வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, February 07, 2010

பாரதியார் பார்வையில் இராம-இலட்சுமணர்கள்!

1. பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்து விட்டதற்காக தன் தந்தையான தசர-தனை எதிர்த்து இராமன் கலகம் செய்தான்.


2. அதனால் கோபமுற்ற தசரதன் இராமன், இலட்சுமணன் ஆகிய இரு-வரையும் நாட்டை விட்டே துரத்தி அடித்து விட்டான்.

3. அப்படி துரத்தி அடிக்கப்பட்ட இராமனும் -_ இலட்சுமணனும் மிதி-லைக்-குப் போய் ஜனக மகாராஜனிடம் சரணடைந்தார்கள். அவன் இவர்-களைக் காப்பாற்றி வருகையில் அவனுடைய மகள் சீதையின் அழகில் மயங்கிய இராமன் சீதையை திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு இலட்சுமணனுடன் தண்டகாரண்யம் வந்து சேர்ந்தனர்.

4. அங்கு இருந்த முனிவர்களுக்கும் _ ரிஷிகளுக்கும் இராமன் _ இலட்சுமணன் இருவரும் மிகுந்த தொல்லை கொடுத்தனர். அவர்களின் யாகங்களைக் கெடுத்தனர்.

5. இதை அறிந்த சூர்ப்பனகை இராமன் -_ இலட்சுமணன் இருவரையும் _ பிடித்துக் கட்டிக் கொண்டு வரும்படி தன் படைகளுக்கு உத்தரவு போட்டாள். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவர்கள் அரச குமாரர்கள் என்ப-தாலும் -_ சிறு வயதினர் என்பதாலும் சூர்ப்பனகை மன்னித்து விட்டாள். அவர்களுடன் வந்த சீதை சூர்ப்பன-கையுடன் தனிப்பட்ட முறையில் இராமன் தன்னை வலிமையாலே தூக்கிக் கொண்டு வந்து விட்டதாகவும். தான் மீண்டும் தந்தையிடமே போய் விட விரும்புவதாகவும் சொன்னதன் பேரில் அவ்வாறு மிதிலைக்கு அனுப்பும் எண்ணத்துடன் -_ சீதையை இராவண-னிடம் அனுப்பி வைக்கிறாள்.

இராவணனும் அவ்வாறே சீதையை மிதிலைக்கு அனுப்ப நல்ல நாள் பார்த்-தான். ஆனால் அந்த ஆண்டு நல்ல நாளே இல்லாமல் போனதால் சீதையை அனுப்பும் நிகழ்ச்சி தள்ளிப் போனது.

6. சூர்ப்பனகையிடம் இராமன் சீதை எங்கே என்று வினவினான். அவளோ சீதையை மிதிலைக்கு அனுப்பி விட்ட-தாக கூறினாள். அதைக் கேட்ட இலட்-சு-மணன் நீ எப்படி சீதையை மிதி-லைக்கு அனுப்பலாம் என பலவாறு நிந்திக்கலானான். அதனால் கோபமுற்ற சூர்ப்பனகை தன் இடுப்பில் செருகி வைத்திருந்த கத்தியை எடுத்து இலட்சுமணனின் இரண்டு காது-களையும் - _ கால் சட்டை விரல்களை-யும் நறுக்கி விட்டாள். அதைக் கண்ட இராமன் சூர்ப்பனகையின் வீரத்தை மெச்சி இராமன் இவள்மேல் மோகம் கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்கிறாயா எனக் கேட்டான். அவள் தன் அண்ணன் இராவணன் கோபித்துக் கொள்வானே என மறுத்துவிட்டாள்.

என்ன தோழர்களே, படித்ததும் தலை சுற்றுகிறதா? ஆம் எனக்கும் அப்படித்தான் ஏற்பட்டது. எழுதி இருப்பது பாரதியாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டு பல முறை பார்த்து உறுதி செய்து கொண்டேன்.

சில வேடிக்கைக் கதைகள் என்ற முறையில் ஒரு புராணீகன் - _ வக்காமுகி சாஸ்திரி என்பான் சொன்ன கதை என கூறப்பட்டிருப்பினும் முழுக்க முழுக்க இது பாரதியாரின் எழுத்துகளே ஆகும். அவதார புருஷன் இராமன் என இந்த தேசமே கொண்டாடிக் கொண்டிருக்-கும் போது அந்த இராமன் பற்றிய மாற்றுக்கதையை இராமனை மட்டமாக சித்தரிக்கும் நிகழ்வுகளை பாரதியார் எழுதியதற்கு ஏதாவது ஒரு காரணம் இருந்-திருக்க வேண்டும். கடலினைத் தாவும் குரங்கும் - _ வெம்

கனலிடைப் பிறந்த செவ்விதழ்பெண்ணும்
வடமலை தாழ்ந்ததி னாலே -_ வந்துசமன் செய்த குட்டை முனியும்
நதியினிலே நீந்திப் போய் _ ஒரு
நாகர்குல பாம்பின் மகளை
விதியுறவே மணம் முடிந்த வெந்திரல்


எனக் கூறி இராமாயணமும் _ பாரதமும் இன்ன பிற புராண நிகழ்வுகளும் கற்பனையே என்றும் கூறியிருக்கிறார் பாரதியார்.
எத்தனையோ இராமாயணக் கதைகள் பலரால் எழுதப்பட்டுள்ளன. அவரவர்கள் தன் கற்பனைக்கு ஏற்ற வகையில் பலவாறாக எழுதப்பட்-டுள்ளன. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட நிலைகூட உள்ளது. இதையெல்லாம் பல மொழி அறிந்த பாரதியாருக்கு தெரிந்தே இருக்கும். எனவே அவர் தன் பங்கிற்கு ஒரு கற்பனை. இராமாயணத்தைக் கூறி இருக்கலாம். இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் _ எல்லோரும் நினைப்பதுபோல இராமன் கதை நடந்த கதை அல்ல. அப்படியே இராமன் என ஒரு மனிதன் இருந்-திருந்தாலும் அவனைப்பற்றி _ அவன் செயலைப்பற்றி மனித சக்திக்கு மீறிய செயலைப்பற்றி செய்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படி இல்லாத ஒன்றுக்காக இன்று நம் நாட்டிலே மதச் சண்டை-களும் _ குரோத உணர்வுகளும் ஏற்படு-வது சரியாகுமா? மணல் திட்டை _ இயற்கையாக உள்ளதை _ இராமன் பாலம் எனக் கூறி சேது சமுத்திரத் திட்-டத்தையே முடக்குவது எவ்வகையில் நியாயம்?

ஆதாரம்: பாரதியார் கதைகள் _ (வர்த்தமானன் பதிப்பகம்) பக்கம் 334 முதல் 339 வரை) (தகவல்: வேலை பொற்கோவன் _ வேலம்பட்டி)
நன்றி விடுதலை ஞாயிறு மலர் (06/02/2010)

2 comments:

ஸ்ரீநி said...

ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha
thozhar mudhal murai unga pagela oru comedy publish pannirukeenga - nalla irukku

Muthukumara Rajan said...

ராமர் , ஒரு ஒழுக்கசீலர். வாழ்வில் ஒரு ஒழுக்கத்துடன் வாழ்தவர் . தன வாழ்வில் அரச சுகங்களை விட்டு வாழ்தவர் வாழ்வில் எந்த நிலையுலும் மனிதன் எப்படி வாழவேண்டும் என் வாழ்ந்து காட்டியவர் .

அவரை வழிபடுவது மிக சரி .

இந்து மதத்தில் மனிதன் இறை நிலை அடைவதை பற்றி பல நுறு நிகழ்வுகள் உள்ளன.( குறிப்பு : நிகழ்வுகள் - கதைகள் அல்ல ).

நாத்திக மக்களுக்கு என்ன ஆச்சு இவ்வளவு அறிவிழந்து விட்டேர்களே .. வருத்தமாக உள்ளது

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]