வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, October 18, 2008

விடியல் ஏற்படட்டும் ஈழ தமிழருக்கு!

ஈழ தமிழர் படுகொலையை கண்டித்து மனிதசங்கிலி வரும் 21.10.2008 தேதி நடைபெறும் என தமிழக முதல்வர் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். இந்த முடிவு மிகவும் வரவேற்க படவேண்டிய ஒன்று.

ஆனால் முன்னால் முதல்வர் அம்மையார் ஜெ . ஜெயலலிதா அனைத்துக்கட்சி கூட்டத்தை ஒரு கபட நாடகம் என்று கூறிவிட்டு மனிதசங்கிளியால் ஒன்றும் ஈழத்தமிழர் படுகொலையை நிறுத்த முடியாது என்று கூறியுள்ளார்.

இதே மனிதச்சங்கிலி போராட்டம் தான் அமெரிக்காவில் ஒரு அரசையே பதவி இழக்க செய்தது. வியட்னாம் போரின்போது வியட்நாம் குடியரசுக்கு (தென் வியட்நாம்) அன்றைய அமெரிக்க ஜனாதிபதி Lyndon Baines Johnson பதினராயிரம் ஆக இருந்த அமெரிக்க ராணுவத்தை 550,000 அதிகப்படுத்தினார். இதனை அந்த நாட்டு மக்கள் எதிர்த்தனர் ( ஏனென்றால் மொத்தமாக 1.4 மில்லியன் இராணுவத்தினர் இப்போரின் போது கொல்லப்பட்டனர். இதில் 6 விழுக்காட்டினர் அமெரிக்கராவார். இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 முதல் 5.1 மில்லியன் ஆவார்.). அதனால் இறப்பது நம் அமெரிக்க மக்களும்தான் என்று ஜனாதிபதி ஜோன்சனிடம் எதிர்ப்பை தெருவித்து வியட்நாமுக்கு அமெரிக்க ராணுவத்தை அனுப்பாதே என்று சுமார் இரநூறு கிலோமீடர் தூரத்திற்கு மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர் அனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் அவர் அனுப்பினார். அனால் பின் நாளில் அந்த போராட்டமே நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தி அவரை பதவி இழக்க செய்தது. எனவே மனிதசங்கிலி போராட்டம் என்பது அம்மையார் ஜெ. ஜெயலலிதா போன்றவர்களுக்கு சாதரண விசயமாக இருக்கலாம். நம்மை பொறுத்தவரை அது ஈழத்தில் ஒரு தீர்வை ஏற்படுத்தும் ( எப்படி அன்று அமெரிக்காவில் எற்படித்தியதோ அதனைபோல்) என்ற நம்பிக்கையில் அதனை ஆதரிப்போமாக.....

வெல்லட்டும் மனிதசங்கிலி போராட்டம்..

விடியல் ஏற்படட்டும் ஈழ தமிழருக்கு !



No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]