வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, January 27, 2014

முஸ்லீம் லீக் மதவாதமா?

முஸ்லீம் லீக் என்று மதத்தின் பெயராலேயே கட்சி வைத்திருக்கிறார்களே...அவர்களுடன் தி.மு.க வும் இடதுசாரிகளும் மாறி மாறி கூட்டணி வைக்கிறார்களே..அது மதவாதம் இல்லையா? என்று தன்னை பெரிய அரசியல் அறிவாளி என்று சொல்லும் காவியருவி மணியன் பேசியுள்ளார். இதை கேட்டு வாயால் சிரிக்க முடியவில்லை

மதவாதம் என்ன என்பது தெரிந்தே...காவிகளுக்கு தேர்தல் புரோக்கர் என்கிற போதையில் பேசியுள்ளார் காவியருவி மணியன்....தங்களை பாதுகாத்து கொள்ளவும், தங்களுக்கு மறுக்கப்படும் அடிப்படை உரிமைகளை பெறவும் ஒரு குழுவாக ஒன்று சேர்வதும்...அதே நேரத்தில் மற்றவர்களை ஒடுக்கவும், அவர்களை அழிக்கவும், மற்றவரது அடிப்படை உரிமைகளை தட்டி பறிக்கவும் ஒரு கட்சி இருக்குமென்றால் அது புறக்கணிக்க பட வேண்டிய ஒன்று...இதில் இரண்டாவது வகை தான் ஆர்.எஸ்.எஸ் காவி கும்பல். இந்த அடிப்படை கூட தெரியாதவரா காவியருவி மணியன்?

முஸ்லீம் லீக் என்று பெயர் வைத்துகொண்டு எந்த ராமர் கோயிலை இடித்தார்கள்? எந்த பெரும்பான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை தடுத்தார்கள்? சொல்ல முடியுமா மணியன். offense மற்றும் defense க்கு இயக்கம் நடத்துவது மணியனுக்கு புரியாதா?

ஆணாதிக்கத்தின் கொடுமையால் அடிமைபடுத்தபட்ட பெண்கள் ஒரு அமைப்பாக செயல் படுகிறார்கள் என்று...ஆண்களும் ஒரு அமைப்பு ஏற்படுத்தி வைத்து கொண்டு அதற்கு வியாக்கியானம் சொல்ல முடியுமா? ஆதிக்கம் செலுத்தும் பார்பனர்கள் சங்கம் வைத்து கொள்வதற்கும்...ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை ஒரு அணியில் இணைத்து போராடுவதற்கும் வேறுபாடு இல்லையா? இதெல்லாம் தெரியாதா மணியா??? உங்களுக்கு காவி போதை தலைக்கேறிவிட்டது. கொஞ்ச நாளைக்கு பேசுவதை நிறுத்திகொள்ளுங்கள்.


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]