வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, June 14, 2020

ஆர்.எஸ்.எஸ். எனும் மர்மதேசம்-1 இந்துத்துவா பிதாமகன் ஆங்கிலேயரின் ஓய்வூதியர்!




பிரபல வழக்கறிஞரும் எழுத்தாளருமான ஏ. ஜி. நூரானி “தி ஆர்.எஸ்.எஸ்.” எனும்  ஒரு நூல் எழுதியிருக்கிறார். “லெப்ட்வேர்ட்”  பதிப்பகம் வெளியிட்டுள்ள இதில் 25 அத்தியாயங்க ளும், 16 பின்இணைப்புகளும் உள்ளன. புத்த கத்தை புரட்டியவுடன் வருவது அண்ணல் அம்பேத்க ரின் இந்த அழியாத சாட்சியம்: “இந்து ராஜ் என்பது  வந்தால் அது இந்த நாட்டிற்கு பேரழிவாக இருக்கும்.  எனவே அதை எப்பாடுபட்டேனும் தடுத்தாக வேண்டும்”. (“பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரி வினை”, 1946) இந்தப் புத்தகத்தை முன்வைத்து நான் தீக்கதிர் முகநூல் வழி ஆற்றிய தொடர் சொற்பொழிவுதான் இங்கே எழுத்து வடிவம் பெறுகிறது.
இந்த நூலில் உள்ள முகவுரையில் ஆர்எஸ்எஸ்  தலைவர் கோல்வால்கருக்கு 1948 நவம்பர் 10ல் பிரத மர் நேரு எழுதிய இந்த வாக்கியங்கள் உள்ளன: “ஆர்எஸ்எஸ் அறிவித்துள்ள நோக்கங்களுக்கும் அதன் உண்மையான நோக்கங்கள் மற்றும் அதனு டன் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் பல வடிவங்க ளிலும் வழிகளிலும் மேற்கொள்ளும் நடவடிக்கை களுக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரிய வில்லை. அதன் உண்மையான நோக்கங்கள்  இந்திய நாடாளுமன்றத்தின் முடிவுகளுக்கும், முன்மொழியப்படும் இந்திய அரசியல்சாசனத்தின் சரத்துகளுக்கும் முற்றிலும் எதிரானவையாகத் தோன்றுகின்றன. எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின்படி அதன் நடவடிக்கைகள் தேசவிரோத மானவை, பல நேரங்களில் சதிகாரத்தனமானவை, வன்முறையானவை”.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆர்எஸ்எஸ் பற்றி தந்த மதிப்பீடுஇது. இதன் அர்த்தம் அதன் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்த மில்லை, அதன் அறிவிப்புகளுக்கும் அதனது ஆட்களின் நடவடிக்கைகளுக்கும் சம்பந்தமில்லை என்பது. உள்ளும் புறமும் ஒன்றாய் இருக்கும் அமைப்பு அல்ல ஆர்எஸ்எஸ். அதனால்தான் அதை மர்மதேசம் என்கிறேன். அதனது வர லாறே அதற்கு ஆதாரமாக இருக்கிறது. நூரானி  பல விபரங்களைத் தந்திருக்கிறார். நானும் கூடுத லாகத் தந்து அதை நிரூபிக்க முனைகிறேன். நூரானி நூலின் முன்னுரை ஒரு கவிதை யோடு துவங்குகிறது. அது: “தோட்டத்திற்கு ரத்தம் தேவைப்பட்டபோது எங்களது கழுத்துக்களே முதலில் அறுக்கப்பட்டன. ஆனாலும் தோட்டத்தில்  இருப்பவர்கள் சொல்கிறார்கள் தோட்டம் அவர்களு டையது, எங்களது அல்ல”. இந்திய முஸ்லிம்க ளின் இன்றைய மனநிலையை இது தெரிவிக்கி றது என்கிறார். அது நிஜமே. இந்திய சுதந்தி ரத்திற்காக ரத்தம் சிந்திய முதல் தியாகிகள் முஸ்லிம்களே, ஆனால் இன்று அவர்களை அந்நி யர்கள் போல பாவிக்கிற கொடுமை நடக்கிறது.
முஸ்லிம்களின் தியாகத்திற்கு முதல் சாட்சி யாக சாவர்க்கரை கொண்டுவந்து நிறுத்துகிறார் நூரானி. “இந்திய சுதந்திரப் போர்-1857” என்று  இந்திய சிப்பாய்களின் கிளர்ச்சி பற்றி ஒரு  நூலை 1909ல் எழுதினார் சாவர்க்கர். அதில்  அவர் கூறினார்: “அந்த சிப்பாய்களுக்கு மௌல்வி கள் போதித்தது, பிராமண பண்டிதர்கள் ஆசிர்வதித்தது, தில்லியின் மசூதிகளிலிருந்தும் காசியின் கோயில்களிலிருந்தும் சொர்க்கத்திற்குச்  சென்ற பிரார்த்தனைகள் என்ன? அவை சுவதர்மம், சுயராஜ்யம் எனும் மகத்தான கோட்பாடு கள். இந்திய சுதந்திரத்திற்கு வந்துள்ளஆபத்தை முதலில் உணர்ந்தவர்கள் புனேயின் நானா பர்னாவி சும் மைசூரின் ஹைதர் அலியும்”.
ஹைதர் அலி என்றால் அவரது வீரஞ்செறிந்த புதல்வர் திப்பு சுல்தானும். அவர்கள்தாம் 1760-1800ல் இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி யாருக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர்கள். இதை  இப்படியாக அங்கீகரித்தார் சாவர்க்கர். அவர்க ளது பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகத்தான் ஆங்கிலேயரை எதிர்த்த சிப்பாய்களின் கிளர்ச்சி  1857ல் ஏற்பட்டது என்றார். அந்தப் போராட்டத்தின்  மைய அச்சாக இருந்தது தில்லியின் கடைசி முகலாய மன்னராகிய பகதூர்ஷா ஜாபர். 82 வயதான  அவருக்கு அதிகாரத்தை மீட்டுத் தருவது என்ற பெயரில்தான் இந்துக்களும் முஸ்லிம்களும் அன்று இணைந்து போராடினார்கள். அந்த முயற்சி  தோல்வியுற்றதும், பகதூர் ஷாவைக் கைது செய்த ஆங்கிலேயர்கள் அந்தத் தள்ளாத வயதில்  அவரை பர்மாவிற்கு நாடு கடத்தினார்கள். 1862ல் அங்கேயே வாடி வதங்கி மாண்டுபோனார். அங்கு  விஜயம் செய்யும் இந்திய ஆட்சியாளர்கள் அவரது  சமாதியில் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இப்படி ஆங்கிலேயரை எதிர்த்த சுதந்திரப் போரில் துவக்கத்திலிருந்தே முஸ்லிம்களின் பங்களிப்பு இருந்தது. இதை சாவர்க்கரும் அங்கீகரித்திருந்தார் என்பது மிக முக்கியமான ஆதாரம், இது சங் பரிவாரத்திற்கு சமர்ப்பணம். கொடுமை என்னவென்றால் இப்படி சிப்பாய்கள் கிளர்ச்சியை வியந்து எழுதிய சாவர்க்கர் விரைவி லேயே ஆங்கிலேயரிடம் சரணாகதி அடைந்தது! நாசிக் மாவட்ட ஆட்சியர் ஜாக்சன் கொலை  வழக்கில் 1910ல் கைது செய்யப்பட்ட சாவர்க்கருக்கு  இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 1911ல் அந்தமான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஒன்றரை மாதத்திலேயே மன்னிப்பு கோரி  ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு கடிதம் எழுத  ஆரம்பித்தார். ஒன்பது ஆண்டுகளில் ஆறு மன்னிப்புக் கடிதங்கள் அனுப்பினார். அந்தமான்  சிறையிலிருந்து இந்திய சிறைக்கு மாற்றப்பட்ட வர் 1924ல் விடுவிக்கப்பட்டார். எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது எனும் நிபந்த னையின் பேரில்.
இதனினும் ஓர் உச்சம் ஆய்வாளர் நிரஞ்சன் தக்லே சொல்வதாக பிபிசிநியூஸ் தமிழ் (28-5-2020)  தெரிவித்திருக்கும் இந்தத் தகவல்: “காந்தி, காங்கிரஸ் மற்றும் முஸ்லிம்களை எதிர்ப்பதற்கு தங்கள் இருவருக்கும் ஒரே நோக்கம் இருப்பதாக  வைஸ்ராய் லின்லித்கோவுடன் சாவர்க்கர் எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆங்கிலேயர்கள் அவருக்கு ஓய்வூதியமாக மாதம்  ரூ .60 வழங்கினார்கள். மாத ஓய்வூதியம் கொடுக்கும்  அளவிற்கு ஆங்கிலேயருக்கு அவர் என்னை சேவை  செய்தார், ஓய்வூதியம் கொடுக்கப்பட்ட காரணம் என்ன என்று பல கேள்விகள் எழுகின்றன. இப்படிப்பட்ட ஓய்வூதியம் பெற்ற ஒரே நபர் சாவர்க்கர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது”.
ஆரம்பத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர் களைத் தனது எதிரியாக பாவித்த சாவர்க்கர் சிறை  வாழ்வின்போது காந்தி, காங்கிரஸ், முஸ்லிம்  களைத் தனது எதிரியாக பாவிக்கத் தொடங்கினார். அதனால்தான் வைஸ்ராயோடு அப்படியாகக் கையெழுத்துப் போட்டு ஓய்வூதியதாரர் ஆனார். இந்த மாற்றம் சித்தாந்தரீதியானதும்கூட. 1923ல் சிறையிலிருந்து  அவர் எழுதிய “இந்துத்துவா-யார் இந்து?” எனும் நூலில் அந்த மாற்றம் துல்லியமாக வெளிப்பட்டது. 1857 சிப்பாய்கள் கிளர்ச்சியை இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் வெளிப்பாடாகப் பார்த்து நூல் எழுதியவர் இப்போது இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தம் எனச் சொன்னார், பிற மதத்தவரை அந்நியராகச் சித்தரித்தார்.
இந்த வகுப்புவாத அரசியலுக்கு அவர் செய்த நாமகரணமே “இந்துத்துவா”. எனினும் ஒரு விஷயத்தை அந்த நூலில் ஒப்புக்கொண்டார். அது: “இந்து மதம் எனப் பொதுப் படையாகச் சொல்லப்படுவதும் இந்துத்துவாவும் ஒன்று அல்ல”. சங் பரிவாரத்தினர் தங்களது சித்தாந்த பிதாமகனின் இந்தப் பிரகடனத்தை மனதில் வாங்க வேண்டும். இது தெரியாமல் இந்து மதமும்  இந்துத்துவாவும் ஒன்று என்று பேசிக் கொண்டி ருக்கிறார்கள்! ஒரு சுவையான செய்தியை நூரானி தனது நூலில் சொல்லியிருக்கிறார். “சாவர்க்கர் ஒரு நாத்திகவாதி” என்பது அது. ஆனால் மேல் விபரங்கள் இல்லை. ஆய்வாளர்கள் இதற்குள் மேலும் செல்வது பயனுள்ளதாக இருக்கும். நாத்தி கர் என்றாலே கண்களை உருட்டி, மீசையை முறுக்கும் சங் பரிவாரத்திற்கு அவர்களது பிதா மகனே ஒரு நாத்திகர்தான் என்பது செரிக்க முடி யாத சமாச்சாரமாக இருக்கும்.
நூரானி நூலின் முன்னுரை நேரு பற்றிய சில  செய்திகளோடு முடிகிறது. “இந்து வகுப்பு வாதம்  என்பது  ஃபாசிசத்தின் இந்திய வடிவம்” என்றாராம்  அவர். நேரு பிரதமராக இருந்த காலத்தில் வெள்ளி தோறும் அதிகாரிகளைச் சந்திப்பாராம். அதற்கான  ஏற்பாட்டைச் செய்யும் வெளியுறவுச் செயலாளர் யெஷ்டி குண்டேவியா ஒரு சந்திப்பை விவரித்தி ருக்கிறார் தனது நூலில். அதிலிருந்து இது: “குண்டேவியா: ஐயா, நாடு சுதந்திரம் பெற்றதி லிருந்து காங்கிரஸ்தான் ஆட்சியில் உள்ளது. அதி காரிகளாகிய நாங்களும் அதன் கொள்கை களையே அமுல்படுத்தி வருகிறோம். நாளை கம்யூ னிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் என்னாகும்? கேரளா வில் கம்யூனிஸ்டு அரசு உள்ளது. நாளை மத்தியி லும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அதிகாரிகளின் நிலை என்னாகும்?
பிரதமர் நேரு: மத்தியில் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வருவார்கள் என்று ஏன் நினைக்கி றீர்கள்? (சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு  நிறுத்தி நிதானமாகச் சொன்னார்) குறித்துக் கொள்ளுங்கள், இந்தியாவுக்கான அபாயம் கம்யூ னிசம் அல்ல. மாறாக, இந்து வலதுசாரி வகுப்பு வாதம்”. தீர்க்கதரிசனம் என்பது இதுதான். இன்று  என்ன நடக்கும் என்பதை அன்றே சொல்லியிருக்கி றார். இந்தியாவின் சமூகவியலை நன்கு உள்வாங்கி யிருந்ததால்தான் அவரால் இப்படியொரு சரியான  கணிப்பை செய்ய முடிந்திருக்கிறது. நேருவை ஏன்  சங் பரிவாரம் நஞ்சாய் வெறுக்கிறது என்பதும் புரி படுகிறது.
நன்றி: தீக்கதிர், 02-06-2020


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]