வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label சோ-ராமசாமி-சங்கராச்சாரி-ஜெயேந்திர சரஸ்வதி. Show all posts
Showing posts with label சோ-ராமசாமி-சங்கராச்சாரி-ஜெயேந்திர சரஸ்வதி. Show all posts

Monday, February 22, 2010

அக்கிரகாரத்து அம்மிக்குழவி ஆகாயத்தில் பறப்பது ஏன்?

கேள்வி: தமிழ்ச் சமு-தாயம் முன்னேற ஜாதி உணர்வை அகற்றவேண்டும் என்ற கருணாநிதியின் யோசனை குறித்து?


பதில்: நீதிபதி தினகரன் முதல் மத்திய அமைச்சர் ராஜா வரை குற்றம் சாற்றப்-பட்டவர்களின் ஜாதியை முன்-னிறுத்தி வாதம் புரிகிற-வருக்கு,

இப்படியும் பேச மனம் வருவது ஒரு விசித்திரம் தான். தான் என்ன பேசினா-லும் மக்கள் ஏற்பார்கள் என்ற நினைப்பு முதல்-வருக்கு முழுமையாக வந்து-விட்டது.

_(துக்ளக் 24.2.2010)

இப்படி எழுதுகிறவர் யார் தெரியுமா? ஆண்டு-தோறும் பூணூலைப் புதுப்-பித்துக்கொள்கிற சோ ராமசாமி தான்.

தாழ்த்தப்பட்ட சமூகத்-தைச் சேர்ந்த நீதிபதி தின-கரன் சென்னை உயர்நீதி-மன்ற நீதிபதியாக இருந்த நேரத்திலும், கருநாடக மாநிலத் தலைமை நீதிபதி-யாக இருந்த நேரத்திலும் அவர் மீது பாயாத குற்றச்-சாற்று, அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் போகிறார் என்றவுடன் அக்கிரகாரத்து அம்மிக்குழவி ஆகாயத்தில் பறப்பது ஏன் என்பதுதான் நமது கேள்வி.

சென்னை உயர்நீதிமன்-றத்தின் தலைமை நீதிபதி-யாக இருந்த ராமச்சந்திர அய்யர் வயதைத் திருத்தி பதவியை நீட்டிக்கொண்ட-போது, நேர்மையான முறையில் பார்ப்பனர்கள் எதிர்த்திருந்தால் அவர்-களுக்கு ஜாதிப் புத்தி இல்லை போலும் என்று நினைத்திருக்கலாம், கண்டு கொள்ளவில்லையே.

கொலைக்குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு 61 நாள் சிறையில் இருந்தவர் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதி, அவ-ரைப் பற்றி ஊரு உலகத்-துக்கே தெரியும்.

இருந்தும் கொலை வழக்கில் சங்கர மடத்துக்கு அநீதி நடந்துள்ளது என்று இந்தியா டுடேக்கு (9.2.2005) பேட்டி கொடுத்தாரே, திரு-வாளர் சோ_ இதற்குப் பெயர் ஜாதிப் புத்தி இல்-லாமல் வேறு என்ன புத்தியாம்?

வீரமணியிடம் சோவை நான்தான் அனுப்-பினேன். நான் தயாரித்த கேள்விகளைத் தான் சோ வீரமணியிடம் கேட்டார் என்று சின்னக்குத்தூசியிடம் ஜெயேந்திர சரஸ்வதி சொன்ன குட்டை எதிரொலி ஏட்டிலே (3.4.1983) சின்-னக்குத்தூசி போட்டு உடைத்து-விட்டார். மற்றவர்களுக்குக் கையா-ளாக செயல்படக் கூடியவர் சோ என்று அம்பலமான-தும், உயிர் நாடியில் தேள் கொட்டியது போல துடி-துடித்தார் சோ.


நியாயமாக சோ என்ன செய்திருக்க வேண்டும்?. சங்கராச்சாரி சொன்னது உண்மைக்கு மாறானது என்-றால் அவரிடம் சண்டைக்-குத் தானே போயிருக்க வேண்டும்?.


அவாளின் ஆதர்ஷப் பெரியவாளாயிற்றே! என்ன எழுதினார் சோ?.

இப்பொழுது நான் ஒரு தர்மசங்கடமான நிலையில் இருக்கிறேன். சுவாமிகள் சொன்னது சரியல்ல என்று நான் மறுத்தே ஆக வேண்டும். பட் அய் ஹேவ் ரெஸ்பெக்ட் ஃபார் தட் இன்ஸ்ட்டிட்யூஷன் என்றாரே பார்க்கலாம்.

மறுக்க வேண்டிய இடத்-தில் மறுக்காததோடு அந்த மடத்தினிடத்தில் மரியாதை வைத்துள்ளேன் என்றாரே! இதற்குப் பெயர் என்னவாம்?.

இந்த ஜாதிப் புத்தியும், இனவெறியும் கொண்ட-வர்தான் தாழ்த்தப்பட்ட மக்-களுக்காக வக்காலத்து வாங்-கும் கலைஞரைத் தூற்று-கிறார்.

-விடுதலை (22.02.10) மயிலாடன்

Tamil 10 top sites [www.tamil10 .com ]