வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, December 18, 2012

ஜாதிக் கலவரங்களின் சூத்ரதாரி யார்?


ஒருத்தர் என்னிடம் கேட்டார்...நீங்க பார்ப்பனர்களை மட்டுமே திட்டுரின்களே...இந்த ஊர்ல சாதி கலவரங்கள் ஏற்ப்படுவது யாரால் என்று கேட்டார்? நான் திரும்ப கேட்டேன்; அக்கிரகாரத்தில் அமைதியாக, தனியாக, அனைத்து வசதிகளையும் காலம் காலமாக அனுபவித்து கொண்டு உட்கார்திருக்கும் பார்ப்பான் எதுக்கு நம்ம கிட்ட வந்து சண்டை போட வேண்டும்? நம்ம ஆட்களை சாதி மூலம் பிரித்து வைத்து அடிச்சுக்க வைத்தது அவன்தானே....பிறகு அவன் எதுக்கு நேரடியாக சண்டை போடவேண்டும்....எருதுகளின் ஒற்றுமையை பிரித்து சிங்கம் வேட்டையாடும் தந்திரம் தான் பார்ப்பான் தந்திரம் என்று கூறினேன்.....சரி அந்த தோழர்க்கு மட்டுமல்ல..மற்ற சிலரும் இதே போல் நினைக்கிறார்கள்...இதோ அவர்களுக்காக மேலும் சில விளக்கங்கள்....ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கோள் காட்டிய "ஏணிப் படிக்கட்டு ஜாதி அமைப்பு முறையில் ஜாதிக் கலவரங்களின் சூத்ரதாரி யார்?" என்ற கீழ்க்கண்ட விளக்கத்தையும் தருகிறேன்.
அம்பேத்கர் மிக அழகாக, சொன்னார்; தந்தை பெரியார் கருத்தும், அம்பேத்கர் கருத்தும் மாறுபட்ட கருத்தல்ல; இரண்டு கருத்துகளும் ஒரே மாதிரி. Graded inequality.
அடுக்குமுறை - ஏணிப் படிக்கட்டில், மேலே ஒருவன் நிற்கிறான்; அடுத்தபடிக்கட்டில் இன்னொருவனை நிற்க வைத்துவிட்டான்; அதற்கடுத்த படிக்கட்டில் இன்னொருவன் நாலாவது படிக்கட்டில் கீழே ஒருவன் நிற்கிறான்; அய்ந்தாவது படிக் கட்டில் பஞ்சமர் என்று சொன்னான்.
மேல் படிக்கட்டில் நிற்கின்றவன் மிக சாமர்த் தியமாக கீழே உள்ளவர்களை எல்லோரையும் பிரித்து வைத்துவிட்டு, ஏணியை லேசாக ஆட்டி விட்டான். அப்படி ஆட்டினால் என்னாகும்? இரண்டாவது ஆளு, கீழே உள்ள மூணாவது ஆள்மீது வேகமாக விழுந்தான்;
மூணாவது ஆள் நான்காவது ஆள்மீது மிக வேகமாக விழுந்தான்; நான்காவது ஆள் கீழே உள்ள அய்ந்தாவது ஆள்மீது இன்னும் வேகமாக விழுந்தான். கீழே உள்ள அய்ந்தாவது ஆள் கீழே விழுந்து அடி பட்டவுடன், அய்ந்தாவது ஆளும், நான்காவது ஆளும் சண்டை போட்டுக் கொண்டு அடிதடியில் ஈடுபட்டனர்.
ஏணியில் முதல் படிக்கட்டில் இருக்கிறானே ஒன்றாவது ஆள் - ஏணியை லேசாக அசைத்தவன் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மொழியில் சொல்ல வேண்டுமானால் மேற்படியான் அவன் என்ன கேட்கிறான் என்றால், என்னங்க உங்களுக்குள் தகராறு என்று. கீழே விழுந்தவன் கேட்கிறான், எங்களுக்கும், முதல் படிக்கட்டில் இருக்கிறவனுக்கும் எப் பொழுதும் சண்டை வருவதில்லையே என்று!
எப்படி சண்டை வரும்? பக்கத்தில் எவன் நெருங்குகிறானோ அவனோடுதானே சண்டை வரும். இதுதான் நாட்டில் நடைபெறக்கூடிய ஜாதிக் கலவரங்கள், ஜாதி மோதல்கள், இந்தப் பிரிவுகள் இப்படித்தான் வைத்திருக்கிறார்கள்.இதனைப் புரிந்துகொள்வதற்கே பெரியாரு டைய கண்ணாடி தேவை; இதனைப் புரிந்து கொள்வதற்கே பெரியாருடைய சிந்தனை தேவை.
இதற்க்கு மேலும் புரியாமல் அல்லது புரிந்து கொள்ளாமல்....பார்ப்பானுக்கு வக்காலத்து வாங்கி கொண்டு...பார்ப்பானுக்கு அடிமையாக இருந்துகொண்டு....சாதி வெறியர்கள் செய்யும் தவறை பயன்படுத்தி பார்ப்பானுக்கு சப்பைக்கட்டு கட்டினால்...உங்களை விட முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது.


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]