வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, May 19, 2010

தேசிய கீதத்திலிருந்து ‘திராவிடம்’ என்ற சொல்லை நீக்கமுடியுமா?

வங்கக் கவிஞர் இரவீந்-திரநாத் தாகூரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாள் நாடு தழுவிய அளவில் கொண்-டாடப்படுகிறது.

அவர் படைப்புக்காக நோபல் பரிசு பெற்றவர்; அவர் எழுதிய ஜன கன மன பாடல்தான் இந்தியா-வின் தேசியப் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் தேசிய கீத-மாகக் கொண்டு வரப்பட-வேண்டும் என்ற கருத்து வந்தபோது, அதனைக் கடுமையாக எதிர்த்தவர்கள் எம்.என். ராய், தாகூர் போன்றவர்கள் ஆவார்கள். அதன் மதவெறி நாற்றம் அவர்களை அவ்வாறு செயல்படத் தூண்டியது.

ஜன கன மன பாடலில் இந்தியத் துணைக் கண்டத்-தில் உள்ள பன்மொழி நாடு-களையெல்லாம் தவறாமல் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஒரு தகவலை இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
திருவனந்தபுரத்தில் திரா-விட மொழியியல் ஆய்வு மய்யம் ஒன்றை நடத்தி வந்தார். அவரின் படைப்பு-களுள் விழுமியது ‘திரவி-டியன் என்சைக்ளோபீடியா’ என்பதாகும்.

அன்றைய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோஷி-யைச் (பி.ஜே.பி.) சந்தித்து அந்த நூலை அன்பளிப்பாக வழங்கினார் வி.அய். சுப்பிரமணியம். நூலைப் பார்த்த மாத்திரத்திலேயே அமைச்சரான ஜோஷி பார்ப்பனர், ‘திரவிடியன்’ என்ற சொல்லை நீக்கிவிட-லாமே என்று கூறினாராம். சற்றும் தாமதியாமல் அறிஞர் வி.அய். சுப்பிரமணியம் அவர்கள் “நீங்கள் தேசிய கீதத்திலிருந்து ‘திராவிடம்’ என்ற சொல்லை நீக்கி-விடுங்கள்; நானும் ‘திராவிடக் களஞ்சியம்’ என்ற பெயரை நீக்கிவிடுகிறேன்’’ என்று பதிலடி கொடுத்தார். (ஆதாரம்: ஞிலிகி ழிமீஷ்s 2003, பிப்ரவரி)

அந்த வகையில் கவி தாகூர் இந்தியா என்பது பல மொழிகள், பல இனங்கள் கொண்ட ஒரு துணைக் கண்-டம் என்பதை மறைக்காமல் அந்தப் பாடலில் பதிவு செய்துள்ளார்.
மாஸ்கோவில் உள்ள பேராசிரியர் பீரிட்ரோ என்பவர் கவி தாகூருக்குக் கீழ்க்கண்ட தந்தியை அனுப்-பினார் (ஆண்டு 1929).

“ருசியாவில் கைத்-தொழில், விவசாயம், விஞ்-ஞான ஆராய்ச்சி, பல்-கலைக் கழகங்கள், பாடசாலைகள், கலை வளர்ச்சி இவை உயர்ந்த நிலையை அடைந்-ததற்கு நீங்கள் என்ன காரணம் சொல்லுகிறீர்கள்? அடுத்த அய்ந்து வருடங்-களுக்கு உங்களுக்குள்ள வேலைத் திட்டம் என்ன? அவைகளுக்குத் தடை யாது?’’ என்பதுதான் அந்தத் தந்தியின் வாசகம்.
அதற்குத் தாகூர் அனுப்-பிய தந்தி வாசகம் வருமாறு:

“உங்களுடைய வெற்-றிக்குக் காரணம் தனிப்பட்ட நபர்களிடமிருந்த செல்வம், மானிட சமூகத்தினிடம் வந்து சேர்ந்ததாகும். நாங்-கள் கீழ் நிலையில் இருப்ப-தற்கு எங்களுக்குச் சமூகத் துறையிலும், அரசியல் துறை-யிலும் ஏற்பட்டுள்ள

பைத்தியக்காரத்தன்மைகளும், வெறிபிடித்த தன்மைகளும், கல்வியில் முன்னேற்றம் அடையாததும்தான் கார-ணம்.’’ (‘குடிஅரசு’, 29.11.1931).

தாகூர் அன்று கூறியது இன்றும் பொருந்தும்தானே!
- விடுதலை(19.05.2010) மயிலாடன்


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]