வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, February 20, 2010

சமூக நீதிக்குச் சாவுமணியா?

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட இருப்ப-தாகக் கூறப்படும் உயர் கல்விக்கான தேசிய உயர்கல்வி மசோதா நாட்டில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.


தமிழ்நாடு அரசின் கருத்து இதில் உடனடி-யாகத் தெளிவுபடுத்தப்பட்டு இருப்பது ஒரு புறம்; சமுதாய இயக்கமான திராவிடர் கழகத்தின் கருத்தினைத் தெளிவாக, காலந்தாழ்த்தாது பட்டுத் தெறித்தாற் போல செய்தியாளர்களை அழைத்து விரிவாகக் கூறிவிட்டார்_ திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கலைஞர் தொலைக்காட்சியிலும் பிரத்யேக-மாக அளித்த பேட்டியிலும் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து காட்டியுள்ளார்.

உத்தேச சட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு புயலைச் சந்திக்கக் கூடிய சூழல்தான். மத்திய அரசோடு மாநிலங்களை மோதவைக்கும் ஒரு நிலையை இது தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், இட ஒதுக்கீடு பிரச்சினை மிக முக்கியமானது. கல்வி-யிலும், வேலை வாய்ப்பிலும் தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

இந்தப் புது சட்டத்தில் இது குறித்துப் பேசப் படவில்லை. சமூக நீதியில் கை வைக்கும் பொழு-தெல்-லாம் தந்தை பெரியார் அவர்களின் தமிழ் மண் எரிமலையாகத் தீக் குழம்பைக் கக்கும் என்பதை வரலாறு தெரிந்தவர்களும், அரசியல் தெரிந்த-வர்களும் கண்டிப்பாக அறிவார்கள்.

இந்தப் பிரச்சினையில் கைவைத்த கட்சிகள் தேர்தலில் மண்ணைக் கவ்வியுள்ளன.. சமூக நீதியில் ஆதரவுக் கரம் நீட்டும் கட்சிகள் நிலைத்து நீடித்து இருக்கின்றன.

இடஒதுக்கீட்டில் வருமான வரம்பு ஆணை-யைக் கொண்டு வந்த எம்.ஜி.ஆர். அவர்கள் 1980 இல் மக்களவைத் தேர்தலில் முதன்முத-லாகத் தோல்வியைத் தழுவினார் என்பதை மறந்து-விடக் கூடாது. தமிழ்நாட்டில் 39 இடங்-களில் 37 இடங்களில் தோல்வியைத் தழுவினார்.

தோல்விக்கான காரணம் இட ஒதுக்கீட்டில் தவறான அணுகுமுறையைப் பயன்படுத்தியது-தான் என்பதை உணர்ந்த நிலையில், தவறினைத் திருத்திக் கொண்டு, அதுவரை 49 விழுக்காடாக இருந்த இட ஒதுக்கீட்டு சதவிகிதத்தை 68 ஆக உயர்த்தினார். (பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 விழுக்காடு).

மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு கல்வியில் 27 சதவிகித இட ஒதுக்-கீட்-டுக்கான சட்டம் இயற்றப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில், புதிய சட்டத்தின்மூலம் கல்வியில் 27 விழுக்காடு இடத்தை பிற்படுத்தப்பட்டோருக்கு அளிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் கூட, அப்பொழுதும் தமிழ் மண் அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை; காரணம் ஏற்கெனவே தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறதே!

எந்த வகையில் பார்த்தாலும் இந்தச் சட்டம் தமிழ்நாட்டில் நல்ல அளவுக்கு அடிவாங்கும் என்பதில் அய்யமில்லை. அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலும் இதன் காரணமாகப் பெரும் பிளவு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

அதன் காரணமாக மத்திய ஆட்சிக்கே நெருக்-கடி ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்-கில்லை.

அதுவும் இப்பொழுது மனித வள மேம்-பாட்டுத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய கபில்-சிபல் சமூகநீதியில் உயர்ஜாதி மனப்பான்மை கொண்டவராகவே இருந்து வருகிறார்.

திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகத் தொடக்க விழாவில் அவர் பங்கு கொண்டபோது, முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள், தமிழ்-நாட்-டுக்கு 50 விழுக்காட்டு இடங்கள் அளிக்க-வேண்டும் என்றும், சமூக நீதிக்கு இடம் இருக்கவேண்டும் என்றும் கூறினார்.

அதனை அந்த இடத்தில் மறுக்க முடியாத மத்திய அமைச்சர் கபில் சிபல் செய்தியாளர்-களிடம் பேசுகையில், மத்தியப் பல்கலைக் கழகத்தில் இட ஒதுக்கீட்டுக்கு இடமில்லை என்று சொன்னதை இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.

புதிய சட்டம் சமூக நீதிக்குச் சாவு மணி அடிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கூறிய கருத்து இந்தியா முழுமையிலும் பெரும் அலையை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தாலும், காங்கிரஸ் கட்சியும் கூட இந்தத் திட்டத்தை எதிர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

உள்ளபடியே இது கட்சிகளையும் தாண்டிய சமூகநீதிப் பிரச்சினையாகும்

விடுதலை தலையங்கம் (18.02.2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]