வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, November 04, 2008

சுயமரியாதைக் கோட்டை......

காலையில் வடசேரி திருமணம், மதியம் மன்னார்குடி - மாலையிலே நீடாமங்கலம் பொதுக்கூட்டம் ஆகிய மூன்று ஊர்கள் சுற்றுப்பயணத்திற்கு நாள் சென்னையிலிருந்து புறப்படுகின்ற நேரத்தில் எதிர்பாராமல் முதல்வரை சந்திக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத் தது.

அப்பொழுது முதலமைச்சர் அவர்கள் சிரித்துக்கொண்டே கேட்டார்கள். நாளை சுற்றுப்பயணத்திற்கு எந்தெந்த ஊர்களுக்குப் போகிறீர்கள் என்று கேட்டார்கள்.
நான் வரிசையாகச் சொன்னவுடனே உடன் அமர்ந்திருந்த சில அமைச்சர் பெருமக்கள் மற்றவர்கள் எல்லோரிடத்திலும் முதலமைச்சர் அவர்கள் சிரித்துக்கொண்டே சொன்னார் கள், ஓகோ! நம்முடைய சுயமரியாதைக் கோட்டைகளுக்குச் செல்லுகிறீர்கள் என்று அந்த ஊர்களையெல்லாம் நினைத்து உடனடி யாக மகிழ்ச்சியோடு சொன்னார்கள் (பலத்த கைதட்டல்). எனவே இன்னமும் அவர் களுடைய கணிப்பிலே எந்தெந்த ஊர் எப் படிப்பட்டது என்பதை 85 வயது இளைஞ ராக இருக்கக் கூடிய அவர்கள் 95 வயது இளைஞரைத் தலைவராக என்றைக்கும் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடிய நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்களுடைய கணிப் பிலே இந்தப் பகுதி எப்படிப்பட்டதாக இருக் கிறது என்பதை எல்லாம் அறிந்தவர்கள் அவர்கள்.
எல்லா கிராமங்களிலும் எப்படி தந்தை பெரியார் அவர்களுடைய காலடி படாத இடமே இல்லை என்று நினைக்கின்றார்களோ, அதுபோல நம்முடைய முதலமைச்சர் கலைஞர் அவர்களும் எல்லாப் பகுதிகளையும் புரிந்தவர்கள். அறிந்தவர்கள் - தெரிந்தவர்கள்.


(31-10-2008 அன்று நீடாமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து....)



No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]