வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, August 05, 2011

அதென்ன வரலட்சுமி நோன்பு? வேறன்ன பார்ப்பனத் தந்திரம்....


வருகிற 12 ஆம் தேதி ஆகஸ்ட் வரலட்சுமி நோன்பாம்.....ஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. பெரும்பாலும் 3வது ஆடி வெள்ளியன்றோ அல்லது 4வது ஆடி வெள்ளி அன்றோவரும். சுமங்கலிகள் அனுஷ் டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதைச் செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப் பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர்....

சரி ஒரு விவாதத்துக்கு இந்த நோன்பு பெண்கள் இருந்தாலும், ஏன் 25 வயது உள்ள கணவனை இழந்து ஒரு பெண் இருந்தால் அவள் இந்த விரதம் இருக்ககூடாதா? அயோக்கிய பசங்க....

இப்படி பாகுபாடு உள்ள கடவுளின் பேரால் கயவாளித்தனம் பண்ணும் பார்ப்பனர்களுக்கு சாதகமான நிகழ்ச்சியை பெண்கள் குறிப்பாக நல்ல பணம் மித மிஞ்சி உள்ள மேல்தட்டு பெண்கள் பெரிய ஒரு நிகழ்ச்சி போல பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி என்ன இருக்கிறது? சரி கடவுளை வைத்து வயிறு வளர்க்கும் பாப்பாத்திகள் அவா ஆத்து அம்புடயான் இன்னும் தொந்தி வளர்க்க உதவுமே என்று இந்த வரலட்சுமி நோன்பை வரவேற்ப்பார்கள்....இதனை பார்ப்பனர் அல்லாத நம் வீட்டு பெண்களும் வரவேற்ப்பது எந்தவிதத்தில் நியாம்?

அஷ்டலட்சுமிகள் என்று பல-ராலும் சொல்லப்படும் ஒரு கடவுளுக்கே எட்டு உருவங்கள் உள்ளன. தன-லட்சுமி, தான்யலட்சுமி வீரலட்சுமி, ராஜ-லட்சுமி, சந்தானலட்சுமி, ஆதி-லட்சுமி, வித்யாலட்சுமி, விஜயலட்சுமி என்பவைதான். வரலட்சுமி என்று ஒரு பெயர் இல்லை இவர்களில் யார் வர-லட்சுமி? சிவன் பார்வதிக்கு வரலட்சுமி விரதம் பற்றிச் சொன்னானாம். பார்வதி பூஜிக்கப் போகிறாளா? ஒரு பெண் தன் கனவில் மகாலட்சுமி வந்து விரதம் இருக்கச் சொன்னதாக எல்லோரிடமும் சொல்லி இந்த விரதம் வந்ததாம். அதற்குச் சொல்லப்பட்ட பாடல் மகாலட்சுமியைப் பற்றியதே. முதல் கூட்டம் பூஜை செய்த முறைக்கும் தற்போதுள்ளதற்கும் மாறுதல் உள்ளது. அது அவரவர் வசதியும் இஷ்டமும் போலும். ஓர் ஆண்டு விரதம் இருந்தால் தான் எல்லா செல்வங்களும் கிடைத்துவிடுமே. பின் ஏன் ஆண்டுக்கு ஆண்டு செய்ய வேண்-டும்? சொல்லப்பட்டுள்ள தோத்தி-ரங்கள் எல்லாம் வடமொழியே. கலசத் தேங்காயை அடுத்த வாரமே பயன்-படுத்தச் சொல்கிறாள். ஒரு ஆண்டு வைத்திரு என்று சொல்லவில்லை, இதில் ஆண்களும் விரதம் இருந்-தார்கள் என்ற ஒரு கதை. கலசத்தை அரிசிப் பானையில் வைக்க வேண்டும் என்றால் குடத்தை எப்படி அரிசிப் பானையில் வைக்க முடியும்? அன்ன-லட்சுமிக்குப் பஞ்சம் கிடையாதாம். யார் இவள்? இந்த விரதம் இருப்பதால் பல நலன்கள் கிடைக்கும் என்ற ஆசையைத் தூண்டி, பெண்கள் மாறாமல் இருக்கவே இந்தக் கதை. இந்த சரித்திரத்தைக் கேட்டவர்களும், பிறருக்குப் புரியும்படிச் சொன்னவர்-களும் பல நலன்கள் பெறுவராம். ஒரு கடவுளச்சிக்கு எட்டுப் பெயர்களுடன் எட்டு உருவங்கள் சொல்லி இன்னும் பல பெயர்கள் கூறப்படுகின்றன. மக்கள் என்றும் அறிவு பெறக்கூடாது என்பதே பார்ப்பனத் தந்திரம். சிந்திப்பீர்! (விடுதலை ,20.03.2010)
சரி வரலட்சுமி நோன்பு என்று என்ன புளுகுகிறார்கள், கடவுளின் பெயரை சொல்லி குண்டி வளர்க்கும் இந்த பார்ப்பனர்கள் என்று தாத்தாச்சரியார் வேறு ஒரு மாதிரியாக சொல்லுகிறார்.

கன்னிப் பெண்கள் தங்களது எதிர்காலக் கணவன் நன்றாக இருக்கவேண்டும். நல்ல கணவனாக வாய்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வரலட்சுமி விரதம் இருக்கிறார்கள். அதாவது அன்று முழுவதும் வயிற்றுக்கு சாப்பாடு போடாமல், எதிர்கால வாழ்க்கைக்கு நல்ல சாப்பாடு கிடைக்க வேண்டும் என வேண்டுகிறார்கள்.

கல்யாணம் ஆன குடும்பப் பெண்கள்... தீர்க்கசுமங்கலியாக தன் தாலி குங்குமம் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக வரலட்சுமி விரதம் இருந்து தன்னைப் போல குடும்பப் பெண்களுக்கு ரவிக்கை துணிகளையும் லஞ்சமாக கொடுக்கிறார்கள். இது வரலட்சுமி விரதம்....

'நா°தி ஸ்தீரீனாம்பரத் யக்ஞயஹாநவ வ்ரதம்நாப உபோஷனம்'

அதனுடைய அர்த்தம் என்னவென்றால் விரதம் இருக்கலாம் ஆனால்... சூத்ரச்சிகளாகவே கருதப்படும் அனைத்துப் பெண்களும், சூத்ரர்களும் விரதம் இருக்கக்கூடாது... என தனது ஆணையை நிறுவுகிறார் மநு.

மேற்சொன்ன அந்த செய்தி தாத்தாச்சரியாரின் இந்து மதம் எங்கே போகிறது என்கிற நூலில் மிகவும் தெளிவாக விளக்கம் கொடுக்கிறார்.....வரலட்சுமி நோன்பு என்ற ஏமாத்து வேலை ஆரியர் கொள்கை என்றும் அதில் திராவிடர் இன பெண்களுக்கு கொஞ்சம் கூட தொடர்பு இல்லை என்றும் சொல்லுகிறார்....

இப்படி அவா மனு அவர்களை விரதம் இருக்க சொல்லுகிறது....உழைக்காமல் ஏமாத்தி திங்க வழி இருக்கா என்று திமிர் தனமான வேலைகளை செய்ய சொல்லுகிறது....ஏமாத்தி குண்டி வளர்க்கும் ஆரிய கலாச்சாரம் நம் மக்களுக்கு எதற்கு? அவா அவர்கள் வேதப்படி நடக்கிறாள் நாமும் நம் பெண்களும் அப்படி நடந்துகொள்கிரோமா?

குறிப்பு: இந்த பார்ப்பனர்கள் கல்வியாளராக இருக்கும் பள்ளிகள் அனைத்தும் அன்று விடுமுறை..யார் இவர்களுக்கு இந்த அதிகாரம் கொடுத்தது?.....அனால் அம்பேத்கர் பிறந்த நாள் அன்று அரசே விடுமுறை விட்டாலும் இவர்கள் பள்ளியில் வந்து உட்கார்ந்து கொண்டு பாடம் நடுத்துவார்கள். எப்படி இருக்கு யோகிதை?


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]