வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, April 28, 2009

பாவேந்தர் பிறந்த நாளில் அவர் பற்றி ஒரு பதிவு.................


1891 - ஏப்ரல் 29, அறிவன் (புதன்) இரவு பத்தேகால் மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை. தாய் இலக்குமி. உடன்பிறந்தோர் தமையன் சுப்புராயன். தமக்கை சிவகாமசுந்தரி. தங்கை இராசாம்பாள்.
1895 - ஆசிரியர் திருப்புளிச்சாமி ஐயாவிடம் தொடக்கக் கல்வி. இளம் அகவையிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் ஊரில் நற்பெயர் பெற்றார். பத்தாம் அகவையிலேயே சுப்புரத்தினத்தைப் பெற்றதால் புகழ் பெற்றது புதுவை.
1908 - புதுவை அருகில் உள்ள சாரம் முதுபெரும் புலவர் (மகா வித்துவான்) பு.அ. பெரியசாமியிடமும் பின்னர் பெரும் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கணஇலக்கியங்களையும் சித்தாந்த வேதாந்த பாடங்களையும் கசடறக் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார். புலவர் சுப்புரத்தினத்தை வேணு "வல்லூறு" வீட்டுத் திருமணத்தில் பாரதியார் காணும் பேறு பெற்றார். பாரதியாரின் தேர்வு எடையில் நின்றார். வென்றார். நட்பு முற்றியது. பாரதியாரின் எளிய தமிழ், புலமை மிடுக்கேறிய சுப்புரத்தினத்தைப் பற்றியது.
1909 - கல்வி அதிகாரியார் உதவியால் காரைக்கால் சார்ந்த நிரவியில் ஆசிரியப் பணி ஏற்றல்.
1910 - வ.உ.சி.யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் கனிந்திருந்த புலவர் - பாரதியார், வ.வே.சு., பர்.வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தல். தம் பெற்றோர்க்குத் தெரியாமல் மேல் துண்டில் வடித்த சோறு கொடுத்தல். ஓரோர் அமையங்களில் செலவுக்குப் பணம் தருதல். காவலர்களின் வேட்டையிலிருந்து தப்ப உதவல். பாரதியாரின் "இந்தியா" ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தருதல். ஆசு ஆட்சித் தலைவரைச் (கலெக்டரைச்) சுட்ட துமுக்கி (துப்பாக்கி) பாவேந்தர் அனுப்பியதே.
1916 - தந்தையார் (23.1.1916) இயற்கை எய்தல்.
1918 - பாரதியாருடன் நெருங்கிப் பழகிய பழக்கத்தால் சாதி, மதம், கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் எழுதும் தேசிய தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை, தமிழக ஏடுகளில் புதுவை கே.எசு.ஆர்., கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எசு. பாரதிதாசன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை மடல்கள் எழுதுதல். 10 ஆண்டுக்காலம் பாரதியாருக்கு உற்றுழி உதவியும் உறு பொறுள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.
1919 - திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில், பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி ஒன்றேகால் ஆண்டு சிறைபிடித்த அரசு தவறுணர்ந்து விடுதலை செய்தது. வேலை நீக்க வழக்கில் புலவர் வென்று மீண்டும் பணியில் சேர்தல்.
1920 - இந்திய விடுதலை அறப்போராட்டத்தில் பங்கேற்றல், புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழனி அம்மையை மணத்தல். தம் தோளில் கதர்த் துணியைச் சுமந்து தெருத்தெருவாய் விற்றல்.
1921 - செப்டம்பர் 19 - தலைமகள் சரசுவதி பிறப்பு (12.11.1921) பாரதியார் மறைவு.
1922 - கே.சு. பாரதிதாசன் என்ற புனைப்பெயரைத் தொடர்ந்து பயன்படுத்தி, தேச சேவகன் "துய்ப்ளேச்சு", புதுவை கலைமகள், தேசோபகாரி, தேச பக்தன், ஆனந்த போதினி, சுதேச மித்திரன் இதழ்களில் தொடர்ந்து பாடல், கட்டுரை, கதைகள் எழுதுதல்.
1924 - சோவியத்து நாட்டு மாவீரர் இலெனின் இழப்பிற்குப் பாடல்.
1926 - சிரி மயிலம் சுப்பிரமணியர் துதியமுது. நூலில் சிந்தைக்குத் தந்தையாதல்.
1928, நவம்பர் 3 - கோபதி (மன்னர் மன்னன்) பிறப்பு. தன்மான (சுயமரியாதை) இயக்கத்தில் பெரியார் ஈ.வெ.இரா.வுடன் இணைதல். தாமும் தம் குடும்பமும் பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொள்ளல். குடும்பத் திருமணங்களில் தாலியைத் தவிர்த்தல்.
1929 - குடி அரசு, பகுத்தறிவு ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை, கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன்முதல் பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புச் பெறல்.
1930 - பாரதி புதுவை வருகைக்கு முன்னும் பின்னும் பாடிய சிறுவர், சிறுமியர் தேசியப் பாடல், தொண்டர் நடைப்பாட்டு, கதர் இராட்டினப் பாட்டு நூல் வடிவில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து சஞ்சீவி பர்வதத்தின் சாரல், தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு நூல்களை ம.நோயேல் வெளியிடல். திசம்பர் 10இல் புதுவை முரசு கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றல்.
1931 - புதுவை முரசு (5.1.31) ஏட்டில் செவ்வாய் உலக யாத்திரை - கட்டுரை வரைதல். சுயமரியாதைச் சுடர் என்ற 10 பாடல்களைக் கொண்ட நூலை "கிண்டற்காரன்" என்ற பெயரில் வெளியிடல். (குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படைப்பு) 18.8.31 இரண்டாம் மகள் வசந்தா (வேனில்) பிறப்பு. பள்ளி ஆண்டு விழாவில் சிந்தாமணி என்ற முத்தமிழ் நாடகம் எழுதி இயக்குதல்..
1932 - "வாரிவயலார் வரலாறு" அல்லது "கெடுவான் கேடு நினைப்பான்" புதினம் வெளியிடல். வெளியார் நாடகங்களுக்கும் தன்மான, பொதுவுடைமைக் கூட்டங்களுக்கும் பாட்டெழுதித் தருதல்.
1933 - ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை ஒயிட்சு நினைவுக் கட்டிடத்தில் (31.2.1933) நடந்த நாத்திகர் மாநாட்டில் கலந்து கொண்டு வருகைப் பதிவேட்டில் நான் ஒரு நிலையான நாத்திகன் என்று எழுதி கையெழுத்திடல்.
1933 - மூன்றாம் மகள் இரமணி பிறப்பு.
1934 - மாமல்லபுரத்திற்கு முழுநிலா இரவில் தோழர் ப.சீவானந்தம், குருசாமி, குஞ்சிதம், நயினா சுப்பிரமணியம், மயிலை சீனி.வேங்கடசாமி, மாயூரம் நடராசன், சாமி சிதம்பரனார், எசு.வி. லிங்கம், நாரண துரைக்கண்ணனுடன் படகில் செல்லல். மாவலிபுரச் செலவு - பாடல் பிறந்தது. 9.9.1934இல் இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் பெரியார் தலைமையில் நடைபெறல்.
(குருசாமி -இரணியன், திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியன் - பிரகலாதன்)
1935 -இந்தியாவின் முதல் பாட்டேடான, "சிரி" சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் தொடக்கம். இதற்கு ஊறுதுணையாக இருந்தவர் எசு.ஆர். சுப்பிரமணியம். (சர்வோதயத் தலைவர்)
1936 - பெங்களூரில் பதினான்கு நாள் தங்கி (1.4.1936) தேசிங்கு ராசன் வரலாற்றை "அட்கின்சு" குழுமத்தார்க்கு "இசு மாசுடர் வாய்சு" இசைத் தட்டுகளில் பதித்தல்.
1937 -இல் புரச்சிக்கவி -குறுப்பாவியம் வெளியிடல். பாலாமணி அல்லது பாக்தாத் திருடன் திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இதில் நடித்தவர்கள் டி.கே.சண்முகம்-உடன் பிறந்தோர் அனைவரும்.
1938 -"பாரதிதாசன் கவிதைகள்" முதல் தொகுதியைக் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி வெளியிட்டனர். பொருளுதவி செய்தவர் கடலூர் தி.கி. நாராயனசாமி. தமிழிலக்கியத்திலேயே பெரும் புரட்சியை உண்டாக்கியதால், பெரியார். "தன்மான இயக்கத்தின் பெரும் பாவலர்" என்று பாராட்டினார். மருத்துவர் மாசிலாமணியார் நடத்திய தமிழரசு இதழில் தொடர்ந்து எழுதுதல். "தமிழுக்கு அமுதென்று பேர்" என்ற பாடலை அச்சுக் கோத்தவர் பின்னாளில் சிறப்புற்ற எழுத்தாளர் "விந்தன்".
1939 -"கவி காளமேகம்" திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இரணியன் அல்லது இணையற்ற வீரன் நூல் வடிவில் வருதல்.
1941 -"எதிர்பாராத முத்தம்" பாவியம் காஞ்சி பொன்னப்பாவால் வானம்பாடி நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடல். இதற்கு மேலட்டை ஓவியம் இராய் சவுத்ரி.
1942 - குடும்ப விளக்கு 1 வெளியிடல். இந்தியப் போராட்ட எழுச்சியை மறைமுகமாக ஊக்குவித்தல். இரண்டாம் உலகப் போரை -இட்லரை எதிர்த்தல். பல ஏடுகட்கும் எழுதுதல்.
1943 - பாண்டியன் பரிசு-பாவியம் வெளியிடல்.
1944 - பொரியார் முன்னிலையில் தலைமகள் சரசுவதி திருமணம். மணமகன் புலவர் கண்ணப்பர். "இன்ப இரவு" (புரட்சிக்கவி) முத்தமிழ் நிகழ்ச்சி அரங்கேற்றம். இருண்ட வீடு, காதல் நினைவுகள், நல்ல நீர்ப்பு (நாடகம்) அழகின் சிரிப்பு ஆகிய நூல்கள் ஒன்றன் பின் வெளியிடல். சதி சுலோசனா என்ற திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். குடும்ப விளக்கு 2 வெளியிடல். செட்டிநாடு முழுவதும் இலக்கியச் சொற்பொழிவு நடத்திப் பகுத்தறிவு இயக்கத்தைக் காலூன்றச் செய்தல். கலைவாணர் என்.எசு.கே. வுக்காக "எதிர்பாராத முத்தம்" நாடகமாத் தீட்டித் தருதல். "கற்கண்டு" பொறுமை கடலினும் பெரிது இணைத்து எள்ளல் நூல் வெளியிடல்.
1945 - புதுவை 95, பெருமாள் கோயில் தெரு வீட்டை வாங்குதல். தமிழியக்கம், (ஒரே இரவில் எழுதியது) எது இசை நூல்கள் வெளியிடல்.
1946 - முல்லை இதழ் தொடங்கப்பட்டது. அமைதி, ஊமை நாடகம் வெளியிடல். 29.7.1946 - பாவேந்தர் "புரட்சிக் கவி" என்று போற்றப்பட்டு ரூ.25 ஆயிரம் கொண்ட பொற்கிழியை, நாவலர் சோமசுந்தரம் பாரதியார் தலைமையில் பொன்னாடை போர்த்தி அறிஞர் அண்ணா திரட்டித் தந்தார். தமிழகப் பேரறிஞர்கள் அனைவரும் வாழ்த்திப் பேசினர். 8.11.1946இல் முப்பத்தேழாண்டுத் தமிழாசிரியர் பணிக்குப் பின் பள்ளியிலிருந்து ஓய்வு பெறுதல்.
1947 - புதுக்கோட்டையிலிருந்து "குயில்" 12 மாத வெயியீடு. சவுமியன் நாடக நூல், பாரதிதாசன் ஆத்திச்சூடி வெளியிடுதல். சென்னையில் குயில் இதழ். ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி - திரைப்படக் கதை, உரையாடல், பாட்டு தீட்டல். இசையமுது வெளியிடல். புதுவையிலிருந்து "குயில்" ஆசிரியர் - வெளியிடுபவர் - "கவிஞர் பேசுகிறார்" சொற்பொழிவு நூல்.
1948 - காதலா? கடமையா? பாவியம் முல்லைக்காடு, இந்தி எதிர்ப்புப் பாடல்கள், படித்த பெண்கள் (உரை நாடகம்), கடற்மேற் குமிழிகள் பாவியம். குடும்ப விளக்கு 3, திராவிடர் திருப்பாடல், அகத்தியன் விட்ட கரடி - நூல் வெளியிடல். குயில் மாத ஏட்டிற்குத் தடை, நாளேடாக்குதல், கருஞ்சிறுத்தை உருவாதல்.
1949 - பாரதிதாசன் கவிதைகள், 2-ஆம் தொகுதி சேர தாண்டவம், முத்தமிழ், நாடகம், தமிழச்சியின் கத்தி - பாவியம், ஏற்றப் பாட்டு வெளியிடல்.
1950 - குடும்ப விளக்கு 4, குடும்ப விளக்கு 5 வெளியிடல்.
1951, செப்டம்பர் 15இல் வேனில் (வசந்தா தண்டபாணி) திருமணம். அ. பொன்னம்பலனார் தலைமையில் நடந்தது. அமிழ்து எது? கழைக் கூத்தியின் காதல் வெளியிடல்.
அறுபதாண்டு மணிவிழா திருச்சியில் நிகழ்வுறல்.
1952 - வளையாபதி - திரைப்படம், கதை, உரையாடல், பாட்டு, இசையமுது இரண்டாம் தொகுதி வெளியிடல்.
1954 - பொங்கல் வாழ்த்துக் குவியல், கவிஞர் பேசுகிறார் - சொற்பொழிவு நூல் வெளிவரல். குளித்தலையில் ஆட்சி மொழிக் குழுவிற்குத் தலைமை ஏற்றல்.
1954 - மூன்றாம் மகள் இரமணி சிவசுப்பிரமணியம் திருமணம். இராசாக் கண்ணனார் தலைமையில் நடந்தது.
1955 - புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியுற்று அவைத் தலைமை ஏற்றல். சூன் 26இல் மன்னர் மன்னன் - மைசூர் வீ. சாவித்திரி திருமணம். கோவை அ. ஐயாமுத்து தலைமை. பாரதிதாசன் கவிதைகள் மூன்றாம் தொகுதி வெளியிடல்.
1956 - தேனருவி இசைப்பாடல்கள் வெளியிடல்.
1958 - தாயின் மேல் ஆணை, இளைஞர் இலக்கியம் வெளியிடல். தமிழகப் புலவர் குழுவின் சிறப்புறுப்பினராதல். குயில் - கிழமை ஏடாக வெளிவருதல்.
1959 - பாரதிதாசன் நாடகங்கள், குறிஞ்சித் திட்டு பாவியம் வெளியிடல். பிசிராந்தையர் - முத்தமிழ் நாடகம் தொடர்தல். 1.11.1959 முதல் திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் என்ற உரை விளக்கம் எழுதுதல்.
1961 - சென்னைக்குக் குடி பெயர்தல். "பாண்டியன் பரிசு" திரைப்படம் எடுக்க திட்டமிடல். செக் நாட்டு அறிஞர் பேராசிரியர் கமில்சுவலபில் "செக்" மொழியில் பெயர்த்த பாவேந்தரின் பாடல்களைக் கொண்ட நூலைப் பெறுதல். நடுவர் எசு. மகராசன் நட்புறவு.
1962 - சென்னையில் மீண்டும் குயில் கிழமை ஏடு (15.4.1962). அனைத்துலகக் கவிஞர் மன்றத் தோற்றம். கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா - வெளியிடல். தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் இராசாசி பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கல்.
1963 - தோழர் ப.சீவானந்தம் மறைவு குறித்துப் "புகழ் உடம்பிற்குப் புகழ் மாலை" பாடல் எழுதுதல். சீனப்படையெடுப்பை எதிர்த்து அனைத்திந்திய மக்களை வீறுகொண்டெழுப் பாடல்கள் எழுதுதல். பன்மணித்திரள் நூல் வெளியீடு. 1972-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வழக்கறிஞர் வி.பி. இராமன் தலைமையில் நடைபெற்றது.
"பாரதியார் வரலாறு" திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டு எழுதி முடித்தல். இராசிபுரத்தில் புலவர் அரங்கசாமி கூட்டிய கவிஞர்கள் மாநாட்டில் தலைமை ஏற்றல்.
1964 - பாரதியார் வரலாற்றுத் திரைப்படத்திற்குத் தீவிர முயற்சி. சென்னை, சென்னை பொது மருத்துவமனையில் ஏப்ரல் 21இல் இயற்கை எய்தல். மறுநாள் புதுவைக் கடற்கரையில் உடல் அடக்கம். வாழ்ந்த காலம் 72ஆண்டு 11 மாதம் 28 நாள்.
1965, ஏப்ரல் 21 - புதுவை கடற்கரை சார்ந்த பாப்பம்மா கோயில் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவு மண்டபம் புதுவை நகராட்சியினரால் எழுப்பப்பட்டது.
1968 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது சென்னைக் கடற்கரையில் பாவேந்தர் உருவம் நாட்டப் பெறல்.
1970, சனவரி - இரமணி மறைவு.
1971, ஏப்ரல் 29 - பாவேந்தரின் பிறந்த நாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு, 95ஆம் எண் கொண்ட இல்லம் அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிப் பாவலர் நினைவு நூலகம், காட்சிக் கூடம் நடந்து வருகிறது.
1972, ஏப்ரல் 29 - பாவேந்தரின் முழு உருவச் சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.
1979 - கடற்மேற் குமிழிகள் - பாவியத்தின் பிரஞ்சு மொழியாக்கம் வெளியிடப் பெறல்.

நன்றி: புரட்சிப் பாவலரின் "சிரிக்கும் சிந்தனைகள்" நூலிலிருந்து


Monday, April 27, 2009

தள்ளாத வயதிலும் அய்யா.............................




Monday, April 20, 2009

காட்டிக்கொடுக்கும் கருணா...... ஒரு போராளி துரோகியான கதை

முரளீதரன் என்னும் இயற்பெயர் கொண்ட கருணா மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று கிராமத்தில் 1966ஆம் ஆண்டு பிறந்தார். அங்கேயே ஆரம்பக் கல்வி கற்றுப் பின், செயிண்ட் மைக்கல் கல்லூரியில் பயின்ற காலகட்டத்தில், 1983ஆம் ஆண்டு கிழக்கிலங்கையின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பாளராகக் கீர்த்தி அம்மன் செயல்பட்டுவந்தார். அவரிடம் போய்ச் சேர்ந்தார் கருணா. ஒரே ஆண்டில் தன் தனித்திறமை, துணிச்சல் காரணமாக இந்தியாவில் போர்ப் பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் கருணாவின் பெயரும் இடம்பெற்றது.




இந்தியாவிலிருந்து பயிற்சிபெற்றுத் திரும்பியவர்களில் கருணா தனித் திறமைகளோடு செயல்பட்டார். திறமை, விவேகம், போர்த்திறன், விசுவாசம் போன்றவற்றால் விடுதலைப் புலிகளின் கமாண்டோ பிரிவில் சிறப்புத் தேர்ச்சி பெற்று மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குத் தளபதியாகப் பொறுப்பேற்றார். இக்காலத்தில் மேற்கண்ட இரண்டு மாவட்டங்களின் லெப்டினன்ட் கர்னல் கண்ணனுக்கு உதவியாளராக இருந்து முக்கியத் தாக்குதல்களில் ஈடுபட்டார்.

1985 - 1987ஆம் ஆண்டுகளில் இலங்கை அதிரடிப் படையும் ராணுவமும் பல தாக்குதல்களில் தோல்வியைத் தழுவியமைக்குக் கண்ணனும் கருணாவுமே மூல காரணம். கண்ணன் எக்காலத்திலும் கீழே படுத்துப் பதுங்கிப் போர் செய்பவரல்ல. சிங்களப் படைகளை எதிர்கொண்டு முன்னேறிச் செல்லும் வீரம் படைத்தவர் - தன் படைகளுக்குப் பின்னே நின்று போர் புரியாமல் முன்னே சென்று எதிரிகளை அழிக்கும் இவர் சிங்கள ராணுவத்துக்குச் சிம்மசொப்பனமாக இருந்தார். அதில் கருணாவின் பங்கும் அதிகமாக இருந்தது.

இந்த நேரத்தில் கிழக்கிலங்கையில் அதிகமான இளைஞர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வந்துசேர்ந்தார்கள். பிரபாகரன் அங்கே தானாகவே இயங்கிப் போர்புரிய ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் தளபதியாகவும் தலைவராகவும் நியமிக்க எண்ணியபொழுது கண்ணனின் பெயரே முன் இருந்தது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குத் தலைவராகக் கண்ணனின் பெயரை நினைத்திருந்த சமயம் 1990இல் ராணுவத்துக்கெதிரான கடும்போர் மூண்டது. அதில் சிங்கள ராணுவம் மோசமான தோல்வியைத் தழுவியமைக்குக் கருணாவின் செயல்பாடுதான் முக்கியக் காரணம். லெப்டினன்ட் கர்னல் கண்ணன் மட்டக்களப்பு, அம்பாறைத் தளபதியாகவே போர்க்களத்திலிருந்து திரும்புகிறார். இந்நேரத்தில் தானே தளபதியாகவும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குத் தலைவனாகவும் ஆக வேண்டுமென்ற எண்ணம் கருணாவின் மனத்தில் எழுந்தது. தனக்கென்று விசுவாசமானவர்களைத் தேர்ந்தெடுத்தார். உள்சதியும் துரோகமும் உருவான இதற்கு உடன்பட்ட லெப்டினன்ட் ரூபன் என்பவர் கருணாவின் உறவினர் மட்டுமல்ல அவருக்கு மிக நெருக்கமானவரும்கூட.



சிங்களப் படையினரை வெற்றிகொண்டு தலைவராக இருப்பிடம் திரும்பிய லெப்டினன்ட் கர்னல் கண்ணன் ஒரு சிங்கள ராணுவத் தளபதியின் உடலில் அபூர்வமான நவீனத் துப்பாக்கியைப் பார்த்து அதை எடுப்பதற்குக் கீழே குனிந்தபொழுது தலையில் சுடப்பட்டு அங்கேயே இறந்தார். சிங்கள ராணுவம் பல கிலோ மீட்டர் தூரம் பின்தங்கி ஓடிவிட்ட பிறகு கண்ணனை யார் சுட்டிருப்பார்கள்? இந்தக் கேள்வி தலைவர் பிரபாகரனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ராணுவத் தாக்குதலில் தளபதி கண்ணன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பிரபாகரனுக்குக் கருணா அறிவித்தார்.



லெப்டினன்ட் கர்னல் கண்ணனின் இறப்பில் ஏதோ ‘சதி’ நடந்திருக்கிறது என்பதை அறிந்த பிரபாகரன் ரூபனைத் தன்னை வந்து உடனே பார்க்கும்படி உத்தரவிட்டார். ரூபன் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. ரூபனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போராளிகளாலும் மக்களாலும் ‘அம்மான்’ என்னும் சிறப்பு அடைமொழியால் அழைக்கப்பட்ட கருணா இலங்கை ராணுவத்திற்கெதிரான போர்முனைகளில் முதன்மையான போராளியாகப் போற்றப்பட்டார். வீட்டுக்கு ஒருவர் என விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேரக் கருணாவை நம்பியே மக்கள் மனமுவந்து தங்கள் பிள்ளைகளை அனுப்பிவைத்தனர்.

1994 - 95இல் முல்லைத் தீவு, ஆனையிறவு ஆகிய இடங்களில் கடும்போர் மூண்டது. ஒவ்வொரு நாளும் வெற்றிச் செய்திகள் வந்தவண்ணமிருந்தன. சிங்கள ராணுவம் முழுபலத்துடன் போரிட்டும் பல டாங்கிகளையும் கவச வாகனங்களையும் பறிகொடுத்தது. ஆனையிறவின் கி9 பிரதான சாலையில் 2002இல் யாழ்ப்பாணம் செல்லும்பொழுது இப்படியான சில கவச வாகனங்கள் சிதிலமடைந்து கிடந்ததை நேரில் பார்த்திருக்கிறேன். இந்தக் கடும்போரில் கருணாவின் படையும் ஜெயந்தன் என்னும் மற்றொரு தளபதியின் 5000 புலிப் படையும் மிகப் பெரிய வெற்றியை ஈட்டின. இவ்வெற்றிக்குப் பிறகு, பிரபாகரனின் மிக நம்பிக்கைக்குரியவராகக் கருணா உருவானார். தன் உடன் பிறந்த தம்பிபோலவே இவரை நடத்தினார் பிரபாகரன். பிரபாகரன் தங்கியிருக்கும் எந்த இடத்திற்கும் எந்த நேரத்திலும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கருணாவுக்குக் கிட்டியது.

2002இல் ரனில் விக்கிரமசிங்கே - பிரபாகரன் சமாதானப் பேச்சுவார்த்தை தாய்லாந்தில் நடைபெற இருந்தது. மறுநாள் காலை விமானத்தில் புறப்படுவதற்கு முன் புலிகள் தரப்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்பவர்களின் ஆலோசனைக் கூட்டம் கிளிநொச்சியில் பிரபாகரன் தலைமையில் இரவு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அக்கூட்டத்தில் கருணாவும் இருந்தார்.

A9 சாலையைச் சீர்செய்ய ரூபாய் 600 கோடியை உலக வங்கி மூலம் ஒதுக்கியிருந்தது ஸ்ரீலங்கா. இந்தச் சாலையைச் சீர்ப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கவும் நான் கிளிநொச்சிக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. சமாதான காலமான அந்நேரத்தில் யாரும் என்னோடு வர முடியாது என்று சொல்லிவிட்ட பிறகு, நான் தனியாகவே அங்கே சென்றடைந்தேன். போக்குவரத்துப் பிரச்சினைகளைச் சமாளித்துக் கிளிநொச்சியை அடைந்து அன்றே யாழ்ப்பாணம்வரை செல்லத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அன்றுதான் கிளிநொச்சியில் ரகசிய இடமொன்றில் தாய்லாந்து செல்ல வேண்டிய குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் என்னை அங்கே தங்கச்சொல்லிவிட்டார்கள். என் ஆஸ்திரேலிய நண்பர் ஜோய் மகேஸ்வரனும் அந்தத் தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக் குழுவில் இருக்கிறார் என்பதைத் தெரிவித்தனர். அவர் பின்னிரவு முடிந்தால் என்னைச் சந்திக்க வருவதாகச் செய்தியனுப்பினார். அதிகாலை 2:30 மணிக்கு என்னோடு அந்த கி9 சாலை பற்றிப் பேசுவதற்கு உயர் மட்டக்குழு வந்தது. அவர்கள் உலகச் சாலை அமைப்பின் புதிய முறைகளுக்கு 18 ஆண்டுகள் பின்தங்கியிருந்தார்கள். அது அவர்களின் குற்றமல்ல. 18 ஆண்டுகள் போர்ச்சூழலில் அவர்கள் இந்தச் சாலையமைப்பின் புதிய தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தால்தான் ஆச்சரியம். அப்பொழுதுதான் கருணாவை எதேச்சையாகச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.



அந்த மின்னல் வெட்டு நேரத்தில் என் மனத்திற்கு இவர் ‘சரியான ஆளல்ல’ என்று ஏனோ தோன்றியது. இப்படிப்பட்ட கணிப்புகள் பலமுறை சரியாக இருந்திருக்கின்றன. இம்முறையும் என் அனுமானம் தப்பவில்லை. மறுநாள் நான் யாழ்ப்பாணம் புறப்படும் பொழுது கருணா தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக் குழுவில் புலிகள் தரப்பில் ராணுவப் பேச்சாளராகப் பிரபாகரனால் நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்தேன். அதன் பிறகு ஜெனிவா, நார்வே மற்றும் பல இடங்களுக்குக் கருணா, பிரபாகரனின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். இக்காலகட்டத்தில் பிரபாகரனின் மற்றொரு முகம்போலவே கருணா இயங்கினார்.


வெளிநாட்டுப் பேச்சுவார்த்தைகளின்பொழுதே இவருக்கும் சிங்களத் தரப்பு அரசாங்கத்துக்கும் நெருக்கம் ஏற்பட்டது. கொஞ்சங்கொஞ்சமாகக் கருணா அவர்களின் பக்கம் திரும்ப ஆரம்பித்தார். கொழும்பில் ரகசியமாகத் தங்கிய இடங்களில் இவருக்கும் சிங்கள அரசுக்கும் பேரங்கள் நடைபெற்றன. விடுதலை இயக்கத்தை இரண்டாகப் பிரிப்பதே முதல் வேலையாக இவரிடம் தரப்பட்டது. இதற்கு மில்லியன் கணக்கில் பணம் கைமாறியது. இவர் பிற்காலத்தில் லண்டனுக்குச் சென்றதற்கும் இந்தப் பணம் கைமாறியதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ரனில் விக்கிரமசிங்கே ஆட்சியில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செய்யத் அலி ஷாகிர் மௌலானாதான் இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் நடுநிலை நாயகர்.



இந்நேரத்தில் மற்றொரு தரப்பும் இந்தப் ‘பிரிக்கும்’ பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்குவகித்தது. இந்திய உளவுப் படைப்பிரிவின் ‘ரா’தான் அது. கருணா அவர்களின் பக்கம் மிக ரகசியமாக நெருங்கியதைப் பிரபாகரன் அறியாமல் போனதுதான் ஆச்சரியம்.

ஆனையிறவு வெற்றி, கருணாவின் அர்ப்பணிப்பு, வேகம் மற்றும் பிரபாகரனிடம் அவர் காட்டிய மரியாதை இவையெல்லாம் இந்தத் திரைக்குப் பின்னே நடந்துகொண்டிருந்த துரோகத்தை அவர் கண்களுக்குப் புலப்படவிடாமல் செய்துவிட்டன. இத்தனைக்கும் கருணா பற்றிப் புலிகளின் உயர்தரப்புத் தலைவர்கள் சிலர் பிரபாகரனிடம் சொன்னபொழுது அதை நம்ப மறுத்து, பொறாமையால், கருணாவின் செல்வாக்குப் பெருகுவதால் அப்படிச் சொல்கிறார்கள் என்றே அவர் நினைத்தார். ஆனால் அடுத்தடுத்து கருணாவின் நடவடிக்கைகள் வேறுவிதமாக மாறிவருவதை விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் பிரபாகரனுக்குத் தெரியப்படுத்தினார். தன்னை விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு கண்காணிக்கிறது என்பதை உணர்ந்த கருணா மிகவும் உஷாராகி மட்டக்களப்பு உளவுப் பிரிவைக் கைதுசெய்து தனக்கெதிரானவர்களைச் சுட்டுத்தள்ளினார்.


இந்த நேரத்தில் பள்ளிக்கூடங்களில் உயர் வகுப்புப் பரிட்சைகள் நடந்துகொண்டிருந்தன. பிரபாகரன் இதைக் கருத்தில்கொண்டு எந்தக் குழப்பமும் பள்ளி மாணவர்களின் படிப்பைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காகக் கருணாவின் மீதும் அவருடைய சக தோழர்களின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் பொறுமைகாத்தார். 41 நாட்களுக்குப் பிறகு பரிட்சை முடிந்ததும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் பிரபாகரன்.



கருணாவின் தம்பி ‘றெஜி’யைப் படைப் பிரிவுக்கும் நிதிப் பொறுப்பாளராகக் குகனேஷ்வரனையும் தொழிற் பொறுப்பாளராக இப்போதைய கிழக்கிலங்கை முதலமைச்சர் பிள்ளையானையும் கருணா நியமித்தார். மாவட்டப் பொறுப்பாளராகத் தனது நம்பிக்கைக்குரிய தீபன் என்பவரை நியமித்தார்.


இதன் பிறகு ‘மக்கள் விடுதலைப் புலிகள்’ என்னும் கட்சியைத் தொடங்கி அதற்குத் தலைவரானதோடு அதை ஒரு அரசியல் கட்சியாகவும் பதிவுசெய்தார். கருணா தொடர்ந்து இலங்கையில் இருக்க முடியாத சூழலில் லண்டன் புறப்படும்பொழுது, கிழக்கிலங்கையில் தேர்தல் வந்தது. ராஜபக்சேயால் பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். லண்டனிலிருந்து திரும்பியதும் பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் நிர்வாகப் பிரச்சினைகள் தலைதூக்கின. நிதி மோசடி செய்தார் கருணா என்று அறிக்கைவிட்டு ரகு என்பவரைப் பிள்ளையான் கட்சியின் தலைவராக்கினார். கருணா எப்படி இதை ஏற்றுக்கொள்வார்? கருணாவால் ரகு சுட்டுக்கொல்லப்பட்டார்.


காட்டிக்கொடுத்தமைக்குக் கூலியாகப் பணம் மட்டும் கிடைத்தது. பதவி இல்லாமல் கருணாவால் இருக்க முடியவில்லை. கருணாவைத் தனிமைப்படுத்தினால் ஆபத்து என்றுணர்ந்த ராஜபக்சே அவரைப் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து இப்பொழுது அமைச்சர் பதவியும் வழங்கியுள்ளார்.

கருணாவுக்கு ஒரு சகோதரர், மூன்று சகோதரிகள். இதில் சகோதரர் ‘றெஜி’ சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார். சகோதரிகள் மூவரும் கணவர்மார்களுடன் தாய்லாந்தில் அகதிகளாக உள்ளனர். கருணாவின் மனைவி விடுதலைப் புலிகளின் தளபதிகளுள் ஒருவரான சூசை என்பவரின் சகோதரி. அண்மையில் கடற்புலிகளின் தாக்குதலில் ஒரு சூப்பர் பீரங்கிப் படகை இலங்கைக் கடற்படை இழந்ததும் மற்றொன்று கடும் சேதமுற்றதும் சூசையின் தலைமையில்தான்.


கடந்த கால வரலாற்றில் கருணாவுக்குப் பல விஷயங்கள் சாதகமாகவே அமைந்துவிட்டன. உண்மையில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குத் தளபதியாக வந்திருக்க வேண்டியவர் குமரப்பா. கொக்கட்டிச்சோலை என்னும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வந்தவர் குமரப்பா. இவர்தான் அந்த மாவட்டத் தளபதியாக இருந்தார். இவர் மனைவி மருத்துவர். கிட்டு, புலேந்திரன் மற்றும் குமரப்பாவோடு 11 தளபதிகள் இந்தியக் கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்ட கப்பலில் இருந்தார்கள். இந்தியக் கடற்படை புலிகளின் கப்பலைச் சோதனையிட வந்தபொழுது அதனை வெடிவைத்துத் தகர்க்க அனைவரும் மூழ்கி இறந்தனர். குமரப்பாவும் அதில் இருந்தார். இதன் பிறகே கருணாவிற்கு மட்டக்களப்புக்குத் தளபதியாகும் வாய்ப்பு கிடைத்தது.


பிள்ளையான் முதலமைச்சர் பதவி வகிப்பது கருணாவிற்கு ஏகப்பட்ட எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பிள்ளையான் முதலமைச்சர் பதவிக்கு லாயக்கற்றவர் என்றுகூடப் பகிரங்க அறிக்கைவிட்டார். இருவருக்குமான இந்தப் பதவிப் போராட்டத்தைத் தணிக்கவே ராஜபக்சே கருணாவுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். பிள்ளையான் தனது துணை ராணுவக் குழுவைக் கலைத்துவிட்டு ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்துள்ளார். அதுபோலவே தனது 2000 பேர் கொண்ட படையையும் சிங்கள ராணுவத்தோடு இணைத்துவிட்டார் கருணா.



பிரபாகரனின் விடுதலைப் புலிகள் படைக்கும் கருணாவின் விசுவாசப் படைக்கும் நடந்த சண்டைகள் ‘தாயாதி’ச் சண்டைகள். ஆனால் சிங்களப் படையில் இணைந்து கருணாவின் படையில் உள்ளவர்கள் புலிகளுக்கு எதிராக எப்படித் துப்பாக்கி தூக்குவார்கள் என்பதுதான் இப்பொழுதுள்ள மிகப் பெரிய கேள்வி.



கருணாவின் துரோகத் தாவலுக்கு இந்திய ‘ரா’ உளவுப் பிரிவுடன் கூட்டாக வழியமைத்த செய்யது அலி ஷாகிர் மௌலானா இப்பொழுது அமெரிக்கக் குடியுரிமை பெற்று அங்கேயே ஒளிந்து வாழ்கிறார். கருணாவும் பிள்ளையானும் எதிர் எதிர் நிலையில் செயல்படுகிறார்கள். இவர்கள் எங்கே போய் ஒளியப் போகிறார்கள்? கருணாவும் பிள்ளையானும் துரோகத்தால் பெற்ற பணம், பதவி இவர்களைக் காப்பாற்ற உதவுமா? தமிழர்களுக்குச் சிங்கள அரசால் ஏற்பட்ட இன்னல்களைவிடக் கருணா, பிள்ளையான் மூலம் ஏற்பட்டவையே அதிகம். காட்டிக்கொடுப்பதும், கைக்கூலி வாங்குவதும் அதற்குத் தமிழனே காரணமாக இருப்பதும்தான் மிகப் பெரிய துயரம்.

மறைந்த மலேசியக் கவிஞர் கா. பெருமாள் எழுதிய கவிதைதான் எனக்கு இப்பொழுது ஞாபகத்துக்கு வருகிறது.



தமிழனுக்குத் தமிழனே உயிராம் - அந்தத்
தமிழனுக்குத் தமிழனே தூக்குக்கயிறாம்.



நன்றி -- காலச்சுவடு .


Friday, April 17, 2009

புத்தகங்களை நேசிப்போம்

ஒரு வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட அழகான பொருள் ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.’’ஹென்றி வார்ட் பீச்சர் (Decoration of the heart)

தனிமைத் தீவில் ஒரு வருடம் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்’ என்று பதிலளித்தார் ஜவஹர்லால் நேரு. ‘என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று’ என்றார் பெட்ரண்ட் ரஸல். மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ‘கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்’ என்றாராம் தந்தை பெரியார். பெண் விடுதலைக்கான ஒற்றைவரி தீர்வாக ‘என் மவுனம் நான் வாசித்த புத்தகங்களின் சாரத்தால் ஆனது’ என்ற ஹெலன் கெல்லர் தனது வாய் பேச முடியாத மவுனத்தை வர்ணித்தார். ‘வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்று கோரி ஏழு நாள் உண்ணாநோன்பிருந்து வென்றார் 29 வருடங்களாக சிறையிலிருந்த நெல்சன் மண்டேலா.பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே பெரியது. ஒரு கோடியே நாற்பது லட்சம் நூல்கள்! 150 மொழிகளில் புத்தகங்களை லெனின் பிறந்தநாள் பரிசாகப் பெற்றாராம்! குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்ட போது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம். ஊரை விட்டும் இனத்தை விட்டும் முப்பதாண்டு தள்ளி வைக்கப்பட்டு வேறு பெயரில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டபோது பார்த்த வேலை நூலக உதவியாளர் வேலை! ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின். ‘ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில். ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ‘ஒரு நூலகம் கட்டுவேன்’ என்று பதிலளித்தாராம் மகாத்மா. விமானத்தில் போகாமல் பம்பாய்க்கு காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன் என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது என பதிலளித்தாராம் அப்போதைய தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா. துப்பாக்கிகளைவிட பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர் கிங். எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் சில முகவரிகளைக் கொடுத்தபோது... எது நூலகத்திற்கு அருகில் உள்ளது என கேட்டாராம் டாக்டர் அம்பேத்கர். தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் பகத்சிங். புத்தகங்களை நேசிப்போம்... வாசிப்போம். உலகப் புத்தக தின வாழ்த்துக்கள்.

நன்றி - கீற்று

Wednesday, April 01, 2009

சுயமரியாதை என்பதே நம் பெரும்சொத்து!

சென்னை அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் நேற்று (31.3.09) மாலை ஒரு "திருவிழா!" கொள்கை விழா - புத்தம் புதிய தகவல்களை வரலாற்றுக்கு வாரி வழங்கிய காப்பிய விழா!
"முரசொலி அறக்கட்டளை - 2008" ஆம் ஆண்டுக்கான கலைஞர் விருது, முரசொலி மாறன் சிறப்பு விருது, ஒரு லட்ச ரூபாய் பொற்கிழி வழங்கும் விழாவும் வெகுநேர்த் தியாக நடைபெற்றது.

மாலை 4 மணிமுதலே அரங்கத்திற்குள் மக்கள் அமர்ந்த வண்ணமேயிருந்தனர்.
விழா தொடங்கப் படும்போது கூட்டம் அலைமோதியது. அரங்கத்தின் வெளியிலும் மக்கள் கூட்டம்.
கண் பார்வையற்றவர்கள் - ஆனால் அகத்தில் ஒளி நிறைந்த சோதரிகள் பங்கேற்ற இன்னிசை விழா தேன் மாரியாகப் பொழிந்து கொண்டிருந் தது. ஆட்டோ கிராப் திரைப்படப் புகழ் கோம கனின் ராகப்பிரியா குழு வினர், கலைஞர் ஆட்சி யின் சாதனைகள், கொள் கைகள் அடங்கிய பாடல் களைப் பாடி மக்கள் மன் றத்தைக் கிறங்க வைத் தனர்.

சரியாக மாலை 6 மணிக்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் விழா மேடைக்கு வருகை தந் தார்.
முரசொலி அறக்கட் டளையின் தலைவரும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரையாற்றினார். முரசொலி அறக்கட் டளை கடந்த காலத்தில் அளித்த விருதுகள் விவ ரங்களைத் தொகுத்துத் தந்தார்.
தந்தை செல்வாபடத் திறப்பு
ஈழத் தந்தை செல்வா அவர்களின் 112 ஆம் ஆண்டு பிறந்த நாள் என்பதால் முதலாவதாக அவரின் உருவப் படத் தினை முதலமைச்சர் கலைஞர் திறந்து வைத் தார்.
1972 இல் தந்தை செல்வா அவர்கள் தந்தை பெரியார் அவர்களையும் தம்மையும் சந்தித்த விவ ரங்களைப் பசுமையாக நினைவு கூர்ந்தார் முத லமைச்சர்.
ஈழ தமிழர் தம் சோக வரலாற்றினையும் எடுத் துக்கூறி அங்கே அவதி யுறும் நம்மின மக்களுக் காக திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகத் தொடர்ந்து பாடுபட்டு வரும் போர்க்குரல் கொடுத்து வருகிற பெற் றியையும் குறிப்பிட்டுக் கூறினார்.
ஒரு இயக்கம் திரா விடர் இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம் இந்த இரட்டைக் குழல் துப் பாக்கிகள்தான் ஈழத் தமி ழர்களுக்காக அன்றும், இன்றும் விழித்துக் கொண்டிருக்கிறது - பாடு பட்டுக் கொண்டிருக் கிறது என்பதை ஞாபகத் தில் வைத்துக் கொள் ளுங்கள் என்று பசுமரத் தாணிபோல பதிய வைத்தார் .

மக்களை திசை திருப்ப ஈழத் தமிழர்ப் பிரச்சினையைப் பயன் படுத்திக் கொள்ளும் போக்கினைச் சுட்டிக் காட்டிய மானமிகு கலை ஞர் அவர்கள் தமிழர்கள் ஏமாந்துவிடக்கூடாது என்றும் எச்சரித்தார்.
வரலாறு தெரியாதவர் கள் ஈழத் தமிழர்களுக் காக நாம் போராடிய போது, பொது வாழ்வுக் களத்திலே இல்லாதவர் கள் எல்லாம் இன்று எகிறிக் குதிப்பதையும் நாசுக்காகவும் கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத் துவர் இராமதாசு எல் லோரையும் எடுத்தேன் - கவிழ்த்தேன் என்ற போக் கிலே பேசுகிறாரே - கடந்த காலத்தில் அவ ரின் நிலைப்பாடு என்ன?
பா.ம.க.வின் அதி காரப்பூர்வமான கட்சி ஏடாகவிருந்த தினப் புரட்சி (29.6.1989) என்ன எழுதியது?
தமிழகத்தில் மத்திய போலீஸ் மற்றும் புல னாய்வுத் துறையினர் அதி களவில் குவிக்கப்பட்டு இருப்பதால் விடுதலைப் புலி தலைவர்களான கிட்டு, யோகி ஆகியோர் கருணாநிதியின் பாரா ளுமன்ற செயலாளர் எல். கணேசன் வீட்டில் தங்கி யிருப்பதாகக் கூறப்படு கிறது என்று செய்தி வெளியிடவில்லையா?
இதைவிட காட்டிக் கொடுக்கும் எட்டப்பத் தனம் வேறு எதுவாகத் தானிருக்க முடியும்?

இந்த எடுத்துக் காட்டை முதல்வர் கலை ஞர் அவர்கள் விழாவில் கூறவில்லையென்றாலும், இன்றைக்கு இவர்கள் தான் ஈழத் தமிழர்களுக் காகப் பாடுபடுவதாகக் கூறி, மற்றவர்களை மட் டந்தட்டும் போக்கில் பேட்டிகளைக் கொடுக்கி றார்களே - அதற்காகத் தான் இந்த எடுத்துக் காட்டு.
நேற்றைய விழாவில் ஈழத் தந்தை செல்வா அவர்களின் மகன் சந்திர காசன் அவர்களும் கலந்து கொண்டு ஈழத் தமிழர்க ளுக்காக தி.மு.க.வும், அதன் தலைவர் கலைஞர் அவர் களும் தொடர்ந்து ஆதர வுக்கரம் கொடுத்துக் கொண்டிருப்பதையும், இந்த இக்கட்டான கால கட்டத்தில் அந்த உதவி தொடரவேண்டும் என் றும் உருக்கமுடன் கேட் டுக்கொண்டார்.

விருதுகள் பொற்கிழிகள் அளிப்பு
திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலை வர் கி. வீரமணி அவர் களின் சாதனைக் குறிப் பினை தளபதி மு.க. ஸ்டா லின் படித்தார். சிறப் பான தகவல்களை அது உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது.
முதலமைச்சர் கலை ஞர் அவர்கள் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்குப் பொன் னாடை போர்த்தி, கலை ஞர் விருதினை வழங்கி ஒரு லட்ச ரூபாய்க்கான பொற்கிழியையும் காசோலையாக அளித் தார்.
அதுபோலவே - பழம்பெரும் எழுத்தாள ரான சோலை அவர் களுக்கும், புகைப்பட நிபுணர் யோகா அவர் களுக்கும் விருதும், ஒரு லட்ச ரூபாய்க்கான பொற்கிழியும் கலைஞர் அவர்களால் அளிக்கப் பட்டன.

முரசொலி மாறன் சிறப்பு விருது திரைப்பட நடிகர் தியாகு அவர் களுக்கு முதல்வர் கலை ஞர் அவர்களால் அளிக் கப்பட்டது. ரூபாய் ஒரு லட்சத்துக்கான பொற் கிழியும் வழங்கப்பட் டது. இவர்களின் சாத னைக் குறிப்புகளையும் தளபதி மு.க. ஸ்டாலின் படித்தார்.
தமிழர்களில் ஆற்ற லாளர்களை- உயர்த் தப்படவேண்டியவர் களை - உயர்த்தும் இன மானப் பெருவிழா என்று இதனைக் கூற வேண்டும்.
தமிழர் தலைவர் ஏற்புரை
விருது அளிக்கப்பட் டவர்களின் சார்பில் திராவிடர் கழகத் தலை வர் - தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் செறி வாக உரையாற்றினார்.
எடுத்த எடுப்பிலேயே, முரசொலி ஏடு என்பது கலைஞர் அவர்களின் பிள்ளைகளில் மூத்த பிள்ளை என்பதைக் குறிப் பிட்டபோது அரங்கமே எழுந்து கரவொலி எழுப் பியது.

கலைஞர் அவர் களால் கையேடாகத் தொடங்கப்பட்ட முர சொலியின் வயது 67; தந்தை பெரியார் அவர் களின் விடுதலைக்கு வயது 75 என்பதை எடுத் துக்காட்டி, முரசொலி அறக்கட்டளை தமக்கு (விடுதலை ஆசிரியருக்கு) விருது வழங்கும் நாள் - தன் வாழ்நாளில் என் றென்றைக்கும் மறக்க முடியாத நாள் என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.
சாதனைக் குறிப்பு களில் கூறப்பட்ட புகழ் மொழிகள் - அடக்க வுணர்ச்சி காரணமாக தாம் குனிந்து கொண்டி ருந்ததாகத் தமிழர் தலை வர் குறிப்பிட்டார் (பழைய காலத்து மணப் பெண்போல).
சாதனைக் குறிப்பு களைப் படித்த - முர சொலி அறக்கட்டளை யின் தலைவர் மு.க. ஸ்டா லின் அவர்களைப்பற்றி முக்கியமான ஒன்றை, குறிப்பிடத் தவறவில்லை திராவிடர் கழகத் தலை வர்.

மிசா கைதியாக சென்னை மத்திய சிறைச் சாலையில் அடைக்கப் பட்டபோது நடை பெற்ற ஒரு கொடிய நிகழ்வை நினைவுபடுத் தினார்.
ஒன்பதாம் எண் பிளாக் - இரவு ஒன்பது மணி - ரத்தம் சொட்டச் சொட்ட என்மீது ஒரு உருவம் வந்து விழுந்தது. (வஞ்சம் தீர்க்கும் கொடிய மிருகங்களால் தாக்கப் பட்ட நிலையில்) அந்த உருவம் வேறு யாருமல்ல - இங்கே சாதனைக் குறிப்புகளைப் படித் தாரே - எதிர்காலத்தில் மிகவும் நம்பிக்கையோடு எதிர்ப்பார்க்கப்படுபவராக விருக்கிறாரே - அந்தத் தளபதிதான் ரத்தம் சொட் டச் சொட்ட என்மீது தூக்கி எறியப்பட்டவர்தான்.
இன்றைக்கு மாண்பு மிகுவாக அவர் இருக்க லாம். இந்த மாண்புமிகு களுக்குப் பின்னால் தியாக வரலாறு இருக் கிறது என்பதைச் சுட்டிக் காட்டினார் தமிழர் தலை வர்.

இதுவரை ஏட்டில் வெளிவராத புத்தம் புதிய தகவல் ஒன்றை வெளிப்படுத்தி பல்லாயி ரக்கணக்கான பார்வை யாளர்கள் மத்தியிலும், ஏன் பத்திரிகையாளர் கள் மத்தியிலும் ஒரு ஆச் சரியக் குறியை ஏற்படுத் தினார் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.

தி.மு.க.வையும், அ.தி. மு.க.வையும் மீண்டும் ஒன்றிணைக்கும் ஏற்பாடு பற்றிய தகவல் அது.
எழுத்தாளர் சோலை இதோ இங்கே வீற்றிருக் கிறார். சரியான சாட்சியத் தோடுதான் கூறுகிறேன் என்ற பீடிகையோடு ஆரம்பித்தார்.
ஒரு நாள் எழுத்தாளர் சோலை விடுதலை அலு வலகத்துக்கு வந்தார். வந்தவர் சாதாரணமாக வரவில்லை; ஒரு முக்கிய தகவலைச் சுமந்து வந்த தூதுவராக வந்தார்.
முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தங்களை அழைத்து வரச் சொன்னார் என்பதுதான் அந்த அரிய தகவல். அதன்படி ராமாவரம் தோட்டத்துக்கு ஆசிரி யர் வீரமணி சென்றார். தம்மோடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டு பேச்சை ஆரம்பித்தார்.
தி.மு.க.வோடு அ.தி. மு.க. இணையவேண்டும் என்று விரும்புகிறேன் என்ற கருத்தை வெளி யிட்டார். அந்தத் தக வலை கலைஞர் அவர் களிடத்தில் தொலைப் பேசிமூலம் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி அவர்கள் தெரிவித்தார்.
கலைஞர் அவர்கள் அப்பொழுது வைத்த நிபந்தனைகள் கட்சியின் பெயர் - அண்ணாவால் உண்டாக்கப்பட்ட அந்த தி.மு.க. என்றேயிருக்க வேண்டும். கொடியில் அண்ணாவின் உருவம் இருப்பதால் இன்றைய அ.தி.மு.க. கொடி அப் படியே இருக்கவேண் டும். முதலமைச்சராக எம்.ஜி.ஆர். அவர்களே தொடரட்டும்.
திராவிட இயக்கப் பின்னணி அய்யா, அண்ணா ஆகியோர் களின் சிந்தனைகள், இலட்சியங்கள் என்ற பார்வையில், அதன் தன்மை கட்டிக் காக்கப்பட வேண்டும் என்ற அவசி யத்தில் நான் கட்சியின் தலைவராகயிருப்பேன்; திராவிட இயக்க சமூக நீதிக் கொள்கையின்படி வருமான வரம்பு ஆணை ரத்து செய்யப்படவேண் டும் என்று கலைஞர் அவர்கள் கூறினார்.

அப்பொழுது ஒரு கருத்தையும் கலைஞர் அவர்கள் கூறினார்கள். இதற்கு முன்பும் இத்த கைய முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன; பலர் முயன்றார்கள். கடைசி யில் அவர்கள் ஏமாற்றப் பட்டனர். நீங்கள் எந்தப் பட்டியலில் இருக்கிறீர் கள் என்று எனக்குத் தெரியாது என்று கலை ஞர் அவர்கள் கூறியதை யும் கூறினார் தமிழர் தலைவர்.

இந்தத் தகவல்களை ஒவ்வொன்றாக அவர் எடுத்துச் சொல்லிக் கொண்டு வந்தபோது, அடுத்து என்ன சொல் லப் போகிறார்? அடுத்து என்ன சொல்லப் போகி றார்? என்ற ஆவல் ஏதோ மர்ம நாவலைப் படிப்பதுபோல பார்வை யாளர்கள் ஆர்வத்தின் பிடியிலே சிக்கிக் கொண் டனர் (இதன் தொடர்ச் சியாக நிறைவுரையில் மேலும் பல தகவல் களைக் கூறினார் கலை ஞர்).
விருது பெற்ற தமிழர் தலைவர் அவர்கள் திரு வாரூரில் கலைஞர் அவர் கள் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து 1945 (மே 1) இல் நடத்தப்பட்ட தென் மண்டலத் திரா விட மாணவர் மாநாட் டுக்கு தாம் அழைக்கப் பட்டதையும், புகை வண்டி நிலையத்திலி ருந்து மேள தாளங்களு டன் அழைத்துச் செல் லப்பட்டதையும் (மற்ற தலைவர்களோடு) மாநாட்டில் நாகூர் அனிபா அவர்களோடு தாமும் பாட்டுப் பாடிய தையும் போர்க்களம் நோக்கி என்ற தலைப் பில் மாநாட்டில் பேசி தையும் தமிழர் தலைவர் - குடிஅரசு இதழிலிருந்து (12.5.1945) மலரும் நினை வுகளாக எடுத்துக்காட்டி னார்.
85 அகவை நிறைந்த கலைஞர் அவர்களுக்கும் 75 அகவை நிறைந்து விட்ட மானமிகு வீர மணி அவர்களுக்கும் உள்ள உறவு வைர விழா வையும் (60 ஆண்டு) கடந்தது என்பது குறிப் பிடத்தக்கதாகும்.
மற்றொரு முக்கிய அறிவிப்பினை ஏற்புரை யில் வெளியிட்டார்; தனக்கு அளிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு அளிக்கப்படும்.

இதழியல் துறை ஒன்று அப்பல்கலைக் கழகத்தில் தொடங்கப் பட்டு அதில் மாணவர் கள் தயாரிக்கப்படுவார் கள். இந்தத் துறையில் தமிழர்கள் பின்தங்கிய நிலையில்தான் உள்ளனர். இந்த நிதி இந்தத் துறைக் குப் பயன்படுத்தப்படும். இந்த முயற்சிக்கான புர வலராக இதழியில் துறை யில் மூத்தவரான மான மிகு கலைஞர் அவர்களே இருப்பார்கள் என்று தமிழர் தலைவர் அறி வித்தபோது பலத்த கர வொலிமூலம் வரவேற்பு இருந்தது.
இந்தத் துறையில் ஆனந்தவிகடன்களும், இந்துவும்தான் ஆதிக் கம் செலுத்தி வருகின் றன. இந்த நிலையில் தமி ழர் தலைவர் அறிவித்தது காலத்தாற் மேற்கொள் ளப்பட்ட அரிய முயற்சி என்று தமிழின எழுத்தா ளர்கள், இதழியலாளர் களின் கருத்தாகவே இருக்கிறது.

இனமானப் பேராசிரியர் அன்பழகனார்
மாணவர் பருவந் தொட்டு வீரமணி அவர் கள் இந்த இயக்கத்தில் வீறுநடை போட்டு வரு பவர். பெரியார் கொள் கைகளைப் பரப்புவதில் உறுதியாகவும் இருக்கக் கூடியவர். அந்தக் கொள் கைகளைப் பரப்புவது தான் தனது ஒரே கடமை என்பதிலே உறுதியாக இருக்கக் கூடியவர்.
திராவிட முன்னேற் றக் கழகம் அரசியலில் இருந்து தன் பணிகளைச் செய்துகொண்டிருந்தாலும் அதற்கு அடிப்படை யான சமூகப் பணி ஆற் றுவதற்குத் திராவிடர் கழகத்தின் பணி அவசிய மாகிறது என்றும், சமூக அரசியல் அடிப்படைத் தளத்தை அருமையாகச் சுட்டிக்காட்டினார்.
மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர்
தம் உடல்நலம் குன்றி யிருப்பதால், சக்கர நாற் காலியில் வந்தாலும் எனக்கு மாமருந்து என் பது நீங்கள்தான்; மாலை நேரப் பொதுக்கூட்டங் கள்தான் - மக்களைச் சந்திப்பதுதான் என்று சொன்னாரே முதல்வர் கலைஞர் - அருமை, அருமை, இது அருமை யிலும் அருமையாகும்.
தமது தலைவர் தந்தை பெரியார் அவர்களிடம் கற்றுக்கொண்ட ஈரோட்டு மூலிகையின் இரகசியம் இது!

தமிழர் தலைவரைப் பற்றிக் கூறும்போது திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தர் என்று அறிஞர் அண்ணா அவர்களால் வீரமணி சிறுவனாகியிருந்தபோதே அடையாளம் காட்டப் பட்டவர் என்பதை நினைவுபடுத்தினார்.

ஈரோட்டுக் குருகுலத் தில் மாணவர் சுற்றுப் பயணத்தில் வீரமணி யோடு கலந்துகொண்ட தையெல்லாம் மகிழ்ச்சி யோடு நினைவு கூர்ந்தார்.
வீரமணி என்றால் இரட்டைக் குழல் துப் பாக்கியில் ஒரு குழல் அது. இன்னொரு குழல் தி.மு.க.; வீரமணியின் ஆரம்ப கால ஆரோக்கியமான பகுத் தறிவும் இன் றைக்கு அவர் அந்தப் பகுத்தறிவைப் பரப்புகிற எடுத்துக் கொள்கிற முயற்சிகளும், பெரியார் அவர்கள் விட்டுச் சென்றிருக்கிற அந்தப் பெரும் சொத்தும் - வீடு வாசல் அல்ல, இயந்திரங் கள் அல்ல, பத்திரிகைகள் அல்ல, சுயமரியாதை என் கிற அந்தப் பெரும் சொத்தை இன்றைக்குக் காப்பாற்றி வருகிற ஒரு பெருமகனாக வீரமணி விளங்குகிறார். எனவே, அவருக்கு விருது அளிப் பதில் நாங்கள் பெருமை அடைகிறோம். முர சொலி அறக்கட்டளை பெருமை அடைகிறது என்று நறுக் குத் தெறித்த சொல் மணி களால் அடிப்படைச் சித் தாந்தத்தின் சித்திரத்தை வரைந்து காட்டினார் வாழும் திராவிட இயக்க மூத்த தலைவரான கலை ஞர் அவர்கள்.
பழம்பெரும் எழுத் தாளர் சோலை, ஒளிப் பட நிபுணர் யோகா, திரைப்பட நடிகர் தியாகு ஆகியோர் குறித்தும் சிறப்பான பாராட்டுகள் விழாவில் வழங்கப்பட் டன.

ஏதோ ஒரு பாராட்டு விழா - விருது வழங்கும் விழா, பொற்கிழி அளிக் கும் விழா என்ற அளவில் இல்லாமல், ஒரு இன மான திருவிழாவாகவும் பகுத்தறிவுச் சங்கநாதம் ஒலிக்கும் அரங்கமாக வும், திராவிட இயக்கச் சித்தாந்தத்தின் இலட் சியச் சுடரை ஏந்தும் எழுச்சி விழாவாகவும் தமிழர்களை அடையா ளம் கண்டு தம் தோளில் தூக்கிக் காட்டி தமிழர் தம் ஆற்றலை அறிவிப் பது - பாராட்டுவது - ஊக்குவிப்பது தமிழர்தம் கடமை என்பதை தமி ழர்களுக்கு உணர்த்தும் உன்னத விழாவாக இவ் விழா அமைந்திருந்தது என்றே கூறவேண்டும்.

தமிழா இன உணர்வு கொள்! தமிழா தமிழனாக இரு!! என்ற இரு வரி வெளிச்சத்தைத் தமிழர்களுக்கு தந்தை பெரி யார் வழியில், விழியில் தந்தவர் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள்.
அவருக்குப் பாராட்டு என்பது இந்தக் கொள்கைகளுக்குப் பாராட்டு என்றுதானே பொருள்!
நன்றி : விடுதலை


Tamil 10 top sites [www.tamil10 .com ]