித்து உள்ளது. டக்லஸ் தேவானந்த எழுதிய கடிதத்தை மிக பொறுப்பு மற்றும் பருப்புடன் தமிழன் நலன் கருதி இந்த கருமாதி பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த கடிதத்தின் மூலம் தமிழர்களுக்கு உண்மை நிலையை இந்த கருமதிகார பத்திரிக்கை நிலை நாடுகிறது என்று எல்லோரும் நினைதுக்கொல்வார்கலாம். நாசமா போன இந்த சிண்டு முடியும் கூட்டத்திடம் தான் ஒற்றுமை இல்லை ஒரு தனி நாடு இல்லை என்றால் தமிழனையும் அவ்வாறு நினத்துக்கொண்டு இந்த கூட்டம் அந்த கடிதத்தை (16.11.2008) தினமலத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் விடுதலை புலிகள் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் தன் இன மக்களை அளித்துக்கொண்டிருக்கிராரம் மேலும் தமிழக திரை உலகத்தினரை மதிப்பதும் இல்லையாம். இப்படி பல பொய்களை டக்லஸ் அவிழ்த்துவிட்டிருக்கிறார். அதனை இந்த தினமலம் வெளியிட்டு தமிழர் நலம் காக்கிறதாம். இதனை பெரிய எழுத்தில் வெளியிட்ட இந்த சிண்டு முடியும் கூடத்திற்கு டெல்லியில் இரண்டு தமிழ் எம்.பிக்கள் திரு பிரபாகரனை பற்றி பதினைந்து நிமிடம் பேட்டி அளித்துள்ளார். இதனை ஏன் இந்த நடு நிலை என கூறிக்கொள்ளும் தினமலம் வெளியிடவில்லை.

அந்த டக்லஸ் சொன்னது போல திரு பிரபாகரன் தன் இனமக்களை அளிப்பவர் என்றால் ஏன் ஒரு பொதுமக்கள் (சிங்கள மக்களையும் சேர்த்து) கூட பாதிக்கப்படாமல் கொழும்பு மின்தளத்தின் மீது விமான தாக்குதல் நடத்த வேண்டும். இது போல பல தாக்குதல்களை பிரபாகரன் நடத்துகிறார்( 2001 விமான தளம் தாக்குதல் உள்ளிட்டு). இதில் இருந்தாவது இந்த தினமலத்திற்கு புரியாத பிரபாகரன் எப்பொழுதும் ஒரு பொதுமக்கள் கூட பாதிக்க படக்கூடாது என நினைப்பவர் என்று. எனவே இலங்கை ராணுவம் தமிழர் இனபடுகொலை நடத்துவது போல சிங்கள மக்களை கொள்வது விடுதலை புலிகளின் நோக்கம் அல்ல. அவர்கள் தாக்குவது அனைத்தும் சிங்கள அரசையும் அதனை சர்ந்தவைகளையும் மட்டுமே.

ஏய் தினமலமே நீ என்னதான் நடு நிலை, தமிழன் நலன் என்று கூறினாலும் இங்கு தமிழர்கள் ஏமாறும் சூத்திரர்களாக இல்லை. அந்த காலமெல்லாம் மலையேறி விட்டது. எனவே இந்த மாதிரி டக்லஸ் எழுதினாரு சங்கராசாரி எழுதினாரு அப்படின்னு நீ வெளிட்டு கொண்டிருக்க வேண்டியதுதான் அனால் அந்த பொய்களை யாரும் நம்ப தயாராக இல்லை. நீயும் உன் திண்ணை தூங்கி கூட்டமும் இது போன்று நீங்களே எழுதி நீங்களே படித்துக்கொண்டு தமிழனை இப்படியாவது இழிவுபடுதுகிரோமே என்று ஆறுதல் பட்டுக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

தமிழர்களே இனியாவது பார்பன ஏடுகளை புறக்கணிப்போம்.....

Saturday, November 15, 2008

பூநகரி வெற்றியை ஒரு வார விழாவாக கொண்டாடுகிறது சிறிலங்கா அரசு....


தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பூநகரி பிரதேசம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதற்கு தலைநகர் கொழும்பிலும் சிங்கள கிராமங்களிலும் தொடர் வெற்றி விழா கொண்டாடப்படவுள்ளது.
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பூநகரி ஊடாக செல்லும் ஏ-32 வீதியை படையினர் முழுமையாக கைப்பறிய செய்தியை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி ஊடாக இன்று சனிக்கிழமை இரவு அறிவித்ததுடன் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சவால் விடுத்துள்ளார்.

இதனையடுத்து அரச தலைவர் செயலகத்தின் ஆலோசனையில் விழாவுக்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கள கிராமங்களில் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு வெற்றி விழா கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்ச்சி ஒழுங்கமைப்புக்களை விமல வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதல் வெற்றி விழா மிக விரைவில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது.

இப்பொழுதாவது புரிந்து கொள்ளுமா இந்த மத்திய அரசு. மகிந்தே அரசு அங்கு நடத்தும் போர் இன அழிப்பு போர் என்று. அவர் சொல்லும் தமிழ் இனம் காப்பாற்றப்படும் வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று இனியும் இவர்கள் புரிந்து கொண்டு நடக்கவில்லை என்றால் தமிழனின் தயவால் ஆட்சி நடுத்தும் அவர்களின் தமிழ் விரோத ஆட்சி தேவை இல்லை என்பதே ஒவ்வரு தமிழனின் கோரிக்கை.



Thursday, November 13, 2008

பார்ப்பன ஏடுகளைப் புறக்கணிப்போம்!

சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், எதியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான் என்று சொன்ன டாக்டர் டி.எம். நாயர் வாயில் சர்க்கரையைத்தான் போடவேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திலும் நாடு அந்த நிலையைப் பார்த்துக்கொண்டுதான், அனுபவித்துக் கொண்டுதானிருக்கிறது.
குறிப்பாக, ஈழத் தமிழர் பிரச்சினையில் பார்ப்பன மக்கள் நடந்துகொண்டு வரும் போக்கைக் கவனிக்கும் எவரும் பொறுமையை இழக்கத்தான் செய்வார்கள்.

தமிழர்களை சிங்களவர்கள் வெறுப்பதைவிட பல மடங்கு அதிகமாக இந்தப் பார்ப்பனர்கள் வெறுப்பதை அறிய முடிகிறது.
அதுவும் ஏடு நடத்தும் பார்ப்பனர்கள், எழுதுகோல் பிடிக்கும் பார்ப்பன எழுத்தாளர்கள் தமிழர்கள் மீதான தங்களின் பரம்பரை வன்மத்தை, இந்தச் சந்தர்ப்பத்தில் பல மடங்கு பெருக்கியே காட்டுகிறார்கள்.
தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பற்றி எரியும் ஈழமும் - பார்ப்பனப் பத்திரிகைகளும் என்ற தலைப்பில், சென்னை பெரியார் திடலில் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு (6.11.2008) பார்ப்பன ஏடுகள், ஊடகங்களின் தமிழர் விரோதப் போக்கினை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி, கடைசியாக தமிழர்களே, பார்ப்பன ஏடுகளைப் புறக்கணிக்கவேண்டாமா? என்ற வினாவை எழுப்பியபோது, புறக்கணிப்போம்! புறக்கணிப்போம்! என்று பார்வையாளர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று ஓங்கிக் குரல் கொடுத்தனர்.

தமிழர்களின் இந்த உணர்வைக்கூட அவர்கள் கொச்சைப்படுத்துவார்கள் - கேலி செய்வார்கள் என்பதை அறியாதவர்களா நாம்?
இந்தியா டுடே என்ற தமிழ் வார ஏட்டில் (5.11.2008) வாஸந்தி என்ற பார்ப்பன அம்மையார் ஏன் இந்த வார்த்தைப் போர்? என்ற தலைப்பில் நஞ்சைப் பிழிந்து கொடுத்துள்ளார்.

தமிழினத் தலைவர் என்ற பட்டப் பெயர், மனத்துக்குத் தெம்பைத் தருவது; முக்கியமாக அவரது பரம வைரியான அ.தி.மு.க. தலைவி, திடீரென்று ஈழத் தமிழரின் பிரச்சினைக்கு ஆதரவுக் கரம் நீட்டி கருணாநிதி வெறும் வேஷதாரி என்று சொன்னதும், அடிபட்ட வேங்கையாகப் பொங்க வைப்பது. எதிர்க்கட்சியி னரின் பொறுப்பற்ற விமர்சனத்துக்கெல்லாம் பதில் சொல்ல முதல்வர் ஏன் மெனக்கிடுகிறார் என்பது புரியவில்லை. இலங்கைப் பிரச்சினையில் ஆழம் தெரியாமல் காலை விட்டதில் தேசியத் தலைவராக உருவாகி வந்த பிம்பத்தில் கீறல் விழுந்ததை அவர் கவனிக்கவில்லை. முரசொலியில் வெளியிடப்படும் அறிக்கைகளும், மடல்களும் அவரது தன்னம்பிக்கை தளர்ந்து போனதைத் தெரிவிக்கின்றன. தன்னைவிட ஜெயலலிதா தமிழினப் பற்றுடையவர் இல்லை என்பதை பக்கம் பக்கமாக விளக்கும் பலவீனம் அவருக்கு ஏற்பட்டு இருப்பது விசித்திரம். புலிகளின் பகிரங்க அபிமானியான ம.தி.மு.க. தலைவர், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகங்களை வாபஸ் பெறவேண்டும் என்று சொன்னால், அதை யாரும் கவனத்தில் கொள்ளப்போவதில்லை. ஆனால், மத்திய அரசில் முக்கிய பங்கு உள்ள தி.மு.க. தலைவர் தாமே முடுக்கிவிட்டுக் கொண்ட உணர்ச்சி வேகத்தில் சிக்குண்டு, அண்டை நாட்டின் இறையாண்மையை கவனத்தில் கொள்ளாமல் பேசுவது சர்ச்சைக்குரியது.

பழுத்த அரசியல்வாதியான முதல்வருக்கும், சட்ட சாஸனத்தின் மேல் பதவிப் பிரமாணம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கை என்பது வேறு நாடு என்பது அவர்களை நிர்ப்பந்திப்பதோ, எச்சரிக்கை விடுவதோ அந்த நாட்டின் இறையாண்மைக்கு விரோதமானது என்பதும் தெரியாதா? வங்கதேசப் போர் நடத்தி கிழக்குப் பாகிஸ்தானுக்கு விடுதலை பெற்றுத் தரவில்லையா என்று நமது தமிழ் உணர்வுள்ள கட்சித் தலைவர்கள் ஈழப்போருக்கு உதவச் சொல்கிறார்கள். நாம் பாகிஸ்தானுக்குச் சொந்தமாக இருந்த கிழக்குப் பகுதியில் நுழைந்து போரிட்டது மாபெரும் தவறு.

- இதுதான் பார்ப்பன அம்மையாரின் கடைந்தெடுத்த நச்சு எழுத்துகள்.
தமிழினத் தலைவர் என்ற பட்டப் பெயர் கலைஞருக்குத் தெம்பைத் தருகிறதாம்.

எடுத்த எடுப்பிலேயே இப்படிக் கேலி, லோகக் குரு என்ற பட்டப் பெயர் மட்டும் இவர்களுக்கெல்லாம் இனி இனி என்று இனிக்கும்.
ஆமாம்! அவர்கள் நம்பிக்கைப்படி ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் அவர்தான் தலைவர். வாடிகன் நகருக்குக்கூட சங்கராசாரிதான் குரு - இதனை நாம் நம்பவேண்டும் - அப்படி நம்பாவிட்டால், ஏற்காவிட்டால் அதற்காக அவர் தயாராகச் சூட்ட வைத்திருக்கும் பட்டம் இனத் துவேஷம்!
கடலைத் தாண்டிச் செல்லுவதே தோஷம் என்று எழுதி வைத்திருக்கிற அதே கூட்டம்தான் சங்கராச்சாரியாரை லோகக்குரு - உலகத்துக்கே குரு என்று சொல் லுகிறது - இப்படியெல்லாம் நாம் கேள்வி எழுப்பினால், அதற்கும் ஒரு பட்டத்தை நமக்குச் சூட்ட தயாராக வைத்திருக்கிறார்கள் - அதுதான் விதண்டாவாதம் என்னும் பட்டம்.பயங்கரவாதம் என்பதில்கூட அவர்களுக்கு இரட்டை அளவுகோல் உண்டு. இராமன், சம்பூகன் என்ற சாதுவை வாளால் வெட்டிக் கொன்றால் அவர்கள் தயாராக வைத்திருக்கும் சொலவடை தர்மத்தைக் காப்பாற்ற அதர்மத்தைச் செய்வதும் ஒருவகை தர்மம்தான் என்பதுதான்.

ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்த நரேந்திர மோடி - அவர்கள் கண்ணோட்டத்தில் மகாசமர்த்தன் - நிருவாகி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். ஒரே வாரத்தில் கலவரத்தை அடக்கிய திறமைசாலி - பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் என்று நூல் பிடித்ததுபோல பார்ப்பனர்கள் எழுதுவார்கள்.

கொலைக் குற்றத்தில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளிவந்த சங்கராச் சாரியாரை வரவேற்று தம் சொந்த காரில் அழைத்து வந்து காஞ்சி மடத்துக்குக் கொண்டு வந்து அமர்த்துவார் இந்து ஏட்டின் ஆசிரியர் என். ராம்.
தம் இன மக்களின் மான வாழ்வுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியத் துக்கு ஆளானவர்களை இந்த யோக்கியதையில் உள்ளவர்கள்தான் பயங்கர வாதிகள் என்று நாமகரணம் சூட்டுகிறார்கள்.

இலங்கை இன்னொரு நாடாம். அதில் தலையிடக்கூடாதாம். இந்த நிலையை எடுப்பதற்கு - பாகிஸ்தானோடு இந்தியா போர் நடத்தி வங்க தேசத்தை உருவாக்கித் தந்தது தவறு என்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வக்காலத்துப் போட்டு எழுதுகிறார் பார்ப்பன அம்மையார் இந்தியா டுடே இதழில்!

இந்தச் சாமர்த்தியம் எல்லாம் யாருக்கு வரும் - அவாளைத் தவிர!
தமிழில் ஏடு நடத்தி, தமிழர்களிடத்திலே விற்றுப் பணம் பறித்து தமிழர் களையே கொச்சைப்படுத்தும் இந்தப் பார்ப்பன ஏடுகளைப் புறக்கணிக்க வேண்டாமா?

தமிழர்களே சிந்திப்பீர் - செயல்படுவீர்!

நன்றி விடுதலை



Tuesday, November 04, 2008

பெரியார் சொல்லும் தமிழர் திருமணம்......

தந்தை பெரியார் அவர்கள் “சித்திர புத்திரன்” என்கிற புனைப் பெயரில்14-03-1950 விடுதலை நாளிதழில் “திருமண விழா: வினா விடை” என்ற தலைப்பில்சுயமரியாதைத் திருமணம் குறித்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அந்தவினா-விடை உங்கள் பார்வைக்காக:


சுயமரியாதைத் திருமணம் என்பது எது?
நமக்கு மேலான மேல் ஜாதிக்காரன் என்பவனை புரோகிதனாக வைத்து நடத்தாததிருமணம் சுய மரியாதைத் திருமணமாகும்.

பகுத்தறிவுத் திருமணம் என்றால் என்ன?
நமக்குப் புரியாததும், இன்ன அவசியத்திற்கு இன்ன காரியம் செய்கிறோம் என்றுஅறிந்து கொள்ளாமலும், அறிய முடியாமலும் இருக்கும்படியானதுமானகாரியங்களைச் (சடங்குகள்) செய்யாமல் நடத்தும் திருமணம் பகுத்தறிவுதிருமணம் ஆகும்.

தமிழர் திருமணம் என்றால் என்ன?
புருஷனுக்கு மனைவி அடிமை (தாழ்ந்தவள்) என்றும், புருஷனுக்கு உள்ளஉரிமைகள் மனைவிக்கு இல்லை என்றும் உள்ள ஒரு இனத்திற்கு ஒரு நீதியான மனுநீதி இல்லாமல் வாழ்க்கையில், கணவனும் மனைவியும் சரிசம உரிமை உள்ள நட்புமுறை வாழ்க்கை ஒப்பந்தமாகக் கொண்ட திருமணம் தமிழர் (திராவிடர்)திருமணமாகும்.

சுதந்திரத் திருமணம் என்றால் என்ன?
ஜோசியம், சகுனம், சாமி கேட்டல், ஜாதகம் பார்த்தல் ஆகிய மூடநம்பிக்கைஇல்லாமலும், மணமக்கள் ஒருவருக்கொருவர் நேரில் பார்க்காமல், அன்னியர்மூலம் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்தும், அல்லது தெரிந்து கொள்வதைப்பற்றிக் கவலையில்லாமல் மற்றவர்கள் கூட்டி வைக்கும் தன்மை இல்லாமலும்,மணமக்கள் தாங்களாகவே ஒருவரை ஒருவர் நன்றாய் அறிந்து திருப்தி அடைந்துகாதலித்து நடத்தும் திருமணம் சுதந்திரத் திருமணமாகும்.

புரட்சித் திருமணம் என்றால் என்ன?
தாலி கட்டாமல் செய்யும் திருமணம் புரட்சித் திருமணமாகும்.

சிக்கனத் திருமணம் என்றால் என்ன?
கொட்டகை, விருந்து, நகை, துணி, வாத்தியம், பாட்டுக் கச்சேரி, நாட்டியம்,ஊர்வலம் முதலிய காரியங்களுக்கு அதிகப் பணம் செலவு செய்வதும், ஒருநாள் ஒருவேளைக்கு மேலாகத் திருமண நிகழ்ச்சியை நீட்டுவதும் ஆன ஆடம்பர காரியங்கள்சுருங்கின செலவில், குறுகிய நேரத்தில் நடத்துவது சிக்கனத் திருமணமாகும்.

இவைகளையெல்லாம் சேர்த்து நடத்துகிற திருமணத்திற்கு ஒரே பேராக என்னசொல்லலாம்?
நவீனத் திருமணம் அல்லது தற்காலமுறைத் திராவிடத் திருமணம் என்றுசொல்லலாம்.



சுயமரியாதைக் கோட்டை......

காலையில் வடசேரி திருமணம், மதியம் மன்னார்குடி - மாலையிலே நீடாமங்கலம் பொதுக்கூட்டம் ஆகிய மூன்று ஊர்கள் சுற்றுப்பயணத்திற்கு நாள் சென்னையிலிருந்து புறப்படுகின்ற நேரத்தில் எதிர்பாராமல் முதல்வரை சந்திக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத் தது.

அப்பொழுது முதலமைச்சர் அவர்கள் சிரித்துக்கொண்டே கேட்டார்கள். நாளை சுற்றுப்பயணத்திற்கு எந்தெந்த ஊர்களுக்குப் போகிறீர்கள் என்று கேட்டார்கள்.
நான் வரிசையாகச் சொன்னவுடனே உடன் அமர்ந்திருந்த சில அமைச்சர் பெருமக்கள் மற்றவர்கள் எல்லோரிடத்திலும் முதலமைச்சர் அவர்கள் சிரித்துக்கொண்டே சொன்னார் கள், ஓகோ! நம்முடைய சுயமரியாதைக் கோட்டைகளுக்குச் செல்லுகிறீர்கள் என்று அந்த ஊர்களையெல்லாம் நினைத்து உடனடி யாக மகிழ்ச்சியோடு சொன்னார்கள் (பலத்த கைதட்டல்). எனவே இன்னமும் அவர் களுடைய கணிப்பிலே எந்தெந்த ஊர் எப் படிப்பட்டது என்பதை 85 வயது இளைஞ ராக இருக்கக் கூடிய அவர்கள் 95 வயது இளைஞரைத் தலைவராக என்றைக்கும் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடிய நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்களுடைய கணிப் பிலே இந்தப் பகுதி எப்படிப்பட்டதாக இருக் கிறது என்பதை எல்லாம் அறிந்தவர்கள் அவர்கள்.
எல்லா கிராமங்களிலும் எப்படி தந்தை பெரியார் அவர்களுடைய காலடி படாத இடமே இல்லை என்று நினைக்கின்றார்களோ, அதுபோல நம்முடைய முதலமைச்சர் கலைஞர் அவர்களும் எல்லாப் பகுதிகளையும் புரிந்தவர்கள். அறிந்தவர்கள் - தெரிந்தவர்கள்.


(31-10-2008 அன்று நீடாமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து....)



Monday, November 03, 2008

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி யார் பராக் ஒபமாவா ? ஜோன் மெக்கெயினா ?

உலகெங்கும் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. வாக்களிப்பு உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணி முதல் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் 44வது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க அமெரிக்காவின் 51 மாநிலங்களையும் சேர்ந்த சுமார் 130 மில்லியன் மக்கள் இன்று (11/04/2008) உத்தியோகபூர்வமாக வாக்களிக்கவுள்ளனர்.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி வாக்காளர்கள் வாக்களிக்க காத்திருந்தால் அதற்குத் தகுந்தவாறு நேரத்தை நீடித்துக் கொள்ள அனைத்து மாகாண உள்ளூர் நிர்வாகத்துக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடியிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். அவ்வப்போது யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். மாகாண வாரியாகவும் முன்னிலை அறிவிக்கப்படும்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதிய ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜோன் மெக்கெயினும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினெய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பராக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.

இவர்களைத் தவிர, லிபரேஷன் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பாப் பார், கான்ஸ்டிடியூசன் கட்சி சார்பில் வானொலி தொகுப்பாளர் சக் பால்ட்வினும், கிரீன் கட்சி சார்பில் முன்னாள் பெண் எம்.பி. சிந்தியா மெக்கினியும், சுயேச்சையாக ரால்ப் நடேர் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். இருப்பினும், ஜோன் மெக்கெயின்ஒபாமா இடையே தான் நேரடிப்போட்டி நிலவுகிறது.

ஜனாதிபதி தேர்தலுடன் துணை ஜனாதிபதி தேர்தலும் இன்று நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அலாஸ்கா மாநில கவர்னர் சாரா பாலின் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலையொட்டி, கடந்த ஜுன் மாதம் ஜோன் மெக்கெயினும், ஒபாமாவும் அவரவர் கட்சி வேட்பாளர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, வாக்காளர்களிடம் இருவரும் பிரசாரம் செய்யத் தொடங்கினர்.

இன்று தேர்தல் நடப்பதையொட்டி, இருவரும் இறுதிக்கட்ட வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர். ஜோன் மெக்கெயின், வேர்ஜினியா மாநிலத்தில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார். இந்த மாநிலத்தில், 1964 ஆம் ஆண்டில் இருந்து குடியரசு கட்சிதான் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அங்கு ஜோன் மெக்கெயின் பிரசாரம் செய்கையில், கருத்து கணிப்பில் பின்தங்கி இருந்தாலும், முன்னேறி வருவேன் என்று கூறினார்.

நெவடா, கொலராடோ, மிசோரி ஆகிய மாநிலங்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமா இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். இவை கடந்த தேர்தலில் புஷ்சுக்கு வெற்றி தேடித்தந்த மாநிலங்கள் ஆகும். ஒபாமா தனது பிரசாரத்தின்போது, எங்களுக்கு சாதகமான அலை வீசுகிறது, இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன், அமெரிக்காவில் முழுமையாக மாற்றத்தை கொண்டு வருவோம், எங்களால் முடியும் என்று கூறினார்.

பொறுத்திருந்து பார்ப்போம் .......யாருக்கு வெற்றி........



கருமாதி பத்திரிக்கையின் கவலை......

மலேசிய உள்துறை அமைச்சகம்: "ஹிண்ட்ராப்" வன்முறையை தூண்டி வருகிறது. மலேசிய ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்ப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


டவுட்தனபாலு: வெறும் ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டு இருந்த அமைப்பே அங்கெ தடை சென்ச்சுட்டாங்க... இங்கே, முன்னால் பிரதமரையே கொன்ற அமைப்புக்காக, ஆளாளுக்கு வக்காலத்து வாங்கிகிட்டு இருக்காங்க....அப்புறம் ஏன் அங்கெ சட்டம் ஒழுங்கு நல்ல இருக்காது...!


மேலே உள்ள செய்தி 19.10.2008 தினமலர்(மலம்) கருமாதி பத்திரிக்கையில் "டவுட்தனபாலு" பகுதியில் வந்தது.


மகாத்மாவை சுட்டுக்கொன்ற கூட்டமாயிற்றே. அதனால் தான் இந்த கவலை போலும். இந்த கூட்டம் பாபர் மசூதியை இடித்து கலவரத்தை ஏற்ர்ப்படுத்திய கூட்டம். இவை அனைத்தையும் செய்துவிட்டு இந்த கூட்டம் ஒரு முறை இந்தியாவின் அட்சிபீடதிலும் அமர்ந்தது. இந்த ஆட்சியில் பாபர் மசூதி இடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஒருவர் உள்துறை அமைச்சராகவும் இருந்தார். அப்பொழுதெல்லாம் சட்டம் ஒழுங்கை பற்றி கவலைப்படாத இந்த தினமலம் இப்பொழுது சட்டம் ஒழுங்கை பற்றி கவலைப்படுவது வேடிக்கையாக இருக்கிறது.


ஏய் தினமலமே முதலில் அந்த இயக்கத்தை தடை செய்ய சிபாரிசு செய்யலாமே?. நீங்கள் அதனை எல்லாம் செயமாட்டீர்கள் ஏனென்றால் நீங்கள்தான் அந்த இயக்கத்தின் சின்னத்தேயே தங்களது பத்திரிக்கையின் குறியீடாக வைத்துள்ளீர்கள். அப்படி பார்க்க போனால் உங்களையே தடை செய்ய நேரிடும். (சட்டம் ஒழுங்கை துண்டுபவருக்கு அதரவாக இருப்பதற்க்காக ). எதற்கும் உசாராக இருந்துகொள்ளுங்கள்.



Saturday, November 01, 2008

தினமலர்(மலம்) ஆவேசம்.....

வழக்கம் போல 02.10.2008 தினமலர்(மலம்) டவுட் தனபாலு பகுதியில் அதன் ஆவேசத்தை கருமாதி பத்திரிகை காட்டியுள்ளது.

நடிகர் கமலகாசன்: யார் பயங்கரவாதி என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும். அன்று பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்ட வாஞ்சி நாதன் இன்று நம்மால் தியாகியாக போற்றப்படவில்லையா?

டவுட் தனபாலு: ஆகா...அருமையான பேச்சு...ஆழ்ந்த கருத்துக்கள்...அன்னிக்கு பயங்கரவாதியாக இருந்த வாஞ்சிநாதன் இன்னிக்கு தியாகி ஆகிட்டாருன்னு சொன்னிங்க....அதே மாதிரி, அன்னிக்கு ராஜிவை கொன்னவங்களை, இன்னிக்கு எப்படி அலைக்கிரதுன்னு நீங்கேளே சொல்லிடுங்க....!

திரு.கமலகாசன் இந்த கூட்டத்தை விட்டு சற்றே விலகி இருப்பதால் தான் இந்த தினமலர்(மலம்)திற்கு திரு.கமலகாசன் மீது இவளவு ஆவேசம் போலும்.

டவுட் தனபாலுக்கு எவளவு நாம சொன்னாலும் அவரு லவுட் தனபாலவே இருக்காரு. ராஜிவை கொன்னவங்களை மட்டும் கேட்ட லவுட்டுக்கு, இன்னும் சிலவற்றை நான் நினைவுபடுத்துகிறேன்.

அன்று பாபர் மசூதியை இடித்து இந்தியாவில் மதக்கலவரத்தை எற்படிதியவர்களை இன்று நீங்கள் அவர்களை எப்படி அழைக்கிறீர்கள்?

அன்று மகாத்மாவை கொன்றவரை இன்று தியாகியாகியதொடு இல்லாமல் அவருக்கு பாராளுமன்றத்தில் சிலை வேறு.

இதனை எல்லாம் கருமாதி பத்திரிக்கையின் லவுட் நினைவில் வருவதில்லை. காரணம் இந்த மலமும் அந்த இனம் தானே அதனை அடிக்கடி நமக்கு நினைவுபடுத்துகிறது. ஏன்னா நாம் மறந்துவிடுவோம் அல்லவா அதனால். நீ எந்த இனம் (குள்ள நரிக்கூட்டம்) என்று நாங்கள் எந்த நாளிலும் மறக்க மாட்டோம். அதனால் இப்படி சொன்னேதேயே சொல்லி சொல்லி, எங்களையும் மீண்டும் அதே பதிலை சொள்ளவைக்கதே முட்டாள் மலேமே.

எனவே தினமலரை வாசித்துவிட்டு நாம் ஏதோ நடுநிலை செய்தியை பெற்றுவிட்டோம் என பெருமை படும் தமிழனே இப்பவாது புரிந்துகொள் அவர்கள் தமிழனுக்காக பத்திரிக்கை நடத்துகிறார்களா? இல்லை இல்லை அவாளுக்காக.

எனவே இந்த குள்ள நரிக்கூட்டம் எதனையாவது மிக மிக எதிர்த்தால் அது தமிழனுக்கு மிக பெரிய சாதகமான ஒன்றாக இருக்கும் என்று நினைவில் வைத்து இந்த கருமாதி பத்திரிக்கையை வாசிப்பீர்களாக....



Saturday, October 18, 2008

விடியல் ஏற்படட்டும் ஈழ தமிழருக்கு!

ஈழ தமிழர் படுகொலையை கண்டித்து மனிதசங்கிலி வரும் 21.10.2008 தேதி நடைபெறும் என தமிழக முதல்வர் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். இந்த முடிவு மிகவும் வரவேற்க படவேண்டிய ஒன்று.

ஆனால் முன்னால் முதல்வர் அம்மையார் ஜெ . ஜெயலலிதா அனைத்துக்கட்சி கூட்டத்தை ஒரு கபட நாடகம் என்று கூறிவிட்டு மனிதசங்கிளியால் ஒன்றும் ஈழத்தமிழர் படுகொலையை நிறுத்த முடியாது என்று கூறியுள்ளார்.

இதே மனிதச்சங்கிலி போராட்டம் தான் அமெரிக்காவில் ஒரு அரசையே பதவி இழக்க செய்தது. வியட்னாம் போரின்போது வியட்நாம் குடியரசுக்கு (தென் வியட்நாம்) அன்றைய அமெரிக்க ஜனாதிபதி Lyndon Baines Johnson பதினராயிரம் ஆக இருந்த அமெரிக்க ராணுவத்தை 550,000 அதிகப்படுத்தினார். இதனை அந்த நாட்டு மக்கள் எதிர்த்தனர் ( ஏனென்றால் மொத்தமாக 1.4 மில்லியன் இராணுவத்தினர் இப்போரின் போது கொல்லப்பட்டனர். இதில் 6 விழுக்காட்டினர் அமெரிக்கராவார். இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 முதல் 5.1 மில்லியன் ஆவார்.). அதனால் இறப்பது நம் அமெரிக்க மக்களும்தான் என்று ஜனாதிபதி ஜோன்சனிடம் எதிர்ப்பை தெருவித்து வியட்நாமுக்கு அமெரிக்க ராணுவத்தை அனுப்பாதே என்று சுமார் இரநூறு கிலோமீடர் தூரத்திற்கு மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர் அனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் அவர் அனுப்பினார். அனால் பின் நாளில் அந்த போராட்டமே நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தி அவரை பதவி இழக்க செய்தது. எனவே மனிதசங்கிலி போராட்டம் என்பது அம்மையார் ஜெ. ஜெயலலிதா போன்றவர்களுக்கு சாதரண விசயமாக இருக்கலாம். நம்மை பொறுத்தவரை அது ஈழத்தில் ஒரு தீர்வை ஏற்படுத்தும் ( எப்படி அன்று அமெரிக்காவில் எற்படித்தியதோ அதனைபோல்) என்ற நம்பிக்கையில் அதனை ஆதரிப்போமாக.....

வெல்லட்டும் மனிதசங்கிலி போராட்டம்..

விடியல் ஏற்படட்டும் ஈழ தமிழருக்கு !



Wednesday, October 15, 2008

தீபாவளியா?

நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்தால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன்என் றவனை அறைகின் றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பன?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைக ளைநாம் எண்ண வேண்டும்.
எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமோ?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!

"உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்
நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?"
என்றுகேட் பவனை, "ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய்" என்று
கேட்கும்நாள், மடமை கிழிக்கும் நாள், அறிவை
ஊட்டும்நாள், மானம் உணரு நாள் இந்தநாள்
தீவா வளியும் மானத் துக்குத்
தீ-வாளி ஆயின் சீஎன்று விடுவரெ!

- பாவேந்தர் பாரதிதாசன்



இதோ தீபாவளி பற்றி அண்ணா அவர்களின் கட்டுரை.

இங்கே தீபாவளி நரகாசுரவதத்தைக் குறிக்கிறது அல்லவா? பஞ்சாபிலே அப்படிக் கிடையாது. நளச் சக்கரவர்த்தி, சூதாடி அரசு இழந்த இரவுதான் தீபாவளியாம்! இங்கே நாம், அசுரனை ஒழித்த நாளென்று ஸ்நானம் செய்து மகிழ்வது சடங்காகக் கூறப்படுகிறதல்லவா? பஞ்சாபிலே நடப்பது என்ன? சூதாடுவார்களாம், பண்டிகையின்போது! தமிழகத்து இந்து, தீபாவளியை நரகாசுரவதமாகவும், பஞ்சாப் இந்து அதே தீபாவளியை நளமகாராஜனுடைய சூதாட்டத் தினமாகவும் கருதுவது எதைக் காட்டுகிறது? வேடிக்கையல்லவா? லாகூரில் ஒரு ரூபாய்க்குப் பதினாறு அணா, லால்குடியிலும் அதேதான்! ஆனால் லாகூர் இந்து தீபாவளியின் போது, நரகாசுரனை நினைத்துக் கொள்ளவில்லை. லால்குடி இந்துவுக்கு தீபாவளி, நளச் சக்ரவர்த்தி சூதாடிய இரவு என்று தெரியாது. மான்செஸ்டரிலே உள்ள கிறிஸ்துவரை, ஏசுநாதர் எதிலே அறையப்பட்டார் என்று கேளுங்கள், சிலுவையில் என்பார். மானாமதுரையிலே மாயாண்டி, மத்தியாஸ் என்னும் கிறிஸ்துவரான பிறகு அவரைக் கேளுங்கள், அவரும் ஏசு சிலுவையில் அறையப்பட்டார் என்றுதான் சொல்வார்.


இங்கோ லால்குடி இந்துவின் தீபாவளி வேறு, லாகூர் இந்துவுக்கு தீபாவளி மற்றோர் காரணத்துடன் ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவோடு முடிந்ததா வேடிக்கை! - மேலும் உண்டு. மகாராஷ்டிர தேசத்திலே, தீபாவளிப் பண்டிகை எதைக் குறிக்கிறது என்று கேட்டால், விநோதமாக இருக்கிறது. மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியின் முடியிலே அடியை வைத்த நாளாம் அது! லால்குடிக்கு லாகூர் மாறுகிறது. லாகூரிலிருந்து புனா போனால், புதுக் கதை பிறந்துவிடுகிறது. கூர்ஜரத்திலே தீபாவளி புது வருசத்து வர்த்தகத்தைக் குறிக்கிறதாம்! வங்காள தேசத்தில் காளிதேவையை இலட்சுமியாகப் பூஜை செய்யும் நாளாம் தீபாவளி! சிலர், ராமன் மகுடம் சூட்டிக் கொண்ட தினமே தீபாவளி என்று கொண்டாடுகிறார்களாம்! சரித்திர ஆராய்ச்சியைத் துணை கொள்ளும் சில இடங்களிலே, தீபாவளி என்பது தேவ கதைக்கான நாளல்ல; உஜ்ஜைனி நகர அரசன் விக்கிரமாதித்தன் பட்டம் சூடிய நாளைக் கொண்டாடும் பண்டிகையாம்! இவ்வளவோடு முடிந்ததா? இல்லை.
இந்திய தேசத்திலே நான்கு ஜாதிகள், சிரவணம் பிராமணருக்கு, நவராத்திரி க்ஷத்திரியர்களுக்கு, வைசியர்களுக்கு தீபாவளி, இதராளுக்கு (!!) ஹோலிப் பண்டிகை என்று சம்பிரதாயம் ஏற்பட்டிருப்பதாக மற்றோர் சாரார் கூறுகின்றனர்.

இதில் எது உண்மை? அறிவுடையோர் சிந்திப்பீர்!



Tuesday, October 07, 2008

சாதி ஒழிப்புக்கு சட்டம் இயற்றலாகதா?

இன்றைய இலட்சியம், முயற்சியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சாதி ஒழியவேண்டும் என்பது ஒரு சாதாரண சங்கதி. ஆனால் அது பிரமாதமான செயலாகக் காணப்படுகிறது. பிறவியில் யாவரும் தாழ்ந்தவர்கள் அல்ல; எங்களுக்கு மேல் எவனும் இல்லை; எல்லோரும் சமம் என்ற நிலை நமக்குத்தான் அவசியமாகத் தோன்றுகிறது.ஒருவன் மேல்சாதி; ஒருவன் கீழ்சாதி; ஒருவன் பாடுபட்டே சாப்பிட வேண்டும்; ஒருவன் பாடுபடாமல் உட்கார்ந்து கொண்டு சாப்பிடவேண்டும் என்கிற பிரிவுகள் அப்படியே இருக்க வேண்டுமா?இதைக் காப்பாற்றிக் கொடுப்பதுதான் அரசாங்கம். இதை ஒழிக்க வேண்டும். எல்லாச் சாதியும் ஒரு சாதிதான் என்கிறோம். நாம் இந்த ஒரு காரியம்தான் இவ்வளவு பெரிய கிளர்ச்-சியை உண்டாக்கி விட்டது.இது கிளர்ச்சிக்கு உரிய காரியமா? மற்ற நாட்டில் இதுபோல் சொன்னாலே சிரிப்பான். ஏன்? பிறவியில் என்ன பிரிவு இருக்கிறது என்பான்.நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் வைப்-பாட்டி மகன்? நான் ஏன் கீழ்சாதி? இதற்குப் பரிகாரம் வேண்டும் என்றால் குத்துகிறேன் என்றான்; வெட்டுகிறேன் என்றான் என்றால் குத்தாமல் வெட்டாமல் இருக்கிறதுதான் தப்பு என்றுதானே எண்ண வேண்டியுள்ளது? குத்தினால் என்ன செய்வாய்?முதுகுளத்தூரில் நூறுபேரைக் கொன்று இரண்டாயிரம் வீட்டைக் கொளுத்தினானே என்ன செய்தாய்? என்ன செய்ய முடிந்தது? யாரோ நாலுபேர் மீது வழக்குப் போட்டால் தீர்ந்துவிடுமா? எரிந்த வீடு வந்துவிடுமா? செத்தவனும் வந்து விடுவானா? குத்துவேன்-வெட்டுவேன் என்று சொன்னான் என்றால் எப்போது சொன்னான்? எந்த மாதிரி சொன்னான்? அந்த யோக்கியப் பொறுப்பே கிடையாது. நான் சொல்வதைவிட மந்திரி பக்தவத்சலம் அவர்களே நல்லபடி சொல்லி-யிருக்-கிறார். ராமசாமி; குத்துகிறேன் என்றான்; வெட்டுகிறேன் என்றான் என்று சிலர் சொன்னபோது, எப்போது சொன்னான்? எங்கு சொன்னான்? கடுதாசியைக் காட்டு, என்றதும் ஒருவனையும் காணோம். ஓடிவிட்டார்கள். பேப்பரில் வந்திருக்கிறது என்றார்கள். சி.அய்.டி.ரிப்போர்ட்டில் (உளவுத் துறை அறிக்கையில்) அது போலக் காணவில்லையே என்றார்; ஒருவருமில்லை ஓடிவிட்டார்கள். குத்தினால், வெட்டினாலொழிய சாதி போகாது என்ற நிலைவந்தால் எந்த மடையன் தான் சும்மா இருப்பான்?ஆண்மையாக ஜாதி இருக்க வேண்டியது-தான் எடுக்க முடியாது என்றாவது சொல்லேன்!ஆறு மாதமாகக் கிளர்ச்சி நடக்கிறது. 750 பேரைக்கைது செய்து தண்டித்தாகி விட்டது ஒன்றும் சொல்லாமல்.குத்துகிறேன் வெட்டுகிறேன் என்றான் என்று சொல்லி மிரட்டி நம்மை அடக்கி-விடலாம் என்றால் என்ன அர்த்தம்? இந்த மிரட்டலுக்குப் பயந்து விட்டு விடக்கூடிய முயற்சி அல்ல நம்முயற்சி. விட்டுவிட்டால் நாம் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆவோம்! மானமற்ற கோழை என்பதைத் தவிர வேறு இல்லை.சாதி ஒழிக்க வேண்டும் என்றால் அதுபற்றி அக்கறையில்லை. குத்துகிறேன் என்கிறானே அதற்கு என்ன பண்ணுகிறாய் என்றால் என்ன அர்த்தம்?இரண்டில் ஒன்று கேட்கிறேன்; சாதி ஒழிய வேண்டுமா? வேண்டாமா? (ஒழிந்தே தீர வேண்டும்! என்ற இலட்சக்கணக்கான மக்களின் முழக்கம்) ஒழிய வேண்டும் என்றால் சட்டத்தையும், வெங்காயத்தையும் நம்பினால் போதுமா? எதைச் செய்தால் தீருமோ அதைச் செய்தால் தானே முடியும்? (சொல்லுங்கள் செய்கிறோம்! என்று இலட்சக்கணக்-கானவர்-கள் உறுதிமொழி) சட்டத்தின் மூலம் தீராது. பார்லிமெண்டின் மூலம் தீராது என்றால் வீட்டில் போய் படுத்துக்கொள்ள வேண்டியது-தானா?அரசாங்கம் யாருக்கு? பார்ப்பானுக்கும் வடநாட்டானுக்கும் தானா? தந்திரமாகப் பித்தலாட்டமாக அரசியலை அமைத்துக் கொண்டு யோக்கியன் அங்குப் போகமுடியாத-படி சட்டம் செய்து கொண்டு தொட்டதற்-கெல்லாம் சட்டம் இருக்கிறது; தண்டனை இருக்கிறது; ஜெயில் (சிறை) இருக்கிறது என்றால், மானங்கெட்டு வாழ்ந்தால் போதும் என்று எத்தனைபேர் இருப்பார்கள்? வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லை யென்பவன் இருப்பான்; இரண்டில் ஒன்று பார்க்கிறோம்; இல்லாவிட்டால் சாகிறோம்; சாகிற உயிர் சும்மா போகாமல் உடன் இரண்டை அழைத்துக்--கொண்டு போகட்டும் என்கிறோம்.சாதி ஒழிய வேண்டும் என்பதற்கு எவனும் பரிகாரம் சொல்வதில்லை; நம்மை அடக்கப் பார்க்கிறார்கள். பார்ப்பனப் பத்திரிகைகளின் போக்கிரித்தனம் அது.ஏண்டா அடிக்கிறாய் என்றாலே கொல்-கிறான், கொல்கிறான் என்று சப்தம் போட்டு மிரட்டுவதா? அடக்கி ஒழிக்க முயற்சி செய்வதா? இன்றுவரை யாரை, எப்படி, எந்த ஊரில் செய்வது என்று முடிவு செய்யவில்லை. ஆனால் அப்படிப்பட்ட அவசியம் வந்தால் தயாரா? என்றுதான் கேட்கிறேன் (தயார்! தயார்! என்ற லட்சகணக்கான குரல்) நாலு பேர் சாவது, ஜெயிலுக்குப் (சிறைக்குப்) போவ-தென்றால் போகிறது. என்ன திருடி விட்டா போகிறோம்? இல்லை ஒரு குடும்பம் பிழைத்தால் போதும் என்று போகிறோமா? நீ கீழ்சாதி, அதுதான் சாஸ்திரம், அதுதான் வேதம், அதைத்தான் ஒத்துக்கொண்டிருக்க வேண்டும் என்றால் 100 க்கு 97 பேராக உள்ள திராவிடர் ஆகிய நாம் எதற்கு இழிமக்களாக இருக்க வேண்டும்? ஆகவே நடப்பது நடக்-கட்டும்; பயமில்லை! பயந்து கொண்டு முயற்சியைக் கைவிட்டு விடப் போவதில்லை. அந்த மாதிரி அவசியம் வந்தால் செய்து தீர வேண்டும்.இந்த இரண்டு வருடத்தில் இருபது இடங்களில் எனக்குக் கத்தி கொடுத்துள்ளார்-கள். எதற்குக் கொடுத்தார்கள்? என் கழுத்தை அறுத்துக் கொள்ளவா? இல்லை... முத்தம் கொடுக்கவா? இல்லை, விற்றுத் தின்னவா? உன்னால் ஆகும்வரை பார்; முடியாவிட்டால் எடுத்துக் கொள்! மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதன் அறிகுறியாகத்தானே? காந்தி சிலை உடைக்க வேண்டும் என்றேன். உடனே சம்மட்டி கொடுத்தார்கள்! இப்படி மக்கள் ஏராளமாக ஆதரவு தருகிறார்கள். இவ்வளவு மக்கள் ஆதரவு நம்பிக்கை, அன்பு, செல்வாக்கு உள்ளது. இதை என்ன செய்வது? இதை உணர்ந்து அவனவன் திருந்துவதா; இல்லை கடைசி நிமிடம் வரட்டும் என்று ரகளைக்குக் (கலகத்துக்கு) காத்திருப்பதா? செல்வாக்கைத் தப்பாக உபயோகிக்க மாட்டேன்.நானும் அவசரக்காரனல்ல! நம் பேச்சைக் கேட்க ஆள் இருக்கிறது என்பதற்காக வெட்டு குத்து என்று சொல்ல மாட்டேன். வேறு மார்க்கம் இல்லை என்றால் என்ன செய்வது? கொலை அதிசயமா? பத்திரிகையில் தினம் பார்க்கிறீர்களே! மாமியாரை மருமகன் கொன்றான்: மனைவியைப் புருஷன் கொன்-றான்; அப்பன் மகனைக் கொன்றான் என்று. அவசியம் என்று தோன்றுகிறபோது நடக்-கிறது! செய்து விட்டுத் தப்பித்துக் கொள்ள-லாம் என்று செய்கிறவன் 100க்கு 10 பேர்தான் இருக்கும். 100க்கு 90 பேர் செய்துவிட்டு வருவதை அனுபவிப்பது என்று செய்கிறவர்கள்-தான். தப்பான காரியத்திற்கு என் தொண்டர்-களை உபயோகப்படுத்த மாட்டேன். அந்த அளவு உணர்ச்சி வந்துவிட்டது என்பதை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டும்; பொதுவேஷம் போடுகிறவன் தெரிந்து கொள்ள வேண்டும்.


3-11-1957 அன்று தஞ்சையில் எடைக்குஎடை வெள்ளி நாணயம் வழங்கிய மாநாட்டில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு : (விடுதலை 8-11-1957)




Friday, October 03, 2008

சரஸ்வதி பூஜை கொண்டாடுவோர் எண்ணிப் பாருங்கள் கோபியாமல்!

எலக்ட்ரிக், இரயில்வே, மோட்டார், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி, விஷப்புகை, அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இனாகுலேஷன் ஊசி, இவைகளுக்கான மருந்து, ஆப்ரேஷன் ஆயுதங்கள
தூரதிருஷ்டிக் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன
டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம
ஆளில்லா விமானம், டைப் மெஷின், அச்சு இயந்தரம், இரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத்துக்குள் போகக் கருவி, மலை உச்சி ஏற மெஷின், சந்திர மண்டலம் வரைபோக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின், இன்னும் எண்ணற்ற புதிய, பயன் தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகிய வைகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும், கண்டுபிடிக்கும் வேலையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்பவர் எல்லாம்.

ஆயுத பூசை சரசுவதி பூசை கொண்டாடாத வர்கள்!

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடாகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல்லாம் ஆயுத பூசை செய்தவர்களல்லர் நவராத்திரி கொண்டாடினவர்களல்லர
நூற்றுக்கு நூறு பேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டில
சரசுவதி பூசை ஆயுத பூசை இல்லை! ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?
ஓலைக் குடிசையும் கலப்பையும் ஏரும் மண்வெட்டியும் அரிவாளும் இரட்டை வண்டியும் மண்குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள்.
தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை.
கற்பூரம்கூட நீ செய்ததில்லை.
கடவுள் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடி கூட சரஸ்வதி பூசை அறியாதவன் கொடுத்துதான் நீ கொண்டாடுகிறாய்.

ஒருகணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்து வந்த நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய, அதிசயப் பொருளைக் கண்டுபிடித்தோம், உலகுக்குத் தந்தோம், என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை.

அப்படித்தான் கொஞ்சம் நெஞ்சை உறுத்தும். மிரளாமல் யோசி. உன்னையும் அறியாமல் நீயே சிரிப்பாய்.

உன் பழைய நாட்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூல்களை எல்லாம்கூட, ஓலைச் சுவடியிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்சு இயந்திரமாவது கண்டுபிடித்திருக்கக் கூடாதா? இல்லையே!
மேனாட்டான் கண்டுபிடித்துத் தந்த அச்சு இயந்திரத்தின் உதவிக் கொண்டு உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து அக மகிழ்கிறாயே!

அவன் கண்டுபிடித்த இரயிலில் ஏறிக் கொண்டு உன் பழைய, அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே!
அவன் கண்டுபிடித்துக் கொடுத்த ரேடியோவிலே உன் பழைய பஜனைப் பாட்டைப் பாட வைத்து மகிழ்கிறாயே!
எல்லாம் மேனாட்டான் கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு அவைகளை உபயோகப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே, சரியா? யோசித்துப் பார்.

சரசுவதி பூசை - விமரிசையாக நடைபெற்றது என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே! அது நாரதர் சர்வீஸ் அல்லவே! அசோசியேடட் அல்லது இராய்ட்டர் சர்வீஸ் - தந்தி முறை - அவன் தந்தது. தசரதன் வீட்டிலே இருந்ததில்லையே! இராகவன் ரேடியோ கேட்டதில்லை. சிபி, சினிமா பார்த்ததில்லை! தருமராசன், தந்திக் கம்பம் பார்த்ததில்லை! இவைகளெல்லாம் மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது அனுபவிக்கிறோம்.

அனுபவிக்கும்போது கூட, அரிய பொருள்களைத் தந்த அறிவாளர்களை மறந்து விடுகிறோம், அவர்கள சரஸ்வதி பூச ஆயுத பூச செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவிலே இராகவனைப் பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்கரவர்த்தி கதையும் கேட்டும், பார்த்தும் ரசிக்கிறோம். இது முறைதானா?

பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந் சரசுவதி பூச ஆயுத பூச
நமக்குப் பலன் தரவில்லையே, அந்தப் பூசைகள் செய்தறியாதவர், நாம். ஆச்சரியப்படும் படியான அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதார புருடர்கள் காலத்திலேகூட இல்லாத அற்புதங்களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும். பிறகு வெட்கமாக இருக்கும். அதையும் தாண்டினால் விவேகம் பிறக்கும்.

யோசித்துப் பார் - அடுத்த் ஆண்டுக்குள்ளாவது!

நன்றி - 'திராவிட நாடு', 26.10.1947

கலைஞரின் கவிதை


எங்கள் உயிரே!

உணர்வே!
இனமானக் கோவே!

எழுச்சியின் வடிவே!
எண்ணங்கள் மலரும்

எழிலார் சோலையே!
எஃகுக் கம்பிகலாம்

இனிய தம்பிகளின் இதயத் துடிப்பே!
எழுபத்தைந்து பிறக்கிறது

உனக்கு - ஆனால்
அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?

அண்ணனே!
அழகுதமிழ்ப் பேச்சில்
அருவிகளை வென்றவன் நீ!
ஆங்கிலச் சொல்மழையோ -- உன்
ஆற்றலுக்கு ஆலவட்டம்!
எழுத்துக் கற்கண்டுகளை மலையெனக் குவித்தாய்!
எறும்பென மாறி நாங்கள்
அவற்றைச் சுவைத்தோம்!
எழுபத்தைந்து பிறக்கிறது உனக்கு - ஆனால்
அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?

அண்ணனே!

காந்தம் உன் விழியில்!
சாந்தம் உன் மொழியில்!
வீரம் உன் செயலில்!
விவேகம் உன் முறையில்!
பாசம் உன் உடன்பிறப்பு!
பரிவு அதன் மறுபதிப்பு!
இதயமோ எதையும் தாங்கும்!
புதையலாய்த் தமிழர்க்குக் கிடைத்த திருவே!
எழுபத்து அய்ந்து பிறக்கிறது உனக்கு -- ஆனால்
அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?

அண்ணனே!

நீ வருவதற்கு முன்பே
வரலாறு இருந்தது தமிழர்க்கு! ஆனால்
நீ வந்ததற்குப் பின்தான்
வகையாகத் தமிழன் வரலாற்றை உணர்ந்தான்!
இலக்கியம் இருந்தது தமிழருக்கு!
இருப்பினும் நீ வந்த பின்தான்
இயக்கினாய் அதனை
இப்புவி அறிந்திட!
தனிப்பண்பாடு கொண்ட இனம்தான் தமிழினம்!
தமிழினமே அதனை அறியாதிருந்த நேரம்;
தலைவா! நீ உதித்ததால்தான்
தமிழன் தமிழனானான்!
எழுபத்து அய்ந்து பிறக்கிறது உனக்கு -- ஆனால்
அறுபத்து வயதில் முடிந்ததன் கணக்கு?

அண்ணனே!

தந்தை பெரியாரின் தளபதி நீ!
விந்தை மனிதர்களால்
விதவிதமாய் விளைந்திட்ட கேடுகளை,
மொந்தை விஷமென்று மொழிந்தவன் நீ!
அறிஞன் நீ!
அறிவாசான் நீ!
வறிஞன் செல்வன் என்று
வரையறுக்கும் வர்க்கபேதம்
வளர்த்தல் தீதென்று சமதர்ம
வழிநின்று உரைத்தவன் நீ!
எழுபத்தைந்து பிறக்கிறது உனக்கு - ஆனால்
அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?
எழும் இக்கேள்விக்கு விடை மட்டும் கிடைக்கவில்லை!
எம்முள்ளத்துயர் இந்நாளிலும் அடங்கவில்லை -
எனினும் நீ அகலாமல் இருக்கின்றாய்
எனும் நினைவில் உன் நிழலாக அசைகின்றோம்!


Wednesday, October 01, 2008

பெரியாரின் நூல்கள் மற்றும் உரைகள் நாட்டுடமையானால் .............

படைப்பாளிகளின் படைப்புரிமையைக் காக்க, சென்ற மாதத்தில் சென்னையில் கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. எழுத்தாளர்கள் மற்றும் ஓவியர்களின் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ள `சித்திர எழுத்து' என்கிற அமைப்பு சென்ற ஆகஸ்ட் 9 அன்று இக்கூட்டத்தை நடத்தியுள்ளது. எழுத்தாளர்கள் சி. மோகன், ராஜகோபால், ரவி சுப்பிரமணியன், கி.அ. சச்சிதானந்தம், ந. முத்துசாமி, தட்சிணாமூர்த்தி, சா. கந்தசாமி முதலியவர்களும், ஓவியர்கள் டிராட்ஸ்கி மருது, விஸ்வம் ஆகியோரும் அதில் பங்கு பெற்றுள்ளனர். நேரில் கலந்துகொள்ள இயலாவிட்டாலும் தனது ஆதரவை கோணங்கி தெரிவித்துள்ளார். பிரபஞ்சன் கட்டுரை ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
சமீபத்தில் மறைந்த ஓவியர் ஆதிமூலம் அவர்களின் ஓவியமெனப் போலி ஒன்றை சென்னை கண்காட்சிக் கூடமொன்று ஓவியச் சந்தையில் விற்க முயன்றதைக் கண்டித்து இக்கூட்டம் நடைபெற்றது.
நான் உள்ளூரில் இல்லாததால் இதில் கலந்துகொள்ள இயலவில்லை. இருந்திருந்தால் நிச்சயம் பங்குபெற்றிருப்பேன். எனக்கும் இதையொத்த ஒரு அனுபவம் சென்ற மாதத்தில் நிகழ்ந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது நூற்களை வெளியிட்டு வந்த ஒரு பதிப்பகம் தொடர்ந்து எனக்குத் தெரியாமல் அவற்றை மீண்டும் அச்சிட்டு விற்றுவருவதாக எனக்குப் புகார்கள் வந்த வண்ணமிருந்தன. சென்ற மாதத்தில் ஒருநாள் எனது நண்பர்கள் சிலர் ஒரு அச்சகத்திலிருந்து எனது மூன்று நூற்களையும், ஷோபா சக்தியின் ஒரு நூலையும் தற்போது அச்சாகிக் கொண்டுள்ளது எனக் கொண்டு வந்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன். பழைய தேதியில். ஆனால் கூர்ந்து கவனித்தால் சில வித்தியாசங்களுடன் அந்நூற்கள் அச்சிடப்பட்டிருந்தன.
தொடர்ந்து நம் நூற்களை வெளியிட்டுக் கொண்டுள்ள ஒரு பதிப்பகம் அவ்வாறு செய்திருந்தால்கூட நாம் அதைப் புரிந்துகொள்ள இயலும். பேசி அது குறித்து விளக்கம் கேட்டுக் கொள்ளலாம். ஆனால் எந்தத் தொடர்பும் இல்லாமல் போன ஒரு பதிப்பகம், ஆசிரியர்க்கு `காப்பி ரைட்' உரிமையுள்ள ஒரு நூலைப் பழைய தேதியிட்டு அச்சிடுவது, அவருக்குத் தெரியாமல் அதை விற்பது என்பதை எப்படி எடுத்துக் கொள்வது. இது அந்த ஆசிரியரின் உழைப்பைச் சுரண்டுகிற ஒரு விவகாரம் மட்டுமல்ல, அவரது சுயமரியாதையையே கேள்விக்குள்ளாக்கும் மூலதனத் திமிரையும் உள்ளடக்கியுள்ளது. இதை எப்படிச் சகித்துக் கொள்வது.
தமிழ் நூற்பதிப்பு வேறெப்போதையும்விட விரிவடைந்துள்ள நிலை எழுத்துலகைச் சேர்ந்த நம் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி. புத்தகக் கண்காட்சிக்கு லட்சக்கணக்கில் மக்கள் வருவதும், கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்பில் புத்தகங்கள் விற்பனையாவதும் நம் எல்லோருக்கும் உற்சாகம் அளிக்கக்கூடிய நிகழ்வுகள். ஆனால் இதில் எந்த அளவிற்கு எழுத்தாளர்களுக்கு உரிய பயன்கள் சென்றடைகின்றன என்பது நம் சிந்தனைக்குரிய ஒன்று.
எல்லாப் பதிப்பகங்களும் மோசம் செய்கிறார்கள் என நான் சொல்ல வரவில்லை. பல பதிப்பகங்கள் மிக்க நேர்மையுடன் நடந்துகொள்கின்றன. உரிய `ராயல்டி' கொடுக்கப்படுகிறது. ஆனால் நான் சற்று முன் குறிப்பிட்டவை போன்ற ஒரு சில பதிப்பகங்கள் இப்படி மோசமாக நடந்துகொள்கின்றன. ஏதோ ஒரு சிறிய பதிப்பகம் இப்படிச் செய்துவிட்டது என்பதுகூட இல்லை. வெளிநாட்டுப் பதிப்பகங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு தமிழில் நூல் வெளியிடும் ஒரு நிறுவனம் இப்படி எழுத்தாளனின் வயிற்றில் அடிப்பதையும், அவன் சுயமரியாதைக்குச் சவால் விடுவதையும் என்னவென்பது? அவன் எழுதுகிற பேனாவுக்கு `ரீஃபில்' வாங்குவதற்கும் `ஏ4' பேப்பருக்குச் செலவு செய்வதற்குமான காசையாவது கொடுக்கவேண்டும். அனுமதி பெற்று நூல்களை மறுபதிப்புச் செய்யவேண்டும் என்கிற உணர்வு எப்படி அற்றுப் போய்விடுகிறது?
தமிழ் எழுத்தாளர்கள் இதுகுறித்துச் சிந்திக்க வேண்டும். ஒன்றுகூடிப் பேசவேண்டும். இதுபோன்ற மோசடி செய்யும் பதிப்பகங்களுக்குக் குறைந்த பட்சம் தமது நூற்களை வெளியிடக் கொடுக்கக்கூடாது என்றாவது முடிவு செய்யவேண்டும்.
இப்படி ஆசிரியருக்குத் தெரியாமல் நூற்களை அச்சிட்டு விற்பது நான்கு வகைகளில் அவனைப் பாதிக்கிறது.
(1) முதற் பதிப்பு விற்றுத் தீர்ந்து இரண்டாம் பதிப்பு வெளிவருவதில் அவன் அடையும் மகிழ்ச்சி அவனிடமிருந்து பறித்தெடுக்கப்படுகிறது.
(2) எழுத்தாளனுக்குச் சேர வேண்டிய உழைப்பூதியம் அவனுக்கு மறுக்கப்படுகிறது.
(3) அந்த நூலை அவன் வேறு பதிப்பகத்தில் வெளியிட ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தால் அதனால் அவனது நாணயம் கெடுகிறது. புதிய பதிப்பாளருக்கும் இழப்பு ஏற்படுகிறது. (உண்மையில் மேற்குறிப்பிட்ட எனது மூன்று நூற்களில் இரண்டை மறுவெளியீடு செய்ய நான் `எதிர்வு' பதிப்பகத்திற்கு உரிமை அளித்து நூற்கள் அச்சாகிக் கொண்டுள்ளன).
(4) இந்த மாதிரியான மோசடி அம்பலப்பட்டுப்போகும்போது அதை ஈடுகட்ட வேண்டி, மோசடியாளர் அந்த எழுத்தாளர் குறித்து அவதூறுகளைப் பரப்ப நேரிடுகிறது. ``என்னை அவர் மோசம் செய்து விட்டார். அவரால் எனக்கு ஏகப்பட்ட நஷ்டம்'' - என்கிற ரீதியில். இதையும் அந்த எழுத்தாளன் எதிர்கொள்ள வேண்டிய கொடுமை. நஷ்டம் என்றால் நீ ஏன் இப்படித் திருட்டுத் தனமாய் அந்த நூலை அச்சிட வேண்டும்?
மீண்டும் எழுத்தாள நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து நாம் கூடிப் பேச வேண்டும். பிற நாடுகளில் உள்ளதுபோல எழுத்து வடிவில் ஒப்பந்தம் செய்து கொண்ட பின்னரே நூலை வெளியிட உரிமை அளிப்பது என்கிற நடைமுறையை ஏற்படுத்த வேண்டும்.
நூலை அச்சிடும் அச்சகங்களுக்கும், `பபாசி' போன்ற அமைப்புகளுக்கும் கூட இதில் பொறுப்பு உண்டு. பதிப்பாளர்களுக்கு மட்டுமே அவர்கள் கடமைப்பட்டவர்கள் அல்லர். எழுத்தாளர்களுக்கும் அவர்கள் கடமைப்பட்டவர்களே. பழைய தேதியில் ஒருவர் நூலை அச்சிட முனைந்தால் அச்சகத்தார் அதை மறுக்க வேண்டும். பதிப்பாளர்களின் அமைப்பு, `பபாசி' போன்றவைகட்கு இப்படியான புகார் வந்தால், அதை முறைப்படி விசாரித்து நியாயம் வழங்க வேண்டும். மோசடி நிரூபிக்கப்படும் பட்சத்தில் உரிய இழப்பீடு பெற்றுத் தருவதோடு, குறிப்பிட்ட ஆண்டுகள் புத்தகக் கண்காட்சியில் கடை அமைக்க அனுமதி மறுப்பது முதலான தண்டனைகளையும் அளிக்க வேண்டும். நூல் விற்பனை செய்வோரும் கூட இந்த மோசடிகளை அறியும் பட்சத்தில் குறிப்பிட்ட எழுத்தாளருக்குத் தெரிவிக்க வேண்டும்.
நான் முன்பே சொன்னதுபோல எல்லாப் பதிப்பாளர்களும் இப்படிச் செய்வதில்லை. மோசடி செய்யும் சில பதிப்பகங்களை அடையாளம் கண்டு பாதிக்கப்பட்ட எழுத்தாளர்கள் நீதிபெற வழிசெய்ய வேண்டும். பெரும்பாலான எழுத்தாளர்கள், பிரபஞ்சன் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் உட்பட இப்படி பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த அநீதிக்கு ஒரு முடிவு காண எழுத்தாளர்கள் இயக்கமாக வேண்டும். அறிவுசார் சொத்துரிமை பற்றிப் பேசுகிற ஒரு காலகட்டம் இது. எழுதுபவர்களின் அறிவு மற்றும் உடலுழைப்புகள் இத்தகைய மோசடியாளர்களால் சுரண்டப்படுவதை அனுமதிக்கலாகாது. றீ

நன்றி

தீராநதி செப் 08



Tamil 10 top sites [www.tamil10 .com ]