Showing posts with label இடஒதிக்கீடு-மத்திய அரசு-கல்வி-வேலை வாய்ப்பு. Show all posts
Showing posts with label இடஒதிக்கீடு-மத்திய அரசு-கல்வி-வேலை வாய்ப்பு. Show all posts
Tuesday, November 23, 2010
துப்புரவுப் பணிகளில் உயர் ஜாதியினர் எண்ணிக்கை ஏதாவது உண்டா?
மாநிலங்களவை உறுப்பினர் திரு. டி.கே. ரெங்கராசன் மத்திய அரசின்
வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அடிப் படையில் ஒதுக்கப்படும் இடங்கள்பற்றி
எழுப்பிய வினா வுக்கு, மத்திய திட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்
களுக்கான அமைச்சர் வி. நாராயணசாமி அவர்கள் சில புள்ளி விவரங்களை
அளித்துள்ளார்.
முதல் நிலையில் மொத்த மத்திய அரசு ஊழியர்கள் 97 ஆயிரத்து 951 என்றும், இவர்களில் தாழ்த்தப்பட்டோர் 12 ஆயிரத்து 281, பழங்குடியினர் 4 ஆயிரத்து 754, இதர பிற்படுத்தப்பட்டோர் 5 ஆயிரத்து 331 என்றும் கூறினார்.
இரண்டாம் நிலையில் மொத்த ஊழியர்கள் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 223 என்றும், இவர்களில் தாழ்த் தப்பட்டோர் 20 ஆயிரத்து 884, பழங்குடியினர் 8004, இதரப் பிற்படுத்தப்பட்டோர் 5 ஆயிரத்து 562 என்று குறிப்பிட்டார்.
மூன்றாம் நிலையில் மொத்த ஊழியர்கள் 18 லட்சத்து 22 ஆயிரத்து 326 என்றும், இவர்களில் தாழ்த்தப்பட்டோர் 2 லட்சத்து 86 ஆயிரத்து 573, பழங்குடியினர் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 871, இதர பிற்படுத்தப்பட்டோர் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 327 என்றும் குறிப்பிட்டார்.
நான்காம் நிலையில் (துப்புரவு தொழிலாளர்கள் தவிர) மொத்த ஊழியர்கள் 7 லட்சத்து 6 ஆயிரத்து 170, இவர் களுள் தாழ்த்தப்பட்டோர் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 466, பழங்குடியினர் 48 ஆயிரத்து 828, இதர பிற்படுத்தப்பட் டோர் 35 ஆயிரத்து 468 என்ற விவரத்தைக் கொடுத்தார்.
துப்பரவு தொழிலாளர்கள் மொத்தம் 77 ஆயிரத்து 295. இவர்களுள் தாழ்த்தப்பட்டோர் 39 ஆயிரத்து 774, பழங் குடியினர் 4 ஆயிரத்து 621. இதர பிற்படுத்தப்பட்டோர் 2 ஆயிரத்து 548.
மொத்தத்தில் மத்திய அரசு ஊழியர்கள் 28 லட்சத்து 43 ஆயிரத்து 965 பேர்கள்.
இவர்களில் தாழ்த்தப்பட்டோர் 4 லட்சத்து 97 ஆயிரத்து 978, பழங்குடியினர் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 978. இதர பிற்படுத்தப்பட்டோர் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 236 என்று மத்திய அமைச்சர் வி. நாராயணசாமி அவர்கள் விலாவாரியாக புள்ளி விவரங்களை அளித்துள்ளார்.
மொத்தம் 28 லட்சத்தில், 9 லட்சம் போக மீதி 19 லட்ச இடங்களை அனுபவிப்போர் யார்?
இதில் பதவிகளின் தகுதி குறையக் குறைய (கீழ்மட்ட அளவில்) தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.
வேலை வாய்ப்பில் நிலவும் இந்த நிலைக்குக் காரணம்- இந்து சமூகத்தில் நீண்ட காலமாக வேர்ப்பிடித்து நிற்கும் ஜாதி வாரியான ஏணிப் படிக்கட்டு முறை என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.
துப்புரவுப் பணிகளில் உயர் ஜாதியினர் எண்ணிக்கை ஏதாவது உண்டா என்ற வினாவை உறுப்பினர்கள் யாராவது எழுப்பினால் பிரயோசனமாக இருக்கும். அந்த விவரம் தெரிந்தால்தான் இந்து சமூகத்தின் ஜாதீய அமைப்பு முறையின் கேடுகெட்ட நிலையின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும்.
இதில் ஒரு முக்கியமான, துல்லியமான புள்ளி விவரம் தேவைப்படுகிறது. இட ஒதுக்கீடு சதவிகித அடிப்படையில் இந்தப் புள்ளி விவரங்கள் இருக்கின்றனவா என்பதுதான் மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும்.
இதில் வெளிப்படையாக ஒரு புள்ளி விவரம் மிக வெளிச்சமாகவே தெரிகிறது.
தாழ்த்தப்பட்டோருக்கு 15 விழுக்காடு இடங்கள்; பழங் குடியினருக்கு 7.5 விழுக்காடு இடங்கள். பிற்படுத்தப்பட் டோருக்கு 27 விழுக்காடு இடங்கள் என்பது சட்டப்படியான நிலையாகும்.
ஆனால், 27 விழுக்காடு இட ஒதுக்கீடுக்கு உரிமையுள்ள பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்ற இரு பிரிவினர்களைவிட மிகவும் குறைவாக இருப்பதை எளிதாகவே அறிய முடிகிறது.
முதல் நிலைப் பணிகளில் (ஊடயளள ஐ) 5.4, இரண்டாம் நிலைப் பதவிகளில் 4.2, மூன்றாம் நிலைப் பதவிகளில் 6.4, நான்காம் நிலைப் பதவிகளில் 5.1 விழுக்காடு இடங் கள்தான் - 27 விழுக்காடுக்குரிய பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது எவ்வளவுப் பெரிய கொடுமை - அநீதி!
1993 ஆம் ஆண்டு முதல்தான் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருவதால், இந்த அளவுக் குக் குறைந்திருக்கிறது என்று சமாதானம் சொல்லக் கூடும். அப்படியானால், பிற்படுத்தப்பட்டோருக்குக் காலி யாக உள்ள 35 ஆயிரத்து 468 பதவிகளையும் விரைவாக நிரப்ப வேண்டியது அவசியம் அல்லவா! அதுபோலவே, தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினருக்கு முறையே காலியாக உள்ள 6202 மற்றும் 40015 காலி இடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பவேண்டாமா?
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாழ்த்தப்பட் டோர், பிற்படுத்தப்பட்ட உறுப்பினர்கள்தானே பெரும் பான்மை? இவர்கள் ஒருமித்து, கையிணைத்து நின்று குரல் கொடுத்தால் நாடாளுமன்ற விதானமே குலுங்காதா?
ஒன்றுக்கும் உதவாத பிரச்சினைகளுக்கெல்லாம் நாடாளுமன்றத்தையே முடக்கிக் கொண்டு இருக்கிறார் களே, நாட்டின் பெரும்பான்மை மக்களான தாழ்த்தப் பட்டோராலும், பிற்படுத்தப்பட்டோராலும் தேர்ந்தெடுக் கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் - இந்த மக்களுக்கான கல்வி, வேலை வாய்ப்புகளில் சட்ட ரீதியாக உள்ள இடங்களைப் பெற்றுத்தர வேண்டியது அடிப்படைக் கடமையல்லவா!
மற்றொரு முக்கிய புள்ளிவிவரம் அவசர அவசியமாகத் தேவை. இந்த நான்கு வகைப் பணி இடங்களிலும் துறை வாரியாகப் பணியாற்றும் பார்ப்பனர்களின் எண்ணிக்கை பற்றிய புள்ளி விவரம்தான் அது. சமூகநீதியில்ஆர்வம் உள்ள உறுப்பினர்கள் வினா எழுப்பி விவரங்களைப் பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
---------- நன்றி விடுதலை தலையங்கம் (23-11-2010)
முதல் நிலையில் மொத்த மத்திய அரசு ஊழியர்கள் 97 ஆயிரத்து 951 என்றும், இவர்களில் தாழ்த்தப்பட்டோர் 12 ஆயிரத்து 281, பழங்குடியினர் 4 ஆயிரத்து 754, இதர பிற்படுத்தப்பட்டோர் 5 ஆயிரத்து 331 என்றும் கூறினார்.
இரண்டாம் நிலையில் மொத்த ஊழியர்கள் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 223 என்றும், இவர்களில் தாழ்த் தப்பட்டோர் 20 ஆயிரத்து 884, பழங்குடியினர் 8004, இதரப் பிற்படுத்தப்பட்டோர் 5 ஆயிரத்து 562 என்று குறிப்பிட்டார்.
மூன்றாம் நிலையில் மொத்த ஊழியர்கள் 18 லட்சத்து 22 ஆயிரத்து 326 என்றும், இவர்களில் தாழ்த்தப்பட்டோர் 2 லட்சத்து 86 ஆயிரத்து 573, பழங்குடியினர் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 871, இதர பிற்படுத்தப்பட்டோர் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 327 என்றும் குறிப்பிட்டார்.
நான்காம் நிலையில் (துப்புரவு தொழிலாளர்கள் தவிர) மொத்த ஊழியர்கள் 7 லட்சத்து 6 ஆயிரத்து 170, இவர் களுள் தாழ்த்தப்பட்டோர் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 466, பழங்குடியினர் 48 ஆயிரத்து 828, இதர பிற்படுத்தப்பட் டோர் 35 ஆயிரத்து 468 என்ற விவரத்தைக் கொடுத்தார்.
துப்பரவு தொழிலாளர்கள் மொத்தம் 77 ஆயிரத்து 295. இவர்களுள் தாழ்த்தப்பட்டோர் 39 ஆயிரத்து 774, பழங் குடியினர் 4 ஆயிரத்து 621. இதர பிற்படுத்தப்பட்டோர் 2 ஆயிரத்து 548.
மொத்தத்தில் மத்திய அரசு ஊழியர்கள் 28 லட்சத்து 43 ஆயிரத்து 965 பேர்கள்.
இவர்களில் தாழ்த்தப்பட்டோர் 4 லட்சத்து 97 ஆயிரத்து 978, பழங்குடியினர் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 978. இதர பிற்படுத்தப்பட்டோர் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 236 என்று மத்திய அமைச்சர் வி. நாராயணசாமி அவர்கள் விலாவாரியாக புள்ளி விவரங்களை அளித்துள்ளார்.
மொத்தம் 28 லட்சத்தில், 9 லட்சம் போக மீதி 19 லட்ச இடங்களை அனுபவிப்போர் யார்?
இதில் பதவிகளின் தகுதி குறையக் குறைய (கீழ்மட்ட அளவில்) தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.
வேலை வாய்ப்பில் நிலவும் இந்த நிலைக்குக் காரணம்- இந்து சமூகத்தில் நீண்ட காலமாக வேர்ப்பிடித்து நிற்கும் ஜாதி வாரியான ஏணிப் படிக்கட்டு முறை என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.
துப்புரவுப் பணிகளில் உயர் ஜாதியினர் எண்ணிக்கை ஏதாவது உண்டா என்ற வினாவை உறுப்பினர்கள் யாராவது எழுப்பினால் பிரயோசனமாக இருக்கும். அந்த விவரம் தெரிந்தால்தான் இந்து சமூகத்தின் ஜாதீய அமைப்பு முறையின் கேடுகெட்ட நிலையின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும்.
இதில் ஒரு முக்கியமான, துல்லியமான புள்ளி விவரம் தேவைப்படுகிறது. இட ஒதுக்கீடு சதவிகித அடிப்படையில் இந்தப் புள்ளி விவரங்கள் இருக்கின்றனவா என்பதுதான் மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும்.
இதில் வெளிப்படையாக ஒரு புள்ளி விவரம் மிக வெளிச்சமாகவே தெரிகிறது.
தாழ்த்தப்பட்டோருக்கு 15 விழுக்காடு இடங்கள்; பழங் குடியினருக்கு 7.5 விழுக்காடு இடங்கள். பிற்படுத்தப்பட் டோருக்கு 27 விழுக்காடு இடங்கள் என்பது சட்டப்படியான நிலையாகும்.
ஆனால், 27 விழுக்காடு இட ஒதுக்கீடுக்கு உரிமையுள்ள பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்ற இரு பிரிவினர்களைவிட மிகவும் குறைவாக இருப்பதை எளிதாகவே அறிய முடிகிறது.
முதல் நிலைப் பணிகளில் (ஊடயளள ஐ) 5.4, இரண்டாம் நிலைப் பதவிகளில் 4.2, மூன்றாம் நிலைப் பதவிகளில் 6.4, நான்காம் நிலைப் பதவிகளில் 5.1 விழுக்காடு இடங் கள்தான் - 27 விழுக்காடுக்குரிய பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது எவ்வளவுப் பெரிய கொடுமை - அநீதி!
1993 ஆம் ஆண்டு முதல்தான் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருவதால், இந்த அளவுக் குக் குறைந்திருக்கிறது என்று சமாதானம் சொல்லக் கூடும். அப்படியானால், பிற்படுத்தப்பட்டோருக்குக் காலி யாக உள்ள 35 ஆயிரத்து 468 பதவிகளையும் விரைவாக நிரப்ப வேண்டியது அவசியம் அல்லவா! அதுபோலவே, தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினருக்கு முறையே காலியாக உள்ள 6202 மற்றும் 40015 காலி இடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பவேண்டாமா?
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாழ்த்தப்பட் டோர், பிற்படுத்தப்பட்ட உறுப்பினர்கள்தானே பெரும் பான்மை? இவர்கள் ஒருமித்து, கையிணைத்து நின்று குரல் கொடுத்தால் நாடாளுமன்ற விதானமே குலுங்காதா?
ஒன்றுக்கும் உதவாத பிரச்சினைகளுக்கெல்லாம் நாடாளுமன்றத்தையே முடக்கிக் கொண்டு இருக்கிறார் களே, நாட்டின் பெரும்பான்மை மக்களான தாழ்த்தப் பட்டோராலும், பிற்படுத்தப்பட்டோராலும் தேர்ந்தெடுக் கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் - இந்த மக்களுக்கான கல்வி, வேலை வாய்ப்புகளில் சட்ட ரீதியாக உள்ள இடங்களைப் பெற்றுத்தர வேண்டியது அடிப்படைக் கடமையல்லவா!
மற்றொரு முக்கிய புள்ளிவிவரம் அவசர அவசியமாகத் தேவை. இந்த நான்கு வகைப் பணி இடங்களிலும் துறை வாரியாகப் பணியாற்றும் பார்ப்பனர்களின் எண்ணிக்கை பற்றிய புள்ளி விவரம்தான் அது. சமூகநீதியில்ஆர்வம் உள்ள உறுப்பினர்கள் வினா எழுப்பி விவரங்களைப் பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
---------- நன்றி விடுதலை தலையங்கம் (23-11-2010)
Subscribe to:
Posts (Atom)