வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, May 01, 2015

அவர்கள் பிரச்சனை அவர்களுக்கு...

நாட்டுல விவசாயிகள் மேகதாட்டு ஆணை, காவிரி பிரச்சனை என்று போராடுகிறார்கள். போக்குவரத்து ஊழியர்கள் போதுமான ஊழியர்கள் இல்லை பணி சுமை என்று கூறி போராட்டம் செய்கிறார்கள்.இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான போராட்டம் நடக்கிறது. இது அனைத்தும் மக்கள் நலன் சார்ந்தது.அந்த பணியில் தொய்வு என்றால் மக்களுக்கு பாதிப்பு என்பது அதிகம்.
ஆனா பாருங்க, இன்று(29-04-2015) காலையில் ஒரு செய்தி பார்த்தேன், அர்ச்சக பார்ப்பனர்கள் பூஜைக்கு அனுமதி வேண்டி உண்ணாவிரதம் என்று. இவர்களுக்கு போராட்டம் கூட எந்த ரூபத்தில் வருது பார்த்தீர்களா?
தந்தை பெரியார் ஒன்றை கூறுவார், இந்த நாட்டில் முடி திருத்துபவர் இல்லை என்றால் திண்டாட்டம். சலவை தொழிலாளி இல்லை என்றால் திண்டாட்டம். உழவன் இல்லை என்றால் திண்டாட்டம். துப்புரவு பணி செய்பவர் இல்லை என்றால் திண்டாட்டம். ஆனால், இந்த அர்ச்சக பார்ப்பான் இல்லை என்றால் என்ன நட்டம் வந்துட போவுது என்று கூறுவார்கள். தந்தை பெரியார் இதை குலத்தொழிலை உறுதி படுத்த கூறியதாக எடுத்து கொள்ள கூடாது...பார்ப்பனர்கள் செய்யும் வேலையில் துளி கூட மக்களுக்கு பயன் கிடையாது இருந்தாலும் அவன் தான் உச்சாணி கொம்பில் இருக்கிறான்..உடலுழைப்பை செலுத்தி பணி செய்யும் நம்ம ஆட்கள் மரியாதை குறைவாக நடத்த படுகிறார்கள் என்பதை உணர்த்தவே அய்யா இதை எடுத்து கூறியுள்ளார்கள்.


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]