வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, April 01, 2009

சுயமரியாதை என்பதே நம் பெரும்சொத்து!

சென்னை அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் நேற்று (31.3.09) மாலை ஒரு "திருவிழா!" கொள்கை விழா - புத்தம் புதிய தகவல்களை வரலாற்றுக்கு வாரி வழங்கிய காப்பிய விழா!
"முரசொலி அறக்கட்டளை - 2008" ஆம் ஆண்டுக்கான கலைஞர் விருது, முரசொலி மாறன் சிறப்பு விருது, ஒரு லட்ச ரூபாய் பொற்கிழி வழங்கும் விழாவும் வெகுநேர்த் தியாக நடைபெற்றது.

மாலை 4 மணிமுதலே அரங்கத்திற்குள் மக்கள் அமர்ந்த வண்ணமேயிருந்தனர்.
விழா தொடங்கப் படும்போது கூட்டம் அலைமோதியது. அரங்கத்தின் வெளியிலும் மக்கள் கூட்டம்.
கண் பார்வையற்றவர்கள் - ஆனால் அகத்தில் ஒளி நிறைந்த சோதரிகள் பங்கேற்ற இன்னிசை விழா தேன் மாரியாகப் பொழிந்து கொண்டிருந் தது. ஆட்டோ கிராப் திரைப்படப் புகழ் கோம கனின் ராகப்பிரியா குழு வினர், கலைஞர் ஆட்சி யின் சாதனைகள், கொள் கைகள் அடங்கிய பாடல் களைப் பாடி மக்கள் மன் றத்தைக் கிறங்க வைத் தனர்.

சரியாக மாலை 6 மணிக்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் விழா மேடைக்கு வருகை தந் தார்.
முரசொலி அறக்கட் டளையின் தலைவரும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரையாற்றினார். முரசொலி அறக்கட் டளை கடந்த காலத்தில் அளித்த விருதுகள் விவ ரங்களைத் தொகுத்துத் தந்தார்.
தந்தை செல்வாபடத் திறப்பு
ஈழத் தந்தை செல்வா அவர்களின் 112 ஆம் ஆண்டு பிறந்த நாள் என்பதால் முதலாவதாக அவரின் உருவப் படத் தினை முதலமைச்சர் கலைஞர் திறந்து வைத் தார்.
1972 இல் தந்தை செல்வா அவர்கள் தந்தை பெரியார் அவர்களையும் தம்மையும் சந்தித்த விவ ரங்களைப் பசுமையாக நினைவு கூர்ந்தார் முத லமைச்சர்.
ஈழ தமிழர் தம் சோக வரலாற்றினையும் எடுத் துக்கூறி அங்கே அவதி யுறும் நம்மின மக்களுக் காக திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகத் தொடர்ந்து பாடுபட்டு வரும் போர்க்குரல் கொடுத்து வருகிற பெற் றியையும் குறிப்பிட்டுக் கூறினார்.
ஒரு இயக்கம் திரா விடர் இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம் இந்த இரட்டைக் குழல் துப் பாக்கிகள்தான் ஈழத் தமி ழர்களுக்காக அன்றும், இன்றும் விழித்துக் கொண்டிருக்கிறது - பாடு பட்டுக் கொண்டிருக் கிறது என்பதை ஞாபகத் தில் வைத்துக் கொள் ளுங்கள் என்று பசுமரத் தாணிபோல பதிய வைத்தார் .

மக்களை திசை திருப்ப ஈழத் தமிழர்ப் பிரச்சினையைப் பயன் படுத்திக் கொள்ளும் போக்கினைச் சுட்டிக் காட்டிய மானமிகு கலை ஞர் அவர்கள் தமிழர்கள் ஏமாந்துவிடக்கூடாது என்றும் எச்சரித்தார்.
வரலாறு தெரியாதவர் கள் ஈழத் தமிழர்களுக் காக நாம் போராடிய போது, பொது வாழ்வுக் களத்திலே இல்லாதவர் கள் எல்லாம் இன்று எகிறிக் குதிப்பதையும் நாசுக்காகவும் கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத் துவர் இராமதாசு எல் லோரையும் எடுத்தேன் - கவிழ்த்தேன் என்ற போக் கிலே பேசுகிறாரே - கடந்த காலத்தில் அவ ரின் நிலைப்பாடு என்ன?
பா.ம.க.வின் அதி காரப்பூர்வமான கட்சி ஏடாகவிருந்த தினப் புரட்சி (29.6.1989) என்ன எழுதியது?
தமிழகத்தில் மத்திய போலீஸ் மற்றும் புல னாய்வுத் துறையினர் அதி களவில் குவிக்கப்பட்டு இருப்பதால் விடுதலைப் புலி தலைவர்களான கிட்டு, யோகி ஆகியோர் கருணாநிதியின் பாரா ளுமன்ற செயலாளர் எல். கணேசன் வீட்டில் தங்கி யிருப்பதாகக் கூறப்படு கிறது என்று செய்தி வெளியிடவில்லையா?
இதைவிட காட்டிக் கொடுக்கும் எட்டப்பத் தனம் வேறு எதுவாகத் தானிருக்க முடியும்?

இந்த எடுத்துக் காட்டை முதல்வர் கலை ஞர் அவர்கள் விழாவில் கூறவில்லையென்றாலும், இன்றைக்கு இவர்கள் தான் ஈழத் தமிழர்களுக் காகப் பாடுபடுவதாகக் கூறி, மற்றவர்களை மட் டந்தட்டும் போக்கில் பேட்டிகளைக் கொடுக்கி றார்களே - அதற்காகத் தான் இந்த எடுத்துக் காட்டு.
நேற்றைய விழாவில் ஈழத் தந்தை செல்வா அவர்களின் மகன் சந்திர காசன் அவர்களும் கலந்து கொண்டு ஈழத் தமிழர்க ளுக்காக தி.மு.க.வும், அதன் தலைவர் கலைஞர் அவர் களும் தொடர்ந்து ஆதர வுக்கரம் கொடுத்துக் கொண்டிருப்பதையும், இந்த இக்கட்டான கால கட்டத்தில் அந்த உதவி தொடரவேண்டும் என் றும் உருக்கமுடன் கேட் டுக்கொண்டார்.

விருதுகள் பொற்கிழிகள் அளிப்பு
திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலை வர் கி. வீரமணி அவர் களின் சாதனைக் குறிப் பினை தளபதி மு.க. ஸ்டா லின் படித்தார். சிறப் பான தகவல்களை அது உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது.
முதலமைச்சர் கலை ஞர் அவர்கள் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்குப் பொன் னாடை போர்த்தி, கலை ஞர் விருதினை வழங்கி ஒரு லட்ச ரூபாய்க்கான பொற்கிழியையும் காசோலையாக அளித் தார்.
அதுபோலவே - பழம்பெரும் எழுத்தாள ரான சோலை அவர் களுக்கும், புகைப்பட நிபுணர் யோகா அவர் களுக்கும் விருதும், ஒரு லட்ச ரூபாய்க்கான பொற்கிழியும் கலைஞர் அவர்களால் அளிக்கப் பட்டன.

முரசொலி மாறன் சிறப்பு விருது திரைப்பட நடிகர் தியாகு அவர் களுக்கு முதல்வர் கலை ஞர் அவர்களால் அளிக் கப்பட்டது. ரூபாய் ஒரு லட்சத்துக்கான பொற் கிழியும் வழங்கப்பட் டது. இவர்களின் சாத னைக் குறிப்புகளையும் தளபதி மு.க. ஸ்டாலின் படித்தார்.
தமிழர்களில் ஆற்ற லாளர்களை- உயர்த் தப்படவேண்டியவர் களை - உயர்த்தும் இன மானப் பெருவிழா என்று இதனைக் கூற வேண்டும்.
தமிழர் தலைவர் ஏற்புரை
விருது அளிக்கப்பட் டவர்களின் சார்பில் திராவிடர் கழகத் தலை வர் - தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் செறி வாக உரையாற்றினார்.
எடுத்த எடுப்பிலேயே, முரசொலி ஏடு என்பது கலைஞர் அவர்களின் பிள்ளைகளில் மூத்த பிள்ளை என்பதைக் குறிப் பிட்டபோது அரங்கமே எழுந்து கரவொலி எழுப் பியது.

கலைஞர் அவர் களால் கையேடாகத் தொடங்கப்பட்ட முர சொலியின் வயது 67; தந்தை பெரியார் அவர் களின் விடுதலைக்கு வயது 75 என்பதை எடுத் துக்காட்டி, முரசொலி அறக்கட்டளை தமக்கு (விடுதலை ஆசிரியருக்கு) விருது வழங்கும் நாள் - தன் வாழ்நாளில் என் றென்றைக்கும் மறக்க முடியாத நாள் என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.
சாதனைக் குறிப்பு களில் கூறப்பட்ட புகழ் மொழிகள் - அடக்க வுணர்ச்சி காரணமாக தாம் குனிந்து கொண்டி ருந்ததாகத் தமிழர் தலை வர் குறிப்பிட்டார் (பழைய காலத்து மணப் பெண்போல).
சாதனைக் குறிப்பு களைப் படித்த - முர சொலி அறக்கட்டளை யின் தலைவர் மு.க. ஸ்டா லின் அவர்களைப்பற்றி முக்கியமான ஒன்றை, குறிப்பிடத் தவறவில்லை திராவிடர் கழகத் தலை வர்.

மிசா கைதியாக சென்னை மத்திய சிறைச் சாலையில் அடைக்கப் பட்டபோது நடை பெற்ற ஒரு கொடிய நிகழ்வை நினைவுபடுத் தினார்.
ஒன்பதாம் எண் பிளாக் - இரவு ஒன்பது மணி - ரத்தம் சொட்டச் சொட்ட என்மீது ஒரு உருவம் வந்து விழுந்தது. (வஞ்சம் தீர்க்கும் கொடிய மிருகங்களால் தாக்கப் பட்ட நிலையில்) அந்த உருவம் வேறு யாருமல்ல - இங்கே சாதனைக் குறிப்புகளைப் படித் தாரே - எதிர்காலத்தில் மிகவும் நம்பிக்கையோடு எதிர்ப்பார்க்கப்படுபவராக விருக்கிறாரே - அந்தத் தளபதிதான் ரத்தம் சொட் டச் சொட்ட என்மீது தூக்கி எறியப்பட்டவர்தான்.
இன்றைக்கு மாண்பு மிகுவாக அவர் இருக்க லாம். இந்த மாண்புமிகு களுக்குப் பின்னால் தியாக வரலாறு இருக் கிறது என்பதைச் சுட்டிக் காட்டினார் தமிழர் தலை வர்.

இதுவரை ஏட்டில் வெளிவராத புத்தம் புதிய தகவல் ஒன்றை வெளிப்படுத்தி பல்லாயி ரக்கணக்கான பார்வை யாளர்கள் மத்தியிலும், ஏன் பத்திரிகையாளர் கள் மத்தியிலும் ஒரு ஆச் சரியக் குறியை ஏற்படுத் தினார் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.

தி.மு.க.வையும், அ.தி. மு.க.வையும் மீண்டும் ஒன்றிணைக்கும் ஏற்பாடு பற்றிய தகவல் அது.
எழுத்தாளர் சோலை இதோ இங்கே வீற்றிருக் கிறார். சரியான சாட்சியத் தோடுதான் கூறுகிறேன் என்ற பீடிகையோடு ஆரம்பித்தார்.
ஒரு நாள் எழுத்தாளர் சோலை விடுதலை அலு வலகத்துக்கு வந்தார். வந்தவர் சாதாரணமாக வரவில்லை; ஒரு முக்கிய தகவலைச் சுமந்து வந்த தூதுவராக வந்தார்.
முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தங்களை அழைத்து வரச் சொன்னார் என்பதுதான் அந்த அரிய தகவல். அதன்படி ராமாவரம் தோட்டத்துக்கு ஆசிரி யர் வீரமணி சென்றார். தம்மோடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டு பேச்சை ஆரம்பித்தார்.
தி.மு.க.வோடு அ.தி. மு.க. இணையவேண்டும் என்று விரும்புகிறேன் என்ற கருத்தை வெளி யிட்டார். அந்தத் தக வலை கலைஞர் அவர் களிடத்தில் தொலைப் பேசிமூலம் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி அவர்கள் தெரிவித்தார்.
கலைஞர் அவர்கள் அப்பொழுது வைத்த நிபந்தனைகள் கட்சியின் பெயர் - அண்ணாவால் உண்டாக்கப்பட்ட அந்த தி.மு.க. என்றேயிருக்க வேண்டும். கொடியில் அண்ணாவின் உருவம் இருப்பதால் இன்றைய அ.தி.மு.க. கொடி அப் படியே இருக்கவேண் டும். முதலமைச்சராக எம்.ஜி.ஆர். அவர்களே தொடரட்டும்.
திராவிட இயக்கப் பின்னணி அய்யா, அண்ணா ஆகியோர் களின் சிந்தனைகள், இலட்சியங்கள் என்ற பார்வையில், அதன் தன்மை கட்டிக் காக்கப்பட வேண்டும் என்ற அவசி யத்தில் நான் கட்சியின் தலைவராகயிருப்பேன்; திராவிட இயக்க சமூக நீதிக் கொள்கையின்படி வருமான வரம்பு ஆணை ரத்து செய்யப்படவேண் டும் என்று கலைஞர் அவர்கள் கூறினார்.

அப்பொழுது ஒரு கருத்தையும் கலைஞர் அவர்கள் கூறினார்கள். இதற்கு முன்பும் இத்த கைய முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன; பலர் முயன்றார்கள். கடைசி யில் அவர்கள் ஏமாற்றப் பட்டனர். நீங்கள் எந்தப் பட்டியலில் இருக்கிறீர் கள் என்று எனக்குத் தெரியாது என்று கலை ஞர் அவர்கள் கூறியதை யும் கூறினார் தமிழர் தலைவர்.

இந்தத் தகவல்களை ஒவ்வொன்றாக அவர் எடுத்துச் சொல்லிக் கொண்டு வந்தபோது, அடுத்து என்ன சொல் லப் போகிறார்? அடுத்து என்ன சொல்லப் போகி றார்? என்ற ஆவல் ஏதோ மர்ம நாவலைப் படிப்பதுபோல பார்வை யாளர்கள் ஆர்வத்தின் பிடியிலே சிக்கிக் கொண் டனர் (இதன் தொடர்ச் சியாக நிறைவுரையில் மேலும் பல தகவல் களைக் கூறினார் கலை ஞர்).
விருது பெற்ற தமிழர் தலைவர் அவர்கள் திரு வாரூரில் கலைஞர் அவர் கள் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து 1945 (மே 1) இல் நடத்தப்பட்ட தென் மண்டலத் திரா விட மாணவர் மாநாட் டுக்கு தாம் அழைக்கப் பட்டதையும், புகை வண்டி நிலையத்திலி ருந்து மேள தாளங்களு டன் அழைத்துச் செல் லப்பட்டதையும் (மற்ற தலைவர்களோடு) மாநாட்டில் நாகூர் அனிபா அவர்களோடு தாமும் பாட்டுப் பாடிய தையும் போர்க்களம் நோக்கி என்ற தலைப் பில் மாநாட்டில் பேசி தையும் தமிழர் தலைவர் - குடிஅரசு இதழிலிருந்து (12.5.1945) மலரும் நினை வுகளாக எடுத்துக்காட்டி னார்.
85 அகவை நிறைந்த கலைஞர் அவர்களுக்கும் 75 அகவை நிறைந்து விட்ட மானமிகு வீர மணி அவர்களுக்கும் உள்ள உறவு வைர விழா வையும் (60 ஆண்டு) கடந்தது என்பது குறிப் பிடத்தக்கதாகும்.
மற்றொரு முக்கிய அறிவிப்பினை ஏற்புரை யில் வெளியிட்டார்; தனக்கு அளிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு அளிக்கப்படும்.

இதழியல் துறை ஒன்று அப்பல்கலைக் கழகத்தில் தொடங்கப் பட்டு அதில் மாணவர் கள் தயாரிக்கப்படுவார் கள். இந்தத் துறையில் தமிழர்கள் பின்தங்கிய நிலையில்தான் உள்ளனர். இந்த நிதி இந்தத் துறைக் குப் பயன்படுத்தப்படும். இந்த முயற்சிக்கான புர வலராக இதழியில் துறை யில் மூத்தவரான மான மிகு கலைஞர் அவர்களே இருப்பார்கள் என்று தமிழர் தலைவர் அறி வித்தபோது பலத்த கர வொலிமூலம் வரவேற்பு இருந்தது.
இந்தத் துறையில் ஆனந்தவிகடன்களும், இந்துவும்தான் ஆதிக் கம் செலுத்தி வருகின் றன. இந்த நிலையில் தமி ழர் தலைவர் அறிவித்தது காலத்தாற் மேற்கொள் ளப்பட்ட அரிய முயற்சி என்று தமிழின எழுத்தா ளர்கள், இதழியலாளர் களின் கருத்தாகவே இருக்கிறது.

இனமானப் பேராசிரியர் அன்பழகனார்
மாணவர் பருவந் தொட்டு வீரமணி அவர் கள் இந்த இயக்கத்தில் வீறுநடை போட்டு வரு பவர். பெரியார் கொள் கைகளைப் பரப்புவதில் உறுதியாகவும் இருக்கக் கூடியவர். அந்தக் கொள் கைகளைப் பரப்புவது தான் தனது ஒரே கடமை என்பதிலே உறுதியாக இருக்கக் கூடியவர்.
திராவிட முன்னேற் றக் கழகம் அரசியலில் இருந்து தன் பணிகளைச் செய்துகொண்டிருந்தாலும் அதற்கு அடிப்படை யான சமூகப் பணி ஆற் றுவதற்குத் திராவிடர் கழகத்தின் பணி அவசிய மாகிறது என்றும், சமூக அரசியல் அடிப்படைத் தளத்தை அருமையாகச் சுட்டிக்காட்டினார்.
மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர்
தம் உடல்நலம் குன்றி யிருப்பதால், சக்கர நாற் காலியில் வந்தாலும் எனக்கு மாமருந்து என் பது நீங்கள்தான்; மாலை நேரப் பொதுக்கூட்டங் கள்தான் - மக்களைச் சந்திப்பதுதான் என்று சொன்னாரே முதல்வர் கலைஞர் - அருமை, அருமை, இது அருமை யிலும் அருமையாகும்.
தமது தலைவர் தந்தை பெரியார் அவர்களிடம் கற்றுக்கொண்ட ஈரோட்டு மூலிகையின் இரகசியம் இது!

தமிழர் தலைவரைப் பற்றிக் கூறும்போது திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தர் என்று அறிஞர் அண்ணா அவர்களால் வீரமணி சிறுவனாகியிருந்தபோதே அடையாளம் காட்டப் பட்டவர் என்பதை நினைவுபடுத்தினார்.

ஈரோட்டுக் குருகுலத் தில் மாணவர் சுற்றுப் பயணத்தில் வீரமணி யோடு கலந்துகொண்ட தையெல்லாம் மகிழ்ச்சி யோடு நினைவு கூர்ந்தார்.
வீரமணி என்றால் இரட்டைக் குழல் துப் பாக்கியில் ஒரு குழல் அது. இன்னொரு குழல் தி.மு.க.; வீரமணியின் ஆரம்ப கால ஆரோக்கியமான பகுத் தறிவும் இன் றைக்கு அவர் அந்தப் பகுத்தறிவைப் பரப்புகிற எடுத்துக் கொள்கிற முயற்சிகளும், பெரியார் அவர்கள் விட்டுச் சென்றிருக்கிற அந்தப் பெரும் சொத்தும் - வீடு வாசல் அல்ல, இயந்திரங் கள் அல்ல, பத்திரிகைகள் அல்ல, சுயமரியாதை என் கிற அந்தப் பெரும் சொத்தை இன்றைக்குக் காப்பாற்றி வருகிற ஒரு பெருமகனாக வீரமணி விளங்குகிறார். எனவே, அவருக்கு விருது அளிப் பதில் நாங்கள் பெருமை அடைகிறோம். முர சொலி அறக்கட்டளை பெருமை அடைகிறது என்று நறுக் குத் தெறித்த சொல் மணி களால் அடிப்படைச் சித் தாந்தத்தின் சித்திரத்தை வரைந்து காட்டினார் வாழும் திராவிட இயக்க மூத்த தலைவரான கலை ஞர் அவர்கள்.
பழம்பெரும் எழுத் தாளர் சோலை, ஒளிப் பட நிபுணர் யோகா, திரைப்பட நடிகர் தியாகு ஆகியோர் குறித்தும் சிறப்பான பாராட்டுகள் விழாவில் வழங்கப்பட் டன.

ஏதோ ஒரு பாராட்டு விழா - விருது வழங்கும் விழா, பொற்கிழி அளிக் கும் விழா என்ற அளவில் இல்லாமல், ஒரு இன மான திருவிழாவாகவும் பகுத்தறிவுச் சங்கநாதம் ஒலிக்கும் அரங்கமாக வும், திராவிட இயக்கச் சித்தாந்தத்தின் இலட் சியச் சுடரை ஏந்தும் எழுச்சி விழாவாகவும் தமிழர்களை அடையா ளம் கண்டு தம் தோளில் தூக்கிக் காட்டி தமிழர் தம் ஆற்றலை அறிவிப் பது - பாராட்டுவது - ஊக்குவிப்பது தமிழர்தம் கடமை என்பதை தமி ழர்களுக்கு உணர்த்தும் உன்னத விழாவாக இவ் விழா அமைந்திருந்தது என்றே கூறவேண்டும்.

தமிழா இன உணர்வு கொள்! தமிழா தமிழனாக இரு!! என்ற இரு வரி வெளிச்சத்தைத் தமிழர்களுக்கு தந்தை பெரி யார் வழியில், விழியில் தந்தவர் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள்.
அவருக்குப் பாராட்டு என்பது இந்தக் கொள்கைகளுக்குப் பாராட்டு என்றுதானே பொருள்!
நன்றி : விடுதலை


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]