வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label ஈழ முகாம்கள். Show all posts
Showing posts with label ஈழ முகாம்கள். Show all posts

Wednesday, September 30, 2009

வன்னி அகதிகள் சிறைவைப்புக்கு சமாதானம் கூறும் காரணங்கள்

வன்னியில் இடம்பெயர்ந்து முகாம்களுக்குள் சிறைவைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் அப்பாவித் தமிழர்களையும் அங்கு தொடர்ந்து முடக்கி வைத்திருப் பதில் அவர்களை விடுவிப்பதில்லை என்பதில் கொழும்பு மிகமிக உறுதியாக இருக்கின்றது.
தன்னுடைய இந்தப் பிடிவாதப் போக்கை நியாயப்படுத்துவதற்காக எந்தவித காரணங்களையும் விளக் கங்களையும் தருவதற்கு அது பின்நிற்பதில்லை.
"வன்னி நிலப்பரப்பு எங்கும் அங்குலம் அங்குல மாகக் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் புதைக்கப்பட்டி ருக்கின்றன. இந்த மக்களைத் தற்போதைய முகாம்க ளில் இருந்து விடுவித்து அந்தக் கண்ணிவெடிகள் மீது தள்ளிவிட நாம் தயாரில்லை. அரசியலை விட மக்களின் உயிர்களே எமக்கு முக்கியம்.'' என்று முழங்கியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
ஆஹா, இந்த வன்னி மக்கள் மீதும் அவர்களின் உயிர்கள் மற்றும் பாதுகாப்பு மீதும் ஜனாதிபதிக்கு எத்துணை கரிசனை.........!
இதே மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் இருந்த சமயம் அவர்களின் உயிருக்கு வழங்கப்பட்ட மதிப்பும், அவர்களின் பாதுகாப்புக்கும், அவர்களுக்கான அத்தியாவசிய சேவைகளை அப்பிர தேசத்துக்கு எடுத்துச் செல்வதற்கும் வழங்கப்பட்ட முன்னுரிமையும் தமிழ்ச் சமுதாயம் எளிதில் மறக்கற்பாலவையல்ல. இப்போது கரிசனை பொத்துக்கொண்டு வந் துள்ளது போலும்...
வன்னி இறுதி யுத்தத்தின் போது இந்த மக்களின் பாதுகாப்புக் குறித்துக் காட்டப்பட்ட கரிசனையுடன் ஒப் பிடும்போது இப்போது வன்னியில் புதைக்கப்பட் டுள்ளவை என்று கூறப்படும் கண்ணிவெடிகள், மிதி வெடிகள் ஏற்படுத்தக்கூடிய ஆபத்து ஒன்றும் அப்படி மோசமானதல்ல. இத்தகைய கண்ணிவெடி புதை யுண்ட பிரதேசத்துக்குள் வாழ்ந்துகாட்டி மீண்டவர்கள் தான் இந்த மக்கள் என்பதும் மறைக்கக் கூடியதல்ல.
நல்லது. ஜனாதிபதியும் அவரது அரசும் கூறுவது போல கண்ணிவெடிகள் இருப்பதால் இந்த மக்களை வன்னிப் பிரதேசத்துக்குள் மீளக் குடியேற்ற அனுமதிக்க முடியாது என்பதை ஒரு பேச்சுக்கு ஏற்றுக் கொள்வோம். அதற்காக அந்த மக்களை வவுனியாப் பகுதியில் ஒரு சிறு பிரதேசத்துக்குள் அரசு அமைத்துக் கொடுத்த கொட்டகைக்குள் முடங்கிக் கிடக்கவேண்டும் என்று உத்தரவிட்டு சிறைவைக்கவேண்டும் என்பதல்ல. அப் படி சிறை வைக்கப்படுவதற்கான தவறு ஏதும் இழைத் தவர்களும் அல்லர் அவர்கள்.
அவர்களும் இலங்கைப் பிரஜைகள்தான் என அரசு கூறுவது உண்மை என்றால் ஏனைய இலங்கைப் பிரஜைகளுக்கு உள்ள உரிமை போல அவர்களும் நாட்டின் ஏனைய எந்த இடத்துக்கும் செல்லவும், வதி யவும் அவர்களுக்கு உரிமை உள்ளது.
எனவே, அவர்கள் விரும்பினால் யாழ்.குடாநாட் டுக்கோ, அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட ஏனைய தமிழர் தாயகப் பகுதி களுக்கோ, தென்னிலங்கைக்கோ செல்லத் தடையோ, கட்டுப்பாடோ விதிக்கக்கூடாது. வெளிநாடுகளுக்குச் செல்ல வசதியும், வாய்ப்பும் உள்ளவர்கள் விரும்பினால் தம் இச்சையின் அடிப்படையில் அவ்வாறு வெளிநாடு செல்லவும் அவர்களுக்கு உரிமையுண்டு.
வன்னிப் பெருநிலப்பரப்பில் கண்ணிவெடி, மிதி வெடி புதைக்கப்பட்டிருப்பதால் அங்கு சென்று மீளக் குடியேறவிடாமல் தடுப்பது வேறு. அதற்காகப் பிற இடங்களுக்கோ, பிற தேசங்களுக்கோ செல்லவிடாமல் வவுனியாவில் நலன்புரி மையங்கள் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட முகாம்களுக்குள் வெளியேறவிடாது சிறைவைப்பது வேறு.
இந்த அகதிகளைத் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதியுங்கள் என்றால் அங்கு நிலக்கண்ணி வெடி எனப் பூச்சாண்டி காட்டுகின்றார்கள். சரி. தடுப்பு முகாம் சிறைவைப்பிலிருந்து பிற இடங்களுக்கு வெளி யேற விடுங்கள் என்றால், அவர்களுடன் புலிகளும் கலந்திருக்கின்றாகள். எனவே அவர்களை அங்கிருந்து வெளியே விடமுடியாது என்று அடம்பிடிக்கின்றார்கள் அரசின் தலைவர்கள்.
இப்படி இரண்டு பக்கத்தாலும் விளக்கம், வியாக்கியா னம் கூறி, இந்த மக்களை சிறைவைத்திருக்கின்றமை அந்த சிறைவைப்பைத் தொடர்ந்து இழுத்தடித்தபடி அதற்கு அபத்தமான விளக்கங்களையும், காரணங் களையும் கூறுகின்றமை இறுதியில் இந்த விவகாரத்தை விபரீதத்தை நோக்கியே இட்டுச் செல்லும்.
இந்த அகதிகள் சிறைவைப்புத் தொடர்பில் அதி கரித்து வரும் சர்வதேச அழுத்தங்களின் தாற்பரியங் களைக் கொழும்பு புரிந்ததாக இல்லை.
இவ்விடயத்தில் "மொட்டந் தலைக்கும் முழங் காலுக்கும் முடிச்சுப் போடும் விதத்தில்' கொழும்பு அரசு கூறி வரும் விளக்கங்களை சர்வதேச சமூகம் இனியும் ஏற்றுக்கொண்டு பொறுத்திருக்குமா என்பது சந்தேகமே:
இவ்விடயத்தை ஒட்டி சர்வதேச தரப்புகளால் பிரதி பலிக்கப்பட்டுவரும் கருத்துகள் அத்தகைய உணர் வைத்தான் வெளிப்படுத்தி நிற்கின்றன.
ஐ.நா.செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளமை போல கசப்புணர்வு வளரவும், நாட்டின் ஐக்கியத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தவுமே இத்தகைய கெடுபிடிப் போக்கு வழிவகுக்கும

நன்றி :உதயம் தலையங்கம்

Tamil 10 top sites [www.tamil10 .com ]