வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, February 02, 2010

வாக்காளர் அடையாள அட்டையிலும் மதம்...

வாக்காளர் அடை-யாளப் பட்டியலில் ஒளிப்-படம் (Photo) இடம்பெற்றி-ருப்பதில்கூட மத சாயம் பூசப்படுவது வேடிக்கை-தான்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அஜ்மல்கான் என்பவர் தமிழகத் தேர்தல் ஆணை-யத்துக்கு எதிராக உச்சநீதி-மன்றத்தில் வழக்கு ஒன்-றைத் தாக்கல் செய்துள்-ளார்.
முசுலிம் சமூகத்தில் பெண்கள் பர்தா அணி-வதும், முகத்தை மறைக்க ஹிஜாப் அணிவதும் மத சம்பிரதாயமாம். பெண்-களை அவர்களின் கண-வன் மற்றும் உறவினர்கள் மட்டுமே பார்க்கவேண்-டும் என்பது அய்தீகமாம்.
ஆனால், முசுலிம் பெண்கள் பர்தா அணியா-மலும், ஹிஜாப் அணியா-மலும் உள்ள ஒளிப்படங்-கள் வாக்காளர் பட்டிய-லில் அச்சிடப்பட்டுள்ள-தாம்! இது அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்-றுள்ள சட்டப் பிரிவு 25 இன்படி மதப் பாதுகாப்புப் பிரிவுக்கு எதிரானது என்பதுதான் வழக்கு.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்-ணன் மற்றும் நீதிபதி தீபக்வர்மா ஆகியோர் வாக்காளர் அட்டையில் படம் வெளிவந்ததற்கே இப்படி வருத்தப்படுகிறீர்-களே, தேர்தலில் போட்டி-யிட்டால் என்ன ஆகும்? வேட்பாளர்களின் படத்தை வீதிக்கு வீதி ஒட்டுவார்களே, அப்-பொழுது என்ன செய்வீர்-கள் என்ற பொருள் பொதிந்த வினாக்களை எழுப்பியுள்ளனர். வேண்-டு-மானால், வாக்களிப்பதா, வேண்டாமா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் முடிவு செய்துகொள்-ளட்-டும் என்று பந்தை அவர்-கள் பக்கமே தள்ளிவிட்-டனர் நீதியரசர்கள்.
சென்னை உயர்நீதி-மன்-றத்தில் இதே மனுதாரர் 2006 இல் இதே வழக்-கைத் தொடுத்தபோது, அது தள்ளுபடி செய்யப்-பட்டு விட்டது.
இந்தியா முழுமையும் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது; அங்-கெல்லாம் இதுபோல ஒளிப்படங்கள் அச்சிடப்-பட்டுதான் உள்ளன. இங்கு மட்டும் இப்படி ஒரு வினோத வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதை நீதிமன்றத்தில் தமிழகத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் எடுத்துக் கூறவும் பட்டது.

வாக்காளர் உண்மை-யானவரா, போலியா என்று அறிந்து கொள்ளத்-தான் ஒளிப்படம். அதிலும் முகத்தையும், கண்களை-யும் மறைத்துள்ள படத்தை வெளியிட்டால் எப்படி உண்மையை அறிய முடியும்?

மத நம்பிக்கைகள் உலகம் முழுவதும் மாறி வருகின்றன. முசுலிம் மதத்தைச் சேர்ந்த பெண்-களிலும் பல மாற்றங்கள் பல நாடுகளிலும் ஏற்-பட்டே வருகின்றன.

மாறுதல் என்பதுதான் மாறாதது என்பது இன்-னும் ஒரு சிலருக்குப் புரிய-வில்லையே! -

- விடுதலை (02.02.10) மயிலாடன்

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]