வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, February 18, 2010

சி.நடேசனார், ம.சிங்கரவேலனார் - நன்றியுடன் நினைவு கூர்வோம்.

திராவிட இயக்கத்திற்குக் கால்கோள் நாட்டிய சின்னக்காவனம் (சி) நடேசனார் அவர்கள் நினைவுநாள் இந்நாள் (1937).


1912ஆம் ஆண்டு மெட்-ராஸ் யுனைட்டெட் லீக் என்னும் அமைப்பு உரு-வாக்-கப்பட்டு அதன் செயலாள-ராகவும் அவர் இருந்தார்.

தன்னுடைய சொந்த முயற்சியில், சொந்த செல-வில், சொந்த இடத்தில் இத்தகைய அமைப்பு நடத்தியவர் இவர். 1913 இல் அந்தச் சங்கத்தின் பெயர் திராவிடர் சங்கமாக மாற்றப்பட்டது.

பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் சென்னையில் தங்கிப் படிக்க வேண்டுமா-னால் அவர்களுக்கு விடுதி-கள் கிடையாது. பார்ப்பனர்-கள் நடத்தும் விடுதிகளில் பார்ப்பனர் அல்லாதார் தங்கிட அனுமதியில்லை. வேண்டுமானால் எடுப்புச் சாப்பாடு வாங்கிக்கொள்-ளலாம்.

(அன்றைய மவுண்ட் ரோடு, ஜியார்ஜ் டவுனில் உள்ள பார்ப்பனர் உணவு விடுதிகளில் தொங்கும் விளம்பரப் பலகையில் பஞ்சமர்களும், நாய்களும், பெருவியாதியஸ்தர்களும் உள்ளே பிரவேசிக்கக்-கூடாது என்று எழுதப்பட்டு இருந்தது என்பதை நினைக்-கத் தக்கதாகும். குடிஅரசு, 25.5.1935)

இந்த நிலையில் பார்ப்-பனர் அல்லாதார் சென்னை-யில் தங்கிப் படிக்க ஒரு விடுதியினை (திராவிடர் சங்க விடுதி (DRAVIDIAN ASSOCIATION HOSTEL) ஒரு-வர் தொடங்கினார்_நடத்தி-னார் என்றால் அது சாமானிய மானதுதானா? பார்ப்பனர் அல்லாத படித்த மக்கள் மனம் என்னும் மேடையில் சிம்மாசனம் அமைத்து, அவரை அமர வைத்துப் போற்ற வேண்டும் அல்லவா!

சென்னை சட்டமன்றத்-தில் அவரால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை (5.2.1921) இன்று நினைத்துப் பார்த்தாலும், அவரின் சமூக-நீதிச் சாசனம் மணியாய் ஒலிக்கும்.

அவரவர்களுக்குக் கிடைக்க வேண்டிய விகி-தாச்சார உரிமை கிடைக்-கும் வரையில் இனிமேல் அரசாங்க உத்தியோகங்-கள் யாவும் பார்ப்பனர் அல்லாதாருக்கே கொடுக்க வேண்டும் என்-றும், எல்லா டிபார்ட்டு-மென்-டுகளிலும், எல்லா-வித-மான கிரேடு உத்தி-யோகங்களும் பார்ப்பனர் அல்லாதாருக்கு கொடுக்-கப்பட வேண்டும் என்றும் இந்தக் கவுன்சில் அரசாங்-கத்திற்கு சிபாரிசு செய்-கிறது என்பது தான் அந்தத் தீர்மானம்.

நடேசனார் சட்டமன்றத்-தில் 1920_26, 1935_1937 கால கட்டங்களில் இறக்கும் வரை உறுப்பினராக இருந்த பெருமைக்குரியவர் ஆவார்.

சி.நடேசனார் அவர்-களின் நினைவுநாள்தான் சிந்தனைச் சிற்பி ம.சிங்கார-வேலரின் பிறந்தநாள் (1860).

இந்தியாவில் பொது-வுடைமைக் கட்சிக்கு வித்-திட்டவர். தந்தை பெரியாரின் நண்பர் அவரின் சிந்தனை-மிகு கட்டுரைகளை தாம்-நடத்திய குடிஅரசு இதழ் மூலம் எழுதும் வாய்ப்பினை தந்தார் தந்தை பெரியார். தமது கருத்துக்கு மாறாக அவரால் எழுதப்பட்ட கட்டுரைகளையும் குடிஅர-சில் இடம் அளித்த சான்-றாண்மை தந்தை பெரியார் அவர்களுக்கு உண்டு.

பொருளாதார ஏற்றத் தாழ்வு ஒழிக்கப்பட ஜாதி ஒழிப்பு அவசியம் என்ற கருத்தைச் சொன்ன பொது-வுடைமைவாதி அவர்.

மே தினத்தை 1923ஆம் ஆண்டிலேயே அறிமுகப்ப-டுத்-தியவரும் அவரே.

இவ்விரு பெருமகனார்-களையும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.

- விடுதலை (18.02.2010) மயிலாடன்

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]