வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, May 29, 2010

பார்ப்பான் நினைத்தால் மாட்டு மூத்திரத்தையும், சாணியையும் பஞ்சகவ்யம் என்று குடிக்கச் செய்துவிடுவானே!

பொதிகை தொலைக்-காட்சியில் திங்கள், செவ்-வாய்க் கிழமைகளில் எப்படிப் பாடினரோ? என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

அதில் ஒரு நிகழ்ச்சி தில்லைவாழ் நடராஜக் கடவுள்பற்றியது. தில்லை-யில் ஆடல் வல்லானின் ஆடல் கூத்து உலகம் இயங்கத் தேவையான படைத்தல், காத்தல், அழித்-தல், மறைத்தல், அருளுதல் என்ற அய்ந்து தொழில்-களையும் செய்துகொண்டே நடனமாடி, பார்ப்பவரை மனம் சுளிக்கச் செய்வதால், பெரும் களிப்பு எனப் பொருள்படும் ஆனந்தக்-கூத்து என்பதையும், திருநீலகண்டருக்கு முக்தி அளித்த கதையும் இடம்-பெறுகின்றன என்று தினமலர் எழுதுகிறது.

நடனமாடுவதுபோல அய்ம்பொன்னால் ஒரு சிலையைச் செய்து, கோயில் என்ற வீட்டைக் கட்டி அதற்குள் கொண்டு வைக்-கப்பட்ட பொம்மைக்கு படைத்தல் உள்ளிட்ட அய்ந்து தொழில்களைச் செய்யும் ஆற்றல் உடைய-தாகக் கதை கட்டியதும், அதனை இந்த 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்-திலும், அறிவியல் கருவி-யான தொலைக்காட்சியைப் பயன்படுத்தி இந்தப் பொய் மூட்டைகளை மக்கள் மத்-தியில் அவிழ்த்துக் கொட்டு-வதும் எவ்வளவுப் பெரிய மோசடி!

அந்த உலோகச் சிலைக்கு உலகத்தையே இயங்க வைக்கக் கூடிய ஆற்றல் இருக்குமேயானால், அந்தக் கோயிலுக்குள்ளேயே ஆண்டாண்டு காலமாகச் சுரண்டிக் கொழுக்கும் அர்ச்-சகப் பார்ப்பனப் பெருச்சாளி-களை எப்படி அனுமதித்து இருக்கும்?
சிதம்பரம் கோயில், தீட்சிதப் பார்ப்பனர்களின் பிடியிலிருந்து விடுவிக்-கப்பட்டு, இந்து அறநிலையத் துறையின்கீழ் கொண்டு-வரப்பட்ட நிலையில், 2009 பிப்ரவரி 5 ஆம் தேதி முதன்முதலாக முறையாக உண்டியல் வைக்கப்பட்டது.

இதுவரை ஆறுமுறை உண்டியல்கள் திறக்கப்பட்ட-தில் வசூலான தொகை ரூ.17 லட்சத்து 2735 ஆகும். இது-தவிர பிரசாதக் கடை ஏலத்திற்கான முன்தொகை உள்ளிட்டவைமூலம் கிடைத்த தொகை ரூ.24.5 லட்சம். ஆக மொத்தம் இந்த 14 மாதங்களில் ரூ.29 லட்சமாகும்.
அதேநேரத்தில், சிதம்-பரம் கோயில்பற்றிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்-தில் நடந்தபோது இந்தத் தீட்சிதப் பார்ப்பனர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்த தகவல் என்ன தெரியுமா? கோயில் ஆண்டு வருமானம் ரூ.37,199 என்றும், அதில் செலவு போக மிச்சம் ரூ.199 என்றும், பேட்டா செருப்பு விலை போலக் கூறினார்-களே, அப்படியானால், இத்தனை நூறு ஆண்டு-காலமாக இந்தக் கோயில் பூனைகள் ஏப்பமிட்ட தொகை எத்தனை எத்த-னைக் கோடி.

நெஞ்சாரப் பொய் கூறிப் பிழைப்பு நடத்திட இந்த முக்குடுமி தீட்சிதப் பார்ப்ப-னர்களைத் தடுக்காத, தண்டிக்காத இந்த சிதம்பரம் நடராஜர் என்னும் குத்துக் கல்லா ஆக்கல், காத்தல், அழித்தல் உள்ளிட்ட அய்ந்து தொழில்களையும் செய்-கிறது? பார்ப்பான் நினைத்-தால் பிரச்சாரத்தின்மூலம் மாட்டு மூத்திரத்தையும், சாணியையும் பஞ்சகவ்யம் என்று குடிக்கச் செய்துவிடு-வானே!

அப்படியிருக்கும்போது கல்லைக் கடவுளாக்கி நம்பச் செய்ய முடியாதா என்ன?
---- நன்றி  விடுதலை (28.05.2010) மயிலாடன்


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]