வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label எம்.பி.பி.எஸ்-தேர்வு-பெரியார்-இடஒதிக்கீடு. Show all posts
Showing posts with label எம்.பி.பி.எஸ்-தேர்வு-பெரியார்-இடஒதிக்கீடு. Show all posts

Wednesday, August 10, 2011

தகுதி, திறமை என்று பல்லவி பாடும் பண்டாரங்களே... எது தகுதி? எது திறமை?

கேள்வி: எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப் படும் என்று இந்திய மருத் துவக் கவுன்சில் அறிவித் துள்ளதே?
பதில்: அறிவுத்திறன் அடிப்படையில் அய்.அய்.டி; கேட் (Cat) தேர்வுகள் போல் நடத்தி, ஆரோக்கிய மருத் துவ உலகை அமைப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது. சாதிய கட்சிகளின் குறுகிய லாப நோக்கத்தைக் கடந்து இது செயல்படுத்தப்பட வேண்டும். மனித உயிர்களை மலிவாகக் கருதக் கூடாது.

(கல்கி 14.8.2011 பக்கம் 82)

பார்ப்பனர்கள் வழக்க மாகப் பாடும் பல்லவியைத் தான் இப்பொழுதும் பாடுபடு கிறார்கள்.

+2 தேர்வில் பெற்ற மதிப் பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்தால் தகுதி செத்துப் போய்விடும். அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தினால் தகுதி உயிர் பிழைக்கும் என்று யார் சொன்னது?

இவர்களாகவே ஒரு முடிவை எடுப்பது. அதுதான் தகுதிக்கும் திறமைக்கும் அடையாளம் என்று அவர் கள் நமது காதுகளில் பூ சுற்றப் பார்க்கிறார்கள்.

நுழைவுத் தேர்வுக்காக ஆயிரக்கணக்கில் பணம் கட்டி அங்கு அவர்கள் கொடுக்கும் கேள்வி - பதில்களை மனதில் பதிவு செய்து - நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது தான் தகுதி - திறமை யென்றால் - இந்த வசதிக் கெல்லாம் கிராமத்துப் பையன் எங்கே போவது?

உச்சநீதிமன்றத்தில் டில்லி பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சேர்க்கைக் கான கட்.ஆஃப் மார்க் பிரச்சினையில் நீதிபதி ஆர். இரவிந்திரன் ஒரு வினா வைத் தொடுத்தாரே!

அம்பேத்கர் வெறும் 37 மதிப்பெண்தான் பெற்றிருந் தார். அதன் காரணமாக அவருக்குக் கல்லூரியில் இடம் மறுக்கப்பட்டு இருந் தால் இந்தியாவுக்கு ஓர் அரசியல் சாசனம் கிடைத் திருக்குமா என்று நாக்கைப் பிடுங்கக் கேட்டாரே மூத்த வழக்கறிஞர் பிபிராவ் (பார்ப் பனர்) தான் பதில் சொல்ல முடியாமல் திண்டாடினார் என்றால் கல்கியோ அவர் களின் வட்டாரத்துக்கு ஆலோசகராக இருக்கும் குருமூர்த்தி, சோ ராமசாமி போன்றவர்களாவது பதில் சொல்லுவார்களா?

இந்த ஆண்டு தமிழ் நாட்டில் மருத்துவக் கல்லூரி யில் சேர்க்கைக்கான கட் ஆஃப் மார்க் என்ன தெரி யுமா?

திறந்த போட்டி 196.25
பிற்படுத்தப்பட்டோர் - 196.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (முசுலிம்) 193.75
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 194.
தாழ்த்தப்பட்டோர் - 187
தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) 177.25
மலைவாழ் மக்கள் - 169.25

இப்படி மதிப்பெண் பெற் றவர்கள்தான் மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை கல்கி வகையறாக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதெல்லாம் தகுதி யில்லை - அகில இந்திய நுழைவுத் தேர்வுதான் தகுதி என்பதில் ஆரிய சூழ்ச்சி இருக்கிறது என்பது வெளிப்படையே!

மருத்துவரிடம் செல்லக் கூடிய நோயாளிகள், மருத் துவர் தங்கப் பதக்கம் பெற்றவரா என்று தெரிந்து கொண்டு செல்வதில்லை. மருத்துவர்களின் தகுதி திறமையை உண்மையில் எடை போடுபவர்கள் திரு வாளர் பொது மக்கள்தான்!

- மயிலாடன், விடுதலை,09-aug-2011


Tamil 10 top sites [www.tamil10 .com ]