வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, October 06, 2010

ஆயுத பூஜையாம் - அவற்றிற்குப் பூஜை போடவேண்டுமா?

இந்து மதத்தில் பொழுது விடிந்து பொழுது போனால், இந்த மதத் தொல்லைதான்; ஓயாப் பண்டிகைகள்தான், சடங்குக் குவியல்கள்தான். மனிதனின் அறிவு வேறு எந்த உருப்படியான செய லிலும் பாவக் கூடாது - இந்தச் சகதிகளுக்குள் முடங்கி முணுகிக் கிடப்பதுதான் மனித வாழ்வு என்று ஆக்கிவிட்டது இந்த இந்து மதம்.

ஒவ்வொரு மாதமும் பண்டிகை மட்டுமல்ல; ஒவ்வொரு வாரத்திலும்கூட விரதம், படையல் என்று பார்ப்பனப் பிடுங்கல் சுரண்டலுக்கு வழிவகுப்பவை யாகும்.

விநாயகர் சதுர்த்தி கழிந்தது என்றால், இம்மாதத்தில் நவராத்திரி - ஆயுத பூஜை வகையறாக்கள். நவராத்திரி என்ற சொல்லே தமிழ்ச் சொல் அல்ல - எல்லாம் ஆரிய வடமொழியின் இறக்குமதிச் சொற்கள்தாம்.

கருநாடக மாநிலத்தில் இதே பண்டிகை தசரா என்றும், வங்காளத்தில் துர்கா பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.

ஒரு நாள் அல்ல, இரு நாள்கள் அல்ல, ஒன்பது நாள்கள் (நவ என்றால் ஒன்பது) கொண்டாடப் படுகின்றன.

ஒவ்வொரு நிமிடமும் மனித வாழ்வுக்கு இன்றியமையாத காலமாகும். காலத்தைக் கண்ணாகப் போற்றும் மனிதனும், நாடும்தான் முன்னேற்றப் பாதையில் முனைந்து ஓடும்.

தொடர்ச்சியாக ஒன்பது நாள்களை மதத்தின் பெயரால் பாழ்படுத்தும் ஒரு நாடு எப்படித்தான் முன்னேறித் தொலைய முடியும்?

ஒவ்வொன்றுக்கும் ஒரு வகையான கதையளப்பு! அறிவுக்குச் சற்றும் பொருந்தாத அழுக்கு மூட்டைகள் அவை.

கடவுள் உருவமற்றவர், கண்ணுக்குத் தெரியாதவர், விருப்பு வெறுப்பு அற்றவர் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் சூலாயுதத்துடனும், வேலாயுதத்துடனும், கபாலத்துடனும், சிங்கத்தின்மீதும், மூஞ்சூறு மீதும், புலியின் மீதும், காகத்தின் மீதும் சவாரி செய்வது போன்ற உருவங்கள் - வழிபாடுகள் - கோயில்கள் என்றால் இந்த முரண்பட்ட, வெட்கம் கெட்ட மூடத் தனத்தை எண்ணி எங்கு போய் முட்டிக்கொள்வது!

ஒவ்வொன்றுக்கும் ஸ்தல புராணக் குப்பைகள் வேறு - பராசக்தியே துர்க்கையாக இருந்து தீமை களை அழிக்கிறாளாம்; அவளே சரசுவதியாக இருந்து கல்வியையும், அறிவையும் கொடுக்கி றாளாம்; அவளே மகாலட்சுமியாக இருந்து செல்வத்தையும் வாரி வழங்குகிறாளாம்.

இவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் உலகத்திலேயே இந்து மதக்காரர்கள்தான் கல்வியிலும், செல்வத்திலும், ஆற்றலிலும் முத லிடத்தில் இருக்கவேண்டும்.

11 ஆவது அய்ந்தாண்டுத் திட்டம் போட்டும் இன்னும் தற்குறித்தனம் ஒழிக்கப்படவில்லை. இன்னும் 77 விழுக்காடு மக்களின் ஒரு நாள் வருமானம் ரூபாய் 20 தான். சீனாக்காரன் கையில் உள்ள இந்தியாவின் நிலப் பகுதிகள் இன்னும் மீட்கப்படவில்லை.

பூஜைகளுக்கும், புராணப் புளுகுகளுக்கும் ஏதாவது சம்பந்தா சம்பந்தம் இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்கவேண்டும். சரசுவதி பூஜை கொண்டாடாத நாட்டில் நூற்றுக்கு நூறு படித்திருக்கிறார்களே! முயற்சி வேண்டாம் - பக்தி போதும் என்று போதனை செய்து வளர்க்கப்பட்ட நாட்டிலே புத்தி எப்படி வளப்பம் பெறும் - முன்னேற்றம் எங்கே முளைகட்டும்?

ஆயுத பூஜையாம் - ஆயுதங்கள் மனிதனின் அறிவு வளர்ச்சிக்கேற்ப ஒவ்வொரு காலகட்டத் திலும் மாற்றம் பெறும். அவை மனிதனின் கருவி கள்தான் - அவற்றிற்குப் பூஜை போடவேண்டுமா?

அப்படிப் பார்த்தால் வீட்டைச் சுத்தம் செய்யப் படும் மிக முக்கியமான கருவி விளக்குமாறுதான் - அதற்குப் பூஜை உண்டா? நகர சுத்தித் தொழி லாளி எந்தக் கருவிகளுக்குப் பூஜை போடுவார்?

விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பூஜைக்குரியவை எவை என்ற கேள்விகள் எழாதா?

குண்டூசி கூட கண்டுபிடிக்கத் தெரியாத நாட்டில் ஆயுத பூஜைக்கு மட்டும் குறைவு இல்லை. கடவுள்களின் கைகளில் இருக்கும் கருவிகள் எல்லாம் கொலைக்கருவிகளாகத்தான் இருக் கின்றன - அந்தக் கருவிகளைக் கொண்டு இந்து மதக் கடவுள்கள் சண்டை போட்டுள்ளன - கொலைகளைச் செய்துள்ளன - அதற்காகத்தான் பூஜை புனஷ்காரங்களா?

பூஜை, புத்தியைக் கொடுக்காது - துன்மார்க் கத்தைத்தான் கொடுக்கும் என்பதற்கு நவராத் திரிப் பண்டிகை ஒன்று போதாதா?


----------- நன்றி விடுதலை தலையங்கம் (06.10.2010)

2 comments:

ஒசை said...

இன்னும் 77 விழுக்காடு மக்களின் ஒரு நாள் வருமானம் ரூபாய் 20 தான். சீனாக்காரன் கையில் உள்ள இந்தியாவின் நிலப் பகுதிகள் இன்னும் மீட்கப்படவில்லை///

இதே மாதிரி நிறைய சொல்லலாம். தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய எந்த நீர் ஆதாரங்களும் சரியாக கிடைக்கவில்லை. சிறப்பு பொருளாதார மண்டலம் என்கிற் பெயரில் ஆட்சியாளர்கள், முதலாளிகளுக்கு துணை போகும் அவலம் உருவாகி உளளது,அம்மாதிரியான அரசியல்வாதிகளை கண்டிக்க பகுத்தறிவுக்கு துணிவில்லை. திருட்டு ரயிலேறி சென்னை வந்த பகுத்தறிவு அரசியல்வாதி இன்று கோடிகளின் அதிபதி.
ஆனால் ஏழை பிச்சைகாரனாகிறான். இதெல்லாம் ஆட்சியாளர்களின் அலங்கோலங்கள். இதற்கும் ஆயுதபூசைக்கும் என்ன சம்பந்தம்.

நம்பி said...

ஒசை. said...
// இதே மாதிரி நிறைய சொல்லலாம். தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய எந்த நீர் ஆதாரங்களும் சரியாக கிடைக்கவில்லை. சிறப்பு பொருளாதார மண்டலம் என்கிற் பெயரில் ஆட்சியாளர்கள், முதலாளிகளுக்கு துணை போகும் அவலம் உருவாகி உளளது,அம்மாதிரியான அரசியல்வாதிகளை கண்டிக்க பகுத்தறிவுக்கு துணிவில்லை. திருட்டு ரயிலேறி சென்னை வந்த பகுத்தறிவு அரசியல்வாதி இன்று கோடிகளின் அதிபதி.
ஆனால் ஏழை பிச்சைகாரனாகிறான். இதெல்லாம் ஆட்சியாளர்களின் அலங்கோலங்கள். இதற்கும் ஆயுதபூசைக்கும் என்ன சம்பந்தம்.
10:20 PM //


நீ பிதற்றியிருப்பதற்கும் கட்டுரைக்கும் என்ன? சம்பந்தம்.?

உன்னுடையை திராவிட எதிர்ப்பை வகை தொகையில்லாமல் ஆரியத்திற்கு ஆதரவாக வெளிப்படுத்தியிருப்பது மட்டும் தான் தெரிகிறது. "ஒசை" என்பதற்குப் பதில் ஆரியப் "பசை" என்றால் இன்னும் பொருத்தமாயிருக்கும்.

எங்கே? வருமான வரியை அப்படியே ஒரு பைசா பாக்கியில்லாம ஆடிட்டரை வைச்சு திருட்டு கணக்கு எழுதாம காட்டியாச்சா? முதலீடுகளை அப்படியே ஒன்று விடாமல் கணக்கு காட்டியாச்சா?

(அப்படி காட்டினால் எவ்வளவு மிஞ்சும் என்பதாவது தெரியுமா?)

வீட்டு வாடகை வசூலுக்கான ரசீது கொடுத்தாச்சா? அதற்கான வரியை வீட்டு வரியுடன் சேர்த்து கட்டியாச்சா?

வீட்டில் இருக்கும் அத்தனை கழிவறைக்குமான வரியை மாநகராட்சி மற்றும் ஊராட்சி, நகராட்சி அலுவலகத்துக்கு பைசா பாக்கியில்லாமல் செலுத்தியாச்சா...?

பட்டா, சிட்டா அதற்கான வரியை காலந்தவறாமல் கட்டியாச்சா?

முதலில் எத்தனை கழிவறைகள் உள்ளன என்பதை சரியாக குறிப்பிட்ப்பட்டுள்ளதா? என்பதாவது தெரியுமா?

சொத்து வரி சரியாக செலுத்தியாச்சா?

வாங்கிய சொத்திற்கு சரியான ஸ்டாம்ப் டூட்டியை பதிவாளர் அலுவலகத்தில் கட்டியாச்சா? வாங்கிய சொத்தை அப்படியே பத்திரப்பதிவில் குறிப்பிட்டாச்சா..?

ஏய்யா நீ தான் ஏழையைப் பத்தி கவலைப்படிறியா...?


ஒரு தனிமனிதன் எவ்வளவு ஊழல் பண்ணுகிறான் என்பதாவது தெரியுமா...? இந்த ஊழல்களை பண்ணாத ஒரு மனிதனையாவது காட்ட முடியுமா?

ரயில்வே நிர்வாகத்தைப் பற்றி கவலைப்படறீயா...

ஏழைகள் மேல் ரொம்பத்தான் அக்கறை படாறாரம்மா..? உத்தம ராசா...

நீர் ஆதாரத்தை பத்தி கவலைப்படறாரம்மா..எப்பவுமே தமிழகம் வானம் பார்த்த பூமி தான்...பிற மாநிலத்திடம் நீருக்காக கையேந்த வேண்டிய மாநிலம் தமிழகம்..

இவ்வளவு காலம இருந்தியே என்ன பண்ண?...சுமூகமாகத் தீர்க்கவேண்டிய காவிரி நீர் பங்கீட்டை வீம்பு பண்ணி கெடுத்தியே அப்ப எங்க போச்சி புத்தி...

நம்ம நாட்டை ஆள்வதே முதலாளிகள் தான்..இன்று நேற்றல்ல...ரொம்ப காலமாகவே...இது முதலாளித்துவ நாடு தான்...இதை மாற்றத்தான் போராடிக்கிட்டிருக்கிறோம்...எங்க நீ வரி கட்டினாத்தானே?...அவங்ககிட்ட பிச்சை எடுக்காம இருக்கறதுக்கு...

உன் தொந்தியை மட்டும் நீ பாத்துக்கற...மத்தவ எக்கேடு கெட்டா உனக்கென்ன?..அதே தான் அவனுக்கும்.

எங்கே இதற்கு நீதான் ஒரு வழி சொல்லுமே பார்ப்போம்...?

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]