வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label பாரதிதாசன்-பெரியார்-மூடநம்பிக்கை-கோயில்-கடவுள். Show all posts
Showing posts with label பாரதிதாசன்-பெரியார்-மூடநம்பிக்கை-கோயில்-கடவுள். Show all posts

Monday, August 08, 2011

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்....அப்படின்னா?


கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்

இஃது உலகநீதிச் செய்யுள்களில் ஒன்று. இதன் பொருள் வருமாறு:-

கோயில் - அரசியல்;
இல்ல - இல்லாத ஒழுங்குமுறையமையாத ஊரில்
ஊரிலே குடியிருக்க வேண்டாம் - குடியிருக்க கூடாது என்பது பொருள்

கோயில் என்பது அரசன்; அரண்மனை, அரசியல் என்று பொருள் தருவதை பழம் தமிழ் நூற்கள் நன்றாக விளக்கும்.

"மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்
அறத்துறை விளங்கிய அந்தணர் பள்ளியும்"

என்ற சிலப்பதிகார அடிகளை நோக்குக!

அரசியல் அமைந்த இடம் என்றால் என்ன?

அகது அமையாத இடம் என்றால் என்ன என்பதை ஆராய வேண்டும்.
பண்டைத் தமிழ்நாட்டில் துறவிகள் ஒழுங்குமுறை வகுத்தார்கள். அதைத்தான் மன்னன் தன் ஆட்சிமுறைக்கு அடிப்படையாக வைத்து ஆண்டு வந்தான்.

இவ்வாறு ஒழுங்கு முறை வகுக்கபடாத காலம் ஒன்றிருந்திருக்கும். அக்காலத்து வாழ்ந்த மக்கள் காட்டுமிராண்டிகளாக இருந்திருப்பர். அதைத்தான் அரசியல் அற்ற இடம் என்பது.

அத்தகைய இடத்தில் மக்களின் வாழ்வு நல்லபடி நடக்கவே முடியாது.
ஆதலால்தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்றருளிச் செய்யப்பட்டது.
                                                                        --- பாரதிதாசன் கட்டுரை, குயில், 18-10-1960

இப்படி ஒரு அர்த்தத்தில் சொன்ன உலகநீதி செய்யுளை நம்ம ஆட்கள் கடவுளை, மதத்தை பரப்ப பயன்டுத்தி கொண்டிருக்கிறார்கள்...ஏதும் அறியாத அப்பாவி மக்கள் கடவுள் என்று சொன்னாலே கண்ணை மூடிக்கொண்டு நம்புவதால் இப்படி எத்தனை புளுகுகள் புராணத்தில், வரலாற்றில் புதைத்து வைத்திருக்கிறார்களோ?

சிந்தியுங்கள் மக்களே!


Tamil 10 top sites [www.tamil10 .com ]