வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, May 14, 2011

இவாள் எல்லாம் யார்? யார்?


திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களும், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் எதற்கெடுத்தாலும் ஆரியர் - _ திராவிடர் என்று பேசுறாளே என்று துக்ளக் சோ முதல் தினமணி வைத்தியநாதய்யர் கல்கி ராஜேந்திரன்கள் வரை குதி குதி என்று குதிக்கிறாளே! இங்கு சங்கராச்சாரியாரைச் சுத்தி இருப்பவாள் எல்லாம் யாராம்?

சாத்தானும் தீத்தானுமா இருக்கா? எல்லாம் அவாள்தானே? பூணூல் கோத்திரத்தைச் சேர்ந்தவாதானே? இந்த யோக்கியதையில் வீரமணியையும், கலைஞரையும் எதற்கெடுத்தாலும் சீண்டுவது ஏன்? லாலாலஜபதி தான் சொன்னார்.

சென்னை மாகாண பிராமணர்கள் தாங்களே வகுப்புத் துவேஷிகளாக இருந்து கொண்டு மற்றவர்களைப் பார்த்து வகுப்புத்துவேஷிகள், வகுப்புத் துவேஷிகள் என்று கூறுவார்கள் என்றாரே அவர் வாய்க்குச் சர்க்கரையைத்தான் போடவேண்டும்.

---------- விடுதலை,ஞாயிறு மலர் (14-05-2011)


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]