வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label பெரியார்-கோவில்கள்-மூடநம்பிக்கைகள். Show all posts
Showing posts with label பெரியார்-கோவில்கள்-மூடநம்பிக்கைகள். Show all posts

Monday, April 05, 2010

குருவாயூர் கோயில்: பிற மதத்தவர் நுழையக்கூடாது என்ற தடை தகர்ந்தது!

பொதுவாக இந்து மதக் கோயில்களில் பிற மதத்தவர் செல்லக்கூடாது என்ற தடை உண்டு; ஏன், விளம்பரப் பலகைகூட இந்து மதக் கோயில்களில் வைக்கப்பட்டுள்ளது.


குருவாயூர் கோயிலில் இந்த பேதம் நீண்ட காலமாக உண்டு. இப்பொழுது வழக்கு ஒன்றில் கேரள உயர்நீதிமன்றம், ஜேசுதாஸ் குருவாயூர் கோயிலுக்குள் செல்லத் தடையில்லை என்று மண்டையில் அடித்துக் கூறியுள்ளது.

குருவாயூர் கோயிலுக்குள் செல்ல புகழ்பெற்ற பாடகர் ஜேசுதாசுக்கு அனுமதி அளிக்கும்படி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலுக்குள் இந்து மதத்-தினரை தவிர வேறு மதத்தினர் யாரும் செல்லக்கூடாது. இந்தக் கோயிலில் சில ஆண்டுகளுக்குமுன்பு நடைபெற்ற கச்சேரியில் பாடுவதற்காக புகழ்பெற்ற பாடகர் ஜேசுதாஸ் சென்றார்.

அப்போது, அவர் பிற மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்தப் பிரச்-சினையில் தலையிட்ட அமைச்சர் சுதாகரன், ஜேசுதாசை கோயி-லுக்குள் அனுமதிக்கவேண்டும் என்று கூறினார்.

வேறு மதத்தவர்கள் கோயி-லுக்குள் சென்றதால், கோயில் தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி தோஷம் கழித்த சம்பவங்களும் இதற்குமுன் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில், குருவாயூர் கோயிலுக்குள் ஜேசுதாசை அனுமதிக்கும்படி உத்தரவிடக் கோரி, கோழிக்கோட்டைச் சேர்ந்த லலிதா பாஸ்கரன் என்பவர் கேரள உயர்நீதி-மன்றத்-தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், கோபிநாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், குருவாயூர் கோயிலுக்குச் செல்ல ஜேசுதாசுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. அதற்காகப் பொதுநலன் வழக்கு தொடரவேண்டிய அவசியமும் இல்லை என்று மனுவை தள்ளுபடி செய்தனர்.

----- நன்றி விடுதலை (04.04.2010)

Tamil 10 top sites [www.tamil10 .com ]