வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, June 04, 2010

வால்மீகி திருடனா? திருடன் இல்லையா?

இராமாயணத்தை எழுதி-ய-தாகக் கூறப்படும் வால்மீகி திருடனா? திருடன் இல்-லையா? என்ற சர்ச்சை எழுந்-துள்ளது. இது பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதி-மன்றம்-வரை சிரிப்பாய் சிரித்திருக்-கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் தனியார் அலை வரிசை ஒன்று தயாரித்து ஒளிபரப்பி வரும் பிடாய் என்ற ஒரு தொடரில் வால்மீகி பற்றி இரு கதாபாத்திரங்கள் பேசு-கின்றன.

அதில் வால்மீகி திருட-னாக இருந்து மகரிஷியானார் என்ற உரையாடல் இடம் பெற்றுள்ளது. வால்மீகி ஜாதியைச் சேர்ந்த, ராவிகாஸ் என்பவர் இது எங்களின் மத உணர்வைப் புண்படுத்து-கிறது என்று கூறி வழக்கு ஒன்றைப் பதிவு செய்தார் (2009).
இந்த வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ராஜீவ் பல்லா வழங்கியுள்ள தீர்ப்பு வருமாறு:

வால்மீகி வாழ்க்கை வரலாற்றை கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டுவரை தோன்றிய, வேத இலக்கியங்களின் அடிப்படையில் பாட்டியாலா-வில் உள்ள பஞ்சாப் பல்-கலைக் கழகத்தின் மகரிஷி வால்மீகி இருக்கை ஆராய்ந்து, அவர் திருட-னாக இருக்க முடியாது என்றே முடிவுக்கு வந்துள்-ளது.

எலக்ட்ரானிக் ஊடகங்-கள் மத சம்பந்தப்பட்ட கருத்து-களை பரப்ப முற்-படும்போது கட்டுப்பாட்-டோடும், பொறுப்-புணர்-வோ-டும், கவனத்தோடும் ஒளி-பரப்ப வேண்டும். அக்-கருத்து பல்லாயிரக்கணக்-கான மக்களை பாதிக்கும் என்ற உணர்வும் வேண்டும் என்று நீதிபதி இதோபதேசம் செய்திருக்கிறார்.

ரொம்ப சரி, புராணங்-களின் பேரகராதி என்று ஒப்புக் கொள்ளப்படும். அபி-தான சிந்தாமணி வால்மீகி-பற்றி என்ன கூறுகிறது?

இவர் பிறப்பால் வேதி-யர். ஒழுக்கம் குன்றி, வேட-ருடன் கூடிக் களவு செய்து வாழ்ந்து வருகையில், ஒரு நாள் ஒரு முனிவரை வழி மறித்துப் பறிக்க முற்படுகை-யில் அவர் இவரிடம் கருணை கூர்ந்து நீர் செய்யும் பாபத் தொழில், உமது வருவாயால் சீவிக்கும் உமது இல்லோர்க்கும் உண்டோ எனக் கேட்டு வருகவென ஏவ, அவ்வாறு சென்று கேட்-கையில், அவர்-கள் மறுக்கக் கேட்டுக் கூறி மயங்கி நிற்கை-யில், முனி-வர் கருணை கூர்ந்து எதிரில் இருந்த மாமரத்தின் பெயரைக் கூறச் சொல்லிப் போயினர். கள்வர் அவ்வாறு இருந்து நெடுநாள் செபிக்க, மேல் ஒரு புற்று மூடி-யது. சில நாள் கழித்து அப்-புற்றில் இருந்து வெளிப்படு-கை-யில், வேடன் ஒருவன் கிரவுஞ்ச பட்சிகளைக் கொல்ல வர, அதனைக் கண்டு சினந்து அவனைச் சபிக்கத் தொடங்க, அச்சாபமே தம் வாயில் சுலோக ரூபமாக வெளிப்-பட்டு இனிய கானமாயிற்று. இவரே இராமாயணம் இயற்றிய வால்மீகி என்று புராணக் களஞ்சியம், அக-ராதியான அபிதான சிந்தா-மணி கூறு-கிறது. வால்மீகி வழிப்பறித் திருடன்தான் என்று சொல்லி-யிருக்கிறது. நீதிபதி புதிய புராணம் எழுதுவானேன்?

பக்தர்கள் திருடர்களாக இருக்க மாட்டார்களா? திருமங்கை ஆழ்வார் திரு-மங்கை ஆழ்வார் என்று கேள்விப்பட்டதுண்டா? அவன் என்ன செய்தானாம்! சைவ சித்தாந்தப் பதிப்பகம் வெளி-யிட்ட தஞ்சைவாணன் கோவை (பக்கம் 7, வரிகள் 26_-30) என்ன கூறுகிறது?

நாகப்பட்டிணத்தில் புத்தர் தெய்வம் பசும் பொன்னால் செய்திருந்தது. அதனை ஆலி நாடர் (திரு-மங்கை ஆழ்வார்) களவில் கொண்டு வந்து திருவரங்-கத்து மதில் செய்-வித்தார். அவர் அச்சமயத்தில் கடவுள் தன்மையராய் விளங்கினார். அவரைக் குற்றம் கூறுநர் ஒருவரும் இலர் என்று கூறப்பட்டுள்ளதே!

திருட்டுப் பயல் ஒரு ஆழ்வாராம். திருடிய நேரத்-தில் கடவுள் தன்மையுடைய-வராக இருந்தானாம்! அத-னால் குற்றம் கூறக்கூடாதாம்! எப்படி?
-விடுதலை (04.06.2010)   மயிலாடன்


2 comments:

Unknown said...

சுயமரியாதை சீடர்களில் பெரியத் திருடன் யார்?

நம்பி said...

//ரம்மி said...

சுயமரியாதை சீடர்களில் பெரியத் திருடன் யார்?
6:26 AM //

கண்டிப்பாக இதற்கு பதில் பார்ப்பனத் திருடர்களிடம் இருக்கும்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]