வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, November 27, 2008

வீடியோ பிரபாகரன் மாவீரர் தின உரை - 2008



படிப்பது ஜாதியை வளர்ப்பதற்கல்ல!

சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் ஜாதி அடிப்படையில் நடந்த மோதல்கள் உள்ளபடியே வெட்கப்படத் தக்கதாகும்.
எதிர்கால உலகைப் படைக்கக்கூடியவர்கள் என்று கணிக்கப்படக்கூடிய மாணவர்கள் - அதுவும் சட்டம் படிக்கும் மாணவர்களின்அறிவு எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும்பொழுது வெட்கமும், வேதனையும் கலந்து நம்மைத் தாக்குகின்றன; தலையைத் தொங்கப் போடவும் வைக்கிறது.
தாழ்த்தப்பட்ட மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட மாணவர் களும் கல்வி, வேலை வாய்ப்புகளில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வளர்ச்சிப் பாதையில் புலிப் பாய்ச்சலாக அமையவேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் பாடுபட்டார். அவர் கண்ட இயக்கம் அன்று முதல் இந்தச் சமூக விழிப்புணர்வுப் பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறது.
தாழ்த்தப்பட்டவர்களும் சரி, பிற்படுத்தப்பட்டவர்களும் சரி, பார்ப்பனிய வருணாசிரம அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள்தாம். கல்விப் பக்கம் அவர்கள் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்பதிலே பார்ப்பனர்கள் குறியாக இருந்தவர்கள்தாம்.

இரண்டு முறை சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்துக்கு முதலமைச்சராக இருந்திருக்கிறார். அந்த இரண்டு முறையுமே கிராமத்துப் பள்ளிகளை இழுத்து மூடுவதில்தான் குறியாக இருந்தார். காரணம், கிராமங்களில் தான் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்ட வர்களும் படிக்கக் கூடியவர்கள்.

இரண்டு முறையும் அவரைப் பதவியிலிருந்து விரட்டியவர் தந்தை பெரியார் அவர்கள்தான். 1952 இல் குலக்கல்வி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி அப்பன் தொழிலைப் பிள்ளைகள் கற்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்த மகானுபாவரும் அவரேதான்.

தீப்பந்தமும், தீப்பெட்டியும் தயாராக இருக்கட்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் ஆணையிட்ட பிறகே, தனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி முதலமைச்சர் பதவியை விட்டு விலகினார் என்ற வரலாறுகள் எல்லாம் - தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை.

வைக்கத்திலே தீண்டாமையை ஒழிக்க தந்தை பெரியார் எப்படியெல்லாம் பாடுபட்டார் என்பதுகூட நம் பாடத் திட்டங்களில் இடம்பெறுவது இல்லை.
மாணவர்களிடையே நடந்த இந்த ஜாதி மோதலுக்குப் பிறகாவது பாடத்திட்டத்திலே சமூகச் சீர்திருத்தம், தீண்டாமை, ஜாதி ஒழிப்புப்பற்றிய பாடங்களைச் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்யப்படவேண்டும்.
கிராமப்பகுதிகளிலே ஜாதியை வளர்க்கும் அமைப்புகள் ஊர் நாட்டாமைகள் இன்னும் இருக்கின்றன. இந்தப் பகுதியிலிருந்து கல்லூரிகளுக்கும் படிக்க வரும் மாணவர்கள் அந்தத் தொற்று நோயைச் சுமந்து வருகிறார்கள். எனவே, இதன் மூலத்தையும் அறிந்து அதில் கைவைக்க வேண்டும்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இட ஒதுக்கீடு கொடுப்பதால்தான் ஜாதி வளர்கிறது என்கிற ஒன்றைக் கிளப்பிட முயலுகிறார்கள்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் சென்னையில் இதுகுறித்து நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மாநில வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஒருவர் - தலித் மாணவர்களுக்கு மாநில அரசு இட ஒதுக்கீடு கொடுத்து ஒதுக்கி வைத்துவிட்டது (தீக்கதிர், 26.11.2008, பக்கம் 6) என்று குற்றப்பத்திரிகை படித்துள்ளார்.

இட ஒதுக்கீடு என்பது உரிமைகள் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் உதவியே தவிர, ஜாதியை வளர்ப் பதற்கான கூறு அல்ல. இட ஒதுக்கீடு விஷயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை - அணுகுமுறை மாறி யிருக்கிறதா? என்று தெரியவில்லை.

அதேபோல, சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை - உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள், நுழைவுத் தேர்வு முறை தேவை என்ற ஒரு யோசனையைக் கூறியிருக்கிறார்.
நுழைவுத்தேர்வு வைத்து மாணவர்களைத் தேர்வு செய்த நேரத்தில், சட்டக் கல்லூரி மாணவர்கள் மத்தியிலே தகராறுகள், அடிதடிகள் நடக்கவில்லையா?
ஒரு அரசு சட்டம் இயற்றி, நீதிமன்றமும் ஒப்புக்கொண்ட ஒன்றை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மறுதலித்துப் பேசுவது நியாயமும் அல்ல, நீதியும் அல்ல.

மனித உணர்வுக்கும், உறவுக்கும் ஜாதி தீங்கானது என்பதை மாணவச் சமுதாயம் உணர்ந்திட வேண்டும்.

படிப்பது - பகுத்தறிவை வளர்ப்பதற்கேயன்றி, பிளவுபடுத்தும் ஜாதிச் சாக்கடையில் வீழ்வதற்கல்ல!

நன்றி : விடுதலை (27.11.2008)



Wednesday, November 26, 2008

எதிர்பாரப்பை உருவாக்கியுள்ள மாவீரர் நாள்......

மற்றொரு மாவீரை நாளை அனுட்டிக்க உலகம் வாழும் ஈழத் தமிழ் மக்கள் கரம் கோர்த்து நிற்கின்றார்கள். வழக்கமான மாவீரர் நாளை விட இம்முறை மாவீரர் நாள் அதிக எதிர்பார்ப்புக்கள் நிறைந்ததாக இருக்கின்றது. குறிப்பாக மாவீரர் நாள் உரையில் தேசியத் தலைவர் என்ன கூறப்போகின்றார் என்பதை அறிய தமிழ் மக்கள் மட்டுமன்றி ஈழ அரசியலில் அக்கறை கொண்ட அனைவருமே ஆவலாகக் காத்திருக்கின்றனர்..மேலும்

நன்றி : நிலவரம்



Tuesday, November 25, 2008

மனைவியை விற்கும் வேதனைக் கணவர்.....

மனைவி என்னதான் தலையை விரித்துப்போட்டு திருப்பாச்சி சாயாசிங் போல் ஆடினாலும் முதல்மரியாதை வடிவுக்கரசி போல் திட்டி தீர்த்தாலும், மாயி கோவை சரளா போல பறந்து, பறந்து தாக்கினாலும் இந்திய கணவர்கள் வெளியே பேச்சு மூச்சு விட மாட்டார்கள்.

அனால், மேலைநாட்டுக்காரர்கள் அப்படி அல்ல சாம்பாருக்கு சரியாக மசாலா போடாவிட்டால் கூட மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு இளம் பெண்ணுடன் கைகோத்துக்கொண்டுவிடுவார்கள்.

கனடா நாட்டை சேர்ந்த அலெக்ஸ் என்பவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளால் பெருந்தொல்லை. பொருத்து பார்த்த அவர் மனைவிக்கு சரியான சாட்டையடி தர நினைத்தார்.

இதற்க்காக அவர் செய்த காரியம் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அங்குள்ள பிரபலமான கார் விற்பனை இணையத்தளத்தில் மனைவி விற்பனைக்கு என்று விளம்பரம் கொடுத்துவிட்டார். இணையத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள விவரம் வருமாறு.

1. என் மனைவி விற்பனைக்கு !
2. மாடல் 1983
3. நன்றாக இயங்கும் நிலையில் குட் கண்டிசன்.
4. இதுவரை ஒரே ஆள்தான் ஒட்டியது. நீங்கள் இரண்டாவது ஒனேர்.
5. 3 வயது, 5 வயதில் டூல்ஸ் பாக்ஸ் உண்டு.
6. குறைந்தபட்ச விலை ஆயிரம் டாலர்.

இப்படிப்பட்ட விளம்பரத்தை பார்த்துவிட்டு ஏராளமான பேர் அவரை தொடர்பு கொண்ட வண்ணம் உள்ளனர். அனால் ஆயிரம் டாலருக்கு குறைவாக கேட்பதால் இன்னும் அவர் யாருக்கும் விற்க வில்லை.

என்ன ஒரு வில்லத்தனம்.....இந்த கணவனாக வொர்க் பன்னுவருக்கு.....

Monday, November 17, 2008

தினமலத்தின் சிண்டு முடித்தனம்......

வழக்கம் போல தினமலம் தன் சிண்டு முடிதனத்தை காண்பித்து உள்ளது. டக்லஸ் தேவானந்த எழுதிய கடிதத்தை மிக பொறுப்பு மற்றும் பருப்புடன் தமிழன் நலன் கருதி இந்த கருமாதி பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த கடிதத்தின் மூலம் தமிழர்களுக்கு உண்மை நிலையை இந்த கருமதிகார பத்திரிக்கை நிலை நாடுகிறது என்று எல்லோரும் நினைதுக்கொல்வார்கலாம். நாசமா போன இந்த சிண்டு முடியும் கூட்டத்திடம் தான் ஒற்றுமை இல்லை ஒரு தனி நாடு இல்லை என்றால் தமிழனையும் அவ்வாறு நினத்துக்கொண்டு இந்த கூட்டம் அந்த கடிதத்தை (16.11.2008) தினமலத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் விடுதலை புலிகள் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் தன் இன மக்களை அளித்துக்கொண்டிருக்கிராரம் மேலும் தமிழக திரை உலகத்தினரை மதிப்பதும் இல்லையாம். இப்படி பல பொய்களை டக்லஸ் அவிழ்த்துவிட்டிருக்கிறார். அதனை இந்த தினமலம் வெளியிட்டு தமிழர் நலம் காக்கிறதாம். இதனை பெரிய எழுத்தில் வெளியிட்ட இந்த சிண்டு முடியும் கூடத்திற்கு டெல்லியில் இரண்டு தமிழ் எம்.பிக்கள் திரு பிரபாகரனை பற்றி பதினைந்து நிமிடம் பேட்டி அளித்துள்ளார். இதனை ஏன் இந்த நடு நிலை என கூறிக்கொள்ளும் தினமலம் வெளியிடவில்லை.

அந்த டக்லஸ் சொன்னது போல திரு பிரபாகரன் தன் இனமக்களை அளிப்பவர் என்றால் ஏன் ஒரு பொதுமக்கள் (சிங்கள மக்களையும் சேர்த்து) கூட பாதிக்கப்படாமல் கொழும்பு மின்தளத்தின் மீது விமான தாக்குதல் நடத்த வேண்டும். இது போல பல தாக்குதல்களை பிரபாகரன் நடத்துகிறார்( 2001 விமான தளம் தாக்குதல் உள்ளிட்டு). இதில் இருந்தாவது இந்த தினமலத்திற்கு புரியாத பிரபாகரன் எப்பொழுதும் ஒரு பொதுமக்கள் கூட பாதிக்க படக்கூடாது என நினைப்பவர் என்று. எனவே இலங்கை ராணுவம் தமிழர் இனபடுகொலை நடத்துவது போல சிங்கள மக்களை கொள்வது விடுதலை புலிகளின் நோக்கம் அல்ல. அவர்கள் தாக்குவது அனைத்தும் சிங்கள அரசையும் அதனை சர்ந்தவைகளையும் மட்டுமே.

ஏய் தினமலமே நீ என்னதான் நடு நிலை, தமிழன் நலன் என்று கூறினாலும் இங்கு தமிழர்கள் ஏமாறும் சூத்திரர்களாக இல்லை. அந்த காலமெல்லாம் மலையேறி விட்டது. எனவே இந்த மாதிரி டக்லஸ் எழுதினாரு சங்கராசாரி எழுதினாரு அப்படின்னு நீ வெளிட்டு கொண்டிருக்க வேண்டியதுதான் அனால் அந்த பொய்களை யாரும் நம்ப தயாராக இல்லை. நீயும் உன் திண்ணை தூங்கி கூட்டமும் இது போன்று நீங்களே எழுதி நீங்களே படித்துக்கொண்டு தமிழனை இப்படியாவது இழிவுபடுதுகிரோமே என்று ஆறுதல் பட்டுக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

தமிழர்களே இனியாவது பார்பன ஏடுகளை புறக்கணிப்போம்.....

Saturday, November 15, 2008

பூநகரி வெற்றியை ஒரு வார விழாவாக கொண்டாடுகிறது சிறிலங்கா அரசு....


தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பூநகரி பிரதேசம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதற்கு தலைநகர் கொழும்பிலும் சிங்கள கிராமங்களிலும் தொடர் வெற்றி விழா கொண்டாடப்படவுள்ளது.
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பூநகரி ஊடாக செல்லும் ஏ-32 வீதியை படையினர் முழுமையாக கைப்பறிய செய்தியை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி ஊடாக இன்று சனிக்கிழமை இரவு அறிவித்ததுடன் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சவால் விடுத்துள்ளார்.

இதனையடுத்து அரச தலைவர் செயலகத்தின் ஆலோசனையில் விழாவுக்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கள கிராமங்களில் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு வெற்றி விழா கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்ச்சி ஒழுங்கமைப்புக்களை விமல வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதல் வெற்றி விழா மிக விரைவில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது.

இப்பொழுதாவது புரிந்து கொள்ளுமா இந்த மத்திய அரசு. மகிந்தே அரசு அங்கு நடத்தும் போர் இன அழிப்பு போர் என்று. அவர் சொல்லும் தமிழ் இனம் காப்பாற்றப்படும் வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று இனியும் இவர்கள் புரிந்து கொண்டு நடக்கவில்லை என்றால் தமிழனின் தயவால் ஆட்சி நடுத்தும் அவர்களின் தமிழ் விரோத ஆட்சி தேவை இல்லை என்பதே ஒவ்வரு தமிழனின் கோரிக்கை.



Thursday, November 13, 2008

பார்ப்பன ஏடுகளைப் புறக்கணிப்போம்!

சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், எதியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான் என்று சொன்ன டாக்டர் டி.எம். நாயர் வாயில் சர்க்கரையைத்தான் போடவேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திலும் நாடு அந்த நிலையைப் பார்த்துக்கொண்டுதான், அனுபவித்துக் கொண்டுதானிருக்கிறது.
குறிப்பாக, ஈழத் தமிழர் பிரச்சினையில் பார்ப்பன மக்கள் நடந்துகொண்டு வரும் போக்கைக் கவனிக்கும் எவரும் பொறுமையை இழக்கத்தான் செய்வார்கள்.

தமிழர்களை சிங்களவர்கள் வெறுப்பதைவிட பல மடங்கு அதிகமாக இந்தப் பார்ப்பனர்கள் வெறுப்பதை அறிய முடிகிறது.
அதுவும் ஏடு நடத்தும் பார்ப்பனர்கள், எழுதுகோல் பிடிக்கும் பார்ப்பன எழுத்தாளர்கள் தமிழர்கள் மீதான தங்களின் பரம்பரை வன்மத்தை, இந்தச் சந்தர்ப்பத்தில் பல மடங்கு பெருக்கியே காட்டுகிறார்கள்.
தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பற்றி எரியும் ஈழமும் - பார்ப்பனப் பத்திரிகைகளும் என்ற தலைப்பில், சென்னை பெரியார் திடலில் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு (6.11.2008) பார்ப்பன ஏடுகள், ஊடகங்களின் தமிழர் விரோதப் போக்கினை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி, கடைசியாக தமிழர்களே, பார்ப்பன ஏடுகளைப் புறக்கணிக்கவேண்டாமா? என்ற வினாவை எழுப்பியபோது, புறக்கணிப்போம்! புறக்கணிப்போம்! என்று பார்வையாளர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று ஓங்கிக் குரல் கொடுத்தனர்.

தமிழர்களின் இந்த உணர்வைக்கூட அவர்கள் கொச்சைப்படுத்துவார்கள் - கேலி செய்வார்கள் என்பதை அறியாதவர்களா நாம்?
இந்தியா டுடே என்ற தமிழ் வார ஏட்டில் (5.11.2008) வாஸந்தி என்ற பார்ப்பன அம்மையார் ஏன் இந்த வார்த்தைப் போர்? என்ற தலைப்பில் நஞ்சைப் பிழிந்து கொடுத்துள்ளார்.

தமிழினத் தலைவர் என்ற பட்டப் பெயர், மனத்துக்குத் தெம்பைத் தருவது; முக்கியமாக அவரது பரம வைரியான அ.தி.மு.க. தலைவி, திடீரென்று ஈழத் தமிழரின் பிரச்சினைக்கு ஆதரவுக் கரம் நீட்டி கருணாநிதி வெறும் வேஷதாரி என்று சொன்னதும், அடிபட்ட வேங்கையாகப் பொங்க வைப்பது. எதிர்க்கட்சியி னரின் பொறுப்பற்ற விமர்சனத்துக்கெல்லாம் பதில் சொல்ல முதல்வர் ஏன் மெனக்கிடுகிறார் என்பது புரியவில்லை. இலங்கைப் பிரச்சினையில் ஆழம் தெரியாமல் காலை விட்டதில் தேசியத் தலைவராக உருவாகி வந்த பிம்பத்தில் கீறல் விழுந்ததை அவர் கவனிக்கவில்லை. முரசொலியில் வெளியிடப்படும் அறிக்கைகளும், மடல்களும் அவரது தன்னம்பிக்கை தளர்ந்து போனதைத் தெரிவிக்கின்றன. தன்னைவிட ஜெயலலிதா தமிழினப் பற்றுடையவர் இல்லை என்பதை பக்கம் பக்கமாக விளக்கும் பலவீனம் அவருக்கு ஏற்பட்டு இருப்பது விசித்திரம். புலிகளின் பகிரங்க அபிமானியான ம.தி.மு.க. தலைவர், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகங்களை வாபஸ் பெறவேண்டும் என்று சொன்னால், அதை யாரும் கவனத்தில் கொள்ளப்போவதில்லை. ஆனால், மத்திய அரசில் முக்கிய பங்கு உள்ள தி.மு.க. தலைவர் தாமே முடுக்கிவிட்டுக் கொண்ட உணர்ச்சி வேகத்தில் சிக்குண்டு, அண்டை நாட்டின் இறையாண்மையை கவனத்தில் கொள்ளாமல் பேசுவது சர்ச்சைக்குரியது.

பழுத்த அரசியல்வாதியான முதல்வருக்கும், சட்ட சாஸனத்தின் மேல் பதவிப் பிரமாணம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கை என்பது வேறு நாடு என்பது அவர்களை நிர்ப்பந்திப்பதோ, எச்சரிக்கை விடுவதோ அந்த நாட்டின் இறையாண்மைக்கு விரோதமானது என்பதும் தெரியாதா? வங்கதேசப் போர் நடத்தி கிழக்குப் பாகிஸ்தானுக்கு விடுதலை பெற்றுத் தரவில்லையா என்று நமது தமிழ் உணர்வுள்ள கட்சித் தலைவர்கள் ஈழப்போருக்கு உதவச் சொல்கிறார்கள். நாம் பாகிஸ்தானுக்குச் சொந்தமாக இருந்த கிழக்குப் பகுதியில் நுழைந்து போரிட்டது மாபெரும் தவறு.

- இதுதான் பார்ப்பன அம்மையாரின் கடைந்தெடுத்த நச்சு எழுத்துகள்.
தமிழினத் தலைவர் என்ற பட்டப் பெயர் கலைஞருக்குத் தெம்பைத் தருகிறதாம்.

எடுத்த எடுப்பிலேயே இப்படிக் கேலி, லோகக் குரு என்ற பட்டப் பெயர் மட்டும் இவர்களுக்கெல்லாம் இனி இனி என்று இனிக்கும்.
ஆமாம்! அவர்கள் நம்பிக்கைப்படி ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் அவர்தான் தலைவர். வாடிகன் நகருக்குக்கூட சங்கராசாரிதான் குரு - இதனை நாம் நம்பவேண்டும் - அப்படி நம்பாவிட்டால், ஏற்காவிட்டால் அதற்காக அவர் தயாராகச் சூட்ட வைத்திருக்கும் பட்டம் இனத் துவேஷம்!
கடலைத் தாண்டிச் செல்லுவதே தோஷம் என்று எழுதி வைத்திருக்கிற அதே கூட்டம்தான் சங்கராச்சாரியாரை லோகக்குரு - உலகத்துக்கே குரு என்று சொல் லுகிறது - இப்படியெல்லாம் நாம் கேள்வி எழுப்பினால், அதற்கும் ஒரு பட்டத்தை நமக்குச் சூட்ட தயாராக வைத்திருக்கிறார்கள் - அதுதான் விதண்டாவாதம் என்னும் பட்டம்.பயங்கரவாதம் என்பதில்கூட அவர்களுக்கு இரட்டை அளவுகோல் உண்டு. இராமன், சம்பூகன் என்ற சாதுவை வாளால் வெட்டிக் கொன்றால் அவர்கள் தயாராக வைத்திருக்கும் சொலவடை தர்மத்தைக் காப்பாற்ற அதர்மத்தைச் செய்வதும் ஒருவகை தர்மம்தான் என்பதுதான்.

ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்த நரேந்திர மோடி - அவர்கள் கண்ணோட்டத்தில் மகாசமர்த்தன் - நிருவாகி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். ஒரே வாரத்தில் கலவரத்தை அடக்கிய திறமைசாலி - பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் என்று நூல் பிடித்ததுபோல பார்ப்பனர்கள் எழுதுவார்கள்.

கொலைக் குற்றத்தில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளிவந்த சங்கராச் சாரியாரை வரவேற்று தம் சொந்த காரில் அழைத்து வந்து காஞ்சி மடத்துக்குக் கொண்டு வந்து அமர்த்துவார் இந்து ஏட்டின் ஆசிரியர் என். ராம்.
தம் இன மக்களின் மான வாழ்வுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியத் துக்கு ஆளானவர்களை இந்த யோக்கியதையில் உள்ளவர்கள்தான் பயங்கர வாதிகள் என்று நாமகரணம் சூட்டுகிறார்கள்.

இலங்கை இன்னொரு நாடாம். அதில் தலையிடக்கூடாதாம். இந்த நிலையை எடுப்பதற்கு - பாகிஸ்தானோடு இந்தியா போர் நடத்தி வங்க தேசத்தை உருவாக்கித் தந்தது தவறு என்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வக்காலத்துப் போட்டு எழுதுகிறார் பார்ப்பன அம்மையார் இந்தியா டுடே இதழில்!

இந்தச் சாமர்த்தியம் எல்லாம் யாருக்கு வரும் - அவாளைத் தவிர!
தமிழில் ஏடு நடத்தி, தமிழர்களிடத்திலே விற்றுப் பணம் பறித்து தமிழர் களையே கொச்சைப்படுத்தும் இந்தப் பார்ப்பன ஏடுகளைப் புறக்கணிக்க வேண்டாமா?

தமிழர்களே சிந்திப்பீர் - செயல்படுவீர்!

நன்றி விடுதலை



Tuesday, November 04, 2008

பெரியார் சொல்லும் தமிழர் திருமணம்......

தந்தை பெரியார் அவர்கள் “சித்திர புத்திரன்” என்கிற புனைப் பெயரில்14-03-1950 விடுதலை நாளிதழில் “திருமண விழா: வினா விடை” என்ற தலைப்பில்சுயமரியாதைத் திருமணம் குறித்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அந்தவினா-விடை உங்கள் பார்வைக்காக:


சுயமரியாதைத் திருமணம் என்பது எது?
நமக்கு மேலான மேல் ஜாதிக்காரன் என்பவனை புரோகிதனாக வைத்து நடத்தாததிருமணம் சுய மரியாதைத் திருமணமாகும்.

பகுத்தறிவுத் திருமணம் என்றால் என்ன?
நமக்குப் புரியாததும், இன்ன அவசியத்திற்கு இன்ன காரியம் செய்கிறோம் என்றுஅறிந்து கொள்ளாமலும், அறிய முடியாமலும் இருக்கும்படியானதுமானகாரியங்களைச் (சடங்குகள்) செய்யாமல் நடத்தும் திருமணம் பகுத்தறிவுதிருமணம் ஆகும்.

தமிழர் திருமணம் என்றால் என்ன?
புருஷனுக்கு மனைவி அடிமை (தாழ்ந்தவள்) என்றும், புருஷனுக்கு உள்ளஉரிமைகள் மனைவிக்கு இல்லை என்றும் உள்ள ஒரு இனத்திற்கு ஒரு நீதியான மனுநீதி இல்லாமல் வாழ்க்கையில், கணவனும் மனைவியும் சரிசம உரிமை உள்ள நட்புமுறை வாழ்க்கை ஒப்பந்தமாகக் கொண்ட திருமணம் தமிழர் (திராவிடர்)திருமணமாகும்.

சுதந்திரத் திருமணம் என்றால் என்ன?
ஜோசியம், சகுனம், சாமி கேட்டல், ஜாதகம் பார்த்தல் ஆகிய மூடநம்பிக்கைஇல்லாமலும், மணமக்கள் ஒருவருக்கொருவர் நேரில் பார்க்காமல், அன்னியர்மூலம் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்தும், அல்லது தெரிந்து கொள்வதைப்பற்றிக் கவலையில்லாமல் மற்றவர்கள் கூட்டி வைக்கும் தன்மை இல்லாமலும்,மணமக்கள் தாங்களாகவே ஒருவரை ஒருவர் நன்றாய் அறிந்து திருப்தி அடைந்துகாதலித்து நடத்தும் திருமணம் சுதந்திரத் திருமணமாகும்.

புரட்சித் திருமணம் என்றால் என்ன?
தாலி கட்டாமல் செய்யும் திருமணம் புரட்சித் திருமணமாகும்.

சிக்கனத் திருமணம் என்றால் என்ன?
கொட்டகை, விருந்து, நகை, துணி, வாத்தியம், பாட்டுக் கச்சேரி, நாட்டியம்,ஊர்வலம் முதலிய காரியங்களுக்கு அதிகப் பணம் செலவு செய்வதும், ஒருநாள் ஒருவேளைக்கு மேலாகத் திருமண நிகழ்ச்சியை நீட்டுவதும் ஆன ஆடம்பர காரியங்கள்சுருங்கின செலவில், குறுகிய நேரத்தில் நடத்துவது சிக்கனத் திருமணமாகும்.

இவைகளையெல்லாம் சேர்த்து நடத்துகிற திருமணத்திற்கு ஒரே பேராக என்னசொல்லலாம்?
நவீனத் திருமணம் அல்லது தற்காலமுறைத் திராவிடத் திருமணம் என்றுசொல்லலாம்.



சுயமரியாதைக் கோட்டை......

காலையில் வடசேரி திருமணம், மதியம் மன்னார்குடி - மாலையிலே நீடாமங்கலம் பொதுக்கூட்டம் ஆகிய மூன்று ஊர்கள் சுற்றுப்பயணத்திற்கு நாள் சென்னையிலிருந்து புறப்படுகின்ற நேரத்தில் எதிர்பாராமல் முதல்வரை சந்திக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத் தது.

அப்பொழுது முதலமைச்சர் அவர்கள் சிரித்துக்கொண்டே கேட்டார்கள். நாளை சுற்றுப்பயணத்திற்கு எந்தெந்த ஊர்களுக்குப் போகிறீர்கள் என்று கேட்டார்கள்.
நான் வரிசையாகச் சொன்னவுடனே உடன் அமர்ந்திருந்த சில அமைச்சர் பெருமக்கள் மற்றவர்கள் எல்லோரிடத்திலும் முதலமைச்சர் அவர்கள் சிரித்துக்கொண்டே சொன்னார் கள், ஓகோ! நம்முடைய சுயமரியாதைக் கோட்டைகளுக்குச் செல்லுகிறீர்கள் என்று அந்த ஊர்களையெல்லாம் நினைத்து உடனடி யாக மகிழ்ச்சியோடு சொன்னார்கள் (பலத்த கைதட்டல்). எனவே இன்னமும் அவர் களுடைய கணிப்பிலே எந்தெந்த ஊர் எப் படிப்பட்டது என்பதை 85 வயது இளைஞ ராக இருக்கக் கூடிய அவர்கள் 95 வயது இளைஞரைத் தலைவராக என்றைக்கும் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடிய நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்களுடைய கணிப் பிலே இந்தப் பகுதி எப்படிப்பட்டதாக இருக் கிறது என்பதை எல்லாம் அறிந்தவர்கள் அவர்கள்.
எல்லா கிராமங்களிலும் எப்படி தந்தை பெரியார் அவர்களுடைய காலடி படாத இடமே இல்லை என்று நினைக்கின்றார்களோ, அதுபோல நம்முடைய முதலமைச்சர் கலைஞர் அவர்களும் எல்லாப் பகுதிகளையும் புரிந்தவர்கள். அறிந்தவர்கள் - தெரிந்தவர்கள்.


(31-10-2008 அன்று நீடாமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து....)



Monday, November 03, 2008

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி யார் பராக் ஒபமாவா ? ஜோன் மெக்கெயினா ?

உலகெங்கும் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. வாக்களிப்பு உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணி முதல் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் 44வது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க அமெரிக்காவின் 51 மாநிலங்களையும் சேர்ந்த சுமார் 130 மில்லியன் மக்கள் இன்று (11/04/2008) உத்தியோகபூர்வமாக வாக்களிக்கவுள்ளனர்.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி வாக்காளர்கள் வாக்களிக்க காத்திருந்தால் அதற்குத் தகுந்தவாறு நேரத்தை நீடித்துக் கொள்ள அனைத்து மாகாண உள்ளூர் நிர்வாகத்துக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடியிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். அவ்வப்போது யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். மாகாண வாரியாகவும் முன்னிலை அறிவிக்கப்படும்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதிய ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜோன் மெக்கெயினும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினெய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பராக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.

இவர்களைத் தவிர, லிபரேஷன் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பாப் பார், கான்ஸ்டிடியூசன் கட்சி சார்பில் வானொலி தொகுப்பாளர் சக் பால்ட்வினும், கிரீன் கட்சி சார்பில் முன்னாள் பெண் எம்.பி. சிந்தியா மெக்கினியும், சுயேச்சையாக ரால்ப் நடேர் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். இருப்பினும், ஜோன் மெக்கெயின்ஒபாமா இடையே தான் நேரடிப்போட்டி நிலவுகிறது.

ஜனாதிபதி தேர்தலுடன் துணை ஜனாதிபதி தேர்தலும் இன்று நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அலாஸ்கா மாநில கவர்னர் சாரா பாலின் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலையொட்டி, கடந்த ஜுன் மாதம் ஜோன் மெக்கெயினும், ஒபாமாவும் அவரவர் கட்சி வேட்பாளர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, வாக்காளர்களிடம் இருவரும் பிரசாரம் செய்யத் தொடங்கினர்.

இன்று தேர்தல் நடப்பதையொட்டி, இருவரும் இறுதிக்கட்ட வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர். ஜோன் மெக்கெயின், வேர்ஜினியா மாநிலத்தில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார். இந்த மாநிலத்தில், 1964 ஆம் ஆண்டில் இருந்து குடியரசு கட்சிதான் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அங்கு ஜோன் மெக்கெயின் பிரசாரம் செய்கையில், கருத்து கணிப்பில் பின்தங்கி இருந்தாலும், முன்னேறி வருவேன் என்று கூறினார்.

நெவடா, கொலராடோ, மிசோரி ஆகிய மாநிலங்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமா இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். இவை கடந்த தேர்தலில் புஷ்சுக்கு வெற்றி தேடித்தந்த மாநிலங்கள் ஆகும். ஒபாமா தனது பிரசாரத்தின்போது, எங்களுக்கு சாதகமான அலை வீசுகிறது, இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன், அமெரிக்காவில் முழுமையாக மாற்றத்தை கொண்டு வருவோம், எங்களால் முடியும் என்று கூறினார்.

பொறுத்திருந்து பார்ப்போம் .......யாருக்கு வெற்றி........



கருமாதி பத்திரிக்கையின் கவலை......

மலேசிய உள்துறை அமைச்சகம்: "ஹிண்ட்ராப்" வன்முறையை தூண்டி வருகிறது. மலேசிய ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்ப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


டவுட்தனபாலு: வெறும் ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டு இருந்த அமைப்பே அங்கெ தடை சென்ச்சுட்டாங்க... இங்கே, முன்னால் பிரதமரையே கொன்ற அமைப்புக்காக, ஆளாளுக்கு வக்காலத்து வாங்கிகிட்டு இருக்காங்க....அப்புறம் ஏன் அங்கெ சட்டம் ஒழுங்கு நல்ல இருக்காது...!


மேலே உள்ள செய்தி 19.10.2008 தினமலர்(மலம்) கருமாதி பத்திரிக்கையில் "டவுட்தனபாலு" பகுதியில் வந்தது.


மகாத்மாவை சுட்டுக்கொன்ற கூட்டமாயிற்றே. அதனால் தான் இந்த கவலை போலும். இந்த கூட்டம் பாபர் மசூதியை இடித்து கலவரத்தை ஏற்ர்ப்படுத்திய கூட்டம். இவை அனைத்தையும் செய்துவிட்டு இந்த கூட்டம் ஒரு முறை இந்தியாவின் அட்சிபீடதிலும் அமர்ந்தது. இந்த ஆட்சியில் பாபர் மசூதி இடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஒருவர் உள்துறை அமைச்சராகவும் இருந்தார். அப்பொழுதெல்லாம் சட்டம் ஒழுங்கை பற்றி கவலைப்படாத இந்த தினமலம் இப்பொழுது சட்டம் ஒழுங்கை பற்றி கவலைப்படுவது வேடிக்கையாக இருக்கிறது.


ஏய் தினமலமே முதலில் அந்த இயக்கத்தை தடை செய்ய சிபாரிசு செய்யலாமே?. நீங்கள் அதனை எல்லாம் செயமாட்டீர்கள் ஏனென்றால் நீங்கள்தான் அந்த இயக்கத்தின் சின்னத்தேயே தங்களது பத்திரிக்கையின் குறியீடாக வைத்துள்ளீர்கள். அப்படி பார்க்க போனால் உங்களையே தடை செய்ய நேரிடும். (சட்டம் ஒழுங்கை துண்டுபவருக்கு அதரவாக இருப்பதற்க்காக ). எதற்கும் உசாராக இருந்துகொள்ளுங்கள்.



Saturday, November 01, 2008

தினமலர்(மலம்) ஆவேசம்.....

வழக்கம் போல 02.10.2008 தினமலர்(மலம்) டவுட் தனபாலு பகுதியில் அதன் ஆவேசத்தை கருமாதி பத்திரிகை காட்டியுள்ளது.

நடிகர் கமலகாசன்: யார் பயங்கரவாதி என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும். அன்று பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்ட வாஞ்சி நாதன் இன்று நம்மால் தியாகியாக போற்றப்படவில்லையா?

டவுட் தனபாலு: ஆகா...அருமையான பேச்சு...ஆழ்ந்த கருத்துக்கள்...அன்னிக்கு பயங்கரவாதியாக இருந்த வாஞ்சிநாதன் இன்னிக்கு தியாகி ஆகிட்டாருன்னு சொன்னிங்க....அதே மாதிரி, அன்னிக்கு ராஜிவை கொன்னவங்களை, இன்னிக்கு எப்படி அலைக்கிரதுன்னு நீங்கேளே சொல்லிடுங்க....!

திரு.கமலகாசன் இந்த கூட்டத்தை விட்டு சற்றே விலகி இருப்பதால் தான் இந்த தினமலர்(மலம்)திற்கு திரு.கமலகாசன் மீது இவளவு ஆவேசம் போலும்.

டவுட் தனபாலுக்கு எவளவு நாம சொன்னாலும் அவரு லவுட் தனபாலவே இருக்காரு. ராஜிவை கொன்னவங்களை மட்டும் கேட்ட லவுட்டுக்கு, இன்னும் சிலவற்றை நான் நினைவுபடுத்துகிறேன்.

அன்று பாபர் மசூதியை இடித்து இந்தியாவில் மதக்கலவரத்தை எற்படிதியவர்களை இன்று நீங்கள் அவர்களை எப்படி அழைக்கிறீர்கள்?

அன்று மகாத்மாவை கொன்றவரை இன்று தியாகியாகியதொடு இல்லாமல் அவருக்கு பாராளுமன்றத்தில் சிலை வேறு.

இதனை எல்லாம் கருமாதி பத்திரிக்கையின் லவுட் நினைவில் வருவதில்லை. காரணம் இந்த மலமும் அந்த இனம் தானே அதனை அடிக்கடி நமக்கு நினைவுபடுத்துகிறது. ஏன்னா நாம் மறந்துவிடுவோம் அல்லவா அதனால். நீ எந்த இனம் (குள்ள நரிக்கூட்டம்) என்று நாங்கள் எந்த நாளிலும் மறக்க மாட்டோம். அதனால் இப்படி சொன்னேதேயே சொல்லி சொல்லி, எங்களையும் மீண்டும் அதே பதிலை சொள்ளவைக்கதே முட்டாள் மலேமே.

எனவே தினமலரை வாசித்துவிட்டு நாம் ஏதோ நடுநிலை செய்தியை பெற்றுவிட்டோம் என பெருமை படும் தமிழனே இப்பவாது புரிந்துகொள் அவர்கள் தமிழனுக்காக பத்திரிக்கை நடத்துகிறார்களா? இல்லை இல்லை அவாளுக்காக.

எனவே இந்த குள்ள நரிக்கூட்டம் எதனையாவது மிக மிக எதிர்த்தால் அது தமிழனுக்கு மிக பெரிய சாதகமான ஒன்றாக இருக்கும் என்று நினைவில் வைத்து இந்த கருமாதி பத்திரிக்கையை வாசிப்பீர்களாக....



Tamil 10 top sites [www.tamil10 .com ]