வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, May 20, 2010

சிறையில் இருக்கும் பார்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்கள் என்று நீர் நினைக்கிறீர்?

ஒடுக்கப்பட்ட மக்களின் தலை நாயகரும், பவுத்த நெறி பரப்புவதில் தனிமுத்-திரை பொறித்தவருமான அயோத்திதாச பண்டிதரின் பிறந்த பெருமைக்குரிய நாள் இந்நாள் (20.5.1845).

சென்னை_ இராயப்-பேட்டை சாக்கிய பவுத்த சங்கத் தலைவராக இருந்து அரும்பணி ஆற்றியவர். 1907 ஆம் ஆண்டில் ‘‘தமிழ்’’ என்ற வார இதழை நடத்திய பெருமையும் அவருக்கு உண்டு.

பார்ப்பன வேதாந்த விவரம், நந்தன் சரித்திர விளக்கம், நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை, திருவள்-ளுவ நாயனார் பறைச்சிக்-கும், பார்ப்பானுக்கும் பிறந்-தார் என்னும் பொய்க்கதை விவரம் முதலிய நூல்களை எழுதிய சிந்தனையாளர் இவர்.

தோழர் ஒளிச்செங்கோ (கண்கொடுத்தவனிதம்) இவர் குறித்து ‘விடுதலை’ தந்தை பெரியார் மலரில் (1967) தெரிவித்த தகவலும், கருத்-தும் இக்கால இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டி-யவை.

1892 இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் திரு.சிவநாமசாஸ்திரி தலை-மையில் நடந்தது. கூட்டத்-தில் அவர் பேசும்போது, ‘‘வள்-ளுவர் பார்ப்பன விந்-துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடி-னார்;

‘சுக்கல_-சுரோனிதம்’ கலப்பறியாது’’ என்று குறிப்-பிட்ட போது, அக்கூட்டத்-தில் இருந்த அயோத்திதாச பண்டிதர் எழுந்து, நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால் நான் சில கேள்விகள் கேட்கவேண்-டும் என்றார்.

அதற்கு சிவநாமசாஸ்திரி சரி, கேளும் என்றார்.
‘‘நமது நாட்டில் தீண்-டாதவர்கள் என்று இழிவு-படுத்தப்படும் பறையர்கள் என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணை-யால் எம்.ஏ., பி.ஏ., படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக்கி-றார்-களே, அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்-கள் என்று எண்ணுகிறீர்?’’ என்று கேட்டார் அயோத்தி-தாசர். அதற்கு சிவநாம சாஸ்-திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்றுகொண்டிருந்தார்.

‘‘தொடர்ந்து, பெருங்குற்-றங்களைச் செய்து சிறைச்-சாலைகளில் அடைபட்டி-ருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்-கள் என்று நீர் நினைக்கிறீர்?’’ என்று அடுத்து வினாக்-களைத் தொடுத்தார்.

திருதிருவென்று விழித்-தார் சாஸ்திரிவாள். ஏன் பதில் சொல்லாமல் நிற்கிறீர்? சொல்லும் என்று சினந்து கேட்டுக் கொண்டிருந்த-போது கூட்டத்தில் இருந்த ஆனர-பிள் திரு.பி. அரங்கையா நாயுடுவும், திரு.எம்.வீரராக-வாச்சாரியாரும் அயோத்தி தாசரை அமைதிப்படுத்தி-னர். கூட்டத்தில் இருந்தவர்களும் சிவநாம சாஸ்திரியை இகழ்ந்து பேச ஆரம்பித்து-விட்டனர். சாஸ்திரிவாள் நைசாக உட்கார்ந்து, சிறிது நேரத்தில் நடையைக் கட்டிவிட்டார்.

அதுமட்டுமல்ல_ - இன்-றும் பார்ப்பனர்கள் பெங்-களூருவில் திருவள்ளுவர் சிலையைத் திறந்தால் மாதம் மும்மாரி பொழியுமா என்று கேட்கும் மனப்பான்மை-யில்தான் உள்ளனர்.

இன்றைக்கு 110 ஆண்டு-களுக்கு முன் தமிழினத் தன்-மான உணர்வோடு உஞ்ச-விருத்திக் கூட்டத்தை உதைக்காமல் உதைத்த அயோத்தி தாசரை நினைவு கூர்வோம்!

-விடுதலை (20.05.2010) மயிலாடன்

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]