வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, September 26, 2010

தினமணிக்கும், தினமலருக்கும் ஏன் இந்த அழுக்கு புத்தி?

தினமணியும், தினமலரும் கலைஞர் அரசை எதிர்க்கக் கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பதாகத் தெரி கிறது. துக்ளக் சோவின் பாணி பார்ப்பனக் கிண்டல் கள் இந்தக் கின்னரர்களின் எழுதுகோல் முனைகளில் தெறிக்கின்றன.

வாரத்துக்கு 5 நாள் கோழி முட்டை சத்துணவு மய்யத்தில் நமது குழந்தை களுக்கு அளிக்கப்படுகின் றன. தினமலர் எழுதுகிறது; சனிக்கிழமை அரை நாள் பள்ளி உள்ளதே அப் பொழுது அரை முட்டை போடப்படுமா? என்று கேலிச்சித்திரம் தீட்டுகிறது.
 
தினமணியின் மதி எப்படி வேலை செய்கிறது தெரியுமா?
 
சத்துணவில் வாரத் துக்கு 5 நாள் முட்டையாம்! நல்லது, அதையே கலக்கி, ஆம்லேட், பொடிமாஸ், ஆஃப் பாயில், ஃபுல்பாயில்னு நாளுக்கு ஒரு அயிட்டமா கொடுத்தால் பசங்களும் சலிப்பு தட்டாமல் சாப்பிடு வாங்களே..!
 
தினமலர், தினமணிக்கு ஏன் இந்தப் புத்தி? ஒருக் கால் எந்தப் பாப்பாரக் குஞ் சுக்கும் இந்த முட்டை அளிப் பால் பயனில்லை என்ற நினைப்பு இருக்குமோ!
இந்த ஒரு பிரச்சினை மட்டுமல்ல; தமிழ் செம் மொழி ஆனால் வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்குமா? என்று கிண் டலடிக்கிறது.
 
சத்துணவு அளிப்பதும், வாரத்தில் 5 நாள்கள் முட்டை கொடுப்பதும் சாதாரண மான ஒன்றல்ல - தொலை நோக்கோடு பார்க்கும் பொழுதுதான் இதில் உள்ள அருமையும், விளைவும் புரியும்.
 
இந்தியாவில் 5 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் அவதிப்படுகின் றனர். ஆண்டு ஒன்றுக்கு குழந்தைகள் பாதிக்குமேல் மரணம் அடைவது இந்த ஊட்டச் சத்துக் குறைவால் தான்!
இந்தச் செய்தியையும் ஒரு பக்கத்தில் தினமலர் (4.5.2006) தான் வெளி யிடுகிறது.
47 விழுக்காடு குழந் தைகளுக்கு நம் நாட்டில் ஊட்டச்சத்து இல்லை என் கிற தகவலை வெளியிட்டது தினமணிதான் (5.5.2004).
 
இப்படி ஒரு பக்கத்தில் ஊட்டச் சத்தின் அவசி யத்தை வெளியிடும் தின மணியும், தினமலரும் ஊட்டச்சத்தினை கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு அளிக்கும்போது, இந்த ஏடுகள் நல்ல புத்தியோடு பாராட்ட மனம் இல்லா விட்டாலும் கேலியும், கிண் டலும் செய்யாமலாவது இருக்கலாம் அல்லவா!
 
வாரத்துக்கு 5 நாள்கள் முட்டை அளித்தால், பார்ப்ப னர் அல்லாத குழந்தைகள் ஊட்டச் சத்து பெற்று, உடல் வளர்ச்சியும், மூளை வளர்ச் சியும் பெற்று, தேர்வுகளில் இதுவரை முட்டை மார்க்கு வாங்கியவர்கள் இனி அக் மார்க் முத்திரை பொறிப் பார்களோ என்கிற 

அழுக் குப் புத்திதான் இந்தப் பார்ப்பனர்களுக்கு.
அழுக்கு என்றால் அசிங்கம் மட்டுமல்ல - பொறாமையும்தான்!
-விடுதலை (26.09.2010) மயிலாடன்
                                               



2 comments:

ஒசை said...

80கள்ல இந்த மதிய சத்துணவு திட்டம், புரட்சி தலைவரால் மிக சிறப்பா நடப்பதை கண்டு, பொறுக்காத கலைஞர், "அப்பனுக்கு சாராயக்கடை... பிள்ளைக்கு சத்துணவு" என்று கேலி பேசினார். அன்று அப்பனுக்கு மட்டுமான சாராயகடை இன்று மொத்த குடும்பத்துக்கானது வேற கதை.

ஒரு நல்ல திட்டத்தை விமர்சிக்கணும்னு முடிவு பண்ணிட்டா, அவன் பார்ப்பானா மட்டும் தான் இருக்கணுங்கிற அவசியம் இல்ல. பகுத்தறிவாளர்களாகவும் இருக்கலாம். அழுக்கு, பொறாமை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பவர்களிடமும் இருக்கும் தானே.

நம்பி said...

//ஒசை. said...

80கள்ல இந்த மதிய சத்துணவு திட்டம், புரட்சி தலைவரால் மிக சிறப்பா நடப்பதை கண்டு, பொறுக்காத கலைஞர், "அப்பனுக்கு சாராயக்கடை... பிள்ளைக்கு சத்துணவு" என்று கேலி பேசினார். அன்று அப்பனுக்கு மட்டுமான சாராயகடை இன்று மொத்த குடும்பத்துக்கானது வேற கதை.

ஒரு நல்ல திட்டத்தை விமர்சிக்கணும்னு முடிவு பண்ணிட்டா, அவன் பார்ப்பானா மட்டும் தான் இருக்கணுங்கிற அவசியம் இல்ல. பகுத்தறிவாளர்களாகவும் இருக்கலாம். அழுக்கு, பொறாமை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பவர்களிடமும் இருக்கும் தானே.//
3:48 AM

80 கள்ல ஆரம்பித்த பொழுது மிக தொந்தரவுடன் ஆரம்பிக்கப்பட்டது..சத்துணவு திட்டத்திற்கு தனி பணி ஆட்கள் எடுக்கப்படவே இல்லை படிப்பு சொல்லிக்கொடுக்கும் பள்ளி ஆசிரியர்களே இந்த சத்துணவுகளை சமைக்கும் வேலைகளையும் ஒன்று சேர்ந்து பார்த்தனர். அவர்களால் காலையில் இந்த வேலைகளில் ஈடுபட்டுவிட்டு அதன்பிறகு வகுப்புகளுக்கு சென்று பாடம் எடுக்கவும் முடியவில்லை.

அன்றைய காலகட்டத்தில் ஷிப்டு பள்ளிக்கூடம் தான் மாலையில் வகுப்பு எடுக்கும் அனைவரும் காலையில் சத்துணவு சமைக்கவேண்டும். பிறகு மாலையில் வகுப்பு எடுக்க்ப்பட வேண்டும். சுழுற்சி முறையில் ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து இந்த பணியில் ஈடுபட்டனர்.

அவ்வளவு கடுமையாக திட்டம் நிறைவேற வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. பிறகு ஆசிரியர்கள் போராடிய பிறகு அதற்கான பணி ஆட்களை நியமித்தனர்.

அந்த திட்டம் இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது...வராத்திற்கு 5 முட்டைகளுடன். வாழைப்பழங்களுடன்.

அதே போன்று கடா மார்க் பாட்டில் சாராயம் ஜகஜோதியாக ஒடியது...புள் பாட்டில் சாராய விலை 12 ரூபாயோ என்னமோ? தான் அனைவரது கையிலும் புள் பாட்டில் சாராயம் கடா மார்க் சின்னத்துடன் இருந்தது.

பல பேர் அந்த கடையிலேயே குடியிருந்தனர் அதற்கான விமர்சனம் தானே தவிர...சத்துணவுக்கான விமர்சனம் இல்லை.


இதுல சூப்பரா பாப்பானை கூட்டு சேர்த்துக்காதே! பாப்பான் எந்த காலத்திலும் நல்ல திட்டங்களை செய்யமாட்டான்...அவனுக்கு மட்டுமே நல்ல திட்டங்களை செய்து கொள்வான். சோம்பேறித் தொழில்களை எல்லாம் அவனுக்கு சாதகமாக ஆக்கி கொள்வான். மத்தவங்களுக்கு குலத்தொழிலை காட்டுவான்...தெரியாதா? ராஜாஜி பத்தி....

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]