வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label பிரபாகரன். Show all posts
Showing posts with label பிரபாகரன். Show all posts

Friday, February 12, 2010

நமது கர்ச்சனைகள் கடலைத் தாண்டி எதிரொலிக்கட்டும்!

இலங்கைத் தீவிலே ஈழத் தமிழர்களின் மறு வாழ்வு சீரமைக்கப்படும் என்ற நம்பிக்கையின் முனை-கூடத் தெரியவில்லை. அதுபற்றிய ஒரு சிந்தனைப் போக்கு அதிபர் ராஜபக்சேவுக்கு இருப்பதற்கான அறிகுறியும் தென்படவில்லை.


நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, அடுத்து நாடாளுமன்றத் தேர்தலையும் சந்தித்து, ஏக-போகமாகக் கொடியேற்றி சர்வாதிகாரத் தாண்டவம் போடுவதில்தான் அவர் குறியாயிருப்பதாகத் தெரிகிறது.

அதற்குத் தடையாக பொன்சேகா இருப்பார்; அதிபர் தேர்தலில் கணிசமாக வாக்குகளையும் பெற்றுள்ள அவரை வெளியில் நடமாடவிட்டுத் தேர்தலைச் சந்திப்பது புத்திசாலித்தனமல்ல என்று கணக்கு போட்டு, தமது ஆட்சியின்போது இராணுவத் தளபதி என்ற உயர்ந்த பீடத்தில் இருந்தவரை நாயை அடித்து இழுத்துச் செல்வது போல கைது செய்து இழுத்துச் சென்றுள்ளனர்.

ராஜபக்சேயின் நாகரிகமும், அணுகுமுறையும் எந்தத் தரத்தில் உள்ளன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டுதான். உலகம் முழுவதிலும் இதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அய்.நா. செயலாளரும் ராஜபக்சேயுடன் இது குறித்து பேசியுள்ளார்; தமது அதிருப்தியையும் தெரி-வித்துள்ளார். விரைவில் அய்.நா.வின் அரசியல் பிரிவு தலைவர் வெய்ன் போஸ்கா இலங்கை சென்று நிலைமைகளை நேரில் ஆய்-வார் என்றும் அய்.நா. பொதுச்செயலாளர் பான் கீ முன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் எச்சரித்துள்ளது. இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரசாத் தெரிவித்துள்ள கருத்தும் கவனிக்கத் தக்கதாகும். சரத் பொன்-சேகா மீதான குற்றச்சாற்றுகள் குறித்து சட்டப்-பூர்வமான விசாரணை நடைபெற வேண்டும் என்ற கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

அதிபர் ராஜபக்சே இவற்றுக்கொல்லாம் நாகரிகமான முறையில் செவி கொடுத்து, ஜனநாயக முறையில், சட்ட ரீதியான ஒழுங்குடன் நடந்து கொள்வார் என்று எதிர்பார்ப்பது கடினமே.

தமிழர்களை அழிப்பதில் ராஜபக்சேவும், பொன்-சேகாவும் போட்டிபோட்டுக் கொண்டு செயல்-பட்டவர்கள் என்பதை அறிந்தவர்கள்தான் நாம். என்றாலும் பொன்சேகா மாறுபாடான கருத்து-களைக் கூறத் தொடங்கிவிட்டார் என்று தெரிந்த-வுடன் கண்மூடித்தனமான தாக்குதலை தொடுக்க தொடங்கி விட்டார் ராஜபக்சே.

ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும், மீள் குடியமர்த்தம் நடைபெறும் என்று சொன்னதெல்லாம் உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவத்தான் என்பது தெரிகிறது.

அதிபர் தேர்தலில் கூட தமிழர்களின் பகுதி-களில் அதிக வாக்குகள் பதிவாகிவிடக்கூடாது என்பதற்காக வாக்குப் பதிவு அன்று குண்டு வெடிப்புகளை நடத்திய கொடூரன்தான் ராஜபக்சே.

மழைவிட்டும் தூவானம் நிற்கவில்லை என்பது போன்ற நிலைதான். நேற்று மாலை ஏடுகளில் வெளிவந்த ஒரு செய்தி நம் குருதியை உறையச் செய்கிறது.

சிங்கள ராணுவத் தாக்குதலில் உடல் ஊனமுற்ற யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒரு-வரும், மாணவி ஒருவரும் இடுபாலைப் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டனர் என்ற செய்தி எதைக் காட்டுகிறது?

ஊனமுற்ற நிலையில் நாம் படித்துதான் என்ன செய்யப்போகிறோம்? நம் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் என்ன? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காமல், அப்படியொரு முடிவை மேற்கொண்டனர் என்றே கருதவேண்டும்.

இரு மாணவர் தற்கொலை செய்து கொண்-டனர்; தற்கொலை செய்து கொள்ளாத தமிழர்-களும் கிட்டத்தட்ட இந்த எண்ணத்தில்தான் தத்தளித்துக் கொண்டுள்ளனர்.

30 கல் தொலைவில் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பத்தைத் துடைத்திட தமிழர்களே, தமிழர்களே! நாம் வீறுகொண்டு எழ வேண்டாமா?

தமிழ்நாட்டு மண்ணில் கொந்தளிக்கும் உணர்வை வெளிப்படுத்த தமிழர் தலைவர் அறிவித்துள்ள ஆர்ப்பாட்டம்தான் பிப்ரவரி 16 ஆம் தேதி மாலை சென்னையில் நடைபெற இருப்பதாகும்.

கழகப் பொறுப்பாளர்களே, முனைப்புக் காட்டுங்கள். நமது கர்ச்சனைகள் கடலைத் தாண்டி எதிரொலிக்கட்டும்!

ஆயத்தமாவீர்! ஆயத்தமாவீர்!!

விடுதலை தலையங்கம் (12.02.2010)

Tamil 10 top sites [www.tamil10 .com ]