வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, November 05, 2009

பெரியாரால் என்ன பயன்?


சில தோழர்களுடன் நான் உரையாடி கொண்டிருக்கும்பொழுது அவர்கள் கேட்பது பெரியார் என்ன செய்து கிழித்துவிட்டார். அவரால் ஒரு நன்மையும் கிடையாது. இதுதான் இந்த தோழர்களின் வசைபாடக உள்ளது. இப்படி கேட்பவர்கள் மேலும் சொல்லுவார்கள் பெரியாரும் அவருடைய ஆட்களும் இந்து கடவுள்களை மட்டும்தான் விமர்சிக்க முடியும் உங்களால் மற்ற இஸ்லாமிய, கிருஸ்தவ கடவுள்களை விமர்சிக்க முடியாது என்று.

பெரியாரும் அவரை சார்ந்தவர்களும் ஒன்றும் தானாக எதனையும் பேசவில்லை. இந்து மதத்தில் பார்ப்பார்கள் கடவுள் கதைகளை எழுதி இந்த கூமுட்டைகளை அடிமையாக்கிய யோகிதயைதான் சொல்ளிஇருக்கிரர்கள்.மற்ற இரண்டிலும் இவளவு அபசமோ மற்ற மனிதர்களை அடிமைகளாக நடத்துவதோ கிடையாது. இது ஒரு அடிப்படை கருத்துதான் என்றாலும் நிறைய தோழர்களுக்கு இது புரிவதில்லை. இதனை விளக்குவது என்றல் இன்னும் எழுதி கொண்டே போகலாம்.

சரி விசயத்துக்கு வருகிறேன். அப்படி என்னதான் பெரியார் செய்து கிழித்து விட்டார். இவரால் ஒன்றும் பயன் கிடையாது இனியும் கிடக்க போவதில்லை என்று உதட்டை பிதுக்கும் கூமுட்டைகளுக்கு அடிபடியிலேயே ஒன்றும் புரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

இப்படி கூறும் கூமுட்டைகளின் வீட்டிலேயே இட ஒதுக்கீடை அனுபவித்து அவரோ மற்றும் அவருடைய சகோதரர்களோ, சகோதரிகளோ ஒரு மருத்துவராகவோ,பொறியியல் வல்லுனர்களவோ, ஆசிரியர்களாகவோ வந்து இருப்பார்கள். இது அவர்களுக்கு தானாக ஏற்பட்ட மாற்றம். இனிவரும் காலத்திலும் அதனை அனுபவிக்க IIT,IIM போன்ற இடங்களில் காத்திருப்பார்கள். அனால் என்ன பயன் ஒன்றும் கிடையாது என்று மீண்டும் இந்த கூமுட்டைகளின் கூவல். இந்த கூமுட்டைகளுக்கு புரியவில்லை என்றால் நமக்கு ஒன்றும் கவலை இல்லை.

பெரியாரின் தாக்கத்தை பார்ப்பனர்கள் நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கிறார்கள். அனால் எதிரிகள் புரிந்து வைத்திருக்கும் அளவிற்கு இவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இவர்களுக்கு பெரியார் பற்றியும் ,திராவிட இயக்கம் பற்றியும் அவர் போராட்டம் பற்றியும் ஒரு கடுகளவு கூட படிதிருக்கவோ அல்லது கேட்டிருக்கொவோ வாய்ப்பே இல்லை.(இவர்கள் தினசரி பத்திரிக்கையை ஒப்புக்குதானும் எட்டி பார்ப்பது கிடையாது அப்புறம் எப்படி இதனை எதிர்பார்க்கமுடியும். ஒருவேளை ஏதேனும் அகவிலைப்படி உயர்வு என்று வந்தால் பத்திரிக்கை எட்டி பார்பார்கள்).

பெண்கள் முன்னேற்றம் பற்றி பெரியார் கூறியது எல்லாம் இவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. பெண் அடிமை (இதில் பார்ப்பன பெண்களும் அடங்குவர் , பெரியார் பார்பன எதிரி என்றல் இதில் பார்பனரல்லாத பெண்களுக்கு மட்டும்தான் போராடியிருக்க வேண்டும் ஆனால் அவர் அப்படி யல்ல மனித அடிமை தனத்திற்கு எதிராக போராடியவர் என்பதை இதன் மூலமாவது சில கூமுட்டைகள் புரிந்து கொள்ளவேண்டும் ) பற்றி பெரியார் செய்த செயல்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை.

ஆண்களுக்கு நிகராக ஆக்குவதற்கு அவர்கள் பட்ட பாடு இவர்களுக்கு எங்கு புரியபோகிறது. பெண்களுக்கு கல்வியில் ஆண்களுக்கு நிகராக வர 50% பெண்களுக்கு இடம் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடியபொழுது எல்லோரும் கேட்டார்கள் ஆண்கள் சண்டைக்கு வரமாட்டார்களா என்று அதற்க்கு அய்யா அவர்கள் ஏன் அவருடைய தங்கை, மகள்,மனைவி போன்றவர்கள் பயனடைவர்களே என்று. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மனித இனத்தின் அடிமைத்தனத்தை ஒழிக்க எவளவோ செய்து இருக்கிறார்கள். பெரியாரை பற்றி நன்கு தெரிந்தவர்கள் நினைக்கலாம் ஏன் பெரியாரை பற்றி இந்த அடிப்படி செய்தி கூட தெரியாத என்று. அனால் இந்த மிக மிக அடிப்படை செய்தி கூட தெரியாத கூமுட்டைகளும் இந்த தமிழகத்தில் வாழ்ந்துகொண்டு விதண்டாவாதம் பேசிக்கொண்டு தானிருக்கிறார்கள்.

கவியரசு வைரமுத்து கூறியது போல

புத்தர் வந்தார் அவர் ஒரு வாழ்க்கை சாவி தந்தார்
நபிகள் வந்தார் அவர் ஒரு வாழ்க்கை சாவி தந்தார்
இயேசு வந்தார் அன்பு எனும் சாவி தந்தார்
காந்தி வந்தார் அகிம்சை எனும் சாவி தந்தார்
பெரியார் வந்தார் பகுத்தறிவு எனும் சாவி தந்தார்
அனால் இன்று இவை அனைத்தும்
ஈயம்,பித்தளைக்கு கொடுத்து பேரிச்சம்பளம்
வாங்கி விட்டார்கள்.
(நினைவில் இருந்த வரிகள் மட்டும் கூறியிருக்கிறேன்)

இவர்களை நினைக்கும் போது மேலும் ஒரு கவிதை தான் நினைவுக்கு வருகிறது.

“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும்
தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்

“பெரியாரின்
முரட்டுத்தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”
இதுமுடி
வெட்டும் தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.

“என்னங்க
பெரியார் சொல்லிட்டா சரியா?
பிரமணனும் மனுசந்தாங்க.
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?”

இப்படி ‘இந்தியா டுடே’
பாணியில்கேட்டவர்
அப்பன்
பிணம் எரித்துக் கொண்டிருக
இங்கே டெலிபோன் டிபார்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.

ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?


இனியாவது பெரியாரைப்பற்றி அடிப்படை அறிவை வளர்த்துக்கொண்டு சிந்தித்து செயல் படுவோம் .......

Wednesday, November 04, 2009

மரகத லிங்கத்துக்கு மறுவாழ்வா?



திருத்துறைப்பூண்டி மருந்தீசுவரர் கோயிலில் மரகத லிங்கம் திருட்டுப்போன கதை ஊர் சிரித்தது. அதன் மதிப்பு ரூ.50 கோடி என்-றெல்-லாம் கூறப்பட்டது.முகூந்த சக்ரவர்த்தியால் தேவர்களின் தலை-வரான இந்திரனிடம் கொடுக்கப்பட்டது என்றும், இந்திரனே வழிபட்ட மரகதலிங்கம் என்றும் பெருமையாகவும் பேசப்பட்டது.

2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி அந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 48 நாள்கள் சிறப்புப் பூஜைகள் எல்லாம் தட-புடலாக நடத்தப்பட திட்டமிடப்பட்ட நிலையில், பிப்ரவரி 10 ஆம் தேதி இரவு (கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட எட்டாம் நாளில்) அக்கோயிலின் மரகதலிங்கம் களவு போய்விட்டது. ஆமாம், இந்திரனால் வழிபட்ட சக்தி வாய்ந்த லிங்கம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட அதிக விலைமதிப்புள்ள அந்த மரகதலிங்கத்தை இருவர் திருடிச் சென்றுவிட்டனர். சர்வசக்தி வாய்ந்த சாமியை சாதாரண ஆசாமிகள் திருடிக்கொண்டு சென்றுவிட்டனர்.

எட்டு மாதங்கள் கழித்து காவல்துறையின் திறமை--யால் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு; மூலச் சரக்கான மரகதலிங்கம் கைப்பற்றப்பட்டது.
கடவுள் சக்தி என்பதெல்லாம் கவைக்கு-தவாதது _ அது அடித்து வைக்கப்பட்ட சிலை _ அவ்வளவுதான் என்று பகுத்தறிவுவாதிகள் பிரச்சாரம் செய்ததெல்லாம் மாபெரும் உண்மை-யென்று பாமர மக்களும் தெரிந்துகொள்ளக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது.

வெட்கம் கெட்டவன் வெறுமனே உடலோடு செல்லத் தயங்கமாட்டான் என்பதுபோல, காவல்துறையினரால் திரும்பக் கொடுக்கப்பட்ட அந்தப் பொம்மையான மரகதலிங்கத்தை மேள-தாளத்துடன் வீதிஉலா நடத்தி கோயிலுக்குக் கொண்டு சென்றார்களாம். வெள்ளிப் பெட்டியில் வைத்து 24 மணிநேரமும் துப்பாக்கி சகிதத்துடன் காவல்துறை பாதுகாப்பாம்!

மரகதலிங்கத்துக்குச் சக்தியில்லை _ காவல்துறைக்கும், துப்பாக்கிக்கும் தான் சக்தி உண்டு என்பதற்கு இதைவிட அப்பட்டமான ஆதாரம் வேறு ஒன்றும் தேவையோ!

இது ஒரு பச்சையான நாத்திகச் செயல்தானே? கடவுளை மற, மனிதனை நினை என்றார் பகுத்-தறிவுப் பகலவன் தந்தை பெரியார். இப்பொழுது கோயிலில் தர்மகர்த்தாக்களே தங்கள் கோயில் கடவுள் சிலையைக் காப்பாற்ற காவல்துறையை _ அதாவது மனிதர்களை நாடிவிட்டனரா இல்லையா?

இதில் இன்னொரு கோமாளித்தனத்தையும் கவனிக்கத் தவறக்கூடாது.
சிலை திருடப்பட்டுச் சென்றதால் தோஷம் ஏற்பட்டுவிட்டதாம். யாருக்கு? கடவுளுக்கு! அப்படியென்றால் தோஷம் பெரியதா? கடவுள் பெரியதா? என்ற கேள்வி எழுகிறதா இல்லையா?

சரி, தோஷம் நீக்கப்படுவதற்குப் பரிகாரங்கள் செய்யப்படவேண்டாமா? அதன்மூலம் புரோகிதப் பார்ப்பனர்களின் தொப்பை நிரம்பவேண்டாமா? சுரண்டல் வியாபாரம் ஜாம்ஜாமென்று நடக்க-வேண்டாமா?

வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்-தாலும் அவற்றின் பலாபலன் என்பது பார்ப்பனர்-களுக்கு இலாபம் _ வரும்படி என்கிற ஒரு வட்டத்-துக்குள் பக்தி, கோயில், மதச் சமாச்-சாரங்கள் அடங்கிவிடும். இது பார்ப்பனியத்தின் அலாதியான சூட்சுமமான ஏற்பாடாகும்.

அந்த முறையில் திருடப்பட்டு கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள மரகதலிங்கத்தின் தோஷம் கழிப்பதற்காக பூஜை புனஷ்காரங்கள், பரிகார செயல்கள் தொடங்கப்பட்டுவிட்டன. 108 லிட்டர் பாலாபிஷேகமாம்! தேனாபிஷேகமாம். சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதிட ருத்ர ஹோமமாம்.

ஹோமம் (யாகம்) என்றால் பார்ப்பனர்களுக்கு எல்லா வகையான தானங்களும் தடபுடலாக நடக்குமே!பக்தி ஒரு வியாபாரம். அதுவும் பார்ப்பனர்-களுக்கு மூலதனம் தேவையில்லாத ஒரு வியா-பாரம் என்பதைத் தமிழர்கள் என்றைக்கு உணரப் போகிறார்களோ!

இஸ்ரோ தலைவர்


இந்திய விண்வெளி ஆய்வு மய்யத்தின் (இஸ்ரோ) தலைவராக அறிவிக்கப்-பட்-டுள்ள கே. இராதாகிருட்--டினன் தாம் பொறுப்பை ஏற்குமுன் அவசர அவசர-மாக குருவாயூர் கோயி-லுக்குச் சென்று எடைக்கு எடை வாழைப் பழங்-களைக் கொடுத்து பகவா-னின் ஆசியைப் பெற்றுக்-கொண்டிருக்கிறாராம்.


அறிவியலில் நோபெல் பரிசு பெற்றவ-ரான சி.வி. ராமன் கூறிய கருத்துக் குறித்து பொது உடைமைவாதியான ஏ.எஸ்.கே. தாம் எழுதிய கடவுள் கற்பனையே _ புரட்-சிகர மனித வரலாறு எனும் நூலின் முன்னுரை-யில் பின்வருமாறு குறிப்-பிட்டுள்ளார்.

முதல் மனிதன், யூரி காரின் 1962 இல் விண்-வெளி _ அகண்ட காஸ்-மாசில் (Cosmos) சென்-றதை விஞ்ஞானியாக இருந்தும் கடவுள் நம்-பிக்கைக் கொண்ட நல்ல-வர் டாக்டர் சி.வி. ராமன் அவர்கள் அழுத்தமாகக் கண்டித்தார். கடவுள் வசிக்கும் இடத்திற்கு மனி-தன் தன் பூத உடலுடன் செல்லுவது மிகமிகப் பாவம் செய்வதாகும் என்றார்.

அறிஞர் என்று பட்-டம் சூட்டப்பட்ட அவரே அவ்வாறு எண்ணங்-கொண்-டவராக இருந்தார் என்றால், நம் நாட்டின் பாமர மக்கள் நிலையை நான் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை; கூறாமலேயே விளங்கும் என்று தம் வேதனையை வெளிப்படுத்தினார் தோழர் ஏ.எஸ்.கே.

நம் நாட்டுப் படிப்பு என்பது வயிற்றுப் பிழைப்-புக்கான ஒரு லைசென்சு என்று தந்தை பெரியார் அவர்கள் துல்லியமாகக் கணித்துக் கூறியதை இந்த இடத்தில் பொருத்திப் பார்ப்-பது பொருத்த-மா-னதே!

ராகேஷ் சர்மா _ பெயர் நினைவிருக்கிறதா? முதல் விண்வெளி வீர-ரான இந்தியர் (1984) அவர்.

அப்பொழுது பார்ப்ப-னர்கள் நடத்திய தாம்-பிராஸ் என்ற ஏடு என்ன எழுதியது தெரியுமா?ராகேஷ் சர்மா ஆம் வான்வெளியில் பறந்த உலகத்தின் உச்சியிலே பறந்த முதல் இந்தியர்.

பாரதமே தலை நிமிர்ந்து நிற்கிறது!நாமும் தலைவணங்கி நிற்கிறோம்.எதற்காக? அவன் நம் இனத்தைச் சேர்ந்தவன் என்பதனாலா?விண்வெளி கலத்தில் காலடி எடுத்து வைப்ப-தற்கு-முன் உதிர்த்தானே மூன்று முறைகள் அந்தக் காயத்ரி மந்திரத்துக் காக! என்றது பார்ப்பன ஏடு. சென்றவனின் அறி-வுத்தீட்சண்யமும், தாம்-பிராசில் எழுதுபவர்களின் புத்தியும் எப்படி மேய்-கின்றன பார்த்தீர்களா?

இந்நிலையில் விஞ்-ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டியது ஒவ்-வொரு இந்தியனின் அடிப்-படைக் கடமை என்று இந்-திய அரசமைப்புச் சட்டம் கூறு-வதையும் எண்ணிப்-பார்ப்-போம் (51ஏ).

இஸ்ரோ விஞ்ஞானக் கூடத்தின் தலைவரே குரு-வாயூரப்பனுக்கு வாழைப்-பழம் (அல்வா கொடுக்கி-றாரோ) கொடுக்கிறார். இந்தியாவின் பார்ப்பனியம் எல்லாவற்றையும் ஏப்ப-மிட்டு விடும், எச்சரிக்கை!



விடுதலை 04-11-09

Tuesday, November 03, 2009

அந்த நாள் என்று வரும்?

தமிழ்நாட்டில் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் போராட்டம்



வகுப்புவாரி பிரதிநிதித்துவம் - தந்தை பெரியார் அவர்களின் பணிகள் குறித்து போர்வாள் தீட்டிய அரிய கட்டுரைக் கருவூலம் இது


1924 இல் ஆரியத்தின் திருவிளையாடல் கதர் போர்ட், தென்னாட்டில் கதர் நிர்-வாகம் பற்றிய அலுவல்களைக் கண்காணிப்-பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு. அதன் செயலாளராய் இருந்த சிறீமான் சந்தானம் என்பவர்_- பிரமன் முகத்துதித்த வகுப்பினர்_ அந்த நிலையத்தின் அலுவல்கள் அத்தனைக்கும் ஆரியரையே நியமித்தார் வரிசை வரிசையாக. கண்டார் பெரியார். ஏதோ தற்செயலாக, நியமிக்கப்படுபவர்கள் அனைவரும் ஆரியராக உள்ளனர் போலும் என்றெண்ணினார் முதலில். பிறகு அதுவே நித்திய நிகழ்ச்சியாக இருப்பதைக் கண்டதும் கொதித்தெழுந்து கேட்டார், என்ன சந்-தானம், ஏன் இப்படி என்று. தக்க பிராமணல்லாதார் கிடைக்கவில்லை_- கிடைக்கும் பிராமண-ரல்லாதார்க்கோ தகுதியும் திறமையுமில்லை என்று விடை கூறினார் சந்தானம். பெரியார் நம்ப வில்லை இதனை. அலசிப் பார்த்தார் உண்மைகளை. உத்தியோக நியமனங்களை ஆராய்ந்து பார்த்தார். ஆரியர்களே அடுக்-கடுக்காக, வரிசை வரிசையாக, வேண்டு-மென்றே, நெஞ்சுத் துணிவுடன் நியமிக்கப் படுகின்றனர் என்பதை உணர்ந்தார். ஓகோ! அந்த ஜஸ்டிசுகள் சொல்வது மெய்தான் போலிருக்கிறது என்றெண்ணினார். எண்ணியது மட்டுமா, இந்தப் போக்கை இனி நீர் வளரவிடக் கூடாது_- பிராமணர்களையே வரிசையாக நியமிக்கக்கூடாது என்று கட்டளையிட்டார் செயலாளர் சந்தானத்திற்கு, தான் தலைவர் என்ற முறையில். சந்தானம் உடனே காரியதரிசி பதவியை ராஜினாமா செய்தார். வழக்கு காந்தியாரிடம் சென்றது_- விசாரணைக்கு! அப்போதுதான் காந்தியார் நாய்க்கர்ஜீயை (பெரியாரை காந்தியார் அப்படித்தான் குறிப்பிட்டு வந்தார் அந்த நாளில்) அழைத்து ஏன் இந்த சிக்கலென்று கேட்டார். அதற்குப் பெரியார் கொடுத்த பதில், காந்தியார் அளித்த தீர்ப்பு, ஆச்சாரியார் செய்த வியாக்யானம், உண்மை நிலையைக் கண்டு சங்கர்லால் பாங்கர் திடுக்கிட்டது இவை அத்தனையும் உள்ளடக்கியதுதான் இக்கட்டுரை துவக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ள உரையாடல்.

தகுதியும் திறமையும் ஒரு கூட்டத்தார்க்கு மட்டுமே உரிய சொந்த சொத்து என்று இன்று கூறப் படுவது போலத்தான் அன்றும் கூறப்பட்டது என்றால் சாதாரண மனிதர்களால் அல்ல _ அன்பர் ஆச்சாரியார் போன்ற மதிப்பு மிக்க தேசியத் தலைவர்களால்! தகுதியையும் திறமையையும் காட்டிக் காட்டி ஆரியம் திராவிடத்தை ஏய்த்த கதை புதிதல்ல - பழையது; மிகப் பழையது. தம் இனத்தவரே அறிவின் திருவுடையார்; பிறரெல்லாம் அத்துணை கூர்மதி அமை-யாதார் என்று ஆரியர் நெஞ்சு நிமிர்ந்து சொல்லி வருகின்றனர் இன்று நேற்றிலி-ருந்-தல்ல. பலப்பல ஆண்டுகளாக, ஒரு துறையில் இரு துறையில் அல்ல. எல்லாத் துறை-களிலும், கதர் போர்ட் நிர்வாகம் இந்த விபரீத வாதத்திற்கு இரையான பரிதாப நிகழ்ச்சிகளில் ஒன்று. பெரியாரின் உள்ளத்தை ஒரு குலுக்கு குலுக்கி விட்டது இந்த நிகழ்ச்சி. அது-வரையில் ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று பிரித்துப் பார்க்க ஒவ்வாத பெரியாரை_- பிராமணர்களென்றும் பிராமணர் அல்லாதார் என்றும் உள்ள பாகுபாடுகளைத் தன் உள்ள-மென்னும் உலகத்தில் உலவா வண்ணம் துரத்தியடித்த பெரியாரை_- இந்தியாவைச் சுரண்டி வந்த வெள்ளை ஏகாதிபத்தியத்தை ஒழித்துக் கட்டுவதிலேயே தன் உள்ளம், உரை, செயல் அத்தனையையும் பறி-கொடுத்து--விட்ட பெரியாரை - என்ன இருந்தாலுமே இந்தப் பேத புத்தி ஆகுமோ என்று ஜஸ்டிசுகளை நோக்கி கேலிக்கவிதை பாடிவந்த பெரியாரை முதன்முதல் சிந்திக்க வைத்தது இந்தக் கதர் போர்ட் நிகழ்ச்சி.

பார்ப்பனியத்தின் சலசலப்பு :

பெரியார் உள்ளத்தில் சிந்தனை

சந்தானத்திற்கு ஆரிய உணர்ச்சியா! நான் உள்ளன்போடு நேசித்து வந்த என்னருமை நண்பர் இராசகோபாலாச்சாரியர் உள்ளத்-திலும் பிராமணீய உணர்ச்சி இத்துணை ஆழமாகப் பதிந்து விட்டிருக்கிறதா! ஆரியம் உண்மையிலேயே இவ்வளவு சூழ்ச்சியும் கரவும் வஞ்சமும் நச்சுத் தன்மையும் நிறைந்-ததா! ஒரு குலத்துக்கொரு நீதி என்றுரைக்கும் மனுநீதி இன்னும் மாயவில்லையா! காங்-கிரசிலும் இந்த அநீதியா! எல்லாரும் ஓர் குலம்; எல்லாரும் ஓர் இனம்; எல்லாரும் ஓர் நிறை; எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று கவி பாடும் கலைவாணர்களும், அதைக் காட்டி உரையாடும் நாவாணர்களும் நனிநிறைந்த தேசிய இயக்கத்திலும் இது இருக்கிறதா! பெரியார் இது போல எண்ண-லானார், கதர்போர்ட் பிராமண போர்ட் என உருமாறிய விந்தை கண்டு. முதன் முதலாக அவருடைய உள்ளத்தில், பிராமணர் - அல்-லாதார் என்ற இரு சொற்களுக்கும் நடுவே உள்ள இடைவெளி, மிகப் பயங்கரமான, மிக மிக ஆழமான, பலப்பல நூற்றாண்டு-களாகக் கொஞ்சமும் குறையாது உள்ள இடை-வெளியின் சாயல் படர்ந்தது -முதலில் லேசாக; பிறகு கொஞ்சம் அழுத்தமாக; பிறகு மேலும் மேலும் அழுத்தமாக.

விவிவி

மகரிஷி வ.வே.சு.அய்யர் எல்லோரு-டைய மதிப்பையும் பாராட்டுதலையும் பெற்றவர். சீமையில் வெள்ளைக்காரர்கட்கு எதிராகப் பயங்கரப் புரட்சி செய்யத் திட்டமிட்டு வந்த வீரசவர்க்காருக்கு உற்ற துணைவராகவும் உரிய நண்பராகவும் இருந்தவர். கலை பல பயின்றவர்; திருக்குறள் உணர்ந்தவர்; அறிஞர், விவேகி, வீரர், தீரர் என்றெல்லாம் புகழுரைகள் சூட்டப்பட்டவர். அப்படிப்-பட்டவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சேரன்மா தேவியில் பரத்துவாச ஆசிரமம் என்ற பெயரில் தேச பக்தர்-களையும், தேசிய வீரர்களையும் தயாரிப்-பதற்கு என்பதாகக் காரணம் காட்டி ஒரு குரு-குலம் அமைக்கிறார் என்ற சேதி கேட்ட-போது தமிழ் நாட்டுக் காங்கிரஸ் துள்ளிக் குதித்தது, மகரிஷியின் வீரம், தியாகம், மேல்நாட்டில் வாழ்ந்ததால் பெற்றஅநுபவம், ஆழ்ந்த கலைப் பயிற்சி, ஆங்கில அறிவு, பயங்கரப் புரட்சியில் ஏற்பட்ட பழக்கம் இத்தனையும் குருகுலத்தை எத்தனை வளப்படுத்தும் என்று எண்ணி எண்ணி தேசிய வட்டாரம் களிப்புக் கடலில் குதித்துக் குதித்துக் கூத்தாடிற்று. அவர் உதவித் தொகை வேண்டுமென்று கேட்டதும் தமிழ் மாகாண காங்கிரஸ் 10,000 ரூபா நன்கொடை தருவதாக உடனே பெருமகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டது.

அப்போது தமிழ் மாகாண காங்கிரசிற்கு இரண்டு கூட்டுக் காரியதரிசிகள். ஒருவர் பெரியார், மற்றவர் கே.எஸ்.சுப்பிரமணிய அய்-யர் என்பவர். பெரியாரின் பணி செக்கிலே கையெழுத்திடுவது. பிற கடிதங்கள் ஆதா-ரங்கள் முதலியவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பு மற்ற செயலாளருக்கு. வ.வே.சு.-அய்யர், மாகாண காங்கிரஸ் தீர்மானித்தபடி என் குருகுலத்திற்கு தரவேண்டிய நன்-கொடையைத் தாரும் என்று பெரியாரிடம் கேட்டபோது, பெரியார், தாராளமாகத் தருகிறேன். அதற்கென்ன? நீங்கள் குருகுலம் எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்? அதனுடைய சட்ட திட்டங்கள், நடைமுறை விதிகள் முதலியவற்றைக் கொண்டு வாரும்; அவற்றைப் பதிவு செய்து கொண்டு பணம் தருகிறேன் என்று சொன்னார். அவர் சரி என்று சொல்லிவிட்டு, இன்னொரு செய-லாளராக சுப்பிரமணிய அய்யரிடம் சென்று, பெரியாருக்குத் தெரியாமல் ரூபா 5,000 க்கு செக் வாங்கிக் கொண்டு போய்விட்டார்.

குருகுலப் போராட்டம் மூட்டிவிட்ட தீ

இதற்கு இடையில் வ.வே.சு. அய்யரின் குருகுலம் துவக்கப்பட்டுவிட்டது. துவக்கிய சில நாட்களுக்குள் அங்கு பிராமணர்_- பிராமணரல்லாதார் வேற்றுமை மிகவும் பாராட்டப்படுவதாகத் தமிழ்நாடு முழுவதும் ஒரு சேதி காட்டுத்தீப் போல பரவிற்று. தமிழகம் முழுவதும் அதே பேச்சு. அரசியல் உணர்வுடையார் அனைவர் உரையாடலிலும் குருகுல வேற்றுமையைப் பற்றிய கருத்துப் பரிமாறல். எங்கும் எவரும் இதைப் பற்றியே சிந்திக்கவும் பேசவும் எழுதவும் முனைந்-தனர்.

ஒரு நாள் ஓமந்தூர் இராமசாமி ரெட்டி-யார் (ஆமாம்! இப்போது சென்னை மாகாண முதலமைச்சராய் உள்ளவர்தான்) பெரி-யாரைக் கூப்பிட்டு, பரத்வாஜ குருகுலத்தில் பயின்றால் நல்ல பண்பாடும், அறிவு வளர்ச்சியும், சகோதர நேயமும், ஜாதி வேற்றுமையற்ற பரந்த உள்ளமும் ஏற்படும் என்று கருதி தன் மகனை அங்குப் பயிலும் பொருட்டுத் தான் அனுப்பியதையும், அவன் தன்னை ஒரு பிராமணர் அல்லாதவன் என்ற காரணத்தற்காக அங்கு இழிவாகக் கருதி பிராமணப் பிள்ளைகள் உண்ணாத இடத்தில் இருக்க வைத்து உணவு கொடுத்-ததாகத் தன்னிடம் தெரிவித்ததையும் விளக்கமாக எடுத்துச் சொல்லி, இந்த அநி

ய-யத்திற்கு நாம் ஒரு பரிகாரம் தேட வேண்-டாமா என்று மனம் வருந்திக் கேட்டார்.

மகரிஷி என்றும், சிறந்த அறிஞர் என்றும், கலைஞர், தியாகி, புரட்சி வீரர் என்றும், அஞ்சாமையின் சின்னம் என்றுமெல்லாம் போற்றப் பட்டு வந்த வ.வே.சு. இந்த வேற்று-மையைப் பாராட்டுவதில் முனைந்து நிற்கிறார் என்று அறிந்த போது பெரியார் திடுக்கிட்டுப் போய் விட்டார். அவரைப் போலவே, காங்கிரசில், அதுபோது, இரவு பகல் எனப் பாராது, ஓய்வு ஒழிவு என்பது கருதாது, அலைச்சல் திரிச்சல் என்பன அறியாது, சுழலும் சூறாவளி என நாடெங்கும் சுழன்று, சுழன்று பணியாற்றி வந்த திரு வி.கலி-யாணசுந்தரனாரும் டாக்டர் வரதராஜுலு நாயுடுவும் நெஞ்சம் துணுக்குற்றனர். நாயுடு _நாயக்கர் - _ முதலியார் என்று தமிழகத்தால் செல்லப் பெயரிட்டு அழைக்கப்பட்டு வந்த இம் மூவரும் குருகுல சம்பவத்தால் பாறையில் மோதிய மரக் கலமென மனங் கலங்கிப் போயினர். காங்கிரசுக்கு வெளியே பெருத்த ஆரவாரம் புரிந்து வந்த ஜஸ்டிஸ் கட்சியை வகுப்புவாத நச்சுக் கருத்தினர் என்று அன்று வரை எள்ளி நகையாடி வந்த இவர்கள் உள்ளம் இச்சேதி கேட்டதும் இவர்-களையே எள்ளி நகையாடத் தொடங்-கிற்று. ஆம்! முதன் முதலாக, காங்கிரசில் பார்ப்பனர்_- பார்ப்பனரல்லாதார் என்ற வேற்றுமை வித்து ஊன்றப்பட்டது. வ.வே.சு. வின் குருகுல அமைப்பால்_ அது நடத்தப்-பட்ட முறையால்_ அதனால் எழுந்த புகைச்-சலால்_ புகைச்சல் தமிழரிடையே கிளம்பிய மனக்கொதிப்பால்!

சில நாள் பொறுத்து, டாக்டர் டி.எஸ்.எஸ். இராஜன் வீட்டில் மாகாண காங்கிரஸ் கமிட்டி கூடியபோது, முன்னர் கமிட்டியால் ஒப்புக் கொள்ளப் பட்ட தீர்மானப்படி 10,000 ரூபா நன்கொடை தர வேண்டியதில் ரூபாய் 5,000 கொடுக்கப்பட்டது. போக மிச்சப் பணம் இன்னும் தரப்படவில்லை என்று வ.வே.சு. அய்யரின் நண்பரான ஓர் ஆரியர் புகார் செய்தார். பெரியார் வெகுண்டெழுந்து, முன்வாங்கிக் கொண்ட 5,000 ரூபாயே முறை தவறுதலாகவும், தன் விருப்பத்திற்கு மாறாகவும், தனக்குத் தெரியாமலும், நேர்-மையற்ற வழியில் வாங்கப்பட்டதென்பதை எடுத்துரைத்தார்.

அய்யர் குருகுலத்தில் பிராமணர்க்கு உயர்வும் அல்லாதார்க்குத் தாழ்வும் காட்டப்-படுவதாக ஏராளமான தோழர்கள் எனக்கும் கடிதம் எழுதி உள்ளனர், ஏன் தமிழ்நாடு இதழில் வெளியிட என்று உடனே குறிப்-பிட்டார் டாக்டர் வரதராஜுலு நாயுடு. ஓமந்தூர் ரெட்டியார் எழுந்து, சாப்பாட்டில் மட்டுமல்ல, படிப்பு சொல்வதிலும் வேறுபாடு உள்ளது; பார்ப்பனருக்கு சமஸ்கிருதக் கல்வியும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ்க் கல்வியும் மட்டும்தான் கற்பிக்கப்படுகின்றன என்று கூறினார். குருகுலத்தில் ஆசிரியராய் உள்ள மற்றொருவர் எழுந்து தமிழ்ப் பிள்-ளைகள் வேத சுலோகங்களைச் சொல்லக்-கூடாது என்பதாக ஒரு தடை இருப்ப-தாகவும் குறிப்பிட்டார். இவற்றை யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வ.வே.சு. அய்யர் வைதிகர்கள் உள்ள இடத்தில் நான் என்ன செய்வது என்பதாக சமாதானம் சொன்னாரே தவிர இப்படியெல்லாம் இல்லை என்பதை மறுத்துரைக்கவில்லை என்பதையும், ஆச்சாரியாரும், டாக்டர் ராஜனும் இந்தப் பிரச்சினையிலும் வ.வே.சு. அய்யர் பக்கமே நிற்பதையும் கண்ட பெரியார் இனம் இனத்தோடு என்பது இதுதான் போலும் என்பதை நன்குணர்ந்து கொண்டு, திரு. வி.க., டாக்டர் நாயுடு இருவரிடமும் கலந்து பேசிக் கொண்டு, இந்த மனுநீதி குருகுலத்தை ஒழித்தே தீர்வது என்ற திட்டமான முடிவுக்கு வந்தார். திரு.வி.க. நவசக்தியிலும் டாக்டர் நாயுடு தமிழ்நாட்டிலும் குருகுலத்தைக் கண்-டித்தனர். பெரியாரும் நாயுடுவும் தமிழகத்-தைச் சுற்றிச்சுற்றி வலம் வந்து குருகுலத்-திற்கு இருந்து வந்த ஆதரவைக் குலைத்-தனர். தேசிய குரு குலத்திற்குப் பணம் தருவது தேசிய பாவம் என்று டாக்டர் நாயுடு முழங்கினார். குருகுலம் ஒழிந்தது. ஆனால் அது தமிழ் நாட்டு அரசியலில் மூட்டிவிட்ட தீ ஒழியவில்லை -வளர்ந்தது. மேலும் மேலும் வளர்ந்தது. வளர்ந்து வளர்ந்து, பெரிய பெரிய அநீதிகளையெல்லாம் சுட்டுப் பொசுக்கிற்று - பொசுக்குகிறது இன்றும்.

விவிவி

சதிச் செயல்கள் சாய்ந்தன - நீதியும் நேர்மையும் நிலைத்தது

1924 இல் திருச்சியில் கூடிய தமிழ் மாகாண காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பெரியார், காங்கிரஸ் செயலாளராகவும் கொஞ்ச நாள் அதன் இடைக்காலத் தலை-வராகவும் இருந்து செய்து வந்த வேலை-யைப் பாராட்டி ஒரு தீர்மானம் செய்யப்-பட்டு, அந்த ஆண்டு திருவண்ணாமலையில் கூடும் மாகாண காங்கிரசுக்குத் தலை-வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத் தீர்மானம் நிறைவேறியது கண்டு மனம் குமு-றிய வ.வே.சு. அய்யர் பெரியார் மீது நம்-பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார் - அப்போதே, அதே இடத்தில்! அது கண்ட திரு.வி.க. பாழும் பார்ப்பனர் - அல்லாதார் என்ற உணர்ச்சியைத் தமிழ்நாடு காங்கிரசில் வ.வே.சு. புகுத்தி விட்டமை கண்டு வருந்து-கிறேன். எத்தனையோ ஆண்டு-களுக்குப் பிற்பாடு, இன்றுதான் ஒரு பார்ப்பனரல்-லாதார் மாகாணக் காங்கிரஸ் தலைவரானார். அவர் பண்புகளைப் பாராட்டிப் பேசிய பத்து விநாடிகளுக்குள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது தவறு என்று இடித்துரைத்தார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்றது. ஆனால் பிராமணர் - அல்லாதார் உணர்ச்சி வலுத்தது.

விவிவி

1925 இல் டாக்டர் வரதராஜுலு நாயுடு தமிழ் மாகாண காங்கிரஸ் தலைவர். அவர் ஒரு தமிழர் என்ற காரணத்தை உள்ளத்திற் கொண்டு அவர் மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது ஆரியரால். டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், சி.ஆர். இரு-வரும் அதை ஆதரித்தனர். ஆனால் பெரியார் அவர்கள் உடனேஅதை எதிர்த்துப் பேசித் தோற்கடித்தார். பிறகு டாக்டர் நாயுடு மீது நம்பிக்கை இருப்பதாக ஒரு தீர்மானம் பெரியாரால் கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டு தீர்மானங்களிலும் ஆரிய உறுப்-பினர்கள் அனைவரும் ஒரு பக்கமாகவும், திராவிட உறுப்பினர்கள் அனைவரும் ஒரு பக்கமுமாக வாக்களித்தனர்.

அதோடு வ.வே.சு. அய்யர் குருகுலத்தைக் கண்டித்தும், அங்கு காட்டப்படும் ஜாதி வேறுபாடு தொலைய வேண்டுமென்பதை வலியுறுத்தியும், தீண்டாமையோடு ஜாதிப் பாகுபாடும் தொலைய வேண்டுமென்பதை வலியுறுத்தியும் பல தீர்மானங்கள் நிறை-வேற்றப்பட்டன. உடனே சி.ஆர்., டாக்டர் ராஜன், டாக்டர் சாமிநாத சாஸ்திரி, கே. சந்-தானம், என்.எஸ்.வரதாச்சாரி முதலிய பதின்மர்_- பதின்மரும் ஒரே இனத்தவர் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இருந்தே ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினர்.

காங்கிரசில் நிகழ்ந்த ஆரிய - திராவிடப் போரின் மற்றுமோர் அத்தியாயம் அது.

விவிவி

இந்து அறநிலையப் பாதுகாப்பு மசோதா பனகால் அரசரால் - ஜஸ்டிஸ் அமைச்சர்_ குழு-வினால் - கொண்டு வரப்பட்டது. ஏறத்தாழ இதே காலத்தில், இதனால் மதத்திற்கு ஆபத்து! ஆண்டவனுக்கு ஆபத்து! என்று அபாயக் குரல் எழுப்பினர் ஆரியர் அனைவரும்_ காங்கிரஸ் பிராமணர் உட்பட. மசோதா ஜஸ்டிஸ் கட்சியினரால் கொண்டு வரப்படுகிறது என்றாலும் இதைக் கண்ட பெரியார், கட்சி வேற்றுமை பாராட்டாது பொதுமக்கள் நன்மைக்கான இம்மசோதாவை அனைவரும் ஆதரிக்க வேண்டுமென்று அறிக்கை விடுத்தார். டாக்டர் நாயுடுவும், திரு வி.க.வும் இதனை ஆதரித்தனர். பார்ப்பனர் அனைவரும் கட்சி வேற்றுமையின்றி மசோ-தாவை எதிர்க்கவும், அல்லாதார் அனை-வரும் அதே போல கட்சித் திரைகளைக் கிழித்துக் கொண்டு அதனை ஆதரிக்கவு-மான நிலை ஏற்பட்டது. காங்கிரசில் நிகழ்ந்த பிராமணர் -அல்லாதார் போராட்டத்தின் மற்றொரு பகுதி இது.

விவிவி

காங்கிரசில் தமிழர்களுக்கு பார்ப்பனர்கள் மீது வெகு வேகமாக வளர்ந்து வரும் அதி-ருப்தியை அடியோடு ஒழிக்க வேண்டு-மானால், அந்தந்த வகுப்புகளின் தொகைக்-கேற்ப அவரவர்கட்கு உரிமை தரப்பட-வேண்டும்_- அதாவது வகுப்பு வாரி பிரதி-நிதித்துவத்தை காங்கிரஸ் அதிகார பூர்வமாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பெரியார் இந்த நிகழ்ச்சிகளின் பின்பு வற்புறுத்தலானார்.

1925 இல் காஞ்சிபுரத்தில் தமிழ் மாகாண காங்கிரஸ் கூடிற்று. பெரியார் வகுப்பு வாரித் தீர்மானத்தை அங்கு கொண்டு வந்தார். அது பல்வேறு சூழ்ச்சிகளின் விளைவாக ஒதுக்கப்பட்டது.

உடனே பெரியார் மாநாட்டில் எழுந்து, இன்று காங்கிரஸ் என் சொல்லை ஏற்க மறுக்-கிறது. ஆனால் என்றேனும் ஒரு நாள் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவமே வகுப்புப் பூசலைத் தீர்ப்பதற்குரிய சரியான வழி என்பதை அது உணரவே போகிறது. பார்ப்பனியம் காங்கிரசிலும் வெளியிலும் விளைவித்து வரும் கொடுமைகளை நாட்டு மக்களுக்கு எடுத்து விளக்குவதே இனி என் வேலை என்று சூளுரைத்து விட்டு வெளியேறினார்.

உண்மை உலவுகிறது - 22 ஆண்டுகளுக்குப் பின்

அவர் 1925 இல் உரைத்த அந்த நாளும் வந்தது - 1947 நவம்பர் 20 இல்,

இடையே உள்ள காலப் பள்ளம் 22 ஆண்டு-கள்! ஆம், 22 ஆண்டுகள் தேவைப்-பட்டது உண்மை உலவுவதற்கு!

20.11.1927 இல் வெளியான சென்னை காங்கிரஸ் அரசியலார் அறிக்கை இது:

இதுவரையில் உள்ள வகுப்பு விகிதாசர உத்தரவுப் படி காலியாகிற ஒவ்வொரு 12 ஸ்தானங்களுக்கும் பிராமணல்லாதார் 5, பிரா-மணர் 2, முகமதியர் 2, ஆங்கிலோ இந்-தியர், கிறித்துவர் 2, அரிஜன் 1 என்ற முறை-யில் வழங்கப்படும்.

ஹரிஜனங்களுக்குப் போதுமான படியும், பிராமணல்லாதாரில் பிற்போக்கானவர்க்கும், பதவிகள் கிடைப்பதில்லை என்பதனால் சர்க்கார் இந்த வகுப்புவாரி உத்தரவைப் பின்-கண்டவாறு மாற்றுகிறது. இனி காலியாகிற ஒவ்வொரு 14 ஸ்தானங்களுக்கும் கீழ்க்கண்ட முறைப்படி ஆளெடுக்கப்படும்.

1. பிராமணரல்லாதார்

2. ஹரிஜன்

3. பிற்போக்கு பிராமணரல்லாதார்

4. பிராமணரல்லாதார்

5. பிராமணர்

6. பிராமணரல்லாதார்

7. முசல்மான்

8. பிராமணரல்லாதார்

9. ஆங்கிலோ இந்தியர், கிறிஸ்தவர்

10. பிராமணரல்லாதார்

11. ஹரிஜன்

12. பிராமணரல்லாதார்

13. பிராமணர்

14. பிற்போக்கு பிராமணரல்லாதார்

புதிய உத்தரவு மத்திய சர்க்காரின் விகி-தாசார ஏற்பாட்டுக்கும், ஜனத் தொகைக்கும் ஏற்றதாகப் பொதுவாக இருக்கிறதென்று தெரிவிக்கப்படுகிறது. விவிவி

காங்கிரஸ் சர்க்கார் பழைய விகி-தா-சாரத்தை மாற்றி புதிய விகிதாசாரத் திட்-டத்தை அமலுக்குக் கொண்டு வந்திருக்கிறது. அதாவது பழைய விகிதாசாரம் தவறு என்று எண்ணிற்றே தவிர, காங்கிரஸ் சர்க்கார், விகிதாச்சாரப்படி பதவிகளை வழங்கும் முறையே தவறு என்று எண்ணவில்லை. வழங்கும் அளவு தவறு என்றதே தவிர வழங்கும் முறை தவறு என்று கூறவில்லை. ஆகவே, வழங்கும் முறையை -வகுப்புகளின் எண்ணிக்கைக்கேற்பவே பதவிகளை வழங்கவேண்டுமென்ற திட்டத்தை - வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் என்ற தத்துவத்தை அது ஒப்புக்கொண்டது என்று பொருள்.

காங்கிரஸ் சர்க்கார் இன்று அந்தந்த வகுப்-புகளுக்குத் தந்துள்ள உரிமைகளின் அளவு சரியா? சரியில்லை என்றே நாம் கருது-கிறோம். ஆனால் அது வேறு பிரச்சினை.

அந்தந்த வகுப்புகளின் எண்ணிக்கைக்-கேற்ப உத்தியோகங்களின் எண்ணிக்கை வகுக்கப்பட்டு இருக்கிறதா? இல்லை. பார்ப்-பனர்கட்கு உரியதைவிட அய்ந்து மடங்கு அதிகமாகவும், திராவிடர் ஆதிதிராவிடர் முசு-லிம்-கள் ஆகியோருக்கு உரியதிலும் பார்க்க மிகக் குறைவாகவும் விகிதாசாரம் உள்-ளது. ஆனால் அதுவும் வேறு பிரச்-சினை. ஆனால், காங்கிரஸ் சர்க்கார் வகுப்-புகளின் எண்ணிக்கைக்கேற்பவே பதவி-களை வழங்கவேண்டும் என்ற தத்துவத்தை 1925 இல் பெரியார், காங்கிரசை ஒப்புக்-கொள்ளுமாறு வலியுறுத்திய, ஆனால், காங்கிரஸ் ஒப்புக்கொள்ள மறுத்த தத்-துவத்தை - இன்று 1947 இல் மனமுவந்து ஒப்புக்-கொள்வது கண்டு நாம் மிக மகிழ்கிறோம்.

பெரியார் 1925 இல், 1947 அய்க் கண்-டார். காங்கிரஸ் சர்க்கார் 1947 இல் 1925 அய்க் காண்கிறது. ஆனால் இன்-றேனும் காண்கிறதே அதுவரை மகிழ்ச்சி நமக்கு.

சென்னை சர்க்கார் அறிக்கையில் இங்கே மட்டுமல்ல, மத்திய சர்க்காரிலும் இது போன்ற விகிதாசார ஏற்பாடு இருக்கிறது என்கிற அந்தப் பகுதி உண்மையிலேயே அனைவரும் கவனித்தற்குரியது. சின்னத் தலைகள் (கல்கியின் பாஷை!) மட்டுமல்ல, பெரிய தலைகளும்கூட வகுப்புவாரி ஏற்பாட்டினையே ஒப்புகின்றன என்பது நம் கவனத்திற்குரியதுதானே!

பெரியார், 1925 இல் சொன்னதை இன்று சாதித்து விட்டார். வகுப்பு வாரித் திட்டம் ஒன்று தவிர வகுப்புச் சிக்கல் தீர மருந்-தில்லை என்பதை, காங்கிரஸ் நடை முறை-யிலேயே ஏற்கும் அந்த நாளைக் கண்டு-விட்டார். பார்ப்பனியம் அழியும் நாளையே இன்னும் அவர் காணவில்லை. அதையும் காண்பார் விரைவில் என்பதில் ஏது அய்யம்?

காஞ்சி மாநாட்டிலிருந்து வெளியேறிய விநாடி முதல் இன்று வரை அந்த மாவீரர் பார்ப்பனியத்தின் கொடுமைகளை மக்களுக்கு விளக்கியே வந்திருக்கிறார். ஆரியத்தின் ஆணவத்தை - வர்ணாசிரம ஏற்பாட்டின் அநீதியை தமிழ் வீரர் கூட்டம் நன்குணர்ந்த வீறுகொண்டெழுந்து வீரப் போர் தொடுக்கச் செய்துவிட்டார். பார்ப்-பனியம் என்னும் மாறு பெயர் கொண்ட பழமையை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எத்தனையோ ஆயிரமாயிரம் இளங்காளைகளின் உள்ளத்தில் தூவி விட்டார். பெரியதோர் பட்டாளத்தை - அறி-வும் திறமும் சிந்தனை-யும் படைத்த தமிழர் சேனையை உருவாக்கி விட்டார். வாழ்க வாழ்கவே! வளமார் எமது திராவிட நாடு வாழ்கவே! என்னும் பண் பாடச் செய்து-விட்டார். சிறுத்தையின் குகை-யில் சிறுநரி-களின் வாசமா என்னும் கேள்வி எங்கணும் எழச் செய்து விட்டார். புதிய தமிழகம் இனி உருவாகவேண்டும் - அது ஒன்றுதான் பாக்கி - அதற்கான பாதை வகுக்-கும் பணியைச் செம்மையுறச் செய்து முடித்துவிட்டார். புதிய தமிழகம் உருவாக வேண்டுமானால் பழைய பார்ப்பனியம் அழிய வேண்டும். அது கல்லறை புகும் நாள் என்று வரும்? ஆம், புரட்சித் தமிழகம் பூக்கும் அந்த நாள் என்று வரும்?

போர்வாள், 6.12.1947

ராஜபக்சேவும், ஏழுமலையானும்


திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே குடும்பத்தினரு-டனும், ரதகஜ துரக பதாதிகளுடனும் (80 பேர்கள் கொண்ட குழு) திருப்பதி வந்து வெங்கடாசல-பதியைத் தரிசித்தனர் என்ற செய்தி ஏடுகளில் தடபுடலாக வெளிவந்தது.


இவர்களின் வருகையால் பக்தர்கள் பல மணிநேரம் காத்துக் கிடக்க நேர்ந்தது என்ற தகவலும் கசிந்துள்ளது.கோயில் மரியாதைப்படி அதிபரின் குடும்பத்-திற்கு முகத்பார தரிசனம் செய்ய அனுமதிக்-கப்-பட்டதாம்.
அதிபருக்காக ஆகமங்களுக்கு விரோதமாக விஷயங்கள் இடம்பெற்று இருக்கின்றன என்ற குற்றச்சாற்றும் எழுந்துள்ளது.

கையில் காசில்லாதவன் கடவுளே ஆனாலும் கதவைச் சாத்தடி என்பது வேறு இடத்தில் கேட்கப்-பட்ட பாடல்.கையில் காசில்லை என்றால் கடவுளிடத்திலும் வேலை நடக்காது என்பது நடைமுறையாகும்.ராஜபக்சே ஒன்றும் இந்து மதக்காரர் அல்லர். பவுத்த மதத்தைச் சார்ந்தவர். இன்னொரு மதக்-காரரை எப்படி இந்து மதக் கோயிலில் நுழைய விடலாம் என்ற கேள்வி எழும். பவுத்தமும், இந்து மதத்தில் ஒரு பிரிவு என்று வளைத்துப் பேசியதன் அடிப்படையில் இது நடந்திருக்கிறது என்று இந்து வகையறாக்கள் சமாதானம் கூறக்கூடும்.

உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், பவுத்தர்கள் தங்களை இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஏற்றுக்கொள்வதில்லை. ஒருமுறை அத்வானி அவ்வாறு சொல்லிவிட்டு நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார்.அகிம்சையை வலியுறுத்திய புத்தர் நெறியை மதமாக்கி, தமிழர்களின் ரத்தத்தை புத்தர் சிலைக்கு அபிஷேகம் செய்யும் அளவுக்கு ஒரு கேடு-கெட்ட நிலை சிங்கள நாட்டில் நடை-பெற்றதை யாரும் மறந்திருக்க முடியாது.

நெறி மதமானால், அது வெறியாகிவிடும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். ஹிந்து மதத்தின் வருணக் கோட்பாடுகளையும், சடங்-காச்-சாரங்களையும் தலைகீழாகப் புரட்டியடிக்கத்-தான் கவுதம புத்தர் புதிய நெறிமுறைகளைக் கொடுத்தார்.மகாவிஷ்ணுவுக்கு உள்ள பல பெயர்களில் வெங்கடேசனும் ஒன்று. அந்த மகாவிஷ்ணு அவதாரம் எடுத்துதான் கொலைகள் பலவற்றை நிகழ்த்தியிருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

அப்படிப் பார்க்கப் போனால் பவுத்த நெறிக்கு எதிர்மாறான தத்துவத்தைக் கொண்டதுதான் திருப்பதி ஏழுமலையான் கோயில். புத்தரை ஆயுதந்-தூக்கியாக மாற்றி அமைத்துக்கொண்ட சிங்கள இனத்தின் அதிபர் அந்தக் கண்-ணோட்டத்தில் ஏழுமலையானைத் தரிசிக்க வந்தால் வியப்பில்லை.

திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்துச் சென்றுவிட்ட பிறகுதான், இலங்கையில் விடு-தலைப்புலிகளை தம்மால் ஒழித்துக்கட்ட முடிந்ததாக ராஜபக்சே கூறியிருக்கிறார்.அப்படியென்றால், ஏழுமலையானைப் பகுத்-தறிவுக் கண்ணோட்டத்தில் எப்படிப் பார்க்க-வேண்டும் என்பது ஒன்று; மனிதாபிமானக் கண்-ணோட்டத்தில் எப்படிக் காணவேண்டும் என்பது இன்னொன்று; தமிழர்கள் நோக்கில் எப்படிக் கணிக்கவேண்டும் என்ற மூன்றாம் நிலை.பொதுவான கண்ணோட்டத்தில் பார்ப்பதாக இருந்தாலும் மக்களைக் கொன்று குவித்திட கடவுள் பக்தி பயன்பட்டு இருக்கிறது. கருணை-யானவன் கடவுள் என்னும் பிரச்சாரம் எவ்வளவு மோசடியானது என்ற முடிவுக்காவது குறைந்த-பட்சம் வரவேண்டாமா? என்பதுதான் நமது கேள்வி.

இதில் இன்னொரு சூட்சமும் குடிகொண்டி-ருக்கிறது. தாம் செய்த மனிதப் படுகொலை (நிமீஸீஷீநீவீபீமீ) கடவுள் பக்தி என்னும் மூடு திரைமூலம் மறைக்கும் ஒரு தந்திரமும் இதில் மறைந்திருப்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.இலங்கையில் நடைபெறும் கலவரங்களுக்கான பரிகாரம் ஒன்றை ஆன்மிகவாதிகள் கூறினார்கள். சிறீரங்கத்தில் உள்ள ரெங்கநாதன் கோயில் கோபுரம் வாஸ்து முறையில் சரியானபடி அமையவில்லை.

அதைச் சரி செய்ய கொழும்பில் ஒரு அரங்கநாதன் கோயிலைக் கட்டவேண்டும் என்று சொன்னார்களே நினைவிருக்கிறதா?எந்தப் பிரச்சினையானாலும் அதனை பார்ப்பனியத்தின் இலாபமாக _ சுரண்டலாக மாற்றும் ஒரு சூழ்ச்சி _ அடங்கியிருப்பதை ஆறாவது அறிவைக் கொண்டு சிந்திப்பார்களாக!

விடுதலை 03-11-09

Monday, November 02, 2009

மீண்டும் மீளூம் தலைவன் – களத்திலிருந்தும் புலத்திலிருந்தும் போராளிகள்

பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகி விட்டன. ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், ‘அண்ணன் மிக பத்திரமாக இருக்கார்.

அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள். விரை விலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!’ என உறுதியாகச் சொல்கிறார்கள். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் இருபதாயிரத்துக்கும் மேற் பட்ட அப்பாவி மக்கள் பிரபாகரனின் சம காலத் தளபதிகள் என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்பு களையும், ஈழத்தின் கடைசி நிமிடங் களையும் வேதனையோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் அந்தப் பிரதிநிதிகள். அடுத்து என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியும்!முப்பது வருடப் போராட்ட காலத் தில் அடுத்து என்ன நடக்கும்? என்பதை யூகிப்பதில் தலைவர் ரொம்பவே கெட்டிக்காரர்.




கடைசிக் கட்ட நெருக்கடிகள் குறித்து, அவருக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசி வரை பதிலடித் தாக்குதல் நடத்தாமல், ஆயுதங்களைப் பதுக்குவதிலேயே குறியாக இருந்தார். இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கிப் படைகள், அதன்பிறகு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது..!அதேபோல் புலிகளின் விமான பாகங்களும் மிக பத்திரமான இடத்தில் பதுக்கப்பட்டிருக்கின்றன. கிளிநொச்சி பிடிபட்டபோதே, புலிகளின் அனைத்துத் துறை தளபதிகளையும் கலந்து ஆலோ சித்த தலைவர், ”நம்முடைய பின்னடைவு உறுதியாகிவிட்டது. உலக நாடுகளின் பெரிய ஆயுத உதவிகளை நாம் சமாளிப்பது கடினம். ஆனாலும், தற்காப்புத் தாக்குதலின் மூலமாக மக்களைக் காப்போம்.

அதற்கிடையில், நம் படைப் பிரிவுகள் முக்கிய ஆயுதங்களைப் பதுக்கவும், காடுகளுக்குள் ஊடுருவவும் தயாராக வேண்டும். கட்டளைக்காகக் காத்திருக்காமல், ஒவ்வொரு தளபதியும் தாக்குதல் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்!” என்று சொல்லி இருக்கிறார். அதன்படி கிளிநொச்சி, மாத்தளன், அம்பாறை, முல்லைத் தீவு, கஞ்சி குடிச்சாறு உள்ளிட்ட பல பகுதிகளில் புலிகளின் படைப் பிரிவுகள் ஊடுருவியிருக் கின்றன. இப்போது என்றைக்குமே இல்லாத மிகப் பெரிய இழப்பை தலைவர் சந்தித்திருந்தாலும், மீட்சிக்கான பல திட்டங்களையும் அவர் ஏற்கெனவே செயல்படுத்தி வைத்திருக்கிறார். கடைசி வரை களத்தில் நின்ற கரிகாலன்! மக்களுக்கும் போராளிகளுக்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாகக் கடைசி வரை களத்தில் நின்று போர் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார் தலைவர்.

இந்திய உளவுத் தகவலை வைத்து, தலைவர் களத்தில் நிற்கும் விஷயத்தை அறிந்து கொண்ட சிங்கள ராணுவம், சில நாட்களுக்கு முன் தலைவர் நின்ற ஏரியாவில் நச்சுக் குண்டு வீசியது. கடாபி, தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட முக்கியமான போராளிகள் பலரும் அதில் கருகிப் போனார்கள். ஆனால், முந்நூறு பேர்கொண்ட போராளிக் குழு, தலைவரை சர்வ பத்திரமாக மீட்டெடுத்தது. அதன் பின்னரும் களத்திலிருந்து வெளியேற தலைவர் விரும்பவில்லை. பொட்டு அம்மான், சூசை ஆகிய தளபதிகளின் வற்புறுத்தலுக்குப் பிறகு, அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசனிடம் பலவிதமான ஆலோசனைகளையும் வழங்கிவிட்டு, தலைவர் முள்ளிவாய்க்காலைவிட்டு வெளி யேறினார்.

களத்தில் சார்லஸ் !தனக்கு மாற்றாக மகன் சார்லஸ் ஆண்டனியை போராளிகளுடன் முள்ளி வாய்க்காலில் தங்கவைத்திருந்தார். முள்ளிவாய்க்காலில் தங்கி இருந்த மக்கள், அப்போதுதான் முதல்முறையாக சார்லஸைப் பார்த்திருக்கிறார்கள். கடைசி நேர நெருக்கடிகள் மிகுதியானபோது புலித் தளபதிகள் மக்களிடம், ”நீங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போய் விடுங்கள். ரசாயன குண்டுகளை வீசி மொத்தமாக அழிக்கப் போகிறார்கள்!”’என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ”மண்ணோடு மண்ணானாலும் நாங்கள் இராணுவக் கட்டுப் பாட்டுக்குப் போகமாட்டோம்” என்று உறுதியாகச் சொன்ன மக்கள், புலிகளிடம் சயனைடு குப்பிகளைக் கேட்டு வற் புறுத்தியிருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் இராணுவத்தின் தாக்குதல் தீவிரமாக, அதனை எதிர்த்து நின்ற மூவாயிரத்துக்கும் அதிகமான போராளிகள் பெரிய அளவில் காயப்பட்டார்கள். இருநூறுக்கும் மேலான போராளிகள் இறந்து போனார்கள். கடைசி நாளில்: அடுத்தபடியாக மக்கள் மீது இராணுவம் கொடூரத் தாக்குதலை நடத்தத் திட்டமிட அதைத் தடுக்க முடியாமல் நடேசன் உள்ளிட்ட புலிகளின் பிரதிநிதிகள் திண்டாடியிருக்கிறார்கள். அதன் பிறகு சிங்கள அரசு நடத்திய துரோக நாடகம்தான் புலிகளின் தளகர்த்தர்களை வீழ்த்திவிட்டது!’- என்று நிறுத்தியவர்கள், கனத்த இதயத்தோடு அந்தக் கடைசி நிமிடங்களைச் சொல்லத் தொடங்கினார்கள். மக்களையும் காயம்பட்ட போராளிகளையும் காப்பாற்ற சமாதானத்தைத் தவிர, வேறு வழி இல்லாத நிலை.

அதனால் தமிழகத்தில் இருக்கும் முக்கியஸ்தர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் நடேசன். அவர்கள் மத்திய அமைச்சர் ஒருவர் மூலமாக இலங்கை அதிபர் ராச பக்சேவிடம் நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையத் தயாராக இருக்கும் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். ”ஒன்றரை வருடத்துக்கும் மேலாக புலிகள் பிடித்துவைத்திருக்கும் இராணுவ வீரர்களை முதலில் அனுப்பச் சொல்லுங்கள். அதன் பிறகு நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையட்டும்”’என்று ராசபக்சே சொல்லி இருக்கிறார். தங்கள் பிடியிலிருந்த ஏழு ராணுவ வீரர்களை விடுவித்த நடேசனும் புலித்தேவனும் ஜெனீவாவில் உள்ள செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் சிலரிடமும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

சித்திரவதைக்குள்ளான நடேசன்அவர்களும் ராசபக்சேவிடம் பேசி சரணடைய சம்மதம் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்துத் தலைவர்களும், செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளும் கொடுத்த நம்பிக்கையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிப் பிரதிநிதிகள் 18 பேர் சிங்கள ராணுவத் தின் முகாம் நோக்கி வெள்ளைக் கொடி பிடித்தபடி போயிருக்கிறார்கள். ஆனால், அப்போது நடேசனை மட்டும் சிறைப் பிடித்த இராணுவத்தினர், மற்ற அனைவரையும் சுட்டுக் கொன்று விட்டார்கள். நடேசனை கொடூரமாக சித்ர வதைப்படுத்தி தலைவரின் இருப்பிடம் குறித்துத் துளைத்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், அவரிடமிருந்து எந்தத்தகவலையும் பெற முடியவில்லை.

அந்த ஆத்திரத்தில் அவரையும் சுட்டுக் கொன்ற இராணுவத்தினர், காயம் பட்டுத் தவித்த மூவாயிரம் போராளிகளை சகட்டுமேனிக்கு சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இருபதாயிரத்துக்கும் அதிக மான மக்கள் மீது ரசாயன குண்டுகளை வீசி, மொத்தமாக பஸ்பமாக்கி இருக் கிறார்கள். மக்கள் மத்தியில் தங்கியிருந்த சார்லஸ் ஆண்டனியும் அதில் தப்பித்திருக்க வாய்ப்பில்லை. அந்த உடல்: ஈழத்தையே முழுவதுமாக அழித்த இராணுவத்தினர், உலகத் தமிழர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக தலைவரைக் கொன்றுவிட்டதாகவும் ஜோடிப்பு காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

தலைவரின் உடலை ஒத்த அந்த உடல், சூசைராஜ் என்கிற போராளியுடையது. அவருடைய உடம்பில் மாஸ்க் பயன்படுத்தி தலைவரின் உருவத்தை ஜோடித்திருக்கிறது இராணுவம். தலைவர் பயன்படுத்தும் பிஸ்டல், பெல்ட் எப்படிப் பட்டது என்று அமைப்பிலிருக்கும் அனைவருக்குமே தெரியும். ஆனால், சாதாரண ரகத் துப்பாக்கியை அவர் வைத்திருந்தது போல இராணுவம் காட்டுகிறது. மாவீரர் தினத்தில் வருவார் !!!இராணுவத்தின் ஜோடிப்பு இலங்கையில் நடக்க விருக்கும் தேர்தலுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கும். ஆனால், வருகிற நவம்பர் மாதம் 27ஆம் தேதி – வீரவணக்க’தினத்தில் நிச்சயமாக தலைவர் வீர உரையாற்றுவார்! காடுகளிலும் மக்களோடு மக்களாகவும் கலந்திருக்கும் போராளிகள், தலை வருக்குப் பக்கபலமாக மறுபடியும் படை திரட்டுவார்கள்! – என்கிறார்கள் உறுதி குறையாமல்.

நன்றி:தென்செய்தி

பாதுகைப் பூஜை


ஸ்ரீ குரு பாதுகை களை பூஜித்தால் அனைத்து கஷ்டங்களும் விலகும். சகல கார்யங்களும் கைகூடும். எல்லா ஐஸ்வர் யங்களும் வந்து சேரும். அஞ்ஞானம் விலகி ஞானம் உண்டாகும் குரு பாதுகா பஞ்சகத்தில் பகவான் ஸ்ரீ ஆதிசங்கரர் இப்படி தெரிவிக்கிறார்.



ஸ்ரீ ஜகத்குருவின் பாது கைக்கு பூஜை செய்தால் சகல மேன்மையையும் அடையலாம். இந்த அரிய வாய்ப்பு உங்கள் வீட்டி லேயே கிடைக்க உள்ளது. ஸ்ரீஜகத்குரு பாகைகள் புதுவை ரங்கப்பிள்ளை வீதி ஸ்ரீமடம் இடத்தில் உள்ளது.

இந்துக்கள் அனை வரும் ஜாதி வேறுபா டின்றி குடும்பத்துடன் சங்கல்பம் செய்துகொண்டு எளிய கட்டணத்தில் பூஜையில் பங்கேற்கலாம். நாடெங் கிலும் மக்கள் வழங்கும் இக்கட்டணத்துகையில் 100 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீமஹாஸ்வாமிக்கு தங்கத்தேர் செய்யப்படு கிறது._ இவ்வாறு ஒரு விளம்பரம் ஏடுகளில் வெளிவந்துள்ளது.

பக்திக்கு எந்தவித சேதாரமும் வந்துவிடக்-கூடாது என்பதிலேயே பார்ப்பனர்கள் எப்பொ-ழுதும் குறியாகவே இருப்-பார்கள்.

அதற்காக ஒன்று போனால் இன்னொன்-றைத் தயாராகவே வைத்தி-ருப்பார்கள்.பாதுகை என்றால் ஏதோ பெரிய சமாச்சாரம் என்று கருதிவிடக்கூடாது. செருப்பு என்று அதற்குப் பொருள்.

இப்பொழுது புரிந்தி-ருக்கவேண்டுமே! சங்க-ராச்-சாரியாரின் செருப்பைப் பூஜிக்கத்தான் அழைப்புக் கொடுத்திருக்கிறார்கள் _ இதனை விளம்பரமாகவும் தந்துள்ளார்கள்.

மாட்டு மூத்திரம், சாணம், பால், தயிர், வெண்ணெய் இவற்றைக் கலந்து குடித்-தால் (பஞ்சகவ்யம்) புண்-ணியம் என்கிறார்கள். பக்-தர்களும் அதற்காகத் தட்-சணை கொடுத்தும் குடிக்-கிறார்கள்.

இப்பொழுது என்னடா என்றால், சங்கராச்சாரி-யாரின் கால் செருப்பைப் பூஜிக்கவேண்டும் என்கி-றார்கள்.



காற்செருப்பைப்
பிறனொருவன்
கழிவிடத்தில்
தள்ளிடினும்
பொறாத உள்ளம்

என்று புரட்சிக்கவிஞர் பாடினார்.

இதற்குப் பெயர்தான் சுயமரியாதை என்பது.இந்தச் சுயமரியா-தையை அவமரியாதை செய்வதுதான் அவாளின் நோக்கம்.யார் இந்த சங்கராச்சாரி-யார்? தீண்டாமை க்ஷேமக-ர-மானது என்று சொன்ன-வர்,

இதற்காகப் பிணையில் வெளியில் வர முடியாத குற்றத்தின்கீழ் அவரை உள்ளே தள்ளியிருக்க-வேண்டாமா?

பக்தியென்றால் சுயமரி-யா-தைக்கு இழப்பு என்று இன்னும் புரியவில்லையா?

இவரது செருப்பைத் தொழ, பூஜை செய்ய அழைப்பாம்!

அவர்களைச் சொல்-லிக் குற்றமென்ன? இதற்-கும் தயாராக உள்ள சூத்-திரர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்?

Sunday, November 01, 2009

தமிழர் நிலை மாறவேண்டும்


தமிழர்களான கவிஞர்கள், கட்டுரையாளர்கள், அறிவுப் பிரச்சாரம் செய்பவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நடிப்புத் துறையில் உள்ளவர்கள், முதலில் யாவரும் தங்கள் கலைகளை மக்களுக்குப் பயன்படும் வகையில் அவற்றைக் கையாள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழர்கள் புரட்சிகரமான மாறுதலடைய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

தமிழர்களைக் கைதூக்கிவிட எந்தக் கலையும் எந்தக் கவிஞரும் இல்லை. உள்ளவர்கள்-எல்லோ-ரும் பத்தாம் பசலிக்காரர்கள் என்ற சொல்லும்படி, பழைமையைக் கண்டே தங்கள் கலைகளைப் பயன் படுத்துகிறார்கள்.

தமிழர்களைத் தாழ்த்தியதும் தலை தூக்க வொட்டாமல் அழுத்தியதும் தமிழறிஞர், கலைஞர், கவிஞர், புலவர் முதலியவர்கள் கையாண்ட சமய இலக்கியமும் முன்னோர்களைப் பின்பற்றி வந்த நடப்புகளும், தமிழர்களைக் குலைத்து உருவாக்கிய அரசியலுந்தான்.

தமிழன் வளர்ச்சிக்கு, அறிவிற்கு, கலைகளுக்கு, சமயத்திற்கு, அரசியலுக்கு - பார்ப்பான் காட்டிய வழியைத் தவிர, ஒரு தமிழன் காட்டிய வழி என்று சொல்ல இன்று என்ன இருக்கிறது? நமது கலைஞர்கள், கவிஞர்கள், புலவர்கள், அரசியல்-வாதிகள் பார்ப்பானைக் குறை மட்டும் சொல்லிக் கொண்டு, அவன் கலாச்சாரத்தில் மூழ்கி, அவன் காட்டிய வழியில் நடந்து கொண்டு வாழ்கிறவர்-களாகத்தான் இருந்து வந்தார்கள்; வருகிறார்கள் என்பதல்லாமல் தமிழர் நலனுக்கு, வளர்ச்சிக்கு, இழிவு நீக்கத்திற்கு என்று யாராவது எந்த அளவுக்காவது பாடுபட்டார்கள் என்று ஒரு விரலை-யாவது நீட்ட முடிகிறதா?

எல்லாத் தமிழ் உணர்ச்சியாளரும், எப்படிப் பட்ட பார்ப்பன வெறுப்பாளரும் சுயநலத்திற்கு வேண்டு-மான அளவுதான் வெறுப்பைக் காட்டிக் கொள்-கிறார்களே தவிர, தமிழ் நலத்திற்கு, தமிழர் சமுதாய நலத்திற்கு என்பதாகக்காட்டிக் கொண்டவர்கள் தமிழர்களில் மிகமிக அரிதாகவே இருந்து வருகிறார்கள்.

தமிழ்ப் பெரியோர்கள், கல்வியாளர்கள், மேதாவி-கள், பெரும் பதவியாளர்கள் யாவரும் தமிழர்களின் கேட்டிற்கும், இழிவிற்குமே பார்ப்பனர்களால் கற்பனை செய்து உண்டாக்கப் பட்ட கதைகள், காவியங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவைகளில் புகுத்தப்பட்ட கடவுள்கள் - கந்தன், சிவன், விஷ்ணு, கணபதி, இராமன், கிருஷ்ணன் முதலியவற்றைக் கும்பிடு-கிறவர்களாகவும் இவர்களது பெண்டு பிள்ளைகளையும் பின்பற்றி நடப்பவர்களாகவும் இருக்-கிறார்களே தவிர - அறிவைப் பற்றியோ, மானத்தைப் பற்றியோ, இன நலத்தைப் பற்றியோ சிந்தித்தவர்கள் என்று சொல்லி ஒருவரையும் குறிப்-பிடமுடியவில்லையே!

எந்தப் பெரிய மனிதன் - அறிஞர், கவிஞர், வித்துவான், மேதாவி என்பவர் யாரானாலும் - அவர், திவசம், திதி முதலிய பார்ப்பனக் காரியங்களைச் செய்-ப-வரும்; இவை சம்பந்தமான நெற்றியில் சாம்பல், செம்மண், சுண்ணாம்பு, பூச்சுப்பட்டை அடித்துக் கொள்பவர்களும்தான் இருக்கிறார்களே ஒழிய, இவை எதற்கு, இவற்றால் பலன் என்ன என்று சிந்தித்தவர்கள், சிந்திக்கிறவர்கள் ஒருவரையும் காண முடியவில்லையே!

இன்னும் தமிழன் சூத்திரனாக இருக்கிறான் என்றால் - இருந்து கொண்டு திவசம், திதி செய்து கொண்டு, சாம்பல் மண்ணைநெற்றியில் அடித்துக் கொண்டு கோவில் குளங்களுக்குப் போய்க் கொண்-டி-ருக்கிறான் என்றால் - தமிழன் எந்த வகையில் முன்-னேறத்-தக்கவன் என்பது புரியவில்லை. பார்ப்பானைக் கூப்பிட்டுத் திதி கொடுக்கிற தமிழன், எப்படித் தன்னைச் சூத்திரன் அல்லன் என்று சொல்லிக் கொள்ள முடியும்?

இன்னும் தமிழனுக்கு மானம், வெட்கம், பகுத்தறிவு வரவில்லையென்றால் மற்ற எந்த நூற்றாண்டில் வரமுடியும்? சமுதாயப் புரட்சிக்கு உண்மையாகவே இந்தச் சமயம் மிகவும் பொருத்தமான காலம் என்பது எனது கருத்து.

இன்று நமக்குப் பெரும் சனியாக அய்க்கோர்ட் ஒன்று இருக்கிறது. மற்ற ஸ்தாபனங்களும் பெரிதும் நமக்கு அனுகூலமாக இருக்கிறதென்றே சொல்லலாம். எனவே தமிழனுக்குப் புத்தி, மானம் இருக்க வேண்டும்; இருந்தால்தான் எளிதில் மாற்றம் உண்டாக்கிக் கொள்ள முடியும்.

கல்வி இலாகாவில் பகுத்தறிவு புத்தகங்களையும், பகுத்தறிவு ஆசிரியர்களையும் நல்ல வண்ணமாக ஆக்க வேண்டும்.

உத்தியோக இலாகாவில் பெரிதும் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைப் புகுத்த வேண்டும், மேன்மேலும் கிராமக் கணக்கு, மணியம் பதவிகளை தாழ்த்தப்-பட்டவர்கள் அதிகமாகப் பார்க்க வேண்டும்.

மற்றும் நிருவாகத் துறையில் அய்.ஏ.எஸ். ஒழித்துக் கட்டியாகவேண்டும். வெள்ளையன், தன் ஜாதியாரிடமே நீதித்துறை, நிருவாகத் துறை இருக்க வேண்டுமென்று செய்த சூழ்ச்சியேயாகும். ஆகவே இவை தமிழர்களைத் தலையெடுக்கவொட்டாமல் செய்து வரும் காரியங்களுக்காக இருந்து வருகின்றன.

இந்தக் காரியங்களை இன்றைய ஆட்சி செய்து விடுமானால், இந்த ஆட்சியை எவரும் அசைக்க முடியாது என்பதோடு, தமிழர் நிலை நல்ல அளவுக்கு முன்னேற்றமடையக் கூடும் என்பதுதான் எனது கருத்து.

தந்தை பெரியார்



(விடுதலை: தலையங்கம்: 7.10.1972)

Saturday, October 31, 2009

பூணூல்


நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் சங்கர நாராயணப் பெருமாளுக்கு ஜெயேந்திரர் 3 அடி நீளமுள்ள 288 கிராம் எடையில் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கப் பூணூல் அணிவித்தாராம்.

இது இப்பொழுது மட்-டுமல்ல, திருப்பதி ஏழு-மலை-யானுக்கே 3 கிலோ தங்-கத்தில் பூணூல் அணி-வித்தார் (5.4.2002).

கடவுளுக்கே பூணூலா? ஆச்சரியமாக இருக்கிறதா!

இதன் பொருள் என்ன? பக்தியுள்ளவர்கள் கூட கொஞ்சம் புத்தியைச் செலுத்தினால் மிகமிக எளி-தில் புரிந்துகொள்ளலாம்.

கடவுளும், பார்ப்பனர்-களும் ஒரே ஜாதி; இன்-னும் சொல்லப்போனால், கடவுளுக்கும்மேலே பிராமணர்கள் என்பது-தான் அவர்களின் நினைப்-பும், ஏற்பாடுகளும் ஆகும்.

தமிழ்நாடு பார்ப்பனர்-கள் சங்கம் வெளியிட்ட அந்தணர் ஆற்றிய அருந்தொண்டு என்னும் நூலினை வெளியிட்ட ஜெயேந்திர சரஸ்வதி கடவுளுக்கும்மேலே பிரா-மணர்கள் என்று சொன்-னதை நினைவு கூர்ந்தால் இதன் உண்மை புரியும்.

இவர் மட்டுமல்ல, அவர்களின் வேதங்களும் அதனைத்தான் குறிப்பிடு-கின்றன.

தேவாதீனம் ஜெகத்-சர்வம்

மந்த்ரா தீனம் ததேவதா

தன் மந்த்ரம் பிரம்மாதீனம்

பிராமண மம தேவதா

(ரிக், 62 ஆவது பிரிவு 10 ஆம் சுலோகம்)

இதன் பொருள்:

உலகம் தேவர்-களுக்-குக் கட்டுப்பட்டது; தேவர்-கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். மந்-திரம் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது. பிராமணர்-களே நமக்குக் கடவுள் ஆவர்.

இந்து மதத்தைப் பொருத்தவரை எல்லா ஏற்பாடுகளுமே பார்ப்-பனர்களை முதன்மைப்-படுத்துவதேயாகும்.

பூணூல் அணிவது அவர்கள் இரு பிறவியா-ளர்கள் என்பதற்கு அடை-யாளம். பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் என்று பறைசாற்றுவதாகும்.

சூத்திரர்கள் பூணூல் அணிவது மனுதர்மப்படி தடை செய்யப்பட்ட ஒன்-றாகும்.

சூத்திரன் பிராமண ஜாதிக்குறியை _ பூணூல் முதலியதைத் தரித்தால், அரசன் சூத்திரனின் அங்-கங்களை வெட்டவேண்-டும் (மனுதர்மம் அத்தி-யாயம் 9; சுலோகம் 224).

கடவுளுக்கும் பூணூல் போடுவதன் தாத்பர்யம் இப்பொழுது விளங்-குகிறதா?

- மயிலாடன்

விடுதலை 30.10.2009

பிரதோஷம்

பிரதோஷம் பிர-தோஷம் என்று ஆன்-மிகத்-தில் சொல்கிறார்களே, அது எத்தனைப் பக்தர்-களுக்குத் தெரியும்?

தேவர்களும், அசுரர்-களும் பாற்கடலைக் கடைந்-தார்களாம். (பால் கடல் எங்கிருக்கிறது புவி-யியல் படித்த மேதாவி-கள் கொஞ்சம் சொல்லக்-கூடாதா?).

பாற்கடலை எதைக் கொண்டு கடைந்தார்-களாம். மந்தாரமலையைக் கொண்டாம். அதற்குப் பயன்படுத்திய கயிறு வாசுகி என்னும் பாம்பாம்.

சிவபெருமான் அனு-மதி பெறாமல் கடைந்த-தால் பாம்பு விஷம் கக்கிற்றாம். முப்பத்து முக்கோடி தேவர்களும், விஷ்ணு, பிரம்மா உள்பட அனைவரும் சிவனை சரண் அடைந்தார்களாம். நந்தி பகவானை அழைத்து அந்த நஞ்சைக் கொண்டு வருமாறு சிவன் கட்டளை-யிட்டானாம்.

கொண்டு வரப்பட்ட அந்த நஞ்சை சிவன் லபக்கென்று விழுங்கினா-னாம். பார்வதி தேவியா-கிய சிவனின் பாரியாள், விஷம் கீழே இறங்காமல் இருக்க தொண்டையை லபக்கென்று பிடித்தா-ளாம். விஷம் இறங்கிய-தால் சிவன் நீலகண்டன் என்று பெயர் பெற்றா-னாம்.

விஷம் அருந்திய சிவன் மூர்ச்சையானா-னாம். (சிவன் சக்தி இவ்-வளவுதானா?) அப்-பொழுது நந்தீஸ்வரன் (காளை) சிவனைத் தொழுது மூர்ச்சை தெளிய வைத்தானாம்.

சிவன் விழித்த இந்தக் காலம்தான் பிரதோஷ காலமாம். அமாவாசை மற்-றும் பவுர்ணமிக்குப் பிறகு வரும் 13 ஆம் நாள்தான் பிரதோஷமாம். மாலை 4.30 மணிமுதல் 7.30 மணி-வரை உள்ள அந்த நேரத்-தில் சிவனைத் தொழு-தால் கடன், வறுமை, துர்-மரணம், செய்த பாவங்கள் எல்லாம் பறந்தோடி விடு-மாம். சிவனுக்கு உதவி புரிந்த நந்திக்கும் அபி-ஷே-கம் செய்யவேண்டுமாம்.

இந்த விரதத்தை சித்-திரை, வைகாசி, அய்ப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்-களில் சனிக்கிழமையன்று பிரதோஷ வேளையில் ஆரம்பிப்பது மிகச் சிறப்பாம்.

சிவதரிசனம் செய்த பிறகு உணவு உண்ண-வேண்டும். தொடர்ந்து 12 ஆண்டுகள் (300 தடவை) இந்தப் பூஜை செய்தால், ராஜாங்க சிம்மாசனப் பதவி கிடைக்குமாம். (அமைச்சர்கள் ஆக விரும்புபவர்கள் கவனிக்க).

இந்தக் கதை கடுகத்-தனை அளவாவது அறி-வுக்குப் பொருந்துகிறதா? சிவன் அனுமதி பெறாத-தால்தான் நஞ்சு வந்தது என்பதை, விஷ்ணு உள்-ளிட்டோர் சிவனை வேண்-டிக்கொண்டனர் என்-பதையும் வைஷ்ண-வர்கள் ஏற்றுக்கொள்-வார்களா?

எந்தப் பாவமும் நீங்-குமாம். தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கு சிவன் மோட்சம் கொடுத்-தானாம். (திருவிளை-யா-டல் புராணம் _ மாபாதகம் தீர்த்த படலம்).

இந்தக் கேடுகெட்ட அருவருப்பான பக்தித் துர்நாற்றத்தை என்னென்று தான் சொல்லுவதோ! திரு-நீறு அணிந்தால் தாயைப் புணர்ந்த பாவமும் போகும் என்று சொல்லுவோரை லாடம் கட்டி அடிக்க-வேண்-டாமா? சிந்திப்பீர்

விடுதலை 31-10-2009

Thursday, October 29, 2009

மதம் பிடித்தது யாருக்கு? யானைக்கா? மனிதனுக்கா?


அர்த்தமுள்ள இந்து மதம் என்ற தலைப்பில், கவிஞர் கண்ணதாசன் எழுதினார்: அதற்குரிய மறுப்பினை பகுத்தறிவாளர் மஞ்சை வசந்தன் (எம்.ஏ., எம்.எட்., எம்ஃபில்) அர்த்தமற்ற இந்துமதம் எழுதினார். பல பதிப்புகள் வெளிவந்து உலகம் முழுவதும் இதுவும் சென்றடைந்துள்ளது!

இந்து மதம் அர்த்தமுள்ளதா? அனர்த்தம் உள்ளதா? என்று பக்தகோடிகள் கேள்வி கேட்கும் அளவுக்கு பக்த கேடிகளைப் போன்று, வடகலைப் பார்ப்பனர், தென்கலைப் பார்ப்பனர் காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயிலில் நடந்துகொண்டவிதம், மந்திரங்களை உச்சரிப்பதைவிட ஆபாசமான வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டு அடிதடியில் இறங்கியுள்ள செய்தி, பார்ப்பன ஏடான ஜூனியர் விகடனே 1.11.2009 அன்று தேதியிட்டு நேற்று (28.10.2009 அன்று) வெளிவந்த இதழிலேயே கட்டுரை வடிவில் விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது. (அதை அப்படியே எட்டாம் பக்கத்தில் வெளியிட்டுள்ளோம்).

இந்த காஞ்சி வரதராஜபெருமாள் சன்னதியில்தான், சங்கராச்சாரிகளை முதல், இரண்டாவது குற்றவாளிகளாகக் கொண்டு நடைபெறும் சங்கரராமன் கொலை வழக்குக்குரிய கொலை சில ஆண்டுகளுக்குமுன் நடந்தது!

வரதராஜப்பெருமாள் அப்படியே ஆடாமல், அசையாமல் பார்த்துக்கொண்டே இருந்தார்; தனது கோயில் நிருவாகி இப்படி அநியாயமாகக் கொல்லப்படுவதற்காக ஒரு சிறு அனுதாபத்தைக்கூட தெரிவிக்காதது மட்டுமல்ல; ஒவ்வொரு சாட்சியாகக் கலைக்கும் பகவத் காரியங்கள் நடைபெறுகின்றன.

பல சாட்சிகள் தலைகீழ் அந்தர்பல்டி அடிக்கிறார்கள்; ஆனால் அந்த வரதராஜப் பெருமாளோ அன்று எப்படி குத்துக்கல்லாய் கிடந்து வேடிக்கை பார்த்தாரோ, அதேபோல இன்றும் உள்ளார்!

இப்போது அதே கோயிலில் அடிதடி ஆபாச வார்த்தைகள் பரிமாற்றம்; ரத்தக் காயங்கள். பகவான் வரதராஜனோ சிவனேன்னு வேடிக்கை பார்த்துண்டிருக்கான்.

பிரச்சினை என்ன சாதாரணமா? அற்ப தேசியப் பிரச்சினையா அல்லது சர்வதேசப் பிரச்சினையா? மிகப்பெரிய தீர்வு காண முடியாத பிரச்சினை அல்லவோ!

அங்குள்ள கடவுள்களுக்கு யார் மரியாதை செய்வது என்பதில் போட்டி! பகவான்கள் மரியாதை இழந்து பரிதாபமான நிலையில் இருப்பதால் ஜூ.விகடனுக்கு எஸ்.ஓ.எஸ். (S.O.S) கொடுத்துள்ளார்கள் போலும்!

நம்மாழ்வார் சந்நிதி அர்ச்சகர் எப்படி ஆரத்தி காட்டலாம், என்று வடகலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பிரச்சினை கிளப்பி, பகவான்களுக்குப் பாடம் கற்பித்துவிட்டார்கள் _ அதோடு மட்டுமா? தென்கலைப் பிரிவினர் நையப் புடைத்துவிட்டார்களாம்!

அதென்னய்யா வடகலைப் பிரிவு, தென்கலைப் பிரிவு என்று புதிதாக, அர்த்தமுள்ள ஹிந்துமதம்பற்றி அறியாதார் கேட்கக்கூடும்!

பிரிட்டிஷ் பிரிவி கவுன்சில் இந்த வழக்கை பல ஆண்டுகளுக்கு முன்பு விசாரித்தது (நம் ஊரில் உச்சநீதிமன்றங்கள் வருவதற்குமுன் கடைசி அப்பீல் செய்யும் பெரிய கோர்ட் பிரிட்டிஷ் பிரிவி கவுன்சில்தான்).

எல்லோரும் வெள்ளைக்கார நீதிபதிகள்தான் அங்கு. அவாளுக்கு வடகலை, தென்கலை சண்டை என்னவென்று விளங்காததால், அவாள் கேட்டள்,“What is Vadkalai and Thenkalai” தென்கலை என்றால் என்னவென்று.

உடனே அவாளுக்கு எளிதில் புரிய வைக்க,“These two partites fight for our English Alphapet) Y and U” (அதாவது பாதம் வைத்த நாமம், பாதம் வைக்காத நாமம்) சண்டை என்றவுடன், வெள்ளைக்கார நீதிபதிகள் கேட்டு சிரி சிரியென்று சிரித்துவிட்டு, அந்தக் கோயில் யானையின் நெற்றியில் எந்த நாமம் _ வடகலையா, தென்கலையா போடுவது என்பதற்குத்தானே அப்பீல் வழக்கு. அதுவும் நீச்ச பாஷை பேசும் மிலேச்ச ஜட்ஜ்கள்முன்!

யானையின் கருத்தை இதில் கேட்க முடியாதே! அதனால் ஆறு மாதம் வடகலை என்று போடுங்கள்; மற்றொரு ஆறு மாதம் தென்கலை என்று போடுங்கள் என்று விசித்திரத் தீர்ப்பு வழங்கினார்கள்.

நம் நாட்டின் கோர்ட்டுகளைத் தாண்டி வழக்கு பிரிட்டிஷ் பிரிவி கவுன்சிலுக்குச் சென்றபோதிலும், முடிந்தபாடில்லை இன்றுவரை! நேற்று காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் யானைக்குள்ள நாமப் பிரச்சினைபற்றி ஜூனியர் விகடன் செய்தியாளர் தரும் சுவையான தகவல் இதோ:

வடகலை, தென்கலை பிரிவினை பேதத்தின் காரணமாக யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்று இருதரப்பினரிடையே பலத்த போட்டி ஏற்பட்டது _ தனிக்கதை (மேலே சுருக்கமாக சொல்லப்பட்டது).

.... பின்னரும் பிரச்சினை தொடரவே, இரண்டு பிரிவுக்கும் தனித்தனியே யானைகள் வைத்துக் கொள்வதென முடிவு செய்திருக்கிறார்கள்.

அத்துடனாவது பிரச்சினை முடிவுக்கு வந்ததா? அதுதான் இல்லை.

இருந்தும் திருவிழாக்காலங்களில் யானைகள் வீதியுலா வரும் சமயத்தில், எங்கள் யானைதான் முன்னால் நடந்து வரவேண்டும் என்று மீண்டும் இருதரப்பினரும் வாய்ச்சண்டை போட்டனர். ஆகவே, இரண்டு யானைகளும் ஒரே வரிசையில் ஒன்றுபோல் நடந்து வரவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்!

நம் நாடு 21 ஆம் நூற்றாண்டில் எவ்வளவு முக்கியப் பிரச்சினைகளுக்காகப் போராடுகிறது பார்த்தேளா?

இவ்வளவுக்கும் ஸ்ரீமத் ஆண்டவன் வரதராஜப்பெருமாள் வாயே திறக்கல்லே!

மதம் பிடித்தலைவது இந்த ஆறறிவுள்ள பக்தர்களா? அல்லது ஆறறிவு இல்லாத யானைகளா? இதைக் கண்டுபிடித்துச் சொல்பவருக்கு அந்த யானைமேல் சவாரி! வடகலை யானைமீது ஒருமுறை; தென்கலை யானைமீது ஒருமுறை. ஆனால், ஏககாலத்தில் எப்படி ஏறி அமர்வது? அதுதான் புரியாத புதிர்! அய்யய்யோ, சொல்ல வெட்கமாகுதே!

விடுதலை 29.10.09

தினமலத்தின் ஜாடை...........

வெள்ளை மாளிகையில் குத்து விளக்கு ஏற்றி வைத்து ஒபாமா தீபாவளி கொண்டாடியிருக்கிறார். உண்மையான ஜனநாயகம் அமெரிக்காவில்தான் நடக்கிறது. கிறித்துவ மதத்-தைச் சார்ந்தவராக இருந்-தாலும் மத வித்தியாசம் பார்க்க-வில்லை அமெரிக்க அதிபர்.

இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகை வெகு விமரிசையாக அரசியல்-வாதிகள் கொண்டாடும்-போது இங்குள்ள தலைவர்கள், மக்களுக்கு வாழ்த்துச் செய்திகூட வெளியிடாமல், இருப்பது ஏன்? என்று தினமலர் சிண்டைப் பிய்த்துக் கொள்கிறது.

இப்படி வாயிலும், வயிற்-லும் அடித்துக்கொள்ளும் தினமலர் கூட்டத்தை நோக்கி திருப்பி அடிக்கி-றோம். அதற்கு முதலில் பதில் சொல்லட்டும்!

கிறித்துவரான அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்குப் பெருந்தன்மை இருக்கிறது. அதே பெருந்தன்மை தின-மலர் கூட்டத்துக்கு உண்டா?

ஜனவரி முதல் தேதி ஆங்-கில வருடப் பிறப்பன்று கோயில்களுக்குச் சென்று இந்துக்கள் வழிபட்டு வரு-கிறார்கள். அதுகுறித்து காஞ்சி சங்கராச்சாரியார் என்ன சொன்னார்?

கிறித்துவ ஆண்டு பிறப்-புக்காக இரவு நேரத்தில் கோயிலைத் திறந்து வைப்-பதா? இது ஆகமத்துக்கு விரோதம், விரோதம் என்று கூக்குரல் போட்டாரே _ நினைவிருக்கிறதா?

இன்னொரு முக்கியமான தகவல் உண்டு. தலாய்லாமா இந்தியா வந்தார். அவர் அனைத்து மதக் கோயில்-களுக்கும் செல்ல விரும்பி-னார். கேரளாவில் புகழ்-பெற்ற செயின்ட் ஜோசப் சர்ச்சில் சிவப்புக் கம்பளம் கொடுத்து வரவேற்கத் தயார் என்று கூறினார்கள். பாளயம் மசூதி இமாம் தலாய் லாமாவை மகிழ்ச்சியுடன் வரவேற்கத் தயாராக இருப்-பதாகவும், காலை சிற்றுண்டி அளித்து உபசரிக்க விரும்-புகிறோம் என்றும் அறி-வித்தார்.

அர்த்தமுள்ள இந்து மதத் தலைவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

தலாய்லாமா ஹிந்து மதத்தை ஏற்காதவர். அவரது பாரம்பரிய மத ரீதியான ஆடைகளைக் களைந்து-விட்டு, காலணிகளை வெளியே விட்டுவிட்டு வந்தாலும் எந்த இந்துக் கோயிலுக்குள்ளும் நுழைய தலாய்லாமாவை அனுமதிக்க-மாட்டோம் என்று சொன்-னார்-களே! (ஆதாரம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ், 18.12.1992).

ஒபாமா தீபாவளி கொண்-டாட தயாராகிறார். இந்-துக்களோ தலாய்லாமாவை கோயிலில் உள்ளே நுழை-யக்கூட தடை போடுகிறார்-கள்.

இரண்டு மதங்களுக்கும் உள்ள வேறுபாடு இதில் தெரியவில்லையா?

ஒபாமாவின் ஜனநாயகத்-தைப் பாராட்டும் தகுதி தினமலர் வகையறாக்-களுக்கு உண்டா?

முதலமைச்சர் கலைஞர் தீபாவளி வாழ்த்துச் சொல்ல-வில்லையாம் _ அதற்குத்-தான் தினமலர் ஜாடை பேசுகிறது!

தீபாவளி கொண்டாடாத தீரர்களின் பட்டியலைச் சேர்ந்தவராயிற்றே கலைஞர் _ எப்படி தீபாவளி வாழ்த்து கூறுவார்?

நன்றி விடுதலை 28.10.09

Tuesday, October 27, 2009

மரகதலிங்கம்


நேற்று மாலை ஏடு-களில் ஒரு பரபரப்பான செய்தி.

50 கோடி ரூபாய் மதிப்-புள்ள திருத்துறைப்பூண்டி மருந்தீசுவரர் கோயி-லுக்-குச் சொந்தமான மரக-த-லிங்கம் கைப்பற்றப்பட்டது என்பதுதான் அந்தச் செய்தி.

இது 12 ஆம் நூற்-றாண்-டைச் சேர்ந்ததாம். இந்த மரகதலிங்கத்தை இந்திரனே பூஜித்து வந்தா-னாம். (இடையில் விட்டு-விட்டானோ!)

லிங்கம் என்றால் ஆண் குறி! அது மரகதத்-தில் செய்யப்பட்டதாம்! ஆகா, எப்படிப்பட்ட பக்தி!

இன்னும் இந்த மரகத-லிங்-கத்துக்கு என்ன கூடு-தல் விசேஷம்? (கதை அளப்புக்கு என்ன பஞ்சமா?).

அந்த மரகதலிங்-கத்தை முசுகுண்ட சக்ர-வர்த்தியிடம் கொடுத்து ஏழு பிரசித்திப் பெற்ற கோயில்களில் பிர-திஷ்டை செய்து வழிபட்டு வரு-மாறு இந்திரன் கூறினா-னாம்.

இதன் பொருள் என்ன? இந்த மரகத லிங்கத்துக்கு அரும்பெரும் சக்தி உள்-ளது என்பதுதானே இதன் அய்தீகம்.

இவ்வளவு சக்தி வாய்ந்த _ அதுவும் தேவர்களின் தலைவ-னான இந்திரனே வழி-பட்டு வந்த லிங்கத்தை கொள்ளையர்கள் எப்படி திருடியிருக்க முடியும்?

அப்படி திருடியிருக்-கிறார்கள் என்றால் இந்த லிங்கங்கள் தெய்வ சக்தி வாய்ந்தவை என்பதெல்-லாம் அசல் டூப்பாக இருக்க-வேண்டும். இரண்-டில் ஒன்றுதானே உண்-மை-யாக இருக்கவேண்-டும்.

நம் முன் நிற்கும் கேள்விகள் இரண்டே இரண்டுதான். மரகதலிங்-கத்துக்குத் மகாசக்தி உண்டென்றால், அதனைத் திருடிச் செல்ல முடியுமா? அதனைத் திருடியிருக்-கிறார்கள் என்பதிலிருந்து லிங்கத்துக்குச் சக்தியாவது, புடலங்காயாவது என்-பதை மரியாதையாக, நாண-யமாக ஒப்புக்கொள்ள வேண்-டுமா_ இல்லையா?

இந்த சிவலிங்கத் திரு-டர்களைக் கண்டுபிடித்த காவல்துறை அதிகாரி யார் தெரியுமா? காதர் பாஷா.

இது என்ன அநி-யா-யம்? சிவலிங்கத் திருட்டை ஒரு சாயபு கண்டுபிடிக்க-லாமா? என்று அக்ரகாரத்-தார் அலறக்கூடும்.

இது கருணாநிதி சதி என்று இந்து முன்னணி _ ஆர்.எஸ்.எஸ். வகை-யறாக்கள் கூக்குரல் போட்-டாலும் போடுவார்கள் _ யார் கண்டது?

கடவுளையே கண்டு-பிடித்துக் கொடுக்க மனி-தர்கள் (காவல்துறை-யி-னர்)தான் தேவைப்படுகி-றார்கள்.

கடவுளை மற, மனி-தனை நினை! என்ற பெரியார் வாக்கு பலித்-ததா இல்லையா?

- மயிலாடன்

நன்றி விடுதலை 27.10.09

கலசம் விழுந்தது - கலக்கம் பிறந்ததோ!


கைப்பேசியில் குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்.) வந்தாலும் வந்தது _ எது எதற்கெல்லாமோ பயன்பட ஆரம்பித்துவிட்டது _ கடவுள் சமாச்சாரங்கள் உள்பட!

ஒரு செய்தி: கோவை மாவட்டம் காங்கயம் சிவன் மணிமுருகன் கோயில் கொடிமரம் சாய்ந்தது!

இன்னொரு செய்தி: இராமேசுவரம் ராமநாதசாமி கோயில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு கலசம் இடிந்து விழுந்துவிட்டது!

மற்றும் ஒரு செய்தி: திருவண்ணாமலை, திருச்செந்தூர் கோயில்களில் ஏற்றப்பட்ட தீபங்கள் அணைந்துவிட்டன.

இந்தச் செய்திகள் காட்டுத்தீபோல் பரவின. பக்தர்கள் மருண்டனராம்.

அய்யய்யோ, ஆபத்து, ஆபத்து! ஏதோ நடக்கப் போகிறது என்று பக்தர்கள் நடுநடுங்கிப் போனார்களாம். வீட்டில் உள்ள ஆண்களின் ஆயுளுக்குக் கேடு என்று யாரோ சொல்ல, அப்படியே இடிந்துபோய் விட்டார்களாம்.

அடுத்து என்ன நடக்கும்? கோயில்களில் சிறப்புப் பூஜைகள், காணிக்கைகள் இன்னோரன்ன சுரண்டல் விசேஷங்கள் ஜோராக நடந்திருக்கின்றன.

சில ஆண்டுகளுக்குமுன் திருமானூர் தாயாரம்மாள் தாலி அவிழ்ந்து விழுந்துவிட்டதென்று கூறி, அடேயப்பா எவ்வளவு களேபரம்!

பெண்கள் தங்கள் தாலி கயிறுகளைப் புதிதாகக் கட்டிக் கொண்டார்களாம்.

மக்களின் மூடத்தனத்தை_ பக்தியை எப்படியெல்லாம் ஒரு வணிகத் தன்மையில் மாற்றியிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.

முதலில் ஒன்றை அவர்கள் சிந்திக்கவேண்டாமா?

சக்தி வாய்ந்தவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டு அதன் கோபுரம் இடிந்தது, கலசம் விழுந்தது, கொடிமரம் சாய்ந்தது என்பதெல்லாம் நடக்கும்போது பக்தர்கள் சிந்தனையில் எத்தகைய எண்ணம் ஏற்படவேண்டும்?

சர்வசக்தி வாய்ந்தவர் கடவுள் என்றால், இவையெல்லாம் எப்படி நடக்கும் என்ற வினா எடுத்த எடுப்பிலேயே தோன்றியிருக்கவேண்டாமா?

அவனின்றி ஓரணுவும் அசையாது என்றால், கோபுரம் இடிந்ததற்கும், கலசங்கள் விழுந்ததற்கும், கொடிமரங்கள் சாய்ந்ததற்கும் கடவுள்தானே பொறுப்பு என்ற வினா இரண்டாவதாக ஏற்பட்டிருக்கவேண்டாமா?

மூன்றாவதாக இவை நடந்ததால் அதே கோயிலுக்குச் சென்று பூஜை போடுவதில், காணிக்கைகள் கொடுப்பதில் அர்த்தம் உண்டா?

நான்காவது முக்கியமாகக் கவனிக்கவேண்டியது _ இந்த சிறப்பு வழிபாடுகளும், காணிக்கைகளும் யாருக்குப் போய்ச் சேர்கின்றன?

கடவுள் சக்தி கேள்விக்குறியாகும்போதுகூட, அதன் பலன் கடவுள் நம்பிக்கைக்கு எதிராகப் போகாமல் (நியாயமாக அப்படித்தானே போகவேண்டும்) அந்தக் கடவுள் சம்பந்தமான கூடாரத்துக்கே இலாபமாக வருமானமாகப் போவதன் தன்மையை_ சூழ்ச்சியை எண்ணிப் பார்க்கவேண்டாமா?

இதற்குப் பெயர்தான் பக்தி மயக்கும் என்பது _ மூளையில் மாட்டப்பட்ட விலங்கு என்பது; கடவுள் நம்பிக்கை. பக்தி என்று வந்துவிட்டால் சிந்தனைக்கே சிறிதும் இடமில்லாமல் ஒரு வழிப்பாதை என்பது இதுதான்!

எது நடந்தாலும் அதனை சொந்த இலாபகரமாக, சுயநலமாக ஆக்கிக் கொள்ளும் ஒரு புரோகிதச் சுரண்டல் முறை இதற்குள் மிகவும் பத்திரமாக இருப்பதை மக்கள் என்றைக்கு உணரப் போகிறார்கள்?

இந்தப் பாதுகாப்பில்தான் பார்ப்பனியம் மிகக் கெட்டியாக பலத்த அஸ்திவாரத்துடன் _ மற்றவர்களைப் பார்த்து கேலி செய்யும் தன்மையில் அமர்ந்து கொண்டிருக்கிறது. பகுத்தறிவாளர்களுக்கு அதிக வேலைகள் இன்னும், இன்னும் ஏராளமாகவே இருக்கின்றன. கழகத் தோழர்கள் ஆங்காங்கே பரப்பப்படும் இதுபோன்ற செய்திகளை தோலுரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்களாக!

சுயமரியாதை!

ஒவ்வொரு கிராமத்-திலும் கோயில் உள்ளது. ஆனால், புரோகிதர் மகன் புரோகிதம் செய்ய வருவ-தில்லை. கிராமத்தில் உள்ள புரோகிதனுக்கு 500 ரூபாய் கொடுத்தால் திருமணம் செய்து வைத்துவிடுவர். புதிதாகப் புரோகிதம் செய்யப் புறப்பட்டுள்ளவர்கள் வந்தால் 50 ஆயிரம் ரூபாய் செல-வாகும். கட்_அவுட் வைக்கவேண்டும் என்று இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். இராமகோபாலன்-வாள் திருவாய் திறந்து தீர்த்தம் கொடுத்துள்ளார் காஞ்சி-புரத்தில் நடந்த புரோகிதர்கள் மாநாட்டில்.

புரோகிதப் பார்ப்பனர்கள் தட்சணை வாங்கிக்கொண்டு மனிதர்களுக்கு மட்டுமா கல்யாணங்களை நடத்தி வைக்கிறார்கள்? நாய்க்கும் நாய்க்கும், கழுதைக்கும் கழுதைக்கும்கூட மந்திரங்-களைச் சொல்லி நடத்தி வைத்துக்கொண்டுதானிருக்-கிறார்கள்.

சுயமரியாதைத் திரு-மணம் என்பது வெறும் பொருளாதாரப் பிரச்சினை-யல்ல. அது ஓர் இனத்தின் சுயமரியாதைப் பிரச்சினை. பார்ப்பனர் அல்லாதாருக்கு சமஸ்கிருத மந்திரங்களைச் சொல்லக்கூடாது என்பதற்-காக ஒரு முகூர்த்த நாழி-கைக்கு மணமகனுக்குப் பூணூல் மாட்டி, தற்காலிக வருணப் பதவி உயர்வு கொடுத்து, மந்திரங்களைச் சொல்லி கல்யாணத்தை முடித்தவுடன், மறக்காமல் அந்தப் பூணூலைக் கழற்றிக் குப்பைக் கூடையில் போடு-வதன் பொருள் என்ன? பூணூலார் விளக்குவாரா?

அவர்கள் நடத்தும் கல்-யாணத்தில் எந்த வகை மந்-திரங்கள் சொல்லப்படுகின்-றன? கீழாத்தூர் சீனிவாசாச்-சாரி-யார் பி.ஓ.எல். என்ற பார்ப்-பனரால் மொழி பெயர்க்கப்-பட்டு விவாஹ சுபமுகூர்த்த போதினி என்ற பெயரால், பார்ப்பன நிறுவனமான தி லிட்டில் ஃப்ளவர் பதிப்-பகத்தால் வெளியிடப்பட்-டுள்ள நூல் 22 ஆம் பக்-கத்தில் அந்தக் கல்யாண மந்திரம் கூறப்பட்டுள்ளது.

ஸோம; ப்ரதமோ விவிதே

கந்தர்வ விவத உத்தர: த்ருதீயோ

அக்னிஷ்டபதி: துரீயஸ்தே

மநுஷ்ய ஜா

இதன் பொருளும் அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

ஸோமன் முதலில் இவளை (மணமகளை) அடைந்தான். பிறகு கந்தர்-வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னு-டைய நான்காவது கணவன் மனித ஜாதியில் பிறந்தவன் என்று கூறப்பட்டுள்ளது

பார்ப்பனப் புரோகிதனை அழைத்து கல்யாணத்தை நடத்தச் சொன்னால், மண-மகள் அதற்குமுன் மூன்று பேர்களுக்கு மனைவியாக இருந்தாள் என்பதை ஒப்புக்-கொள்ளவேண்டுமே!

அய்ந்து பேருக்கும் தேவி அழியாத பத்தினி என்பது பார்ப்பனர்களின் கலாச்சாரத்துக்கு வேண்டு-மானால் பொருத்தமாக இருக்கலாம். தமிழர்களுக்குப் பொருந்துமா?

பார்ப்பனர்களை அழைத்து தமிழர்கள் கல்-யாணத்தை நடத்தினால் மணமகளை விபச்சாரி என்று ஒப்புக்கொண்டதாகப் பொருள். மானம் கருதி அதனை ஒதுக்கி சுயமரியா-தைத் திருமணத்தை தந்தை பெரியார் அறிமுகப்படுத்தி-னார் என்பதை ராமகோபால-னின் கூட்டம் தெரிந்து-கொள்ளட்டும்!

திருமணச் செலவுகூட ஒரு குடும்பத்தின் பத்து அல்லது 15 நாள் வரும்படிக்-குமேல் செல்லக்கூடாது என்பதுதான் தந்தை பெரி-யார் அவர்களின் கருத்தா-கும். (விடுதலை, 10.6.1970).

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு!

நன்றி விடுதலை 26-10-2009

Monday, October 26, 2009

தமிழ்நாடு பத்திரிகையின் வம்புச் சண்டை


சுயராஜ்யா, சுதேசமித்திரன் முதலிய பிராமணப் பத்திரிகைகளும் ஸ்ரீமான் சீனிவாச அய்யங்கார் போன்ற பிராமணத்தலைவர்களும் நம்முடன் தொடுக்கும் போர் முடிவு பெறாமல் இருக்கும் பொழுதே தமிழ்நாடு பத்திரிகையும் இது தான் சமயமென்று நம்மை வம்புச்சண்டைக்கிழுக்கின்றது. இம்மாதிரி வம்புச் சண்டைகளுக்கும் நாம் இடம் கொடுக்கக்கூடாதென்று எவ்வளவோ காரியங்களை சகித்துக் கொண்டு நமது உத்தேச காரியத்தை மாத்திரம் பார்த்துக் கொண்டு வந்தாலும் வேண்டுமென்றே வலியவரும் சண்டைகளுக்கு நாம் என்ன செய்யலாம்? தற்காலம் தமிழ் நாட்டில் சுயராஜ்ஜியக்கட்சி என்கிற பெயரை வைத்துக் கொண்டு பிராமணர் அல்லாதாரின் செல்வாக்கை அடியோடு ஒழிக்க வேண்டுமென்கிற கருத்தோடு சில பிராமணர்களும், அவர்கள் பத்திரிகைகளும் காங்கிரஸ் பெயரையும், மகாத்மா பெயரையும் மற்றும் உள்ள அநேக தியாகிகளின் பெயரையும் உபயோகப் படுத்திக்கொண்டு ஸ்தலஸ்தாபனங்களிலும், தேர்தல்களிலும் காங்கிரசிலும் செய்துவரும் கொடுமைகளையும், சூழ்ச்சிகளையும் கண்டு உண்மையிலேயே மனம் பொறாதவராகி எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்-கிடையில் இவற்றைத் தடுக்க செய்துவரும் ஒருசிறு தொண்டிற்கும் பிராமணரல்லாதாரில் சில தலைவர்கள் என்போர் நமக்கு உதவி செய்யாவிட்டாலும் நமது முயற்சிக்குக் கெடுதலாவது செய்யாது இருக்க வேண்டாமா என்றுதான் பிராமணரல்லாத தலைவர்களிடம் நாம் உண்மையாய் எதிர்பார்த்தது. இந்தநிலையில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவின் தேர்தல் சம்பந்தமான அபிப்பிராயங்கள் நமது முயற்சிக்கு சில இடங்களில் கொசவனுக்குப் பல நாளைக்கு வேலை, தடியடிக்காரனுக்கு ஒரே நாள் வேலை என்பது போல் பல தொந்தரவுகளை விளைவிப்பதாகப் பட்டதால் ஸ்ரீமான் நாயுடுவின் அபிப்பிராயங்களை எடுத்துக்காட்ட வேண்டியது நமது கடமையாய் போய்விட்டது. அதற்கு, சரியான சமாதானம் ஒன்றும் சொல்லாமல் ஸ்ரீமான் பட்டாபிராமய்யர் அவர்கள் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் சுயராஜ்ய கட்சி தேசத்து ரோகம் செய்து விட்டது என்று சொன்ன பொழுது ஸ்ரீமான் நேரு அதற்கு தகுந்த சமாதானம் சொல்வதற்கு யோக்கியதையில்லாமல் நான் உன்னை ஒரு தூசி போல் மதிக்கிறேன் என்று சொன்ன அகம்பாவமும்.... பொருந்திய பதில்போல் ஸ்ரீமான் நாயக்கரின் கோபத்திற்கும், பயமுறுத்தலுக்கும் பயந்து ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு தம்முடைய கொள்கையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்று தமிழ்நாடு பத்திரிகை வம்புச் சண்டைக்கு இழுக்கின்றது. சாதாரணமாக பிராமணப் பத்திரிகைகளும், பிராமணத்தலைவர்களும், தான் ஒருவரைப்பற்றி ஏதேனும் குறைகூற வேண்டுமென்று நினைத்துக் கொண்டால் ஒருவர் என்ன சொன்னார் என்ன பேசினார் என்பதை தங்கள் பத்திரிகையில் எடுத்துக் காட்டாமலும், அதைப் பொது ஜனங்களுக்குத் தெரியப்படுத்தாமலும் தங்களுக்குத் தோன்றியபடி பத்திரிகைகளில் எழுதி அவர்கள் இஷ்டத்திற்கு அனுசரணையான பிரச்சாரம் செய்வது வழக்கம், அதைப் பற்றி நாமும் பலதடவை கண்டித்திருக்கிறோம். அதே கொள்கையை தமிழ்நாடு பத்திரிகையும் பின்பற்றுவதென்றால் பிறகு நாம் அதை என்னவென்று நினைப்பது? அதனிடத்தில் இனி என்ன தான் எதிர்பார்க்க முடியாது? எந்த விஷயத்தில் ஸ்ரீமான் நாயக்கர் கோபித்துக் கொண்டார் எந்த விஷயத்தில் ஸ்ரீமான் நாயுடுவை பயமுறுத்தினார் என்று எழுதி அதன் பேரில் ஸ்ரீமான் நாயுடுவின் வீரப்பிரதாபத்தைக் காட்டியிருந்தால் ஒழுங்காயிருக்கும், அப்படியில்லாமல் வீண் வம்புச் சண்டைக்கு இழுப்பது தர்மமா?

நாம் எழுதியதில் ஏதேனும் குற்றமிருக்கின்றதா என்பதை பொது ஜனங்கள் அறியும்படி மறுபடியும் எழுதி இதற்குத் தமிழ்நாடு பத்திரிகை சொல்லும் பதிலையும் சொல்லி விட்டு நிறுத்திக் கொள்கிறோம். இதைப்பற்றி மறுபடியும் தமிழ்நாடு கண்டனமோ மறுப்போ சமாதானமோ எழுதுகிற பொழுது முன்போல் நடந்து கொள்ளாமல் நாம் எழுதியதைப் போட்டு சமாதானமோ கண்டனமோ, மறுப்போ எழுதுமென்று எதிர்பார்க்கிறோம்.

ஸ்ரீமான் நாயுடுவின் பழைய அபிப்பிராயமாவது;

கோயமுத்தூர் தேர்தலின் பொழுது தேர்தலுக்கு நிற்பவர்களின் யோக்கியதையை அறிந்து ஓட்டுச் செய்ய வேண்டுமென்ற ஸ்ரீமான் நாயக்கர் கூறிவந்த பொழுது ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு காங்கிரஸ்காரருக்கே வெற்றி ஏற்படுமாறு ஈசனைப்பிரார்த்திக்கிறேன் என்று ஒரு ஸ்ரீ முகம் விடுவித்தார்.

அதற்கு எதிர்க்கட்சியாளர் ஒரு கடித மெழுதியபொழுது (அக்கடிதம் ஆகஸ்டு மாதம் 30ஆம் தேதி தமிழ்நாடு பத்திரிக்கையின் 9-ஆவது பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.) சுயராஜ்யக் கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டு பாமர ஜனங்களை போலிகள் ஏமாற்றி விடாமல் பார்த்துக் கொள்வது தேசியவாதிகளின் கடமையாகும்.... சுயராஜ்யக் கட்சியார் சட்டசபைக்குச் சென்று அதை ஓடவிடாது தடுக்கவே கைப்பற்றுவதாகச் சொன்னார்கள். சட்ட சபைகளைத் தவிர முனிசிபாலிட்டிகளில் ஒத்துழையாமைக்கோ, முட்டுக்கட்டைக்கோ வழி இல்லை. நகர சபைகளில் எந்த விதத்தில் ஜனங்களுக்கு வேலை செய்யலாம் என்பதே அங்கத்தினர்களின் வேலையாயிருக்கிறதே ஒழிய எதிர்த்துப் போராடுவதற்கு அதிகாரவர்க்கம் அங்கு இல்லை. இதனால் ஸ்தல ஸ்தாபனங்களில் ஒருவர் இன்ன கட்சியைச் சேர்ந்தவர் என்பதற்கு மட்டும் ஓட்டுக்கொடுத்து விடக்கூடாது. ............. அபேட்சகர்களின் உண்மையான யோக்கியதைகளை அறிந்தே ஓட்டுக்கொடுக்க வேண்டும். நீடித்த காங்கிரஸ்வாதியாயும், வெளிவேஷத்திற்கு மாத்திரமல்லாமல் எப்பொழுதும் கதர் கட்டிக்கொண்டிருப்பவராகவும் பார்த்து ஓட்டுச் செய்யவேண்டும் என்று 30-.8.19-25 தமிழ்நாடு பத்திரிகையில் மேற்படி கோயம்புத்தூர் நண்பருக்கு பதில் கூறு முகத்தான் ஒரு வியாசம் வரைந்துள்ளார். அதற்கு நான்கு நாளைக்குள் திருச்சியில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் தலைமையின் கீழ்கூடிய ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஜாதி பேதமின்றி காங்கிரஸ்காரருக்கே ஓட்டுச் செய்ய வேண்டுமென்று ஒரு செய்தி அனுப்பினார். பாம்பன் பிரசங்கத்தில் காரியத்திற்குக் கதர் உடுத்தி காங்கிரஸ் பெயரைச் சொல்லித்திரியும் கசடர்கள் உங்களை ஏமாற்றி விடக்கூடாது.... நான் ஒரு கட்சியிலும் சேர்ந்தவனல்ல....... எனது வேலைத் திட்டம் எனது நண்பர்களின் யோசனையிலிருந்து வருகிறது .......... என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நகரசபையில் வேலை செய்யத்தகுதியுள்ள ஒரு பிராமணரும், ஒரு பிராமணரல்லாதாரும் அபேட்சகர்களாய் நிற்பார்களானால் கட்சிப்போக்கை கவனியாமல் பிராமணரல்லாதாருக்கேதான் ஓட்டுச் செய்ய வேண்டும். (இது சென்னையில் இரண்டு கனவான்கள் நேரில் கண்டு கேட்டபோது சொல்லியது.)

அதற்கு அடுத்த நாள் தமது அன்புள்ள ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் நிர்மாண-திட்டத்தில் நம்பிக்கை இருப்பதாகத்தான் நம்புவதாயும், நிர்மாணத் திட்டத்தை நம்புபவரும் அனுஷ்டானத்தில் செய்து காட்டுபவரும் காங்கிரஸ் அபேட்சகர் என்று தான் நம்புவதாகவும், அவரை ஆதரிக்கவேண்டுவது பொது ஜனங்களின் கடமை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்ரீமான் நாயுடுவின் தெளிவான அபிப்பிராய-மாவது;

1. சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ்வாதிகளை ஸ்ரீமான் நாயுடு ஆதரித்து எழுதிய கடிதங்களை ஸ்ரீமான் நாயக்கர் கண்டிக்கப் புறப்பட்டிருப்பது வேடிக்கையாயிருக்கிறது.

2. உண்மை தேசியவாதியான ஒரு பிராமணனும் காங்கிரசைச் சேராத ஒரு தமிழனும் தேர்தலுக்கு நின்றால் தேசிய பிராமணனைத்தான் தேசம் ஆதரிக்க வேண்டும். உண்மை தேசிய-வாதியான ஒரு பஞ்சமனுக்கும், மிதவாதியான ஒரு பிராமண-னுக்கும் போட்டி ஏற்பட்டால் பஞ்ச-மனைத்தான் பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும்.

3. ஸ்தலஸ்தாபனங்களில் முட்டுக் கட்டைக்கு இடமில்லை என்பது வாஸ்தவமே. அவ்வித அபிப்பிராயம் நாம் அடிக்கடி கூறுவது உண்டு. ஆனால் அடிமைப்பட்ட நாட்டில் சர்க்காரால் ஏற்பட்டிருக்கும் சகல ஸ்தாபனங்களிலும் தேசியவாதிகள் நுழைந்து உட்கார்ந்து கொண்டால் சமயம் வாய்ந்த போது உள்நோக்கமும் சர்க்காரைத் காக்க அனுகூலமாகுமன்றோ?

4 அபேட்சகர்களின் உண்மையான யோக்கியதைகளை அறிந்தே ஓட்டர்கள் ஓட்டுக் கொடுக்க வேண்டுமாம்.

5 ஆனால் ஒருவர் ஒழுக்கத்தில் தர்ம ராஜனாயிருந்தாலும் சர்க்காருக்குச் சாதகமானவ-ராயிருந்தால் அவருக்கு ஓட்டு கொடுக்கக்கூடாதாம்.

6 வேறொருவர் ஒழுக்கத்தில் குறைந்த வராயிருந்தாலும், தேசிய வாதியாயிருந்து நம்-முடைய ஓட்டினாலும், பேச்சினாலும், சர்க்காரின் செல்வாக்கைக் குறைக்கக் கூடியவராயிருந்தால், ஜனங்கள் அவரை ஆதரிக்க வேண்டுமாம்.

காங்கிரஸில் உயர்வு, தாழ்வு கொள்கையை பிராமணர்கள் செய்கையில் காட்டினால், நிர்தாட்சண்யமாக அப்படிப்பட்டவர்களை, காங்கிரசினின்று துரத்திவிடவேண்டுமாம். இதைக் குருகுலப் போராட்டத்தில் செய்து காட்டியிருக்கிறாராம் ........... மேற் கூறியவைகள்தான் ஸ்ரீமான் நாயுடுவின் தெளிவான அபிப்பிராயமாம். மேலும் இவ்வித அபிப்பிராயங்கள் ஸ்ரீமான் நாயுடுவுக்கு எவ்வளவு தெளிவான அபிப்பிராய-மாய் இருந்த போதிலும் பொது-ஜனங்களுக்கு எவ்வளவு தெளிவைக் கொடுக்கும் என்பதை வாசகர்களே கவனித்துக் கொள்ள வேணுமாய் கோருகிறோம்.

மற்றபடி இவ்வபிப்பிராயத்தின் தத்துவங்-களைப் பின்னால் எழுதுவோம்.

ஸ்ரீமான் நாயுடு: தன்னைப்பற்றி அதிகமாய் நினைத்து கொண்டார் என்பதற்குபதில், நாயக்கர் நாயுடுவைப் பற்றி அதிகமாய் நினைத்தாராம், அதனால் தன்னைப் பற்றி அதிகமாய் நினைத்துக் கொள்வது மேலோர்தன்மை போலும்!

- குடிஅரசு, துணைத் தலைப்பு, 27.09.1925

Sunday, October 25, 2009

பரிகாரம்என்ன?


உலகில் நானறிந்த வரையில் நம் நாட்டு மக்களிடம் இந்துக்கள் என்பவர்களிடம் தயக்கம், நாணயம் என்பது சற்றேறக்குறைய 100-க்கு 90 பேர்களிடம் இருப்பதில்லை. காரணம் என்ன?

நமக்கு கடவுள் இல்லையா? நாம் கடவுள் பக்தி இல்லாதவர்களா? நாம் மதம் அற்றவர்களா? நமக்குக் கடவுள்பயம் இல்லையா? கடவுள் நெறி இல்லையா? நன்மை செய்தால் நற்பயன் கிடைக்கும், தீமை செய்தால் தீய பயன் கிடைக்கும் என்கின்ற-தான எச்சரிக்கை சாதனங்கள் இல்லையா? நம்மில் பெரியவர்கள் தெய்வீகத் தன்மை கொண்ட மக்கள் என்பவர்கள் ஏற்பட்டு நமக்கு அறிவுரை கூறியவர்கள், கூறுப-வர்கள், கூறும்படியான நீதி நூல்கள் இல்லையா? நமக்கு நற்கதி அளிக்கும்-படியான கோயில்கள் இல்லையா? நமக்கு குருமார்கள் - மடாதிபதிகள் இல்லையா? இவையும் மற்றும் இவை போன்ற பலவும் ஏராளமாக இருக்கும்போது நமக்கு, நம் மக்களுக்கு - ஏன் ஒழுக்கம், நாணயம், இன-உணர்ச்சி, பொதுநல உணர்ச்சி, யோக்கியத் தன்மை முதலிய நற்குணங்கள் இல்லை? இப்படிப் பட்ட நிலை நமக்கு ஏற்படக் காரணம் என்ன? என்பதை மனிதன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எனக்குப் பல ஆண்டுகளாகவே இந்தக் கவலை உண்டு என்பதோடு, எனது தொண்-டில் இதை - அதாவது மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியத் தனம், இன உணர்ச்சி ஏற்பட வேண்டுமென்பதை - முக்கிய லட்சிய-மாகக் கொண்டு தொண்டாற்றி வந்திருக்-கிறேன். அதை முதன்மையாகக் கொண்டு பிரச்சாரமும் செய்து வருகிறேன்.

எனது இத்தனை ஆண்டு வாழ்க்கையில் - 80 ஆண்டு உலக அனுபவத்தில் - நாளுக்கு நாள் மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியத் தன்மைகள் குறைந்துகொண்டே வந்திருப்பதுடன், இன்று அக்குறைவு நிலை உச்ச நிலையடையும் வழியில் மனித சமுதாயமானது சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் எனது கருத்து?

இது பற்றி நான் மிகவும் கவலையடை-கிறேன். இவ்விஷயங்களில் இன்றைய நிலை மாறுமா என்பதில் நான் மிகவும் கவலைப்-படுகிறேன். மேற்சொன்னபடி எனது பல நாள் 30_-40 ஆண்டுகள்- இதற்காகவே நான் செய்து கொண்டு வந்த தொண்டின் காரணமாய் ஏதாவது பயன் ஏற்பட்டிருக்கிறதா என்று பார்த்தால், அடியோடு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவேதான் மேலும் மேலும் கவலையோடு, இந்த நிலை ஏன் ஏற்பட்டது? அதற்கு என்ன பரிகாரம்? என்பதில் நான் மிகவும் சிந்திக்க முயற்சித்து, சதா சிந்திக்கிற வண்ணமாகவே இருக்கிறேன்.

நமக்கு சுயராஜ்யம் வந்து என்ன பயன்? சுதந்திரம் - பூரண சுயேச்சை வந்து என்ன பயன்? நம்மை நாமே ஆண்டுகொள்வதில் (ஜனநாயகத்தில்) என்ன பயன்? இந்த நிலை-யில் வாழும் மக்களுக்கு அந்நிய ஆட்சி ஏற்படுவதால் தீமை என்ன? என்றெல்லாம் என் மனம் சிந்தனையில் - கவலையில் மூழ்கிக் கிடக்கின்றது. ஏனெனில் இந்த நாட்டில், பொது வாழ்வில் எல்லா மக்களை-யும் பொறுத்த பொதுத் தொண்டில் - சிறிதும் சுய நலமில்லாமல் - எனக்குள்ள சகலத்-தையும் பொதுவுக்கு ஈடுபடுத்திய தொண்டின் பயனாய், தொண்டின் பெயரால் எவ்வித சுயநல நன்மையும் அடையாமல், உண்மை-யாகவே ஒரு தொண்டன் - தொண்டனாகவே வாழ்பவன், வாழ வேண்டியவன் என்று கருதிக் கொண்டு, உண்மைத் தொண்டு செய்து வந்ததில் - வருவதில் எனக்கு மேற்பட்ட தொண்டன் யாருமில்லையென்-னும் தன்மையில் தொண்டாற்றி வருபவன் நான் என்று கருதிக் கொண்டு தொண்டாற்றி வருவதால், எனக்கு இந்தக் கவலை -அதாவது நம் மக்களில் யோக்கியமானவன் நாணயமானவன், எந்தத் தரத்திலும், எந்த நிலையிலும் ஏன் ஒருவனைக்கூடக் காண-முடியவில்லையே? இருப்பதாகக் கருதக்கூட முடியவில்லையே? - என்பனவற்றைக் கருதக் கூடியவனாக, கவலைப்படக் கூடியவனாக இருந்து வருகிறேன்.

இந்த நீண்ட நாள் கவலையில் - சிந்தனையின் பயனாக இதற்கு- அதாவது இந்த நாட்டில் இன்று இந்தக் காலத்திலும் ஒரு யோக்கியன், நாணயமானவன், ஒழுக்க-மானவன், யோக்கியப் பொறுப்புக்கு ஆளான-வன் எந்தத் தரத்திலும் எவனும் இல்லாமல் போனதற்குக் காரணம் : நமது நாட்டிலுள்ள சூழ்நிலை, சுற்றுச்சார்பு, நமது கடவுள்கள், நமது நீதிநெறி, சாத்திரங்கள், தர்மங்கள் இவைபற்றிய புராணங்கள், இதிகாசங்கள், பிரசாரங்கள், பெரியவர்கள், மகான்கள், மகாத்மாக்கள், இன்று இருந்துவரும் அரசாங்க முறை, அரசியலில் ஈடுபடும் மக்கள் தன்மை, அரசியலில் ஒழுக்கம், மத ஒழுக்கம், சமுதாய அமைப்பு முதலிவைகள்-தாம் என்கிற முடிவுக்கு வரவேண்டிய-வனாகி விட்டேன். அது மாத்திரமல்லாமல், மேற்கண்ட காரண காரியங்களில் நல்ல அளவுக்கு மாறுதல் ஏற்படாதவரை - மாறுதல் செய்யப்படாதவரை - நமக்கு மேற்கண்ட தீய குணங்களில் எவ்வித மாற்றமும் ஏற்பட-முடியாது என்துடன், ஏற்படுத்த எவராலும் ஆகாது என்கிற முடிவுக்கு வரவேண்டிய-னாகி விட்டேன்.

நமது கடவுள்களில் ஒன்று கூட ஒழுக்க-மாய், யோக்கியமாய், நாணயமாய், யோக்கியப் பொறுப்புடன் இருந்ததாகக் கடவுள் சம்பந்தப்-பட்ட எந்த ஆதாரங்களிலுமே காண முடிய-வில்லை. அது மாத்திரமல்லாமல், இன்றுள்ள மக்களில் எந்த இழி மக்களிடமிருந்தும் எப்படிப்பட்ட ஒழுக்கம் ஈனம், யோக்கிய ஈனம், நாணயமான காரியங்கள் எதுவும் இன்றுள்ள நம் கடவுள்கள் எதனிடமும் இல்லை என்று சொல்ல முடியாத நிலைமை-யில்தானே நம் கடவுள்கள் இருந்து வருகின்றன! ஒழுக்கக்கேடு, நாணயக்கேடு, யோக்கியக்கேடு இல்லாத நம் பதினாயிரக்-கணக்கான கடவுள்கள், அவர்களின் பெண்டு பிள்ளைக் கடவுள்களில் ஒரு கடவுளையாவது காட்ட எந்த பக்தனாலாவது குருமார்களினா-லாவது கடவுள் கதைகளினாலாவது காட்ட-முடியுமா என்று பந்தயம் கட்டிக் கேட்கிறேன்.

மற்றும் வேத சாஸ்திர - தர்ம புராண - இதிகாசங்கள் எதிலாவது இன்று நாம் கூறும், விரும்பும் ஒழுக்கம், நாணயம், யோக்கியம், நேர்மை, யோக்கியமாகக் கருதும், நடக்கும் தன்மை மிகுந்திருப்பதாக எந்தப் பக்தன், குரு, பண்டிதன், புலவன் ஒருவனாலாவது காட்ட முடியுமா என்று கேட்கிறேன். அல்லது நமது பெரியோர்கள், முன்னோர்கள், தெய்வீகத்-தன்மை பெற்ற ரிஷிகள், மகான்கள், மகாத்-மாக்கள் என்பவர்களில் யாரிடமாவது மேற்கண்ட குணங்களோ அல்லது அறிவோ, பண்போ இருந்ததாக யாராவது காட்ட முடியுமா என்று கேட்கிறேன். பந்தயம் கட்டிக் கேட்கிறேன்.

தந்தை பெரியார் (விடுதலை தலையங்கம் 31-7-1942)

Friday, October 23, 2009

தீக்கதிர்

தீக்கதிர், தீபாவளி வர்த்தக மலரின் நோக்-கம் குறித்து அதன் முன்-னுரையில் சமாதானம் கூறிவிட்டதாம். விடு-தலைக்குப் பதில் சொல்ல முயற்சித்திருக்கிறது தீக்கதிர். அடேயப்பா, என்ன சமாதானமோ!
கும்பமேளா நடத்து-கிறவர்களும் சமாதா-ன-மும், சாங்கியமும் கூறத்-தான் செய்கிறார்கள். அய்யப்பன் கோயி-லுக்குச் செல்லுகின்றவர்-களும் கொட்டி அளக்-கும் சரக்குகள் கொஞ்-சமா, நஞ்சமா?
மகாவிஷ்ணுவின் பத்து அவதாரம் என்-றால், சாதாரணமா? ஆமை, மீன் என்று கூறுவதெல்லாம் பரி-ணாம வளர்ச்சியின் தத்-துவம் என்று வாய்ப்பறை கொட்டுவதில்லையா? அந்தப் பட்டியலில் மார்க்சியம் பேசுவோரும் சேர்ந்ததை நினைத்தால் சிரிப்பு வருகுது! சிரிப்பு வருகுது!! விலா நோகச் சிரிப்பு வருகிறது!!!
மக்களின் இனிய கொண்டாட்டப் பொழுது களில் நமக்குரிய விதத் தில் நாமும் பங்கேற் பது தேவையன்றோ?
அடேயப்பா! எப்படிப்-பட்ட டயலிட்டிக் மெட்-டிரியலிசம்!
கந்த சஷ்டி, சூரசம்-ஹாரம், கார்த்திகை தீபம், நவராத்திரி, சிவராத்திரி, வைகுந்த ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு, கள்ளழகர் திருவிழா, மாசி மகம் இப்படி மாதந்தவறாமல் பக்தர்கள் மூழ்கிக் கிடப்பதெல்லாம் இனிய கொண்டாட்-டங்கள்தாம்.
12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பகோணத்-தில் வரும் மகாமகத்தில் இலட்சக்கணக்கான மக்-கள் கூடி மகிழ்கிறார்கள். அதிலும் மார்க்சிஸ்ட்கள் சங்கமமாகி விடுவார்-களோ! அதற்கும் மலர் வெளியிடுவார்களோ!
மூட நம்பிக்கை-களைத் தவிர்த்து தீபா-வளி கொண்டாடலாமாம்! அப்படி ஒரு தீபாவளி-யிருக்கிறதோ?
தீபாவளி என்றாலும், சூரசம்ஹாரம் என்றா-லும், நவராத்திரி என்-றாலும் அசுரர்கள் வதம் செய்யப்படுவதாகக் கூறு-கிறார்களே, அந்த அசு-ரர்கள் என்றால் யார்? சுரர்கள் என்றால் யார்?
வரலாற்றை வகை-யாகப் படிக்கவேண்-டியவர்களுக்கு அரிச்-சுவடி சொல்லிக் கொடுக்-கும் நிலை ஏற்பட்டு-விட்டதே!
மூடச் சேற்றினில் மூழ்கிக் கிடக்கும் மக்-களைக் கரையேற்றுவது மார்க்சிஸ்ட்களின் கட-மையா? அல்லது அந்த மூடச் சேற்றில் தாமும் உருண்டு புரண்டு கோவிந்தா போடுவது மார்க்சிஸ்ட்களின் செயலா?
கம்யூனிசம் பர-வாமல் இருப்பதற்குத்-தான் கம்யூனிஸ்ட் கட்-சியோ!

விடுதலை 23-oct-2009

Wednesday, September 30, 2009

வன்னி அகதிகள் சிறைவைப்புக்கு சமாதானம் கூறும் காரணங்கள்

வன்னியில் இடம்பெயர்ந்து முகாம்களுக்குள் சிறைவைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் அப்பாவித் தமிழர்களையும் அங்கு தொடர்ந்து முடக்கி வைத்திருப் பதில் அவர்களை விடுவிப்பதில்லை என்பதில் கொழும்பு மிகமிக உறுதியாக இருக்கின்றது.
தன்னுடைய இந்தப் பிடிவாதப் போக்கை நியாயப்படுத்துவதற்காக எந்தவித காரணங்களையும் விளக் கங்களையும் தருவதற்கு அது பின்நிற்பதில்லை.
"வன்னி நிலப்பரப்பு எங்கும் அங்குலம் அங்குல மாகக் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் புதைக்கப்பட்டி ருக்கின்றன. இந்த மக்களைத் தற்போதைய முகாம்க ளில் இருந்து விடுவித்து அந்தக் கண்ணிவெடிகள் மீது தள்ளிவிட நாம் தயாரில்லை. அரசியலை விட மக்களின் உயிர்களே எமக்கு முக்கியம்.'' என்று முழங்கியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
ஆஹா, இந்த வன்னி மக்கள் மீதும் அவர்களின் உயிர்கள் மற்றும் பாதுகாப்பு மீதும் ஜனாதிபதிக்கு எத்துணை கரிசனை.........!
இதே மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் இருந்த சமயம் அவர்களின் உயிருக்கு வழங்கப்பட்ட மதிப்பும், அவர்களின் பாதுகாப்புக்கும், அவர்களுக்கான அத்தியாவசிய சேவைகளை அப்பிர தேசத்துக்கு எடுத்துச் செல்வதற்கும் வழங்கப்பட்ட முன்னுரிமையும் தமிழ்ச் சமுதாயம் எளிதில் மறக்கற்பாலவையல்ல. இப்போது கரிசனை பொத்துக்கொண்டு வந் துள்ளது போலும்...
வன்னி இறுதி யுத்தத்தின் போது இந்த மக்களின் பாதுகாப்புக் குறித்துக் காட்டப்பட்ட கரிசனையுடன் ஒப் பிடும்போது இப்போது வன்னியில் புதைக்கப்பட் டுள்ளவை என்று கூறப்படும் கண்ணிவெடிகள், மிதி வெடிகள் ஏற்படுத்தக்கூடிய ஆபத்து ஒன்றும் அப்படி மோசமானதல்ல. இத்தகைய கண்ணிவெடி புதை யுண்ட பிரதேசத்துக்குள் வாழ்ந்துகாட்டி மீண்டவர்கள் தான் இந்த மக்கள் என்பதும் மறைக்கக் கூடியதல்ல.
நல்லது. ஜனாதிபதியும் அவரது அரசும் கூறுவது போல கண்ணிவெடிகள் இருப்பதால் இந்த மக்களை வன்னிப் பிரதேசத்துக்குள் மீளக் குடியேற்ற அனுமதிக்க முடியாது என்பதை ஒரு பேச்சுக்கு ஏற்றுக் கொள்வோம். அதற்காக அந்த மக்களை வவுனியாப் பகுதியில் ஒரு சிறு பிரதேசத்துக்குள் அரசு அமைத்துக் கொடுத்த கொட்டகைக்குள் முடங்கிக் கிடக்கவேண்டும் என்று உத்தரவிட்டு சிறைவைக்கவேண்டும் என்பதல்ல. அப் படி சிறை வைக்கப்படுவதற்கான தவறு ஏதும் இழைத் தவர்களும் அல்லர் அவர்கள்.
அவர்களும் இலங்கைப் பிரஜைகள்தான் என அரசு கூறுவது உண்மை என்றால் ஏனைய இலங்கைப் பிரஜைகளுக்கு உள்ள உரிமை போல அவர்களும் நாட்டின் ஏனைய எந்த இடத்துக்கும் செல்லவும், வதி யவும் அவர்களுக்கு உரிமை உள்ளது.
எனவே, அவர்கள் விரும்பினால் யாழ்.குடாநாட் டுக்கோ, அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட ஏனைய தமிழர் தாயகப் பகுதி களுக்கோ, தென்னிலங்கைக்கோ செல்லத் தடையோ, கட்டுப்பாடோ விதிக்கக்கூடாது. வெளிநாடுகளுக்குச் செல்ல வசதியும், வாய்ப்பும் உள்ளவர்கள் விரும்பினால் தம் இச்சையின் அடிப்படையில் அவ்வாறு வெளிநாடு செல்லவும் அவர்களுக்கு உரிமையுண்டு.
வன்னிப் பெருநிலப்பரப்பில் கண்ணிவெடி, மிதி வெடி புதைக்கப்பட்டிருப்பதால் அங்கு சென்று மீளக் குடியேறவிடாமல் தடுப்பது வேறு. அதற்காகப் பிற இடங்களுக்கோ, பிற தேசங்களுக்கோ செல்லவிடாமல் வவுனியாவில் நலன்புரி மையங்கள் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட முகாம்களுக்குள் வெளியேறவிடாது சிறைவைப்பது வேறு.
இந்த அகதிகளைத் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதியுங்கள் என்றால் அங்கு நிலக்கண்ணி வெடி எனப் பூச்சாண்டி காட்டுகின்றார்கள். சரி. தடுப்பு முகாம் சிறைவைப்பிலிருந்து பிற இடங்களுக்கு வெளி யேற விடுங்கள் என்றால், அவர்களுடன் புலிகளும் கலந்திருக்கின்றாகள். எனவே அவர்களை அங்கிருந்து வெளியே விடமுடியாது என்று அடம்பிடிக்கின்றார்கள் அரசின் தலைவர்கள்.
இப்படி இரண்டு பக்கத்தாலும் விளக்கம், வியாக்கியா னம் கூறி, இந்த மக்களை சிறைவைத்திருக்கின்றமை அந்த சிறைவைப்பைத் தொடர்ந்து இழுத்தடித்தபடி அதற்கு அபத்தமான விளக்கங்களையும், காரணங் களையும் கூறுகின்றமை இறுதியில் இந்த விவகாரத்தை விபரீதத்தை நோக்கியே இட்டுச் செல்லும்.
இந்த அகதிகள் சிறைவைப்புத் தொடர்பில் அதி கரித்து வரும் சர்வதேச அழுத்தங்களின் தாற்பரியங் களைக் கொழும்பு புரிந்ததாக இல்லை.
இவ்விடயத்தில் "மொட்டந் தலைக்கும் முழங் காலுக்கும் முடிச்சுப் போடும் விதத்தில்' கொழும்பு அரசு கூறி வரும் விளக்கங்களை சர்வதேச சமூகம் இனியும் ஏற்றுக்கொண்டு பொறுத்திருக்குமா என்பது சந்தேகமே:
இவ்விடயத்தை ஒட்டி சர்வதேச தரப்புகளால் பிரதி பலிக்கப்பட்டுவரும் கருத்துகள் அத்தகைய உணர் வைத்தான் வெளிப்படுத்தி நிற்கின்றன.
ஐ.நா.செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளமை போல கசப்புணர்வு வளரவும், நாட்டின் ஐக்கியத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தவுமே இத்தகைய கெடுபிடிப் போக்கு வழிவகுக்கும

நன்றி :உதயம் தலையங்கம்

Monday, September 21, 2009

ஆயுதபூசைபற்றி அண்ணா


எலக்ட்ரிக், ரயில்வே, மோட்டார், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி, விஷப்-புகை, அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இனாகுலேஷன் ஊசி, இவைகளுக்கான மருந்து ஆப்ரேஷன் ஆயுதங்கள், தூரதிருஷ்-டிக் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன், டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம், ஆளில்லா விமானம், டைப் மெஷின், அச்சு யந்திரம், ரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத்துக்குள் போகக் கருவி, மலை-உச்சி ஏற மெஷின், சந்திரமண்டலம் வரை போக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின் இன்னும், எண்ணற்ற, புதிய, பயன் தரும், மனி-தனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள், ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள், எல்லாம், இன்னமும், கண்டுபிடிக்கும் வேலையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்-பவர்கள் எல்லாம்.

சரஸ்வதி பூசை, ஆயுத பூசை, கொண்டாடாதவர்கள்!!

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர் இவர்களெல்லாம், ஆயுதபூசை செய்தவர்களல்ல!

நவராத்திரி கொண்டாடினவர்-களல்ல!

சரஸ்வதி பூசை இல்லை!

ஓலைக் குடிசையும் கலப்பையும், ஏரும் மண்வெட்டியும் அரிவாளும் இரட்டை வண்டியும் மண் குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள் தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை.

கடவுள் படங்களுக்கு அலங்காரத்-துக்குப் போடும் கண்ணாடிகூட, சரஸ்வதி பூசை அறியாதவன் கொடுத்ததுதான்.

நீ, கொண்டாடுகிறாய்,

சரஸ்வதி பூசை, ஆயுத பூசை!!

ஏனப்பா? கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

மேனாட்டான், கண்டுபிடித்துத் தந்த அச்சு யந்திரத்தின் உதவி கொண்டு, உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து, அக மகிழ்கிறாயே!

அவன் கண்டுபிடித்த ரயிலில் ஏறிக் கொண்டு, உன், பழைய, அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே!

ஒரு கணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்துவந்த, நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய, அதிசயப் பொருளைப், பயனுள்ள பொருளைக் கண்டுபிடித்தோம், உலகுக்-குத் தந்தோம். என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை, அப்படித்தான், கொஞ்சம் நெஞ்சை உறுத்தும், மிரளாமல், யோசி _ உன்னை-யுமறியாமல் நீயே சிரிப்பாய்.

உன், பழைய நாட்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூற்களை எல்லாம்கூட, ஓலைச் சுவடி-யிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்-சுயந்திரமாவது கண்டுபிடித்திருக்கக் கூடாதா? இல்லையே!

எல்லாம் மேனாட்டான், கண்டு-பிடித்துக் கொடுத்த பிறகு, அவைகளை, உபயோகப்படுத்திக் கொண்டு, பழைய பெருமையை, மட்டும் பேசுகிறாயே, சரியா? யோசித்துப் பார்!

சரஸ்வதி பூசை, விமரிசையாக நடைபெற்றது _ என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே. அது, நாரதர் சர்வீஸ் அல்லவே! அசோசியேடட், அல்லது ராய்ட்டர் சர்வீஸ் _ தந்தி முறை _ அவன் தந்தது!

தசரதன் வீட்டிலே டெலிபோன் இருந்ததில்லையே!

ராகவன், ரேடியோ கேட்டதில்லை, சிபி, சினிமா பார்த்தில்லை!

தருமராஜன், தந்திக்கம்பம் பார்த்ததில்லை!

இவைகளெல்லாம், மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது _ அனுபவிக்கிறோம்.

அனுபவிக்கும்போதுகூட, அந்த அரிய பொருள்களைத் தந்த அறிவாளர்களை மறந்து விடுகிறோம்.

அவர்கள், சரஸ்வதி பூசை ஆயுத பூசை!

செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவிலே ராகவனைப்பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்ரவர்த்தி கதையும், கேட்டும், பார்த்தும், ரசிக்கிறோம். இதுமுறைதானா?

பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந்த

சரஸ்வதி பூசை ஆயுத பூசை _

நமக்குப் பலன் தரவில்லையே! அந்தப் பூசைகள் செய்தறியாதவன், நாம், ஆச்சரியப்படும்படியான, அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதார புருஷர்கள் காலத்திலேகூட இல்லாத அற்புதங்-களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே, என்று யோசித்தால் முதலில் கோபம் வரும் பிறகு வெட்கமாக இருக்கும், அதை-யும் தாண்டினால், விவேகம் பிறக்கும்.

யோசித்துப் பார் _ அடுத்த ஆண்டுக்குள்ளாவது!

Monday, September 07, 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 94 : பாதகத்தை சாதகமாக்கிய ஜெயவர்த்தனா


படம்: ப.சிதம்பரம், ஜெயவர்த்தனா

"ஆபரேஷன் லிபரேஷன்' வெற்றியானது சிங்களவர்களைச் சந்தேக மனநிலையிலிருந்து விலக்கி, புளகாங்கித நிலைக்கு ஆளாக்கியது. செஞ்சிலுவைச் சங்கத்தினரை ஏற்றி வந்த இந்திய மீன்பிடிக் கப்பல்கள் சாதுவாகத் திரும்பிச் சென்றபோது சிங்களவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தையே அடைந்தனர். மூத்த அரசியல்வாதிகளால் விடப்பட்ட வீரதீர அறிக்கைகளும், பத்திரிகைப் பத்தி, எழுத்தாளரின் புகழ்ச்சிகளும் அன்றைய நாள்களை ஆட்சி கொண்டிருந்தன.

இந்தியா விமானத்திலிருந்து நிவாரணப் பொட்டலங்களைப் போட்டதுடன், சிங்கள மக்களின் புத்துணர்ச்சி பெற்ற சந்தோஷம் மிக வெறுப்புக் கலந்த கடுங்கோபமாக மாறியது. (முறிந்த பனை-பக்.158). சிங்கள மக்களும் செய்வதறியாது திகைத்தனர். உலகத்தின் பார்வையில் இலங்கைக்கு எவ்வளவு கீழிறக்கம் ஏற்பட்டிருக்கிறது எனக் கண்டு அதிர்ந்தனர்.

இந்நிலையில், 1987 ஜூலை 19-ஆம் தேதியிட்ட, இலங்கை அரசின் ஆதரவு மற்றும் யதார்த்த நிலையைத் துணிந்து எழுதும் பத்திரிகை எனப் பெயரெடுத்த "வீக்எண்ட்' சில மனப் பதிவுகளை வெளியிட்டது. அதுபோன்ற ஒரு கட்டுரையில் குமுதினி ஹெட்டியாராட்சி என்பவர் எழுதிய ஒரு கட்டுரை சிங்களவர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைக்குத் தலைப்பு "நான்காண்டுகளுக்குப் பின்னும் அதே நிலையா?' என்பதாகும். கட்டுரையின் முக்கிய பகுதிகளைப் பார்க்கலாம்:

""நான், பிரிட்டன் சென்றபோது, பலரைச் சந்தித்து, எமது இனப்பிரச்னை குறித்து கலந்துரையாடும் சந்தர்ப்பத்தைப் பெற்றேன். என் முன்னே இருந்த பலர், பல்வேறு தேசிய இனப் பிரச்னைகள் பற்றிய தெளிவான கருத்துக்கொண்டவர்கள் ஆவர். அவர்களில் ஒருவர் சொன்னார், நாம் ராணுவத் தீர்வுக்கும் அரசியல் தீர்வுக்குமிடையே ஊசலாடுகிறோம் என்று. அவர்களது பொதுவான கருத்து அதுவே ஆகும்.

ஸ்ரீலங்கா, இனப்பிரச்னையை நிரந்தரமாகத் தீர்ப்பதில் உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளதா என அவர்கள் என்னிடம் பல சந்தர்ப்பங்களில் வினவினார்கள். விடாப்பிடியான போக்கு இலங்கையில் இனப் பிரச்னையை ஒருபோதும் தீர்க்காது என்றும், இனப் பிரச்னைக்குத் தீர்வு அரசியல் தீர்வே என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.

இன்றைய நிலையில், "ஆபரேஷன் லிபரேஷன்' பிழையான அறிவுறுத்தலால் நடத்தப்பட்ட முயற்சியென அவர்களால் கருதப்பட்டது. பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு எல்லோரும் விரும்பும் சமாதான முறைகளைக் கையாண்டு இழந்துபோன சில கெüரவங்களை மீட்டுப் பெறுவதில் ஸ்ரீலங்கா அரசு அக்கறை கொள்ளவேண்டும். இந்த அரசியல் தீர்வு என்கிற முடிவு உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தளவில் இருக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

ஆக்ஸ்போர்டு நகரில் எனக்குத் தெரிந்த குடும்பம், பிபிசியிலே வெளிவந்த போர்க்காட்சிகளைப் பார்த்த பாதிப்பில், "எவ்வாறு சிங்கள அரசு இவ்வளவு மிருகத்தனமாக நடந்துகொள்ளமுடியும்?' என்று என்னைக் கேட்டது. அந்த வீட்டுத்தலைவர் வடக்கிலே குண்டுமழை பொழிவதாகக் கூறினார். பிபிசி செய்தியாளர், "தீக்காயங்களுடன் காட்டப்பட்ட குழந்தைகள் பற்றி என்ன கூறுகிறீர்?' எனக் கேட்டார்.

உங்கள் நாட்டிலே வியத்நாம் பாணி போர் உத்திகளைக் கையாளுமாறு உத்தரவிட்டவர் யார்? இதற்கு யார் பொறுப்பு? இரவு உணவுக்காக பல நாட்டுப் பத்திரிகையாளர்களுடன் உணவருந்த என்னையும் அழைத்திருந்த நிலையில், அவர்கள் முன்னிலையில் என்னைக் குடைந்து எடுத்தார்.

இது கேட்ட ஒரு பத்திரிகையாளர், "இலங்கை ஒரு பூலோக சொர்க்கம். மற்ற எல்லாம் நல்லவையாக இருக்க, மனிதன் மட்டுமே கெட்டவனாக இருக்கிறான் என்பதற்கு ஸ்ரீலங்கா ராணுவம் நடந்துகொள்ளும் விதமே சான்றாக உள்ளது' என்றார்.

நாம் விரைவான-அமைதியான நல்ல தீர்வுக்கு வருவது அவசியமானாதும் முக்கியமானதும் ஆகும்; இதற்குத் தேவைப்படுவது நேர்மையும் நம்பிக்கையும்தான்'' என்ற குமுதினியின் விருப்பம், ஸ்ரீலங்கா அரசுத் தரப்பில் பல தாக்கத்தை ஏற்படுத்தியது.

விமானத்திலிருந்து உணவுப் பொட்டலங்களை யாழ் பகுதிகளில் போட்டது முதல், இந்தியா, இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கிற முக்கிய நாடாயிற்று. இந்த விஷயத்தை ஜெயவர்த்தனா விரும்பினார் இல்லை. ஆனால், இந்தப்போக்கை அவரால் தடுக்கமுடியவில்லை.

காரணம், ராணுவத்தின் ஒரு பிரிவினர் ஸ்ரீமாவோ காலத்தில் பணியமர்த்தப்பட்டனர் என்ற காரணத்தால், அவர்கள் ஜெயவர்த்தனா மீது எப்போதுமே கோபத்தில் இருந்தனர். இந்நிலையில், யாழில் இந்தியா உணவுப் பொட்டலங்களைப் போட்டதை இலங்கை கடுமையாகக் கண்டிக்கவேண்டும் என்றும், ஏதேனும் ஒரு தாக்குதலை நடத்தவேண்டும் என்று அவர்கள் குமுறினார்கள். அந்தப் பிரிவினர் ராணுவத் தலைமைக்குக் கட்டுப்படாமல் புரட்சியில் இறங்கிவிடுவார்களோ என்றும் ஜெயவர்த்தனா பயந்தார்.

புத்த பிக்குகளும், ஜேவிபியினரும் கையாலாகாத அரசு என்று விமர்சனம் செய்தனர். இதற்கு முன்பே அங்கு வன்முறை தீவிரமான நிலையில், இந்தியாவின் நடவடிக்கையும் சேர்ந்தது. இலங்கையின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட வன்முறைகளை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. எதிர்க்கட்சிகளோ அரசைக் கலைத்து உடனே தேர்தலை நடத்த வலியுறுத்தின. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி என்னும் நிலையைப் பெறவேண்டிய நெருக்கடியும் அவருக்கு ஏற்பட்டது.

இதுபோன்ற சூழ்நிலையில் இந்தியாவுடன் ஜெயவர்த்தனாவால் முரண்பட முடியவில்லை. காரணம், இந்திய உணவுப் பொட்டலங்கள் போட்டதை "அத்துமீறல்' என்று குரல்கொடுத்தும் நட்பு நாடுகள்கூட வாய்திறக்காததால் மிகுந்த வேதனைக்கும் வெறுப்புக்கும் அவர் ஆளானார்.

அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் தப்பிக்கவேண்டுமானால், இந்தியாவின் பங்கை ஏற்கவேண்டும் என்று முடிவு எடுத்ததுடன், எது பாதகமானதோ, அதைப் பற்றிக்கொண்டு அதிலிருந்து சாதகம் பெறத் திட்டம் தீட்டினார்.

"ராணுவத்தின் மூலமே தீர்வு என்றும், ஒன்று புலிகள் வெற்றிபெறவேண்டும் இல்லையென்றால் அரசாங்கம் வெற்றிபெற வேண்டும். இறுதிவரை போர்தான் - சமாதானம் இல்லை' என்று அடம்பிடித்த ஜெயவர்த்தனா ஏதேனும் ஓர் ஒப்பந்தத்துக்காகத் துடித்தார். "இறுதிவரைப் போர்' என்கிற வார்த்தைப் பிரயோகம் இலங்கையின் இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் எழுதிய, "அசைன்மெண்ட் கொழும்பு' நூலில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகமாகும்.

இந்தக் குழப்பமான நிலையில் யாழ்த்தளபதி கிட்டு வாகனத்தின் மீது குண்டுவீசப்பட்டது. இதில் படுகாயமுற்ற கிட்டு, இறுதியில் தனது கால்களில் ஒன்றை இழந்தார். மருத்துவத்துக்காக அவரைத் தமிழகத்துக்கு அழைத்து வந்தனர்.

ஜெயவர்த்தனா தனக்குப் பிடிக்காத வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்பை ஏற்றுக்கொண்டார். இந்தியா-இலங்கை என இரு அரசுகள் மட்டத்தில் மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதிகாரிகள் கொழும்புவுக்கும் தில்லிக்குமாகப் பறந்தனர். இந்தப் பிரச்னைகளில் சம்பந்தப்பட்ட தமிழர்களின் பிரதிநிதியான விடுதலைப் புலிகள் அமைப்பை எந்தவிதத்திலும் கலந்து ஆலோசிக்கவில்லை.

இந்த நிலையில், அன்டன் பாலசிங்கத்தை தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சந்திக்க விரும்புவதாகக் கூறி அவரைக் காவலர்கள் அழைத்துச் சென்றனர்.

அங்கே முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் இருந்தார். புன்முறுவலுடன் எம்.ஜி.ஆர். வரவேற்று பாலசிங்கத்தை அமரச் சொன்னார். அவர் உட்கார்ந்ததுமே ப.சிதம்பரம் கடுமையாகப் பேசினார் என்றும், விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் நன்றியுள்ளவர்கள்தானா என்றும், இந்தியா மற்றும் எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் குறித்தும், இலங்கை இனப்பிரச்னைத் தீர இந்தியா எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் குறிப்பிட்ட அவர், "இப்பொழுது பிரபாகரன் எங்கே? திடீரென மாயமாக மறைந்துவிட்டார். யாருக்கும் தெரிவிக்காமல் யாழ்ப்பாணம் சென்றுவிட்டாராமே? எங்களுக்குத்தான் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டு அரசுக்காவது, முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்காவது தெரிவித்திருக்கலாமே?' என்று கேட்டதாகவும் பாலசிங்கம் தான் எழுதிய "விடுதலை' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பாலசிங்கம் மேலும் குறிப்பிடுவதாவது:

""எண்பத்துமூன்றாம் ஆண்டின் இறுதியிலிருந்து பல ஆண்டுகள் பிரபாகரன் இந்தியாவில் கழித்துவிட்டார். அவர் இங்கு தஞ்சம் கேட்டு வரவில்லை. ராணுவப் பயிற்சித்திட்டம் சம்பந்தமாக இந்திய அரசின் அழைப்பின் பேரில் அவர் இங்கு வந்தார். வந்த இடத்தில் பல கசப்பான அனுபவங்களையும் பெற்றார். இப்பொழுது போராட்டக்களத்துக்குச் செல்லவேண்டிய காலமும் வரலாற்றுத் தேவையும் அவருக்கு ஏற்பட்டுவிட்டது.

தமிழீழக் களத்திலிருந்துதான் எமது மக்களின் உரிமைப் போராட்டத்தை அவர் முன்னெடுக்க விரும்புகிறார். அதனால்தான் அவர் தாயகம் செல்லவேண்டியதாயிற்று.

சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் செல்வது மிகவும் ஆபத்தான பயணம். தரைப் பாதை மட்டுமன்றி, கடல் கடந்தும் செல்லவேண்டும். பிரபாகரனுக்குப் பல எதிரிகள் இருக்கிறார்கள். அவருக்கு விரோதமாகப் பல சக்திகள் செயல்படுகின்றன. ஏனைய போராளி அமைப்புகளும் அவரைப் பழிதீர்க்க வெறிகொண்டு அலைகின்றன. இப்படியான சூழ்நிலையில் பிரபாகரனின் பாதுகாப்பு கருதியே அவரது பயணத்தை ரகசியமாக வைத்திருக்க எமது இயக்கம் முடிவெடுத்தது'' இப்படியான ஒரு விளக்கம் கொடுத்தேன்.

அமைச்சர் சிதம்பரம் என்னை விட்டபாடில்லை. ""சரி, பிரபாகரன்தான் பாதுகாப்புக் கருதி அவசரமாக, ரகசியமாக யாழ்ப்பாணம் போய்விட்டார். நீங்களாவது முதலமைச்சருக்கு அத்தகவலைத் தெரிவித்திருக்கலாம் அல்லவா?'' என்று கூறி என்னை மடக்க முயன்றார்.

முதலமைச்சரும் என்னைக் கேள்விக்குறியுடன் நோக்கினார்.

முதலமைச்சரைப் பார்த்து சொன்னேன், "சார்! பிரபாகரன் யாழ்ப்பாணம் சென்றது உண்மையில் எனக்கும் தெரியாது. அவர் எனக்கும்கூடத் தெரியப்படுத்தவில்லை. மிகவும் ரகசியமான காரியங்களை ரகசியமாகச் செய்து முடிப்பதுதான் எமது இயக்கத்தின் மரபு. நேற்றுதான் எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து தகவல் அனுப்பியிருந்தார், பிரபாகரன். உங்களுக்கு அறிவிப்பதற்கு முன்னதாக நீங்கள் என்னை இங்கு அழைத்துவந்துவிட்டீர்கள்' என்றேன்.

முதலமைச்சருக்கு நிலைமை புரிந்தது. பிரபாகரன் தாயகம் திரும்பியதன் அவசியத்தை அவர் உணர்ந்துகொண்டார். அந்தப் பயணம் குறித்து ரகசியம் பேணப்பட்டதையும் அவர் புரிந்துகொண்டார்.

""பிரபாகரன் செüக்கியமாக இருக்கிறாரா?'' என்று கேட்டார். தொடர்ந்து, "அவரைப் பாதுகாப்பாக இருக்கச்சொல்லுங்கள்; நான் விசாரித்ததாகவும் சொல்லுங்கள்' என்றார்.

Tamil 10 top sites [www.tamil10 .com ]