வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, June 05, 2010

ஆர்.எஸ்.எஸ் ஜாதியை ஒழிக்க பூணூல் அறுப்பு மாநாடு நடத்த முன்வருமா?

ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஆர்.எஸ்.எஸுக்கு ஒரு பார்வையும், பா.ஜ.வுக்கு வேறு ஒரு பார்வையும் இருப்பதாகத் தெரிகிறது.


இதில் பா.ஜ.க.வின் நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸின் மூத்த தலைவர்களில் ஒருவராகக் கூறப்படும் பாவுராவ் பட்டேல் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸின் பொதுச்செயலாளராக இருக்கக் கூடிய பையாஜி ஜோஷி கூறுகையில், ஆர்.எஸ்.எஸ். ஜாதியற்ற சமூகத்தை உருவாக்கப் பாடுபட்டு வருகிறது, இந்த வகையில் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் வழியை ஆர்.எஸ்.எஸ். பின்பற்றுகிறது. இந்த நிலையில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மக்கள் மத்தியில் ஜாதி உணர்வையும், பிளவையும் ஏற்படுத்தும் என்று உரக்கப் பேசுகிறார்.

மக்களவையில் பா.ஜ.க.வின் துணைத் தலைவராக உள்ள கோபிநாத் முண்டே, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரி புள்ளி விவரம் மிகவும் அவசியம் தேவை என்று அழுத்தமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மிகவும் சரியாகக் குறிப்-பிட்டுள்ளதுபோல, இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்-கள் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு கூடாது என்று கறாராகவே கூறி வருகின்றனர் என்பதை கவனிக்கத் தவறக்கூடாது.

ஆர்.எஸ்.எஸின் பொதுச்செயலாளர் ஜோஷி சொல்வது போல ஆர்.எஸ்.எஸின் கொள்கை ஜாதி ஒழிப்பா? என்று வினா தொடுக்க விரும்பு-கிறோம்.

இவர்களின் குருநாதர் என்று கூறப்படும் கோல்வாக்கர் என்ன கூறுகிறார்?

சிந்தனைக் கொத்துகள் (Bunch of Thoughts) என்ற நூலில் (இந்நூல் ஆர்.எஸ்.எஸின் வேதப் புத்தகமும் கூட!) என்ன கூறப்பட்டுள்ளது?

ஜாதி அமைப்பு முறையை சிலர் நீண்ட காலமாகவே எதிர்த்துக் கொண்டே வருகின்றனர். ஜாதி அமைப்பு முறை இருந்த பழங்காலத்தில்-தான் நாம் மிக உச்சியில் வாழ்ந்தோம். ஆனால் சிலர் கூறுகிறார்கள்_ இந்த ஜாதி அமைப்பு முறையானது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது என்று. இப்படி கூறுவதற்கு எந்தவிதமான ஆதாரமும் கிடையாது என்று ஆர்.எஸ்.எஸின் குருநாதர் அடித்துக் கூறும்போது, ஆர்.எஸ்.எஸ். ஜாதியற்ற சமூகத்துக்காக பாடுபட்டு வருவதாகவும், அந்த வகையில் டாக்டர் அம்பேத்கர் வழியைப் பின்பற்று-வதாகவும் இந்த நிலையில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு சமுதாயத்தில் ஜாதி உணர்வையும், பிளவையும் தூண்டுவதாகவும் கூறுவது யாரை ஏமாற்ற? இரட்டை வேடம் என்பது ஆர்.எஸ்.-எஸின் இரத்தத்தோடு பிறந்த பிறவிக் குணமாகும். அவர்களைத் திருத்துவது என்பது நாய் வாலை நிமிர்த்துவது போன்றதுதான்.

ஜாதி ஒழிப்புக்காக இதுவரை ஆர்.எஸ்.எஸ். ஒரு துரும்பைத் தூக்கிப் போட்டதுண்டா? பிரச்-சாரம் செய்ததுண்டா? போராடியதுண்டா? அப்படி ஏதாவது செயல்பாடு இருந்தால் வெளியே வந்து நெஞ்சை நிமிர்த்திச் சொல்-லட்டுமே.

இப்பொழுதுகூட காலம் தாழ்ந்துவிடவில்லை. பூணூல் அறுப்பு மாநாடு என்று ஒன்றைக் கூட்டி ஜாதிச் சின்னமான பூணூலை அந்த மாநாட்டில் அறுத்தெறிவோம் என்று கூறி முன்வரட்டுமே!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்காகத் திராவிடர் கழகம் போராடி வருகிறதே_ -தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியுள்ள நிலையில் அதனை எதிர்த்துப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்றுள்ளனரே_ இதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். குறைந்தபட்சம் கருத்தாவது தெரிவிக்க முன்வருமா?

சங்கர மடத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் சங்கராச்சாரியாராக அமரும் காலம் வரவேண்டும் என்று காகாகலேல்கர் கூறினாரே. அதனை ஏற்றுக் கொள்கிறதா ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார் வகையறாக்கள்?

ஜாதி, வருணாசிரமம் என்கிற வேர்களை இழந்துவிட்டால் ஹிந்து மதம் என்ற ஒன்று மிஞ்சுமா? ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவவாதிகள் இவற்றிற்குப் பதில் கூறிவிட்டு, ஜாதிவாரிக் கணக்-கெடுப்பை எதிர்த்து வீதிக்கு வரட்டும் பார்க்கலாம்.

ஆட்டோ உரிமம் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 17 ஆயிரம் பேருக்கு ஆட்டோ உரிமம் வழங்கலாம் என போக்குவரத்து ஆணையர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளது.

சென்னையில் உள்ள ஒரு மெட்ரிகுலேசன் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்த மாணவனை பெயில் ஆக்கியதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் காவல் நிலைய தலைமை காவலர் பேருந்தில் கொண்டு சென்ற துப்பாக்கிக் குண்டுகள், கைவிலங்கு ஆகியவை காணாமல் போனதால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

---- விடுதலை தலையங்கம் (05.06.2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]