வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, December 19, 2012

பெண்களுக்கு எதிரான வன்முறை..இனியாவது குறையுமா?


நமது சமுகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கிறார்களோ அவை அத்துனையும் அனைத்து சமுகத்து பெண்களும் அனுபவிக்கிறார்கள் என்று தந்தை பெரியார் கூறி இருக்கிறார்....பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இந்த சமுகம் இன்னமும் செய்துகொண்டு தான் இருக்கிறது. அது மதத்தின் பேரால், சாதியின் பெயரால், குடும்ப கவுரவத்தின் பெயரால், பாலியல் வக்கிர சம்பவத்தினால் என்று அடுக்கி கொண்டே போகலாம். ரெண்டு நாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த சம்பவம் மட்டும் காட்டு தீ போன்று எங்கும் பரவியுள்ளது.அது பற்றி ஒரு பார்வை.

டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் ஞாயிறு இரவு பலாத்காரம் செய்யப்பட்ட மருத்தவ மாணவி டெல்லி சரப்தர்ஜங்
பற்றிய செய்தி பாராளுமன்றம் வரை எதிரொலித்து உள்ளது. மிகப்பெரிய ஆச்சரியம் தான் என்றாலும் மறுபுறம் இதனை வரவேற்க வேண்டியது பெண்ணுரிமைக்கு குரல் கொடுக்கும் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும். இது நாள் வரை எவ்வளவோ பெண்கள் இது போன்ற சம்பவங்களில் சிக்கி தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர்...உயிரை பறிகொடுத்துள்ளனர்....அப்பொழுதெல்லாம் இது இப்படி பூதாகரமாக எதிரொலிக்கவில்லை...இப்பொழுது அந்த மாணவிக்கு நடந்துள்ள இந்த கோர சம்பவம் இந்தியாவின் தலைநகரமாம் டெல்லி யில் என்பதால் கூடுதல் கவனம் பெறுகிறது. அதுவும் ஊடகங்கள் அதிகமாக ஒப்பாரி வைக்கின்றன...இப்பொழுது வைத்து என்ன பயன்? பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் ஒவ்வொரு அநீதிக்கும் இப்படி ஒப்பாரிவைத்து இருந்தால் எதாவது பலன் கிடைத்து இது போன்ற சம்பவம் நடக்காமல் இருந்திருக்கும். ஆனால் நமது ஊடங்கள் தலைகீழ்...எது அதிகமாக மக்களால் பேசப்படுகிறதோ அதனை சார்ந்து செய்தி வெளியிட்டு தங்கள் கல்லாவை நிரப்பி கொள்ளவதே முதல் வேலையாக கொண்டுள்ளன.

இதனை தான் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ மறைமுகமாக கூறியுள்ளார்..."மாணவிக்கு நடந்திருப்பது மிகப் பயங்கர கொடுமைதான் அதை மறுப்பதற்கில்லை. ஆனால், இதே சம்பவம் இந்திய கிராமங்களில் நடந்திருந்தால் இதே அளவுக்கு கண்டன அலை எழுந்திருக்குமா" என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கேட்பது மிகச்சரி என்றாலும் அனைவரின் இந்த கண்டனத்தை புறந்தள்ளி விடமுடியாது..ஏதோ இந்த மாணவிக்கு நடந்திருக்கும் இந்த சம்பவத்தின் மூலமாவாது ஒட்டுமொத்த பெண்களுக்கும் ஒரு பாதுகாப்பு ஏற்ப்பாட்டை செய்யவேண்டும் என்ற நோக்கில் நாம் இதனை அணுக வேண்டும்.....அதுவும் நமது இந்திய பாராளுமன்றமும் மற்றும் ஊடகங்களின் ஆதரவும் ஒன்றுசேரும்போது அதனை சாதகமாக பயன்படுத்தி இது போன்ற ஆநீதிகள் பெண்களுக்கு இனிமேலும் நடக்காமல் பாதுகாக்க ஆவணம் செய்யவேண்டும். செய்வார்களா? இல்லை பெண்களுக்கு எதிரான பல லட்சம் சம்பவங்களில் இதுவும் கலந்து காணமல் போய்விடுமா...பொறுந்திருந்து பார்ப்போம்.


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]