Friday, May 21, 2010
பார்ப்பனியத்துக்கு வால் பிடிப்பவர்களே..உங்களை விட நன்றி கெட்டவர் இருக்கமுடியாது
தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கங்களுக்கு எதிராக_ திராவிடர் இயக்கத்தால் பலன் பெற்றோர், மரியாதை பெற்றோர், விளம்பரம் பெற்றோர் மண்ணை வாரித் தூற்ற ஆரம்பித்துள்ளனர்.
இது ஒன்றும் புதிதல்ல. சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்பட்ட ம.பொ.சி.யும், அவரைச் சேர்ந்த-வர்களும் திராவிட எதிர்ப்பு மாநாடுகளைப் பல்வேறு இடங்களில் நடத்தியதுண்டு.
திராவிடர் இயக்கத்தினால் பகுத்தறிவும், தன்மான உணர்ச்சியும், வகுப்புரிமையும் பெற்ற தமிழர்கள் ம.பொ.சி.யையும், அவரைச் சேர்ந்த கூட்டத்தாரையும் புறக்கணித்தார்கள். கடைசியில் திராவிட இயக்கத்தின் ஆதரவினால்தான் ம.பொ.சி.க்கு மேலவைத் தலைவர் என்ற பதவியும் கிடைத்தது என்பது வரலாறு நினைவூட்டும் பாடமாகும்.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் தமிழர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கிடைத்து மேன்மை நிலை பெற்று வருவதற்கும், பெயருக்குப் பின்னால் ஜாதி வாலை நறுக்கிக் கொண்டதற்கும், தமிழ் செம்-மொழி என்ற நிலையை எய்தியதற்கும், தை முதல்-நாள்-தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று சட்ட ரீதியாக ஆக்கப்பட்டதற்கும், சென்னை மாநிலத்-திற்குத் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் ஏற்பட்டதற்கும், சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடி ஆன-தற்கும் காரணமே திராவிடர் இயக்கம்தான் என்பது சிறுபிள்ளைகள்கூட அறிந்திட்ட உண்மையாகும்.
இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு, திராவிட இயக்கத்தால் தமிழர்கள் உரிமைகளை இழந்-தார்கள் என்று நாக்கூசாமல் ஒரு சிலர் பேசுகின்றனர் என்றால் இதைவிட நன்றிகெட்டதனமும், பார்ப்பனியத்துக்கு வால் பிடிக்கும் விபீஷணத்தனமும்_ வேறு ஒன்றும் இருக்கவே முடியாது.
திராவிடர் என்ற பெயர் திராவிட இயக்கம் சூட்டிய புதிய பெயர் அல்ல. அது வரலாற்று ரீதியானதாகும். சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர் நாகரிகம் என்று கண்டுபிடித்ததற்குக்கூட காரணம் திராவிடர் இயக்கம் தானே?
திராவிடர் கழகம் என்று தந்தை பெரியார் பெயர் சூட்டிக் கொண்டதால் திராவிடர் இனத்தைச் சேர்ந்த மலையாளிகளின் ஆதிக்கத்தை தந்தை பெரியார் கண்டிக்கவில்லையா?
திருவெறும்பூரில் பெல் நிறுவனம் தொடங்கப்பட்ட போதும் நெய்வேலியில் நிலக்கரி ஆலை உருவாக்கப்பட்ட போதும், பணிகளில் மலையாளிகளின் ஆதிக்கம் தென்பட்டபோது பொதுக்கூட்டம் போட்டு கண்டனம்_- எதிர்ப்புத் தெரிவித்தது தந்தை பெரியார் அல்லவா? திராவிடர் கழகம் அல்லவா?
தமிழ்நாடு, ஆந்திரா, மலையாளம் உள்ளிட்ட மாநிலங்களை இணைத்து தெட்சிணப் பிரதேசம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கும் திட்டம் கருவுற்றபோது, அதனைக் கண்டித்து புயல்குரல் எழுப்பியவர் திராவிடர் கழகத் தலைவர் தந்தை பெரியார் அல்லவா!
அதற்கான ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றபோது, அதனைக் கண்டித்து காமராசருக்கு தந்தி கொடுத்தவர் தந்தை பெரியார் ஆயிற்றே!
மொழிவாரி மாநிலம் உருவாக்கப்பட்ட போது சென்னை எங்களுக்கே என்று ஆந்திரர்கள் குரல் கொடுத்த போது தந்தை பெரியார் கடுமையாக எதிர்க்க-வில்லையா?
24.1.1955 நாளிட்ட விடுதலை ஏட்டில் தந்தை பெரியர் வெளியிட்ட அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளாரே!
இப்பொழுது நான் மந்திரிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துக் கொள்ள வேண்டியவனாய் இருக்கிறேன். அதாவது தமிழ்நாட்டில் பாமர மக்கள் மொழியாகிய தமிழ் மொழியை அரசியல், சமுதாய இயல் காரியங்களில் அரசாங்கம் சிறிதும் இலட்சியம் செய்வதில்லை. இது தவிர இந்தியை நுழைத்துப் பள்ளிக்-கூடங்களிலும், பரீட்சைகளுக்கும் பாடமாக ஏற்பாடு செய்து, படிக்கும் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் தொல்-லைகள் ஒருபுறம் இருக்க, உத்தியோகத் தகுதியைக் கொண்டு வந்து புகுத்திப் பெரும்பாலான தமிழ் மக்களை உத்தியோகத் தகுதியற்றவர்களாக ஆக்குவது மற்றொரு புறமிருக்க, இவையெல்லாம் போதாது என்று கருதியோ, என்னமோ, தமிழ் எழுதப்படிக்க, பேசத் தெரியாத மலை-யாளிகளையும், கன்னடியர் (மங்களூர்க்காரர்)-களையும் தமிழ்நாட்டிலே மாகாணத் தலைமை உத்தியோகம், ஜில்லா தலைமை உத்தியோகம் மற்றும் கெஜட் பதிவு அதிகாரிகள், கமிஷனர்கள் முதலிய உத்தியோகங்களில் நியமிப்பது என்பது சர்வ சாதாரண காரியமாக இருந்து வருகிறது. ஜனநாயக நாடு, சுதந்திர நாடு, மக்கள் ஆட்சி என்கின்ற அலங்காரப் பெயர்-களைச் சொல்லிக்கொண்டு, நடைபெறுகிற ஆட்சியில், 100_க்கு 80 பேர்களுக்கு மேற்பட்டுக் கல்வியறிவில்லாத பாமர மக்கள் நிறைந்திருக்கும் நாடு என்பதைச் சிறிதும் உணராமல், மேற்கண்ட மாதிரியான நாட்டு மொழி தெரியாத அன்னிய மொழியாளர்களை அதிகாரிகளாக நியமிப்பதென்றால் குடிமக்கள் அதிகாரிகளிடம் எப்படிப் பேச முடியும்?
என்ற வினாவைத் தொடுத்தவர் தந்தை பெரியார்தானே!
திராவிடர் இயக்கம் என்பதாலேயே கன்னடர், மலையாளிகளின் ஆதிக்கத்தை தந்தை பெரியார் எதிர்க்கத்தானே செய்தார்?
உண்மை இவ்வாறிருக்க திராவிட இயக்கத்தால் நாம் வீழ்ந்தோம் என்பது பேச்சல்ல_- பிதற்றலே!
---- நன்றி விடுதலை (21.05.2010)
இது ஒன்றும் புதிதல்ல. சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்பட்ட ம.பொ.சி.யும், அவரைச் சேர்ந்த-வர்களும் திராவிட எதிர்ப்பு மாநாடுகளைப் பல்வேறு இடங்களில் நடத்தியதுண்டு.
திராவிடர் இயக்கத்தினால் பகுத்தறிவும், தன்மான உணர்ச்சியும், வகுப்புரிமையும் பெற்ற தமிழர்கள் ம.பொ.சி.யையும், அவரைச் சேர்ந்த கூட்டத்தாரையும் புறக்கணித்தார்கள். கடைசியில் திராவிட இயக்கத்தின் ஆதரவினால்தான் ம.பொ.சி.க்கு மேலவைத் தலைவர் என்ற பதவியும் கிடைத்தது என்பது வரலாறு நினைவூட்டும் பாடமாகும்.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் தமிழர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கிடைத்து மேன்மை நிலை பெற்று வருவதற்கும், பெயருக்குப் பின்னால் ஜாதி வாலை நறுக்கிக் கொண்டதற்கும், தமிழ் செம்-மொழி என்ற நிலையை எய்தியதற்கும், தை முதல்-நாள்-தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று சட்ட ரீதியாக ஆக்கப்பட்டதற்கும், சென்னை மாநிலத்-திற்குத் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் ஏற்பட்டதற்கும், சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடி ஆன-தற்கும் காரணமே திராவிடர் இயக்கம்தான் என்பது சிறுபிள்ளைகள்கூட அறிந்திட்ட உண்மையாகும்.
இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு, திராவிட இயக்கத்தால் தமிழர்கள் உரிமைகளை இழந்-தார்கள் என்று நாக்கூசாமல் ஒரு சிலர் பேசுகின்றனர் என்றால் இதைவிட நன்றிகெட்டதனமும், பார்ப்பனியத்துக்கு வால் பிடிக்கும் விபீஷணத்தனமும்_ வேறு ஒன்றும் இருக்கவே முடியாது.
திராவிடர் என்ற பெயர் திராவிட இயக்கம் சூட்டிய புதிய பெயர் அல்ல. அது வரலாற்று ரீதியானதாகும். சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர் நாகரிகம் என்று கண்டுபிடித்ததற்குக்கூட காரணம் திராவிடர் இயக்கம் தானே?
திராவிடர் கழகம் என்று தந்தை பெரியார் பெயர் சூட்டிக் கொண்டதால் திராவிடர் இனத்தைச் சேர்ந்த மலையாளிகளின் ஆதிக்கத்தை தந்தை பெரியார் கண்டிக்கவில்லையா?
திருவெறும்பூரில் பெல் நிறுவனம் தொடங்கப்பட்ட போதும் நெய்வேலியில் நிலக்கரி ஆலை உருவாக்கப்பட்ட போதும், பணிகளில் மலையாளிகளின் ஆதிக்கம் தென்பட்டபோது பொதுக்கூட்டம் போட்டு கண்டனம்_- எதிர்ப்புத் தெரிவித்தது தந்தை பெரியார் அல்லவா? திராவிடர் கழகம் அல்லவா?
தமிழ்நாடு, ஆந்திரா, மலையாளம் உள்ளிட்ட மாநிலங்களை இணைத்து தெட்சிணப் பிரதேசம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கும் திட்டம் கருவுற்றபோது, அதனைக் கண்டித்து புயல்குரல் எழுப்பியவர் திராவிடர் கழகத் தலைவர் தந்தை பெரியார் அல்லவா!
அதற்கான ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றபோது, அதனைக் கண்டித்து காமராசருக்கு தந்தி கொடுத்தவர் தந்தை பெரியார் ஆயிற்றே!
மொழிவாரி மாநிலம் உருவாக்கப்பட்ட போது சென்னை எங்களுக்கே என்று ஆந்திரர்கள் குரல் கொடுத்த போது தந்தை பெரியார் கடுமையாக எதிர்க்க-வில்லையா?
24.1.1955 நாளிட்ட விடுதலை ஏட்டில் தந்தை பெரியர் வெளியிட்ட அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளாரே!
இப்பொழுது நான் மந்திரிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துக் கொள்ள வேண்டியவனாய் இருக்கிறேன். அதாவது தமிழ்நாட்டில் பாமர மக்கள் மொழியாகிய தமிழ் மொழியை அரசியல், சமுதாய இயல் காரியங்களில் அரசாங்கம் சிறிதும் இலட்சியம் செய்வதில்லை. இது தவிர இந்தியை நுழைத்துப் பள்ளிக்-கூடங்களிலும், பரீட்சைகளுக்கும் பாடமாக ஏற்பாடு செய்து, படிக்கும் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் தொல்-லைகள் ஒருபுறம் இருக்க, உத்தியோகத் தகுதியைக் கொண்டு வந்து புகுத்திப் பெரும்பாலான தமிழ் மக்களை உத்தியோகத் தகுதியற்றவர்களாக ஆக்குவது மற்றொரு புறமிருக்க, இவையெல்லாம் போதாது என்று கருதியோ, என்னமோ, தமிழ் எழுதப்படிக்க, பேசத் தெரியாத மலை-யாளிகளையும், கன்னடியர் (மங்களூர்க்காரர்)-களையும் தமிழ்நாட்டிலே மாகாணத் தலைமை உத்தியோகம், ஜில்லா தலைமை உத்தியோகம் மற்றும் கெஜட் பதிவு அதிகாரிகள், கமிஷனர்கள் முதலிய உத்தியோகங்களில் நியமிப்பது என்பது சர்வ சாதாரண காரியமாக இருந்து வருகிறது. ஜனநாயக நாடு, சுதந்திர நாடு, மக்கள் ஆட்சி என்கின்ற அலங்காரப் பெயர்-களைச் சொல்லிக்கொண்டு, நடைபெறுகிற ஆட்சியில், 100_க்கு 80 பேர்களுக்கு மேற்பட்டுக் கல்வியறிவில்லாத பாமர மக்கள் நிறைந்திருக்கும் நாடு என்பதைச் சிறிதும் உணராமல், மேற்கண்ட மாதிரியான நாட்டு மொழி தெரியாத அன்னிய மொழியாளர்களை அதிகாரிகளாக நியமிப்பதென்றால் குடிமக்கள் அதிகாரிகளிடம் எப்படிப் பேச முடியும்?
என்ற வினாவைத் தொடுத்தவர் தந்தை பெரியார்தானே!
திராவிடர் இயக்கம் என்பதாலேயே கன்னடர், மலையாளிகளின் ஆதிக்கத்தை தந்தை பெரியார் எதிர்க்கத்தானே செய்தார்?
உண்மை இவ்வாறிருக்க திராவிட இயக்கத்தால் நாம் வீழ்ந்தோம் என்பது பேச்சல்ல_- பிதற்றலே!
---- நன்றி விடுதலை (21.05.2010)
Thursday, May 20, 2010
சிறையில் இருக்கும் பார்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்கள் என்று நீர் நினைக்கிறீர்?
ஒடுக்கப்பட்ட மக்களின் தலை நாயகரும், பவுத்த நெறி பரப்புவதில்
தனிமுத்-திரை பொறித்தவருமான அயோத்திதாச பண்டிதரின் பிறந்த பெருமைக்குரிய
நாள் இந்நாள் (20.5.1845).
சென்னை_ இராயப்-பேட்டை சாக்கிய பவுத்த சங்கத் தலைவராக இருந்து அரும்பணி ஆற்றியவர். 1907 ஆம் ஆண்டில் ‘‘தமிழ்’’ என்ற வார இதழை நடத்திய பெருமையும் அவருக்கு உண்டு.
பார்ப்பன வேதாந்த விவரம், நந்தன் சரித்திர விளக்கம், நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை, திருவள்-ளுவ நாயனார் பறைச்சிக்-கும், பார்ப்பானுக்கும் பிறந்-தார் என்னும் பொய்க்கதை விவரம் முதலிய நூல்களை எழுதிய சிந்தனையாளர் இவர்.
தோழர் ஒளிச்செங்கோ (கண்கொடுத்தவனிதம்) இவர் குறித்து ‘விடுதலை’ தந்தை பெரியார் மலரில் (1967) தெரிவித்த தகவலும், கருத்-தும் இக்கால இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டி-யவை.
1892 இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் திரு.சிவநாமசாஸ்திரி தலை-மையில் நடந்தது. கூட்டத்-தில் அவர் பேசும்போது, ‘‘வள்-ளுவர் பார்ப்பன விந்-துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடி-னார்;
‘சுக்கல_-சுரோனிதம்’ கலப்பறியாது’’ என்று குறிப்-பிட்ட போது, அக்கூட்டத்-தில் இருந்த அயோத்திதாச பண்டிதர் எழுந்து, நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால் நான் சில கேள்விகள் கேட்கவேண்-டும் என்றார்.
அதற்கு சிவநாமசாஸ்திரி சரி, கேளும் என்றார்.
‘‘நமது நாட்டில் தீண்-டாதவர்கள் என்று இழிவு-படுத்தப்படும் பறையர்கள் என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணை-யால் எம்.ஏ., பி.ஏ., படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக்கி-றார்-களே, அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்-கள் என்று எண்ணுகிறீர்?’’ என்று கேட்டார் அயோத்தி-தாசர். அதற்கு சிவநாம சாஸ்-திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்றுகொண்டிருந்தார்.
‘‘தொடர்ந்து, பெருங்குற்-றங்களைச் செய்து சிறைச்-சாலைகளில் அடைபட்டி-ருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்-கள் என்று நீர் நினைக்கிறீர்?’’ என்று அடுத்து வினாக்-களைத் தொடுத்தார்.
திருதிருவென்று விழித்-தார் சாஸ்திரிவாள். ஏன் பதில் சொல்லாமல் நிற்கிறீர்? சொல்லும் என்று சினந்து கேட்டுக் கொண்டிருந்த-போது கூட்டத்தில் இருந்த ஆனர-பிள் திரு.பி. அரங்கையா நாயுடுவும், திரு.எம்.வீரராக-வாச்சாரியாரும் அயோத்தி தாசரை அமைதிப்படுத்தி-னர். கூட்டத்தில் இருந்தவர்களும் சிவநாம சாஸ்திரியை இகழ்ந்து பேச ஆரம்பித்து-விட்டனர். சாஸ்திரிவாள் நைசாக உட்கார்ந்து, சிறிது நேரத்தில் நடையைக் கட்டிவிட்டார்.
அதுமட்டுமல்ல_ - இன்-றும் பார்ப்பனர்கள் பெங்-களூருவில் திருவள்ளுவர் சிலையைத் திறந்தால் மாதம் மும்மாரி பொழியுமா என்று கேட்கும் மனப்பான்மை-யில்தான் உள்ளனர்.
இன்றைக்கு 110 ஆண்டு-களுக்கு முன் தமிழினத் தன்-மான உணர்வோடு உஞ்ச-விருத்திக் கூட்டத்தை உதைக்காமல் உதைத்த அயோத்தி தாசரை நினைவு கூர்வோம்!
-விடுதலை (20.05.2010) மயிலாடன்
சென்னை_ இராயப்-பேட்டை சாக்கிய பவுத்த சங்கத் தலைவராக இருந்து அரும்பணி ஆற்றியவர். 1907 ஆம் ஆண்டில் ‘‘தமிழ்’’ என்ற வார இதழை நடத்திய பெருமையும் அவருக்கு உண்டு.
பார்ப்பன வேதாந்த விவரம், நந்தன் சரித்திர விளக்கம், நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை, திருவள்-ளுவ நாயனார் பறைச்சிக்-கும், பார்ப்பானுக்கும் பிறந்-தார் என்னும் பொய்க்கதை விவரம் முதலிய நூல்களை எழுதிய சிந்தனையாளர் இவர்.
தோழர் ஒளிச்செங்கோ (கண்கொடுத்தவனிதம்) இவர் குறித்து ‘விடுதலை’ தந்தை பெரியார் மலரில் (1967) தெரிவித்த தகவலும், கருத்-தும் இக்கால இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டி-யவை.
1892 இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் திரு.சிவநாமசாஸ்திரி தலை-மையில் நடந்தது. கூட்டத்-தில் அவர் பேசும்போது, ‘‘வள்-ளுவர் பார்ப்பன விந்-துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடி-னார்;
‘சுக்கல_-சுரோனிதம்’ கலப்பறியாது’’ என்று குறிப்-பிட்ட போது, அக்கூட்டத்-தில் இருந்த அயோத்திதாச பண்டிதர் எழுந்து, நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால் நான் சில கேள்விகள் கேட்கவேண்-டும் என்றார்.
அதற்கு சிவநாமசாஸ்திரி சரி, கேளும் என்றார்.
‘‘நமது நாட்டில் தீண்-டாதவர்கள் என்று இழிவு-படுத்தப்படும் பறையர்கள் என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணை-யால் எம்.ஏ., பி.ஏ., படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக்கி-றார்-களே, அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்-கள் என்று எண்ணுகிறீர்?’’ என்று கேட்டார் அயோத்தி-தாசர். அதற்கு சிவநாம சாஸ்-திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்றுகொண்டிருந்தார்.
‘‘தொடர்ந்து, பெருங்குற்-றங்களைச் செய்து சிறைச்-சாலைகளில் அடைபட்டி-ருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்-கள் என்று நீர் நினைக்கிறீர்?’’ என்று அடுத்து வினாக்-களைத் தொடுத்தார்.
திருதிருவென்று விழித்-தார் சாஸ்திரிவாள். ஏன் பதில் சொல்லாமல் நிற்கிறீர்? சொல்லும் என்று சினந்து கேட்டுக் கொண்டிருந்த-போது கூட்டத்தில் இருந்த ஆனர-பிள் திரு.பி. அரங்கையா நாயுடுவும், திரு.எம்.வீரராக-வாச்சாரியாரும் அயோத்தி தாசரை அமைதிப்படுத்தி-னர். கூட்டத்தில் இருந்தவர்களும் சிவநாம சாஸ்திரியை இகழ்ந்து பேச ஆரம்பித்து-விட்டனர். சாஸ்திரிவாள் நைசாக உட்கார்ந்து, சிறிது நேரத்தில் நடையைக் கட்டிவிட்டார்.
அதுமட்டுமல்ல_ - இன்-றும் பார்ப்பனர்கள் பெங்-களூருவில் திருவள்ளுவர் சிலையைத் திறந்தால் மாதம் மும்மாரி பொழியுமா என்று கேட்கும் மனப்பான்மை-யில்தான் உள்ளனர்.
இன்றைக்கு 110 ஆண்டு-களுக்கு முன் தமிழினத் தன்-மான உணர்வோடு உஞ்ச-விருத்திக் கூட்டத்தை உதைக்காமல் உதைத்த அயோத்தி தாசரை நினைவு கூர்வோம்!
-விடுதலை (20.05.2010) மயிலாடன்
Wednesday, May 19, 2010
தேசிய கீதத்திலிருந்து ‘திராவிடம்’ என்ற சொல்லை நீக்கமுடியுமா?
வங்கக் கவிஞர் இரவீந்-திரநாத் தாகூரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாள் நாடு தழுவிய
அளவில் கொண்-டாடப்படுகிறது.
அவர் படைப்புக்காக நோபல் பரிசு பெற்றவர்; அவர் எழுதிய ஜன கன மன பாடல்தான் இந்தியா-வின் தேசியப் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் தேசிய கீத-மாகக் கொண்டு வரப்பட-வேண்டும் என்ற கருத்து வந்தபோது, அதனைக் கடுமையாக எதிர்த்தவர்கள் எம்.என். ராய், தாகூர் போன்றவர்கள் ஆவார்கள். அதன் மதவெறி நாற்றம் அவர்களை அவ்வாறு செயல்படத் தூண்டியது.
ஜன கன மன பாடலில் இந்தியத் துணைக் கண்டத்-தில் உள்ள பன்மொழி நாடு-களையெல்லாம் தவறாமல் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஒரு தகவலை இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
திருவனந்தபுரத்தில் திரா-விட மொழியியல் ஆய்வு மய்யம் ஒன்றை நடத்தி வந்தார். அவரின் படைப்பு-களுள் விழுமியது ‘திரவி-டியன் என்சைக்ளோபீடியா’ என்பதாகும்.
அன்றைய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோஷி-யைச் (பி.ஜே.பி.) சந்தித்து அந்த நூலை அன்பளிப்பாக வழங்கினார் வி.அய். சுப்பிரமணியம். நூலைப் பார்த்த மாத்திரத்திலேயே அமைச்சரான ஜோஷி பார்ப்பனர், ‘திரவிடியன்’ என்ற சொல்லை நீக்கிவிட-லாமே என்று கூறினாராம். சற்றும் தாமதியாமல் அறிஞர் வி.அய். சுப்பிரமணியம் அவர்கள் “நீங்கள் தேசிய கீதத்திலிருந்து ‘திராவிடம்’ என்ற சொல்லை நீக்கி-விடுங்கள்; நானும் ‘திராவிடக் களஞ்சியம்’ என்ற பெயரை நீக்கிவிடுகிறேன்’’ என்று பதிலடி கொடுத்தார். (ஆதாரம்: ஞிலிகி ழிமீஷ்s 2003, பிப்ரவரி)
அந்த வகையில் கவி தாகூர் இந்தியா என்பது பல மொழிகள், பல இனங்கள் கொண்ட ஒரு துணைக் கண்-டம் என்பதை மறைக்காமல் அந்தப் பாடலில் பதிவு செய்துள்ளார்.
மாஸ்கோவில் உள்ள பேராசிரியர் பீரிட்ரோ என்பவர் கவி தாகூருக்குக் கீழ்க்கண்ட தந்தியை அனுப்-பினார் (ஆண்டு 1929).
“ருசியாவில் கைத்-தொழில், விவசாயம், விஞ்-ஞான ஆராய்ச்சி, பல்-கலைக் கழகங்கள், பாடசாலைகள், கலை வளர்ச்சி இவை உயர்ந்த நிலையை அடைந்-ததற்கு நீங்கள் என்ன காரணம் சொல்லுகிறீர்கள்? அடுத்த அய்ந்து வருடங்-களுக்கு உங்களுக்குள்ள வேலைத் திட்டம் என்ன? அவைகளுக்குத் தடை யாது?’’ என்பதுதான் அந்தத் தந்தியின் வாசகம்.
அதற்குத் தாகூர் அனுப்-பிய தந்தி வாசகம் வருமாறு:
“உங்களுடைய வெற்-றிக்குக் காரணம் தனிப்பட்ட நபர்களிடமிருந்த செல்வம், மானிட சமூகத்தினிடம் வந்து சேர்ந்ததாகும். நாங்-கள் கீழ் நிலையில் இருப்ப-தற்கு எங்களுக்குச் சமூகத் துறையிலும், அரசியல் துறை-யிலும் ஏற்பட்டுள்ள
பைத்தியக்காரத்தன்மைகளும், வெறிபிடித்த தன்மைகளும், கல்வியில் முன்னேற்றம் அடையாததும்தான் கார-ணம்.’’ (‘குடிஅரசு’, 29.11.1931).
தாகூர் அன்று கூறியது இன்றும் பொருந்தும்தானே!
அவர் படைப்புக்காக நோபல் பரிசு பெற்றவர்; அவர் எழுதிய ஜன கன மன பாடல்தான் இந்தியா-வின் தேசியப் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் தேசிய கீத-மாகக் கொண்டு வரப்பட-வேண்டும் என்ற கருத்து வந்தபோது, அதனைக் கடுமையாக எதிர்த்தவர்கள் எம்.என். ராய், தாகூர் போன்றவர்கள் ஆவார்கள். அதன் மதவெறி நாற்றம் அவர்களை அவ்வாறு செயல்படத் தூண்டியது.
ஜன கன மன பாடலில் இந்தியத் துணைக் கண்டத்-தில் உள்ள பன்மொழி நாடு-களையெல்லாம் தவறாமல் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஒரு தகவலை இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
திருவனந்தபுரத்தில் திரா-விட மொழியியல் ஆய்வு மய்யம் ஒன்றை நடத்தி வந்தார். அவரின் படைப்பு-களுள் விழுமியது ‘திரவி-டியன் என்சைக்ளோபீடியா’ என்பதாகும்.
அன்றைய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோஷி-யைச் (பி.ஜே.பி.) சந்தித்து அந்த நூலை அன்பளிப்பாக வழங்கினார் வி.அய். சுப்பிரமணியம். நூலைப் பார்த்த மாத்திரத்திலேயே அமைச்சரான ஜோஷி பார்ப்பனர், ‘திரவிடியன்’ என்ற சொல்லை நீக்கிவிட-லாமே என்று கூறினாராம். சற்றும் தாமதியாமல் அறிஞர் வி.அய். சுப்பிரமணியம் அவர்கள் “நீங்கள் தேசிய கீதத்திலிருந்து ‘திராவிடம்’ என்ற சொல்லை நீக்கி-விடுங்கள்; நானும் ‘திராவிடக் களஞ்சியம்’ என்ற பெயரை நீக்கிவிடுகிறேன்’’ என்று பதிலடி கொடுத்தார். (ஆதாரம்: ஞிலிகி ழிமீஷ்s 2003, பிப்ரவரி)
அந்த வகையில் கவி தாகூர் இந்தியா என்பது பல மொழிகள், பல இனங்கள் கொண்ட ஒரு துணைக் கண்-டம் என்பதை மறைக்காமல் அந்தப் பாடலில் பதிவு செய்துள்ளார்.
மாஸ்கோவில் உள்ள பேராசிரியர் பீரிட்ரோ என்பவர் கவி தாகூருக்குக் கீழ்க்கண்ட தந்தியை அனுப்-பினார் (ஆண்டு 1929).
“ருசியாவில் கைத்-தொழில், விவசாயம், விஞ்-ஞான ஆராய்ச்சி, பல்-கலைக் கழகங்கள், பாடசாலைகள், கலை வளர்ச்சி இவை உயர்ந்த நிலையை அடைந்-ததற்கு நீங்கள் என்ன காரணம் சொல்லுகிறீர்கள்? அடுத்த அய்ந்து வருடங்-களுக்கு உங்களுக்குள்ள வேலைத் திட்டம் என்ன? அவைகளுக்குத் தடை யாது?’’ என்பதுதான் அந்தத் தந்தியின் வாசகம்.
அதற்குத் தாகூர் அனுப்-பிய தந்தி வாசகம் வருமாறு:
“உங்களுடைய வெற்-றிக்குக் காரணம் தனிப்பட்ட நபர்களிடமிருந்த செல்வம், மானிட சமூகத்தினிடம் வந்து சேர்ந்ததாகும். நாங்-கள் கீழ் நிலையில் இருப்ப-தற்கு எங்களுக்குச் சமூகத் துறையிலும், அரசியல் துறை-யிலும் ஏற்பட்டுள்ள
பைத்தியக்காரத்தன்மைகளும், வெறிபிடித்த தன்மைகளும், கல்வியில் முன்னேற்றம் அடையாததும்தான் கார-ணம்.’’ (‘குடிஅரசு’, 29.11.1931).
தாகூர் அன்று கூறியது இன்றும் பொருந்தும்தானே!
- விடுதலை(19.05.2010) மயிலாடன்
என்ன மிரட்டலா? பூச்சாண்டி காட்டுவதா? தினமல(ம்)ர் கூட்டத்துக்கு பொத்துக்கொண்டு வருகிறதோ?
அறிவியலைப் பரப்பினால் மதப் பூச்சாண்டி காட்டி மிரட்டுவதா? இந்திய
அரசியல் சட்டத்திற்கு எதிரானவர்கள் மீது சட்டம் பாயவேண்டும். நடவடிக்கை
எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி
அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தி கூறியுள்ளார்.
அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு அரசின் அறிவியல் துறை
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் பெரியார் அறிவியல் மய்யத்தில் அறிவியல் சிந்தனை-களை மாணவர்களிடையே பரப்பிட ஒரு முகாம் (3 நாள்களுக்கு) தமிழக அரசின் அறிவியல் துறை நடத்திடும் நிலையில், நேற்று பார்ப்பன நாளேடு ‘தினமலரில்’ ‘இந்து மத உணர்வுகளைப் புண்படுத்த ஒரு முகாமா?’ என்று தலைப்பிட்டு, விஷமத்தனமான செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இந்து மத ரீதியான அதிசயங்களாம்!
“அதில் உள்ள செய்தியின் ஒரு பகுதியில் இந்து மத ரீதியான அதிசயங்களை, அறிவியல் ரீதியான எதிர்-கால தலைமுறையினர் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக முகாம் நடத்தப்படுவதாக முகாம் ஒருங்-கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்’’ என்று போடப்-பட்டிருக்கிறது.
அந்த ‘பிரகஸ்பதி’மீது நடவடிக்கை
இது சரியான தகவலாக இருந்தால், முகாம் நடத்-துவதுபற்றி கூறிய அந்தப் ‘பிரகஸ்பதி’மீது சட்டப்படி, பள்ளிக் கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்தாக-வேண்டும்.
இந்து மத பெருமைக்காகவா முகாம்?
மத சார்பற்ற அரசில் அதுவும் பெரியார் அறிவியல் மய்யத்தில், இந்து மதப் பெருமைக்காகவா முகாம் ஏற்பாடு செய்திருப்பார்கள்? இது எப்படி சரியாகும்?
அதே செய்தியில்,
கீழே, “மேலும், மத ரீதியான அதிசயங்கள் உண்மை-யில்லை என்றும், பகுத்தறிவைக் கற்றுக்கொள்ள-வேண்டும் என்றும் மாணவ, மாணவியர் இடையே, புரிந்துணர்வு ஏற்படுத்தவே இந்த முகாம் என்றும் விளக்கம் அளித்தார்.’’
திருவிழாக்களில் எடுக்கப்பட்ட படத் தொகுப்பு
ஆனால், திருவிழாக் காலங்களில் நடக்கும் தீ மிதித்தல், கையில் தீப்பந்தங்களை வைத்து உடலில் சுட்டுக் கொள்ளுதல் போன்றவற்றை பல்வேறு திரு-விழாக்களில் எடுக்கப்பட்ட படத் தொகுப்பை திரையிட்டுக் காட்டுவதாகக் கூறி, சில மாணவர்களை மேடையேற்றியும் விளக்கம் அளித்தனர்.
பார்ப்பனர்கள் கொலை மிரட்டல்
இந்த முகாமின்போதே, இதில் கலந்துகொண்ட பள்ளி சிறுவர், சிறுமிகளிடம் பகுத்தறிவை ஏற்படுத்துவதாகக் கூறி, இந்து மதத்தையும், இந்து மதத் தலைவர்களையும் பழிக்கும் விதமாகப் பேசினர். மத ரீதியான உணர்வு-களைப் புண்படுத்திப் பேசியது அங்கிருந்தவர்கள் மத்தி-யில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது!’’ என்று எழுதிய-தோடு, இதை நடத்திட வந்த பேராசிரியர் நரேந்திர நாயக் (கருநாடக அறிவியல் அறிஞர்) அவர்களுக்கு சில பார்ப்பன மதவெறியர்கள் தொலைபேசிமூலம் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாகக் கேள்விப்-படுகிறோம்!
இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதென்ன?
இந்திய அரசியல் சட்டத்தின் 51_ஏ பிரிவு, ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படை கடமைகள் (Fundamental Duties) பற்றி கூறுகையில்,
‘‘It shall be the duty of every citizen of India to develop scientific temper, spirit of inquiry, humanism and reform’’ என்று கூறப்பட்டுள்ளதே!
அடிப்படை உரிமை போன்றதே அடிப்படை கடமைகளும்கூட!
அறிவியல் மனப்பான்மை முக்கியம்
இதன் அறிவியல் மனப்பான்மையை, கேள்வி கேட்டுத் துளைக்கும் பண்பை, மனித நேயத்தை, சீர்-திருத்தத்தைப் பரப்பி வளர்க்கச் செய்வதே அடிப்படைக் கடமையாகும்.
என்ன மிரட்டலா? பூச்சாண்டி காட்டுவதா?
இதனை அரசு, அதுவும் மதச் சார்பற்ற செக்யூலர் அரசு, அதன் அறிவியல் மய்யத்தில் தக்காரைக் கொண்டு நடத்தினால், அது மத உணர்வை _ இந்து மத உணர்வைப் புண்படுத்துகிறது என்று கூறி மிரட்டல் விடுவதா? பூச்சாண்டி காட்டுவதா?
அறிவியல் உண்மைகளைப் பரப்பி, மத, மூட நம்-பிக்கைகளை ஊசிகொண்டு, ஊதப்பட்ட பலூன்களைக் குத்தச் செய்வதுபோல் அவசியமாகச் செய்யவேண்டிய பணி அல்லவா இது?
சைபர் க்ரைம் குற்றப்பிரிவு
இந்த மிரட்டல் விட்டவர்மீது ‘செல்போனில்’ சைபர் க்ரைம் குற்றப் பிரிவினர் உரிய நடவடிக்கையை உடனே எடுக்க முன்வரவேண்டும்!
உலகம் தட்டை என்று கருதப்பட்ட மூட நம்பிக்கை அதனை அடிப்படையாக, இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலுக்குள் ஒளித்து வைத்தான் என்ற கதை, கற்பனை என்று விளக்கம் சொன்னால் தவறு என்ன?
குடும்பக் கட்டுப்பாடு மதத்திற்கு விரோதம்தான்!
அரசின் குடும்பக் கட்டுப்பாடு, கர்ப்பத்தடைகூட மதக் கருத்துக்கு விரோதம்தான். அத்திட்டம் மதவாதிகள் மனதைப் புண்படுத்துகிறது என்று கூறி, அரசைக் கைவிடச் சொல்ல முடியுமா?
கிரகணம் _ ராகு, கேது, பாம்பு விழுங்கும் கதையை அறிவியல், வானவியல் ஏற்குமா? இதை அம்பலப்-படுத்தி மூடநம்பிக்கையை மாணவரிடையே போக்க முயற்சித்தால், அது ‘மனம் புண்படும்’ என்றால், அவ்-வளவு மோசமான மனம் படைத்தோருக்கு சமூகத்தில், நாட்டில் எங்கே இடம் இருக்கவேண்டும்?
இன்னமும் கதை விடுவதா?
மனிதன், நிலா உலகிற்குச் சென்று வந்து பல ஆண்டுகாலம் ஆகிவிட்டது.
இன்னமும் ‘‘தாரை, குருபத்தினி’’, நிலா ஏன் தேய்-கிறது _ சாபம் _ நிலாவுக்கு _ சந்திரனுக்கு 27 மனைவி-கள் கதை கூறிட முடியுமா?
இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைப் போக்கத்தானே அறிவியல்! தி.க., ப.க. உடனே உரிய நடவடிக்கையில் இறங்கும்!
அம்மை குத்திக் கொள்வது ஆத்தாளுக்கு விரோதம் என்று நம்பும் வடிகட்டிய மூடர்கள் மனம் முக்கியமா? நாற்றங்கால் பயிர்களாக உள்ள மாணவர்-களை அறிவியல் ரீதியாகப் பக்குவப்படுத்துவது முக்கியமா?
பகுத்தறிவாளர் கழகமும், திராவிடர் கழகமும் வேடிக்கை பார்க்காது. உடனே உரிய நடவடிக்கைகளில் இறங்கும்!
------ நன்றி விடுதலை(19.05.2010)
அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு அரசின் அறிவியல் துறை
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் பெரியார் அறிவியல் மய்யத்தில் அறிவியல் சிந்தனை-களை மாணவர்களிடையே பரப்பிட ஒரு முகாம் (3 நாள்களுக்கு) தமிழக அரசின் அறிவியல் துறை நடத்திடும் நிலையில், நேற்று பார்ப்பன நாளேடு ‘தினமலரில்’ ‘இந்து மத உணர்வுகளைப் புண்படுத்த ஒரு முகாமா?’ என்று தலைப்பிட்டு, விஷமத்தனமான செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இந்து மத ரீதியான அதிசயங்களாம்!
“அதில் உள்ள செய்தியின் ஒரு பகுதியில் இந்து மத ரீதியான அதிசயங்களை, அறிவியல் ரீதியான எதிர்-கால தலைமுறையினர் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக முகாம் நடத்தப்படுவதாக முகாம் ஒருங்-கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்’’ என்று போடப்-பட்டிருக்கிறது.
அந்த ‘பிரகஸ்பதி’மீது நடவடிக்கை
இது சரியான தகவலாக இருந்தால், முகாம் நடத்-துவதுபற்றி கூறிய அந்தப் ‘பிரகஸ்பதி’மீது சட்டப்படி, பள்ளிக் கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்தாக-வேண்டும்.
இந்து மத பெருமைக்காகவா முகாம்?
மத சார்பற்ற அரசில் அதுவும் பெரியார் அறிவியல் மய்யத்தில், இந்து மதப் பெருமைக்காகவா முகாம் ஏற்பாடு செய்திருப்பார்கள்? இது எப்படி சரியாகும்?
அதே செய்தியில்,
கீழே, “மேலும், மத ரீதியான அதிசயங்கள் உண்மை-யில்லை என்றும், பகுத்தறிவைக் கற்றுக்கொள்ள-வேண்டும் என்றும் மாணவ, மாணவியர் இடையே, புரிந்துணர்வு ஏற்படுத்தவே இந்த முகாம் என்றும் விளக்கம் அளித்தார்.’’
திருவிழாக்களில் எடுக்கப்பட்ட படத் தொகுப்பு
ஆனால், திருவிழாக் காலங்களில் நடக்கும் தீ மிதித்தல், கையில் தீப்பந்தங்களை வைத்து உடலில் சுட்டுக் கொள்ளுதல் போன்றவற்றை பல்வேறு திரு-விழாக்களில் எடுக்கப்பட்ட படத் தொகுப்பை திரையிட்டுக் காட்டுவதாகக் கூறி, சில மாணவர்களை மேடையேற்றியும் விளக்கம் அளித்தனர்.
பார்ப்பனர்கள் கொலை மிரட்டல்
இந்த முகாமின்போதே, இதில் கலந்துகொண்ட பள்ளி சிறுவர், சிறுமிகளிடம் பகுத்தறிவை ஏற்படுத்துவதாகக் கூறி, இந்து மதத்தையும், இந்து மதத் தலைவர்களையும் பழிக்கும் விதமாகப் பேசினர். மத ரீதியான உணர்வு-களைப் புண்படுத்திப் பேசியது அங்கிருந்தவர்கள் மத்தி-யில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது!’’ என்று எழுதிய-தோடு, இதை நடத்திட வந்த பேராசிரியர் நரேந்திர நாயக் (கருநாடக அறிவியல் அறிஞர்) அவர்களுக்கு சில பார்ப்பன மதவெறியர்கள் தொலைபேசிமூலம் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாகக் கேள்விப்-படுகிறோம்!
இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதென்ன?
இந்திய அரசியல் சட்டத்தின் 51_ஏ பிரிவு, ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படை கடமைகள் (Fundamental Duties) பற்றி கூறுகையில்,
‘‘It shall be the duty of every citizen of India to develop scientific temper, spirit of inquiry, humanism and reform’’ என்று கூறப்பட்டுள்ளதே!
அடிப்படை உரிமை போன்றதே அடிப்படை கடமைகளும்கூட!
அறிவியல் மனப்பான்மை முக்கியம்
இதன் அறிவியல் மனப்பான்மையை, கேள்வி கேட்டுத் துளைக்கும் பண்பை, மனித நேயத்தை, சீர்-திருத்தத்தைப் பரப்பி வளர்க்கச் செய்வதே அடிப்படைக் கடமையாகும்.
என்ன மிரட்டலா? பூச்சாண்டி காட்டுவதா?
இதனை அரசு, அதுவும் மதச் சார்பற்ற செக்யூலர் அரசு, அதன் அறிவியல் மய்யத்தில் தக்காரைக் கொண்டு நடத்தினால், அது மத உணர்வை _ இந்து மத உணர்வைப் புண்படுத்துகிறது என்று கூறி மிரட்டல் விடுவதா? பூச்சாண்டி காட்டுவதா?
அறிவியல் உண்மைகளைப் பரப்பி, மத, மூட நம்-பிக்கைகளை ஊசிகொண்டு, ஊதப்பட்ட பலூன்களைக் குத்தச் செய்வதுபோல் அவசியமாகச் செய்யவேண்டிய பணி அல்லவா இது?
சைபர் க்ரைம் குற்றப்பிரிவு
இந்த மிரட்டல் விட்டவர்மீது ‘செல்போனில்’ சைபர் க்ரைம் குற்றப் பிரிவினர் உரிய நடவடிக்கையை உடனே எடுக்க முன்வரவேண்டும்!
உலகம் தட்டை என்று கருதப்பட்ட மூட நம்பிக்கை அதனை அடிப்படையாக, இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலுக்குள் ஒளித்து வைத்தான் என்ற கதை, கற்பனை என்று விளக்கம் சொன்னால் தவறு என்ன?
குடும்பக் கட்டுப்பாடு மதத்திற்கு விரோதம்தான்!
அரசின் குடும்பக் கட்டுப்பாடு, கர்ப்பத்தடைகூட மதக் கருத்துக்கு விரோதம்தான். அத்திட்டம் மதவாதிகள் மனதைப் புண்படுத்துகிறது என்று கூறி, அரசைக் கைவிடச் சொல்ல முடியுமா?
கிரகணம் _ ராகு, கேது, பாம்பு விழுங்கும் கதையை அறிவியல், வானவியல் ஏற்குமா? இதை அம்பலப்-படுத்தி மூடநம்பிக்கையை மாணவரிடையே போக்க முயற்சித்தால், அது ‘மனம் புண்படும்’ என்றால், அவ்-வளவு மோசமான மனம் படைத்தோருக்கு சமூகத்தில், நாட்டில் எங்கே இடம் இருக்கவேண்டும்?
இன்னமும் கதை விடுவதா?
மனிதன், நிலா உலகிற்குச் சென்று வந்து பல ஆண்டுகாலம் ஆகிவிட்டது.
இன்னமும் ‘‘தாரை, குருபத்தினி’’, நிலா ஏன் தேய்-கிறது _ சாபம் _ நிலாவுக்கு _ சந்திரனுக்கு 27 மனைவி-கள் கதை கூறிட முடியுமா?
இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைப் போக்கத்தானே அறிவியல்! தி.க., ப.க. உடனே உரிய நடவடிக்கையில் இறங்கும்!
அம்மை குத்திக் கொள்வது ஆத்தாளுக்கு விரோதம் என்று நம்பும் வடிகட்டிய மூடர்கள் மனம் முக்கியமா? நாற்றங்கால் பயிர்களாக உள்ள மாணவர்-களை அறிவியல் ரீதியாகப் பக்குவப்படுத்துவது முக்கியமா?
பகுத்தறிவாளர் கழகமும், திராவிடர் கழகமும் வேடிக்கை பார்க்காது. உடனே உரிய நடவடிக்கைகளில் இறங்கும்!
------ நன்றி விடுதலை(19.05.2010)
Tuesday, May 18, 2010
ஏசுவானவர் எவ்விதத்திலும் மேம்பட்டவர் அல்லர் - பெர்ட்ரண்ட் ரஸல்
உலகப் புகழ்பெற்ற நாத்திகரான பெர்ட்ரண்ட் ரஸல் அவர்களின் பிறந்த நாள் இன்று (18.5.1872). 98 ஆண்டுகள் வாழ்ந்து காட்டி மத நம்பிக்கையாளர்களை பிரமிக்கச் செய்தவர்.
சிறுவயதில் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டு இருந்-தவர்தான். இதுபற்றி ரஸல் கூறுகிறார்:
இளம் பருவத்தில் இருந்தபோது நான் ஆழ்ந்த மத உணர்ச்சி கொண்டவ-னாக இருந்தேன். கணிதம் நீங்கலாகவோ என்னவோ மற்ற எந்த ஒரு துறையைக் காட்டிலும் அதிகமாகவே மத விஷயத்தில் ஆர்வ-முள்ளவனாகவே இருந்-தேன். அப்படிப்பட்ட ஆர்-வமே அதை நம்புவதற்குக் காரணம் உண்டா என்ற கேள்வியை ஆராயச் செய்தது. அதனால் அந்த ஆர்வம் அடிக்கடி அப்-படித் தூண்டுவதில்லை. கடவுள், மரணமற்ற தன்மை பற்றி ஆய்ந்தேன். ஒவ்-வொன்றையும் ஆய்வு செய்-ததில் இவற்றை நம்புவதற்-குக் காரணம் ஏதுமில்லை என்று உணர்ந்தேன் என்று குறிப்பிடுகிறார்.
மரணத்திற்குப் பிறகு நம் நிலை என்ன? மோட்சத்-துக்கா, நரகத்துக்கா? என்ற கேள்வி மனிதனை சஞ்-சலப்படுத்துகிறது. இது குறித்து ரஸல் கூறுகிறார்:
மரணத்திற்குப் பிறகு உடல் சிதைகிறது என்பதை நான் அறிந்துள்ளேன். அவ்-வாறு உடல் சிதைந்து அழிந்த பிறகும் மனம் மட்டுமே செயல்படுகிறது என்று எண்ணுவதற்குக் காரணம் இல்லை என்று கறாராகக் கூறுகிறார் ரஸல்.
நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல? (கீலீஹ் மி ணீனீ ஸீஷீ ணீ சிலீக்ஷீவீவீணீஸீ) என்ற நூல் உலகப் புகழ் பெற்றது. கிறித்துவ உலகத்தில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது.
இந்நூலை தமிழில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளி-யிட்டுள்ளது.
கிறிஸ்துவுக்குப் பசியாக இருந்ததாம். அத்தி மரம் ஒன்று தூரத்தில் தெரிந்ததாம். தின்பதற்கு ஏதாவது பழங்-கள் இருக்கும் என்று அதன் அருகில் போனாராம். ஆனால் இலைகளைத் தவிர அதில் ஒன்றும் இல்-லையாம். உடனே ஏசு என்ன செய்தார் தெரியுமா? உன்னுடைய பழத்தை ஒரு-வருமே இனிமேல் சாப்பி-டாமல் போகக் கடவது... என்று சாபமிட்டார். அந்த அத்தி மரமும் உடனே பட்டுப் போய்விட்டதாம்! எவ்வளவு வேடிக்கைக் கதை பார்த்தீர்களா? பழம் பழுக்கும் பருவ காலம் வராமல் இருந்ததற்காக மரத்தின்மீது கோபித்துக் கொள்வது நியாயமா? இதிலிருந்து ஏசு-வானவர் புத்தியிலாகட்டும், நற்குணத்தில் ஆகட்டும், சரித்திரத்தில் கூறப்பட்ட சில மனிதர்களை விட எவ்விதத்திலும் மேம்பட்டவர் அல்லர் என்று அந்நூலில் கூறுகிறார் ரஸல்.
வளமான சிந்தனை உள்ளவர்கள்தான் இப்படிப் பலமாக சிந்திக்க முடியும்_- அப்படித்தானே!
- விடுதலை(18.05.2010) மயிலாடன்
சிறுவயதில் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டு இருந்-தவர்தான். இதுபற்றி ரஸல் கூறுகிறார்:
இளம் பருவத்தில் இருந்தபோது நான் ஆழ்ந்த மத உணர்ச்சி கொண்டவ-னாக இருந்தேன். கணிதம் நீங்கலாகவோ என்னவோ மற்ற எந்த ஒரு துறையைக் காட்டிலும் அதிகமாகவே மத விஷயத்தில் ஆர்வ-முள்ளவனாகவே இருந்-தேன். அப்படிப்பட்ட ஆர்-வமே அதை நம்புவதற்குக் காரணம் உண்டா என்ற கேள்வியை ஆராயச் செய்தது. அதனால் அந்த ஆர்வம் அடிக்கடி அப்-படித் தூண்டுவதில்லை. கடவுள், மரணமற்ற தன்மை பற்றி ஆய்ந்தேன். ஒவ்-வொன்றையும் ஆய்வு செய்-ததில் இவற்றை நம்புவதற்-குக் காரணம் ஏதுமில்லை என்று உணர்ந்தேன் என்று குறிப்பிடுகிறார்.
மரணத்திற்குப் பிறகு நம் நிலை என்ன? மோட்சத்-துக்கா, நரகத்துக்கா? என்ற கேள்வி மனிதனை சஞ்-சலப்படுத்துகிறது. இது குறித்து ரஸல் கூறுகிறார்:
மரணத்திற்குப் பிறகு உடல் சிதைகிறது என்பதை நான் அறிந்துள்ளேன். அவ்-வாறு உடல் சிதைந்து அழிந்த பிறகும் மனம் மட்டுமே செயல்படுகிறது என்று எண்ணுவதற்குக் காரணம் இல்லை என்று கறாராகக் கூறுகிறார் ரஸல்.
நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல? (கீலீஹ் மி ணீனீ ஸீஷீ ணீ சிலீக்ஷீவீவீணீஸீ) என்ற நூல் உலகப் புகழ் பெற்றது. கிறித்துவ உலகத்தில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது.
இந்நூலை தமிழில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளி-யிட்டுள்ளது.
கிறிஸ்துவுக்குப் பசியாக இருந்ததாம். அத்தி மரம் ஒன்று தூரத்தில் தெரிந்ததாம். தின்பதற்கு ஏதாவது பழங்-கள் இருக்கும் என்று அதன் அருகில் போனாராம். ஆனால் இலைகளைத் தவிர அதில் ஒன்றும் இல்-லையாம். உடனே ஏசு என்ன செய்தார் தெரியுமா? உன்னுடைய பழத்தை ஒரு-வருமே இனிமேல் சாப்பி-டாமல் போகக் கடவது... என்று சாபமிட்டார். அந்த அத்தி மரமும் உடனே பட்டுப் போய்விட்டதாம்! எவ்வளவு வேடிக்கைக் கதை பார்த்தீர்களா? பழம் பழுக்கும் பருவ காலம் வராமல் இருந்ததற்காக மரத்தின்மீது கோபித்துக் கொள்வது நியாயமா? இதிலிருந்து ஏசு-வானவர் புத்தியிலாகட்டும், நற்குணத்தில் ஆகட்டும், சரித்திரத்தில் கூறப்பட்ட சில மனிதர்களை விட எவ்விதத்திலும் மேம்பட்டவர் அல்லர் என்று அந்நூலில் கூறுகிறார் ரஸல்.
வளமான சிந்தனை உள்ளவர்கள்தான் இப்படிப் பலமாக சிந்திக்க முடியும்_- அப்படித்தானே!
- விடுதலை(18.05.2010) மயிலாடன்
Monday, May 17, 2010
ஏன்? ஜாதி கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்?
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினரைக் கணக்கிட்டால், சமூக நீதிக்கொள்கைத் திட்டங்களைச் செயல்படுத்திட வலுவான ஆதாரங்களைத் தந்து உதவிடும் என்கிறார் சிறந்த அரசியல் நோக்கரும் ஆய்வாளருமான யோகேந்திர யாதவ். தற்போது பெர்லினில் விஸ்சன் ஷாப்ட்ஸ் கோலெக்-இல் இருக்கும் இவர் டெல்லி சிஎஸ்டிஎஸ் நிறுவனத்தின் மூத்த ஆய்வறிஞர்.
தப்பான காரணங்களுக்காகச் சரியான முடிவுகளை மேற்கொள்ளும் தந்திரம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு இருக்கிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரி விவரம் சேகரிப்பது தொடர்பான அறிவிப்பு அவற்றில் ஒன்று. தெலுங்கானா பிரச்சினையைப் போலவே, நீண்ட காலமாகத் தேங்கிக்கிடக்கும் பிரச்சினையில் அவசரப்பட்டு முடிவு எடுத்தாற் போன்ற தோற்றம்தான், இந்தப் பிரச்சினையிலும் ஏற்பட்டுள்ளது. மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத்திட்டம் போலவே, நாட்டின் நலன் கருதி கையைப் பிசைந்துகொள்ளும் நிலைதான். இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை சென்சசில் கணக்கெடுப்பது தொடர்பான அறிவிப்-பும்-கூட, நீண்ட நாள்பட்ட கோரிக்கை மீது முற்-போக்கான முடிவு எடுத்ததைப் போலத் தோன்றினாலும்,சமூக நீதிக்கான திட்டங்களைச் செயல்படுத்திட இது உதவக்கூடியது என்றாலும், வேண்டாவெறுப்புடன் செய்யப்படுவது போலக்காட்சி அளித்துத் தேவையற்ற கெடுத-லான விமரிசனங்களை வழக்கமானவர்களிட-மிருந்து வரவழைத்துவிட்டது.
என்னதான் முடிவு என்பதுபற்றி அரசின் மவுனம், குழப்பத்தைத்தான் மேலும் ஏற்படுத்தி-யுள்ளது. ஊடகங்களின் செய்தித் தலைப்புகளும், நாடாளுமன்ற விவாதங்களும் ஜாதிக் கணக்-கெடுப்பு என்றே கூறுகின்றன. காலனி ஆட்சிக்-காலத்தில் செய்யப்பட்டது. போன்று, இந்து மதத்தின் எல்லா ஜாதி, உள் ஜாதிப் பிரிவு-களையும் கணக்கெடுத்துத் தரம்பிரிப்பது போன்று பிரமையை உருவாக்கி விட்டது. ஆனால், எஸ்.சி., எஸ்.டி பிரிவுகளுடன், ஓபிசி பிரிவையும் கணக்கெடுப்பது என்கிற அளவில் குறிப்பிட்ட மாதிரி விவரங்கள் சேகரிப்பது மட்டுமே செய்யப்படவிருக்கிறது என பிரணாப் முகர்ஜியின் அறிக்கை தெரிவிக்கிறது. வேறு வகையில் சொன்னால் கணக்கெடுப்பின்போது, எஸ்.சியா, எஸ்டியா எனக்கேட்பதைப் போல ஓபிசியா என்று மட்டுமே கேட்கப்படும். அவர்கள் தெரிவிக்கும் பதிலுக்கேற்ப, ஜாதியின் பெயர் பதிவு செய்து கொள்ளப்படும். மற்றவர்களின் ஜாதி பற்றிய கேள்வி கேட்கப்படமாட்டாது. தற்போதைய சூழலில், இது மிகவும் நாயமான அணுகுமுறை; ஜாதி வாரிக் கணக்கெடுப்புக்குச் சரியான வகையில் பொருள் கொள்ளும் முறை ஆகும்.
சதிஷ் தேஷ்பாண்டே கூறியது போல, ஜாதி வாரிக்கணக்கெடுப்புக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு வாதங்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் அவற்றிற்குத் தேவை இல்லை. ஓபிசியினரின் ஜாதி பற்றிய முழு கணக்கெடுப்பை நடத்தினால், 80 ஆண்டுக் காலமாகக் கைக்கொள்ளப்படும் திட்டத்தைத் திருப்பிப் போட்டதாக ஆகாது; என்றாலும் ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்ட அணுகு முறைகளை தர்க்க ரீதியாக மாற்றுவதாகவே அமையும். கடந்த காலங்களில், கருநாடகா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், பிரத்தி-யேகமாக அமைக்கப்பட்ட கமிஷன்களின் மூலம், இம்மாதிரி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கருநாடக மாநிலம் முன்னோடியானாதும் சிறப்பான வகையிலும் அமைந்தது எனலாம். இந்திய அளவில் மாதிரி சர்வே ஒன்று மண்டல் கமிஷனால் நடத்தப்-பட்டது. அவற்றையெல்லாம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்த்து செய்யப்படாதது இவ்வகை ஆதாரங்கள் பகுதியாகவும் சரிபார்த்திடாமலும் அமைந்திடும் நிலையில் உள்ளன.
முக்கிய விவரம்
இம்மாதிரிக் கணக்கெடுப்பினால் நமக்கு என்ன விவரம் கிடைக்கும்? நிறைய கிடைக்கும். பல்வேறு ஜாதியினர் தொடர்பான எண்ணிக்கை, பிற்படுத்தப்-பட்ட தன்மை தொடர்பான சோதனை முடிவுகள் சேகரிக்கப்பட்டு, அவை தொடர்பாக முடிவே இல்லாமல் செய்யப்பட்டுவரும் வாதங்களை முடிவுக்குக் கொண்டுவந்து, சீரமைத்திடும் செயல்களை நடைமுறைக்குக்கொண்டு வர முடியும். ஓபிசியினரின் எண்ணிக்கை தொடர்பான விவாதங்களுக்கு முடிவு கட்டுவதோடு, அவர்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளையும் கணித்திட பெருமளவு உதவும். ஓபிசி தொடர்பான அனைத்து வகையான எண்ணிக்கை பாலின விகிதம், இறப்பு, பிறப்பு கணக்கு, கல்வி, பள்ளி செல்வோர் எண்ணிக்கை, பட்டதாரிகளின் எண்ணிக்கை முதலிய அனைத்து விவரங்களையும் அறிந்திட இயலும். பொருளாதார நிலை, சொத்துகள், தொழிலாளிகளின் தொகை போன்ற பலவற்றை அறிந்திட முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்ட வாரியாக, ஜாதி வாரியாக, இவ்விவரங்கள் கிடைக்கும். இதன்மூலம் இடஒதுக்கீடு முறையைச் செம்மையாகச் செய்திட முடியும். பட்டியலில் சேர்ப்பது, நீக்குவது போன்ற அரசியல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்திடவும் திட்டங்களைச் சீராகச் செயல்படுத்திடவும் முடியும். சீரமைத்திடும் நடவடிக்கைகளை உருவாக்கிட இது உதவாது, சென்சசில் மிகஅதிக ஊதியம் பெறும் வேலைகளையோ, ஏனைய விவரங்களையோ சேகரிப்பதில்லை என்றாலும், இது ஒரு பெரிய முயற்சிதான்.
(ஓபிசி) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கெடுப்பு விருப்புத்திட்டம் அன்று தம்மால் சட்டப்படியும் திட்டப்படியும் அங்கீகரிக்கப்பட்ட சமூகக் குழுக்களைக் கணக்கிடாமல் இருந்திட தற்கால மாநிலங்களால் முடியாது. ஓபிசியினருக்கு அரசு வேலை வாய்ப்புகளிலும் கல்விச்சாலை-களிலும் இடஒதுக்கீடு முதலிய பல்வேறு நலத்திட்டங்களை அவர்களுக்கு அளிப்பதானது அவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்துவதைக் கட்டாயமாக்குகிறது. சரியான, ஆய்வு முறையிலான ஆதாரங்களை நீதித்துறை அடிக்கடி கேட்கிறது. ஓபிசியினர் பற்றிய கணக்கெடுப்பு அவர்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட பிறகு செய்யப்பட்ட 2001 சென்சசிலேயே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். உண்மையில் அப்போதைய சென்சஸ் தலைமைப் பதிவாளர் இதற்கான யோசனையைத் தெரிவித்தார். ஆனாலும் இந்திய உள்துறை அமைச்சகத்தால் அய்க்கிய ஜனநாயக முன்னணி அரசில் புறந்தள்ளப்பட்டு விட்டது.
எது சரியான தருணம்?
சென்சஸ் பணிகள் தொடங்கப்பட்டுவிட்ட இன்றைய நிலையில் இது சாத்தியமா? எல்லா ஜாதிகள் பற்றிய கணக்கெடுப்பை முழுமையாக நடத்திட தற்போது காலம் கடந்திட்ட நிலை என்றாலும், இதுபற்றிய முடிவு முன்னமேயே எடுக்கப்பட்டிருக்க வேண்டும்தான். ஆனாலும், இப்போதைய நிலையிலும், ஓபிசி பற்றிய கணக்கெடுப்பு சாத்தியப்படக்கூடியதே! ஓபிசிகளின் சட்டப்பூர்வப்பெயரான சமூக, கல்வி ரீதியில் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் பட்டியலை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் தேசியக் கமிஷன் ஏற்கெனவே தயாரித்துள்ளது. நாட்டில் உள்ள ஜாதியினரை அடையாளம்காண இப்பட்டியல் அடிப்-படையாக அமையும். ஒவ்வொரு மாநிலத்திலும் மனித இனக் குழு சங்கத்தின் சார்பாக எடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. மாநில வாரியான ஜாதி, இனங்-களின் பட்டியலை இத்துடன் இணைத்துக்-கொள்ளலாம். மாவட்ட அளவில் இப்படிப்பட்ட பட்டியலைத் தயாரிப்பது சிரமமாக இருக்கலாம். ஆனாலும், தொழில், மொழி போன்ற சென்சஸ் புள்ளி விவரங்கள் சேகரிப்பதில் எந்த சிரமமும் இருக்காது. இது தொடர்பான ஆட்சேபணைகள் எல்லாமே தவறாக வைக்கப்பட்டனவே தவிர, விஷமத்தனமானவையல்ல.
கொள்கை அளவிலான எதிர்ப்புகள் என்ன? பொது வாழ்க்கையில் ஜாதிக்கு தரப்படும் முக்கியத்துவம் புரிந்துகொள்ளக்கூடிய சங்கடம்-தான். ஆனால், எஸ்சி, எஸ்.டியினரைக் கணக்-கிடும் போது ஓபிசியினரைக் கணக்கெடுப்பதில் என்ன மாதிரியான சிரமம் வந்துவிடும்? இதை அரைநூற்றாண்டுக்காலமாக நாம் செய்து வந்திருக்கிறோம். எந்த ஒரு பிரிவு பற்றியும்-அதிகாரப் பூர்வமாகக் கணக்கெடுக்கும் போது எல்லைகள் மாறலாம். ஒவ்வொருவரும் சந்தித்து-வரும் பிரச்சினை தொடர்பானவர்கள் அங்கீ-கரிக்கப்படாமல் இருந்துவரும் நிலையோடு, அவர்களின் கணக்கெடுப்பு தொடர்பான சிரமங்கள் கணக்கிட்டுப் பார்க்கப்பட வேண்டும். மதப்பிரிவினர் தொடர்பான கணக்கெடுப்பு கள் மதச்சாற்பற்ற தன்மைக்கு எதிராக இந்தியாவில் அமைந்துவிடாத வரையில், இனவாரிக் கணக்கெடுப்புகள் அமெரிக்க நாட்டை இனவெறி அரசாக ஆக்காத வரையில், இந்தியாவில் மேலும் ஒரு ஜாதிக் குழுவினரைக் கணக்கெடுப்பதானது இந்தியாவை ஜாதிகளின் சிறைச்சாலை என்று ஆக்கிவிட்டது.
எது எப்படியிருப்பினும், ஜாதிகள் தொடர்பான கண்ணோட்டம் நம் கண்களை மூடாமல் அருகில் சென்று பார்த்திடவும், அடையாளம் கண்டிடவும், சிலரைப் பின்னடைவுக்கு ஒதுக்கு வதற்கும் அது காரணமாக அமைந்திருப்பதைக் கண்டறிந்து அந்த ஜாதி முறை எவ்வாறு சமூகப் பிரிவுகளுக்கும் வர்க்க, பாலின பிளவுகளுக்கும் காரணியாக விளங்குகிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. அதுதான் இன்றைக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அவசியம் ஆகும்.
நன்றி: தி ஹிண்டு 15.5.2010
தமிழில்: அரசு
தப்பான காரணங்களுக்காகச் சரியான முடிவுகளை மேற்கொள்ளும் தந்திரம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு இருக்கிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரி விவரம் சேகரிப்பது தொடர்பான அறிவிப்பு அவற்றில் ஒன்று. தெலுங்கானா பிரச்சினையைப் போலவே, நீண்ட காலமாகத் தேங்கிக்கிடக்கும் பிரச்சினையில் அவசரப்பட்டு முடிவு எடுத்தாற் போன்ற தோற்றம்தான், இந்தப் பிரச்சினையிலும் ஏற்பட்டுள்ளது. மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத்திட்டம் போலவே, நாட்டின் நலன் கருதி கையைப் பிசைந்துகொள்ளும் நிலைதான். இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை சென்சசில் கணக்கெடுப்பது தொடர்பான அறிவிப்-பும்-கூட, நீண்ட நாள்பட்ட கோரிக்கை மீது முற்-போக்கான முடிவு எடுத்ததைப் போலத் தோன்றினாலும்,சமூக நீதிக்கான திட்டங்களைச் செயல்படுத்திட இது உதவக்கூடியது என்றாலும், வேண்டாவெறுப்புடன் செய்யப்படுவது போலக்காட்சி அளித்துத் தேவையற்ற கெடுத-லான விமரிசனங்களை வழக்கமானவர்களிட-மிருந்து வரவழைத்துவிட்டது.
என்னதான் முடிவு என்பதுபற்றி அரசின் மவுனம், குழப்பத்தைத்தான் மேலும் ஏற்படுத்தி-யுள்ளது. ஊடகங்களின் செய்தித் தலைப்புகளும், நாடாளுமன்ற விவாதங்களும் ஜாதிக் கணக்-கெடுப்பு என்றே கூறுகின்றன. காலனி ஆட்சிக்-காலத்தில் செய்யப்பட்டது. போன்று, இந்து மதத்தின் எல்லா ஜாதி, உள் ஜாதிப் பிரிவு-களையும் கணக்கெடுத்துத் தரம்பிரிப்பது போன்று பிரமையை உருவாக்கி விட்டது. ஆனால், எஸ்.சி., எஸ்.டி பிரிவுகளுடன், ஓபிசி பிரிவையும் கணக்கெடுப்பது என்கிற அளவில் குறிப்பிட்ட மாதிரி விவரங்கள் சேகரிப்பது மட்டுமே செய்யப்படவிருக்கிறது என பிரணாப் முகர்ஜியின் அறிக்கை தெரிவிக்கிறது. வேறு வகையில் சொன்னால் கணக்கெடுப்பின்போது, எஸ்.சியா, எஸ்டியா எனக்கேட்பதைப் போல ஓபிசியா என்று மட்டுமே கேட்கப்படும். அவர்கள் தெரிவிக்கும் பதிலுக்கேற்ப, ஜாதியின் பெயர் பதிவு செய்து கொள்ளப்படும். மற்றவர்களின் ஜாதி பற்றிய கேள்வி கேட்கப்படமாட்டாது. தற்போதைய சூழலில், இது மிகவும் நாயமான அணுகுமுறை; ஜாதி வாரிக் கணக்கெடுப்புக்குச் சரியான வகையில் பொருள் கொள்ளும் முறை ஆகும்.
சதிஷ் தேஷ்பாண்டே கூறியது போல, ஜாதி வாரிக்கணக்கெடுப்புக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு வாதங்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் அவற்றிற்குத் தேவை இல்லை. ஓபிசியினரின் ஜாதி பற்றிய முழு கணக்கெடுப்பை நடத்தினால், 80 ஆண்டுக் காலமாகக் கைக்கொள்ளப்படும் திட்டத்தைத் திருப்பிப் போட்டதாக ஆகாது; என்றாலும் ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்ட அணுகு முறைகளை தர்க்க ரீதியாக மாற்றுவதாகவே அமையும். கடந்த காலங்களில், கருநாடகா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், பிரத்தி-யேகமாக அமைக்கப்பட்ட கமிஷன்களின் மூலம், இம்மாதிரி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கருநாடக மாநிலம் முன்னோடியானாதும் சிறப்பான வகையிலும் அமைந்தது எனலாம். இந்திய அளவில் மாதிரி சர்வே ஒன்று மண்டல் கமிஷனால் நடத்தப்-பட்டது. அவற்றையெல்லாம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்த்து செய்யப்படாதது இவ்வகை ஆதாரங்கள் பகுதியாகவும் சரிபார்த்திடாமலும் அமைந்திடும் நிலையில் உள்ளன.
முக்கிய விவரம்
இம்மாதிரிக் கணக்கெடுப்பினால் நமக்கு என்ன விவரம் கிடைக்கும்? நிறைய கிடைக்கும். பல்வேறு ஜாதியினர் தொடர்பான எண்ணிக்கை, பிற்படுத்தப்-பட்ட தன்மை தொடர்பான சோதனை முடிவுகள் சேகரிக்கப்பட்டு, அவை தொடர்பாக முடிவே இல்லாமல் செய்யப்பட்டுவரும் வாதங்களை முடிவுக்குக் கொண்டுவந்து, சீரமைத்திடும் செயல்களை நடைமுறைக்குக்கொண்டு வர முடியும். ஓபிசியினரின் எண்ணிக்கை தொடர்பான விவாதங்களுக்கு முடிவு கட்டுவதோடு, அவர்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளையும் கணித்திட பெருமளவு உதவும். ஓபிசி தொடர்பான அனைத்து வகையான எண்ணிக்கை பாலின விகிதம், இறப்பு, பிறப்பு கணக்கு, கல்வி, பள்ளி செல்வோர் எண்ணிக்கை, பட்டதாரிகளின் எண்ணிக்கை முதலிய அனைத்து விவரங்களையும் அறிந்திட இயலும். பொருளாதார நிலை, சொத்துகள், தொழிலாளிகளின் தொகை போன்ற பலவற்றை அறிந்திட முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்ட வாரியாக, ஜாதி வாரியாக, இவ்விவரங்கள் கிடைக்கும். இதன்மூலம் இடஒதுக்கீடு முறையைச் செம்மையாகச் செய்திட முடியும். பட்டியலில் சேர்ப்பது, நீக்குவது போன்ற அரசியல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்திடவும் திட்டங்களைச் சீராகச் செயல்படுத்திடவும் முடியும். சீரமைத்திடும் நடவடிக்கைகளை உருவாக்கிட இது உதவாது, சென்சசில் மிகஅதிக ஊதியம் பெறும் வேலைகளையோ, ஏனைய விவரங்களையோ சேகரிப்பதில்லை என்றாலும், இது ஒரு பெரிய முயற்சிதான்.
(ஓபிசி) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கெடுப்பு விருப்புத்திட்டம் அன்று தம்மால் சட்டப்படியும் திட்டப்படியும் அங்கீகரிக்கப்பட்ட சமூகக் குழுக்களைக் கணக்கிடாமல் இருந்திட தற்கால மாநிலங்களால் முடியாது. ஓபிசியினருக்கு அரசு வேலை வாய்ப்புகளிலும் கல்விச்சாலை-களிலும் இடஒதுக்கீடு முதலிய பல்வேறு நலத்திட்டங்களை அவர்களுக்கு அளிப்பதானது அவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்துவதைக் கட்டாயமாக்குகிறது. சரியான, ஆய்வு முறையிலான ஆதாரங்களை நீதித்துறை அடிக்கடி கேட்கிறது. ஓபிசியினர் பற்றிய கணக்கெடுப்பு அவர்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட பிறகு செய்யப்பட்ட 2001 சென்சசிலேயே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். உண்மையில் அப்போதைய சென்சஸ் தலைமைப் பதிவாளர் இதற்கான யோசனையைத் தெரிவித்தார். ஆனாலும் இந்திய உள்துறை அமைச்சகத்தால் அய்க்கிய ஜனநாயக முன்னணி அரசில் புறந்தள்ளப்பட்டு விட்டது.
எது சரியான தருணம்?
சென்சஸ் பணிகள் தொடங்கப்பட்டுவிட்ட இன்றைய நிலையில் இது சாத்தியமா? எல்லா ஜாதிகள் பற்றிய கணக்கெடுப்பை முழுமையாக நடத்திட தற்போது காலம் கடந்திட்ட நிலை என்றாலும், இதுபற்றிய முடிவு முன்னமேயே எடுக்கப்பட்டிருக்க வேண்டும்தான். ஆனாலும், இப்போதைய நிலையிலும், ஓபிசி பற்றிய கணக்கெடுப்பு சாத்தியப்படக்கூடியதே! ஓபிசிகளின் சட்டப்பூர்வப்பெயரான சமூக, கல்வி ரீதியில் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் பட்டியலை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் தேசியக் கமிஷன் ஏற்கெனவே தயாரித்துள்ளது. நாட்டில் உள்ள ஜாதியினரை அடையாளம்காண இப்பட்டியல் அடிப்-படையாக அமையும். ஒவ்வொரு மாநிலத்திலும் மனித இனக் குழு சங்கத்தின் சார்பாக எடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. மாநில வாரியான ஜாதி, இனங்-களின் பட்டியலை இத்துடன் இணைத்துக்-கொள்ளலாம். மாவட்ட அளவில் இப்படிப்பட்ட பட்டியலைத் தயாரிப்பது சிரமமாக இருக்கலாம். ஆனாலும், தொழில், மொழி போன்ற சென்சஸ் புள்ளி விவரங்கள் சேகரிப்பதில் எந்த சிரமமும் இருக்காது. இது தொடர்பான ஆட்சேபணைகள் எல்லாமே தவறாக வைக்கப்பட்டனவே தவிர, விஷமத்தனமானவையல்ல.
கொள்கை அளவிலான எதிர்ப்புகள் என்ன? பொது வாழ்க்கையில் ஜாதிக்கு தரப்படும் முக்கியத்துவம் புரிந்துகொள்ளக்கூடிய சங்கடம்-தான். ஆனால், எஸ்சி, எஸ்.டியினரைக் கணக்-கிடும் போது ஓபிசியினரைக் கணக்கெடுப்பதில் என்ன மாதிரியான சிரமம் வந்துவிடும்? இதை அரைநூற்றாண்டுக்காலமாக நாம் செய்து வந்திருக்கிறோம். எந்த ஒரு பிரிவு பற்றியும்-அதிகாரப் பூர்வமாகக் கணக்கெடுக்கும் போது எல்லைகள் மாறலாம். ஒவ்வொருவரும் சந்தித்து-வரும் பிரச்சினை தொடர்பானவர்கள் அங்கீ-கரிக்கப்படாமல் இருந்துவரும் நிலையோடு, அவர்களின் கணக்கெடுப்பு தொடர்பான சிரமங்கள் கணக்கிட்டுப் பார்க்கப்பட வேண்டும். மதப்பிரிவினர் தொடர்பான கணக்கெடுப்பு கள் மதச்சாற்பற்ற தன்மைக்கு எதிராக இந்தியாவில் அமைந்துவிடாத வரையில், இனவாரிக் கணக்கெடுப்புகள் அமெரிக்க நாட்டை இனவெறி அரசாக ஆக்காத வரையில், இந்தியாவில் மேலும் ஒரு ஜாதிக் குழுவினரைக் கணக்கெடுப்பதானது இந்தியாவை ஜாதிகளின் சிறைச்சாலை என்று ஆக்கிவிட்டது.
எது எப்படியிருப்பினும், ஜாதிகள் தொடர்பான கண்ணோட்டம் நம் கண்களை மூடாமல் அருகில் சென்று பார்த்திடவும், அடையாளம் கண்டிடவும், சிலரைப் பின்னடைவுக்கு ஒதுக்கு வதற்கும் அது காரணமாக அமைந்திருப்பதைக் கண்டறிந்து அந்த ஜாதி முறை எவ்வாறு சமூகப் பிரிவுகளுக்கும் வர்க்க, பாலின பிளவுகளுக்கும் காரணியாக விளங்குகிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. அதுதான் இன்றைக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அவசியம் ஆகும்.
நன்றி: தி ஹிண்டு 15.5.2010
தமிழில்: அரசு
Saturday, May 15, 2010
பார்பனர்கள் எவளவு முற்போக்கானவர்கள் என்றாலும் சேர்ந்தாரை கொல்லிதான்
தந்தை பெரியார் பார்ப்பனர்களைத் தன் இயக்கத்தில் சேர்ப்பதற்குக் கடைசிவரை மறுத்து விட்டார்.
இது சரியா?
பெரியாரின் இச்செயலால் தீண்டாமை இருக்கிறது என்றும், பெரியாரி-டம் வேறுபாட்டுக்கொள்கை இருக்கிறது என்றும் கூறினால் இதுவும் சரியா?
தொடக்கத்தில் தந்தை பெரியார் ஒரு காங்கிரஸ்காரர், காந்தியவாதி, காந்தி-யின் சீடர். தாழ்த்தப்பட்ட மக்களைப்-பற்றிப் பேசும்போது, காந்தியின் அரிஜன் சேவை, காங்கிரஸ்காரர்களுக்கு மகத்தானதாக இருந்தது. ஆனால் உண்மை வேறுவித-மாக இருந்ததை, பெரியார் உணர்ந்தார்.
டாக்டர் நடேசன், தியாகராயர், பொப்பிலி அரசர் போன்ற பெருமக்கள்; பார்ப்பனர்களால், பார்ப்பனர் அல்-லாதவர்கள் சமூக அளவில் பெரிதும் வஞ்சிக்கப்படுகிறார்கள், பார்ப்பனர் அல்லாதவர்களின் ஆதிக்கமே இதற்குக் காரணம் என்பதை அறிந்து பார்ப்பனர் அல்லாதவர்களின் உரிமைகளை மீட்க இயக்கம் கண்டார்கள். இதில் அவர்கள் கையில் எடுத்த முக்கியப் பிரச்னை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம். இன்று இதை இடஒதுக்கீடு என்கிறோம்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த தந்தை பெரியாரும் இதே வகுப்புவாரிப் பிரச்சினையைக் கையில் எடுத்தார். இதை ஒரு தீர்மானமாக இயற்ற-வேண்டும் என்று அக்கட்சியில் பெரி-யார் வாதாடினார்_போராடினார்.
ஆனால், ராஜாஜி, சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனத் தலைவர்கள், இவ்வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் காங்கிரஸ்கட்சி மாநாட்டில் தீர்மான-மாக நிறைவேறுவதற்குத் தடையாக இருந்தார்கள். 1925ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாநாட்டில், இத்தீர்மானத்-தைக் கொண்டு வரபெரியார் முயன்ற-போது, பார்ப்பனர் அல்லாதவரான திரு.வி.கல்யாணசுந்தரத்தை வைத்தே தீர்மானம் நிறைவேறாமல் செய்த ராஜாஜியால் வெகுண்டெழுந்த பெரி-யார் காங்கிரசைவிட்டு வெளியேறினார்.
அதற்கு முன்னர், சேரன்மாதேவி குருகுலம் நடத்திய வ.வே.சு. அய்யர், அந்தக் குருகுலத்தில் படித்த பார்ப்பனக் குழந்தைகளுக்கு ஓர் இடத்திலும், பார்ப்பனர் அல்லாத குழந்தைகளுக்கு வேறோர் இடத்திலும் பிரித்து வைத்து உணவு கொடுக்கப் பட்டதைப் பார்த்த பெரியார் பார்ப்பனியத் தீண்டாமையை அங்கே கண்டார்.
சுயசிந்தனையாளரான தந்தை பெரியார், ஆயிரம் ஆயிரம் ஆண்டு-களாக வந்தேறிப் பார்ப்பனர்களின் கடவுள், புரோகிதம் ஜாதகம், ஜாதி, மதம் போன்ற மூடநம்பிக்கைகளால் திரா-விடர்கள் வீழ்ச்சியடைந்ததை உணர்ந்-தார். கல்வி, பொருளாதார, சமூக ஆதிக்-கம் பார்ப்பனர்களிடத்தில் இருந்ததை-யும், பெண்ணடிமைத்தனம் சமத்துவ-மற்ற சமூக அமைப்புமுறை பார்ப்பனர்-களால் உருவாக்கப்பட்டு அது நிலை-நிறுத்தப்பட்டிருந்த நிலைமையையும் தெளிவாகப் புரிந்து கொண்ட பெரி-யார், ஆரியர்களினால் வீழ்த்தப்பட்ட திராவிடர்களின் எழுச்சிக்காக இயக்கம் கண்டார். அவரது இயக்கம் ஆரியர்-களுக்கு, பார்ப்பனர்களுக்கு, பார்ப்பனி-யத்திற்-கு எதிராக அமையப்பெற்றது. எனவே, அவர் திராவிடர்களைத் தம் இயக்கத்தில் சேரச் செய்தார், அணி-திரட்டினார். எந்தப் பார்ப்பனர்களுக்கு எதிராக பெரியார் இயக்கம் கண்-டாரோ, அதே பார்ப்பனர்களை அவர் எப்படி தன் இயக்கத்திற்குள் அனுமதிப்பார்? பாம்பை நடுவீட்டில் வைக்கக்கூடாது என்பது பெரியாரின் கொள்கை.
பார்ப்பனர்களில் முற்போக்காளர்கள் இல்லையா? ஜாதி, மதச் சடங்குகளைத் தூக்கி எறிந்தவர்கள் இல்லையா? ஏன், தாழ்த்தப்பட்ட பெண்களைக்கூடத் திருமணம் செய்து கொண்ட பார்ப்-பனர்கள் இருக்கிறார்களே! அவர்களை ஏன் பெரியார் தன் இயக்கத்தில் சேர்க்-கக் கூடாது? _ இப்படியும் கேள்விகளை எழுப்பலாம்.
உண்மைதான்! மறுக்கவில்லை. இதற்குப் பெரியாரின் விடை, புத்தத்தை ஒழிக்க வேண்டும் என்று பார்ப்பனர்-கள், புத்தத்திற்கு மாறி அதை ஒழித்தது-போல இங்கேயும் செய்வார்கள். பெரி-யாரின் இந்த விளக்கம் சிந்தனைக்குரிய தல்லவா?
இந்தியாவிற்குள் ஆரியப் பார்ப்-பனர்கள் நுழைந்த பின்னர் ரிக், யசுர், சாம, அதர்வனம், ஸ்மிருதிகள், புரா-ணங்கள் என்று பல கதைகளைச் சொல்லி, சமத்துவமற்ற படிநிலைச் சமு-தாய அமைப்பை அவர்கள் உருவாக்கி-னார்கள். சூழ்ச்சியினால் பார்ப்பனர்கள் பெற்ற அதிகாரம் திராவிடர்களை வீழ்த்தி அடிமையாக்கியது. இதனைக் கண்ட புத்தர் ஆரியத்-திற்கு எதிரான போராட்டத்தை உரு-வாக்-கினார். சமூக எழுச்சியை உருவாக்-கினார். புத்தரின் ஆரிய எதிர்ப்பையும், சமூக எழுச்சியையும் கண்ட பிம்பி-சாரன், அஜாத சத்ரு, அசோகன் போன்ற பேரரசர்கள் பவுத்தத்தை ஏற்றார்கள். அதனால் ஆரியம் பின்தள்-ள-ப்பட்டது. தம் ஆதிக்கத்தை மீண்டும் கைப்பற்ற, புத்தரை நேரடியாக வீழ்த்த முடியாத நிலையில், ஆரியப் பார்ப்பனர்கள் தாமும் பவுத்தர்களாக, புத்தரின் சங்கத்தில் இணைந்தார்கள்.
முதன் முதலாக சாரிபுத்தனும், மவுத்கல்யாயனாரும் புத்தத்தில் சேர்ந்தார்கள். தொடர்ந்து பார்ப்பனர்-கள் பவுத்தர்களாக மாறி புத்தருடன் சேர்ந்தார்கள். விளைவு...?
புத்தர் மறைந்தபின் கூடிய இரண்-டாம் பவுத்தமகா சபையில் பவுத்தத்தை இரண்டாக உடைத்தார்கள் வஜ்ஜியர்-கள் என்ற பார்ப்பன பவுத்தத் துறவிகள். படிப்படியாக புத்தரின் சமூகச் சிந்தனை, பகுத்தறிவு, சுய சிந்தனைக் கொள்கை-கள், கடவுள் மறுப்பு, பூசை, சடங்குகள் புறக்கணிப்பு போன்ற அனைத்தும் மாற்றப்பட்டன.
புத்தரையே கடவுள் ஆக்கினார்கள். புத்தரின் சமூக எழுச்சிக்கான போர்க்-குணத்தை மறைத்து, ஒழுக்கமாக இருப்-பவனே பவுத்தன் என்று சில உபதேசங்-களை நுழைத்து விட்டார்கள்.
பின்வந்த காலங்களில் சங்கமித்திரர், ஆச்சாரிய புத்ததத்தர், கணதாசர், வேணுதாசர், போதி தருமர், தருமபாலர், ஆச்சாரிய திக்நாகர், ஆச்சாரிய தரும-பாலர், தம்மபாலர் போன்ற பலப்பல பார்ப்பனர்கள் பவுத்தத் துறவிகளாக மாறி, புத்தரின் நேரடி பவுத்தத்தை மாற்றி அமைத்தார்கள். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் நாகார்ஜுனர் என்பவர், புத்தருக்கு நேர் எதிரான ஆரியவாதத்-தைச் சூனியவாதமாகச் சொல்லி மகா-யான பவுத்தம் என்றார். பவுத்தம் வீழ்ந்தது. நேரடியாக எதிர்த்து வெல்லமுடியாத பவுத்தத்தை ஒழிக்கத் தாங்களே பவுத்தர்களாக மாறி, பவுத்தத்திற்குள் நுழைந்து பவுத்தத்தை ஒழித்தவர்கள் பார்ப்பனர்கள். இதைக் கருத்தில் வைத்-துத்தான், புத்தத்தை ஒழிக்க வேண்டும் என்று, பார்ப்பனர்கள் புத்தத்திற்கு மாறி அதை ஒழித்தது போல இங்கேயும் செய்வார்கள் என்றார்.
திராவிடர் கழகம் என்றுதான் பெயர் வைத்தார் பெரியார். தமிழர் கழகம் என்று வைக்கவில்லை. ஏனென்றால் நாங்களும் தமிழர்கள்தான் என்று பார்ப்பனர்கள் தமிழர் கழகத்தில் நுழை-வார்கள். பின் அதை ஒழிப்பார்கள். திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தால் பார்ப்பனர்கள் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டு அங்கே வரமாட்டார்கள். அவர்கள் ஆரியர்கள். அதனால்தான் பெரியார் திராவிடர் கழகம் என்று தன் இயக்கத்தை உருவாக்கினார்.
ஒரு இரசாயனப் பொருள் இன்-னொரு இரசாயனத்துடன் சேர்ந்தால் வேதியியலில் மாற்றம் ஏற்படும். ஒரு திரவம் இன்னொரு திரவத்துடன் சேர்ந்தால் அது கலவையாகும். ஒரு திடப்பொருள் இன்னொரு திடப்பொரு-ளுடன் சேர்ந்தால் எதுவும் ஆகாது.
நெருப்பு மட்டும், தான் எந்தப் பொருளுடன் சேர்கிறதோ, அந்தப் பொருளை எரித்து அழித்துவிடும். சேர்ந்-தாரைக் கொல்லும் குணம் நெருப்புக்கு இருப்பதனால் அதைச் சேர்ந்தாரைக் கொல்லி என்றார் வள்ளுவர்.
பார்ப்பனர்களின் குணமும் அதுதான் என்பதால்தான் தந்தை பெரியார் பார்ப்பனர்கள் எவ்வளவு முற்போக்கானவர்களாக இருந்தாலும், தன்னுடன் சேர்க்காமலே இறுதிவரை இருந்தார். இதில் தீண்டாமையும் இல்லை, வேறுபாட்டுக் கொள்கையும் இல்லை.!
நன்றி: கருஞ்சட்டைத் தமிழர்
ஏப்ரல் _ 16-_30 (2010) பக்கம் -3.
இது சரியா?
பெரியாரின் இச்செயலால் தீண்டாமை இருக்கிறது என்றும், பெரியாரி-டம் வேறுபாட்டுக்கொள்கை இருக்கிறது என்றும் கூறினால் இதுவும் சரியா?
தொடக்கத்தில் தந்தை பெரியார் ஒரு காங்கிரஸ்காரர், காந்தியவாதி, காந்தி-யின் சீடர். தாழ்த்தப்பட்ட மக்களைப்-பற்றிப் பேசும்போது, காந்தியின் அரிஜன் சேவை, காங்கிரஸ்காரர்களுக்கு மகத்தானதாக இருந்தது. ஆனால் உண்மை வேறுவித-மாக இருந்ததை, பெரியார் உணர்ந்தார்.
டாக்டர் நடேசன், தியாகராயர், பொப்பிலி அரசர் போன்ற பெருமக்கள்; பார்ப்பனர்களால், பார்ப்பனர் அல்-லாதவர்கள் சமூக அளவில் பெரிதும் வஞ்சிக்கப்படுகிறார்கள், பார்ப்பனர் அல்லாதவர்களின் ஆதிக்கமே இதற்குக் காரணம் என்பதை அறிந்து பார்ப்பனர் அல்லாதவர்களின் உரிமைகளை மீட்க இயக்கம் கண்டார்கள். இதில் அவர்கள் கையில் எடுத்த முக்கியப் பிரச்னை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம். இன்று இதை இடஒதுக்கீடு என்கிறோம்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த தந்தை பெரியாரும் இதே வகுப்புவாரிப் பிரச்சினையைக் கையில் எடுத்தார். இதை ஒரு தீர்மானமாக இயற்ற-வேண்டும் என்று அக்கட்சியில் பெரி-யார் வாதாடினார்_போராடினார்.
ஆனால், ராஜாஜி, சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனத் தலைவர்கள், இவ்வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் காங்கிரஸ்கட்சி மாநாட்டில் தீர்மான-மாக நிறைவேறுவதற்குத் தடையாக இருந்தார்கள். 1925ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாநாட்டில், இத்தீர்மானத்-தைக் கொண்டு வரபெரியார் முயன்ற-போது, பார்ப்பனர் அல்லாதவரான திரு.வி.கல்யாணசுந்தரத்தை வைத்தே தீர்மானம் நிறைவேறாமல் செய்த ராஜாஜியால் வெகுண்டெழுந்த பெரி-யார் காங்கிரசைவிட்டு வெளியேறினார்.
அதற்கு முன்னர், சேரன்மாதேவி குருகுலம் நடத்திய வ.வே.சு. அய்யர், அந்தக் குருகுலத்தில் படித்த பார்ப்பனக் குழந்தைகளுக்கு ஓர் இடத்திலும், பார்ப்பனர் அல்லாத குழந்தைகளுக்கு வேறோர் இடத்திலும் பிரித்து வைத்து உணவு கொடுக்கப் பட்டதைப் பார்த்த பெரியார் பார்ப்பனியத் தீண்டாமையை அங்கே கண்டார்.
சுயசிந்தனையாளரான தந்தை பெரியார், ஆயிரம் ஆயிரம் ஆண்டு-களாக வந்தேறிப் பார்ப்பனர்களின் கடவுள், புரோகிதம் ஜாதகம், ஜாதி, மதம் போன்ற மூடநம்பிக்கைகளால் திரா-விடர்கள் வீழ்ச்சியடைந்ததை உணர்ந்-தார். கல்வி, பொருளாதார, சமூக ஆதிக்-கம் பார்ப்பனர்களிடத்தில் இருந்ததை-யும், பெண்ணடிமைத்தனம் சமத்துவ-மற்ற சமூக அமைப்புமுறை பார்ப்பனர்-களால் உருவாக்கப்பட்டு அது நிலை-நிறுத்தப்பட்டிருந்த நிலைமையையும் தெளிவாகப் புரிந்து கொண்ட பெரி-யார், ஆரியர்களினால் வீழ்த்தப்பட்ட திராவிடர்களின் எழுச்சிக்காக இயக்கம் கண்டார். அவரது இயக்கம் ஆரியர்-களுக்கு, பார்ப்பனர்களுக்கு, பார்ப்பனி-யத்திற்-கு எதிராக அமையப்பெற்றது. எனவே, அவர் திராவிடர்களைத் தம் இயக்கத்தில் சேரச் செய்தார், அணி-திரட்டினார். எந்தப் பார்ப்பனர்களுக்கு எதிராக பெரியார் இயக்கம் கண்-டாரோ, அதே பார்ப்பனர்களை அவர் எப்படி தன் இயக்கத்திற்குள் அனுமதிப்பார்? பாம்பை நடுவீட்டில் வைக்கக்கூடாது என்பது பெரியாரின் கொள்கை.
பார்ப்பனர்களில் முற்போக்காளர்கள் இல்லையா? ஜாதி, மதச் சடங்குகளைத் தூக்கி எறிந்தவர்கள் இல்லையா? ஏன், தாழ்த்தப்பட்ட பெண்களைக்கூடத் திருமணம் செய்து கொண்ட பார்ப்-பனர்கள் இருக்கிறார்களே! அவர்களை ஏன் பெரியார் தன் இயக்கத்தில் சேர்க்-கக் கூடாது? _ இப்படியும் கேள்விகளை எழுப்பலாம்.
உண்மைதான்! மறுக்கவில்லை. இதற்குப் பெரியாரின் விடை, புத்தத்தை ஒழிக்க வேண்டும் என்று பார்ப்பனர்-கள், புத்தத்திற்கு மாறி அதை ஒழித்தது-போல இங்கேயும் செய்வார்கள். பெரி-யாரின் இந்த விளக்கம் சிந்தனைக்குரிய தல்லவா?
இந்தியாவிற்குள் ஆரியப் பார்ப்-பனர்கள் நுழைந்த பின்னர் ரிக், யசுர், சாம, அதர்வனம், ஸ்மிருதிகள், புரா-ணங்கள் என்று பல கதைகளைச் சொல்லி, சமத்துவமற்ற படிநிலைச் சமு-தாய அமைப்பை அவர்கள் உருவாக்கி-னார்கள். சூழ்ச்சியினால் பார்ப்பனர்கள் பெற்ற அதிகாரம் திராவிடர்களை வீழ்த்தி அடிமையாக்கியது. இதனைக் கண்ட புத்தர் ஆரியத்-திற்கு எதிரான போராட்டத்தை உரு-வாக்-கினார். சமூக எழுச்சியை உருவாக்-கினார். புத்தரின் ஆரிய எதிர்ப்பையும், சமூக எழுச்சியையும் கண்ட பிம்பி-சாரன், அஜாத சத்ரு, அசோகன் போன்ற பேரரசர்கள் பவுத்தத்தை ஏற்றார்கள். அதனால் ஆரியம் பின்தள்-ள-ப்பட்டது. தம் ஆதிக்கத்தை மீண்டும் கைப்பற்ற, புத்தரை நேரடியாக வீழ்த்த முடியாத நிலையில், ஆரியப் பார்ப்பனர்கள் தாமும் பவுத்தர்களாக, புத்தரின் சங்கத்தில் இணைந்தார்கள்.
முதன் முதலாக சாரிபுத்தனும், மவுத்கல்யாயனாரும் புத்தத்தில் சேர்ந்தார்கள். தொடர்ந்து பார்ப்பனர்-கள் பவுத்தர்களாக மாறி புத்தருடன் சேர்ந்தார்கள். விளைவு...?
புத்தர் மறைந்தபின் கூடிய இரண்-டாம் பவுத்தமகா சபையில் பவுத்தத்தை இரண்டாக உடைத்தார்கள் வஜ்ஜியர்-கள் என்ற பார்ப்பன பவுத்தத் துறவிகள். படிப்படியாக புத்தரின் சமூகச் சிந்தனை, பகுத்தறிவு, சுய சிந்தனைக் கொள்கை-கள், கடவுள் மறுப்பு, பூசை, சடங்குகள் புறக்கணிப்பு போன்ற அனைத்தும் மாற்றப்பட்டன.
புத்தரையே கடவுள் ஆக்கினார்கள். புத்தரின் சமூக எழுச்சிக்கான போர்க்-குணத்தை மறைத்து, ஒழுக்கமாக இருப்-பவனே பவுத்தன் என்று சில உபதேசங்-களை நுழைத்து விட்டார்கள்.
பின்வந்த காலங்களில் சங்கமித்திரர், ஆச்சாரிய புத்ததத்தர், கணதாசர், வேணுதாசர், போதி தருமர், தருமபாலர், ஆச்சாரிய திக்நாகர், ஆச்சாரிய தரும-பாலர், தம்மபாலர் போன்ற பலப்பல பார்ப்பனர்கள் பவுத்தத் துறவிகளாக மாறி, புத்தரின் நேரடி பவுத்தத்தை மாற்றி அமைத்தார்கள். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் நாகார்ஜுனர் என்பவர், புத்தருக்கு நேர் எதிரான ஆரியவாதத்-தைச் சூனியவாதமாகச் சொல்லி மகா-யான பவுத்தம் என்றார். பவுத்தம் வீழ்ந்தது. நேரடியாக எதிர்த்து வெல்லமுடியாத பவுத்தத்தை ஒழிக்கத் தாங்களே பவுத்தர்களாக மாறி, பவுத்தத்திற்குள் நுழைந்து பவுத்தத்தை ஒழித்தவர்கள் பார்ப்பனர்கள். இதைக் கருத்தில் வைத்-துத்தான், புத்தத்தை ஒழிக்க வேண்டும் என்று, பார்ப்பனர்கள் புத்தத்திற்கு மாறி அதை ஒழித்தது போல இங்கேயும் செய்வார்கள் என்றார்.
திராவிடர் கழகம் என்றுதான் பெயர் வைத்தார் பெரியார். தமிழர் கழகம் என்று வைக்கவில்லை. ஏனென்றால் நாங்களும் தமிழர்கள்தான் என்று பார்ப்பனர்கள் தமிழர் கழகத்தில் நுழை-வார்கள். பின் அதை ஒழிப்பார்கள். திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தால் பார்ப்பனர்கள் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டு அங்கே வரமாட்டார்கள். அவர்கள் ஆரியர்கள். அதனால்தான் பெரியார் திராவிடர் கழகம் என்று தன் இயக்கத்தை உருவாக்கினார்.
ஒரு இரசாயனப் பொருள் இன்-னொரு இரசாயனத்துடன் சேர்ந்தால் வேதியியலில் மாற்றம் ஏற்படும். ஒரு திரவம் இன்னொரு திரவத்துடன் சேர்ந்தால் அது கலவையாகும். ஒரு திடப்பொருள் இன்னொரு திடப்பொரு-ளுடன் சேர்ந்தால் எதுவும் ஆகாது.
நெருப்பு மட்டும், தான் எந்தப் பொருளுடன் சேர்கிறதோ, அந்தப் பொருளை எரித்து அழித்துவிடும். சேர்ந்-தாரைக் கொல்லும் குணம் நெருப்புக்கு இருப்பதனால் அதைச் சேர்ந்தாரைக் கொல்லி என்றார் வள்ளுவர்.
பார்ப்பனர்களின் குணமும் அதுதான் என்பதால்தான் தந்தை பெரியார் பார்ப்பனர்கள் எவ்வளவு முற்போக்கானவர்களாக இருந்தாலும், தன்னுடன் சேர்க்காமலே இறுதிவரை இருந்தார். இதில் தீண்டாமையும் இல்லை, வேறுபாட்டுக் கொள்கையும் இல்லை.!
நன்றி: கருஞ்சட்டைத் தமிழர்
ஏப்ரல் _ 16-_30 (2010) பக்கம் -3.
Friday, May 14, 2010
சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா?
நாளேடுகளில் இரண்டு வகையான திருமணங்-கள், விளைவுகள்பற்றி தகவல்கள் வெளி வந்துள்ளன.
ஒன்று கருநாடக மாநிலத்தில் நடந்தது. கோலார் தங்கவயலைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்ற 25 வயது -5 அடி 7 அங்குலம் உயரம் உள்ள மண-மகனுக்கும், ஆந்திர மாநிலம் குப்பம் குடிபள்ளி மண்டலத்தில் உள்ள பஜனவாடா கிராமத்தைச் சேர்ந்த 22 வயது_ 2 அடி 4 அங்குலம் உயரமுள்ள ஜி.பாரதிக்கும் நடைபெற்ற திருமணம்.
மணமகனும், மணமகளும் வேறு வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்தாம். இருவரும் சிறுவயது முதலே பழகி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காதலித்துத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள்.
பாரதியை மருமகளாக ஏற்க மணமகனின் பெற்றோர் உடன்படவில்லை. மணமக்களின் உறுதிக்கு முன்னால் அவர்கள் உறுதி தளர்ந்து போய்விட்டது. இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் முடிந்தது என்பது வரவேற்கத்தகுந்த நற்செய்தியாகும்.
இன்னொரு தகவல்_ ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வெளிவந்ததாகும். அம்மாநிலம் கோதர்மா பகுதியைச் சேர்ந்தவர் நிருபமா. இவர் பத்திரிகை-யாளர். வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்தவரை தன் மகள் காதலிக்கிறார் என்று அறிந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் தம் மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். முடிவு, பெற்றோர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொடுமையை என்னவென்று சொல்லுவது! பெண் படித்தவர்_ அதுவும் பத்திரிகையாளர். உலக அனுபவம் அறிந்தவர். அத்தகு ஒரு பெண்ணுக்குத் தனது துணைவரைத் தேடிக் கொள்ள உரிமை இல்லையா?
அப்படியே கோபம் வந்தாலும் பெற்ற மகளையே_ கொலை செய்யும் அளவுக்கு அது வெறி பிடித்துக் கிளம்பவேண்டுமா?
இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணம் அவர்களை ஆட்டிப்படைக்கும் ஜாதி வெறிதானே? எந்த அளவுக்கு ஜாதி என்ற நோய் மனித சமூ-கத்தைச் சீரழித்து இருக்கிறது _ மனித மூளையைக் கொடூரக் கொடுவாளாக மாற்றியிருக்கிறது?
இவ்வளவுக்கும் ஜாதி என்பதற்கு எந்தவிதமான அடையாளம் தான் உண்டா? யாரோ, எந்தக் காலத்திலேயோ உருவாக்கி வைத்து, தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து சொல்லப்பட்டு வந்துள்ளது என்பதைத் தவிர ஜாதிக்கென்று உள்ள தனித்தன்மை என்ன?
ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்துகொள்வதால் குழந்தை பிறப்பதில்லையா? ஒரே ஜாதிக்குள் திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கப் போகும் நலன்களும், வளங்களும்தான் என்ன?
மனிதனுக்கும் மாட்டுக்குமா திருமணம் நடந்தது? மனிதர்களுக்குள்தானே நடக்கிறது. போதிய வயது அடைந்த நிலையில் நடக்கும் திருமணத்தைத் தடை செய்ய பெற்றோராக இருந்தாலும் உரிமை ஏது?
இந்த நாட்டில் அரசியல் தலைவர்களுக்குப் பஞ்சமா? ஊடகங்களுக்குத்தான் குறைச்சலா? எழுத்தாளர்கள் கிடையாதா? சிந்தனையாளர்களும் ஒழிந்து போய்விட்டார்களா?
இவர்களுக்கெல்லாம் சமுதாயப் பொறுப்பு என்பது கிடையவே கிடையாதா? அறிவையும், ஆற்றலையும் செயல்படுத்தும் கடமையைச் செய்ய முன்வந்தால் இந்த நோய்கள் மனிதர்களை அண்டுமா?
மதம்,- கடவுள்,- பக்தி, நம்பிக்கை என்னும் சங்கிலி-களால் இவர்கள் கட்டப்பட்டுக் கிடப்பதால் இவற்-றைக் கடந்து சிந்திக்கவோ செயல்படவோ முடியாத கைதிகள் ஆகிவிட்டார்கள் என்றுதானே பொருள்?
இதற்கு என்னதான் விடிவு? தொடக்கப் பள்ளி முதல் மாணவர்களுக்கு நற்சிந்தனை, நற்பழக்கம், நன்னடத்தை, தன்னம்பிக்கை, தர்க்கம், பொதுப் பார்வை, மனித நேயம், பகுத்தறிவு இன்னோரன்ன வளர்ச்சிப் பாதையில் கொண்டு செலுத்தும் பட்சத்தில் இத்தகு கொடூரங்களுக்கு இடமே இருக்க முடியாது.
மதச்சார்பற்ற கல்வி என்பது கண்டிப்பாக-வேண்டும். மதத்தின் துளி கல்விப் பாலில் கலந்து-விட்டால், மனிதனை மதம் கொள்ளவே செய்யும்.
சுதந்திர நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்-கும் பாதுகாப்பு என்பது மிகவும் கேவலமானதாகும்.
சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா? என்ற தந்தை பெரியார் அவர்களின் கேள்விக்கு இதுவரை ஆளவந்தார்கள், சட்ட விற்பன்னர்கள் பதில் சொல்லவில்லையே!
ஜார்கண்ட் மாநிலத்தில் பத்திரிகையாளரான, படித்த பெண்ணையே ஜாதி பலி கொண்டுவிட்டதே. இதற்குப் பிறகும் குறட்டையா? மகாமகா வெட்கக்-கேடு!
---------- விடுதலை தலையங்கம் (06.05.2010)
ஒன்று கருநாடக மாநிலத்தில் நடந்தது. கோலார் தங்கவயலைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்ற 25 வயது -5 அடி 7 அங்குலம் உயரம் உள்ள மண-மகனுக்கும், ஆந்திர மாநிலம் குப்பம் குடிபள்ளி மண்டலத்தில் உள்ள பஜனவாடா கிராமத்தைச் சேர்ந்த 22 வயது_ 2 அடி 4 அங்குலம் உயரமுள்ள ஜி.பாரதிக்கும் நடைபெற்ற திருமணம்.
மணமகனும், மணமகளும் வேறு வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்தாம். இருவரும் சிறுவயது முதலே பழகி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காதலித்துத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள்.
பாரதியை மருமகளாக ஏற்க மணமகனின் பெற்றோர் உடன்படவில்லை. மணமக்களின் உறுதிக்கு முன்னால் அவர்கள் உறுதி தளர்ந்து போய்விட்டது. இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் முடிந்தது என்பது வரவேற்கத்தகுந்த நற்செய்தியாகும்.
இன்னொரு தகவல்_ ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வெளிவந்ததாகும். அம்மாநிலம் கோதர்மா பகுதியைச் சேர்ந்தவர் நிருபமா. இவர் பத்திரிகை-யாளர். வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்தவரை தன் மகள் காதலிக்கிறார் என்று அறிந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் தம் மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். முடிவு, பெற்றோர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொடுமையை என்னவென்று சொல்லுவது! பெண் படித்தவர்_ அதுவும் பத்திரிகையாளர். உலக அனுபவம் அறிந்தவர். அத்தகு ஒரு பெண்ணுக்குத் தனது துணைவரைத் தேடிக் கொள்ள உரிமை இல்லையா?
அப்படியே கோபம் வந்தாலும் பெற்ற மகளையே_ கொலை செய்யும் அளவுக்கு அது வெறி பிடித்துக் கிளம்பவேண்டுமா?
இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணம் அவர்களை ஆட்டிப்படைக்கும் ஜாதி வெறிதானே? எந்த அளவுக்கு ஜாதி என்ற நோய் மனித சமூ-கத்தைச் சீரழித்து இருக்கிறது _ மனித மூளையைக் கொடூரக் கொடுவாளாக மாற்றியிருக்கிறது?
இவ்வளவுக்கும் ஜாதி என்பதற்கு எந்தவிதமான அடையாளம் தான் உண்டா? யாரோ, எந்தக் காலத்திலேயோ உருவாக்கி வைத்து, தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து சொல்லப்பட்டு வந்துள்ளது என்பதைத் தவிர ஜாதிக்கென்று உள்ள தனித்தன்மை என்ன?
ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்துகொள்வதால் குழந்தை பிறப்பதில்லையா? ஒரே ஜாதிக்குள் திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கப் போகும் நலன்களும், வளங்களும்தான் என்ன?
மனிதனுக்கும் மாட்டுக்குமா திருமணம் நடந்தது? மனிதர்களுக்குள்தானே நடக்கிறது. போதிய வயது அடைந்த நிலையில் நடக்கும் திருமணத்தைத் தடை செய்ய பெற்றோராக இருந்தாலும் உரிமை ஏது?
இந்த நாட்டில் அரசியல் தலைவர்களுக்குப் பஞ்சமா? ஊடகங்களுக்குத்தான் குறைச்சலா? எழுத்தாளர்கள் கிடையாதா? சிந்தனையாளர்களும் ஒழிந்து போய்விட்டார்களா?
இவர்களுக்கெல்லாம் சமுதாயப் பொறுப்பு என்பது கிடையவே கிடையாதா? அறிவையும், ஆற்றலையும் செயல்படுத்தும் கடமையைச் செய்ய முன்வந்தால் இந்த நோய்கள் மனிதர்களை அண்டுமா?
மதம்,- கடவுள்,- பக்தி, நம்பிக்கை என்னும் சங்கிலி-களால் இவர்கள் கட்டப்பட்டுக் கிடப்பதால் இவற்-றைக் கடந்து சிந்திக்கவோ செயல்படவோ முடியாத கைதிகள் ஆகிவிட்டார்கள் என்றுதானே பொருள்?
இதற்கு என்னதான் விடிவு? தொடக்கப் பள்ளி முதல் மாணவர்களுக்கு நற்சிந்தனை, நற்பழக்கம், நன்னடத்தை, தன்னம்பிக்கை, தர்க்கம், பொதுப் பார்வை, மனித நேயம், பகுத்தறிவு இன்னோரன்ன வளர்ச்சிப் பாதையில் கொண்டு செலுத்தும் பட்சத்தில் இத்தகு கொடூரங்களுக்கு இடமே இருக்க முடியாது.
மதச்சார்பற்ற கல்வி என்பது கண்டிப்பாக-வேண்டும். மதத்தின் துளி கல்விப் பாலில் கலந்து-விட்டால், மனிதனை மதம் கொள்ளவே செய்யும்.
சுதந்திர நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்-கும் பாதுகாப்பு என்பது மிகவும் கேவலமானதாகும்.
சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா? என்ற தந்தை பெரியார் அவர்களின் கேள்விக்கு இதுவரை ஆளவந்தார்கள், சட்ட விற்பன்னர்கள் பதில் சொல்லவில்லையே!
ஜார்கண்ட் மாநிலத்தில் பத்திரிகையாளரான, படித்த பெண்ணையே ஜாதி பலி கொண்டுவிட்டதே. இதற்குப் பிறகும் குறட்டையா? மகாமகா வெட்கக்-கேடு!
---------- விடுதலை தலையங்கம் (06.05.2010)
Thursday, May 13, 2010
வானம் உள்ளவரை பூமி உள்ளவரை யார் இங்கு மறப்பார் பெரியாரை
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றமிகு கருத்தைச் சொன்னார் வள்ளுவர்.
எதையும், ஏன்?, எப்படி?, எதற்காக? என்று வினாக்களைத் தொடுத்து விளக்கம்காணுங்கள் என்றார் சிந்தனைச் செம்மல் சாக்ரடீசு.
இதைப் போல், அறிவார்ந்த சமுதாயம் அமைய, பகுத்தறிவு நெறியே பண்பார்ந்த அரிய நெறி என்றார் வெண்தாடி வேந்தர் ஈரோட்டுப் பெரியார் அவர்கள்.
சாதிபேதமற்ற சமுதாயம்,
மூடநம்பிக்கைச் சேற்றின் முடைநாற்றம் இல்லாத சமுதாயம்,
ஆணுக்குப் பெண் அடிமை என்று வீணுக்காய் வீம்பு பேசாத சமுதாயம்,
ஆண்டை அவன், அடிமை அவன் என்ற தீண்டாமைக் கொள்கையைத் தீவைத்துப் பொசுக்குகின்ற சமுதாயம்,
எனப் புதியதோர் சமுதாயம் உருவாக்கப் புரட்சிக் கனலை மூட்டியவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.
ஏனென்றா கேட்கிறீர்கள்? அதை மழிக்க என் நேரத்தையும் பணத்தையும் செலவழிக்க நான் தயாராக இல்லை! இது தந்தை பெரியாரின் மூடி மறைக்காத பதில்!
அவர்தாம் தம் 94_- ஆம் அகவையிலும் இறுதிநாள் வரை, இந்த மண்ணின் மூலை முடுக்கெல்லாம் சூறாவளியாய்ச் சுற்றிச் சுழன்று வந்து, தான் எண்ணிய பகுத்தறிவுச் சிந்தனைகளைத் தோயாமல் துவளாமல் அள்ளி அள்ளி வழங்கினார். கொண்ட கொள்கையில் நிலை குலையாத மலைபோல் நிமிர்ந்து நின்று, கொஞ்சமும் பிறழாமல் கொள்கை வழியில் வென்று காட்டியவர் பெரியார்.
காங்கிரஸ் இயக்கத்தில் பெரியார் இருந்த காலம் அது.
மது விலக்குக் கொள்கைதான் நம் உயிர் மூச்சு, என்று அதி தீவிரமாகக் கூறி வந்தார் காந்தியார்.கேட்ட பெரியார், தன் வீட்டுத் தோட்டத்தில் இருந்த அய்நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை ஒரே நேரத்தில் வெட்டி வீழ்த்தினார்.
மரங்கள் இருந்தால்தான் கள் இறக்க முடியும்; மது இறக்க முடியும்; அதனால் வேரோடு வெட்டி வீழ்த்திவிட்டேன் என்று கட்சிக் கடமை போற்றும் திடமான கொள்கைத் துடிப்புடன் உடனடியாகச் செயல்பட்டவர்தான் தந்தை பெரியார்.
எங்கோ கேரள மாநில வைக்கம் பகுதியில், தீண்டாமை எனும் தீய நாகம் சீறிப் படமெடுத்தாடுகின்றது என்று கேள்விப்பட்டவுடன் கிளர்ந்தெழுந்து, அங்கே சென்று மாபெரும் அறப்போர் நடத்திச் சிறைவாசம் ஏற்றவர்தான் கொள்கைக் கோமான் தந்தை பெரியார்.
சமுதாயத்தில் சமத்துவம் தேவை; குறிப்பாகக் கணவனும் மனைவியும் இல்வாழ்வுச் சோலையில் சம நண்பர்களே தவிர, ஆணுக்குப் பெண் ஏது அடிமை? என்று அழுத்தந்திருத்தமாகக் கேட்டவர்தான் அவர்.
அய்யோ, எங்களுக்குப் பெண் குழந்தைகளே வேண்டாம்; ஆண் குழந்தைகள் மட்டுமே வேண்டும்! என்று பிதற்றும் பேதையர்க்குப் பாடம் புகட்ட ஒரு புதுச்சட்டத்தையே உருவாக்க வேண்டும் என்றார் அவர்.
நாட்டில் இருக்கும் வேலை வாய்ப்பில், சொத்துரிமையில் அய்ம்பது சதவிகிதத்தை மகளிர்க்கே ஒதுக்கிவிட்டால், ஏன் இந்தப் பேத உணர்வு இருக்கப் போகிறது? என்று கேட்டார்.
மேடையில் மட்டும் இப்படிப் பேசிக் கொண்டிராமல் செய்கையிலும் புரட்சி செய்தவர்தான் தந்தை பெரியார்.
ஆண்களைப் போல் பெண்களும் உடை அணியவேண்டும் என்ற புதுமைக் குரல் கொடுத்த தந்தை பெரியார், அதைத் தானே நடமுறைப்படுத்த வேண்டி தன் துணைவியார் நாகம்மையார் அவர்கள் அணிந்து கொள்ள லுங்கி வாங்கிக் கொடுத்தாராம். அந்த அம்மையாரும், லுங்கியைக் கட்டிக் கொண்டு, வீட்டிலிருந்து வெளியே வரக் கூச்சப்பட்டு
சில நாட்கள் இல்லத்துக்குள்ளேயே இருந்தாராம்!
ஆடம்பரம் அறவே கூடாது; எளிமைதான் ஏற்றம் தரும் என்பதிலும் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டவர் பெரியார்.
ஒரு முறை அவர் தன் வயதான காலத்திலும், இரயிலில் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்து வந்ததைக் கண்ட அவருடைய இயக்கத் தொண்டர்கள், என்னய்யா இது? மூன்றாம் வகுப்புப் பெட்டியில் வருகிறீர்களே? இது சரிதானா? என்று கேட்டனராம்.
என்ன செய்வது? இப்படி மூன்றாம் வகுப்பில் வருவது எனக்கு மட்டும் பிடிக்கிறதா? நான் புறப்பட்டு இரயில் நிலையம் சென்று நான்காம் வகுப்பு டிக்கட் உள்ளதா? என்று கேட்டேன். இல்லை என்றார்கள். பின்னர் மூன்றாம் வகுப்பு டிக்கட் வாங்கி வந்திருக்கிறேன். அதனால் என் உடம்பு என்ன தேய்ந்துவிட்டதா? என்று திருப்பிக் கேட்டாராம் தந்தை பெரியார். இங்ஙனம் எளிமைக்கும் சிக்கனத்திற்கும் எடுத்துக் காட்டாய்த் திகழ்ந்தார் அவர்.
அந்த வகையில் கொஞ்சம் கொஞ்சமாகச் சிக்கனப்படுத்திச் சேர்த்து வைத்த பெரியாரின் சொத்தெல்லாம் இன்று இலவச மருத்துவ மனைகளாக, அனாதைச் சிறார் இல்லங்களாக, மகளிர் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளாக வடிவமெடுத்து, தமிழ்ச் சமுதாயத்தின் நலிந்த பிரிவினர்க்கு ஒப்பரிய தொண்டாற்றி வருகின்றன. தந்தை பெரியார் அந்தக்
கட்டடங்களின் உருவில் நிரந்தரமாய் நம்முன்னர்ச் சிரித்துக் கொண்டிருக்கிறார்.
நாம் எண்ணிய பின்னர் எண்ணத்தின் முடிவுகளைத் திண்ணிய வகையில் சொல்வதும், நிறைவேற்றுவதும் தந்தை பெரியாருக்கே உரித்தானவை.
சிந்தனைச் செம்மல் ரூசோதான் சொன்னார்: சிந்திக்கத் தெரியாதவன் முட்டாள்; சிந்திக்காமல் இருப்பவன் அறிவிலி; சிந்திக்க மறுப்பவன் கோழை; சிந்தித்ததைத் திரித்துக் கூறுபவன் வஞ்சகன்; சிந்தித்தித்தைச் சிந்தித்தபடி, சிந்தாமல் சமுதாயத்திற்கு விருந்தாக்குபவனே மாமேதை!
பல்கலைக் கழகப் பட்டம் பெறாத அத்தகைய ஒப்பரிய மாமேதைதான் தந்தை பெரியார் அவர்கள்.
-அவரே ஓர் அற்புத சகாப்தம்!
- உழைப்பவர் உலகம்,
ஏப்ரல் 2010
ஏப்ரல் 2010
நடிப்பு என்றால் என்ன? உண்மையல்ல என்பதன் மறுபெயர்தானே!
ராணி இதழில் உங்க-ளோடு பேசுகிறேன் எனும் தலைப்பில் நடிகரும், ஓவி-யருமான
சிவகுமார் தொடர்ந்து எழுதி வருகிறார்.
இந்த வார இதழில் (16.5.2010) அவர் குறிப்பிட்ட ஒரு கருத்து சுரீர் என்று தைக்கிறது. திரையு-லகத்தில் மின்னிக் கொண்டே, அந்த மோகத் திரையைக் கிழித்துள்ளது _ அசாதாரண-மானதே!
சினிமாவில் காட்டப் படும் அத்தனையும் உண் மையில் மாயை, கட்டுக் கதை என்பதை அறிவுப் பூர்வ மாக மக்கள் நம்ப ஆரம்பித்துவிட்டால், சினிமாவுக்கு உள்ள கவர்ச்சி அடியோடு அழிந்து விடும். மக்களின் அறி யாமை தொடரும்வரை அரசியலுக்கும், சினிமா வுக்கும் அழிவில்லை என்ற கருத்தினைப் பதிவு செய்துள்ளார் நடிகர் சிவகுமார்.
உண்மைதானே; சினிமா ஒரு தொழில்; அதில் நடிப்ப-தெல்லாம் தொழிலைச் சார்ந்தது என்பதைத் தவிர அதற்குமேல் என்ன வாழ்-கிறது?
முதலில் ஒன்றைத் தெளி-வாகப் புரிந்துகொள்ள-வேண்டும். நடிப்பு என்றால் என்ன? உண்மையல்ல என்பதன் மறுபெயர்தானே!
அந்த நடிப்பை நிஜம் என்று நினைத்துவிட்டால் விபரீதம்தானே!
இப்பொழுதெல்லாம் மக்களிடத்தில் தம்மைப்பற்-றிய வடிவம் (இமேஜ்) பேருருப் பெறவேண்டும் _ மக்களின் மனத்தில் ஆணி அடித்து உட்காரவேண்டும் _ அதன்மூலம் கிடைக்கும் பாமரத்தனமான செல்-வாக்கை அரசியலுக்கு மினுமினுப்பாகப் பயன்-படுத்திக் கொள்ளவேண்டும் _ அதன்மூலம் இந்த நாட்டையே ஆளவேண்-டும் என்ற மனப்பால் குடித்து, வேண்டுமென்றே திட்ட-மிட்டு சில வசனங்களைக் கதாநாயகன் பேசுவதுபோல சித்திரிக்கிறார்கள்.
நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்னதற்குச் சமம் என்பது போன்றவை எல்-லாம் இந்த ரகத்தைச் சேர்ந்ததுதான்.
எப்பொழுது வரவேண் டுமோ, அப்பொழுது வரு வேன்! என்பதெல்லாம் இரு பொருளில் உச்சரிக்கப்படும் வார்த்தைகள்.
இப்பொழுது இந்தக் களத்தில் போட்டிகள் அதி-கரித்துவிட்டன. சினிமாவில் நடிக்கும் கதாநாயகர்கள் பெரும்பாலோர் அடுத்த முதலமைச்சர் நாம்தான் என்ற மனப்பான்மையில் மிதக்கின்றனர்.
நாட்டுக்காகப் பாடுபட்டு இருக்கவேண்டாம்; தியாகம் செய்திருக்கவேண்டாம்; சில வசனங்களைப் பேசினாலே போதும்; இந்த அப்பாவிப் பாமர மக்களின் வாக்குகளை சுலபமாக, சாமர்த்தியமாக ஜேப்படி செய்துவிடலாம் என்று நினைக்கும் போக்கை மனதில் கொண்டுதான் நடிகர் சிவகுமார் நறுக்-கென்று பட்டுத் தெறித்தது-போல் கூறியிருக்கிறார்.
நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் சினிமாவும் ஒன்று என்று வாழப்பாடியில் (19.5.1962) 48 ஆண்டுகளுக்குமுன்பே தந்தை பெரியார் கூறிய தொலைநோக்கை என்ன வென்று கூறுவது!
இந்த வார இதழில் (16.5.2010) அவர் குறிப்பிட்ட ஒரு கருத்து சுரீர் என்று தைக்கிறது. திரையு-லகத்தில் மின்னிக் கொண்டே, அந்த மோகத் திரையைக் கிழித்துள்ளது _ அசாதாரண-மானதே!
சினிமாவில் காட்டப் படும் அத்தனையும் உண் மையில் மாயை, கட்டுக் கதை என்பதை அறிவுப் பூர்வ மாக மக்கள் நம்ப ஆரம்பித்துவிட்டால், சினிமாவுக்கு உள்ள கவர்ச்சி அடியோடு அழிந்து விடும். மக்களின் அறி யாமை தொடரும்வரை அரசியலுக்கும், சினிமா வுக்கும் அழிவில்லை என்ற கருத்தினைப் பதிவு செய்துள்ளார் நடிகர் சிவகுமார்.
உண்மைதானே; சினிமா ஒரு தொழில்; அதில் நடிப்ப-தெல்லாம் தொழிலைச் சார்ந்தது என்பதைத் தவிர அதற்குமேல் என்ன வாழ்-கிறது?
முதலில் ஒன்றைத் தெளி-வாகப் புரிந்துகொள்ள-வேண்டும். நடிப்பு என்றால் என்ன? உண்மையல்ல என்பதன் மறுபெயர்தானே!
அந்த நடிப்பை நிஜம் என்று நினைத்துவிட்டால் விபரீதம்தானே!
இப்பொழுதெல்லாம் மக்களிடத்தில் தம்மைப்பற்-றிய வடிவம் (இமேஜ்) பேருருப் பெறவேண்டும் _ மக்களின் மனத்தில் ஆணி அடித்து உட்காரவேண்டும் _ அதன்மூலம் கிடைக்கும் பாமரத்தனமான செல்-வாக்கை அரசியலுக்கு மினுமினுப்பாகப் பயன்-படுத்திக் கொள்ளவேண்டும் _ அதன்மூலம் இந்த நாட்டையே ஆளவேண்-டும் என்ற மனப்பால் குடித்து, வேண்டுமென்றே திட்ட-மிட்டு சில வசனங்களைக் கதாநாயகன் பேசுவதுபோல சித்திரிக்கிறார்கள்.
நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்னதற்குச் சமம் என்பது போன்றவை எல்-லாம் இந்த ரகத்தைச் சேர்ந்ததுதான்.
எப்பொழுது வரவேண் டுமோ, அப்பொழுது வரு வேன்! என்பதெல்லாம் இரு பொருளில் உச்சரிக்கப்படும் வார்த்தைகள்.
இப்பொழுது இந்தக் களத்தில் போட்டிகள் அதி-கரித்துவிட்டன. சினிமாவில் நடிக்கும் கதாநாயகர்கள் பெரும்பாலோர் அடுத்த முதலமைச்சர் நாம்தான் என்ற மனப்பான்மையில் மிதக்கின்றனர்.
நாட்டுக்காகப் பாடுபட்டு இருக்கவேண்டாம்; தியாகம் செய்திருக்கவேண்டாம்; சில வசனங்களைப் பேசினாலே போதும்; இந்த அப்பாவிப் பாமர மக்களின் வாக்குகளை சுலபமாக, சாமர்த்தியமாக ஜேப்படி செய்துவிடலாம் என்று நினைக்கும் போக்கை மனதில் கொண்டுதான் நடிகர் சிவகுமார் நறுக்-கென்று பட்டுத் தெறித்தது-போல் கூறியிருக்கிறார்.
நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் சினிமாவும் ஒன்று என்று வாழப்பாடியில் (19.5.1962) 48 ஆண்டுகளுக்குமுன்பே தந்தை பெரியார் கூறிய தொலைநோக்கை என்ன வென்று கூறுவது!
- விடுதலை(13.05.2010) மயிலாடன்
Tuesday, May 11, 2010
பார்ப்பனர்கள் புராண இதிகாச சாத்திரக் குப்பைகளை மாலையாக போட்டுக்கொண்டுதான் திரிகிறார்கள்
உலகத் தமிழ் மாநாட்டில் பக்தி இலக்கியங்-களுக்கு இடம் இருக்கவேண்டும்;
தமிழில் பக்தி இலக்கியங்களுக்கு முக்கிய இடம் உண்டு; அவற்றையெல்லாம்
ஒதுக்கிவிட்டு முதலமைச்சர் தாம் சார்ந்த திராவிட இயக்கக் கொள்கைகளை
முன்னிறுத்தக் கூடாது என்கிற பாணியில் பார்ப்பன ஏடுகள் (இவ்வார கல்கி
உள்பட) எழுதிக் கொண்டு இருக்கின்றன.
இன்னொரு பக்கத்தில் புராண கதாகாலட்-சேபங்கள் நாட்டில் அதிகம் நடந்துகொண்டே இருக்கவேண்டும். தார்மீக நெறிகளைத் திரும்பத் திரும்ப நினைவூட்டுவது இன்றைய சமு-தாயத்துக்கு மிகமிக அவசியம் _ அந்த நெறிகள் மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன என்று கல்கி (16.5.2010) கூறுகிறது.
எங்கு சுற்றி வந்தாலும் இந்தப் பார்ப்பனர்கள் புராண இதிகாச சாத்திரக் குப்பைகளை மாலையாக மாட்டிக்கொண்டு அலைவதில்தான் குறியாக இருக்கிறார்கள்.
உலகத் தமிழ் மாநாட்டைப் பொறுத்தவரை பக்தி இலக்கியங்களுக்கு உரிய இடம் உண்டு என்று நிதியமைச்சர் மாண்புமிகு க. அன்பழகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
உலகத்தமிழ் மாநாடு என்பது தமிழை மேல் நோக்கி, விஞ்ஞானப் பார்வையோடு அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லுவதற்கான உருப்-படியான திட்டங்கள் வகுக்கப்படுவதாக இருக்க-வேண்டும். அத்தகு எதிர்பார்ப்பு தான் பய-னுள்ளது. அதை விட்டுவிட்டு இன்னும் கந்த புராணங்கள்பற்றி ஆய்வு செய்வதும், அதன் இலக்கண இலக்கியம், உவமானம், உவமேயங்-களை எடுத்துக்காட்டுவதும், நம்மைப் பின்னோக்கி இழுத்துச் செல்லத்தான் பயன்படும்.
கந்த புராணம் போன்றவற்றை ஆய்வு செய்வது என்றால், அதன் பகுத்தறிவுக்கும், ஒழுக்கத்துக்கும் முரண்பாடான உள்ளீடுகளையும் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட-வேண்டும் அதற்கு கல்கி கூட்டம், இராமகோபாலன் வகையறாக்கள் தயார்தானா?
கந்த புராணத்தை விஞ்சிய புளுகு வேறு எந்த புராணத்திலும் கிடையாது என்ற சொலவடை வழக்கில் இருக்கிறதே.
புராண கதாகாலட்சேபங்கள் தொடர்ந்து நாட்டில் நடைபெற்றால்தான் தார்மீக நெறிகள் காப்பாற்றப்படுமாம்; இதனைப் படிக்கும் புத்தியுள்ள எவரும் வாயால் சிரிக்கமாட்டார்கள்.
திருவிளையாடல் புராணத்தில் மாபாதகம் தீர்த்த படலத்தை எடுத்துப் பிரச்சாரம் செய்தால், கேட்பவர்களின் ஒழுக்கம் எங்கே போகும்?
அன்னையைப் புணர்ந்து தாதை
குரவனாம் அந்த ணாளன்
தன்னையும் கொன்ற பாவம்
தணித்து வீடளித்த தென்றால்
பின்னைநீ விழிநோய் குட்டம்
பெருவயிறீளை வெப்பென்று
இன்னநோய் தீர்க்கும் தீர்த்தம்
என்பதோ இதற்கு மேன்மை
இந்தப் பொற்றாமரைக் குளம் இருக்கிறது. இதன் சிறப்பு என்ன தெரியுமா? தாயைப் புணர்ந்து, தந்தையைக் கொன்ற பார்ப்பானுக்கு மோட்சம் அளித்த பெருமையுடையது என்று திருவிளையாடல் புராணம் மதுரையம்பதி புண்ணியக் குளத்தின் பெருமையைப் பேசுகிறது.
எடுத்துக்காட்டுக்கு ஒன்று இது. எடுத்துக் கொட்டினால் ஏட்டில் அடங்காது. அத்திப் பழத்தைப் புட்டால் அத்தனையும் சொத்தை என்பது போன்றதுதான் இந்தப் புராண இதிகாச_ சத் கலாட்சேபங்கள்.
இவற்றைத்தான் விடாது மக்களுக்குச் சொல்-லிக் கொடுக்கவேண்டுமாம். அப்பொழுதுதான் தார்மீக நெறி கட்டிக் காப்பாற்றப்படுமாம்.
தெய்வத்தின் பெயரில் ஏற்றிக் கூறினால் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வார்கள் என்ற மூடத் தைரியத்தில்தான் கல்கிகள் கதைக்கின்றன என்பதை நம் மக்கள்
உணர்வார்களாக!
--------- விடுதலை தலையங்கம் (11.05.2010)
இன்னொரு பக்கத்தில் புராண கதாகாலட்-சேபங்கள் நாட்டில் அதிகம் நடந்துகொண்டே இருக்கவேண்டும். தார்மீக நெறிகளைத் திரும்பத் திரும்ப நினைவூட்டுவது இன்றைய சமு-தாயத்துக்கு மிகமிக அவசியம் _ அந்த நெறிகள் மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன என்று கல்கி (16.5.2010) கூறுகிறது.
எங்கு சுற்றி வந்தாலும் இந்தப் பார்ப்பனர்கள் புராண இதிகாச சாத்திரக் குப்பைகளை மாலையாக மாட்டிக்கொண்டு அலைவதில்தான் குறியாக இருக்கிறார்கள்.
உலகத் தமிழ் மாநாட்டைப் பொறுத்தவரை பக்தி இலக்கியங்களுக்கு உரிய இடம் உண்டு என்று நிதியமைச்சர் மாண்புமிகு க. அன்பழகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
உலகத்தமிழ் மாநாடு என்பது தமிழை மேல் நோக்கி, விஞ்ஞானப் பார்வையோடு அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லுவதற்கான உருப்-படியான திட்டங்கள் வகுக்கப்படுவதாக இருக்க-வேண்டும். அத்தகு எதிர்பார்ப்பு தான் பய-னுள்ளது. அதை விட்டுவிட்டு இன்னும் கந்த புராணங்கள்பற்றி ஆய்வு செய்வதும், அதன் இலக்கண இலக்கியம், உவமானம், உவமேயங்-களை எடுத்துக்காட்டுவதும், நம்மைப் பின்னோக்கி இழுத்துச் செல்லத்தான் பயன்படும்.
கந்த புராணம் போன்றவற்றை ஆய்வு செய்வது என்றால், அதன் பகுத்தறிவுக்கும், ஒழுக்கத்துக்கும் முரண்பாடான உள்ளீடுகளையும் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட-வேண்டும் அதற்கு கல்கி கூட்டம், இராமகோபாலன் வகையறாக்கள் தயார்தானா?
கந்த புராணத்தை விஞ்சிய புளுகு வேறு எந்த புராணத்திலும் கிடையாது என்ற சொலவடை வழக்கில் இருக்கிறதே.
புராண கதாகாலட்சேபங்கள் தொடர்ந்து நாட்டில் நடைபெற்றால்தான் தார்மீக நெறிகள் காப்பாற்றப்படுமாம்; இதனைப் படிக்கும் புத்தியுள்ள எவரும் வாயால் சிரிக்கமாட்டார்கள்.
திருவிளையாடல் புராணத்தில் மாபாதகம் தீர்த்த படலத்தை எடுத்துப் பிரச்சாரம் செய்தால், கேட்பவர்களின் ஒழுக்கம் எங்கே போகும்?
அன்னையைப் புணர்ந்து தாதை
குரவனாம் அந்த ணாளன்
தன்னையும் கொன்ற பாவம்
தணித்து வீடளித்த தென்றால்
பின்னைநீ விழிநோய் குட்டம்
பெருவயிறீளை வெப்பென்று
இன்னநோய் தீர்க்கும் தீர்த்தம்
என்பதோ இதற்கு மேன்மை
இந்தப் பொற்றாமரைக் குளம் இருக்கிறது. இதன் சிறப்பு என்ன தெரியுமா? தாயைப் புணர்ந்து, தந்தையைக் கொன்ற பார்ப்பானுக்கு மோட்சம் அளித்த பெருமையுடையது என்று திருவிளையாடல் புராணம் மதுரையம்பதி புண்ணியக் குளத்தின் பெருமையைப் பேசுகிறது.
எடுத்துக்காட்டுக்கு ஒன்று இது. எடுத்துக் கொட்டினால் ஏட்டில் அடங்காது. அத்திப் பழத்தைப் புட்டால் அத்தனையும் சொத்தை என்பது போன்றதுதான் இந்தப் புராண இதிகாச_ சத் கலாட்சேபங்கள்.
இவற்றைத்தான் விடாது மக்களுக்குச் சொல்-லிக் கொடுக்கவேண்டுமாம். அப்பொழுதுதான் தார்மீக நெறி கட்டிக் காப்பாற்றப்படுமாம்.
தெய்வத்தின் பெயரில் ஏற்றிக் கூறினால் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வார்கள் என்ற மூடத் தைரியத்தில்தான் கல்கிகள் கதைக்கின்றன என்பதை நம் மக்கள்
உணர்வார்களாக!
--------- விடுதலை தலையங்கம் (11.05.2010)
ஹமாம் சோப் விளம்பரம்...தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பார்களா?
ஹமாம் சோப் விளம்-பரம் ஒன்று தொலைக்-காட்சிகளில் வருகிறதே_-
கவனித்-தீர்களா? கவனித்-தாலும் அதில் கேரம் விளை-யாடும் பார்ப்பனர்
உச்சரித்த வார்த்தை-களைக் கேட்டீர்களா?
அப்படியெல்லாம்_- கூர்மையாக எங்கே கவனிக்கப் போகிறீர்-கள்? எதைக் கவனிக்க-வேண்-டுமோ அதைக் கவனிக்க மாட்டீர்கள்; வேறு ஏதா-வது அரை-குறைச் சமாச்சாரங்கள் என்றால் கவனம் வெகு ஜோராக இருக்-கும்.
ஒரு பார்ப்பனக் குடும்பம். குடும்பத்துச் சிறுமியின் கையில் சொறி ஏற்படுகிறது_- என்ன காரணம்? எப்-படி வந்தது என்று ஆராய்ச்சி. ஒவ்வொரு-வரும் ஒரு காரணத்-தைச் சொல்லுகிறார்கள்.
தெரு நாயோடு விளையாடினால் சொறி வரத்தான் செய்-யும் என்கிறார் பணிப்-பெண்! ஹமாம் சோப் இருக்க ஏன் பயம் என்று சொல்ல வரு-வது விளம்-பரம்.
சரி... அந்தப் பெரிய மனுஷாள் மாமனார் என்ன சொன்னா?
அதுதான் முக்கிய-மாகக் குறிப்பிடப்பட வேண்டியது.
ஆட்டோவில் அந்தக் குழந்தைகளோட ஒட்டிண்டு போறாளே அதுதான் காரணம்! என்று அந்தக் கொலம்-பஸ் கண்டுபிடித்துச் சொன்னார்.
அந்தக் குழந்தைக-ளோடு... அர்த்தம் புரி-கிறதா? அக்ரகாரத்துச் சிறுமி அந்தக் குழந்தை-களோட_-- அதாவது சேரிக் குழந்தை-க-ளோடு ஒட்டிண்டு போறாளாம்.
சேரிப் பொண்-ணுன்னா அவாள் கண்ணோட்டத்தில் சுகா-தாரம் அற்றவள், சொறி-பிடித்தவள். அப்படிப்-பட்ட அந்தப் பெண்-ணோடு ஒட்டிக்-கொண்டு போனதாலே-தான் நம்ப ஆத்துப் பொண்ணுக்கு இந்தச் சொறி என்பதைத்-தான் சொல்லாமல் சொல்ல வருகிறார்.
இந்த விளம்பரத்-தைத் தடை செய்ய-வேண்டும் என்பது ஒரு பக்கம்; இதற்குக் காரணமானவர்-கள்மீது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின்கீழ் ஏன் நடவடிக்கை எடுக்-கக்கூடாது என்ற கேள்-வியை எழுகிறதே! செய்வார்களா?
- மயிலாடன் விடுதலை (11.05.2010)
அப்படியெல்லாம்_- கூர்மையாக எங்கே கவனிக்கப் போகிறீர்-கள்? எதைக் கவனிக்க-வேண்-டுமோ அதைக் கவனிக்க மாட்டீர்கள்; வேறு ஏதா-வது அரை-குறைச் சமாச்சாரங்கள் என்றால் கவனம் வெகு ஜோராக இருக்-கும்.
ஒரு பார்ப்பனக் குடும்பம். குடும்பத்துச் சிறுமியின் கையில் சொறி ஏற்படுகிறது_- என்ன காரணம்? எப்-படி வந்தது என்று ஆராய்ச்சி. ஒவ்வொரு-வரும் ஒரு காரணத்-தைச் சொல்லுகிறார்கள்.
தெரு நாயோடு விளையாடினால் சொறி வரத்தான் செய்-யும் என்கிறார் பணிப்-பெண்! ஹமாம் சோப் இருக்க ஏன் பயம் என்று சொல்ல வரு-வது விளம்-பரம்.
சரி... அந்தப் பெரிய மனுஷாள் மாமனார் என்ன சொன்னா?
அதுதான் முக்கிய-மாகக் குறிப்பிடப்பட வேண்டியது.
ஆட்டோவில் அந்தக் குழந்தைகளோட ஒட்டிண்டு போறாளே அதுதான் காரணம்! என்று அந்தக் கொலம்-பஸ் கண்டுபிடித்துச் சொன்னார்.
அந்தக் குழந்தைக-ளோடு... அர்த்தம் புரி-கிறதா? அக்ரகாரத்துச் சிறுமி அந்தக் குழந்தை-களோட_-- அதாவது சேரிக் குழந்தை-க-ளோடு ஒட்டிண்டு போறாளாம்.
சேரிப் பொண்-ணுன்னா அவாள் கண்ணோட்டத்தில் சுகா-தாரம் அற்றவள், சொறி-பிடித்தவள். அப்படிப்-பட்ட அந்தப் பெண்-ணோடு ஒட்டிக்-கொண்டு போனதாலே-தான் நம்ப ஆத்துப் பொண்ணுக்கு இந்தச் சொறி என்பதைத்-தான் சொல்லாமல் சொல்ல வருகிறார்.
இந்த விளம்பரத்-தைத் தடை செய்ய-வேண்டும் என்பது ஒரு பக்கம்; இதற்குக் காரணமானவர்-கள்மீது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின்கீழ் ஏன் நடவடிக்கை எடுக்-கக்கூடாது என்ற கேள்-வியை எழுகிறதே! செய்வார்களா?
- மயிலாடன் விடுதலை (11.05.2010)
Monday, May 10, 2010
அஜ்மீர் குண்டு வெடிப்புக்கு ஆர்.எஸ்.எஸே காரணம்
இந்தியாவின் பல மாநிலங்களிலும் நடைபெற்ற குண்டு வெடிப்புகள், சதிச் செயல்களுக்கு ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்க் கும்பலே காரணமாக இருந்திருக்கிறது; வன்முறைகளுக்குக் காரணமான இந்தக் கும்பலே பழியை மற்றவர்கள்மீது சுமத்தித் தப்பிக்கும் கீழ்த்தரமான வேலைகளில் இறங்கி வந்துள்ளது என்பதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.
தென்காசியில் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டை வெடிக்க செய்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்று பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. சதுமுகை என்னும் ஊரில் விநாயகன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு, பழியை மற்றவர்கள்மீது சுமத்தப் போட் டிருந்த திட்டமும் பிறகு அம்பலமானதுண்டு.
சூரத் நகரில் மரங்களில் எல்லாம் வெடிகுண்டுகள் இருந்ததை குஜராத் மாநிலக் காவல்துறை கண்டுபிடித்தது என்று சொல்லப்பட்டது. உண்மை வேறுவிதமானது என்றும் தெரியவந்தது. கான்பூர், மகாராட்டிரம் நந்தித், மாலேகான் போன்ற இடங்களிலும் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்தவர்களும் இந்தச் சங்பரிவார்க் கும்பலே என்று கண்டுபிடிக்கப்பட்டது.
2007ஆம் ஆண்டில் அஜ்மீர் தர்காவுக்கு அருகில் பள்ளி வாசலில் ரமலான் நோன்பு திறக்கும் வேளையில் குண்டு வெடித்தது. இதற்குக் காரணம் முசுலிம்களே என்று கதை கட்டினார்கள். முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யவும் பட்டனர். ராஜஸ்தானில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க., முசுலிம் இளைஞர்களைப் படாத பாடுபடுத்தியது. மூன்ற ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர். தேவேந்திர தாஸ் குப்தா, சந்திரசேகர் என்ற இரண்டு ஆர்.எஸ்.எஸ். வன்முறையாளர்கள்தான் அஜ்மீர் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். மாலேகான் குண்டுவெடிப்புச் சதிகாரர்களான பெண் சாமியார் பிரக்யாசிங் தாக்கூர் மற்றும் இந்திய இராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டு, இந்துத்துவாதிகளுக்கு இராணுவப் பயிற்சியும் அளித்துக் கொண்டிருந்த -_ இசுரேல் வரை சென்று இந்துத்துவா ராஜ்-ஜியத்தை உண்டாக்க சதித் திட்டம் தீட்டிய ஸ்ரீகாந்த் புரோகித்துக்கும் இந்த இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த இருவரும் மொபைல் தொலைப்பேசி சிம் கார்டை வைத்தே கண்டுபிடிக்கப்பட் டுள்ளனர்.
தோண்டத் தோண்ட புதையல் கிடைப்பது போல ஒவ்வொரு தகவலாக வெளிவந்து கொண்டே இருக்கின்றது. நாடு தழுவிய அளவில் கலவரங்களை ஏற்படுத்துவதுதான் இவர்களின் திட்டம். அதன்மூலம் வாக்கு வங்கியை இந்துத்துவா என்று ஓர் அணியும், மற்ற சிறுபான்மையினர் என்பவர்கள் இன்னொரு அணி என்றும் பிரித்துக் காட்டி இந்துக்களின் பிரதிநிதிகள் தாங்களே என்று (குஜராத் பாணி) மார்தட்டி ஆட்சியைப் பிடிக்கலாம்; இந்து சாம்ராஜ்ஜியத்தை அமைக்கலாம் என்பதுதான் அவர்களின் அந்தரங்கத் திட்டமாகும். பாபர் மசூதி இடிப்பு முதல் குஜராத், ஒரிசா கலவரங்கள் வரை இந்தப் பின்னணிகளில் தான் நடந்து வந்திருக்கின்றன.
இந்த நிலையில் இத்தகைய அடிப்படைவாத அமைப்புகளை நாடு எப்படி அனுமதித்துக் கொண்டு இருக்கிறது? அரசு எப்படி அனுமதித்துக் கொண்டு இருக்கிறது என்பதுதான் நியாய பூர்வமான கேள்வியாகும்.
மதச் சார்பற்ற சக்திகள் ஏதோ தேர்தல் காலத்துப் பணி என்று கருதி விடாமல் ஆபத்தின் அளவினைப் புரிந்து கொண்டு, ஒன்றிணைந்து மதவாதி சக்திகளை அம்பலப் படுத்தி, அப்புறப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமான கடமையும், பணியுமாகும்.
--- விடுதலை தலையங்கம் (10.05.2010)
தென்காசியில் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டை வெடிக்க செய்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்று பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. சதுமுகை என்னும் ஊரில் விநாயகன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு, பழியை மற்றவர்கள்மீது சுமத்தப் போட் டிருந்த திட்டமும் பிறகு அம்பலமானதுண்டு.
சூரத் நகரில் மரங்களில் எல்லாம் வெடிகுண்டுகள் இருந்ததை குஜராத் மாநிலக் காவல்துறை கண்டுபிடித்தது என்று சொல்லப்பட்டது. உண்மை வேறுவிதமானது என்றும் தெரியவந்தது. கான்பூர், மகாராட்டிரம் நந்தித், மாலேகான் போன்ற இடங்களிலும் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்தவர்களும் இந்தச் சங்பரிவார்க் கும்பலே என்று கண்டுபிடிக்கப்பட்டது.
2007ஆம் ஆண்டில் அஜ்மீர் தர்காவுக்கு அருகில் பள்ளி வாசலில் ரமலான் நோன்பு திறக்கும் வேளையில் குண்டு வெடித்தது. இதற்குக் காரணம் முசுலிம்களே என்று கதை கட்டினார்கள். முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யவும் பட்டனர். ராஜஸ்தானில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க., முசுலிம் இளைஞர்களைப் படாத பாடுபடுத்தியது. மூன்ற ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர். தேவேந்திர தாஸ் குப்தா, சந்திரசேகர் என்ற இரண்டு ஆர்.எஸ்.எஸ். வன்முறையாளர்கள்தான் அஜ்மீர் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். மாலேகான் குண்டுவெடிப்புச் சதிகாரர்களான பெண் சாமியார் பிரக்யாசிங் தாக்கூர் மற்றும் இந்திய இராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டு, இந்துத்துவாதிகளுக்கு இராணுவப் பயிற்சியும் அளித்துக் கொண்டிருந்த -_ இசுரேல் வரை சென்று இந்துத்துவா ராஜ்-ஜியத்தை உண்டாக்க சதித் திட்டம் தீட்டிய ஸ்ரீகாந்த் புரோகித்துக்கும் இந்த இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த இருவரும் மொபைல் தொலைப்பேசி சிம் கார்டை வைத்தே கண்டுபிடிக்கப்பட் டுள்ளனர்.
தோண்டத் தோண்ட புதையல் கிடைப்பது போல ஒவ்வொரு தகவலாக வெளிவந்து கொண்டே இருக்கின்றது. நாடு தழுவிய அளவில் கலவரங்களை ஏற்படுத்துவதுதான் இவர்களின் திட்டம். அதன்மூலம் வாக்கு வங்கியை இந்துத்துவா என்று ஓர் அணியும், மற்ற சிறுபான்மையினர் என்பவர்கள் இன்னொரு அணி என்றும் பிரித்துக் காட்டி இந்துக்களின் பிரதிநிதிகள் தாங்களே என்று (குஜராத் பாணி) மார்தட்டி ஆட்சியைப் பிடிக்கலாம்; இந்து சாம்ராஜ்ஜியத்தை அமைக்கலாம் என்பதுதான் அவர்களின் அந்தரங்கத் திட்டமாகும். பாபர் மசூதி இடிப்பு முதல் குஜராத், ஒரிசா கலவரங்கள் வரை இந்தப் பின்னணிகளில் தான் நடந்து வந்திருக்கின்றன.
இந்த நிலையில் இத்தகைய அடிப்படைவாத அமைப்புகளை நாடு எப்படி அனுமதித்துக் கொண்டு இருக்கிறது? அரசு எப்படி அனுமதித்துக் கொண்டு இருக்கிறது என்பதுதான் நியாய பூர்வமான கேள்வியாகும்.
மதச் சார்பற்ற சக்திகள் ஏதோ தேர்தல் காலத்துப் பணி என்று கருதி விடாமல் ஆபத்தின் அளவினைப் புரிந்து கொண்டு, ஒன்றிணைந்து மதவாதி சக்திகளை அம்பலப் படுத்தி, அப்புறப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமான கடமையும், பணியுமாகும்.
--- விடுதலை தலையங்கம் (10.05.2010)
Friday, May 07, 2010
எந்த கிறுக்குப் பிடித்த பார்பனர்களின் சூட்சமங்களையும் புரிந்து கொள்ள ஈரோட்டு நுண்ணாடி தேவை!
1) கேள்வி: 2011 இல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்று ஜெயலலிதா பேசியிருப்பது நிறைவேறுமா?
பதில்: இந்தச் சந்தேகத்தை மனதிலேயே வைத்துக் கொண்டு புழுங்குவது உங்கள் உடலுக்கு நல்லதல்ல. எதற்காக சந்தேகம்? பேசாமல் அ.தி.மு.க.விற்கே ஓட்டளித்து அக்கட்சி ஆட்சிக்கு வர வழி செய்துவிட்டால் _ ஜெயலலிதா பேசியது நிறைவேறுகிறதா_ இல்லையா என்று பார்த்துவிடலாமே! சந்தேகம் தீர அதுதான் வழி. தடையின்றி மின்சாரம் வந்தாலும் சரி, வராவிட்டால் ஜெயலலிதா பேசியது நிறைவேற வில்லை என்று புரிந்துகொண்டு விடலாமே!
- துக்ளக், 5-5-2010
பார்ப்பனர்கள்போல பம்மாத்துக்காரர்களை எங்கு தேடினாலும் கிடைக்கவே கிடைக்க மாட்டார்கள். கேட்கப்பட்ட கேள்வி என்ன? பதில் என்ன?
ஜெயலலிதாவால் முடியும் என்று சொல்ல வேண்டும்; அல்லது முடியாது என்று சொல்ல வேண்டும். அதையும் தாண்டி எங்கே போகிறார்?
ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடுங்கள், அதுதான் சரி. அவர் நிறைவேற்றாவிட்டால் ஜெயலலிதா பேசியது நிறைவேறவில்லை என்று புரிந்து கொள்ளலாமாம். புரிந்துகொண்டு என்ன செய்ய? நாக்கை வழித்துக் கொள்ளவா?
மின்தட்டுப்பாட்டுக்குக் காரணமே, ஜெயலலிதா ஆட்சியிலே தொலைநோக்கோடு மின் உற்பத்திக்குத் திட்டங்கள் தீட்டப்படவில்லை என்பதுதான். இது பற்றி முதல்வர் எழுப்பிய குற்றச்சாற்றுக்குப் பதில் இல்லை_- பேச்சு மூச்சு இல்லை. இந்த வெட்கம் கெட்ட நிலையில் பாப்பாத்தி அம்மா மட்டும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டுமாம்!
பார்ப்பனர்களின் இந்த இனப் பற்றைத் தமிழர்கள் என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறார்களோ, தெரியவில்லை.
2) கேள்வி: உடல்நலம் குன்றிய நிலையில் இந்தியாவுக்கு வந்த பிரபாகரனது தாயாரைத் திருப்பி அனுப்பியது குறித்து?
பதில்: ஒரு தவறும் இல்லை. இந்தியாவுக்கு வரக்கூடாதவர்கள் பட்டியலில் அவர் பெயர் இருந்து, அதைக் கவனிக்காமல் அவருக்கு விசா கொடுத்த மலேஷியாவில் உள்ள இந்திய தூதரகம் செய்ததுதான் தவறு; இங்கு அவர் திருப்பி அனுப்பப்பட்டதுதான் சரி_ - - துக்ளக், 5.5.2010
எந்த கிறுக்குப் பிடித்த பார்ப்பானும் ஈழத் தமிழர்ப் பிரச்சினை பற்றி உளறுவதில் கூட ஒன்றாகவே உளறுவார்கள்.
மூப்படைந்த மூதாட்டி ஒருவருக்கு மருத்துவம் செய்வதில் கூட இந்தப் பார்ப்பனர்களுக்கு மனித நேயம் இல்லை என்பதைக் கவனிக்கவேண்டும்.
மூதாட்டி பார்வதி அம்மையார் பக்க வாத நோயால் பாதிக்கப்பட்டவர் . அவர் என்ன தீவிரவாதியா? அதுவும் இந்த உடல்நிலையில் இந்தியாவுக்கு எதிராக எந்தத் தீவிரவாத வேலையில் இறங்கப்போகிறார்? இதற்கு முன்புதான் அவர் தீவிரவாத செயல்களில் இறங்கியவர் என்பதற்கு ஆதாரம் உண்டா?
விடுதலைப் புலிகள் என்றால் அப்படி ஒரு வெறுப்பு! பிரபாகரன் தாயார் என்கின்றவரை அந்த வெறுப்பு வெறி ஓங்கிக் குரைக்கிறது.
இவர்களைச் சொல்லிக் குற்றமென்ன? இவர்களின் தலைவரான சங்கராச்சாரியாரே (சந்திர சேகரேந்திர சரஸ்வதி) நாத்திகர்களுக்கு வைத்தியம் பார்க்கக்கூடாது என்று சொன்ன மனிதநேய விரோதிதானே _ - அந்த ஜாதிப் புத்தி அவர்களை விட்டுப் போகுமா?
3) கேள்வி: ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பயணம், எதிர்பார்த்ததற்கு மாறாக இப்படி தோல்வியில் முடிந்துவிட்டதே?
பதில்: இந்த மாதிரி முயற்சிகள் உலகில் வேறு சில நாடுகளிலும் தோல்வியைச் சந்தித்திருக்கின்றன என்று செய்திகளிலிருந்து தெரிகிறது. ஆகையால் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக அமையாதது குறித்து இந்தியா அவமானப்படத் தேவையில்லை. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை இனித் தவிர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
- துக்ளக், 5-5-2010
இஸ்ரோ என்ற அமைப்பின் தலைவராக இருப்பவர் ஒரு சூத்திரராக இருந்தால் இதுமாதிரி பதில் வந்திருக்காது பார்ப்பனர்களிடமிருந்து. இட ஒதுக்கீடு காரணமாக தகுதி_- திறமை எல்லாம் ஒழிந்துபோய்விட்டது என்று ஒப்பாரி வைப்பார்கள்.
அதுவும் திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் கொண்டு போய் வைத்து வணங்கிவிட்டுத்தான் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஏவினார்கள். தோல்வியில் முடிந்தது.
ஏழுமலையான் சக்தி என்னவாயிற்று என்ற கேள்வி கிளம்பும் அல்லவா_ அதற்குள் முந்திக் கொண்டு, இதுபோன்ற தோல்விகள் எல்லாம் சகஜம்தான் என்று பெரும்போக்காக எழுதும் பார்ப்பனத்தனம்.
பார்ப்பனர்களின் இந்தச் சூட்சமங்களைப் புரிந்து கொள்ள ஈரோட்டு நுண்ணாடி தேவை!
------ விடுதலை(06.04.2010) கருஞ்சட்டை
பதில்: இந்தச் சந்தேகத்தை மனதிலேயே வைத்துக் கொண்டு புழுங்குவது உங்கள் உடலுக்கு நல்லதல்ல. எதற்காக சந்தேகம்? பேசாமல் அ.தி.மு.க.விற்கே ஓட்டளித்து அக்கட்சி ஆட்சிக்கு வர வழி செய்துவிட்டால் _ ஜெயலலிதா பேசியது நிறைவேறுகிறதா_ இல்லையா என்று பார்த்துவிடலாமே! சந்தேகம் தீர அதுதான் வழி. தடையின்றி மின்சாரம் வந்தாலும் சரி, வராவிட்டால் ஜெயலலிதா பேசியது நிறைவேற வில்லை என்று புரிந்துகொண்டு விடலாமே!
- துக்ளக், 5-5-2010
பார்ப்பனர்கள்போல பம்மாத்துக்காரர்களை எங்கு தேடினாலும் கிடைக்கவே கிடைக்க மாட்டார்கள். கேட்கப்பட்ட கேள்வி என்ன? பதில் என்ன?
ஜெயலலிதாவால் முடியும் என்று சொல்ல வேண்டும்; அல்லது முடியாது என்று சொல்ல வேண்டும். அதையும் தாண்டி எங்கே போகிறார்?
ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடுங்கள், அதுதான் சரி. அவர் நிறைவேற்றாவிட்டால் ஜெயலலிதா பேசியது நிறைவேறவில்லை என்று புரிந்து கொள்ளலாமாம். புரிந்துகொண்டு என்ன செய்ய? நாக்கை வழித்துக் கொள்ளவா?
மின்தட்டுப்பாட்டுக்குக் காரணமே, ஜெயலலிதா ஆட்சியிலே தொலைநோக்கோடு மின் உற்பத்திக்குத் திட்டங்கள் தீட்டப்படவில்லை என்பதுதான். இது பற்றி முதல்வர் எழுப்பிய குற்றச்சாற்றுக்குப் பதில் இல்லை_- பேச்சு மூச்சு இல்லை. இந்த வெட்கம் கெட்ட நிலையில் பாப்பாத்தி அம்மா மட்டும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டுமாம்!
பார்ப்பனர்களின் இந்த இனப் பற்றைத் தமிழர்கள் என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறார்களோ, தெரியவில்லை.
2) கேள்வி: உடல்நலம் குன்றிய நிலையில் இந்தியாவுக்கு வந்த பிரபாகரனது தாயாரைத் திருப்பி அனுப்பியது குறித்து?
பதில்: ஒரு தவறும் இல்லை. இந்தியாவுக்கு வரக்கூடாதவர்கள் பட்டியலில் அவர் பெயர் இருந்து, அதைக் கவனிக்காமல் அவருக்கு விசா கொடுத்த மலேஷியாவில் உள்ள இந்திய தூதரகம் செய்ததுதான் தவறு; இங்கு அவர் திருப்பி அனுப்பப்பட்டதுதான் சரி_ - - துக்ளக், 5.5.2010
எந்த கிறுக்குப் பிடித்த பார்ப்பானும் ஈழத் தமிழர்ப் பிரச்சினை பற்றி உளறுவதில் கூட ஒன்றாகவே உளறுவார்கள்.
மூப்படைந்த மூதாட்டி ஒருவருக்கு மருத்துவம் செய்வதில் கூட இந்தப் பார்ப்பனர்களுக்கு மனித நேயம் இல்லை என்பதைக் கவனிக்கவேண்டும்.
மூதாட்டி பார்வதி அம்மையார் பக்க வாத நோயால் பாதிக்கப்பட்டவர் . அவர் என்ன தீவிரவாதியா? அதுவும் இந்த உடல்நிலையில் இந்தியாவுக்கு எதிராக எந்தத் தீவிரவாத வேலையில் இறங்கப்போகிறார்? இதற்கு முன்புதான் அவர் தீவிரவாத செயல்களில் இறங்கியவர் என்பதற்கு ஆதாரம் உண்டா?
விடுதலைப் புலிகள் என்றால் அப்படி ஒரு வெறுப்பு! பிரபாகரன் தாயார் என்கின்றவரை அந்த வெறுப்பு வெறி ஓங்கிக் குரைக்கிறது.
இவர்களைச் சொல்லிக் குற்றமென்ன? இவர்களின் தலைவரான சங்கராச்சாரியாரே (சந்திர சேகரேந்திர சரஸ்வதி) நாத்திகர்களுக்கு வைத்தியம் பார்க்கக்கூடாது என்று சொன்ன மனிதநேய விரோதிதானே _ - அந்த ஜாதிப் புத்தி அவர்களை விட்டுப் போகுமா?
3) கேள்வி: ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பயணம், எதிர்பார்த்ததற்கு மாறாக இப்படி தோல்வியில் முடிந்துவிட்டதே?
பதில்: இந்த மாதிரி முயற்சிகள் உலகில் வேறு சில நாடுகளிலும் தோல்வியைச் சந்தித்திருக்கின்றன என்று செய்திகளிலிருந்து தெரிகிறது. ஆகையால் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக அமையாதது குறித்து இந்தியா அவமானப்படத் தேவையில்லை. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை இனித் தவிர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
- துக்ளக், 5-5-2010
இஸ்ரோ என்ற அமைப்பின் தலைவராக இருப்பவர் ஒரு சூத்திரராக இருந்தால் இதுமாதிரி பதில் வந்திருக்காது பார்ப்பனர்களிடமிருந்து. இட ஒதுக்கீடு காரணமாக தகுதி_- திறமை எல்லாம் ஒழிந்துபோய்விட்டது என்று ஒப்பாரி வைப்பார்கள்.
அதுவும் திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் கொண்டு போய் வைத்து வணங்கிவிட்டுத்தான் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஏவினார்கள். தோல்வியில் முடிந்தது.
ஏழுமலையான் சக்தி என்னவாயிற்று என்ற கேள்வி கிளம்பும் அல்லவா_ அதற்குள் முந்திக் கொண்டு, இதுபோன்ற தோல்விகள் எல்லாம் சகஜம்தான் என்று பெரும்போக்காக எழுதும் பார்ப்பனத்தனம்.
பார்ப்பனர்களின் இந்தச் சூட்சமங்களைப் புரிந்து கொள்ள ஈரோட்டு நுண்ணாடி தேவை!
------ விடுதலை(06.04.2010) கருஞ்சட்டை
Thursday, May 06, 2010
ஆசிரமங்கள், சாமியார்கள்மீது புதிய பார்வை தேவை!
ஆசிரமங்கள் மீதும், சாமியார்கள் மீதும் கண்டிப்பான நடவடிக்கைகள் அவசரமாகவும், அவசியமாகவும் தேவைப்படும் காலம் கனிந்தே விட்டது. இதற்கு மேலும் எந்தக் காரணத்தைச் சொல்லியும் இத்தகைய நடவடிக்கைகளில் தயக்கம் காட்டுவது, இந்தப் பேர்வழிகளின், அமைப்புகளின் சமூகவிரோதச் செயல்கள் வளர்வதற்கு உரம் இட்டதாகவே ஆகும்.
இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இதுதான் சரியான சந்தர்ப்பமாகும். பொது-மக்களும், குறிப்பாகப் பக்த கோடிகளும்கூட குறிப்பிட்ட ஒரு மன நிலைக்கு வந்துவிட்டனர்.
காஷாயம் என்பது வெளிவேடம்; -அதற்குள் ஆபாசம் ஆயிரம்-; அதில் அசிங்கங்களும், அரு-வருப்புகளும் - குவிந்து கிடக்கின்றன என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதில் கோடிகோடியாகப் பணம் பறிக்கும் வேலை திட்டமிட்ட வகையில் நடந்துகொண்டு இருக்கிறது_- இந்தப் பணத்தின் மூலம், துறவு என்ற பெயரில் கற்பனைக்கு எட்டாத வகையில் உல்லாசத்திலும், சல்லாபத்திலும், நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் வெளிப்படை-யாகி விட்டது.
பாலியல் உறவு என்ற மென்மையான, மேன்மையான ஒன்றை மிகக் கேவலமான முறையில் கொச்சைப்படுத்தி விட்டனர் என்ற பொதுவான அபிப்ராயம் இன்னொரு பக்கத்தில்.
மனிதன் அறிவைப் பயன்படுத்தவேண்டும்; உரிய அளவில் உழைக்கவேண்டும்; முன்னேற்றத் திசையில் பயணிக்கவேண்டும் என்ற மிக நாகரிகமான கோட்பாட்டை நாசப்படுத்தி விட்டனர். சரணடை, சகல சவ்பாக்கியங்களும் கிடைக்கும் என்று உபதேசித்து மனிதனிடம் குடிகொண்டிருக்கும் அளப்பரிய மூளைச் சக்தியை விலங்கிட்டு விட்டார்கள். உழைக்கும் உன்னதப் பண்பாட்டின் கைகளைக் கட்டிப் போட்டு விட்டனர்.
இதன் காரணமாக குறிப்பிட்ட காவி வேட-தாரிகளின் சேவகர்களாக மாறி வருகின்றனர். பல மோசமான வகைகளிலும் சாமியாருக்கும், ஆசிரமங்களுக்கும் பயன்படும்படி மூளைச் சாயம் ஏற்றப்படுகின்றனர். - சுருக்கமாகச் சொல்லப் போனால் இயற்கையான மனித உணர்வுகள் அத்தனையையும் மரத்துப் போகச் செய்து, மன நோயாளிகளாக ஆக்கப்படுகின்றனர். பரிதாபத்திற்குரிய பெண்கள் பக்தியின் பெயரால் தங்களை எல்லா வகையிலும் தொலைத்து விடுகிறார்கள். கர்ப்பங்கள் கலைக்கப்படுகின்றன. பிணங்கள் ஆசிரம வளாகங்களுக்குள் இரவோடு இரவாகப் புதைக்கப்படுகின்றன. இதில் ஒரு வெட்கக்கேடு_ மருத்துவம் படித்த டாக்டர்கள்-கூட இந்தக் கபோதிகள் கொட்டிக் கொடுக்கும் பணக் கத்தைகளுக்குத் துணை போகிறார்கள்.
இதுபோல் இளைஞர்கள்கூட ஆசிரமங்களின் கொட்டடிகளில் மூளை விலங்கு மாட்டப்பட்டு தங்களின் விலை மதிக்க முடியாத எதிர்காலத்-தைப் பலி கொடுத்து விடுகின்றனர். பெற்றோர்கள் அழைத்தாலும் ஏற்கெனவே அவர்கள் கட்டப்பட்ட கட்டுத் தறியிலிருந்து விடுபட முடியாத மனநிலைக்கு ஆளாகி விடுகின்றனர்.
இவ்வளவும் நாட்டில் நாளும் நடந்து வரும்-போது, இதில் சட்டம், விதிமுறைகள் என்கின்ற ஓலைச் சுவடிகளைப் புரட்டிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை.
அந்நியச் செலாவணி மோசடியிலிருந்து, இளம் பெண்களை நாசப்படுத்தியதற்கு செக்ஸ் ஆராய்ச்சி என்று விபரீதப் பொருள் கொடுப்ப-திலிருந்து எல்லா வகையிலும் கிரிமினலாக நடந்துகொண்டிருக்கிற நித்யானந்தா விஷயத்தில், நடவடிக்கை எடுக்க, எத்தனை எத்தனை சம்பிரதாயங்கள், அலுவலக நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன? அதுவும் சனாதன பா.ஜ.க. ஆளும் கருநாடக மாநிலத்தில் சனாதனத்-துக்கும் சவக்குழியாக மாறப்போகும் ஒரு பிரச்சினையில் நேர்மையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கமுடியுமா? (இப்பொழுதே மருத்துவமனையில் படுத்துக்-கொண்டுள்ளார்).
இதுபோன்ற ஆசாமிகள் மிகக் கடுமையான வகையில் தண்டிக்கப்படும்போதுதான், நாட்டில் நல்ல சிந்தனைகள்_- ஆரோக்கியமான வழிமுறைகளுக்கு உத்தரவாதம் இருக்கமுடியும். மக்கள் நல அரசு (Welfare State) என்பதற்கு நல்ல அடையாளம் இதுவாகத் தானிருக்க முடியும்.
------- விடுதலை தலையங்கம் (27.04.2010)
இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இதுதான் சரியான சந்தர்ப்பமாகும். பொது-மக்களும், குறிப்பாகப் பக்த கோடிகளும்கூட குறிப்பிட்ட ஒரு மன நிலைக்கு வந்துவிட்டனர்.
காஷாயம் என்பது வெளிவேடம்; -அதற்குள் ஆபாசம் ஆயிரம்-; அதில் அசிங்கங்களும், அரு-வருப்புகளும் - குவிந்து கிடக்கின்றன என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதில் கோடிகோடியாகப் பணம் பறிக்கும் வேலை திட்டமிட்ட வகையில் நடந்துகொண்டு இருக்கிறது_- இந்தப் பணத்தின் மூலம், துறவு என்ற பெயரில் கற்பனைக்கு எட்டாத வகையில் உல்லாசத்திலும், சல்லாபத்திலும், நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் வெளிப்படை-யாகி விட்டது.
பாலியல் உறவு என்ற மென்மையான, மேன்மையான ஒன்றை மிகக் கேவலமான முறையில் கொச்சைப்படுத்தி விட்டனர் என்ற பொதுவான அபிப்ராயம் இன்னொரு பக்கத்தில்.
மனிதன் அறிவைப் பயன்படுத்தவேண்டும்; உரிய அளவில் உழைக்கவேண்டும்; முன்னேற்றத் திசையில் பயணிக்கவேண்டும் என்ற மிக நாகரிகமான கோட்பாட்டை நாசப்படுத்தி விட்டனர். சரணடை, சகல சவ்பாக்கியங்களும் கிடைக்கும் என்று உபதேசித்து மனிதனிடம் குடிகொண்டிருக்கும் அளப்பரிய மூளைச் சக்தியை விலங்கிட்டு விட்டார்கள். உழைக்கும் உன்னதப் பண்பாட்டின் கைகளைக் கட்டிப் போட்டு விட்டனர்.
இதன் காரணமாக குறிப்பிட்ட காவி வேட-தாரிகளின் சேவகர்களாக மாறி வருகின்றனர். பல மோசமான வகைகளிலும் சாமியாருக்கும், ஆசிரமங்களுக்கும் பயன்படும்படி மூளைச் சாயம் ஏற்றப்படுகின்றனர். - சுருக்கமாகச் சொல்லப் போனால் இயற்கையான மனித உணர்வுகள் அத்தனையையும் மரத்துப் போகச் செய்து, மன நோயாளிகளாக ஆக்கப்படுகின்றனர். பரிதாபத்திற்குரிய பெண்கள் பக்தியின் பெயரால் தங்களை எல்லா வகையிலும் தொலைத்து விடுகிறார்கள். கர்ப்பங்கள் கலைக்கப்படுகின்றன. பிணங்கள் ஆசிரம வளாகங்களுக்குள் இரவோடு இரவாகப் புதைக்கப்படுகின்றன. இதில் ஒரு வெட்கக்கேடு_ மருத்துவம் படித்த டாக்டர்கள்-கூட இந்தக் கபோதிகள் கொட்டிக் கொடுக்கும் பணக் கத்தைகளுக்குத் துணை போகிறார்கள்.
இதுபோல் இளைஞர்கள்கூட ஆசிரமங்களின் கொட்டடிகளில் மூளை விலங்கு மாட்டப்பட்டு தங்களின் விலை மதிக்க முடியாத எதிர்காலத்-தைப் பலி கொடுத்து விடுகின்றனர். பெற்றோர்கள் அழைத்தாலும் ஏற்கெனவே அவர்கள் கட்டப்பட்ட கட்டுத் தறியிலிருந்து விடுபட முடியாத மனநிலைக்கு ஆளாகி விடுகின்றனர்.
இவ்வளவும் நாட்டில் நாளும் நடந்து வரும்-போது, இதில் சட்டம், விதிமுறைகள் என்கின்ற ஓலைச் சுவடிகளைப் புரட்டிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை.
அந்நியச் செலாவணி மோசடியிலிருந்து, இளம் பெண்களை நாசப்படுத்தியதற்கு செக்ஸ் ஆராய்ச்சி என்று விபரீதப் பொருள் கொடுப்ப-திலிருந்து எல்லா வகையிலும் கிரிமினலாக நடந்துகொண்டிருக்கிற நித்யானந்தா விஷயத்தில், நடவடிக்கை எடுக்க, எத்தனை எத்தனை சம்பிரதாயங்கள், அலுவலக நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன? அதுவும் சனாதன பா.ஜ.க. ஆளும் கருநாடக மாநிலத்தில் சனாதனத்-துக்கும் சவக்குழியாக மாறப்போகும் ஒரு பிரச்சினையில் நேர்மையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கமுடியுமா? (இப்பொழுதே மருத்துவமனையில் படுத்துக்-கொண்டுள்ளார்).
இதுபோன்ற ஆசாமிகள் மிகக் கடுமையான வகையில் தண்டிக்கப்படும்போதுதான், நாட்டில் நல்ல சிந்தனைகள்_- ஆரோக்கியமான வழிமுறைகளுக்கு உத்தரவாதம் இருக்கமுடியும். மக்கள் நல அரசு (Welfare State) என்பதற்கு நல்ல அடையாளம் இதுவாகத் தானிருக்க முடியும்.
------- விடுதலை தலையங்கம் (27.04.2010)
ஹிட்லர் வெற்றி தெரிந்து தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் ஜெர்மன் மொழி படிக்கத் தொடங்கினர்
இரண்டாம் உலக யுத்-தத்தில் ஜெர்மனியின் ஹிட்-லரை முறியடித்த வெற்றியின் 65 ஆம் ஆண்டு விழா சென்னை ருசிய கலாச்சார மற்றும் அறிவியல் மய்யத்தில் 4.5.2010 மாலை நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தின-ராக அழைக்கப்பட்டு இருந்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்-கள் தமது உரையினூடே ஒரு தகவலைப் பதிவு செய்தார்.
இரண்டாம் உலகப் போரின்போது சென்னையில் மயிலாப்பூர் வாசிகள் ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான் அந்தத் தகவ-லாகும். அது ஏதோ போகிற போக்கில் சொல்லப்பட்ட தகவல் அல்ல.
இரத்த வெறியன் இட்லர் தொடங்கிய இரண்டாம் உலகப் போரில் (1939_45) உயிர் இழந்தோர் எண்-ணிக்கை 5 1/2 கோடியாகும். அது போக அவன் சித்-திர-வதை செய்து அநியாயமாகக் கொன்ற அப்பாவி யூத மக்கள் எண்ணிக்கை 60 லட்சமாகும். இரக்கமென்று ஒரு பொருள் இலாத அத்தகைய கொடிய-வன் அப்போரின் முற்பகுதியில் பெற்ற வெற்றிகளை வரவேற்று இந்திய நாட்டிற்குள் எப்-பொழுது ஜெர்மன் படைகள் நுழையும் என்று நடை பாவாடை விரிக்கத் துடித்துக் கொண்டு இந்தியாவில் ஒரு தேசத் துரோகக் கூட்டம் இருந்திருக்குமா என்று ஆச்சரியப்படுகிறீர்களா? ஆம், இருந்தது! அக்கூட்டத்தி-னர்தான் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள். இரண்டாவது உலகப் போரின் தொடக்க ஆண்டுகளில் அவர்கள் விழுந்து விழுந்து ஜெர்மன் மொழி படித்ததை தந்தை பெரியார் அவர்கள்அடிக்கடி கூறி வந்துள்ளார். இச் செய்-தியை அப்பொழுது இந்திய அரசில் அதிகாரியாகப் பணி-யாற்றிய பெர்சிவல் ஸ்பீயர் என்பவர் 1981 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள தமது இந்-திய நினைவுகள் என்ற நூலில் பின்வருமாறு கூறு-கிறார்:
(1940 ஜூன் மாதம்) பிரான்ஸ் வீழ்ந்தபொழுது தென்னாட்டில் சில தந்திரக்-காரப் பார்ப்பனர்கள் ஜெர்-மானியர்கள் விரைவில் இந்தியாவைப் பிடித்துவிட விருப்பதால், அதற்குத் தங்-களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக (வேறு எதற்கு? ஜெர்மானியருடைய கைக்கூலிகளாக, கங்காணி-களாக இருக்கத்தான்!) ஜெர்மன் மொழியைக் கற்று வருவதாகச் சொல்லப்பட்டது.
1பின்னர் 1942 முற்பகுதி-யில் இட்லரின் கூட்டாளி-களா
ன ஜப்பானியப் போர் வெறியர்கள் சிங்கப்பூர், பர்மா ஆகியவற்றையெல்லாம் பிடித்து முன்னேறி வருகிறார்-கள் என்றவுடன் அந்த ஜெர்மன் பார்ப்பனர்கள் ஜப்பானிய மொழியையும் படிக்கத் தொடங்கி விட்டன-ராம்.2 பாவம் பார்ப்பனர்கள்! அவர்களுடைய கூட்டாளி-களான ஜெர்மானிய ஜப்பா-னியப் போர் வெறியர்கள் இரண்டாம் உலகப் போரில் தோற்றுப் போய்விட்டனர் கடைசியாக! அவர்கள் சரியாக யக்ஞங்கள் நடத்தவில்லை போலும்!
1 “When France fell . . . some clever Brahmins in the south were said to be learning German to be ready for the forthcoming takeover.”
PP/ 74-75 of “India Rememberd” by Percival and Margaret Spear,Orient Longman: 1981
2 The “German Brahmins” of Madras were indeed said now to be learning Japanese (after Pearl Harbour and fall of Singapore and Burma.)
P.78 of the above book.
இந்தக் கருத்தை கல்கி தமது அலை ஓசை நாவ-லிலும் குறிப்பிட்டுள்ளார்.
ஹிட்லர் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தபோது தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் ஜெர்-மன் மொழி படிக்கத் தொடங்கினர் என்று கல்கி குறிப்பிட்-டுள்-ளதும் குறிப்பிடத் தக்க-தாகும். இந்தப் பார்ப்பனர்-கள்-தான் நாட்டுப்பற்றைப் பற்றியும், இந்திய தேசியத்துக்காக உயிர் வாழ்வது போலவும் பம்மாத்து அடிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
- விடுதலை மயிலாடன் (06.05.2010)
அதில் சிறப்பு விருந்தின-ராக அழைக்கப்பட்டு இருந்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்-கள் தமது உரையினூடே ஒரு தகவலைப் பதிவு செய்தார்.
இரண்டாம் உலகப் போரின்போது சென்னையில் மயிலாப்பூர் வாசிகள் ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான் அந்தத் தகவ-லாகும். அது ஏதோ போகிற போக்கில் சொல்லப்பட்ட தகவல் அல்ல.
இரத்த வெறியன் இட்லர் தொடங்கிய இரண்டாம் உலகப் போரில் (1939_45) உயிர் இழந்தோர் எண்-ணிக்கை 5 1/2 கோடியாகும். அது போக அவன் சித்-திர-வதை செய்து அநியாயமாகக் கொன்ற அப்பாவி யூத மக்கள் எண்ணிக்கை 60 லட்சமாகும். இரக்கமென்று ஒரு பொருள் இலாத அத்தகைய கொடிய-வன் அப்போரின் முற்பகுதியில் பெற்ற வெற்றிகளை வரவேற்று இந்திய நாட்டிற்குள் எப்-பொழுது ஜெர்மன் படைகள் நுழையும் என்று நடை பாவாடை விரிக்கத் துடித்துக் கொண்டு இந்தியாவில் ஒரு தேசத் துரோகக் கூட்டம் இருந்திருக்குமா என்று ஆச்சரியப்படுகிறீர்களா? ஆம், இருந்தது! அக்கூட்டத்தி-னர்தான் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள். இரண்டாவது உலகப் போரின் தொடக்க ஆண்டுகளில் அவர்கள் விழுந்து விழுந்து ஜெர்மன் மொழி படித்ததை தந்தை பெரியார் அவர்கள்அடிக்கடி கூறி வந்துள்ளார். இச் செய்-தியை அப்பொழுது இந்திய அரசில் அதிகாரியாகப் பணி-யாற்றிய பெர்சிவல் ஸ்பீயர் என்பவர் 1981 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள தமது இந்-திய நினைவுகள் என்ற நூலில் பின்வருமாறு கூறு-கிறார்:
(1940 ஜூன் மாதம்) பிரான்ஸ் வீழ்ந்தபொழுது தென்னாட்டில் சில தந்திரக்-காரப் பார்ப்பனர்கள் ஜெர்-மானியர்கள் விரைவில் இந்தியாவைப் பிடித்துவிட விருப்பதால், அதற்குத் தங்-களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக (வேறு எதற்கு? ஜெர்மானியருடைய கைக்கூலிகளாக, கங்காணி-களாக இருக்கத்தான்!) ஜெர்மன் மொழியைக் கற்று வருவதாகச் சொல்லப்பட்டது.
1பின்னர் 1942 முற்பகுதி-யில் இட்லரின் கூட்டாளி-களா
ன ஜப்பானியப் போர் வெறியர்கள் சிங்கப்பூர், பர்மா ஆகியவற்றையெல்லாம் பிடித்து முன்னேறி வருகிறார்-கள் என்றவுடன் அந்த ஜெர்மன் பார்ப்பனர்கள் ஜப்பானிய மொழியையும் படிக்கத் தொடங்கி விட்டன-ராம்.2 பாவம் பார்ப்பனர்கள்! அவர்களுடைய கூட்டாளி-களான ஜெர்மானிய ஜப்பா-னியப் போர் வெறியர்கள் இரண்டாம் உலகப் போரில் தோற்றுப் போய்விட்டனர் கடைசியாக! அவர்கள் சரியாக யக்ஞங்கள் நடத்தவில்லை போலும்!
1 “When France fell . . . some clever Brahmins in the south were said to be learning German to be ready for the forthcoming takeover.”
PP/ 74-75 of “India Rememberd” by Percival and Margaret Spear,Orient Longman: 1981
2 The “German Brahmins” of Madras were indeed said now to be learning Japanese (after Pearl Harbour and fall of Singapore and Burma.)
P.78 of the above book.
இந்தக் கருத்தை கல்கி தமது அலை ஓசை நாவ-லிலும் குறிப்பிட்டுள்ளார்.
ஹிட்லர் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தபோது தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் ஜெர்-மன் மொழி படிக்கத் தொடங்கினர் என்று கல்கி குறிப்பிட்-டுள்-ளதும் குறிப்பிடத் தக்க-தாகும். இந்தப் பார்ப்பனர்-கள்-தான் நாட்டுப்பற்றைப் பற்றியும், இந்திய தேசியத்துக்காக உயிர் வாழ்வது போலவும் பம்மாத்து அடிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
- விடுதலை மயிலாடன் (06.05.2010)
Wednesday, May 05, 2010
பகுத்தறிவு உலகு செய்வோம் என்று சூளுரைப்போம்! வாழ்க பெரியார்!
இரண்டாவது உலக யுத்தத்தில் பாசிச ஹிட்லரின் நாஜிப் படைகளைத் தோற்கடித்து, போரை முடிவுக்குக் கொண்டு வந்த _ அந்த வெற்றித் திருநாளின் 65 ஆம் ஆண்டு விழா _ சென்னை ருசிய கலாச்சாரம் மற்றும் அறிவியல் மன்றத்தில் நேற்று நடைபெற்றது.
இரண்டாவது உலகப் போரில் கொல்லப்பட்ட மக்கள் எட்டுக்கோடி; இதில் சோவியத் ருசியாவில் மட்டும் 2 கோடி மக்கள். ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்டதில் கொல்லப்பட்டவர்கள் கொஞ்சமல்ல; அந்த அணுகுண்டின் பாதிப்பு இன்றுவரை ஜப்பானில் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. இந்த ஆண்டு விழாவைக் கொண்டாடுவதன் நோக்கம் _ இனி போர் என்பது நினைத்துப் பார்க்கக் கூடாத அபாய சக்தி. அடுத்து ஒரு போர் மூண்டால் அது ஒட்டு-மொத்தமான மனிதகுல அழிவாகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு அழிவுக் கருவிகள் விஞ்ஞான ரீதியாக உருவாக்கப்பட்டுவிட்டன.
வெற்றி _ தோல்வி என்று நிரூபிக்கவும், கொண்-டாடவும் முடியாது; காரணம், மனிதர்கள் இருந்தால்தானே அத்தகு நிகழ்வுகள் நடை-பெறக்கூடும்.
ஹிட்லரின் பாசிசத்தை முறியடித்ததை மனித குலம் கொண்டாடத்தான் வேண்டும். ஹிட்லரின் சிந்தனைகள் எந்த ஒரு தனி மனிதனுக்கும் சரி, நாட்டுக்கும் சரி வரவே கூடாது என்கிற உணர்வை ஊட்ட பொதுமக்களின் கருத்து-களைத் திரட்ட இத்தகு விழாக்கள் பயன்படக்-கூடும்.
அதேநேரத்தில், இன்னொன்றையும் நிதானமாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
உலக அளவில் யுத்தம் நடைபெறவில்லை-யென்றாலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறுசிறு யுத்தங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆபத்தான இரசாயன கருவிகள் ஈராக்கில் இருப்பதாகக் கூறி, பெரியண்ணனாக அமெரிக்கா ஈராக்கில் படைகளைக் குவித்து அந்நாட்டு மக்களையும், அதிபரையும் கொன்று குவித்ததை எந்தக் கணக்கில் வைத்துக்கொள்வது?
தீவிரவாதிகளை ஒழிப்பதாகக் கூறி ஆப்கானிஸ்தான்மீது குண்டு மழை பொழிவது எந்த அடிப்படையில்?
நேரடியாக இராணுவத்தின்மூலம் தாக்குதலைத் தொடுக்காமல், அந்நிய நாடுகளில் பயங்கரவாதி-களைத் தயார் செய்து அனுப்பி வன்முறை நட-வடிக்கைகளில் ஈடுபடச் செய்து அப்பாவி மக்கள் பலியாக்கப்படுவது நடந்துகொண்டுதானே இருக்கிறது!
மதத் தீவிரவாதம் என்ற பெயரில் இளை-ஞர்களின் மூளைகளில் சாயம் ஏற்றி, இராணுவப் பயிற்சி கொடுத்து, மனித உயிர்களைக் கொடூர-மான முறையில் கொன்று குவிப்பதும் பாசிசம்-தானே!
ஹிட்லர், முசோலினி போன்ற பாசிஸ்டுகள் உயிரோடு இன்று இல்லை என்பது உண்மைதான் என்றாலும், அந்த பாசிஸ்டுகளின் குணாம்சம் நாட்டில் செத்து ஒழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது என்பதற்கு எடுத்துகாட்டுகள்தான் இவை!
1992 டிசம்பர் 6 இல் பாபர் மசூதி இடிக்கப்-பட்டதே _ அதனைத் தொடர்ந்து நாடு தழுவிய அளவில் கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்-பட்-டனவே _ எத்தனை ஆயிரம் மக்கள் மாண்டனர்!
2002 இல் குஜராத்தில் என்ன நடந்தது? 2000_த்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் வேட்டையாடப்பட்டனரே! குரூரமான முறை-களில் விறகுக் கட்டைகளை அடுப்பில் சொருகு-வதுபோல மனிதர்களை கொடுந்தீயில் தள்ளிக் குதூகலித்தனரே!
யுத்தமாவது ஒரு நாட்டுக்கும், இன்னொரு நாட்டுக்கும் இடையில் நடப்பது! இந்த மதவாதம் ஒரு நாட்டுக்குள்ளேயல்லவா உள்நாட்டு யுத்தத்துக்குக் கத்தி தீட்டுகிறது!
இரண்டாம் உலக யுத்தத்தில் பாசிஸ்டுகள் முறியடிக்கப்பட்டதற்கான வெற்றி விழா கொண்டாடும் இந்தக் காலகட்டத்தில், இந்தப் புதிய வடிவங்களில் தலைதூக்கி நிற்கும் பாசிசத்தை முறியடிக்க என்ன செய்யப் போகிறோம்?
மதமான பேய் பீடியாத புதியதோர் பகுத்தறிவு உலகு செய்வோம் என்று சூளுரைப்போம்! வாழ்க பெரியார்!
---------- விடுதலை தலையங்கம் (06.05.2010)
இரண்டாவது உலகப் போரில் கொல்லப்பட்ட மக்கள் எட்டுக்கோடி; இதில் சோவியத் ருசியாவில் மட்டும் 2 கோடி மக்கள். ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்டதில் கொல்லப்பட்டவர்கள் கொஞ்சமல்ல; அந்த அணுகுண்டின் பாதிப்பு இன்றுவரை ஜப்பானில் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. இந்த ஆண்டு விழாவைக் கொண்டாடுவதன் நோக்கம் _ இனி போர் என்பது நினைத்துப் பார்க்கக் கூடாத அபாய சக்தி. அடுத்து ஒரு போர் மூண்டால் அது ஒட்டு-மொத்தமான மனிதகுல அழிவாகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு அழிவுக் கருவிகள் விஞ்ஞான ரீதியாக உருவாக்கப்பட்டுவிட்டன.
வெற்றி _ தோல்வி என்று நிரூபிக்கவும், கொண்-டாடவும் முடியாது; காரணம், மனிதர்கள் இருந்தால்தானே அத்தகு நிகழ்வுகள் நடை-பெறக்கூடும்.
ஹிட்லரின் பாசிசத்தை முறியடித்ததை மனித குலம் கொண்டாடத்தான் வேண்டும். ஹிட்லரின் சிந்தனைகள் எந்த ஒரு தனி மனிதனுக்கும் சரி, நாட்டுக்கும் சரி வரவே கூடாது என்கிற உணர்வை ஊட்ட பொதுமக்களின் கருத்து-களைத் திரட்ட இத்தகு விழாக்கள் பயன்படக்-கூடும்.
அதேநேரத்தில், இன்னொன்றையும் நிதானமாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
உலக அளவில் யுத்தம் நடைபெறவில்லை-யென்றாலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறுசிறு யுத்தங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆபத்தான இரசாயன கருவிகள் ஈராக்கில் இருப்பதாகக் கூறி, பெரியண்ணனாக அமெரிக்கா ஈராக்கில் படைகளைக் குவித்து அந்நாட்டு மக்களையும், அதிபரையும் கொன்று குவித்ததை எந்தக் கணக்கில் வைத்துக்கொள்வது?
தீவிரவாதிகளை ஒழிப்பதாகக் கூறி ஆப்கானிஸ்தான்மீது குண்டு மழை பொழிவது எந்த அடிப்படையில்?
நேரடியாக இராணுவத்தின்மூலம் தாக்குதலைத் தொடுக்காமல், அந்நிய நாடுகளில் பயங்கரவாதி-களைத் தயார் செய்து அனுப்பி வன்முறை நட-வடிக்கைகளில் ஈடுபடச் செய்து அப்பாவி மக்கள் பலியாக்கப்படுவது நடந்துகொண்டுதானே இருக்கிறது!
மதத் தீவிரவாதம் என்ற பெயரில் இளை-ஞர்களின் மூளைகளில் சாயம் ஏற்றி, இராணுவப் பயிற்சி கொடுத்து, மனித உயிர்களைக் கொடூர-மான முறையில் கொன்று குவிப்பதும் பாசிசம்-தானே!
ஹிட்லர், முசோலினி போன்ற பாசிஸ்டுகள் உயிரோடு இன்று இல்லை என்பது உண்மைதான் என்றாலும், அந்த பாசிஸ்டுகளின் குணாம்சம் நாட்டில் செத்து ஒழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது என்பதற்கு எடுத்துகாட்டுகள்தான் இவை!
1992 டிசம்பர் 6 இல் பாபர் மசூதி இடிக்கப்-பட்டதே _ அதனைத் தொடர்ந்து நாடு தழுவிய அளவில் கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்-பட்-டனவே _ எத்தனை ஆயிரம் மக்கள் மாண்டனர்!
2002 இல் குஜராத்தில் என்ன நடந்தது? 2000_த்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் வேட்டையாடப்பட்டனரே! குரூரமான முறை-களில் விறகுக் கட்டைகளை அடுப்பில் சொருகு-வதுபோல மனிதர்களை கொடுந்தீயில் தள்ளிக் குதூகலித்தனரே!
யுத்தமாவது ஒரு நாட்டுக்கும், இன்னொரு நாட்டுக்கும் இடையில் நடப்பது! இந்த மதவாதம் ஒரு நாட்டுக்குள்ளேயல்லவா உள்நாட்டு யுத்தத்துக்குக் கத்தி தீட்டுகிறது!
இரண்டாம் உலக யுத்தத்தில் பாசிஸ்டுகள் முறியடிக்கப்பட்டதற்கான வெற்றி விழா கொண்டாடும் இந்தக் காலகட்டத்தில், இந்தப் புதிய வடிவங்களில் தலைதூக்கி நிற்கும் பாசிசத்தை முறியடிக்க என்ன செய்யப் போகிறோம்?
மதமான பேய் பீடியாத புதியதோர் பகுத்தறிவு உலகு செய்வோம் என்று சூளுரைப்போம்! வாழ்க பெரியார்!
---------- விடுதலை தலையங்கம் (06.05.2010)
Tuesday, May 04, 2010
அண்ணாவோ, கலைஞரோ,பேராசிரியரோ, நாவலர் அவர்களோ ஒருவனே தேவனை தேடி போனவர்கள் அல்லர்
டில்லி பெரியார் மய்யம் திறப்பு விழா பல வகை-களிலும் சிறப்புக்குரியதாகிவிட்டது. விழாவில் தேசிய பெருமக்கள் அனைவரும் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைச் செறிவையும், சமுதாயத்திற்கு அவை தேவைப்படும் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
பெரியார் தேசம் ஆகவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் முத்தாய்ப்பாகத் தம் கருத்தைப் பதிவு செய்தார். அது ஒன்றும் சொல்லழகுப் பூமாலைத் தொடுப்பல்ல. நாடு செழிக்க, சமதர்மமும், சமத்துவமும் தழைக்க அந்த நிலை உருவானால்தான் மீட்சிக்கு இடம் உண்டு.
பெரியார் திடலில் மாணவர் பருவத்தை ஒப்படைத்த அந்தப் பாங்கும், செறிவும் அந்தச் சொற்களின் வாயி-லாகத் தெறித்தன என்று கருதவேண்டும்.
ரூபாய் 5 லட்சம் குரு காணிக்கை என்று மானமிகு மாண்புமிகு சுயமரியாதைக்காரரான முதலமைச்சர் கலைஞர் அறிவித்தது _ பணம் என்ற அளவில் பார்க்கத்-தக்கதல்ல _ இந்தத் தன்மான, பகுத்தறிவுக் கொள்கை நிறுவனத்தில் தனக்குரிய ஈடுபாட்டின் கனத்தைச் செதுக்கும் செயல்பாடு அது.
அந்தக் கொள்கை உரத்தின் அடிப்படையில்தான் தி.மு.க. தொண்டர்களுக்கு முக்கிய கட்டளை ஒன்றைப் பிறப்பித்தார்!
எந்த இடத்தில், எந்த நேரத்தில், எந்த விழாவில் அந்தக் கட்டளையைப் பிறப்பிக்கவேண்டுமோ, அந்த நேரத்தையும், இடத்தையும் தேர்ந்தெடுத்து மிகச் சரியாக அறிவித்தது _ கலைஞர் அவர்களுக்கே உரித்தான தனித்தன்மையாகும்.
பெரியார் பெயரை மாத்திரம் சொல்லிக்கொண்டு கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தால், அது பெரியாருக்குச் செய்யும் நன்றி ஆகாது. பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு வாஸ்து பார்த்துக் கொண்டிருந்தால், அது பெரியாருக்குச் செய்கின்ற நன்றி ஆகாது. பெரியாருடைய கொள்கையை உண் மையிலே மனதிலே பதியவைத்துக் கொண்டிருந்தால், அவன் நாத்திகவாதியாக இருந்தாலும், அவன் பகுத்தறிவுவாதியாக இருந்தாலும், யாராக இருந் தாலும் இரட்டை மனிதனாக இருக்கக் கூடாது. இதுதான் இந்த பெரியார் மய்ய திறப்பு விழாவிலே கண்டிப்பாக அரசியல் துறையிலே இருக்கின்ற என்னுடைய கழக தோழர்களுக்கும் நான் சொல்லுகின்ற வேண்டுகோளாகும். இன்னும் சொல்லப்போனால் கட்டளையாகும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்று மானமிகு கலைஞர் அவர்கள் மிகவும் கண்டிப்பான தொனியில் கூறியுள்ளார்.
முதல்வர் கலைஞர் அவர்கள் தமது கழகத் தோழர்-களுக்கு நேரிடையாக இத்தகு கட்டளையைப் பிறப்பித்தாலும்கூட இதற்கு முன்பும் பல்வேறு சந்தர்ப்பங்-களில் தமது உள்ளக் கிடக்கையை இந்த வகையில் வெளிப்படுத்தித்தான் வந்திருக்கிறார்.
தி.மு.க. என்பது வெறும் அரசியல் கட்சி மட்டும் அல்ல_ சமுதாயக் கொள்கை உடைய அரசியல் கட்சி என்று பரப்புரை செய்ததுண்டு.
பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்புவதில் தி.க.வுக்கு அடுத்தபடியாக உள்ளது. தி.மு.க.தான் என்றும் உரிமை கொண்டாடியதுண்டு. பகுத்தறிவுப் பாசறை என்ற ஒரு அமைப்பைக்கூட அறிவித்ததுண்டு!
திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. திருப்புமுனை மாநாட்-டிலும் நாம் வந்த பாதையை மறந்துவிட்டு வேறு திசையில் செல்லக்கூடாது என்பதை அழுத்தந்-திருத்-தமாகக் கூறியுள்ளார்.
ஒருவனே தேவன் என்பது தேர்தலில் ஈடுபடும் ஓர் அரசியல் கட்சியின் ஒட்ட ஒழுகல் வகையைச் சார்ந்-ததாக இருக்கக்கூடும். நடைமுறையில் அறிஞர் அண்ணாவோ, கலைஞர் அவர்களோ, பேராசிரியர் அவர்-களோ, நாவலர் அவர்களோ எந்த ஒரு தேவன் மீதும் நம்பிக்கை வைத்து முழங்கால் தண்டனிட்டுக் கும்பிடுத் தண்டம் போட்டவர்கள் அல்லர்.
இதனைத் தொண்டர்கள் புரிந்துகொள்ளவேண்டும் _ இன்னும் சொல்லப்போனால், தன்மான இயக்கத்தின் அடிப்படைப் பகுத்தறிவுக் கொள்கைகளைக் கழகத்தின் புதிய தலைமுறையினருக்குக் கற்பிக்கும் முகாம்களை நடத்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
கட்சியின் தலைவர் கட்டளையிடத்தான் முடியும். மற்ற மற்ற பொறுப்பாளர்கள் அதனை நுணுக்கமாகப் புரிந்துகொண்டு ஒல்லும் வகைகளில் திட்டமிட்டு செயல் தளத்தில் கால் பதிக்கவேண்டும்.
தலைவர் முன்மொழிந்ததை செயல்பாடுகள்மூலம் வழிமொழிவது அவசியமாகும். ஒருமுறை கரிகாலன் பதிலில் கலைஞர் அவர்கள் திராவிடர் கழகம் நடத்துவது போல தி.மு.க.விலும் பயிற்சி முகாம்கள் நடத்-தப்படவேண்டும் என்று கூறியதுண்டு.
அடிப்படைக் கொள்கைகளில் பலமாக இருக்கும்-பொழுதுதான் எந்த ஊசலாட்டத்திற்கும் இடம் இல்லாத உறுதியான ஒரு நிலை ஒரு கட்சிக்கு ஏற்பட முடியும்!
அண்மைக் காலமாக மானமிகு கலைஞர் அவர்கள் இந்தத் திசையில் தொடர்ந்து கருத்துகளை வலியுறுத்திக் கூறிக்கொண்டே வருகிறார்.
இதனைத் தி.மு.க. தோழர்கள் புரிந்துகொண்டு செயல்படவேண்டியது மிகவும் அவசியமாகும்.
சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம், பெண்களுக்குச் சொத்துரிமை, தைமுதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை தமிழுக்குச் செம்மொழித் தகுதி சிதம்பரம் கோயில் தீட்சதர் ஆதிக்கத்திலிருந்து விடுபடச் செய்தது என்பதெல்லாம் தி.மு.க.வைத் தவிர வேறு எந்த ஆட்சியில் செயல்பட்டு இருக்க முடியும்? இதற்கான அடிப்படை என்ன என்பதைப் புரிந்து-கொண்டால், டில்லியில் கலைஞர் பிறப்பித்த கட்டளையின் அருமை புரியும்.
----- விடுதலை தலையங்கம் (04.05.2010)
பெரியார் தேசம் ஆகவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் முத்தாய்ப்பாகத் தம் கருத்தைப் பதிவு செய்தார். அது ஒன்றும் சொல்லழகுப் பூமாலைத் தொடுப்பல்ல. நாடு செழிக்க, சமதர்மமும், சமத்துவமும் தழைக்க அந்த நிலை உருவானால்தான் மீட்சிக்கு இடம் உண்டு.
பெரியார் திடலில் மாணவர் பருவத்தை ஒப்படைத்த அந்தப் பாங்கும், செறிவும் அந்தச் சொற்களின் வாயி-லாகத் தெறித்தன என்று கருதவேண்டும்.
ரூபாய் 5 லட்சம் குரு காணிக்கை என்று மானமிகு மாண்புமிகு சுயமரியாதைக்காரரான முதலமைச்சர் கலைஞர் அறிவித்தது _ பணம் என்ற அளவில் பார்க்கத்-தக்கதல்ல _ இந்தத் தன்மான, பகுத்தறிவுக் கொள்கை நிறுவனத்தில் தனக்குரிய ஈடுபாட்டின் கனத்தைச் செதுக்கும் செயல்பாடு அது.
அந்தக் கொள்கை உரத்தின் அடிப்படையில்தான் தி.மு.க. தொண்டர்களுக்கு முக்கிய கட்டளை ஒன்றைப் பிறப்பித்தார்!
எந்த இடத்தில், எந்த நேரத்தில், எந்த விழாவில் அந்தக் கட்டளையைப் பிறப்பிக்கவேண்டுமோ, அந்த நேரத்தையும், இடத்தையும் தேர்ந்தெடுத்து மிகச் சரியாக அறிவித்தது _ கலைஞர் அவர்களுக்கே உரித்தான தனித்தன்மையாகும்.
பெரியார் பெயரை மாத்திரம் சொல்லிக்கொண்டு கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தால், அது பெரியாருக்குச் செய்யும் நன்றி ஆகாது. பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு வாஸ்து பார்த்துக் கொண்டிருந்தால், அது பெரியாருக்குச் செய்கின்ற நன்றி ஆகாது. பெரியாருடைய கொள்கையை உண் மையிலே மனதிலே பதியவைத்துக் கொண்டிருந்தால், அவன் நாத்திகவாதியாக இருந்தாலும், அவன் பகுத்தறிவுவாதியாக இருந்தாலும், யாராக இருந் தாலும் இரட்டை மனிதனாக இருக்கக் கூடாது. இதுதான் இந்த பெரியார் மய்ய திறப்பு விழாவிலே கண்டிப்பாக அரசியல் துறையிலே இருக்கின்ற என்னுடைய கழக தோழர்களுக்கும் நான் சொல்லுகின்ற வேண்டுகோளாகும். இன்னும் சொல்லப்போனால் கட்டளையாகும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்று மானமிகு கலைஞர் அவர்கள் மிகவும் கண்டிப்பான தொனியில் கூறியுள்ளார்.
முதல்வர் கலைஞர் அவர்கள் தமது கழகத் தோழர்-களுக்கு நேரிடையாக இத்தகு கட்டளையைப் பிறப்பித்தாலும்கூட இதற்கு முன்பும் பல்வேறு சந்தர்ப்பங்-களில் தமது உள்ளக் கிடக்கையை இந்த வகையில் வெளிப்படுத்தித்தான் வந்திருக்கிறார்.
தி.மு.க. என்பது வெறும் அரசியல் கட்சி மட்டும் அல்ல_ சமுதாயக் கொள்கை உடைய அரசியல் கட்சி என்று பரப்புரை செய்ததுண்டு.
பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்புவதில் தி.க.வுக்கு அடுத்தபடியாக உள்ளது. தி.மு.க.தான் என்றும் உரிமை கொண்டாடியதுண்டு. பகுத்தறிவுப் பாசறை என்ற ஒரு அமைப்பைக்கூட அறிவித்ததுண்டு!
திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. திருப்புமுனை மாநாட்-டிலும் நாம் வந்த பாதையை மறந்துவிட்டு வேறு திசையில் செல்லக்கூடாது என்பதை அழுத்தந்-திருத்-தமாகக் கூறியுள்ளார்.
ஒருவனே தேவன் என்பது தேர்தலில் ஈடுபடும் ஓர் அரசியல் கட்சியின் ஒட்ட ஒழுகல் வகையைச் சார்ந்-ததாக இருக்கக்கூடும். நடைமுறையில் அறிஞர் அண்ணாவோ, கலைஞர் அவர்களோ, பேராசிரியர் அவர்-களோ, நாவலர் அவர்களோ எந்த ஒரு தேவன் மீதும் நம்பிக்கை வைத்து முழங்கால் தண்டனிட்டுக் கும்பிடுத் தண்டம் போட்டவர்கள் அல்லர்.
இதனைத் தொண்டர்கள் புரிந்துகொள்ளவேண்டும் _ இன்னும் சொல்லப்போனால், தன்மான இயக்கத்தின் அடிப்படைப் பகுத்தறிவுக் கொள்கைகளைக் கழகத்தின் புதிய தலைமுறையினருக்குக் கற்பிக்கும் முகாம்களை நடத்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
கட்சியின் தலைவர் கட்டளையிடத்தான் முடியும். மற்ற மற்ற பொறுப்பாளர்கள் அதனை நுணுக்கமாகப் புரிந்துகொண்டு ஒல்லும் வகைகளில் திட்டமிட்டு செயல் தளத்தில் கால் பதிக்கவேண்டும்.
தலைவர் முன்மொழிந்ததை செயல்பாடுகள்மூலம் வழிமொழிவது அவசியமாகும். ஒருமுறை கரிகாலன் பதிலில் கலைஞர் அவர்கள் திராவிடர் கழகம் நடத்துவது போல தி.மு.க.விலும் பயிற்சி முகாம்கள் நடத்-தப்படவேண்டும் என்று கூறியதுண்டு.
அடிப்படைக் கொள்கைகளில் பலமாக இருக்கும்-பொழுதுதான் எந்த ஊசலாட்டத்திற்கும் இடம் இல்லாத உறுதியான ஒரு நிலை ஒரு கட்சிக்கு ஏற்பட முடியும்!
அண்மைக் காலமாக மானமிகு கலைஞர் அவர்கள் இந்தத் திசையில் தொடர்ந்து கருத்துகளை வலியுறுத்திக் கூறிக்கொண்டே வருகிறார்.
இதனைத் தி.மு.க. தோழர்கள் புரிந்துகொண்டு செயல்படவேண்டியது மிகவும் அவசியமாகும்.
சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம், பெண்களுக்குச் சொத்துரிமை, தைமுதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை தமிழுக்குச் செம்மொழித் தகுதி சிதம்பரம் கோயில் தீட்சதர் ஆதிக்கத்திலிருந்து விடுபடச் செய்தது என்பதெல்லாம் தி.மு.க.வைத் தவிர வேறு எந்த ஆட்சியில் செயல்பட்டு இருக்க முடியும்? இதற்கான அடிப்படை என்ன என்பதைப் புரிந்து-கொண்டால், டில்லியில் கலைஞர் பிறப்பித்த கட்டளையின் அருமை புரியும்.
----- விடுதலை தலையங்கம் (04.05.2010)
மருத்துவர்களால் குணமாக்கப்படாத நோய் குழவிக் கல்லால் குணமாகிவிடுமா?
கோயில்களுக்குச் சென்று நேர்த்திக் கடன் கழித்துவிட்டுத் திரும்பு-பவர்கள் விபத்தில் பலியாகி மரணம் அடையும் பரிதாபச் செய்திகள் நாளும் வந்த வண்ணம் உள்ளன.
திருவாரூரையடுத்த எட்டுக்குடி முருகன் கோயி-லுக்குச் சென்று வந்த சென்னை திருவொற்றியூ-ரைச் சேர்ந்த பக்தகள் 5 பேர் சாலை விபத்தில் பரி-தாபமாகப் பலியானார்கள். மேலும் நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவ-மனையில் அனுமதிக்கப்பட்-டனர் என்பது நாளேடுகளில் வெளிவந்த தகவல்கள் (29.4.2010).
அதேபோல, கேரள மாநிலம் கானூர் மற்றும் பாலக்காடு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வேளாங்-கன்னிக்கு மாதாவைத் தரி-சிக்க காரில் வந்தபோது திரு-வாரூர் அருகே அம்மையப்-பன் அருகே நின்று கொண்-டிருந்த லாரிமீது மோதி அந்த இடத்திலேயே 8 பேர் பலியானார்கள் என்பது ஏப்ரல் 30 ஆம் தேதி ஏடு-களில் இடம்பெற்ற தகவல்.
ஓர் ஆண்டு என்று கணக்கிட்டால், இதுபோல ஆயிரம் ஆயிரம் விபத்து-கள்; அதில் ஆயிரம் ஆயி-ரம் பக்தர்கள் மரணம்!
இவ்வளவுக்குப் பிறகும் கடவுள், கோயில், பக்தி, தரி-சனம், நேர்த்திக் கடன் என்று மக்கள் அலைகிறார்-கள் என்றால், அவர்களின் பக்தியை, புத்தியை என்ன-வென்று சொல்ல!
ஒருகணம் சிந்தித்தால், புத்திக்கு வேலை கொடுத்-தாலே நல்ல முடிவுக்கு வந்துவிடலாமே!
கோயில்களும் சரி, அதற்குள் வைக்கப்பட்டிருக்-கும் கடவுள் சிலைகளும் சரி, மனிதனால் உருவாக்கப்-பட்டவைதானே!
ஓசையுள்ள கல்லை நீர்
உடைத்து ரண்டாய் செய்துமே
வாசலில் வைத்த கல்லை
மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்த கல்லில்
பூவும் நீரும் சாத்துறீர்!
ஈசனுக்கு உகந்த கல்லு
எந்த கல்லு சொல்லுமே!
என்று சித்தர் பாடினாரே கொஞ்சம் சிந்திக்கக் கூடாதா?
இப்பொழுது ஒரு தகவல் தமிழ்த் திரைப்பட உலகில் தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் மனோரமா! திராவிடர் கழகம் நடத்திய புரட்சிக்கவிஞர் விழாவில் அவருக்கு மக்கள் கலை-யரசி என்று பட்டம் கூட வழங்கப்பட்டது. அதற்குத் தகுதியானவர் அவர் என்-பதில் அய்யமில்லை.
அவருக்கு மூட்டு வலி-யாம். வயதான காலத்தில் பெண்களுக்குப் பொதுவாக வரக்கூடிய தொல்லைதான் இது. இதற்காக கேரளா சென்று ஆயுர் வேத சிகிச்-சைகூட எடுத்துக்கொண்டா-ராம்; குணமாகவில்லையாம்.
அடுத்து முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று தரிசனம் செய்தாராம் _ வேலை ஆகவில்லை. இறுதியில் திருப்பதி சென்று மொட்டை போட்டுக்-கொண்டு காரில் திரும்புகை-யில், விபத்துக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்-கப்பட்டுள்ளாராம். அவர் விரைவில் குணம் அடையவேண்டும் என்பதே நமது ஆவல்!
இதற்குப் பிறகாவது மனோரமாக்கள் திருந்துவார்-களா? திருந்தவேண்டும் என்-பதே நமது வேண்டுகோள்.
மருத்துவர்களால் குணமாக்கப்படாத நோய் குழவிக் கல்லால் குணமாகிவிடுமா?
- விடுதலை மயிலாடன் (04.05.2010)
திருவாரூரையடுத்த எட்டுக்குடி முருகன் கோயி-லுக்குச் சென்று வந்த சென்னை திருவொற்றியூ-ரைச் சேர்ந்த பக்தகள் 5 பேர் சாலை விபத்தில் பரி-தாபமாகப் பலியானார்கள். மேலும் நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவ-மனையில் அனுமதிக்கப்பட்-டனர் என்பது நாளேடுகளில் வெளிவந்த தகவல்கள் (29.4.2010).
அதேபோல, கேரள மாநிலம் கானூர் மற்றும் பாலக்காடு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வேளாங்-கன்னிக்கு மாதாவைத் தரி-சிக்க காரில் வந்தபோது திரு-வாரூர் அருகே அம்மையப்-பன் அருகே நின்று கொண்-டிருந்த லாரிமீது மோதி அந்த இடத்திலேயே 8 பேர் பலியானார்கள் என்பது ஏப்ரல் 30 ஆம் தேதி ஏடு-களில் இடம்பெற்ற தகவல்.
ஓர் ஆண்டு என்று கணக்கிட்டால், இதுபோல ஆயிரம் ஆயிரம் விபத்து-கள்; அதில் ஆயிரம் ஆயி-ரம் பக்தர்கள் மரணம்!
இவ்வளவுக்குப் பிறகும் கடவுள், கோயில், பக்தி, தரி-சனம், நேர்த்திக் கடன் என்று மக்கள் அலைகிறார்-கள் என்றால், அவர்களின் பக்தியை, புத்தியை என்ன-வென்று சொல்ல!
ஒருகணம் சிந்தித்தால், புத்திக்கு வேலை கொடுத்-தாலே நல்ல முடிவுக்கு வந்துவிடலாமே!
கோயில்களும் சரி, அதற்குள் வைக்கப்பட்டிருக்-கும் கடவுள் சிலைகளும் சரி, மனிதனால் உருவாக்கப்-பட்டவைதானே!
ஓசையுள்ள கல்லை நீர்
உடைத்து ரண்டாய் செய்துமே
வாசலில் வைத்த கல்லை
மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்த கல்லில்
பூவும் நீரும் சாத்துறீர்!
ஈசனுக்கு உகந்த கல்லு
எந்த கல்லு சொல்லுமே!
என்று சித்தர் பாடினாரே கொஞ்சம் சிந்திக்கக் கூடாதா?
இப்பொழுது ஒரு தகவல் தமிழ்த் திரைப்பட உலகில் தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் மனோரமா! திராவிடர் கழகம் நடத்திய புரட்சிக்கவிஞர் விழாவில் அவருக்கு மக்கள் கலை-யரசி என்று பட்டம் கூட வழங்கப்பட்டது. அதற்குத் தகுதியானவர் அவர் என்-பதில் அய்யமில்லை.
அவருக்கு மூட்டு வலி-யாம். வயதான காலத்தில் பெண்களுக்குப் பொதுவாக வரக்கூடிய தொல்லைதான் இது. இதற்காக கேரளா சென்று ஆயுர் வேத சிகிச்-சைகூட எடுத்துக்கொண்டா-ராம்; குணமாகவில்லையாம்.
அடுத்து முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று தரிசனம் செய்தாராம் _ வேலை ஆகவில்லை. இறுதியில் திருப்பதி சென்று மொட்டை போட்டுக்-கொண்டு காரில் திரும்புகை-யில், விபத்துக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்-கப்பட்டுள்ளாராம். அவர் விரைவில் குணம் அடையவேண்டும் என்பதே நமது ஆவல்!
இதற்குப் பிறகாவது மனோரமாக்கள் திருந்துவார்-களா? திருந்தவேண்டும் என்-பதே நமது வேண்டுகோள்.
மருத்துவர்களால் குணமாக்கப்படாத நோய் குழவிக் கல்லால் குணமாகிவிடுமா?
- விடுதலை மயிலாடன் (04.05.2010)
Monday, May 03, 2010
பார்பனிய கும்பலை வேரறுக்க...பெரியார், டில்லியில் மய்யம் கொண்டுள்ளார்
மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றார் புரட்சிக்கவிஞர். தந்தை பெரியாரின் சிந்தனைகளைத்-தான், தத்துவங்களைத்தான் கவித்துவம் நிறைந்த தன்மையில் சிந்தனையூற்றை மண்டைச் சுரப்பு என்று உருவகப்படுத்திக் கூறினார்.
தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தைவிட, அவர் மறைந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில்தான் அதிகம் பேசப்படுகிறார் _ தேவைப்படுகிறார்.
உலகெங்கும் மதச் சண்டைகள் மும்முரமாகத் தலைவிரித்தாடும் இந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுச் சிந்தனைகள் உலகிற்கே தேவைப்படுகின்றன. மதமற்ற ஓர் உலகுதான் மனித வாழ்வில் அமைதித் தென்றலை, சகோதரத்துவப் பிணைப்பைக் கொண்டுவரும் என்பது யதார்த்தமாகும்.
அத்தகு சமூகத்திற்கு தந்தை பெரியார் சிந்தனைகள் தேவைப்படுகின்றன. இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை மத மாச்சரியங்களுக்கு எதிராக மட்டுமல்ல, சமூகநீதிக்கு தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் பெரிதும் தேவைப்படுகின்றன.
இதன் அருமையை உணர்ந்து திராவிடர் கழகம் தந்தை பெரியார் கொள்கை பரப்பும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டது; பல திட்டங்களைக் காலத்தின் தேவை கருதி செயல்படுத்த முனைந்தது.
இந்தியாவின் தலைநகரமான டில்லியில் பெரியார் பெயரில் மய்யம் ஒன்றை உருவாக்கி உலகம் முழுவதும் அந்தப் பகுத்தறிவுப் பகலவனின் ஒப்புயர்-வற்ற சிந்தனை ஒளியைக் கொண்டுவரத் திட்டம் தீட்டப்பட்டது.
டில்லியையடுத்த பாம்னோலி பகுதியில் 4 அடுக்குகளைக் கொண்ட பெரியார் மய்யம் திறக்கப்பட்டது (1.10.2000). டில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் கட்டடத்தின் கல்வெட்டினைத் திறந்து வைத்தார்.
உலக மனிதநேய அமைப்பின் (IHEU) தலைவர் லெவி ஃபிராகல் மய்யத்தினைத் திறந்து வைத்தார். மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்தார்.
பல சமூக நலப் பணிகள் அதில் தொடங்கப்பட்-டன. மத்திய நிதித்துறை இணையமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் அந்த மய்யத்தில் மருத்துவமனையைத் திறந்து வைத்தார் (20.11.2001). பெரியார் கல்விப் பயிலகத்தை மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் மு. கண்ணப்பன் திறந்து வைத்தார் (20.11.2001).
பெரியார் தையற் பயிற்சிக் கூடமும் இடம்பெற்றது. பெரியார் நூலகம் ஒன்றும் இயங்கியது.
வட்டார மக்களின் ஆதரவுடன் பெரியார் மய்யம் தன் பகுத்தறிவுப் பணிகளைப் பரப்ப ஆரம்பித்தது.
பொறுக்குமா பாரதீய ஜனதா, சங்பரிவார்க் கும்பலுக்கு?
சு.சாமிகளின் விஷமமும் பின்னணியில்; டெல்லி லெப்டினன்ட் கவர்னரின் உத்தரவுப்படி சட்ட விரோத-மாக பெரியார் மய்யம் இடிக்கப்பட்டது (3.12.2001).
அந்த நேரத்திலும் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நிலைகுலைந்து போய்விடாமல், உறுதியாகச் சொன்ன வார்த்தைகளை இந்த நேரத்தில் நினைவுகூரத்தக்கதாகும்.
டிசம்பர் 3 ஆம் தேதி (2001) பெரியார் மய்யத் தின் 4 மாடிக் கட்டடத்தின் இடிப்பு என்பது தற் காலிகமாக பார்ப்பன சக்திகளுக்கு, பெரியார் தத்துவ எதிரிகளுக்குக் கொண்டாட்டமாக இருக்க லாம்; சிரித்து மகிழலாம்; ஆனந்தக் கூத்தாடலாம்; ஆனால், இறுதியில் சிரிக்கப் போவது யார் என்பது அவர்களுக்கு இப்போது புரியாது.
நமது அறிவு ஆசான் சொல்வார்; அவர் களுக்கு எப்போதும் முன்புத்தி கிடையாது, பின்புத்தி தான் என்று.
டில்லி நிகழ்ச்சி அதை இப்போதும் நிரூபித் துள்ளது. டில்லி பெரியார் மய்யத் திறப்பு விழாவில் கலந்துகொள்ள வந்து தங்கள் இன்னுயிர்களை ஈந்த லட்சிய வீரர், வீராங்கனைகளின் தியாகத்தின் மீது சபதம் செய்கிறோம். முன்பு இருந்ததைவிட, டெல்லி பெரியார் மய்யம் பிரம்மாண்டமானவை களாக பெரு உருப்பெற்று எழும், எழுப்பப்படும் (விடுதலை, 5.12.2001) என்று கட்டடம் இடிக்கப்பட்ட 24 மணிநேர இடைவெளியிலேயே சூளுரைத்தார்.
அது வெறும் வார்த்தை விளையாட்டு என்று யாராவது நினைத்திருந்தால், அவர்களின் நெஞ்சில் சூடு போட்டு, நிமிர்ந்து நிற்கிறது ஜஸோலாவின் பெரியார் மய்யம்.
ஆம், பெரியார், டில்லியில் மய்யம் கொண்-டுள்ளார். மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் பகுத்தறிவுப் புயல் வீசப் போகிறது.
பிற்போக்குச் சக்திகளை ஆணி வேரோடு வீழ்த்த அந்தப் புயல் நாலாத் திசைகளிலும் சுழன்றடிக்கப் போகிறது. உலகெங்கும் உள்ள பெரியார் பற்றாளர்கள், முற்போக்காளர்கள் மகிழ்ந்து கொண்டாடவேண்டிய அறிவுத் திருநாள் மே 2 (2.5.2010) என்பதிலும் அய்யமுண்டோ!
------------- விடுதலை தலையங்கம் (03.05.2010)
தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தைவிட, அவர் மறைந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில்தான் அதிகம் பேசப்படுகிறார் _ தேவைப்படுகிறார்.
உலகெங்கும் மதச் சண்டைகள் மும்முரமாகத் தலைவிரித்தாடும் இந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுச் சிந்தனைகள் உலகிற்கே தேவைப்படுகின்றன. மதமற்ற ஓர் உலகுதான் மனித வாழ்வில் அமைதித் தென்றலை, சகோதரத்துவப் பிணைப்பைக் கொண்டுவரும் என்பது யதார்த்தமாகும்.
அத்தகு சமூகத்திற்கு தந்தை பெரியார் சிந்தனைகள் தேவைப்படுகின்றன. இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை மத மாச்சரியங்களுக்கு எதிராக மட்டுமல்ல, சமூகநீதிக்கு தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் பெரிதும் தேவைப்படுகின்றன.
இதன் அருமையை உணர்ந்து திராவிடர் கழகம் தந்தை பெரியார் கொள்கை பரப்பும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டது; பல திட்டங்களைக் காலத்தின் தேவை கருதி செயல்படுத்த முனைந்தது.
இந்தியாவின் தலைநகரமான டில்லியில் பெரியார் பெயரில் மய்யம் ஒன்றை உருவாக்கி உலகம் முழுவதும் அந்தப் பகுத்தறிவுப் பகலவனின் ஒப்புயர்-வற்ற சிந்தனை ஒளியைக் கொண்டுவரத் திட்டம் தீட்டப்பட்டது.
டில்லியையடுத்த பாம்னோலி பகுதியில் 4 அடுக்குகளைக் கொண்ட பெரியார் மய்யம் திறக்கப்பட்டது (1.10.2000). டில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் கட்டடத்தின் கல்வெட்டினைத் திறந்து வைத்தார்.
உலக மனிதநேய அமைப்பின் (IHEU) தலைவர் லெவி ஃபிராகல் மய்யத்தினைத் திறந்து வைத்தார். மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்தார்.
பல சமூக நலப் பணிகள் அதில் தொடங்கப்பட்-டன. மத்திய நிதித்துறை இணையமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் அந்த மய்யத்தில் மருத்துவமனையைத் திறந்து வைத்தார் (20.11.2001). பெரியார் கல்விப் பயிலகத்தை மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் மு. கண்ணப்பன் திறந்து வைத்தார் (20.11.2001).
பெரியார் தையற் பயிற்சிக் கூடமும் இடம்பெற்றது. பெரியார் நூலகம் ஒன்றும் இயங்கியது.
வட்டார மக்களின் ஆதரவுடன் பெரியார் மய்யம் தன் பகுத்தறிவுப் பணிகளைப் பரப்ப ஆரம்பித்தது.
பொறுக்குமா பாரதீய ஜனதா, சங்பரிவார்க் கும்பலுக்கு?
சு.சாமிகளின் விஷமமும் பின்னணியில்; டெல்லி லெப்டினன்ட் கவர்னரின் உத்தரவுப்படி சட்ட விரோத-மாக பெரியார் மய்யம் இடிக்கப்பட்டது (3.12.2001).
அந்த நேரத்திலும் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நிலைகுலைந்து போய்விடாமல், உறுதியாகச் சொன்ன வார்த்தைகளை இந்த நேரத்தில் நினைவுகூரத்தக்கதாகும்.
டிசம்பர் 3 ஆம் தேதி (2001) பெரியார் மய்யத் தின் 4 மாடிக் கட்டடத்தின் இடிப்பு என்பது தற் காலிகமாக பார்ப்பன சக்திகளுக்கு, பெரியார் தத்துவ எதிரிகளுக்குக் கொண்டாட்டமாக இருக்க லாம்; சிரித்து மகிழலாம்; ஆனந்தக் கூத்தாடலாம்; ஆனால், இறுதியில் சிரிக்கப் போவது யார் என்பது அவர்களுக்கு இப்போது புரியாது.
நமது அறிவு ஆசான் சொல்வார்; அவர் களுக்கு எப்போதும் முன்புத்தி கிடையாது, பின்புத்தி தான் என்று.
டில்லி நிகழ்ச்சி அதை இப்போதும் நிரூபித் துள்ளது. டில்லி பெரியார் மய்யத் திறப்பு விழாவில் கலந்துகொள்ள வந்து தங்கள் இன்னுயிர்களை ஈந்த லட்சிய வீரர், வீராங்கனைகளின் தியாகத்தின் மீது சபதம் செய்கிறோம். முன்பு இருந்ததைவிட, டெல்லி பெரியார் மய்யம் பிரம்மாண்டமானவை களாக பெரு உருப்பெற்று எழும், எழுப்பப்படும் (விடுதலை, 5.12.2001) என்று கட்டடம் இடிக்கப்பட்ட 24 மணிநேர இடைவெளியிலேயே சூளுரைத்தார்.
அது வெறும் வார்த்தை விளையாட்டு என்று யாராவது நினைத்திருந்தால், அவர்களின் நெஞ்சில் சூடு போட்டு, நிமிர்ந்து நிற்கிறது ஜஸோலாவின் பெரியார் மய்யம்.
ஆம், பெரியார், டில்லியில் மய்யம் கொண்-டுள்ளார். மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் பகுத்தறிவுப் புயல் வீசப் போகிறது.
பிற்போக்குச் சக்திகளை ஆணி வேரோடு வீழ்த்த அந்தப் புயல் நாலாத் திசைகளிலும் சுழன்றடிக்கப் போகிறது. உலகெங்கும் உள்ள பெரியார் பற்றாளர்கள், முற்போக்காளர்கள் மகிழ்ந்து கொண்டாடவேண்டிய அறிவுத் திருநாள் மே 2 (2.5.2010) என்பதிலும் அய்யமுண்டோ!
------------- விடுதலை தலையங்கம் (03.05.2010)
Saturday, May 01, 2010
திரிபுவாதங்களுக்கு மறுப்புக் கூற..திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் (Dravidian Historical Research Centre)
திராவிடர் இனம்பற்றியும், திராவிடர் இயக்கம் குறித்தும் ஆய்வுகள் மேற்-கொள்ளவும், இவற்றிற்கு எதிரான திரிபுவாதங்களுக்கு மறுப்புக் கூறவும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் (Dravidian Historical Research Centre) என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் (Dravidian Historical Research Centre) எனும் அமைப்பை உருவாக்குவதற்கு 25 ஏப்ரல் 2010 காலை 11 மணிக்கு பின்வருவோர் சென்னை பெரியார் திடலில் கூடினர்.
கி. வீரமணி (கூட்டத் தலைமை), கவிஞர் கலி. பூங்குன்றன், முனைவர் அ. இராமசாமி, முனைவர் பி. ஜெகதீசன், பேராசிரியர் எ. கருணானந்தன், கு.வெ.கி. ஆசான், முனைவர் ப. காளிமுத்து, வீ. குமரேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:
செய்யவேண்டிய காரியங்கள்_
1. திராவிடர் வரலாற்று ஆய்வுக்கு ஊக்கமளிப்பது
2. திராவிடர் வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பாராட்டு
3. திராவிடர் வரலாறு பற்றிய தவறான கருத்துகளுக்கும், திரிபுவாதங்களுக்கும் மறுப்பு
4. திராவிடர் வரலாறுபற்றிய கருத்தரங்குகள்
5. திராவிடர் வரலாறு பற்றிய ஆவணத் தொகுப்பு
6. திராவிடர் வரலாற்றைக் கூறும் பருவ இதழ் நடத்துதல் (Quarterly Journal dealing with Dravidian History) இதழின் பெயர் Journal of Dravidian Historical Research
7. திராவிடர் வரலாற்றில் ஆர்வமும், ஈடுபாடும் உள்ள அனைவரையும் உறுப்பினர் ஆக்குதல்.
8. திராவிடர் வரலாறுபற்றிய அரிய நூல்களை மறுபதிப்புச் செய்தல், புதிய ஆய்வு நூல்களை வெளியிடல்.
பின்வரும் பொறுப்பாளர்கள் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டனர்.
1. புரவலர்: மானமிகு கி. வீரமணி
2. தலைவர்: முனைவர் ஏ. இராமசாமி
3. துணைத் தலைவர்: முனைவர் பி. ஜெகதீசன்
4. துணைத் தலைவர்: முனைவர் ந.க. மங்களமுருகேசன்
5. செயலாளர்: பேராசிரியர் அ. கருணானந்தன் (இதழ் ஆசிரியர்)
6. இணைச் செயலாளர்: முனைவர் பி.ஆர். அரங்கசாமி
7. தலைமையகச் செயலாளர்: மானமிகு கு.வெ.கி. ஆசான்
8. பொருளாளர்: மானமிகு வீ. குமரேசன்
நிருவாகக் குழுவினர்
1. முனைவர் ப. காளிமுத்து
2. முனைவர் பு. இராசதுரை
3. முனைவர் அ. கலியமூர்த்தி
2010 மே மாதம் இரண்டாம் வாரத்தில் தொடக்க விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
சென்னை_ பெரியார் திடலில், திராவிடர் கழகத் தலைமையிடத்தில் எத்தனை எத்த-னையோ சிறப்புமிக்க கருத்துகள், அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்-களின் தலைமையில் நேற்று நடைபெற்ற -பேரா-சிரியர்கள் பலரும் கலந்துகொண்ட ஆய்வுக்-கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும்.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் (Dravidian Historical Research Centre) ஒன்று உருவாக்கம் செய்யப்பட்டது.
இது உருவாக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? வரலாற்றில் மூத்த இனமான _-ஒரு காலத்-தில் இந்தியா முழுமையும் பரவியிருந்த இனமான திராவிட இனம் பற்றி சரியான வரலாற்றுத் தக-வல்களையும், ஆவணங்களையும் வெளிப்படுத்-துவது என்பது அதன் முதன்மையான நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
ஆரியராவது_ திராவிடராவது என்று பார்ப்-பனீயத்தை முதுகெலும்பாகக் கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். உள்-ளிட்ட சங் பரிவார் கும்பல் திட்டமிட்ட வகை-களில் ஒரு பக்கம் பிரச்சாரம் செய்துகொண்டு வருகின்றது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்களில் இத்தகைய தவறான தகவல்கள் பிஞ்சு உள்ளங்களில் திணிக்கப்படுகின்றன.
ஆர்.எஸ்.எஸ் தங்களின் வசீகர கதாநாயகனாக பயன்படுத்திக் கொள்ளப்படுகிற விவேகானந்தரி-லிருந்து, ஜவஹர்லால் நேரு, பி.டி.சீனிவாச அய்யங்கார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் உள்பட வரலாற்றில் ஆரியர் இனம் பற்றிப் பலபடப் பேசி இருக்கிறார்கள், எழுதிக் குவித்தும் இருக்கி-றார்கள். இராமாயணம் என்பதே ஆரியர் _ திராவிடர் போராட்டத்தின் வெளிப்பாடே என்று எத்தனை எத்தனையோ பேராசிரியர்கள் ஆய்வுக் கண்-ணோட்டத்தில் மறுக்க முடியாத ஆதாரங்களோடு நிறுவியும் இருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் மூடி மறைத்துவிட்டு, ஒரு சுயநல நோக்கோடு பல திரிபுவாதங்கள் நாட்டிலே தலைதூக்கும் வண்ணம் திட்டமிட்ட வகையில் காரியங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு, திராவிட இயக்கத்தால் ஏற்பட்ட நலன்-களையும், மாற்றங்களையும், உரிமைகளையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களே திராவிடர் என்பது. - திராவிடர் இயக்கம் என்பது ஆகாத ஒன்று. கூடாத ஒன்று என்பது போல, ஆரியர்-களின் கைப்பிள்ளைகளாக சிலர் மழலை மொழி பேசிக் கொண்டிருக்கின்றனர்.
திராவிடர்கள் பற்றிய முறையான வரலாறு இல்லாமையாலும், திராவிடர் இயக்கம்பற்றி போதுமான தகவல்கள் வெளிவராமையாலும், சிலர் குழப்ப முயற்சிக்கின்றனர். இந்தப் படு-குழியில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் நம் இளைஞர்கள் வீழ்ந்து விடக்கூடாது என்ற பொறுப்-பான கடமை உணர்ச்சியோடு, இந்த அமைப்பு நேற்று பெரியார் திடலில் உருவாக்-கப்பட்டது.
இந்த அமைப்பு வரலாற்றால் வாழ்த்தி வரவேற்-கப்படும் என்பதில் அய்யமில்லை. மிக பொருத்-த-மானவர்கள், இந்தத் தத்துவத்தில் உயிர் மூச்சு வைத்திருப்பவர்கள் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டிருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.
இதற்கு உலகம் முழுவதும் உள்ள பார்ப்பனர் அல்லாத திராவிட இனத்தைச் சேர்ந்த அத்த-னைப் பேரும் ஆதரவுக் கையை உயர்த்திக் காட்டு-வார்கள் என்பதில் அய்யமில்லை. பல வகை-களிலும் உதவி செய்வார்கள் என்ற நம்பிக்-கையும் உண்டு.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த அமைப்பு கூடி விவாதிக்கும், கருத்தரங்குகளை நடத்தும், காலாண்டு இதழ் ஒன்றையும் இரு மொழிகளில் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தொடங்-கவும் உள்ளது.
காலங்கருதி உருவாக்கப்பட்ட இந்த அமைப்பை உருவாக்கியவர்களுக்கு உள்ளங் கனிந்த பாராட்டுகளை, நன்றியினை உரித்தாக்கிக் கொள்வோம். இந்த அமைப்பு மேலும் மேலும் வலுப்பெற, ஒளிபெற கட்சிகளைக் கடந்த அனைத்துத் தரப்பு இன உணர்வாளர்களும் ஆதரவு அளிப்பார்களாக!
-------- விடுதலை தலையங்கம் மற்றும் செய்தி தொகுப்பு (26.04.2010)
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் (Dravidian Historical Research Centre) எனும் அமைப்பை உருவாக்குவதற்கு 25 ஏப்ரல் 2010 காலை 11 மணிக்கு பின்வருவோர் சென்னை பெரியார் திடலில் கூடினர்.
கி. வீரமணி (கூட்டத் தலைமை), கவிஞர் கலி. பூங்குன்றன், முனைவர் அ. இராமசாமி, முனைவர் பி. ஜெகதீசன், பேராசிரியர் எ. கருணானந்தன், கு.வெ.கி. ஆசான், முனைவர் ப. காளிமுத்து, வீ. குமரேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:
செய்யவேண்டிய காரியங்கள்_
1. திராவிடர் வரலாற்று ஆய்வுக்கு ஊக்கமளிப்பது
2. திராவிடர் வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பாராட்டு
3. திராவிடர் வரலாறு பற்றிய தவறான கருத்துகளுக்கும், திரிபுவாதங்களுக்கும் மறுப்பு
4. திராவிடர் வரலாறுபற்றிய கருத்தரங்குகள்
5. திராவிடர் வரலாறு பற்றிய ஆவணத் தொகுப்பு
6. திராவிடர் வரலாற்றைக் கூறும் பருவ இதழ் நடத்துதல் (Quarterly Journal dealing with Dravidian History) இதழின் பெயர் Journal of Dravidian Historical Research
7. திராவிடர் வரலாற்றில் ஆர்வமும், ஈடுபாடும் உள்ள அனைவரையும் உறுப்பினர் ஆக்குதல்.
8. திராவிடர் வரலாறுபற்றிய அரிய நூல்களை மறுபதிப்புச் செய்தல், புதிய ஆய்வு நூல்களை வெளியிடல்.
பின்வரும் பொறுப்பாளர்கள் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டனர்.
1. புரவலர்: மானமிகு கி. வீரமணி
2. தலைவர்: முனைவர் ஏ. இராமசாமி
3. துணைத் தலைவர்: முனைவர் பி. ஜெகதீசன்
4. துணைத் தலைவர்: முனைவர் ந.க. மங்களமுருகேசன்
5. செயலாளர்: பேராசிரியர் அ. கருணானந்தன் (இதழ் ஆசிரியர்)
6. இணைச் செயலாளர்: முனைவர் பி.ஆர். அரங்கசாமி
7. தலைமையகச் செயலாளர்: மானமிகு கு.வெ.கி. ஆசான்
8. பொருளாளர்: மானமிகு வீ. குமரேசன்
நிருவாகக் குழுவினர்
1. முனைவர் ப. காளிமுத்து
2. முனைவர் பு. இராசதுரை
3. முனைவர் அ. கலியமூர்த்தி
2010 மே மாதம் இரண்டாம் வாரத்தில் தொடக்க விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
சென்னை_ பெரியார் திடலில், திராவிடர் கழகத் தலைமையிடத்தில் எத்தனை எத்த-னையோ சிறப்புமிக்க கருத்துகள், அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்-களின் தலைமையில் நேற்று நடைபெற்ற -பேரா-சிரியர்கள் பலரும் கலந்துகொண்ட ஆய்வுக்-கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும்.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் (Dravidian Historical Research Centre) ஒன்று உருவாக்கம் செய்யப்பட்டது.
இது உருவாக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? வரலாற்றில் மூத்த இனமான _-ஒரு காலத்-தில் இந்தியா முழுமையும் பரவியிருந்த இனமான திராவிட இனம் பற்றி சரியான வரலாற்றுத் தக-வல்களையும், ஆவணங்களையும் வெளிப்படுத்-துவது என்பது அதன் முதன்மையான நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
ஆரியராவது_ திராவிடராவது என்று பார்ப்-பனீயத்தை முதுகெலும்பாகக் கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். உள்-ளிட்ட சங் பரிவார் கும்பல் திட்டமிட்ட வகை-களில் ஒரு பக்கம் பிரச்சாரம் செய்துகொண்டு வருகின்றது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்களில் இத்தகைய தவறான தகவல்கள் பிஞ்சு உள்ளங்களில் திணிக்கப்படுகின்றன.
ஆர்.எஸ்.எஸ் தங்களின் வசீகர கதாநாயகனாக பயன்படுத்திக் கொள்ளப்படுகிற விவேகானந்தரி-லிருந்து, ஜவஹர்லால் நேரு, பி.டி.சீனிவாச அய்யங்கார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் உள்பட வரலாற்றில் ஆரியர் இனம் பற்றிப் பலபடப் பேசி இருக்கிறார்கள், எழுதிக் குவித்தும் இருக்கி-றார்கள். இராமாயணம் என்பதே ஆரியர் _ திராவிடர் போராட்டத்தின் வெளிப்பாடே என்று எத்தனை எத்தனையோ பேராசிரியர்கள் ஆய்வுக் கண்-ணோட்டத்தில் மறுக்க முடியாத ஆதாரங்களோடு நிறுவியும் இருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் மூடி மறைத்துவிட்டு, ஒரு சுயநல நோக்கோடு பல திரிபுவாதங்கள் நாட்டிலே தலைதூக்கும் வண்ணம் திட்டமிட்ட வகையில் காரியங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு, திராவிட இயக்கத்தால் ஏற்பட்ட நலன்-களையும், மாற்றங்களையும், உரிமைகளையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களே திராவிடர் என்பது. - திராவிடர் இயக்கம் என்பது ஆகாத ஒன்று. கூடாத ஒன்று என்பது போல, ஆரியர்-களின் கைப்பிள்ளைகளாக சிலர் மழலை மொழி பேசிக் கொண்டிருக்கின்றனர்.
திராவிடர்கள் பற்றிய முறையான வரலாறு இல்லாமையாலும், திராவிடர் இயக்கம்பற்றி போதுமான தகவல்கள் வெளிவராமையாலும், சிலர் குழப்ப முயற்சிக்கின்றனர். இந்தப் படு-குழியில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் நம் இளைஞர்கள் வீழ்ந்து விடக்கூடாது என்ற பொறுப்-பான கடமை உணர்ச்சியோடு, இந்த அமைப்பு நேற்று பெரியார் திடலில் உருவாக்-கப்பட்டது.
இந்த அமைப்பு வரலாற்றால் வாழ்த்தி வரவேற்-கப்படும் என்பதில் அய்யமில்லை. மிக பொருத்-த-மானவர்கள், இந்தத் தத்துவத்தில் உயிர் மூச்சு வைத்திருப்பவர்கள் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டிருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.
இதற்கு உலகம் முழுவதும் உள்ள பார்ப்பனர் அல்லாத திராவிட இனத்தைச் சேர்ந்த அத்த-னைப் பேரும் ஆதரவுக் கையை உயர்த்திக் காட்டு-வார்கள் என்பதில் அய்யமில்லை. பல வகை-களிலும் உதவி செய்வார்கள் என்ற நம்பிக்-கையும் உண்டு.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த அமைப்பு கூடி விவாதிக்கும், கருத்தரங்குகளை நடத்தும், காலாண்டு இதழ் ஒன்றையும் இரு மொழிகளில் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தொடங்-கவும் உள்ளது.
காலங்கருதி உருவாக்கப்பட்ட இந்த அமைப்பை உருவாக்கியவர்களுக்கு உள்ளங் கனிந்த பாராட்டுகளை, நன்றியினை உரித்தாக்கிக் கொள்வோம். இந்த அமைப்பு மேலும் மேலும் வலுப்பெற, ஒளிபெற கட்சிகளைக் கடந்த அனைத்துத் தரப்பு இன உணர்வாளர்களும் ஆதரவு அளிப்பார்களாக!
-------- விடுதலை தலையங்கம் மற்றும் செய்தி தொகுப்பு (26.04.2010)
புரட்சிக்கவிஞரின் அறிவியல்பார்வை
இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் பாரதிக்குப் பிறகு அறிவியலும், கவிதையுமாகத் தமிழ் பரப்பியவர் புரட்சிக்கவி பாரதிதாசன். எதிலும் சமுதாயக் கண்ணோட்டம், பகுத்தறிவு சீர்திருத்தக் கொள்கைகளுக்குக் குறைவில்லை. பாவேந்தரின் கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை, சொற்பொழிவு, துணுக்கு போன்ற எல்லா ஊடகங்களிலும் அடிநாதமாக இழையோடும் அறிவியல் கருத்தாழத்தையும், தமிழின் முன்னேற்றத்தையும் எடுத்தெழுதுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
இந்நூற்றாண்டுக் கவியானபடியால் உலகில் நிகழ்ந்து வரும் விஞ்ஞானப் புரட்சியிலும் இரண்டறக் கலந்து, ஏவுகணைகள் முதல் சூரண மருத்துவம் வரை எத்தனையோ துறைகள் இவரது மனதில் உட்கடல் முத்துக்களாகப் பளீரிடுகின்றன. பொதுவாக அறிவியல் தமிழை மூன்று நிலைகளில் வகைப்படுத்தலாம். பாமரருக்குப் புரியுமாறு எழுதப்படும் விஞ்ஞானச் செய்தி; மாணவருக்குப் புகட்டத்தகும் அறிவியல் பாடம்; கற்றோருக்கன்றி மற்றோருக்குப் பொருள் விளங்காத உயர்தரத் தொழில்நுட்ப ஆய்வுக் குறிப்பு ஆகிய மூன்று தளங்களில் நின்று கவனித்தால் பாவேந்தரின் அறிவியல் கொள்கை களில் விஞ்ஞானத் தகவல் நிலையினின்று உயர்ந்து, அறிவியல் பாட நிலைக்கு எட்டமுயலும் வேகமும், வீரியமும் புலப்படும்.
கால விரைவினைக்
கடக்கும் வானூர்தி
ஞாலப் பரப்பினைச்
சுருக்கிற்று பார்நீ.
தொலைபேசித் தொடர்பு
தோழமை நட்பு
அலைகடல் மலையை
அறிந்து பெட்பு
வானொலி யாலே
வைய மொழிகள்
தேனொலி யாயின
திக்கெலாம் கனிகள்.
ஏவுகணைகள்
கோள்விட்டுக் கோளைத்
தாவின எங்குமே
நாம் செல்வோம் நாளை.
இன்றைக்குச் செவ்வாய்க்கு மனிதன் குடிபெயரும் பிரயத்தனங்கள் வலுவடைந்து வருகின்றன. சந்திரனில் தளம் அமைத்துப் பூமியிலிருந்து புறப்பட்டுச் சென்று அங்கு ஓய்வு முகாமிட்டுச் செவ்வாய்க் கோளுக்குப் பயணம் தொடரும் பூர்வாங்க முயற்சிகள் ஆரம்பித்துள்ளன. பாவேந்தரும் செவ்வாய் உலக யாத்திரை (ஏழைகள் சிரிக்கிறார்கள் -பாரதிதாசன் சிறுகதைத் தொகுப்பு) குறித்து கற்பனை ஓவியம் தீட்டியிருக்கிறார்.
1959ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் ஏவப்பட்ட ரஷ்யாவின், லூனா-_2 எனும் விண்கலம் சந்திரனில் ஆர்க்கிமிடிஸ் குழியின் அருகே தரையை முட்டிற்று. இதுகுறித்துப் பாவேந்தர் நடத்திய குயில் (22.9.59) ஏட்டின் கேட்டலும் கிளத்தலும் பகுதியில் ஒரு வினா _விடை இடம் பெற்றது. வான் இடத்தின் இரண்டாம் தலைவனான திங்களை மண்ணிடத்தில் உருசிய எறிகுண்டு பாம்பு தொட்டது என்றால் திங்களின் மானந்தானே கப்பலேறிற்று என்ற கேள்விக்கு மண்ணின் பெருஞ்செல்வந்தான் கரியாயிற்று எனப் பதிலிறுக்கிறார். புரட்சிக்கவி, சந்திரனைப் பாம்பு விழுங்குகிற புனைக் கதைகளைப் பொய்யாக்கி இம்மண்ணுலகப் போலிச் சாத்திரங்களை எரித்துவிட்ட விஞ்ஞான வரலாறு - பாவேந்தர் வாக்கில் அங்கதமாக அறிவிக்கப்படுகின்றது.
சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்றார் பாரதி. நிலவில் மாந்தர் இறங்கும் நாள் நெடுநாள் ஆகாது என்று தீர்க்கதரிசித்தார், பாரதிதாசனார். கவிஞர் மேலும் வெண்ணிலாவில் தமிழ்ப் பெண் சென்று இறங்கவேண்டும் என்ற ஆர்வத்தினால் பாவேந்தராகிய ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது எனினும் நிலவினில் முதல் மனிதன் கால் வைத்தது இந்திய நேரப்படி 1969 ஜூலை 21ஆம் நாள். பாவேந்தர் மறைந்து சரியாக 5 ஆண்டுகள் 3 மாதங்கள் கழித்தே விண்வெளி வரலாற்றின் அந்த மகத்தான சாதனை அப்போலோ- 11 எனும் அமெரிக்கத் திட்டத்தினால் நிறைவேறியது.
ஜப்பானில் விழுந்த குண்டு தப்பாது உலகழிக்கும் என்ற தலைப்பில் பகுத்தறிவு மலர் இதழில் பாரதிதாசன் எழுதின கவிதையின் சில வரிகளைக் கவனிப்போம்.
இரோஷிமா நாகசாகி எனும் இரு ஊரில் வைய
விரோதிகள் வீசின ராம் வெடிகுண்டை; எரி மலைத்தீ
சரேலெனக் கவிழ்ந்த தைப் போல் சாவில்பல்லாயி ரம்பேர்
ஒரே விஷப் புகை நெருப்பால் உருவிலா தழிந்தா ராமே
இன்னும் ஒரு நூற்றாண்டுக்கும் இரண்டூரின் சுற்றுப்பக்கம்
ஒன்றுமே முளையா தாமே! வாழ்தலும் ஒண்ணா தாமே
அணுகுண்டு எதிர்ப்பை மிக ஆழமாக இதில் பதிவு செய்துள்ளார்.
மேலும் உங்கள் தெரு கெட்ட தெரு எனும் தலைப்பில் தூய்மையான சுற்றுப்புறம் குறித்து ஆதங்கப்படுவதைக் கேளுங்கள்:
உங்கள் தெரு வீட்டின்முன்னே
மாடு கட்டி இருக்கும் - _அங்கு
உள்ள சாணி சிறுநீரில்
கொசுக்கள் நோயைப் பெருக்கும்.
அங்கங்கேயும் வீட்டெதிரில்
குப்பைக் கூளம் கிடக்கும் _- எனில்
அதனை நாயும் கோழியும்போய்
கிளறிக் காற்றைக் கெடுக்கும்
தங்குழந்தை தெருவில் பகலில்
வெளிக்குப் போகக் கண்டு _- நல்ல
தந்தையரும் இருட்டினிலே
செய்வார் அந்தத் தொண்டு
கிண்டலைப் பாருங்கள்.
புகைபிடித்தல் உடலுக்குத் தீங்கு என்கிற கொள்கையோடு,
புகைச்சுருட்டால்
மூச்சுக் கருவிகள் முற்றும்நோய் ஏறும், பிள்ளை
முத்தம் தரும்நே ரத்தில் வாய் நாறும்,
ஓய்ச்சல் ஒழிவில் லா(து) இருமல் சீறும் _- நல்.
ஊரோ உன்னைச் சீ என்றே கூறும்
எனப் புகை சுருட்டுக் கவிதையில், தீமையைச் சுட்டிக்காட்டுகிறார்.
இதுகாறும் புரட்சிக்கவி பாரதிதாசனாரின் அறிவியல் தமிழுள்ளமும் ஆழ்ந்த கவிநெஞ்சமும் நுணுகி ஆராயப் பெற்றோம். அரசு மொழியாக, ஆட்சி மொழியாக, அறிவியல் மொழியாகத் தமிழ் செழிக்கவேண்டும்.
நன்றி: தீக்கதிர், 26.4.2010
இந்நூற்றாண்டுக் கவியானபடியால் உலகில் நிகழ்ந்து வரும் விஞ்ஞானப் புரட்சியிலும் இரண்டறக் கலந்து, ஏவுகணைகள் முதல் சூரண மருத்துவம் வரை எத்தனையோ துறைகள் இவரது மனதில் உட்கடல் முத்துக்களாகப் பளீரிடுகின்றன. பொதுவாக அறிவியல் தமிழை மூன்று நிலைகளில் வகைப்படுத்தலாம். பாமரருக்குப் புரியுமாறு எழுதப்படும் விஞ்ஞானச் செய்தி; மாணவருக்குப் புகட்டத்தகும் அறிவியல் பாடம்; கற்றோருக்கன்றி மற்றோருக்குப் பொருள் விளங்காத உயர்தரத் தொழில்நுட்ப ஆய்வுக் குறிப்பு ஆகிய மூன்று தளங்களில் நின்று கவனித்தால் பாவேந்தரின் அறிவியல் கொள்கை களில் விஞ்ஞானத் தகவல் நிலையினின்று உயர்ந்து, அறிவியல் பாட நிலைக்கு எட்டமுயலும் வேகமும், வீரியமும் புலப்படும்.
கால விரைவினைக்
கடக்கும் வானூர்தி
ஞாலப் பரப்பினைச்
சுருக்கிற்று பார்நீ.
தொலைபேசித் தொடர்பு
தோழமை நட்பு
அலைகடல் மலையை
அறிந்து பெட்பு
வானொலி யாலே
வைய மொழிகள்
தேனொலி யாயின
திக்கெலாம் கனிகள்.
ஏவுகணைகள்
கோள்விட்டுக் கோளைத்
தாவின எங்குமே
நாம் செல்வோம் நாளை.
இன்றைக்குச் செவ்வாய்க்கு மனிதன் குடிபெயரும் பிரயத்தனங்கள் வலுவடைந்து வருகின்றன. சந்திரனில் தளம் அமைத்துப் பூமியிலிருந்து புறப்பட்டுச் சென்று அங்கு ஓய்வு முகாமிட்டுச் செவ்வாய்க் கோளுக்குப் பயணம் தொடரும் பூர்வாங்க முயற்சிகள் ஆரம்பித்துள்ளன. பாவேந்தரும் செவ்வாய் உலக யாத்திரை (ஏழைகள் சிரிக்கிறார்கள் -பாரதிதாசன் சிறுகதைத் தொகுப்பு) குறித்து கற்பனை ஓவியம் தீட்டியிருக்கிறார்.
1959ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் ஏவப்பட்ட ரஷ்யாவின், லூனா-_2 எனும் விண்கலம் சந்திரனில் ஆர்க்கிமிடிஸ் குழியின் அருகே தரையை முட்டிற்று. இதுகுறித்துப் பாவேந்தர் நடத்திய குயில் (22.9.59) ஏட்டின் கேட்டலும் கிளத்தலும் பகுதியில் ஒரு வினா _விடை இடம் பெற்றது. வான் இடத்தின் இரண்டாம் தலைவனான திங்களை மண்ணிடத்தில் உருசிய எறிகுண்டு பாம்பு தொட்டது என்றால் திங்களின் மானந்தானே கப்பலேறிற்று என்ற கேள்விக்கு மண்ணின் பெருஞ்செல்வந்தான் கரியாயிற்று எனப் பதிலிறுக்கிறார். புரட்சிக்கவி, சந்திரனைப் பாம்பு விழுங்குகிற புனைக் கதைகளைப் பொய்யாக்கி இம்மண்ணுலகப் போலிச் சாத்திரங்களை எரித்துவிட்ட விஞ்ஞான வரலாறு - பாவேந்தர் வாக்கில் அங்கதமாக அறிவிக்கப்படுகின்றது.
சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்றார் பாரதி. நிலவில் மாந்தர் இறங்கும் நாள் நெடுநாள் ஆகாது என்று தீர்க்கதரிசித்தார், பாரதிதாசனார். கவிஞர் மேலும் வெண்ணிலாவில் தமிழ்ப் பெண் சென்று இறங்கவேண்டும் என்ற ஆர்வத்தினால் பாவேந்தராகிய ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது எனினும் நிலவினில் முதல் மனிதன் கால் வைத்தது இந்திய நேரப்படி 1969 ஜூலை 21ஆம் நாள். பாவேந்தர் மறைந்து சரியாக 5 ஆண்டுகள் 3 மாதங்கள் கழித்தே விண்வெளி வரலாற்றின் அந்த மகத்தான சாதனை அப்போலோ- 11 எனும் அமெரிக்கத் திட்டத்தினால் நிறைவேறியது.
ஜப்பானில் விழுந்த குண்டு தப்பாது உலகழிக்கும் என்ற தலைப்பில் பகுத்தறிவு மலர் இதழில் பாரதிதாசன் எழுதின கவிதையின் சில வரிகளைக் கவனிப்போம்.
இரோஷிமா நாகசாகி எனும் இரு ஊரில் வைய
விரோதிகள் வீசின ராம் வெடிகுண்டை; எரி மலைத்தீ
சரேலெனக் கவிழ்ந்த தைப் போல் சாவில்பல்லாயி ரம்பேர்
ஒரே விஷப் புகை நெருப்பால் உருவிலா தழிந்தா ராமே
இன்னும் ஒரு நூற்றாண்டுக்கும் இரண்டூரின் சுற்றுப்பக்கம்
ஒன்றுமே முளையா தாமே! வாழ்தலும் ஒண்ணா தாமே
அணுகுண்டு எதிர்ப்பை மிக ஆழமாக இதில் பதிவு செய்துள்ளார்.
மேலும் உங்கள் தெரு கெட்ட தெரு எனும் தலைப்பில் தூய்மையான சுற்றுப்புறம் குறித்து ஆதங்கப்படுவதைக் கேளுங்கள்:
உங்கள் தெரு வீட்டின்முன்னே
மாடு கட்டி இருக்கும் - _அங்கு
உள்ள சாணி சிறுநீரில்
கொசுக்கள் நோயைப் பெருக்கும்.
அங்கங்கேயும் வீட்டெதிரில்
குப்பைக் கூளம் கிடக்கும் _- எனில்
அதனை நாயும் கோழியும்போய்
கிளறிக் காற்றைக் கெடுக்கும்
தங்குழந்தை தெருவில் பகலில்
வெளிக்குப் போகக் கண்டு _- நல்ல
தந்தையரும் இருட்டினிலே
செய்வார் அந்தத் தொண்டு
கிண்டலைப் பாருங்கள்.
புகைபிடித்தல் உடலுக்குத் தீங்கு என்கிற கொள்கையோடு,
புகைச்சுருட்டால்
மூச்சுக் கருவிகள் முற்றும்நோய் ஏறும், பிள்ளை
முத்தம் தரும்நே ரத்தில் வாய் நாறும்,
ஓய்ச்சல் ஒழிவில் லா(து) இருமல் சீறும் _- நல்.
ஊரோ உன்னைச் சீ என்றே கூறும்
எனப் புகை சுருட்டுக் கவிதையில், தீமையைச் சுட்டிக்காட்டுகிறார்.
இதுகாறும் புரட்சிக்கவி பாரதிதாசனாரின் அறிவியல் தமிழுள்ளமும் ஆழ்ந்த கவிநெஞ்சமும் நுணுகி ஆராயப் பெற்றோம். அரசு மொழியாக, ஆட்சி மொழியாக, அறிவியல் மொழியாகத் தமிழ் செழிக்கவேண்டும்.
நன்றி: தீக்கதிர், 26.4.2010
குடி குடியை கெடுக்கும் என்பது போல பக்தி ஒழுக்கத்தை கெடுக்கும்...
எனக்கு நிறைய நல்ல அறிவு பூர்வமான கட்டுரைகள் எளுதுவதர்க்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பது என்ன என்று கேட்டால் அது நான் நண்பர்களுடன் உரையாடுவது தான். அந்த வகையில் தான் இந்த கட்டுரையும் எழுத நேர்ந்தது அனால் ஒரு சிறு வேறுபாடு அது என்ன என்றால், என்னுடன் ஒத்த கொள்ளகை உடைய ஒரு நண்பர் அவருடைய அலுவலகத்தில் உள்ள ஒரு தோழருடன் பகுத்தறிவு கொள்கைக்கான விவாதத்தில் ஈடுபட்டபோது அந்த தோழரின் வினாவிற்கும் மற்றும் புரிதல் இல்லாத அவருடைய குழப்பமான பதிலுக்கும் விளக்கம் அளிக்கவே இந்த கட்டுரை எழுத வேண்டியதாகி உள்ளது. மேலும் இந்த தலைப்பை பார்க்கும் பொது உங்களுக்கு நினைவு வந்தது கல்கி ஆசிரம் தானே? ஆமாம், சன் தொலைகாட்சியில் சாராயக் கடையும் கல்கி ஆசிரமத்தையும் ஒப்பீடு வீடியோ பார்த்தல் எல்லோருக்கும் அதன் நினைவு வரும்.....சரி நாம் விசயத்துக்கு போவோம்...
அந்த விவாதத்தின் இறுதியில் அந்த தோழர் எப்படி முடிக்கின்றார் என்றால் "ஒன்றுமே இல்லாமல் இருந்த நம்மை, ஒரு தூளி விந்துதில் இருந்து , தாயின் கருவறை இல் உருவாகியவன் யார்?" என்ற இந்த வினாவோடு முடித்துகொண்டுவிட்டார். (இஸ்லாம் சார்ந்தவர்). இப்படி சொல்லித்தான் இஸ்லாமில் ....குடும்பக்கட்டுப்பாடு (family plan ) பண்ணாம ......? படிக்குற நீங்களே..................யோசித்துக்கொள்ளுங்கள்.
ஒன்றுமே இல்லாமல் நாம் இருந்தால் எப்படி குழந்த உருவாகும் .... ஆண்களுக்கு கீழே ஆண்குறி ...பெண்களுக்கு பெண் குறி ....இருந்தால் மட்டுமே அது சாத்தியம் (his question like this so we have to answer like this...sorry, no way to expose).....சாதாரண விஷயம் கூட யோசிக்க முடியாமல் எப்படி அந்த தோழர் இந்த வினாவை எழுப்புகிறார் என்று புரியவில்லை ...மேடும் பள்ளமும் இறைவனின் செயல் என்றால் மேட்டை வெட்டி பள்ளத்தில் போடுவது இறைவனுக்கு எதிரான செயல் என்று இவர் ஒப்புக்கொள்வாரா? மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு ஏன்?
பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் கடவுளுக்கு எதிரான செயல் தான். ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காகப் பட்டினி போட்டிருக்கும்போது நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமே யாகும். அதாவது, கடவுளே நம்பாத - கடவுள் செயலை நம்பாத செயலே யாகும்.தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்று காட்டிக் கொள்கிற எவரும், கடவுள் நம்பிக்கையாளர்கள் என்கின்ற எவரும் கடவுளை நம்பி எந்தக் காரியத்தையும் கடவுளிடம் விடுவது கிடையாது. தலைவலி வந்தால்கூட டாக்டரிடம்தான் செல்கிறார்கள். இவர்கள் எப்படி உண்மையான கடவுள் நம்பிக்கைக்காரர்களாக இருக்க முடியும்?
உயிரினகளின் பரிணாம வளர்ச்சிக்கு கடவுளுக்கு போகவே தேவை இல்லை....சார்லஸ் டார்வின் உடைய "பரிணாம கோட்பாடு" (Darwin's Theory of Evolution) என்ற நூலினை படியுங்கள் ....புரியும் ..அப்படியும் புரியலன்ன .....பகுத்தறிவு வேலை செய்யவில்லை என்று தான் மற்றவர்கள் நினைக்க கூடும்.
அந்த விவாதத்தின் நடுவில், புரட்சி கவிங்கர் கேட்ட கேள்வி "கோவிலுக்கென்று கொடுத்திடல் அறமா? கோடிகொடுக்கும் கல்வி தேடிடல் அறமா? மாந்தரிற் சாதி வகுப்பது சரியா? மக்கள் ஒரேகுலமாய் வாழ்வது சரியா?" அவரிடம் முன் வைத்தபோது, அந்த தோழர் கூறியது என்ன என்றால் அது நல்ல சிந்தனைதான் என்று கூறிவிட்டு அவர் ஒரு கட்டுரை அனுப்பினார். அந்த கட்டுரையின் தலைப்பு "நாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டாமா?" (சிரிப்பு வரும் கூடவே எரிச்சலும் வரும்..சிந்திக்க வேண்டாமா என்று கேட்டதற்காக அல்ல ....இப்படி நாத்திகம் மற்றும் ஆத்திகம் வேறுபாடு தெரியாம விவாதம் பன்னுரறேன்னு நினைத்து)
நாத்திகம் ஆத்திகம் குறித்து அறிவு ஆசான் அய்யா தந்தை பெரியார் அவர்கள் என்ன சொல்லுகிறார் பாருங்கள்.......இதோ
காரண காரியத்தைத் தெரிந்து அதன்படி நடப்பவன் நாத்திகன். வெறும் நம்பிக்கையை ஆதாரமாக வைத்துச் சாத்திரம் சொல்லுகிறது, பெரியோர்கள் சொல்லுகிறார்கள் என்பதை நம்பி அந்த நம்பிக்கையின் படி நடப்பவன் ஆத்திகன்.
நாத்திகன் என்பதற்குக் கடவுள் இல்லை யென்பவன் என்று பொருளல்ல; புராண இதிகாச வேத சாத்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர்களையே, அவற்றைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்ப்பவர்களையே, பார்ப்பனர்கள் நாத்திகர்கள் என்று எழுதி வைத்திருக்கின்றனர். இராமாயணத்தில் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்த புத்தர் முதலானவர்களை நாத்திகர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பகுத்தறிவுக்கும் நாத்திகத்திற்கும் உள்ள உறவு: சமுதாயச் சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொது உடைமை என்பதைப் போலவே நாத்திகமும் அறிவின் உண்மையான கடைசி எல்லையாகும்.
நாத்திகத்தின் பிறப்படம்: எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இட மில்லையோ அங்கெல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கின்றது. கிருத்துவையும், முகமது நபியையும் கூட நாத்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கு அவர்களது சமதர்மமும், சீர்திருத்தமும்தான் காரணமாகும்.
இப்பொழுதாவது தெரிந்துகொள்ளுங்கள் தோழரே .....நாத்திகம் என்றால் என்ன என்று. நாத்திகம் தொடர்பாக நான் ஒரு விளக்க உதாரணம் ஒன்றையும் பதிவு செய்கிறேன். நாத்திகம் என்பது மேல் சொன்னது போல சிந்தனையின் கடைசி முனை, அதாவது பகுத்தறிவை பயன்படுத்தி சிந்திபவர்கள் என்றுதான் பார்பனர்கள் கூறி இருக்கிறார்கள். எனவே நாத்திகம் என்றால் சிந்திப்பவர்கள் ...சிந்திப்பவர்கள் என்றல் நாத்திகர்கள். அப்படி இருக்க இவர் கொடுத்துள்ள தலைப்பே ("நாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டாமா?") முற்றிலும் முரணாக இருக்கிறது...இதிலேயே அந்த கட்டுரையானது விளக்கமில்லாத ஒன்று என்று புலப்பட்டு விட்டது எனக்கு.
அந்த கட்டுரையில் இருந்து இதோ ஒரு விளக்கம் கொடுக்கிறார் நமக்கு..
நாஸ்திகர்கள் கூறக்கூடிய கொடுமைகள் அனைத்தும் சமுதாயத்தில் இடம் பெற்றுள்ளன என்பதை நாமும் ஒப்புக்கொள்கிறோம்.
அதை அனைத்தையும் அகற்றி ஏற்றத் தாழ்வுகளை அகற்றி சமத்துவ சகோதரத்துவ சமுதாயத்தை அவர்கள் கொடுக்கும் திட்டம்தான் மிகவும் தவறான ஒரு திட்டமாகும். ஆபத்தான திட்டமாகும். அவர்களின் திட்டம் குறிப்பாக
தமிழகத்தில் எப்படிப்பட்ட நிலையை உண்டாக்கி இருக்கிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம். நாட்டில் மலிந்துகாணப்படும் கெடுதிகளுக்கு, இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே மார்க்கத்தை நேர்வழியை மதங்களாக்கி மக்களை பல பிரிவினர்களாக்கி அதன் மூலம் அற்ப உலக ஆதாயம் அடைந்து வரும் புரோகிதரர்கள் எந்த அளவு பொறுப்பாளர்களாக இருக்கிறார்களோ அதே அளவு அதில் எவ்வித குறையுமின்றி நாஸ்திகர்களும் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள்
என்பதை நாஸ்திகர்கள் உணரவேண்டும்.
கள் குடிப்பது கூடாது; குடி குடியைக் கெடுக்கும்; இது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. மக்களை இந்த உண்மையை உணரவைத்து அவர்களை குடியை விடச் செய்வதே அறிவுடையவர்கள் செய்யும் நல்ல முயற்சிகள். தென்னை மரத்திலிருந்துதானே கள் வருகின்றது, தென்னை மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டால், கள் குடி ஒழிந்துவிடும் என்று தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்துபவனை அறிவாளி என்று சொல்ல மாட்டார்கள். மாறாக, தென்னை மரத்தைக் கொண்டு மக்கள் பெறும் நல்ல பலன்களை மக்கள் இழக்க நேரிடும் என்பதே உண்மையாகும். குடிகாரன் தென்னை மரத்திலிருந்து கள் குடிக்கவில்லை என்பதற்காக குடியை விடப்போவதில்லை. ஸ்பிரிட்டைக் காய்ச்சி குடிக்க ஆரம்பிப்பான். அவனுக்கு வேண்டியது போதை. அந்தப் போதையை எப்படியெல்லாம் பெற்றுக்கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் பெற்றுக் கொள்ள முயல்வான். குடியை விடமாட்டான். இதே போல் மூட்டைப் பூச்சித் தொல்லைத் தாங்கமுடியவில்லை என்பதற்காக வீட்டைக் கொளுத்தி விட்டு காட்டில் போய் அவதிப்படமாட்டான். அறிவுள்ள மனிதன் வீட்டிலிருந்தே கொண்டே மூட்டைப்பூச்சித் தொல்லையைப் போக்க உரிய வழியையே பார்ப்பான்
இப்படிப்பட்ட ஒரு அறிவற்ற முயற்சிதான், இறைவனின் பெயரால் சிறு சாரார் பெரும் சாராரை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதற்காக இறைவனே இல்லை என்று நிலைநாட்டச் செய்யப்படும் முயற்சியுமாகும். கள்ளுக்கு பயந்து தென்னையை வெட்டி வீழ்த்தியதால், தென்னயிலிருந்து பெறப்படும் பயன்களை மனிதன் இழப்பதுபோல் சமூகத்தில் சிறு தொகையினர் மக்களை ஏமாற்றுகின்றனர் என்ற காரணத்தால் இறைவன் இல்லை என்று சொல்வது சமுதாயத்தில் பெரும்பான்மையினர் இறை நம்பிக்கையின் மூலம் அடையும் பெரும் பலன்களை இழக்கச் செய்வதாகும்..............
மேற்ச்சொன்னவை தான் அந்த கட்டுரையில் மிக பிரதானமாக வைக்கப்படும் உவமை. ஆனால் ஒன்று அதில் பத்தி என்பது ஒரு போதை என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார் என்பது மிக்க மகிழ்ச்சி......சரி நான் விவாதத்துக்கு வருகிறேன்... தலைப்பே சரியில்லை அப்போ எப்படி அவர்கள் கூறும் உவமை மட்டும் அறிவு பூர்வமாக இருக்க முடியும் (பத்தி வந்தால் புத்தி போய்விடும் என்று அய்யா அவர்கள் அடிகடி கூறுவார்கள் அது மிக மிக உண்மை). முதலில் ஒன்றுக்கும் உதவாத குத்துக்கல்லை (கடவுளை) தென்னை மரத்துடன் ஒப்பிடலாமா?. வேண்டுமானால் கருவை மரத்துடன் ஒப்பிடலமே ஒழிய தென்னை மரத்துடன் ஒப்பிட்டு எழுதி உள்ளது அறிவு வீழ்ச்சியை காண்பிக்கிறது. கருவை மரம் இருக்குற நிலம் பண்படாத நிலம். வேறு எந்த பயிரும் பண்ணமுடியாமல் உதவாக்கரை நிலமா மாறிடும். அதோடு மட்டும் அல்ல முதலில் அந்த மரத்தினால் எந்த பயனும் இல்லை ..அது போலத்தான் கடவுளும் .....கருவ மரம் இருந்தால் அதனுள் மனிதன் நடமாடவே முடியாது .....முள் குத்தும். அதுவே அதனை அடியோ வெட்டி அளித்தால் கரிக்கட்டைக்கு பயன் படும் இல்லை அடுப்பெரிக்க பயன்படும்...அது போலத்தான் கடவுள் என்பதை ஒழித்தால், ஒழித்தபிறகு நிறைய நன்மைகள் கிடைக்கும் (கருவ மரம் வெட்டிய பிறகு கரிக்கட்டைக்கு பயன்படுவது விட அதிகமான நன்மை கிடைக்கும் கடவுள் என்னும் கருவை மரத்தை ஒழித்தால்). எனவே தோழரே தயவு செய்து ஒப்பீடு என்பது அறிவு பூர்வமாக இருக்கட்டும். ஆத்திகர்கள் எப்படி ஒப்பீடு செய்வார்கள் என்பது இதன் மூலம் உங்கள் எல்லோருக்கும் விளங்கும்.
இன்னொரு சிறிய விளக்கமும் கொடுத்தாக வேண்டும் கள்ளை வேண்டுமானால் கடவுளுடன் ஒப்பீடு செய்யலாம் ஏனென்றால் கள்ளும் போதை கடவுளினால் ஏற்படும் பக்தியும் போதை (அவரே ஒப்புக்கொண்டுள்ளார்). எனவே அவரின் இந்த கட்டுரை முழுமையும் பத்தி போதை சூழ்ந்துள்ளதால் மப்பில் எழுதி விட்டார் போலும். குடி குடியை கெடுக்கும் என்பது போல பக்தி ஒழுக்கத்தை கெடுக்கும் என்று இனி எல்லா கோவிலின் நுழைவிலும் எச்சரிக்கை என்று போட்டு எழுத வேண்டும்.
மேலும் அதில் மூட்டை பூச்சி வீடு என்றெல்லாம் உளறி உள்ளார். அங்கேயும் ஒரு தவறு ...வீட்டை கொண்டு வந்து குத்துக்கல்லுடன் (கடவுளுடன்) ஒப்பீடு செய்துள்ளார். ரெண்டும் உயிரற்ற பொருள் என்று ஒப்பீடு செய்து உள்ளாரோ என்னவோ தெரியவில்லை. வீடு உயிரற்ற ஒன்றாக இருந்தாலும் நாம் உறைவிடம் அமைத்துக்கொள்ள பயன்படுகிறது. எனவே மூட்டை பூச்சி உடன் தான் ஒப்பீட வேண்டும். மூட்டை பூச்சி இருந்தால் எவளவு தொல்லையோ (இது கூட இருக்கும் வீட்டில் மட்டும் தான் தொல்லை) அவளவு தொல்லை இந்த சமூகத்துக்கு இந்த கடவுள் என்ற பாத்திரம் இருந்தால். எனவே அவர் சொல்லுவது போல முதலில் அந்த பூச்சியை (கடவுளை) அழித்து விட்டு சாதி,சமயம்,சாஸ்திரம்,மூடநம்பிக்கை இல்லாத ஒரு சமத்துவ சமூகத்தில் (வீட்டில்) வாழ்வோமே. அதற்க்கு உங்களால் ஆனா ஒத்துழைப்பை நம் எதிர்கால சந்ததியர்க்கு கொடுக்க வேண்டுகிறோம்.
கடைசியாக தந்தை பெரியார் அவர்கள் சொன்ன அறிவுரை இந்த நேரத்தில் நினைவு படுத்துவது மிகவும் சிறந்ததாகும் என்று நினைக்கிறேன்
எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-௧௯௭௩
பக்தி என்பது தனி சொத்து ஒழுக்கம் என்பது பொது சொத்து
பக்தி இல்லை என்றால் நட்டம் ஒன்றும் இல்லை
ஒழுக்கம் இல்லை என்றால் எல்லாமே பாழ்
மேற்சொன்ன அய்யாவின் அருமையான அந்த பொன்மொழிக்கு ஒரு உதாரணம். இப்போ நான் இருக்கேன்னு வச்சுகொங்கோ....பரணிதரன் இருக்காரே ரொம்ப சரியாய் வைகாசி வந்த ஐயப்பன் கோவில் மாலை போட்டு ரொம்ப பக்தியோடு அய்யப்பன் பார்க்க போய்டுவாருங்க. அதே மாறி புரட்டாசி ஆனா ஏழுமலையான் பாக்க போவாரு. அப்படி ஒரு பக்தியோடு இருப்பாருங்க....ஆனா என்ன சைக்கிள் பூட்டாம வச்சு இருந்த தூக்கிட்டு போய்டுவாரு அதாங்க ஒரு பெரிய கெட்ட பழக்கம்....எப்படி இப்போ சொல்லுங்க பக்தி முக்கியமா? ஒழுக்கம் முக்கியமா? எது அடுத்தவர்களை பாதிக்குது?......................
இந்த அடிப்படை விஷயம் பற்றி இன்னும் தேவைப்பட்டால் மேலும் எழுத நேரும்.........
மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்
வாழ்க பெரியார் ! வளர்க பகுத்தறிவு
அந்த விவாதத்தின் இறுதியில் அந்த தோழர் எப்படி முடிக்கின்றார் என்றால் "ஒன்றுமே இல்லாமல் இருந்த நம்மை, ஒரு தூளி விந்துதில் இருந்து , தாயின் கருவறை இல் உருவாகியவன் யார்?" என்ற இந்த வினாவோடு முடித்துகொண்டுவிட்டார். (இஸ்லாம் சார்ந்தவர்). இப்படி சொல்லித்தான் இஸ்லாமில் ....குடும்பக்கட்டுப்பாடு (family plan ) பண்ணாம ......? படிக்குற நீங்களே..................யோசித்துக்கொள்ளுங்கள்.
ஒன்றுமே இல்லாமல் நாம் இருந்தால் எப்படி குழந்த உருவாகும் .... ஆண்களுக்கு கீழே ஆண்குறி ...பெண்களுக்கு பெண் குறி ....இருந்தால் மட்டுமே அது சாத்தியம் (his question like this so we have to answer like this...sorry, no way to expose).....சாதாரண விஷயம் கூட யோசிக்க முடியாமல் எப்படி அந்த தோழர் இந்த வினாவை எழுப்புகிறார் என்று புரியவில்லை ...மேடும் பள்ளமும் இறைவனின் செயல் என்றால் மேட்டை வெட்டி பள்ளத்தில் போடுவது இறைவனுக்கு எதிரான செயல் என்று இவர் ஒப்புக்கொள்வாரா? மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு ஏன்?
பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் கடவுளுக்கு எதிரான செயல் தான். ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காகப் பட்டினி போட்டிருக்கும்போது நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமே யாகும். அதாவது, கடவுளே நம்பாத - கடவுள் செயலை நம்பாத செயலே யாகும்.தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்று காட்டிக் கொள்கிற எவரும், கடவுள் நம்பிக்கையாளர்கள் என்கின்ற எவரும் கடவுளை நம்பி எந்தக் காரியத்தையும் கடவுளிடம் விடுவது கிடையாது. தலைவலி வந்தால்கூட டாக்டரிடம்தான் செல்கிறார்கள். இவர்கள் எப்படி உண்மையான கடவுள் நம்பிக்கைக்காரர்களாக இருக்க முடியும்?
உயிரினகளின் பரிணாம வளர்ச்சிக்கு கடவுளுக்கு போகவே தேவை இல்லை....சார்லஸ் டார்வின் உடைய "பரிணாம கோட்பாடு" (Darwin's Theory of Evolution) என்ற நூலினை படியுங்கள் ....புரியும் ..அப்படியும் புரியலன்ன .....பகுத்தறிவு வேலை செய்யவில்லை என்று தான் மற்றவர்கள் நினைக்க கூடும்.
அந்த விவாதத்தின் நடுவில், புரட்சி கவிங்கர் கேட்ட கேள்வி "கோவிலுக்கென்று கொடுத்திடல் அறமா? கோடிகொடுக்கும் கல்வி தேடிடல் அறமா? மாந்தரிற் சாதி வகுப்பது சரியா? மக்கள் ஒரேகுலமாய் வாழ்வது சரியா?" அவரிடம் முன் வைத்தபோது, அந்த தோழர் கூறியது என்ன என்றால் அது நல்ல சிந்தனைதான் என்று கூறிவிட்டு அவர் ஒரு கட்டுரை அனுப்பினார். அந்த கட்டுரையின் தலைப்பு "நாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டாமா?" (சிரிப்பு வரும் கூடவே எரிச்சலும் வரும்..சிந்திக்க வேண்டாமா என்று கேட்டதற்காக அல்ல ....இப்படி நாத்திகம் மற்றும் ஆத்திகம் வேறுபாடு தெரியாம விவாதம் பன்னுரறேன்னு நினைத்து)
நாத்திகம் ஆத்திகம் குறித்து அறிவு ஆசான் அய்யா தந்தை பெரியார் அவர்கள் என்ன சொல்லுகிறார் பாருங்கள்.......இதோ
காரண காரியத்தைத் தெரிந்து அதன்படி நடப்பவன் நாத்திகன். வெறும் நம்பிக்கையை ஆதாரமாக வைத்துச் சாத்திரம் சொல்லுகிறது, பெரியோர்கள் சொல்லுகிறார்கள் என்பதை நம்பி அந்த நம்பிக்கையின் படி நடப்பவன் ஆத்திகன்.
நாத்திகன் என்பதற்குக் கடவுள் இல்லை யென்பவன் என்று பொருளல்ல; புராண இதிகாச வேத சாத்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர்களையே, அவற்றைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்ப்பவர்களையே, பார்ப்பனர்கள் நாத்திகர்கள் என்று எழுதி வைத்திருக்கின்றனர். இராமாயணத்தில் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்த புத்தர் முதலானவர்களை நாத்திகர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பகுத்தறிவுக்கும் நாத்திகத்திற்கும் உள்ள உறவு: சமுதாயச் சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொது உடைமை என்பதைப் போலவே நாத்திகமும் அறிவின் உண்மையான கடைசி எல்லையாகும்.
நாத்திகத்தின் பிறப்படம்: எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இட மில்லையோ அங்கெல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கின்றது. கிருத்துவையும், முகமது நபியையும் கூட நாத்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கு அவர்களது சமதர்மமும், சீர்திருத்தமும்தான் காரணமாகும்.
இப்பொழுதாவது தெரிந்துகொள்ளுங்கள் தோழரே .....நாத்திகம் என்றால் என்ன என்று. நாத்திகம் தொடர்பாக நான் ஒரு விளக்க உதாரணம் ஒன்றையும் பதிவு செய்கிறேன். நாத்திகம் என்பது மேல் சொன்னது போல சிந்தனையின் கடைசி முனை, அதாவது பகுத்தறிவை பயன்படுத்தி சிந்திபவர்கள் என்றுதான் பார்பனர்கள் கூறி இருக்கிறார்கள். எனவே நாத்திகம் என்றால் சிந்திப்பவர்கள் ...சிந்திப்பவர்கள் என்றல் நாத்திகர்கள். அப்படி இருக்க இவர் கொடுத்துள்ள தலைப்பே ("நாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டாமா?") முற்றிலும் முரணாக இருக்கிறது...இதிலேயே அந்த கட்டுரையானது விளக்கமில்லாத ஒன்று என்று புலப்பட்டு விட்டது எனக்கு.
அந்த கட்டுரையில் இருந்து இதோ ஒரு விளக்கம் கொடுக்கிறார் நமக்கு..
நாஸ்திகர்கள் கூறக்கூடிய கொடுமைகள் அனைத்தும் சமுதாயத்தில் இடம் பெற்றுள்ளன என்பதை நாமும் ஒப்புக்கொள்கிறோம்.
அதை அனைத்தையும் அகற்றி ஏற்றத் தாழ்வுகளை அகற்றி சமத்துவ சகோதரத்துவ சமுதாயத்தை அவர்கள் கொடுக்கும் திட்டம்தான் மிகவும் தவறான ஒரு திட்டமாகும். ஆபத்தான திட்டமாகும். அவர்களின் திட்டம் குறிப்பாக
தமிழகத்தில் எப்படிப்பட்ட நிலையை உண்டாக்கி இருக்கிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம். நாட்டில் மலிந்துகாணப்படும் கெடுதிகளுக்கு, இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே மார்க்கத்தை நேர்வழியை மதங்களாக்கி மக்களை பல பிரிவினர்களாக்கி அதன் மூலம் அற்ப உலக ஆதாயம் அடைந்து வரும் புரோகிதரர்கள் எந்த அளவு பொறுப்பாளர்களாக இருக்கிறார்களோ அதே அளவு அதில் எவ்வித குறையுமின்றி நாஸ்திகர்களும் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள்
என்பதை நாஸ்திகர்கள் உணரவேண்டும்.
கள் குடிப்பது கூடாது; குடி குடியைக் கெடுக்கும்; இது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. மக்களை இந்த உண்மையை உணரவைத்து அவர்களை குடியை விடச் செய்வதே அறிவுடையவர்கள் செய்யும் நல்ல முயற்சிகள். தென்னை மரத்திலிருந்துதானே கள் வருகின்றது, தென்னை மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டால், கள் குடி ஒழிந்துவிடும் என்று தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்துபவனை அறிவாளி என்று சொல்ல மாட்டார்கள். மாறாக, தென்னை மரத்தைக் கொண்டு மக்கள் பெறும் நல்ல பலன்களை மக்கள் இழக்க நேரிடும் என்பதே உண்மையாகும். குடிகாரன் தென்னை மரத்திலிருந்து கள் குடிக்கவில்லை என்பதற்காக குடியை விடப்போவதில்லை. ஸ்பிரிட்டைக் காய்ச்சி குடிக்க ஆரம்பிப்பான். அவனுக்கு வேண்டியது போதை. அந்தப் போதையை எப்படியெல்லாம் பெற்றுக்கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் பெற்றுக் கொள்ள முயல்வான். குடியை விடமாட்டான். இதே போல் மூட்டைப் பூச்சித் தொல்லைத் தாங்கமுடியவில்லை என்பதற்காக வீட்டைக் கொளுத்தி விட்டு காட்டில் போய் அவதிப்படமாட்டான். அறிவுள்ள மனிதன் வீட்டிலிருந்தே கொண்டே மூட்டைப்பூச்சித் தொல்லையைப் போக்க உரிய வழியையே பார்ப்பான்
இப்படிப்பட்ட ஒரு அறிவற்ற முயற்சிதான், இறைவனின் பெயரால் சிறு சாரார் பெரும் சாராரை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதற்காக இறைவனே இல்லை என்று நிலைநாட்டச் செய்யப்படும் முயற்சியுமாகும். கள்ளுக்கு பயந்து தென்னையை வெட்டி வீழ்த்தியதால், தென்னயிலிருந்து பெறப்படும் பயன்களை மனிதன் இழப்பதுபோல் சமூகத்தில் சிறு தொகையினர் மக்களை ஏமாற்றுகின்றனர் என்ற காரணத்தால் இறைவன் இல்லை என்று சொல்வது சமுதாயத்தில் பெரும்பான்மையினர் இறை நம்பிக்கையின் மூலம் அடையும் பெரும் பலன்களை இழக்கச் செய்வதாகும்..............
மேற்ச்சொன்னவை தான் அந்த கட்டுரையில் மிக பிரதானமாக வைக்கப்படும் உவமை. ஆனால் ஒன்று அதில் பத்தி என்பது ஒரு போதை என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார் என்பது மிக்க மகிழ்ச்சி......சரி நான் விவாதத்துக்கு வருகிறேன்... தலைப்பே சரியில்லை அப்போ எப்படி அவர்கள் கூறும் உவமை மட்டும் அறிவு பூர்வமாக இருக்க முடியும் (பத்தி வந்தால் புத்தி போய்விடும் என்று அய்யா அவர்கள் அடிகடி கூறுவார்கள் அது மிக மிக உண்மை). முதலில் ஒன்றுக்கும் உதவாத குத்துக்கல்லை (கடவுளை) தென்னை மரத்துடன் ஒப்பிடலாமா?. வேண்டுமானால் கருவை மரத்துடன் ஒப்பிடலமே ஒழிய தென்னை மரத்துடன் ஒப்பிட்டு எழுதி உள்ளது அறிவு வீழ்ச்சியை காண்பிக்கிறது. கருவை மரம் இருக்குற நிலம் பண்படாத நிலம். வேறு எந்த பயிரும் பண்ணமுடியாமல் உதவாக்கரை நிலமா மாறிடும். அதோடு மட்டும் அல்ல முதலில் அந்த மரத்தினால் எந்த பயனும் இல்லை ..அது போலத்தான் கடவுளும் .....கருவ மரம் இருந்தால் அதனுள் மனிதன் நடமாடவே முடியாது .....முள் குத்தும். அதுவே அதனை அடியோ வெட்டி அளித்தால் கரிக்கட்டைக்கு பயன் படும் இல்லை அடுப்பெரிக்க பயன்படும்...அது போலத்தான் கடவுள் என்பதை ஒழித்தால், ஒழித்தபிறகு நிறைய நன்மைகள் கிடைக்கும் (கருவ மரம் வெட்டிய பிறகு கரிக்கட்டைக்கு பயன்படுவது விட அதிகமான நன்மை கிடைக்கும் கடவுள் என்னும் கருவை மரத்தை ஒழித்தால்). எனவே தோழரே தயவு செய்து ஒப்பீடு என்பது அறிவு பூர்வமாக இருக்கட்டும். ஆத்திகர்கள் எப்படி ஒப்பீடு செய்வார்கள் என்பது இதன் மூலம் உங்கள் எல்லோருக்கும் விளங்கும்.
இன்னொரு சிறிய விளக்கமும் கொடுத்தாக வேண்டும் கள்ளை வேண்டுமானால் கடவுளுடன் ஒப்பீடு செய்யலாம் ஏனென்றால் கள்ளும் போதை கடவுளினால் ஏற்படும் பக்தியும் போதை (அவரே ஒப்புக்கொண்டுள்ளார்). எனவே அவரின் இந்த கட்டுரை முழுமையும் பத்தி போதை சூழ்ந்துள்ளதால் மப்பில் எழுதி விட்டார் போலும். குடி குடியை கெடுக்கும் என்பது போல பக்தி ஒழுக்கத்தை கெடுக்கும் என்று இனி எல்லா கோவிலின் நுழைவிலும் எச்சரிக்கை என்று போட்டு எழுத வேண்டும்.
மேலும் அதில் மூட்டை பூச்சி வீடு என்றெல்லாம் உளறி உள்ளார். அங்கேயும் ஒரு தவறு ...வீட்டை கொண்டு வந்து குத்துக்கல்லுடன் (கடவுளுடன்) ஒப்பீடு செய்துள்ளார். ரெண்டும் உயிரற்ற பொருள் என்று ஒப்பீடு செய்து உள்ளாரோ என்னவோ தெரியவில்லை. வீடு உயிரற்ற ஒன்றாக இருந்தாலும் நாம் உறைவிடம் அமைத்துக்கொள்ள பயன்படுகிறது. எனவே மூட்டை பூச்சி உடன் தான் ஒப்பீட வேண்டும். மூட்டை பூச்சி இருந்தால் எவளவு தொல்லையோ (இது கூட இருக்கும் வீட்டில் மட்டும் தான் தொல்லை) அவளவு தொல்லை இந்த சமூகத்துக்கு இந்த கடவுள் என்ற பாத்திரம் இருந்தால். எனவே அவர் சொல்லுவது போல முதலில் அந்த பூச்சியை (கடவுளை) அழித்து விட்டு சாதி,சமயம்,சாஸ்திரம்,மூடநம்பிக்கை இல்லாத ஒரு சமத்துவ சமூகத்தில் (வீட்டில்) வாழ்வோமே. அதற்க்கு உங்களால் ஆனா ஒத்துழைப்பை நம் எதிர்கால சந்ததியர்க்கு கொடுக்க வேண்டுகிறோம்.
கடைசியாக தந்தை பெரியார் அவர்கள் சொன்ன அறிவுரை இந்த நேரத்தில் நினைவு படுத்துவது மிகவும் சிறந்ததாகும் என்று நினைக்கிறேன்
எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-௧௯௭௩
பக்தி என்பது தனி சொத்து ஒழுக்கம் என்பது பொது சொத்து
பக்தி இல்லை என்றால் நட்டம் ஒன்றும் இல்லை
ஒழுக்கம் இல்லை என்றால் எல்லாமே பாழ்
மேற்சொன்ன அய்யாவின் அருமையான அந்த பொன்மொழிக்கு ஒரு உதாரணம். இப்போ நான் இருக்கேன்னு வச்சுகொங்கோ....பரணிதரன் இருக்காரே ரொம்ப சரியாய் வைகாசி வந்த ஐயப்பன் கோவில் மாலை போட்டு ரொம்ப பக்தியோடு அய்யப்பன் பார்க்க போய்டுவாருங்க. அதே மாறி புரட்டாசி ஆனா ஏழுமலையான் பாக்க போவாரு. அப்படி ஒரு பக்தியோடு இருப்பாருங்க....ஆனா என்ன சைக்கிள் பூட்டாம வச்சு இருந்த தூக்கிட்டு போய்டுவாரு அதாங்க ஒரு பெரிய கெட்ட பழக்கம்....எப்படி இப்போ சொல்லுங்க பக்தி முக்கியமா? ஒழுக்கம் முக்கியமா? எது அடுத்தவர்களை பாதிக்குது?......................
இந்த அடிப்படை விஷயம் பற்றி இன்னும் தேவைப்பட்டால் மேலும் எழுத நேரும்.........
மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்
வாழ்க பெரியார் ! வளர்க பகுத்தறிவு
Subscribe to:
Posts (Atom)







