வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label அண்ணா-பெரியார்-ஆரியர்கள்-பார்ப்பனர்கள்-கடவுள்-புராணம். Show all posts
Showing posts with label அண்ணா-பெரியார்-ஆரியர்கள்-பார்ப்பனர்கள்-கடவுள்-புராணம். Show all posts

Tuesday, September 06, 2011

கல்லை கல்லுன்னு நீ சொன்ன என்ன - நான் சொன்ன என்ன?

 முதலாளி: கடை வீதியிலே யாருட்டேயோ சொன்னியாமே - எங்க எஜமான் ஊருக்கு நல்லதுதான் செய்றாரு.ஆனா கோயிலில் இருக்கிறேதேல்லாம் கல்லுன்னு சொல்லுறாருன்னு சொன்னியாமே! அப்படியா சொன்னே கோயில்லே கல் இல்லாம வேற என்னாட இருக்கு?

வேலை ஆள்: சாமிதானுங்க எசமான் இருக்கு

முதலாளி: சாமியா? இங்கே வாடா (வருகிறான் பக்கத்தில்) ஒரு காலைத் தூக்குடா. கையை இப்படி வைடா. (நடராஜர் சிதம்பரத்திலிருப்பதுபோல் நிற்க்கச் செய்கிறார்). நிற்கிறான் வேலை ஆள். பத்திரிகை படித்துகொண்டு இருக்கிறார் முதலாளி.(வேலை ஆள் காலை ஊண்டுகிறான்). டேய் தூக்குடா காலை. நில்லுடா (மறுபடியும் காலை தூக்கி சிறிதுநேரம் நின்று விட்டு காலை ஊண்டுகிறான்). டேய் ஏண்டா உண்டுன. தூக்குடா காலை.

வேலை ஆள்:  காலை வலிக்குதுங்க எஜமான்

முதலாளி: ஏண்டா ரெண்டு நிமிஷம் நிக்கிறதுக்கு காலை வலிக்குதுன்னு சொல்றியே - அப்ப தூக்கின காலை இன்னும் கீழே ஊண்டாமே இருக்குதேடா?

வேலை ஆள்:  அது கல்லு எஜமான்

முதலாளி: என்ன அது கல்லா? ஏண்டா கல்லுன்ன சொன்ன? கல்லை கல்லுன்னு நீ சொன்ன என்ன - நான் சொன்ன என்ன? நான் சொன்ன ஏனடா எங்க எஜமான் கல்லுன்னு சொல்லுறாருன்னு எல்லார்கிட்டயும் போய் சொல்லுறே?

வேலை ஆள்:  இனிமே சொல்லமாட்டேனுங்க எஜமான்.

---------- அறிஞர் அண்ணாவின் சந்திரோதயம் நாடகத்தில் இருந்து ஒரு பகுதி.


Friday, July 15, 2011

நான் ஆரிய அடிவருடி எனக்கு பொத்துக்கொண்டு வரும்..

பார்ப்பனர்களை எதிர்க்க வேண்டும் என்றதும் உடனே சில அம்பிகள், ஏன் நீங்க அவர்கள் பள்ளிக்கு செல்கீறீர்கள் என்று அப்படியே  வீராதி வீரர் போல கேட்கவேண்டியது.....நீங்கள் எல்லாம் இப்படி சேர்ப்பதால் தான் இன்று அவர்கள் பள்ளிகளை நடத்திகொண்டிருக்கிரார்கள் என்று வியாக்கானம் வேறு...நாம் நம் பிள்ளைகளை சேர்க்கவில்லை என்றால் நல்லது நல்லது என்று குதி ஆட்டம் போடும் பார்ப்பன கும்பல்...தான் கொண்டுவந்த குலக்கல்வி வெற்றிபெறவில்லை என்று பதவில் இருந்து வெளியில் வந்தவர் தான் ராஜாஜி.....அந்த இனத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் நாம் கொண்டு சேர்க்கவில்லை என்றால் வருமானம் போய்விடும் என்று பள்ளியை மூடி விடுவார்களாம்..ஹி ஹி என்னத்த சொல்ல? இன்னும் சொல்லப்போனால்...வீடு வாடகைக்கே போகமால் வருமானம் வராமல் இருந்தாலும் பரவாஇல்லை.ஆனால் என் வீட்டுக்கு குடி வருபவன் பார்ப்பானாகத்தான்  இருக்க வேண்டும் என்று ஒரு வருடம் ஆனாலும் பிராமிஸ் ஒன்லி போர்டு தொங்கவிட்டு கொண்டிருக்கும் கூட்டம் தான் இந்த பார்ப்பனக்கூட்டம்...நம்மை போல பணத்தாசை,சொத்தாசை மட்டும் கொண்டு தன் இனத்தை மறக்கும் மடையர்கள் அல்ல பார்ப்பனர்கள்....அவாளுக்கு ஒரு வேட்டி ஒரு துண்டு போதும்....ஆனால் தான் உயர்ந்தவன் என்பதில் ஒரு சிறு கோளாறு வந்தாலும் தாங்கிகொல்லாத கூட்டம்.....எனவே இப்படி கேள்வி கேட்டுக்கும் அம்பிமார்கள் முதலில் இதனை அசை போடவேண்டும்.......

அப்படி பிராமின்ஸ் ஒன்லி போடும் கூட்டம் வெட்கம் கெட்டு வேறு வழியில்லாமல் இன்று  தாங்கள் நடத்தும் பள்ளியிலேயே நம் வீட்டு பிள்ளைகளுக்கு இடம் கொடுக்கும் அளவுக்கு வந்து இருக்கிறது என்றால் யாருடைய உழைப்பு? யார் ஆட்சியில் இருப்பதால்?.... இப்படி கல்வி மறுக்கப்பட்ட நமது வீட்டு பிள்ளைகளும் CBSE பள்ளியில் படிக்க வேண்டும் என்று போராடி போராடி பெற்ற உரிமை தான் இன்று நம் பிள்ளைகள் பார்ப்பனர் நடத்தும் பள்ளியில் படிப்பது.......

இன்றும் பல பள்ளிகள் அவர்கள் கட்டுப்பாட்டில் தான்....இப்படி இருப்பது கூட ஒரு ஆரோக்கியம் அல்ல....அதுவும் கூட நம்மவர்கள் சதவிகதத்துக்கு ஏற்ப நம் மக்கள் கைக்கும் வர வேண்டும்..... பார்ப்பனர்களை வீழ்த்த வேண்டும் என்றால் அவர்களை பொருளாதார ரீதியாக குறைப்பதோ..இல்லை அவர்களை கஷ்டப்படுத்தி அதில் குசி காண்பதுவோ நமது நோக்கம் அல்ல.....அவர்களையும் சக மனிதர்களுடன் ஒன்றாக இருக்க என்ன செய்யவேண்டுமோ அதனை செய்யவேண்டும்......  நிற்க..
 சாதியே இல்லன்னு சொல்லிட்டு
---பார்ப்பான் உபநயம் பண்ணி பூணூல் போட்டுக்கொள்ளலாம்...
--- தன் வீட்டை வாடகைக்கு விடும் பொது பிராமின்ஸ் ஒன்லி போர்டு தொங்கவிடலாம் (இதுல பாருங்கோ ஒரு வீட்டுக்கு இவா சொந்தக்காரர் என்றாலே பிராமின்ஸ் ஒன்லி போட்டு அவாளுக்கு மட்டும் இதே நாட்டுக்கு சொந்தக்காரர் என்றால் நாடே பிராமின்ஸ் ஒன்லி...எப்பா...இத கண்டிக்க கூடாது.....கயவர்கள்)
---எங்கே பிராமணன்னு தேடாலம்
---வெறுக்கத்தக்கதா பார்ப்பனியம் என்று கேட்கலாம்
---அனைத்து ஜாதியினரும் அர்ச்சகன் ஆகலாம் என்றால் அந்த சட்டத்துக்கு தடை ஆணை வாங்கலாம்
---ஆகம பள்ளியில் படித்து பயிற்சி பெற்ற பிற்படுத்தப்பட்ட/ தாழ்த்தப்பட்ட அர்ச்சகன் பிள்ளையாரை தொட்டு அபிசேகம் பண்ணினால் நான் பிராமணன் ....இனி அவர்கள் அபிசேகம் பண்ணின பிள்ளையாரை தொடமாட்டேன் என்று கூவலாம்....
----இந்து மகா சமுத்திரம் என்று தேடாலம்

இப்படி அடுக்கி கிட்டே போகலாம்........தங்களால் எதிர்க்க முடியவில்லை, தட்டி கேட்க முடியவில்லை என்றாலும் சுயநலம் இல்லாமல் தட்டி கேட்கும் கருப்பு மெழுகுவர்த்திகலாகிய எங்களுக்கு எதிர்ப்பு காட்டாமல் இருந்தால் நல்லது.....இல்லை நான் ஆரிய அடிவருடி எனக்கு பொத்துக்கொண்டு வரும் என்றால் நாம் ஒன்றும் செய்ய இயலாது..........


ஆர்.எஸ்.எஸ் என்பது எப்படி இந்துமத சனாதன, வருணாசிரம தர்மத்தை நிலைநாட்டி பிறப்பில் ஏற்றத்தாழ்வு உள்ளது என்று நிலைநாட்ட ஆரம்பிக்கப்பட்டதோ...அதே போல திராவிடர் கழகம் வருணாசிரம தர்மத்தை எதிர்த்து பிறப்பில் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை உண்டு பண்ணவே ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்......எனவே திராவிடர் கழகத்தின் நோக்கம் வருணாசிரம தர்மத்தை வளர்க்க இன்னும் தன் பூணூலை பிடித்துகொண்டு அலையும் பார்ப்பானை எதிர்ப்பதும் அதன் கொள்கை.........

எப்படி ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் போய் நீங்கள் இந்துமதம், பகவத் கீதை, ராமன் கோவில் என்று பேசியே கூட்டம் சேர்க்க பார்க்கீறீர்கள் என்றால் எவளவு அபத்தமோ....அவளவு அபத்தம் திராவிடர் கழகம் பார்ப்பானையும் அவர்கள் தூக்கி பிடிக்கும் பிறப்பால் ஏற்றத்தாழ்வு எனும் கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுப்பதை கூட்டம் சேர்க்க என்று கூச்சல் போடுவது......நினைவில் கொள்ளுங்கள்...

கடைசியா அறிவு ஆசான் தந்தை பெரியார் பார்ப்பனர்கள் பற்றி கர்ச்சித்த சில வார்த்தைகள்....

வாயில் - நாக்கில் - குற்றம் இருந்தா லொழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது; இபறவியில் மாறுதல் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது; ஆடு இறைச்சி உண்ணாது. அதுபோன்றதே பார்ப்பனர் தன்மை. தன் சுய இன நன்மை ஒன்றே அவர்கள் குறியாக இருக்கும்.

பார்ப்பான், பணக்காரன் என்ற இரண்டில், பணக்காரன் என்பது இயற்கையான பேதம் அல்ல; செயற்கையே யாகும். அதாவது எவனும் தான் பிறக்கும் போதே பணக்காரனாகவே பிறந்து பின் சாகும்போதும் பணக்காரனாகவே சாவான் என்பதில்லை. ஆனால், பார்ப்பான் பேதம் அப்படியில்லையே. அது அவன் அம்மா வயிற்றிலிருந்து வரும் போதே நான் பார்ப்பானாக வருகின்றேன் என்கின்றான்.

பார்ப்பானுடைய தர்மம் உடல் வியர்க்கப் பாடுபடல் கூடாது. பிச்சை எடுத்துப் புசிக்க வேண்டும். பார்ப்பான் கேட்டால் எந்தப் பொருளையும் உடனே கொடுக்க வேண்டியது நம்முடைய (சூத்திரம்) தர்மம். பார்ப்பான் யாரிடம் பிச்சை கேட்டாலும் தன் பொருளையே சொத்தையே வாங்கிக் கொள்கிறான். பூமி, பணம் எல்லாம் பார்ப்பானுடையது. அதைக் கொடுக்காவிட்டால் உதைத்து வாங்கலாம் என்பது பார்ப்பான் தர்மம். ஏர் கலப்பை, வட கயிற்றைப் பார்ப்பான் கையால் தொட்டாலே பாவம். நாம்தான் உழ வேண்டும்.

பார்ப்பனரின் நடத்தையும், கொடுமையும், அக்கிரமும்தான் நம்மைப் பார்ப்பானே வெளியேறு என்று கூறும் முடிவுக்கு வரச் செய்தது. பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டு மென்றால் அவர்களைக் கொண்று ஒழிப்பது என்பது அல்ல…. சாக்கடைக் கசுமாலமு ஒழிந்தால் எப்படி கொசு ஒழியுமோ அப்படி இந்த மதம், கடவுள், கோயில், புராணம் ஒழிந்தால் பார்ப்பனர் ஒழிந்து விடுவார்கள்.

சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் ஆகியவைகளில் தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல. இந்த நிலையில் உள்ள எல்லோரிட்த்திலுமே வெறுப்புக் கொள்கிறேன்.

பார்பானை  என்ன நாங்கள் இந்நாட்டில் இருக்க வேண்டாம் என்றா கூறுகிறோம்? தாராளமாக இருக்கட்டும் ஆனால் அவர்களு மனிதர்களாக இருக்கட்டும். தேர்களாக இருக்க வேண்டாம் என்றுதானே நாங்கள் கூறுகிறோம். எங்களுக்கும் மற்ற மதத்தவர்களுக்கும் இடையூறில்லாத எந்த உரிமையையும் பார்ப்பனர்க்கும் வழங்க நாங்கள் தயாராகத்தானே இருந்து வருகிறோம்.


Thursday, July 15, 2010

தமிழர்கள் நம்பும் பல கருத்துகளுக்கு ஆரியர் (பார்ப்பனர்கள்) கொண்டுள்ள உண்மையான கருத்து

(தமிழர்கள் நம்பும் பல கருத்துகளுக்கு ஆரியர் கொண்டுள்ள உண்மையான கருத்து)


கோயில்

கோவென மக்களை வெளியே அழ வைத்து வாழ்வதற்காக ஆரியர் தமிழரைக் கொண்டே கட்டிவைத்துக் கொண்ட இல்லங்கள்.

கும்பாபிஷேகம்
கும்பம்= வயது, அபிஷேகம்= ... செய்வது, ஆரியர் வயறு குளிர... வாழ்,ஓர் வழி.

அர்ச்சனை...

ஹர்- சேனை என்பதன் மருஉ. ஹர் என்ற கொள்ளைக் கூட்டத்தாரின் சேனை போல், தமிழரைக் கொள்ளையடிக்க உபயோகமாகும் தந்திரம்.

திராவிட மக்களின் செல்வத்தை வாழ்வையும் இந்த நாட்டிலே கரைக்க உபயோகித்த ஆயுதம். இன்று கொஞ்சம் கூர் மழுங்கிக் கிடக்கிறது.

அரன்.
அரம் என்பதன் திரிபு. தமிழர் வாழ்வைத் துண்டு துண்டாக்க உபயோகிக்கப்பட்ட அரம்= ஒரு ஆயுதம்.

கௌபீனம்.

தமிழருக்கு, அவர்கள் பட்டு பீதாம்பரம். பவுன்புட்டா சேலை முதலிய ஆடைவகைகள் செய்யும் திறமை உள்ளவர்களாக இருந்தாலும், யார் என்ன அணிய வேண்டும் என்பதைக் குறிக்கும் பதம். லகரம், னகரமாகி விட்டது. தமிழர்களுக்கு விஷயம் தெரியாமலிருக்க.

வினாயகன்
வினா- அகன், என்பதன் கூட்டுச் சொல். ஏன் இப்படி எங்களைத் துரத்தினீர் என்ற வினா தமிழர்களுக்கு தோன்றினாலும், அதை மனத்திற்குள்ளேயே முடங்கும்படி செய்வதற் காக ஏற்பட்ட கற்பனைத் தேவன், வினா அகன், என்பதை வினாயகன் என்று தொகுத்துத் தமிழருக்குத் தந்தோம்.

ராவணன்
ரா+வண்ணன், ராவணன் என்றாயிற்று, ரா= இரவு, வண்ணன்= நிறமுடையவன், அதாவது கரிய மேனியன், தமிழன்.

இதிகாசம்
இது, காசம், என்பது தமிழருக்குத் தெரியாதிருக்கும் பொருட்டு, இதிகாசம் என்று கூறப்பட்டது. இது= இந்தக் கதை, காசம்= கேட்டு நம்பினவருக்குக் கருத்து, காசநோய்க்காரரின் உடல் கெடுவது போல் கெட்டு விடும் என்பது புதைந்துள்ள பொருள்.

வேதம்

பேதம், என்பதையே, வேதம் என்று விளம்பினோம். நாட்டிலே பேதம் இருக்கவே, இந்த வேதம் பயன்படுவிதிலிருந்து, இந்த இரகசியம் விளங்கும்.

வைகுண்டம்

வை! முண்டம்! என்பதைத் திரித்து எழுதினோம். எம்மிடம், ஏமாறும் முண்டமே! வை, காசு பணம் என்று நம்மவர், திதி முதலிய காரியங்களின் போது தமிழரைக் கேட்க, வை குண்டம் என்ற இரகசிய கோட் (ஊடினந) உபயோகிக்கிறோம்.

கைலாயம்

தானை முன், என்பது முந்தானை என்று ஆயிற்று, தானை சேலை, முன்= முன்னால் இருக்கும் பாகம். அதுபோலவே லாயம் கை, என்பது கைலாயம் என்றாயிற்று. லாயம்= ஆரியருக்குச் செக்குமாடுகளாக உள்ள ஏமாளி களை அடைத்து வைத்திருக்கும் பட்டி, கை= நம்முடைய கையில் இருக்கிறது என்று, நம்மவர், தமிழரின் சடங்குகளிலே சொல்லுகிறோம். இதுவும் இரகசிய கோட் (ஊடினந) தேசிய சர்க்கார் எங்ஙனம் அமைப்பது, இங்கு மூன்று தேசங்கள் உள்ளனவே என்றுரைத்தாலோ, முப்புரிகள் முணு முணுக்கின்றன. பின்னர் எப்படித் தேசீய சர்க்கார் அமைப்பது! இதுசமயம் தேவை, தேசீய சர்க்காரால்ல, இன்று தேசீயம் என்பது, ஓர் கதம்பக் குழம்பாக இருக்கிறது. நாட்டுப் பிரிவினைக்குப் பிறகே, தெளிவான தேசீயம் தோன்ற முடியும்! இன்று அவசியமானது, போரைத் திறம்பட, வெற்றிகரமகா நடத்தித் தரக்கூடிய, பலமான சர்க்கார்- அதைப் பரிபூரண மாக ஆதரிக்கும் மக்கள்- அம்மக்களைக் சரியான வழியிலே நடத்திச் செல்லும் தலைவர்கள்- இவையே! இவைகட்குக் குறுக்கே நிற்பது, ஆச்சாரியார்ர் போன்றோர், அடிக்கடி விடும் அறிக்கைகள், சில சீமை மகாத்மாக்கள் விடும் யோசனைகள், பேட்டிகள் ஆகிய நிகழ்ச்கிகளே என்போம்.

தேசீய சர்க்கார் தேவை, தேவை என்று இன்று கூறும், ஆச்சாரியார், அதை அமைக்க, அவருக்கு இருந்த அருமையான சந்தர்ப்பங் களைத் தவற விட்டுவிட்டார் என்பதை, தர்க்கத் துக்காக அவர் மறுக்கலாமே தவிர, மனதார மறுக்க முடியாது!! போர் துவங்கிய உடனே, பிரிட்டனுடன் பேரம் பேசும் காரியத்திலே இறங்காது, பிணக்கு தீர, இங்குள்ள கட்சிகளைக் கலந்து சமரசம் உண்டாக்கியிருந்திருப்பின், இன்று ஆச்சாரியார் கோரும் சர்க்கார் இருந்திருக்கும்! அன்று அவரது ஆசை, வாலியை வீழ்த்த வேண்டும் என்பதன்றி வேறில்லை, இன்று விம்மிடுவது வீண் என்போம். இப்போதும், மூன்றாண்டுகட்கு முன்பு பேசியிருக்க வேண்டியதைப் பேசிக் கொண்டிருந்து பயன் இல்லை.

இன்று, ஆச்சாரியார் ஆங்கிலேயருக்கு, வேண்டுகோளோ, எச்சரிக்கையோ விடுவதை விட உண்மையிலேயே நாடு, ஜப்பானியரிடம் சிக்காமலிருக்க வேண்டுமென்ற எண்ணமிருப் பின், போர்க்காலத்திலே பேரம் பேசக்கூடாது என்று கூறிவிட்டு, களத்தை வேவல்கள் கவனிக்கட்டும், மக்களை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டு, மற்றத் தலைவர்களுடன் கலந்து பேசி, மக்களிடையே, போரில் வெற்றிபெறுவதற்கான ஆர்வம் பிறக்கும் வேலையைச் செய்தலே, முறை என்போம்.

கல்கத்தாவிலே ஆச்சாரியார் பேசிய போது, தமது காங்கிரஸ் சகாக்களுக்குச் சொன் னார், ``பிரிட்டிஷ் ஆட்சியை இத்தனை வருஷ காலம் பொறுத்துக் கொண்டோம், இனி இரண்டாண்டு பொறுத்துக்கொள்வோம்’’ என்ற அருமையான போதனை! அத்துடன் ஒன்று சேர்த்து ஆச்சாரியாருக்கு நாம் அர்ப்பணம் செய்கிறோம், இந்த மூன்றாண்டுகளாக உமது சகாக்கள் ஒதுங்கி இருந்தது போல், இன்னும் இரண்டாண்டு, வெற்றி கிடைக்கும்வரை, ஒதுங்கி இருக்கட்டும், இந்தச் சமயத்திலே, அவர்களை உள்ளே புகுத்தும் முயற்சி வேண்ண்டாம்.’’

இதனை நாம், எட்டு கோடி முஸ்லீம், நாலு கோடி திராவிடர், ஆறு கோடிக்கு அதிகமான ஆதிதிராவிடர் சார்பாகக் கூறுகிறோம். ``பவதி பிஷாந்தேஹி’ என்று, சியாங்கே ஷெக்கிடமோ, ரூஸ்வெல்ட்டிடமோ சென்று பயனில்லை என்று சீரிய புத்திமதி கூறிய டாக்டர் அம்பேத்காரின் அறிக்கையையும், கண்டவர். காற்றாடியைப் பறக்க விடும் கபடம் வேண்டாம் என்று ஜனாப்ஜின்னா விடுத்த எச்சரிக்கையையும், கவனப்படுத்துகிறோம்.

- அறிஞர் அண்ணாவின் கட்டுரை, திராவிட நாடு, 8-11-1942
                                                                                                                      

Tamil 10 top sites [www.tamil10 .com ]