வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label தீபாவளி. Show all posts
Showing posts with label தீபாவளி. Show all posts

Friday, October 23, 2009

தீக்கதிர்

தீக்கதிர், தீபாவளி வர்த்தக மலரின் நோக்-கம் குறித்து அதன் முன்-னுரையில் சமாதானம் கூறிவிட்டதாம். விடு-தலைக்குப் பதில் சொல்ல முயற்சித்திருக்கிறது தீக்கதிர். அடேயப்பா, என்ன சமாதானமோ!
கும்பமேளா நடத்து-கிறவர்களும் சமாதா-ன-மும், சாங்கியமும் கூறத்-தான் செய்கிறார்கள். அய்யப்பன் கோயி-லுக்குச் செல்லுகின்றவர்-களும் கொட்டி அளக்-கும் சரக்குகள் கொஞ்-சமா, நஞ்சமா?
மகாவிஷ்ணுவின் பத்து அவதாரம் என்-றால், சாதாரணமா? ஆமை, மீன் என்று கூறுவதெல்லாம் பரி-ணாம வளர்ச்சியின் தத்-துவம் என்று வாய்ப்பறை கொட்டுவதில்லையா? அந்தப் பட்டியலில் மார்க்சியம் பேசுவோரும் சேர்ந்ததை நினைத்தால் சிரிப்பு வருகுது! சிரிப்பு வருகுது!! விலா நோகச் சிரிப்பு வருகிறது!!!
மக்களின் இனிய கொண்டாட்டப் பொழுது களில் நமக்குரிய விதத் தில் நாமும் பங்கேற் பது தேவையன்றோ?
அடேயப்பா! எப்படிப்-பட்ட டயலிட்டிக் மெட்-டிரியலிசம்!
கந்த சஷ்டி, சூரசம்-ஹாரம், கார்த்திகை தீபம், நவராத்திரி, சிவராத்திரி, வைகுந்த ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு, கள்ளழகர் திருவிழா, மாசி மகம் இப்படி மாதந்தவறாமல் பக்தர்கள் மூழ்கிக் கிடப்பதெல்லாம் இனிய கொண்டாட்-டங்கள்தாம்.
12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பகோணத்-தில் வரும் மகாமகத்தில் இலட்சக்கணக்கான மக்-கள் கூடி மகிழ்கிறார்கள். அதிலும் மார்க்சிஸ்ட்கள் சங்கமமாகி விடுவார்-களோ! அதற்கும் மலர் வெளியிடுவார்களோ!
மூட நம்பிக்கை-களைத் தவிர்த்து தீபா-வளி கொண்டாடலாமாம்! அப்படி ஒரு தீபாவளி-யிருக்கிறதோ?
தீபாவளி என்றாலும், சூரசம்ஹாரம் என்றா-லும், நவராத்திரி என்-றாலும் அசுரர்கள் வதம் செய்யப்படுவதாகக் கூறு-கிறார்களே, அந்த அசு-ரர்கள் என்றால் யார்? சுரர்கள் என்றால் யார்?
வரலாற்றை வகை-யாகப் படிக்கவேண்-டியவர்களுக்கு அரிச்-சுவடி சொல்லிக் கொடுக்-கும் நிலை ஏற்பட்டு-விட்டதே!
மூடச் சேற்றினில் மூழ்கிக் கிடக்கும் மக்-களைக் கரையேற்றுவது மார்க்சிஸ்ட்களின் கட-மையா? அல்லது அந்த மூடச் சேற்றில் தாமும் உருண்டு புரண்டு கோவிந்தா போடுவது மார்க்சிஸ்ட்களின் செயலா?
கம்யூனிசம் பர-வாமல் இருப்பதற்குத்-தான் கம்யூனிஸ்ட் கட்-சியோ!

விடுதலை 23-oct-2009

Tamil 10 top sites [www.tamil10 .com ]