வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, October 03, 2015

தலித் மக்கள் மீதான வன்முறை


“சமத்துவத்திற்கான உங்களது உரிமைகோரல் தான் அவர்களைக் காயப்படுத்துகிறது.இதுவரையிலான தங்களது ஆதிக்க நிலையை அவர்கள் தக்கவைக்க நினைக்கின்றனர்.எவ்வித எதிர்ப்புமின்றி உங்களது இழிநிலையைத் தொடர்ந்து ஏற்றுக் கொள்வீர்கள் எனில்அழுக்கானவர்களாக, அறிவற்றவர்களாக, வறுமையில் உழல்பவர்களாக ஒற்றுமை இல்லாதவர்களாக நீங்கள் தொடர்ந்து இருப்பீர்கள் எனில் அமைதியாக வாழ அவர்கள் உங்களை அனுமதிப்பார்கள். நீங்கள் உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளதொடங்கும் அந்நொடி போர் தொடங்குகிறது”. -டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர். தலித் மக்கள் மீதான பத்தாண்டு தொடர் வன்முறைகளை ஒருசேரப் படிக்கும் போது உள்ளமும் உடலும் பதறுகிறது. முண்டம் சாலையோரமும் தலை கிணற்றிலும் வீசப்பட்ட மேலவளவு முருகேசனின் சகதோழர்களின் - உயிரின் துடிப்பு மின்சாரமாய்த் தாக்குகிறது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 17 பேரைதாமிரபரணிக் கரையில் படுகொலை செய்த தமிழக காவல்துறையின் ஆதிக்க சாதி மனோபாவமும் அன்றைய முதல்வரின் நயவஞ்சக உரையாடல்களும் அருவருப்பையும் குமட்டலையும் ஏற்படுத்துகிறது.


திண்டுக்கல் கவுண்டன் பட்டியிலும்திருச்சி திண்ணியத்திலும் மனிதக்கழிவுகளை மனிதர் வாயில் திணித்த நெறியற்ற செயல்களின் கசப்பூறி முகத்தில் உமிழ்கின்றன.ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளும் மேலெழும் ஜனநாயக உணர்வுகளும் கொலை ஆயுதங்களைச் சொருகிவீழ்த்தப்படுவதன் ஓலம் செவிகளில் அறைகின்றன. ‘சாதி ஒடுக்குமுறையை ஒழிப்போம்! சாதிமோதல்களைத் தடுப்போம்!” எனும் தோழர் என்.சங்கரய்யாவின் முழக்கம் திசைகளெங்கும் எதிரொலிக்கிறது.தலித்மக்களின் வழிபாட்டுரிமையை, பொது வெளியில் புழங்கும் உரிமையை நிலைநாட்ட முயற்சிக்கும் போதெல்லாம் கொடிய வன்முறையின் மூலம் முறியடிக்கிறார்கள். வாழும் உரிமையை சிதைத்து அழிக்கும் நோக்கில் இத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

கொலை செய்வது, கொடுங்காயப்படுத்துவது அல்லது ஊனப்படுத்துவது முதன்மை நோக்கமாக இருக்கிறது.அச்சுறுத்துவது அவமானப்படுத்துவதுபெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்துவது, நிலம், வீடு முதலிய சொத்துக்களை அபகரிப்பது, விலை உயர்ந்த வீட்டு உபயோகப்பொருட்களை அழிப்பது, திருடுவது, கூட்டாகக் கொள்ளையிடுவது குறிப்பாக மாணவர்களின் பாடநூல்களை, கல்விச் சான்றிதழ்களை தீயிட்டுப் பொசுக்குவது எனதாக்குதல்களின் வன்மம் தொடருகிறது. இத்தாக்குதல் முறை தலித்துகளின்வளர்ச்சியை, உரிமை கோரலை பொறுக்கமுடியமால் அரங்கேற்றப்படுபவை என்பதை உறுதிசெய்கிறது.தலித் மக்களின் ஒட்டுமொத்த மக்கள்தொகையோடும் சமூகநிலையோடும் ஒப்பிடும் போது அவர்களின் வளர்ச்சி மிகச்சிறு அளவே. இச்சிறு முன்னேற்றத்தைக் கூடஏற்றுக்கொள்ள முடியாத ஆதிக்க சாதியினரின் சகிப்புத்தன்மையற்ற நிலையே தலித்மக்கள் மீதான வன்முறையின் வேராக இருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மனிதனின் கண்ணியத்தை அவமதிக்கும் சாதி அடிப்படையிலான தீண்டாமை கருத்து நிலையிலிருந்தே இவ்வன்முறைகள் வெடித்தெழுகின்றன.“ஒடுக்குதல்களையும் அவமானங்களையும் துக்கங்களையும் ஓயாது சந்திக்கும்ஒரு தலித் மாறுபட்ட மன நிலையை எட்டசாத்தியம் இருக்கிறது. ஒரு கலவரத்தின் பிறகான மரண ஓலம், மரண பயம், சவ மௌனம் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். அந்தச் சூழலில் சிக்கிக் கிடக்க நேரும் ஒரு தலித்தின் மனம் கொந்தளிப்புடன் இருக்கின்ற கடல்போல இருக்கும்” (எழுத்தாளர் அழகிய பெரியவன், தலித் இலக்கியம் எனது அனுபவம் -நூலில்). கலவரத்தில் பாதிக்கப்படுபவர்கள் மிகப்பெரிய உளவியல்சிக்கலுக்கு ஆளாகிறார்கள். ஏமாற்றத்தை,கையறுநிலையை உணர்கிறார்கள். “ஏதாவது செய்யுங்க சாமி’ என்கிறார் வடக்கம்பட்டியைச் சார்ந்த ஒரு மூதாட்டி. ‘வாழ்க்கை என்பது இங்கே நெருப்புக்கு மத்தியிலே இருப்பது போல’ என்கிறார் சிறுதொண்டமாதேவியைச் சார்ந்த பழனியம்மாள்.பெரும்பாலான வன்கொடுமைகள் காவல்துறையாலேயே நிகழ்த்தப்பட்டுள்ளன. வனத்துறை, நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித்துறைகள் என அரசின் பிற துறைகளும் பல நேரங்களில் காவல்துறையோடு இணைந்து கைகோர்த்திருக்கின்றன. தலித்மக்கள் மீதான தாக்குதலை நிகழ்த்தும் போது தமிழக காவல்துறை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை, காவல்துறைக்கு அதிகாரமளிக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளை, நீதித்துறையின் அறிவுரைகளை, மனிதாபிமானத்தை, குறைந்தபட்சமாக மனிதன் என்கிற உணர்வைக் கூடபல்லுபடாமல் விழுங்கி, செரித்து ஏப்பமும்குசுவும் விட்டுத்திரியும் நர பிண்டமாய்காட்சியளிக்கிறது. சாதி ஆதிக்கமனோபாவமும் மமதையும் அதன் கோரமுகத்தை வடிவமைக்கின்றன. ‘சவட்டி நசுக்க வேண்டும்’ என்கிற மனோநிலை ஒடுக்குமுறையின் ஊற்றாகப் பீறிடுகிறது. இங்கே அடிக்கோடிட வேண்டியது - “ஆளுகிறவர்களின் மனோநிலையைப் பிரதிபலிப்பதாகவே காவல்துறையின் நடவடிக்கைகள் அமை யும்” என்கிற கருத்தை.தங்களின் வாழ்வியல் கோரிக்கைகளுக்காகவும் பண்பாட்டுக் கோரிக்கைகளுக்காகவும் தொடர்ந்து போராடிவரும்பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளே வன்முறையைக் கையாளும் ஆதிக்க சாதியாய் இந்நூல் முழுவதும் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

வாழ்நிலையில் தலித்மக்களுக்கு இணையான அல்லது சற்று மேம்பட்ட வாழ்க்கையை வாழ்பவர்களே அவர்கள். பெரும்பாலோர் தங்கள் உழைப்பை விற்றுப் பிழைப்பவர்களே.“சாதியத்தின் தனிச்சிறப்புகளுள் ஒன்றான படிநிலை வரிசையே சாதியத்தை கட்டிக்காக்கும் அதிகார அமைப்பாக விளங்குகிறது. தம்மை விட மேல்சாதியின் பண்பாட்டு உரிமைகளைக் கோரும் ஒருசாதி, அதற்கான வலிமையாகப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் கூட தம்மைவிட தாழ்ந்த சாதி அத்தகைய பண்பாட்டு உரிமைகளைக் கோரி போராடினால் அதை மிகவும் அதிக ஆற்றலோடும் வலிமையோடும் எதிர்க்கிறது. இதுசாதியத்தைக் கட்டிக் காப்பாற்ற சாதியத்துக்குள்ளே அதிகாரம் உள்ளார்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது” (முனைவர் கோ.கேசவன் ‘சாதியம்’ நூலில்) ஆக இச்சமூகம் சாதியச்சமூகமாக இருப்பதாலேயே இக்கொடூரங்கள் மிக எளிதாக நிகழ்த்தப்படுகின்றன. இவ்வன்முறைகள் நிகழ்ந்த அதே பத்தாண்டு காலகட்டத்தில் அமெரிக்க வர்த்தகப் பத்திரிகையான ‘போர்ப்ஸ்’ வெளியிட்ட புள்ளி விவரப்படி, இந்திய ரூபாயில்4000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலில் 90 சதவீதம் பார்ப்பனர், பனியா, தாக்கூர் எனும் உயர்சாதியைச் சார்ந்தவர்கள். புதுடில்லியிலுள்ள இந்திய பொது நிர்வாகக் கல்வி நிறுவனத்தின் பெரிய நிறுவனங்களைப் பற்றிய ஆய்வுப் பிரிவின் 1992ம் ஆண்டைய தரவுகளைப் பயன்படுத்தி டாக்டர் சந்தோஷ் கோயல் வெளியிட்டுள்ள விவரப்படி முதன்மையான 1100 தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரமிக்க பதவிகளில் 95 விழுக்காடு பேர் மேற்கண்ட மூன்றுஉயர் சாதியைச் சார்ந்தவர்கள். அதே விவரப்படி 1985ம் ஆண்டில் அரசு இயந்திரத்தில் ஆட்சிப்பணி அலுவலர்களாக பணிபுரிந்த 3235 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 66 பேர்மட்டுமே சூத்திரர்கள். (2.04 சதவீதம்) மீதமுள்ளவர்களின் 78 சதவீதம் பேர் உயர்சாதியைச் சார்ந்தவர்கள். (ப.கு.ராஜன், சாதியும் வர்க்கமும் கட்டுரையில்)இந்த தேசத்தின் சொத்தை அதிகாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆளும் வர்க்கமும் ஆதிக்க சாதியும் வேறு வேறு அல்ல என்பதை இப்புள்ளி விபரங்கள் நிரூபிக்கின்றன.

பத்து விழுக்காடு மட்டுமே வாழும் ஆதிக்க சாதியினரின் சொத்துக் குவியலும் அதிகார இணைப்பும் தொண்ணூறு சதவீதஏழைகளுக்கு வறுமையையும் வன்முறையையும் பரிசளித்திருக்கிறது. இப்புரிதலின் அடிப்படையில் நடைபெற வேண்டிய சமூகப் போரை மடைமாற்றம் செய்து தலித் மக்கள் மீதான பிற்படுத்தப்பட்ட மக்களின் வன்முறையாக மாற்றியிருக்கிறது சாதியம் என்பதை நிறுவுகிறது

இக்கலவரங்கள்.அக்காலகட்டத்திற்கு சாதியத்திற்கு எதிராக சவால்விட்ட ஜனநாயகப்பூர்வ முயற்சிகளையும், சாத்தியங்களை உருவாக்க நடைபெற்ற இயக்கங்களையும் விரிவாகப் பேசுகிறது இந்நூல். தலித்மக்களின் எதிர்த்தாக்குதலையும் சட்டரீதியான சில வெற்றிகளையும் மிக்க மகிழ்வோடு பதிந்திருக்கிறார்கள். வன்முறையால் பாதிக்கப்பட்ட தலித்மக்களுக்கு ஆதரவாக, அவர்களோடு இணைந்து போராடிய - தலித் அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் இடதுசாரிகள் அதில் குறிப்பாகஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் செயல்பாடுகள் குறித்து வலுவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. சேஷ சமுத்திரம்வரை நீண்டகாலமாக நடைபெற்றுவரும் சாதிய மோதல்கள், ஏழை உழைப்பாளர்களை, விவசாயத் தொழிலாளர்களை ஒருவர்க்கம் என்ற முறையில் ஒன்றுசேர விடாமல் தடுத்து வைத்துள்ளது. சாதியத்தின் இத்தந்திரம் முறியடிக்கப்பட வேண்டும்.கட்டுரை உருவாவதற்கும் வெளியாவதற்கும் முக்கிய காரணமாயிருந்த ப்ரண்ட்லைன் ஆங்கில இதழின் நிர்வாகிகள் வணக்கத்திற்குரியவர்கள். இந்நூலின் ஆசிரியர் எஸ்.விஸ்வநாதன் அவர்களும், தமிழாக்கித் தந்த த.நீதிராஜன் மற்றும் தயாரிப்பில்ஈடுபட்ட அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள்.

தலித் மக்கள் மீதான வன்முறை
ஆங்கிலத்தில்:எஸ்.விஸ்வநாதன்
தமிழில்: த.நீதிராஜன்
வெளியீடு: சவுத் விஷன் புக்ஸ்251,(132), 
அவ்வை சண்முகம் சாலை,
 கோபாலபுரம், 
சென்னை - 600 086 
பக்: 340 விலை ரூ. 200/-

நன்றி: தீக்கதிர், 04-10-2015



Sunday, July 19, 2015

நூல்: கோவில்கள், மசூதிகள் அழிப்பு : உண்மையும் புரட்டும்


கோவில்கள், மசூதிகள் அழிப்பு : உண்மையும் புரட்டும்.
ஆசிரியர்:அ.அன்வர்உசேன்,வெ.பத்மனாபன்,
வெளியீடு :பாரதி புத்தகாலயம்.7,இளங்கோ தெரு, தேனாம் பேட்டை ,சென்னை - 600 018 .
பக்:96 , விலை : ரூ. 70/-

வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் ஏன் ?கஜினி முகமது சோமநாதர் ஆலயத்தைக் கொள்ளையடித்தது மெய்யா ?இல்லையா ?எல்லா முஸ்லிம் மன்னர்களும் கோவில்களை இடித்தார்களா ?இந்து மன்னர்கள் மசூதியை இடித்ததுண்டா? வேறுமத வழிபாட்டுத் தலங்களை இந்து மன்னர்கள்அழித்ததுண்டா ?இடிப்பு பற்றி பேசுகிறவர்கள் அக்பரையும் பாபரையும் பேசுவதில்லை ஏன் ?மசூதிக்கும் கோயிலுக்கும் என்னவேறுபாடு ?

இப்படி இயல்பாய் எழும் கேள்விகளுக்கு விடைதேடி -ஆதாரங்கள் தேடிச் சேகரித்து இந்நூலை ஆக்கியுள்ள அன்வருக்கும் பத்மனாபனுக்கும் பாராட்டுகள் .

முதல் அத்தியாயமே சூடாகவும் சுவையாக வும் துவங்குகிறது . கி.பி.835ல் பாண்டிய மன்னன் படையெடுத்து அனுராதபுரம் புத்த மடத்தைக் கொள்ளையடித்து புத்தர் சிலை யை மதுரைக்குக் கொண்டுவந்தான்; காலம் திரும்பியது சிங்கள அரசன் படையெடுத்துவந்து. புத்தர் சிலை யை மீட்டுச் சென்றான். ஏன்? புத்தர் சிலை அரசு அதிகாரத்தின் சின்னமாகக் கருதப்பட்டது என்பதை மிகச்சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளனர் .

“ தோற்ற மன்னனின் ஆடம்பரப் பொருட்கள் மட்டுமல்ல; மன்னனின் மனைவிகள், இதரப் பெண்கள் மட்டுமல்ல; தோற்ற மன்னனின் கடவுள்கள் கூட வெற்றிபெற்ற மன்னனால் கொள்ளை அடிக்கப்பட்டன” என நூலாசிரியர்கள் சொல்வதுடன் ; அதற்கு ஆதாரமாக சோழர் , சாளுக்கியர் உட்பட பல இந்து அரசர்கள் அவ்வாறு செய்ததை எடுத்துக்காட்டி மநுஸ்மிருதி அதனை நியாயப்படுத்தியுள்ளதையும் பொருத்தமாகக் கூறியுள்ளனர் . இவையெல்லாம் கஜினி முகமது படையெடுத்து வரும்முன்பே இந்தியாவில் வழக்கமாக நடந்து வந்தது என்கிறார்கள்.

கஜினி முகமது செய்த கொடுமைகளை யும் அவனுக்கு இருந்த மதவெறியையும் நூலாசிரியர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை ; அதே சமயம் கஜினி முகமது இந்துக்களை மட்டுமல்ல தனது சன்னி இனத்தைச் சாராத ஷியா மற்றும் இஸ்மாயிலி பிரிவினரையும் கொன்றதையும் பதிவு செய்துள்ளதோடு, வரலாற்றில் எப்படி மிகைப்படுத்தப்பட்ட பதிவுகள் உள்ளன என்பதையும் பிரிட்டிஷ் ஆட்சி பின்னிய வஞ்சக வலை மதமோதலுக்கு வழிவகுத்ததையும் கே. எம் முன்ஷி போன்றோர் பகையை விசிறிவிட்டதையும் விவரமாகக் குறிப்பிடுகிறார் . கஜினி, ஒளரங்கசீப் தவிர ஏனைய முஸ்லிம் அரசர்கள் கோயில் இடிப்பில் ஈடுபடவில்லை என்பதையும் அவர்களும் கூட மன்னரின் பெருமைக்குரிய கோயிலைத்தவிர வேறெதிலும் கைவைக்கவில்லை என்பதையும் மாறாக கோயில்களுக்கு மானியம் அளித்து உதவியதை யும் விவரிக்கின்றன .

கோயில்கள் இடிக்கப்பட்டது போல் மசூதிகளும் இடிக்கப்பட்டதுண்டு. ஆனால் ஒப்பீட்டளவில் கோயில் இடிப்பு அதிகம் என்பதையும் ஒப்புக்கொள்கிறார்கள் . புத்த, சமண வழிபாட்டுத் தலங்களை இந்துக்கோயில்களாக மாற்றியதையும் சொல்லிச் செல்கிறார்கள் .

கோயில்கள் கஜானாக்களாக இருந்ததாலும் அரசின் அதிகாரச் சின்னமாக இருந்ததாலும் இடிக்கப்பட்டன . அதே சமயம் மசூதிகள் அரசு அதிகாரச் சின்னங்களாக மாற்றப்படவில்லை. ஆன்மீகக் குறியீடாகவே கருதப்பட்டது என்பதை நுட்பமாக எடுத்துக்காட்டுகிறார்கள் .

அரசன் இந்துவோ, முஸ்லீமோ அதிகாரத்தை நிலைநாட்ட தோற்றவர்கள் மீதும் அடிபணிந்தவர்கள் மீதும் பண்பாட்டு ஆதிக்கம் செய்ய மதத்தைப் பயன்படுத்தினர். .கஜினி முகமதுக்கு இருந்ததுபோல் மதமாற்ற வெறி இதரர்களுக்கு இருக்கவில்லை ; இதன் அரசியல் பொருளாதார ,சமூகக் காரணங்களையும் நூலாசிரியர்கள் பட்டியலிடுகின்றனர் .

வழிபாட்டுத் தலங்களின் மீதான தாக்குதல் உலகின் இதர பகுதிகளில் இருந்ததையும் கோடிட்டுக்காட்டி ; அரசர்களின் ஆதிக்க வெறியே அடிப்படைக் காரணம் என நிறுவுகிறார்கள். அதே சமயம் கடந்த கால சரித்திர நிகழ்வுகளுக்குப் பழிவாங்க எனக் கிளம்பினால் அதற்கு முடிவேது ? சங்பரிவாரின் நோக்கம் எவ்வளவு கொடு மையானது ; அவர்களின் வாதம் எவ்வளவு பிழையானது என்பதை தக்க சான்றுகளோடு நிறுவுகின்றனர் நூலாசிரியர்கள் .

கனகவிஜயன் தலையில் கல்லை ஏற்றி ஒரியக்கடற்கரை முதல் தஞ்சாவூர் வரை நடத்தியே கூட்டிவந்தான் சோழ அரசன் என தமிழ்நாட்டில் பெருமைப்படுவதுண்டு ; யோசிப்பவர்கள் நம்புவது சிரமம் . இது போலவே எழுதப்பட்ட வரலாறுகள் வென்றவரின் பெருமையைப் பீற்ற எழுதி வைத்திருப்பர் ;அதில் மெய்யைவிட கற்பனையும் கைச்சரக்கும் அதிகம் கலந்திருக்கும் ; அதனை அலசி உண்மையை மட்டும் செய்தியாக எடுத்துக் கொள்ள வேண்டும் . இந்தப்பாடம் இந்நூலில் உள்ளது .

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னணியில் மதுரா , காசி என அடுத்து குறிவைக்கும் சூழலில் ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு வரலாற்றை, பண்பாட்டை சிதைத்து குறுகிய மதவெறி மோதலை சங்பரிவார் உசுப்பிவிடும் காலத்தில் இந்நூல் ஒரு காத்திரமான வரவு . இந்நூல் இன்றைய காலத்தின் தேவை . அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் . மதவெறியருக்கு பதிலடி கொடுக்க இதுபோன்ற நூல்கள் இன்னும் அதிகம் தேவை . இந்நூலை வாங்குங்கள் ! படியுங்கள்! உண்மையை ஊரறிய உரக்கச் சொல்லுங்கள் !

நன்றி: தீக்கதிர், 19-July-2015


Sunday, July 05, 2015

காவி ஆட்சி யோகிதை - பாஜக பெண் முதல்வர் ஆளும் மாநிலத்தில் குழந்தைத் திருமணம்


ராஜஸ்தானில் 53 வயதான பஞ்சாயத்து தலைவருக்கு 6 வயது பெண் குழந்தைக்கும் திருமணம் நடந்தது. திருமணம் நடந்து முடிந்த பிறகு படம் சமூக வளைதளங்களில் வெளியான பிறகு காவல்துறை செயலில் இறங்கியது.
ராஜஸ்தான் மாநிலம் மேவாட் மாவட்டத்திற்கு அருகில் உள்ள கிராமம் கிர்கர் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் ரதன்லால் ஜாட் (வயது 35). இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.       மேவாட் நகரத்தில் கூலித்தொழிலாளியாக இருக்கும் சரண் என்பவருக்கு ஒரு பெண் குழந்தையும் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இவருக்கு கிர்கர் பஞ்சாயத்து தலைவர் ரூ30,000 கடனாக அதே கிராமத்தைச்சேர்ந்த ஜமுனாபாய் என்பவர்மூலம் பணம் கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாக பணத்தைத் திருப்பித் தராததால் மேவாட் நகரத்திற்குச் சென்று உன்னால் பணம் கொடுக்க முடியா விட்டால் உனது பெண் குழந்தையை ரதன்லால் ஜாட்டிற்கு திருமணம் செய்து கொடுத்துவிடு இல்லையென்றால் உன்னையும் உனது குடும்பத்தையும் நிம்மதியாக இருக்கவிடமாட்டார் ஜமுனாபாய்  என்று மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன சரண் தனது பெண் குழந்தையை திருமணம் செய்து தர முடிவுசெய்தார். இதனை அடுத்து ஜூன் மாதம் 29 ஆம் தேதி மேவாட் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கோவில் ஒன்றில் பார்ப்பனப்புரோகிதர் ஒருவர் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமணத்தின் போது ஜமுனா பாய் மற்றும் குழந்தையின் பெற்றோர்களுடன் ரதன்லாலில் உறவி னர்கள் பலர் கலந்துகொண்டனர். காவல்துறை தரப்பில் இந்தத் திருமணத்தில் சுமார் 40 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
ரதன்லால் ஜாட் ஏற்கெனவே திருமணமானவராக இருந்தாலும் அவர் பஞ்சாயத்து தலைவராக இருந்தபடியால் யாரும் அவரின் இந்தச் செயலுக்கு எதிர்ப்புதெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இவரது திருமண ஆல்பம் சமூகவலைதளம் ஒன்றில் வெளி யானது. இந்தப்படத்தைப் பார்த்த அதே மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேவாட் மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கியானேந்திர சிங் நடவடிக்கையில் இறங்கினார். கிர்கர் கிராமத்திற்குச் சென்று ரதன்லாலைக் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது: குழந்தைத் திருமணம் தொடர்பான படம் சமூகவலைதளத்தில் வந்ததை அடிப்படையாக வைத்து புகார் தெரிவித்தனர்.அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாங்கள் ரதன்லால் ஜாட்டின் மீது குழந்தைத்திருமணத் தடுப்புச் சட்டம் 2006 கீழ்  கைது செய்தோம் என்றனர்.
ஏற்கெனவே 2008-ஆம் ஆண்டு இவர் குழந்தைத் திருமணம் செய்ய முயன்ற போது பிடிபட்டு எச்சரித்து விடப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இடைத்தரகர் போல் செயல்பட்ட ஜமுனாபாய் தலை மறைவாகிவிட்டார். அவரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ராஜஸ்தானில் தங்களது திருமணத்தை ரத்து செய்யக்கூறி மணம் முடித்து வைக்கப்பட்ட குழந்தைகள் தாங்களாகவே நீதிமன்றம் சென்று நீதிகேட்டது தொடர்பான செய்தி மார்ச் மாதம் விடுதலையில் தலைப்புச் செய்தியாக வந்தி ருந்தது.
இந்த நிலையில் மீண்டும் அதே மாநிலத்தில் குழந்தைத் திருமணம் நடைபெற்றுள்ளது.    லலித்மோடி ஊழல் புகழ் வசுந்தரா ராஜே முதல் வராக உள்ள மாநிலம் என்பதும், சில நாட்களுக்கு முன்புதான் மோடி பெண் குழந்தைகளுடன் படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று வானொலியில் அழைப்பு விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

நன்றி : விடுதலை நாளிதழ், 05-07-2015


அனைவரும் படிக்க வேண்டிய நல்ல கவிதை தொகுப்பு



துச்சம்

ஆசிரியர்: ஸ்ரீரசாவெளியீடு: காலம் வெளியீடு26, மருதுபாண்டியர் 4வது தெரு(சுல்தான் நகர்)கருமாரியம்மன் கோயில் எதிர் வீதிமதுரை - 625 002பக்: 64 விலை ரூ.60/-   (நன்றி : தீக்கதிர்,  05-07-2015 )


அனைவரும் படிக்க வேண்டிய நல்ல கவிதை தொகுப்பு. எளிய நடையில் எழுதபட்டிருக்கும் கவிதை தொகுப்பு.



Sunday, June 28, 2015

நூல் அறிமுகம்: ராமகோபாலன் மாட்டின் குண்டிபக்கம் குதத்துக்கு பூஜை செய்து கொண்டிருந்தார் . ஏன் அப்படிச் செய்தார் ?


சில வருடங்கள் முன்பு மாட்டுப்பொங்கலன்று ராம கோபாலன் கோமாதா பூஜை செய்தார் . உழவர்கள் மாட்டின் உழைப்பை மதித்து அதற்கு படையலிட்டு கொம்புக்கு வர்ணம் பூசி முன்பக்கம் பூஜித்துக்கொண்டிருந்தபோது ராமகோபாலன் மாட்டின் குண்டிபக்கம் குதத்துக்கு பூஜை செய்து கொண்டிருந்தார் . ஏன் அப்படிச் செய்தார் ? பசுவின் வாய் அசுத்தமானது என்கிறது மநு .அங்கிரஷர் ,பராசரர்,வியாசர் , யக்ஞவல்லியர் உட்பட பலர் எழுதியுள்ளனர். அதனால்தான் பசுவின் குண்டிப்பக்கம் பூஜை செய்தார் ராமகோபாலன் . இதுதான் பார்ப்பனர் வழக்கம் . அதே சமயம் மாட்டு மூத்திரம், சாணி இவற்றை புனிதம் என்பர். இவையும் இவைதொடர்பான பால், தயிர், நெய் ஐந்தும் கலந்து பஞ்சகவ்யம் எனக்கொண்டாடுவர்.

மருத்துவக் காரணங்களுக்காக இவற்றை பயன்படுத்துவது வேறு ; இதற்கு இல்லாத புனிதத்தைக் கற்பிப்பது வேறு . பசுவதை கூடாதெனக் கூப்பாடு போடும் இந்தக் கொடி யவர் கூட்டம் வரலாறு நெடுகிலும் எப்படி நடந்து கொண்டது ? யாகத்தில் மாட்டை பலியிட்டது. பசு மாமிசம் சாப்பிட்டதற்கு நிறைய அசைக்க முடியாத சான்றுகளை அள்ளித் தொகுத்திருக்கிறது இந்நூல் .பசுவின் புனிதம், பசுவதை, பால், பஞ்சகவ்யம் போன்ற கருத்தாக்கங்களுக்குப் பின்னாலுள்ள வரலாற்று உண்மைகளை ஆய்வுக்கு உட்படுத்தி , பேராசிரியர் டி.என்.ஜா அவர்கள் எழுதியுள்ள இந்நூல் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட சிறந்த நூலென்று பதிப்புரையில் சொல்லியிருப்பது மிகை அல்ல . 2001ல் வெளியிடப்பட்ட இந்நூல் இந்துமதவெறியர் எதிர்ப்பால்- வழக்கால் வெளிநாட்டுப் பதிப்பாக வெளியிடப்பட்டது . சட்டத்தடை தாண்டி இந்தியாவில் பின்னர் வெளியானது .

2003 ல் தமிழில் முதல் பதிப்பு வெளிவந்தது . “இசுலாமியர்கள் மாட்டிறைச்சியைத் தின்பவர்கள்; எனவே அவர்கள் தாம் பசுக்களைக் கொன்று அவற்றின் இறைச்சியைத் தின்பதை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் என்று இங்குள்ள இந்துத்துவா அமைப்புகள் தொடர்ச்சியாக மக்களை மூளைச்சலவை செய்திருக்கின்றன. இக்கருத்தியலை இந்திய மதங்கள் சார்ந்த நூல்களில் இருந்து சரியான தரவுகளைக் காட்டுவதன் மூலம் மிக எளிதாக உடைத்து விடலாம். அந்நூல்கள் எல்லாம் இந்தியாவில் பழங்காலம் தொட்டே மாட்டிறைச்சி தின்னப்படுவதைக் கூறுகின்றன. இசுலாம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே இங்கு மாட்டிறைச்சி தின்னும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதை பிராமணிய, புத்த, சமண நூல்களில் இருந்து சான்றுகள் காட்டி நான் நிறுவியிருக்கிறேன்.” என ஒரு பேட்டியில் ஆசிரியர் சொல்லியிருப்பதை இந்நூல் நெடுகக்காணலாம் .
“ இடைக்கால மூலங்களிலும் ஏராளமான தரவுகள் இருக்கின்றன. ஆச்சாரம் மிகுந்த பிராமணர்கள் பசியைப் போக்குவதற்காக காளை இறைச்சியையும் நாய் இறைச்சியையும் தின்றதை மனுஸ்மிருதி கூறுகிறது. படித்த பார்ப்பனரைப் பெரிய காளையைப் படைத்தோ ஆட்டைப் படையலாக்கியோ வரவேற்க வேண்டும் என்று யக்ஞவல்கீய ஸ்மிருதி (கி.மு. 100-300) சொல்கிறது. மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களுள் முக்கால்வாசிப் பேர் அசைவ உணவு தின்பவர்கள் தாம்! இரந்திதேவ அரசரின் அடுக்களையில் மட்டும் ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் பசுக்கள் அடித்துக் கொல்லப்பட்டு உணவாக்கப்பட்டன. மற்ற தானியங்களுடன் இந்த இறைச்சியும் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டன.

கொழுத்த கன்றை அடித்து உணவாக்கி இராமனுக்குப் பரத்வாஜ முனிவர் படையலாக்கினார் என்று சொல்லப்படுகிறது. மதம் சார்ந்த எழுத்துகள் மட்டுமல்ல! மதச்சார்பற்ற இலக்கியங்களிலும் இப்படிச் சான்றுகள் காட்ட முடியும். இந்திய மருத்துவ முறைகளில் மாட்டிறைச்சி மருந்துக்காகப் பயன்படுத்தப்பட்டது. மாட்டிறைச்சியைத் தின்பது பற்றிக் காளிதாசர், பவபுத்தி, இராஜசேகரர், சிறீஹர்சர் ஆகியோருடைய எழுத்துகளில் இருக்கும் குறிப்புகள் நிறைய சொல்கின்றன” என நூலாசிரியர் வாக்குமூலம் தருகிறார். நூல் சாட்சியாகிறது. “ இந்திய நூல்கள் - குறிப்பாக பார்ப்பனிய - தர்ம சாஸ்திர நூல்கள் முன்வைத்துள்ள பசு வடிவமானது பல நூற்றாண்டுகளில் பலவிதமான வடிவங்களை எடுத்துள்ளது என்பதைச் சொல்லத்தேவையில்லை.

ஆயிரமாண்டு வரலாற்றில் பசு குறித்த தகவல்கள் முழுக்க முரண்பாடுகள் கொண்டதாகவே இருந்திருக்கின்றன.” “.. பசுவின் புனிதத்தன்மை என்பது ஒரு ஏமாற்று வித்தையே. காரணம் பசுத் தெய்வமோ, அதன் பேரில் ஒரு கோயிலோ இருந்ததில்லை” என்கிறார் நூலாசிரியர் .‘சிக் குகா’ அல்லது ‘நாம்தாரி’ என்னும் பெயரில் 1870களில் பஞ்சாப்பில் தொடங்கப்பட்ட ‘இந்து பசுப் பாதுகாப்புப் படை’ தான் முதலில் பசுக்களை அரசியல் கருவியாக்கியது; அவர்களுடைய இக்கருத்தியல் பின்னர் தயானந்த சரஸ்வதி அவர்களால் 1882ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘முதல் கோ ரக்கினி சபை’ யால் வலுப்படுத்தப்பட்டது. இவ்வமைப்புத்தான் குறிப்பிட்ட பிரிவு மக்களின் சின்னமாகப் பசுவை அடையாளப்படுத்தியது. அதன் பின் மாட்டுக்கறி தின்னும் இசுலாமியர்களைக் கேள்விக்குள்ளாக்கி 1880களிலும் 1890களிலும் கலவரங்களை ஏற்படுத்தினார்கள்.இவ்வாறு பசுவதை என்பது கடினமானதாக ஆக்கப்பட்டாலும் 1888ஆம் ஆண்டில் வடமேற்கு மாகாண உயர் நீதிமன்றம், ‘பசு புனிதமான பொருள் அன்று’ என்று கொடுத்த தீர்ப்பு அவர்களுடைய வேகத்தை மட்டுப்படுத்தியது. ஆனால் அதன்பின் இந்து - இசுலாமியர் கலவரங்கள் பலவற்றில் பசுவதை என்பது மையப்பொருளானது. 1893ஆம் ஆண்டு ஆசம்கர் மாவட்டத்தில் கலவரம் நடந்தது. அக்கலவரத்தால் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். 1912-13 இல் அயோத்தியாவில் கலவரம் மூண்டது. 1917இல் ஷாகாபாத்தில் பெரிய கலவரம் மூண்டது.விடுதலை இந்தியா துன்பியல் நிகழ்வுகள் பலவற்றைக் கண்டது. பசு வதையைத் தடுக்க வேண்டும் என்று 1966ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள மதவாத அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் சேர்ந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணியைப் நாடாளுமன்றம் முன்பு நடத்தின. அப்போது மூண்ட கலவரத்தில் எட்டுப் பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். காந்தியடிகளின் ஆன்மீக வாரிசாகக் கருதப்படும் ஆச்சாரிய வினோபா பாவே பசுவதையைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 1979ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார். இப்படியாகப் பசு அரசியல் கருவியானது. பசு வதையைத் தடுக்க வேண்டும் என்று சொன்ன ஆதிக்க சாதி அமைப்புகள் எவையும் ‘பசுவைக் கொல்லக்கூடாது என்று வேதங்களிலோ பார்ப்பன எழுத்துகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை’ என்பதையும் ‘காலாகாலமாகப் பசு தின்னப்பட்டு வந்திருக்கிறது’ என்பதையோ காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. இதையெல்லாம் இந்நூல் நிறுவுகிறது . ஆதாரங்களும் குறிப்புகளுமே கடைசி 76 பக்கங்களை நிரப்பி இருக்கிறது என்பதே நூலாசிரியரின் கடின உழைப்பையும் நம்பகத்தன்மையையும் பறை சாற்றுகிறது .பசுவை மீண்டும் மதவெறியர் கொலை வாளாகச் சுழற்றும் இன்றையச் சூழலில் இந்நூல் மிகமிக அவசியமானது. கட்டாயம் படிக்க வேண்டும் .

நன்றி: தீக்கதிர், 28-06-2015


Friday, May 01, 2015

அவர்கள் பிரச்சனை அவர்களுக்கு...

நாட்டுல விவசாயிகள் மேகதாட்டு ஆணை, காவிரி பிரச்சனை என்று போராடுகிறார்கள். போக்குவரத்து ஊழியர்கள் போதுமான ஊழியர்கள் இல்லை பணி சுமை என்று கூறி போராட்டம் செய்கிறார்கள்.இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான போராட்டம் நடக்கிறது. இது அனைத்தும் மக்கள் நலன் சார்ந்தது.அந்த பணியில் தொய்வு என்றால் மக்களுக்கு பாதிப்பு என்பது அதிகம்.
ஆனா பாருங்க, இன்று(29-04-2015) காலையில் ஒரு செய்தி பார்த்தேன், அர்ச்சக பார்ப்பனர்கள் பூஜைக்கு அனுமதி வேண்டி உண்ணாவிரதம் என்று. இவர்களுக்கு போராட்டம் கூட எந்த ரூபத்தில் வருது பார்த்தீர்களா?
தந்தை பெரியார் ஒன்றை கூறுவார், இந்த நாட்டில் முடி திருத்துபவர் இல்லை என்றால் திண்டாட்டம். சலவை தொழிலாளி இல்லை என்றால் திண்டாட்டம். உழவன் இல்லை என்றால் திண்டாட்டம். துப்புரவு பணி செய்பவர் இல்லை என்றால் திண்டாட்டம். ஆனால், இந்த அர்ச்சக பார்ப்பான் இல்லை என்றால் என்ன நட்டம் வந்துட போவுது என்று கூறுவார்கள். தந்தை பெரியார் இதை குலத்தொழிலை உறுதி படுத்த கூறியதாக எடுத்து கொள்ள கூடாது...பார்ப்பனர்கள் செய்யும் வேலையில் துளி கூட மக்களுக்கு பயன் கிடையாது இருந்தாலும் அவன் தான் உச்சாணி கொம்பில் இருக்கிறான்..உடலுழைப்பை செலுத்தி பணி செய்யும் நம்ம ஆட்கள் மரியாதை குறைவாக நடத்த படுகிறார்கள் என்பதை உணர்த்தவே அய்யா இதை எடுத்து கூறியுள்ளார்கள்.


விகடனின் 'ஏனெனில் அவர் பெரியார்!' கட்டுரை..காவி கும்பலின் வேண்டாத சத்தங்களுக்கு நல்ல பதில்

இந்த வார ஆனந்த விகடனில் (06-05-2015) வெளிவந்திருக்கு திருமாவேலனின் 'ஏனெனில் அவர் பெரியார்!' கட்டுரை காவி கும்பலின் வேண்டாத சத்தங்களுக்கு நல்ல பதில்
இந்த சமுகத்தில் எவ்வளவு உரிமையை எடுத்துகொண்டாரோ, அதே உரிமையை தனது கொள்கை எதிரிக்கும் வழங்கினார். ஆனால், அவர் எந்த மரியாதையை மற்றவர்களுக்கு கொடுத்தாரோ அது அவருக்கு திரும்ப கிடைக்கவில்லை. அதை பெரியார் எதிர்பார்த்தவரும் அல்ல. மனித ஜீவனிடம் நன்றியை எதிர்பார்ப்பது அறிவில்லாத தன்மை. எனச் சொன்ன அவர். எனக்கு யாரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் சொன்னார்.
ஏனெனில் அவர் பெரியார்!
(கட்டுரையில் இருந்து...)





கணவன் என்ற லைசென்ஸ் வாங்கிட்டா போதும்

கணவன் மூலம் மனைவிக்கு ஏற்படும் பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வல்லுறவு போன்ற கொடூரங்களை தண்டிக்க.... ஏற்கனவே இருக்கும் சட்டத்தில் திருத்தம் செய்யுங்கள் என்று மாநிலங்களவையில் கனிமொழி எம்.பி பேசியிருக்கிறார்.அதற்கு பதில் அளித்து பேசிய பாஜக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பர்திபாய் சௌத்ரி, அப்படிப்பட்ட எண்ணமே மத்திய அரசுக்கு கிடையாது. அது நம் இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது என்று பேசியிருக்கிறார்.
கணவன் என்ற லைசென்ஸ் வாங்கிட்டா போதும்...மனைவியை பலாத்காரம், பாலியல் வல்லுறவு செய்யலாம் என்று மத்திய அரசு சொல்லுகிறதா? இதுதான் இந்திய கலாச்சாரமா? பெண் எவ்வளவு அடக்குமுறைக்கு ஆளானாலும் அடங்கித்தான் போக வேண்டும் என்று மத்திய அரசு சொல்லாமல் சொல்லி இருக்கிறது. ஆளும் பாஜக அரசின் யோகிதையை இது போன்ற அமைச்சர்களின் பேச்சுகளின் மூலம் நன்கு உணர முடிகிறது. பெண்கள் என்றாலே ஆணுக்கு அடிமை, சேவகம் செய்யும் வேலைக்காரி என்ற மனோபாவம் கொண்ட இந்துத்துவா ஆட்சியில் வேறு என்ன பதில் வரும்.
இது போன்ற சட்டங்கள் அவசியம் தேவை. இன்றும் பல ஊர்களில் இது போன்று கணவன் மூலம் பாலியல் தொந்தரவுக்கு உட்படும் பெண்கள் ஏராளம் உள்ளனர்.



Saturday, August 30, 2014

பார்ப்பனர்கள் தயவில் பதவி பட்டம் கிடைத்தால்....

கேள்வி: பிரதமர் மோடி நல்ல சிந்தனைகளை தானே பேசுகிறார், அவரை ஏன் மாணவர் முன்னிலையில் பேச கூடாது என்று விமர்சிக்கிறீர்கள்?
பதில்: மோடி நன்றாகத்தான் பேசுகிறார். தன் சுதந்திர தின உரையில் கூட ஆன் பெண் பேதம் இருக்க கூடாது. பெண்களை போன்றே ஆண்களை கண்டிப்புடன் வளர்க்க வேண்டும் என்பது போன்று சில சிந்தனை முத்துகளை வீசினார். ஆனால் அவரால் அந்த எல்லையை மீறி அதற்கு மேல் முற்போக்கு பேச முடியாது. தன் ஆர்.எஸ்.எஸ் காவி கொள்கைகளை தளர்த்தி முற்போக்காக நடக்க வேண்டும் என்று அவரே நினைத்தாலும் முடியாது. ஏன் என்றால் அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர். பார்ப்பனர்கள் தயவினால் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். இதோ பார்ப்பனர் தயவினால் உயர்ந்து பிறகு அவர்களுக்கு எதிராக கருத்து சொன்னவர்கள் என்ன ஆனார்கள் என்று தந்தை பெரியார் கூறுவதை தருகிறேன்,
காந்தியார் கோயில் என்பது குச்சுக்காரிகள் வீடு; இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை. மதத்திற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கக் கூடாது; காங்கிரசைக் கலைத்துவிட வேண்டும் என்று சொன்ன 56 - ஆம் நாள், பார்ப்பானால் சுட்டுக் கொல்லப்பட்டார். என்னையும் காந்தியைப் போல் சுட்டுக் கொன்றிருப்பார்கள். காந்தியை மகாத்மாவாக்கி விளம்பரம் செய்து மகானாக்கியது பார்ப்பனர்கள்; அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் பார்ப்பனர்கள்; அவர்களே அவரைக் கொன்றதால் கேட்க நாதியற்றுப் போயிற்று.
நான் பார்ப்பான் தயவில் இல்லை. என்னைப் பின்பற்றக் கூடியவர்கள் பலர் இருக்கின்றனர். என் ஒருவனைக் கொன்றால் காந்தியைப் போன்று நாதியற்றுப் போகாது. பலர் கொல்லப்படுவார்கள். கலகம் ஏற்படும். பார்ப்பனர்கள் தப்ப முடியாது என்பதால்தான் என்னை விட்டு வைத்திருக்கிறார்களே ஒழிய, அவர்களுக்கு என்னைக் கொல்வது சிரமம் என்பதால் அல்ல! என்னைப் போல் கடவுள் இல்லை என்று சொன்னவர்கள் அத்தனைபேரும் கொல்லப்பட்டிருப்பதாகப் புராணங்கள் சரித்திரம் வரையில் இருக்கிறது. [விடுதலை, 13.04.1971]
பெரியாரின் கூற்றை படித்தீர்களா? இப்போ புரிகிறதா? மோடி என்ன முற்போக்கு பேசினாலும் அது செயல் வடிவம் பெறவே பெறாது. அதற்கு மாறாக அதற்குள் காவி சங்கபரிவார் சிந்தனை தான் அதிகம் இருக்கும். அதை மறைக்கவே இடை இடையே மோடி சில முற்போக்கு கருத்துகளை பேசி வருகிறார். அந்த முற்போக்கு அவருக்கு பிடித்திருந்தாலும் கூட ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. அது செயல் வடிவம் பெறாது. இதை புரிந்துகொள்ள வேண்டும்


Saturday, July 19, 2014

'னூல்' அறுக்கும் நூல்கள் - அடிமை


அடிமை 
ஆசிரியர்: டாக்டர் அம்பேத்கர் 
வெளியீடு: நியு செஞ்சுரி புக் ஹவுஸ் 41 -பி, 
சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர், 
சென்னை - 600 098 
பக் : 32 விலை ரூ. 20 /- 

இந்தியாவில் அடிமைத்தனம் எப்போதும் இருந்ததில்லை. இந்து மதத்தின் பெருமையது என இப்போது சங்பரிவார் பீற்றித்திரிகிறது. அதேபோல் இந்து மதத்தை சகிப்புத்தன்மையின் மாதிரிபோல் சிலர் செப்பித்திரிகிறார்கள். இந்த இரண்டும் மிக மிக தவறான கண்ணோட்டம். இந்தியாவில் அடிமைத்தனம் இருந்ததையும், அடிமைத்தனத்தை விட மோசமான தீண்டாமை இருப்பதையும் மிகத் தெளிவாக வரையறை செய்து காட்டுகிறார் டாக்டர் அம்பேத்கர். சாதியஒடுக்குமுறை குறித்து மிக ஆழமான மிக நுட்பமான ஆய்வுகளை மேற்கொண்டு வலுவான ஆதாரங்களோடு தீண்டாமையை தோலுரித்து காட்டிய அம்பேத்கரின் கட்டுரைகளில் இது குறிப்பிடத்தக்கது. தீண்டாமையையும் அடிமைத்தனத்தையும் ஒப்பிட்டு இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை வரைந்துகாட்டி தீண்டாமையே ஆகப்பெருங்கொடுமை என்பதை இந்நூலில் நன்கு வாதிட்டுள்ளார் டாக்டர் அம்பேத்கர்.

நன்றி: தீக்கதிர், 20-07-2014


Saturday, June 07, 2014

நூல் விமர்சனம் - அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்



அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்
கே.சந்துரு
மணற்கேணி
முதல் தளம், பு/எண்:10, ப/எண்:288, டாக்டர் நடேசன் சாலை, சென்னை-05
விலை : ரூ.95
கைப்பேசி : 9443033305

திருத்தி எழுதிய தீர்ப்புகள்...

அது கல்லறையானாலும் சரி, கழிப்பறையானாலும் சரி, பாதையை மறித்து நிற்கும் தீண்டாமைச் சுவரானாலும் சரி, பொதுப் பேருந்துகளில் அமர்ந்து பயணம் செய்யும் உரிமையானாலும் சரி, சமூகத்தின் அடித்தட்டில் உள்ள தலித்-பழங்குடி இனத்தவர்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக அதிகார வர்க்கத்தின் கதவுகளை தட்டிக் கொண்டே இருக்க வேண்டிய நிலையே இன்னும் நீடிக்கிறது.பொது நீர்நிலையில் தண்ணீர் எடுக்கவும், கோயிலில் நுழையவும் அண்ணல் அம்பேத்கர் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது என்றால் அவரால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பெறுவதற்கே நீதிமன்றங்களின் உதவியை நாட வேண்டிய அவல நிலையில் தான் அவர்கள் இன்றளவும் இருந்து வருகிறார்கள்.

ஆதிக்க வர்க்கத்தினரின், சாதியினரின் எதிர்ப்புகளை தினந்தோறும் சந்தித்து, ஒவ்வொரு படியாக ஏறி வரும் அவர்கள் இறுதியாகத் தஞ்சம் புகும் நீதிமன்ற வளாகத்தில் அவர்களது உரிமைக் குரல்கள் எதிரொலிப்பது என்பதோ அரிதிலும் அரிது என்றே கூறி விடலாம். சாதிய ஆதிக்க வெறி நிறைந்த வட மாநிலங்கள் மட்டுமல்ல; திராவிடர்களின் பெருமையை பறைசாற்றி வரும் தமிழ் மண்ணும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை ஆதி திராவிடர்கள் என்று பட்டம் சூட்டப்பட்ட தலித்துகள் ஒவ்வொரு கணமும் எதிர்கொண்டே வந்திருக்கிறார்கள். 44 தலித் மக்களை வெண்மணி கிராமத்தில் உயிரோடு எரிக்கும் அளவிற்குத் தஞ்சை நிலப்பிரபுக்கள் ஒன்றும் கல்நெஞ்சக்காரர்கள் அல்ல என்று சான்றிதழ் வழங்கிய, வாச்சாத்தி கிராமத்தில் பழங்குடிப் பெண்களை மாட்சிமை பொருந்திய அரசு ஊழியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்க மாட்டார்கள் என்று நற்சான்றிதழ் வழங்கிய அதே சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து இந்த வறியவர்களுக்கு ஆதரவான குரல் ஒன்றும் எழுந்தது.

நீதிநாயகம் கே. சந்துரு அவர்கள்தான் அந்தக் குரலுக்கு உரியவர். கல்லூரிப் பருவத்தில் தலித்-பழங்குடி மாணவர்களின் உரிமைகளுக்காகப் போராடியதைப் போலவே, வழக்குரை ஞராக, மூத்த வழக்குரைஞராக செயல்பட்ட நேரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை நீதிமன்ற வளாகத்தில் ஓங்கி ஒலித்தவர் அவர். 2006ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்ட போது, அவரது இந்த சமூக நீதிப் பணி தொடருமா? என்ற தயக்கம் உழைக்கும் வர்க்கத்தினரிடையே ஏற்பட்டதும் உண்மைதான். எனினும் எந்தப் பதவியில் இருந்தாலும் மக்களுக்குச் சேவை செய்யமுடியும் என்று பதவி ஏற்ற நாளிலேயே அறிவித்த அவர் அதை வெற்றிகரமாக நிரூபித்தும் காட்டினார்.

அவர் நீதிநாயகமாக இருந்த ஏழு ஆண்டுகளில் 96,000 வழக்குகளில் இறுதித் தீர்ப்பை வழங்கியது மட்டுமே ஒரு சாதனை அல்ல. அவர் முன்னே வந்த வழக்குகளில் பலவும் ஆதிக்க சக்திகளின், அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறை கண்ணோட்டத்தை, தலித் எதிர்ப்பு நோக் கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த நிலையில், சமூக நீதியின் வெளிச்சத்தின் துணை கொண்டு, அண்ணல் அம்பேத்கரின் வீரிய எழுத்துக்களின் வெளிச்சத்திலிருந்து அவர் வழங் கிய தீர்ப்புகள் காலத்தை வென்றவையாக நீடிக்கும். நீதிநாயகம் கே. சந்துரு வழங்கிய குறிப்பிட்ட சில தீர்ப்புகளை உள்ளடக்கிய வகையில் “அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்” என்ற நூலை மணற்கேணி பதிப்பகம் வெளியிட் டுள்ளது. அவர் வழக்குரைஞராக இருந்தபோது நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி ஒரு வார இதழில் தொடராக எழுதி பின்னர் நூலாக வெளிவந்த “ஆர்டர்! ஆர்டர்” என்ற நூல் நீதி கோரி வருவோர் நீதிமன்றங்களில் எதிர்கொள்ளும் நிலைமைகள் குறித்து மிக எளிமையாக விளக்கி யது எனில் தலித்-பழங்குடிப் பிரிவினருக்கு ஆதரவாக அவர் வழங்கிய தீர்ப்புகளின் பின்னணியையும் தீர்ப்பு வழங்க அவர் எடுத்துக் கொண்ட வரலாற்று, அரசியல், இலக்கிய ஆதாரங்களையும் விரிவாக விளக்கும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வரும் பிரிவினருக்கு சமூகநீதி கிடைக்கும் வகையில் அவர் வழங்கிய தீர்ப்புகளில் அம்பேத்கரின் அறிவார்ந்த கருத்துக்களை மேற்கோள் காட்டியும், அமெரிக்காவின் நிறவெறியைப் போன்றே சாதி-ஆதிக்க வெறி இங்கே தலைவிரித்து ஆடுவதைச் சுட்டிக் காட்டியும் உள்ளார்.

கல்லறை உரிமைக்கான தலித்துகளின் கோரிக்கையின் மீது உத்தரவு பிறப்பிக்கையில்(கல்லறைதான்) சமரசம் உலாவும் இடமே – நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமேஎன்ற சினிமாப் பாடலை மேற்கோளாகக் காட்டியும் நீதிநாயகம் சந்துரு வழங்கிய தீர்ப்பைப் போன்று பல தீர்ப்புகளின் பின்னணியை விளக்குவதாக இந்த நூல் அமைந்துள்ளது.இத்தகைய தீர்ப்புகள் ஒரு நூலாகத் தொகுக்கப்பட மற்றொரு காரணமும் உண்டு என்று அவர் கூறியுள்ளது அனைவரும் கவனிக்கத்தக்க, கவலை கொள்ளத் தக்க ஒன்றாகும். “தமிழகம் முழுவ தும் பரவலான பாராட்டுக்களை எனது தீர்ப்புகள் பெற்றாலும் கூட, துரதிர்ஷ்டவசமாக, (பின்னா ளில் வழக்குரைஞர்கள் வாதம் புரியவோ, தீர்ப்புகளில் மேற்கோளாக, முன் உதாரணமாகக் காட்டு வதற்கு உதவும் வகையில்) தீர்ப்புகளை தொகுத்து வெளிவரும் சட்ட இதழ்களில் அந்தத் தீர்ப்புகள் வெளியிடப்படவில்லை. அதற்கு அந்த இதழ்களின் நவீன தீண்டாமையும் ஒருவேளை காரணமாக இருக்கலாம்” என்ற வரிகள் 66 ஆண்டுகால விடுதலைக்குப் பிறகும் அண்ணல் அம்பேத்கரின் சமூக நீதிக்கான போராட்டத்தின் தேவை இன்றும் நீடிக்கிறது என்பதையே உணர்த்துகின்றன.

இந்த இடத்தில் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக். 1970களின் இறுதியில் தாழ்த்தப்பட்ட- பழங்குடி இனத்தவருக்கு ரயில்வே துறையில் இடஒதுக்கீடு குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி. ஆர். கிருஷ்ணய்யர், ஓ. சின்னப்ப ரெட்டி ஆகிய இருவரும் வழங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை தமிழில் கொண்டுவர வேண்டும் என்று அப்போது வழக்குரைஞராக இருந்த சந்துரு ஆர்வமாக இருந்தார். அப்போது சிறையில் இருந்த தியாகு இந்தத் தீர்ப்பை தமிழில் மொழி பெயர்த்து வழங்கினார்.

அதனை சரிபார்த்து கொடுத்ததோடு, சென்னை புக் ஹவுஸ் வெளியீடாக வந்த தாழ்த்தப்பட்ட- பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு பற்றி என்ற அந்த நூலுக்கு சந்துரு முன்னுரை வழங்கியதோடு அந்த நூல் வழக்கறிஞர்கள் மத்தியில் பரவலாகச் செல்லவும் உதவி புரிந்தார் என்பதையும் இங்கே நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். இச்சம்பவத்தை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு. நீதித்துறையின் படிக்கட்டுகளில் ஏறி சமூக நீதியை நிலைநாட்டுவது என்பது அளப்பரியதொரு போராட்டமாகும். அப் போராட்டத்தில் கிடைக்கும் தீர்ப்பு என்பது மற்ற சமூகக் கொடுமைகளுக்கு எதிராகப் போ ராட அடித்தட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்பதோடு, மற்ற நீதிமன்றங்களும், நீதிநாயகங்களும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலை கேட்க உதவி புரியும் என்ற நோக்கத்தில்தான் இத்தகைய வரலாற்றைத் திருத்தி எழுதிய தீர்ப்புகள் அனைத்து மொழிகளிலும் வரவேண்டிய அவசியம் உள்ளது.

அத்தகைய முயற்சிகள் தொடர, இவ்வகையான நூல்கள் ஊக்கமளிக்கும் என்பதில் ஐயமில்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கருக்கே அவர் மறைந்து 34 ஆண்டு களுக்குப் பிறகே அவரது நூற்றாண்டு விழாவின்போது திடீரென்று நினைவிற்கு வந்ததுபோல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என்பதை நினைவு கூர்கையில், ஆதிக்க சக்திகளின் இரும்புக் கண்ணிகளை உடைத்தெறிய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைப்பதாக இந்த நூல் விளங்குகிறது என்றே கூறலாம். சமூகநீதிக்காகப் போராடுவோருக்கு ஊக்கம் தரும் வகையிலான இந்த நூலை போராளிகள் அனைவரும் வாங்கிப் படித்து, பரவலாக அறியச் செய்வது அவசரமானதொரு சமூகக் கடமை யாகும்.

நன்றி: தீக்கதிர்,08-06-2014


நூல் அறிமுகம் - சாதிச் சழக்குகள் வெளியும் வேலிகளும்


சாதிச் சழக்குகள் வெளியும் வேலிகளும்
ஆசிரியர்: தி.சு. நடராசன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட். 41 - பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098
பக்: 32 விலை ரூ. 20/-

மனிதர்கள் வாழிடங்கள் மற்றும் வைதிக மரபி னால் எப்படி மன்னராட்சி காலத்தில் பிரித்து வைக்கப்பட்டனர். அரசு அதிகாரமும், பிராமணியமும், வைதிகமும், மனுவும், கீதையும் இணைந்து மண், உழைப்பு , உற்பத்தி, வியர்வை இவற்றை எப்படி அடிமைப்படுத்தின என் பதை குறைந்த பக்கங்களில் இந்நூல் சொல்ல முயற்சிக்கிறது.சாதிக் கலவர கூத்துகளை அதற்கு பின்னால் இருந்து இயக்கும் பெரிய மனிதர்களை இந்நூல் பட்டியலிடுகிறது. சாதியை வேரோடும், வேரடிமண்ணோடும் வீழ்த்த இந்நூலும் ஒரு ஆயுதமாகும். சாதி அமைப்பு உயர் சாதியால் திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. ஆனால் சாதிச் சண்டைகள், பெரும்பாலும் அடித்தளத்தில் தான் நடக்கிறது. ஏன் இந்தச் சூழல்? இந்நூல் அது குறித்து பேசுகிறது. சாதிக்கு எதிராக பல கோணங்களில் நாம் சிந்தித்தாக வேண்டும்; செயல்பட்டாக வேண்டும். இந்நூல் ஒரு பாதையில் பயணிக்கிறது.

நன்றி: தீக்கதிர், 08-06-2014


Friday, March 21, 2014

மோடியின் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்.இவர்களுடைய சித்தாந்தம் என்ன?

ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் முன்னிறுத் தப்பட்டுள்ள பிரதம மந்திரி வேட்பாளர் நரேந் திர மோடி முகமூடி அணிந்துகொண்டு நாடு முழுவதும் வலம் வருகிறார். ஒரே நாளில் இரண்டு மூன்று மாநிலங்களுக்குக்கூட தனி விமானத்தில் பறந்து செல்கிறார். இவர் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் பயிற்சி பெற்று இளம் வயதி லிருந்து ஆர்எஸ்எஸ் இட்ட பணிகளை மிக விசுவாசமாக செய்து வருபவர். இப்பொழுது கூட ஆர்.எஸ்.எஸ். திட்டங்களை குஜராத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றி வந்த காரணத்தால் அதையே இந்தியா முழுமையாக செயல்படுத்திட ஆர்.எஸ்.எஸ். பணித்துள்ளது. இவர்களுடைய சித்தாந்தம் என்ன? கொள்கை கோட்பாடுகள் என்ன, குஜராத்தில் எப்படிசெயல்படுத்தி வருகிறது என்ற உண் மைகளை முழுமையாக திரைபோட்டு மறைத்து சுய உருவம் தெரியாமல் முக மூடி அணிந்து பிரச்சாரம் செய்து மக்களைஏமாற்றும் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவரின் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் சில அம்சங்களை முதலில் பார்ப் போம். இவை எப்படி குஜராத்தில் செயல் படுத்தப்பட்டுள்ளன என்பதை பின்னால் பார்க்கலாம்.

நேருவின் எச்சரிக்கை

ஜவஹர்லால் அவர் காலத்திலேயே இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய அபாயத்தை சுட்டிக்காட்டினார். தனது சுய சரிதையில் ‘பிரிட்டிஷ் ஆட்சி முழுமையாக அகற்றப்பட்ட பிறகு மேல்தட்டு மத்திய வர்க்கத்தினர் மற் றும் பணக்கார வர்க்கத்தினர் ஆதரவுடன் பாசிசம் வேகமாக வளர்ந்தாலும் வளரலாம்’ என்றார் நேரு. “சிறுபான்மையினரின் வகுப்பு வாதத்தைவிட மிக மிக அபாயகரமானது பெரும்பான்மையினரின் வகுப்புவாதம்” (1948, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் நேரு உரை). “சிறுபான்மையினர் வகுப்புவாதத்தை நாம் சுலபமாக கண்டுகொள்ள இயலும், புரிந்துகொள்ளவும் முடியும். ஆனால் பெரும் பான்மையினரின் வகுப்புவாதம் தேசியவாதம் எனக்கொள்ள வைக்க முடியும்” (1961ல் நேரு சுட்டிக்காட்டியது). “நான் இந்து தேசியவாதி” என்கிறார் மோடி. “இந்தியாவிற்கு வாக்களியுங்கள்” என்கிறது மோடியின் விளம்பரம். இந்து தேசிய வாதம், இந்திய தேசியவாதமல்ல இதுதான் இன்று இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து. முழு வெற்றி பெற்றால் இந்தியா, பாகிஸ்தான் போன்று ஆக்கப்பட்டுவிடும். அங்கு இஸ் லாமிய தேசியவாதம் என்றால் இங்கு இந்து தேசியவாதம்.

பாசிசத்தின் இந்திய வடிவம்

ஆர்எஸ்எஸ் 1925ல் துவக்கப்பட்டது. இதை துவக்கிய முதல் சர்சங்சாலக் ஹெட் கேவாரின் குருநாதர் டாக்டர் பி.எஸ்.மூஞ்சே 1931ல் இத்தாலிக்கு சென்று பாசிச ஆட்சித் தலைவர் முசோலினியை சந்தித்து பாசிச அமைப்பு முறைகளைப் பற்றி 13 பக்க குறிப்புவெளியிட்டார். (நேரு மியூசியம் நூலகத்தி லுள்ளது). பாசிஸ்ட் கட்சி பாணியில் சிறு வர்கள் பயிற்சி (6-18 வயது) இளைஞர்கள் உடற்பயிற்சி, ராணுவப் பயிற்சி (இதற்காக நாக்பூரிலும் நாசிக்கிலும் இரண்டு ராணுவப் பயிற்சி பள்ளிகள் துவங்கி இன்றும் செயல்பட்டுக்கொண்டு வருகின்றன) அணி வகுப்புகள், டிரில்கள் ஆகியவை விலக்கப் பட்டுள்ளன. “எதிரி மக்கள் கூட்டத்தைத் தாக்கிஅதிகபட்சம் கொலை செய்து காயமடைய வைத்து வெற்றிகாணும் திறன் கொள்ள இந்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது” மூஞ்சே தனது திட்டக் குறிப்பில் முன்வைக்கிறார்.

“இந்து, இந்தியாவின் ஒற்றுமைக்கும் இந்துக்களின் ராணுவ மறுமலர்ச்சிக்கும் பாசிசம் தெளிவான வழிகாட்டுகின்றது ஹெட் கேவார் தலைமையிலுள்ள ஆர்எஸ்எஸ் இதுபோன்ற நிறுவனமாகும். ஹெட்கேவாரின் அமைப்பை விரிவுபடுத்தவும் இதர மாநிலங் களுக்கு பரப்பவும் எனது எஞ்சியுள்ள வாழ் நாளை கழிப்பேன்” என்றும் எழுதினார் மூஞ்சே.இவர் ஜெர்மனிக்கும் சென்று ஹிட்லரின் நாஜிக் கட்சி அமைப்பை பற்றியும் தெரிந்து கொண்டார். (இறுதியில் 1943ல் இந்த முசோலினி மக்களால் தெருக்களில் அடித்துக்கொல்லப்பட்டதும் ஹிட்லர் விஷம் குடித்தும் செத்ததும் வேறு கதை).

1934 ஜனவரி 31ம் தேதி “பாசிசமும் முசோலினியும்” என்ற தலைப்பில் பம்பாயில் நடந்தகூட்டத்திற்கு ஆர்எஸ்எஸ் முதல் சர்சங் சாலக் (1925-1940) ஹெட்கேவார் தலைமை வகித்தார். இதில் உரையாற்றிய மூஞ்சே, “இந்து தர்ம சாஸ்திரத்தின் அடிப்படையில் இந்து மதத்தை இந்தியா முழுவதும் கட்டுவதற்கு நான் திட்டத்தை தயாரித்துள்ளேன். இத் தாலியின் முசோலினி ஜெர்மனியின் ஹிட்லர் போன்று ஒரு சர்வாதிகாரி இல்லாமல் இந்த லட்சியத்தை செயல்படுத்த இய லாது” என்றார். இத்தகைய பயிற்சி பெற்ற ஒருவரை தற்காலத்திற்கேற்றவாறு உருவாக்கு வதற்கான முதல் முயற்சியில் இன்று ஆர்எஸ்எஸ் ஈடு பட்டிருக்கின்றது.

இந்து தேசியமா, இந்திய தேசியமா?

இந்திய தேசியத்தை ஒரு “விசித்திரமான மிருகம்”, ஒரு “பூதாகரமான பிரமை” என்று ஆர்எஸ்எஸ்சின் இரண்டாம் சர்சங்காலக் கோல் வார்க்கர் விளக்கினார். இது ஒரு ஹம்பக் தேசியம் என்றார்.“இப்படிப்பட்டஒரு மோசடி தேசியத்திற்கு உயிருண்டாக்க முயற்சிக்கின்றனர். ஒரு காளையின் கால்களையும், ஒரு கழுதையின் தலையையும், ஒரு யானையின் துதிக்கையும் இணைத்து ஒரு விசித்திரமான மிருகத்தை உருவாக்கும் முயற்சிக்கு ஒப்பாகும். இதன் விளைவு ஒரு பூதாகரமான பிணம்தான். இது ஒரு உயிருள்ள உயிரினமாக இருக்க முடியாது. இதில் சில அசைவுகள் தென்பட்டால் அதை அழுகிவரும் சடலத்தில் உற்பத்தியாகும் கிருமிகளின் செயல்பாடுதான்” .

(குரு கோல்வார்க்கர் - ஞானகங்கை பக்.239)மேலும் நமக்கு முன்னால் உள்ள கேள்வி யாதெனில் “இஸ்லாத்திற்கோ, கிறிஸ்து வத்திற்கோ மதம் மாற்றப்பட்டவர்களின் போக்கு என்ன என்பதை அவர்கள் இந்தநாட்டில்தான் பிறந்திருக்கிறார்கள் சந்தேக மில்லை. ஆனால் இதனிடம் பக்தி விசுவாசத்துடன் வாழ்கின்றார்களா? இந்தநாட்டிடம் நன்றி விசுவாசம் பாராட்டு கின்றார்களா?... மதம் மாறுவதுடன் கூட இந்து ராஷ்ட்ரியத்திடம் உள்ள அன்பு நெகிழ்ச்சியும் பக்தி பாவனையும் அழிந்துவிட்டது” (ஞான கங்கை பக்கம் 193)“ஆகவே நாம் கூறுவதெல்லாம் இதுதான்.

இவர்கள் தமது மன அமைப்பு நிலையை கைவிட்டுவிட்டு இந்து தேசிய வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிடவேண்டும். தங்களு டைய மூதாதையருக்கு சொந்தமான பக்திமுறைகளையும் பின்பற்றட்டும்.... மீண்டும் திரும்பி வந்து உடையிலும், பழக்க வழக்கங்களிலும் திருமண சடங்குகளையும் இறுதிச்சடங்குகளையும் நடத்துவதிலும் அதுபோன்ற மற்றெல்லா நிகழ்ச்சிகளிலும் தங்கள் முன்னோர்களான ஹிந்துக்களின் வாழ்க்கை முறையுடன் இரண்டறக் கலக்கவேண்டும். வழிதவறிய சகோதரர்களைப் போல் மீண்டும் நமது தர்மத்திடம் இரண்டற கலந்துவிட வேண்டும்” (ஞா.க.பக்.197, 200).

அரசியல் சாசனம் மாற்றப்படவேண்டுமாம்!

“நமது நாட்டின் கூட்டாட்சித்தன்மை பேச்செல்லாம் நிரந்தரமாக குழிதோண்டிப் புதைக்க வேண்டும். பாரதம் என்ற ஒரே ராஜ்யம் தானிருக்க வேண்டும். பூரண சுயாட் சியோ அரைகுறை சுயாட்சியோ உள்ள எல்லாமாநிலங்களையும் துடைத்தெறிய வேண்டும்”“ஒரே தேசம், ஒரே ராஜ்யம், ஒரே சட்டமன்றம், ஒரே நிர்வாகம் என்று பிரகடனப்படுத்த வேண்டும்... மாநிலவாதம், மொழிவாதம், குறுகிய கட்சிவாதம் அல்லது வேறு எவ்விதமான தற்பெருமை உணர்ச்சிகளுக்கு இடம்தரக்கூடாது”“அரசியல் சாசனத்தை மீண்டும் பரி சீலனை செய்து ஒற்றை அரசு முறையை (Unitary form of govt)நிறுவி திருத்தி எழுத வேண்டும். அதன் மூலம் நாம் அனைவரும் தனித்தனி இனங்களைச் சார்ந்தவர்கள்.. என்பதை பொய்யாக்கவேண்டும்.” (Ph.f. g¡. 686, 687)

“நமது தேசிய மொழிப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் சமஸ்கிருதம் அந்த இடத்தைப் பிடிக்கும் வரை இந்தி மொழிக்கு அந்த இடத்தை நாம் தரவேண்டியிருக்கும்” (ஞா.க. பக். 171)வாஜ்பேயின் ஆட்சியிலிருந்த காலத்தில் அரசியல் சட்டத்தை மாற்றியமைக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி (ஒய்.வெங்கடாச் சலையா தலைமையில்) ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. நால்வர் கொண்ட கமிட்டி (சுவாமிவாம தேவ், சுவாமி முக்தானந்த் சரஸ்வதி, சுவாமி நிரஞ்சன் தேவ்தீர்த், சின்மையானந்தா) அமைக்கப்பட்டு 63 பக்க அறிக் கையும் சமர்ப்பிக்கப்பட்டது. “இன்றைய அர சியல் சட்டம் தூக்கி எறியப்பட வேண்டும்” “இந்துத்துவா அரசியல் சட்டம் இடம்பெற வேண்டும்” என்றனர். இவர்கள் முயற்சி அன்று வெற்றிபெறவில்லை.பிரதமர் வாஜ்பாய் அமெரிக்கா சென்றி ருந்தபொழுது விஷ்வ இந்து பரிஷத்தினர் எப்பொழுது அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்படும்? எப்பொழுது அரசியல் சட்டம் மாற்றம் செய்யப்படும்? என்று கேட்கப் பட்டபொழுது “நாடாளுமன்றத்தில் நமக்குத் தனி பெரும்பான்மை கிடைத்தபின் இவைகள் நிறைவேற்றப்படும்” என்றார்.இன்று தீவிர ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் நரேந்திர மோடி இவைகளையெல்லாம் ஒளித்து வைத்துக்கொண்டு மோடி வித்தை காட்டுகிறார்.உலகிலேயே சிறந்த மதம் இந்து மதம், ஏனெனில் அது மதமே அல்ல என்றார் ஜார்ஜ் பெர்னாட்ஷா. ஏனெனில் இது அனைவரையும் அணைத்துக்கொள்ளும், நாத்தீகர்கள் உட்பட விவேகானந்தர் கூட நாத்தீகம் பேசினார்.

அவ்வளவு தாராளமானது, சகிப்புத்தன்மை கொண்டது.கேள்வி என்னவென்றால் மூஞ்சே, சாவர்க்கர், ஆர்எஸ்எஸ் சர்சங்சாலக்குகள் ஹெட்கேவார் (1925-40) குருகோல்வார்க்கர் தேவ்ராஸ், இன்றைய சர்சங்காலக் மோகன்பகத் ஆகியோரின் கொள்கைகள் மாற்றப்பட் டுள்ளனவா? (இவர்கள் அனைவரும் மகாராஷ்டிரா சித்பவன் பிராமணர்கள்!) இந்தமன அமைப்பு நிலை ( (mind set) ) கைவிடப் பட்டுள்ளதா? இதற்கு ஆர்எஸ்எஸ்ஸின் பதில் என்ன? மோடியின் தன்னிலை விளக்கம் என்ன?

நன்றி: தீக்கதிர்,21-03-2014



Thursday, January 30, 2014

பெரும்பான்மையான இந்துக்கள் என்பதால் மதசார்பின்மையா?

பெரும்பான்மையான இந்துக்கள் மதசார்பின்மையாக இருப்பதால் தான் இந்தியா அனைத்து சமுகத்தையும் அரவணைத்து செல்லும் நிலைமை இருக்கிறதாம்....இது,இந்த கருத்து மேம்போக்காக பார்த்தால் ஏதோ பெரிதா மத சார்பின்மை பற்றி பேசியது போன்று தோன்றும்....ஆனால் இது உண்மை மறைத்து பேசும் பேச்சு என்பது பார்ப்பன மதத்தை ஆழமாக அறிந்தவர்கள் உணர்வார்கள்.

இந்தியாவில் இந்து என்பது பார்ப்பனர்களை தவிர யாரும் விரும்பி ஏற்றுகொண்டது இல்லை...பெரும்பான்மையான மக்கள் (பார்ப்பனர்களை தவிர) 'இந்து' என்று பலி சுமத்தப்பட்டு இருக்கிறார்கள்...எனவே இப்படி பலி சுமத்தப்பட்ட மக்கள் அதை பற்றி கவலை படுவதில்லை......அந்த பலியை சுமந்து கொண்டு அதனால் ஏற்படும் சூத்திர , பஞ்சம பட்ட இழிவு பற்றியும் கவலை கொள்வது கிடையாது...அப்படி 'இந்து' என்றால் என்ன என்று ஆராய்ச்சி செய்ய விரும்பவில்லை...எனவே, அந்த பார்ப்பன மதத்தின் மீது இந்த பெரும்பான்மை மக்களுக்கு பற்றும் கிடையாது வெறுப்பும் கிடையாது...கீதையா, பாகவதமா, மனுதர்மமா...எதாவது இருந்துவிட்டு போகட்டும்...அதில் என்ன இருந்தா நமக்கென்ன..இதுதான் பார்ப்பனரல்லாத, இந்து என்று பலி சுமத்தபட்ட பெரும்பான்மை மக்களின் நிலைமை...ஏதோ இந்து ன்னு சொல்கிறார்கள்....சொல்லிட்டு போகட்டும் என்றுதான் அவர்கள் இருக்கிறாக்கள். இதுதான் உண்மை. இந்த பார்ப்பன மதத்தால் அலைகழிக்கப்பட்டு, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு மலம் அல்லும், செருப்பு தைக்கும், உழவு தொழில் செய்யும் ஒடுக்கப்ட்டவனுக்கு என்ன வெங்காயம் தெரியும்...மக்களோடு மக்களாக உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த அவன் மனிதர்களை அரவணைத்து செல்லும் மனிதநேய மிக்க மாண்பாளன் தான்...அந்த மனிதநேயம், ஏதோ இந்த கேடுகட்ட பார்ப்பன மதத்தால் வந்தது இல்லை....எனவே திரிக்க வேண்டாம்....

இந்த பார்ப்பன இந்து மதத்தால் நல்லா பலன் அனுபவிக்கும், குண்டி வளர்க்கும் பார்ப்பனர்கள் தான் இந்து கோசம் போடுவதும்...அவர்களுக்கு எதாவது ஆபத்து வரும்பொழுது, நாங்க பெரும்பான்மை என்று மற்ற மக்களையும் சேர்த்துக்கொண்டு ஒரு பொது புத்தி, பொது பிரச்சனை, போன்று கூட்டம் காண்பிக்கவும் முயற்சிப்பார்கள்...இதை பார்ப்பன இந்து மதம் பற்றி ஆராய்ந்து அறிந்தவர்கள் உணர்வார்கள்...ஒரிஜினல் இந்துவாகிய எந்த பார்ப்பானும் இது வரை யாரையும் அரவணைத்து சென்றதா சரித்திரம் இல்லை. இதுதான் பார்ப்பன இந்து மத உண்மை முகம்...நாம் அனுபவிக்கும் அனைத்து உரிமையும் ஆதிக்க ஆரியத்திடம் இருந்து போராடி பெற்ற உரிமைகள்...எனவே, பெரும்பான்மையாக இந்துக்கள் இருப்பதால் தான் மதசார்பின்மை கொடி கட்டி பறக்கிறது என்று பம்மாத்து செய்து உழைக்கும் மக்களிடம் உண்மையை மறைக்க வேண்டாம்.


Monday, January 27, 2014

முஸ்லீம் லீக் மதவாதமா?

முஸ்லீம் லீக் என்று மதத்தின் பெயராலேயே கட்சி வைத்திருக்கிறார்களே...அவர்களுடன் தி.மு.க வும் இடதுசாரிகளும் மாறி மாறி கூட்டணி வைக்கிறார்களே..அது மதவாதம் இல்லையா? என்று தன்னை பெரிய அரசியல் அறிவாளி என்று சொல்லும் காவியருவி மணியன் பேசியுள்ளார். இதை கேட்டு வாயால் சிரிக்க முடியவில்லை

மதவாதம் என்ன என்பது தெரிந்தே...காவிகளுக்கு தேர்தல் புரோக்கர் என்கிற போதையில் பேசியுள்ளார் காவியருவி மணியன்....தங்களை பாதுகாத்து கொள்ளவும், தங்களுக்கு மறுக்கப்படும் அடிப்படை உரிமைகளை பெறவும் ஒரு குழுவாக ஒன்று சேர்வதும்...அதே நேரத்தில் மற்றவர்களை ஒடுக்கவும், அவர்களை அழிக்கவும், மற்றவரது அடிப்படை உரிமைகளை தட்டி பறிக்கவும் ஒரு கட்சி இருக்குமென்றால் அது புறக்கணிக்க பட வேண்டிய ஒன்று...இதில் இரண்டாவது வகை தான் ஆர்.எஸ்.எஸ் காவி கும்பல். இந்த அடிப்படை கூட தெரியாதவரா காவியருவி மணியன்?

முஸ்லீம் லீக் என்று பெயர் வைத்துகொண்டு எந்த ராமர் கோயிலை இடித்தார்கள்? எந்த பெரும்பான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை தடுத்தார்கள்? சொல்ல முடியுமா மணியன். offense மற்றும் defense க்கு இயக்கம் நடத்துவது மணியனுக்கு புரியாதா?

ஆணாதிக்கத்தின் கொடுமையால் அடிமைபடுத்தபட்ட பெண்கள் ஒரு அமைப்பாக செயல் படுகிறார்கள் என்று...ஆண்களும் ஒரு அமைப்பு ஏற்படுத்தி வைத்து கொண்டு அதற்கு வியாக்கியானம் சொல்ல முடியுமா? ஆதிக்கம் செலுத்தும் பார்பனர்கள் சங்கம் வைத்து கொள்வதற்கும்...ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை ஒரு அணியில் இணைத்து போராடுவதற்கும் வேறுபாடு இல்லையா? இதெல்லாம் தெரியாதா மணியா??? உங்களுக்கு காவி போதை தலைக்கேறிவிட்டது. கொஞ்ச நாளைக்கு பேசுவதை நிறுத்திகொள்ளுங்கள்.


Thursday, December 12, 2013

பாரதியை பல்லக்கில் தூக்கும் கூட்டம் பாவேந்தர் பாரதிதாசனை தூக்கி செல்லட்டும் பார்க்கலாம்!!!



மகாகவி பாரதியாரின் 132-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலையை சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் இருந்து அவரது இல்லம் வரை ஜதி பல்லக்கில் தூக்கி வந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், வழக்குரைஞர் சுமதி. உடன் (இடமிருந்து) காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், பொற்றாமரை பொதுச்செயலாளர் கி.சங்கரன், பாஜக தேசிய செயலர் தமிழிசை செüந்தரராஜன், மாநில செயலர் வானதி ஸ்ரீநிவாசன்./////////

இந்த செய்தியை இன்றைய (12-12-2013) தினமணியில் படித்துவிட்டு தான்  இந்த பதிவு எழுதினேன்...சும்மா பாரதியை எதிர்க்க வேண்டும் என்று எழுதவில்லை என்பதை தோழர்களுக்கு அறிவித்து கொள்கிறேன்

வேத மறிந்தவன் பார்ப்பான் - பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதி நிலை தவறாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி.

நாலு வகுப்பும் இங் கொன்றே - இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி’

இப்படி நால் வருணம் வேண்டும்..குலக்கல்வி வேண்டும் என்று பாடியவன் மகாகவி என்று அழைக்கப்படும் பாரதி.


முகத்தில் பிறப்பார் உண்டோ முட்டாளே
தோளில் பிறப்பார் உண்டோ தொழும்பனே
இடையில் பிறப்பார் உண்டோ எருமையே
காலில் பிறப்பார் உண்டோ கழுதையே
நான்முகன் என்பான் உளனோ நாயே
புளுகடா புகன்றவை எலாம் போக்கிலியே!

இப்படி நால் வருணத்தை உருவாக்கியவனை சாட்டையால் அடிப்பது போன்று கேள்வி கேட்டு  பாடியவர்  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். எங்கே பாரதியை பல்லக்கில் தூக்கும் கூட்டம் எங்கள் பாவேந்தர் பாரதிதாசனை தூக்கி செல்லட்டும் பார்க்கலாம்!!! அப்படி செய்தால் அவர்கள் தான் ஓரிஜினலா கவி நடை ரசிப்பவர்கள்.




Wednesday, June 12, 2013

எவ்வளவு கேடுகெட்ட பெண்ணடிமை தனம்??????

அர்த்த்தமுள்ள (????) இந்து மததத்தின் மனுநீதியின் ஒன்பதாவது அத்தியாயத்தின் 3 வது ஸ்லோகம் 

பால்யே பிதிர்வஸே விஷ்டேது
பாணிக்ரஹா யௌவ்வனே
புத்ரானாம் பர்த்தரீ ப்ரேது
நபஜேத் ஸ்த்ரீ ஸ்வதந்த்தரம்

 அதாவது, பெண்ணே... நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன்னதை கேள்... வளர்ந்து மணமானதும் கணவன்  சொன்னதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். என்று முதல் மூன்று வரிகளுக்கு அர்த்தம்.

நான்காவது வரி இன்னும் தெளிவாக சொல்லுகிறது, அதாவது, "பெண்ணே உனக்கு இது தான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியவற்றவள் - ஆகவே ஆண் சொல்படி கேள்.” (ஆதாரம் நூல் : "சாதி மதம் வர்க்கம்", ஆசிரியர் கே வரதராசன்,வெளியீடு: பாரதி புத்தகாலயம் )

எவ்வளவு கேடுகெட்ட பெண்ணடிமை தனம்...எப்படி இருக்குது பார்த்தீர்களா? பெண்களே உங்களை பெற்றுடுத்த பெற்றோர்கள் இப்படி கூறினால் கூட பொறுத்துக்கொள்ள முடியாதுதானே....இதனை எதிர்த்து பெண்கள் போராட வேண்டாமா? கேள்வி கேட்க வேண்டாமா? சரி குறைந்தபட்சம் இப்படி மனுநீதி  கூறும் இந்து மத கடவுளுக்கு அர்ச்சனை கூடை தூக்காமல் இருந்தால் போதுமே? இப்படி மனு நீதியை கூறும் கடவுளை ஒழிக்க பெண்கள் தான் தீர்வு காணவேண்டும். 


Monday, May 27, 2013

எவ்வளவு மகா அயோக்கியத்தனம்!

சங்கர மடத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு தரிசனம் செய்தார் என்று  ஒரு பத்திரிகை எழுதுது. இந்த பத்திரிகை தான் தமிழ், வெங்காயம் என்று கதை அளந்து ஊரை ஏமாற்றும் பத்திரிகை.

கலைஞர் அவர்களை கருணாநிதி என்று எழுதும் சூரியன் பத்திரிக்கைக்கு இதனை பார்த்தாவது உணர்வு வருமா?????

எவ்வளவு மகா அயோக்கியத்தனம் ; பல பெண்களிடம் பாலியல் வல்லுறவு; ரியல் எஸ்டேட் கேப்புமாரி தனம், சங்கரராமன் கொலை வழக்கில் 60 நாள் போலிஸ் காவல் என்று அம்பலப்பட்டு அசிங்கப்பட்ட ஜெயேந்திரனை...ஏதோ பெரிய யோகியன் போல் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று ஒரு பத்திரிக்கைகாரன் எழுதுகிறான் என்றால் அவன் எவ்வளவு பெரிய மகா மகா அயோக்கியன். 

இந்த அக்கிரமத்தை படிக்கும் போது மனுதர்மம் பற்றி அறிவு ஆசான் தந்தை பெரியார் சொன்ன கருத்து தான் நம் கண்முன்னே வந்து நிற்கிறது.

மனுதர்மம் என்பது என்ன? பார்ப்பான் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும் மேலானவன்; வணகதக்கவன். பார்ப்பானல்லாதவன் எவ்வளவு யோக்கியனாக இருந்தாலும் வெறுக்கத் தக்கவன் என்பதுதானே? இராமாயணம் தரும் படிப்பினையும் இதுதானே?


Wednesday, December 19, 2012

பெண்களுக்கு எதிரான வன்முறை..இனியாவது குறையுமா?


நமது சமுகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கிறார்களோ அவை அத்துனையும் அனைத்து சமுகத்து பெண்களும் அனுபவிக்கிறார்கள் என்று தந்தை பெரியார் கூறி இருக்கிறார்....பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இந்த சமுகம் இன்னமும் செய்துகொண்டு தான் இருக்கிறது. அது மதத்தின் பேரால், சாதியின் பெயரால், குடும்ப கவுரவத்தின் பெயரால், பாலியல் வக்கிர சம்பவத்தினால் என்று அடுக்கி கொண்டே போகலாம். ரெண்டு நாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த சம்பவம் மட்டும் காட்டு தீ போன்று எங்கும் பரவியுள்ளது.அது பற்றி ஒரு பார்வை.

டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் ஞாயிறு இரவு பலாத்காரம் செய்யப்பட்ட மருத்தவ மாணவி டெல்லி சரப்தர்ஜங்
பற்றிய செய்தி பாராளுமன்றம் வரை எதிரொலித்து உள்ளது. மிகப்பெரிய ஆச்சரியம் தான் என்றாலும் மறுபுறம் இதனை வரவேற்க வேண்டியது பெண்ணுரிமைக்கு குரல் கொடுக்கும் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும். இது நாள் வரை எவ்வளவோ பெண்கள் இது போன்ற சம்பவங்களில் சிக்கி தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர்...உயிரை பறிகொடுத்துள்ளனர்....அப்பொழுதெல்லாம் இது இப்படி பூதாகரமாக எதிரொலிக்கவில்லை...இப்பொழுது அந்த மாணவிக்கு நடந்துள்ள இந்த கோர சம்பவம் இந்தியாவின் தலைநகரமாம் டெல்லி யில் என்பதால் கூடுதல் கவனம் பெறுகிறது. அதுவும் ஊடகங்கள் அதிகமாக ஒப்பாரி வைக்கின்றன...இப்பொழுது வைத்து என்ன பயன்? பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் ஒவ்வொரு அநீதிக்கும் இப்படி ஒப்பாரிவைத்து இருந்தால் எதாவது பலன் கிடைத்து இது போன்ற சம்பவம் நடக்காமல் இருந்திருக்கும். ஆனால் நமது ஊடங்கள் தலைகீழ்...எது அதிகமாக மக்களால் பேசப்படுகிறதோ அதனை சார்ந்து செய்தி வெளியிட்டு தங்கள் கல்லாவை நிரப்பி கொள்ளவதே முதல் வேலையாக கொண்டுள்ளன.

இதனை தான் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ மறைமுகமாக கூறியுள்ளார்..."மாணவிக்கு நடந்திருப்பது மிகப் பயங்கர கொடுமைதான் அதை மறுப்பதற்கில்லை. ஆனால், இதே சம்பவம் இந்திய கிராமங்களில் நடந்திருந்தால் இதே அளவுக்கு கண்டன அலை எழுந்திருக்குமா" என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கேட்பது மிகச்சரி என்றாலும் அனைவரின் இந்த கண்டனத்தை புறந்தள்ளி விடமுடியாது..ஏதோ இந்த மாணவிக்கு நடந்திருக்கும் இந்த சம்பவத்தின் மூலமாவாது ஒட்டுமொத்த பெண்களுக்கும் ஒரு பாதுகாப்பு ஏற்ப்பாட்டை செய்யவேண்டும் என்ற நோக்கில் நாம் இதனை அணுக வேண்டும்.....அதுவும் நமது இந்திய பாராளுமன்றமும் மற்றும் ஊடகங்களின் ஆதரவும் ஒன்றுசேரும்போது அதனை சாதகமாக பயன்படுத்தி இது போன்ற ஆநீதிகள் பெண்களுக்கு இனிமேலும் நடக்காமல் பாதுகாக்க ஆவணம் செய்யவேண்டும். செய்வார்களா? இல்லை பெண்களுக்கு எதிரான பல லட்சம் சம்பவங்களில் இதுவும் கலந்து காணமல் போய்விடுமா...பொறுந்திருந்து பார்ப்போம்.


Tuesday, December 18, 2012

சத்தியமூர்த்தி அய்யரின் பரம்பரையினர் தேவடியாள்களாக இருந்து, அந்தமோட்ச லோகத்துக்குப் போகட்டுமே..

பார்ப்பனரல்லாத பெண்களை கோயிலில் விபசாரம் செய்ய வைத்த...தேவதாசி மசோதா ஒழிப்பின் ஒரு முக்கிய நிகழ்வுவை பல இடத்தில் கூறி இருந்தாலும்...மீண்டும் அது பற்றி ஒரு மீள் பதிவு.


நீதிக் கட்சி ஆட்சியில் (1930) தேவதாசி ஒழிப்பு மசோதாவை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கொண்டு வந்தபோது,

திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர்வாள் பஞ்சக்கச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு, பூணூலை முறுக்கிக் கொண்டு இப்படித்தான் சட்டமன்றத்திலே முழங்கினார்.


கோயில்களிலே தேவதாசிகளாக இருப்பது, தேவர்களுக்கு அடியார்களாக இருப்பது என்பது சாதாரண காரியமல்ல; அது தெய்வத் தொண்டு இந்தப் பிறவியில் தேவதாசிகளாக இருந்தால், அடுத்த ஜென்மத்தில் மோட்சம் கிடைக்கும் - தெய்வ காரியத்தில் அரசு தலையிடக் கூடாது என்று கூச்சல் போட்டார்.

தந்தை பெரியாரிடம் அறிவுரை கேட்டார் டாக்டர் முத்துலட்சுமி - மறுநாள் அதன்படி சட்டமன்றத்தில் பேசினார்.

`மோட்ச லோகம் செல்வதுபற்றி திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் நேற்று அவையிலே பேசினார். இதுவரை எங்கள் குலப் பெண்கள் - தேவர்களுக்கு அடியார்களாக இருந்து, எங்கள் பெண்களே தொடர்ந்து மோட்சத்துக்குப் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.

இனிமேல் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யரின் பரம்பரையினர் கோயிலுக்குப் பொட்டுக் கட்டி விடப்பட்டு, தேவடியாள்களாக இருந்து, அந்தமோட்ச லோகத்துக்குப் போகட்டுமே - அதில் எங்களுக்கு எந்தவித அட்டியும் இல்லை என்று சொன்னாரே பார்க்கலாம்

வாயாடி சத்தியமூர்த்தி வாயில் ஆயிரம் ஊசிகள் போட்டுத் தைத்தது போல அமுங்கினி போல உட்கார்ந்தார்.


நன்றி: விடுதலை, 09-12-2007



Tamil 10 top sites [www.tamil10 .com ]