வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, September 08, 2011

இதனை நினைத்தால் அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை


கருநாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையில் அமைந்திருந்த பா.ஜ.க. அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சுரங்க ஊழல் புகார் மன்னர்களான ரெட்டி சகோதரர்கள் அமைச்சர்களாக இடம்பெற்றிருந்தனர்.

தொடக்கம் முதலே அவர்கள் பிரச்சினைக்குரியவர் களாக இருந்தனர். தொடக்கத்தில் முதலமைச்சர் எடியூரப்பாவுடன் பிணக்கு ஏற்பட்டது.
கணிசமான எண்ணிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரெட்டிகளின் பக்கத்தில் இருந்ததால், எடியூரப்பா மிஞ்ச முடியாமல் கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டு ரெட்டி சகோதரர்களுடன் சமாதானம் செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

சுற்றுலா மற்றும் கட்டுமானத் துறை அமைச்சராக இருந்த ஜனார்த்தன ரெட்டி மீது லோக் அயுக்தா அறிக்கை குற்றப்படுத்திய நிலையில், அமைச்சர் பதவியை இழக்கும்படி நேர்ந்தது - இதன் தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 2009 ஆம் ஆண்டில் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி 45 கோடி ரூபாய் மதிப்பில் 30 கிலோ எடை கொண்ட வைரத்தினாலான கிரீடம் காணிக்கையாக அளித்தார். அதை மகிழ்ச்சி யோடு கோயில் நிருவாகிகள் ஏற்றுக்கொண்டு ஜனார்த் தன ரெட்டிக்குப் பரிவட்டம் கட்டிக் குதூகலித்தனர்.

ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் இருப்பதால், திருப்பதி கோயில் ஏழுமலையான் பக்தர்கள் ஊழல் பேர்வழி ஜனார்த்தன ரெட்டி ஏழுமலையானுக்குக் காணிக்கை யாக அளித்த வைர கிரீடத்தைத் திருப்பி அளிக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர்.

இதனை நினைத்தால் அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை. கோயில்களில் காணிக்கை செலுத்துப வர்கள் நாத்திகர்கள் அல்லர். பக்த சிரோன்மணிகள்தான் காணிக்கைகளைக் கொட்டுகின்றனர் - அப்படிக் கொட்டுபவர்கள் யோக்கியர்களா அல்லாதவர்களா என்ற அளவுகோல் வைத்துப் பார்க்க ஏதாவது ஏற்பாடு இருக் கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்!

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் திருத்தணி மாநாட்டில் ஒரு கருத்தைச் சொன்னார். கோயில் உண்டியலில் பணம் போடுவோர் காசோலையாகவோ (செக்), வரைவோலையாகவோதான் (டி.டி.) போடவேண்டும் என்று  விதியை வையுங்கள். எத்தனைப் பேர் காணிக்கை செலுத்துவார்கள்? இப்பொழுது குவியும் அளவுக்குப் பணம் குவியுமா என்ற அர்த்தம் நிறைந்த கேள்வியை யதார்த்தத்தோடு கேட்டார்.

என்ன பாவங்கள், குற்றங்கள் செய்திருந்தாலும், அவற்றை மன்னிக்கவேண்டும் கடவுள் என்பதற்காகத் தானே காணிக்கையே செலுத்துகிறார்கள்?
இதன் பொருள் என்ன? காணிக்கை செலுத்துவோர் அத்துணைப் பேரும் பாவம் செய்தவர்கள்தானே - குற்றம் புரிந்தவர்கள்தானே?

ஊர் நன்றாக இருக்கவேண்டும், உலகம் நன்றாக இருக்கவேண்டும் என்று கோரி காணிக்கை செலுத்துபவர் களைக் காட்டுங்கள் பார்க்கலாம்.
விஷ ஊசி போட்டுக் கொன்று பணத்தைக் கொள்ளை அடித்தவன், கொள்ளை அடித்த பணத்தை எந்தெந்த கோயிலில் காணிக்கையாகப் போட்டேன் என்று சொல்லவில்லையா?

பிரபல கடத்தல்காரனான வரதன் முனுசாமி மும்பையில் கோளிவாடா என்ற இடத்தில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டவில்லையா?

அவன் சொன்ன செய்தி ஒன்றும் ஏடுகளில் வெளிவந்தது (4.10.1974).
நான் கடந்த மாதம் 15 ஆம் தேதி பம்பாயிலிருந்து புறப்பட்டு திருப்பதிக்குச் சென்று, தரிசனம் செய்துவிட்டு, பிறகு ராமேசுவரத்துக்குப் புனித நீராடச் சென்றேன். பிறகு சென்னைக்குத் திரும்பியபோது போலீசார் என்னைத் தேடுவதாகப் பத்திரிகையில் பார்த்தேன். உடனே போலீ சில் சரணடைந்துவிட்டேன் என்று கூறவில்லையா?

இதேபோல், எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டு களை அள்ளிக் கொட்ட முடியும்.

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கொலைக்குற்றம் சாற்றப்பட்டு, வேலூர் சிறையில் இருந்தவர் ஆயிற்றே! அவர் மூன்றரை கிலோ எடையில் இதே திருப்பதி வெங்கடாசலபதிக்கு தங்கப் பூணூல் அணிவித்தாரே!
அவர் கொலைக் குற்றத்திற்காகக் கைது செய்யப் பட்டபோது எந்தப் பக்தராவது ஏழுமலையான் தோளில் அணிவிக்கப்பட்ட அந்தத் தங்கத்தாலான பூணூலை அறுத்து எறியவேண்டும் என்று சொன்னதுண்டா?

ஒழுக்கக்கேட்டை வளர்ப்பதே பக்திதானே! பிராயச் சித்தம்தானே - பாவ மன்னிப்புதானே - தீர்த்தங்களில் முழுக்குப் போடுவதுதானே?

நாணயமற்ற முறையில் கொள்ளையடித்த பொருள் களைக் காணிக்கையாகச் செலுத்தும்பொழுது, எந்தக் கடவுள் ஓடிவந்து தடுத்து நிறுத்தியது? கடவுள் நம்பிக்கை என்ற ஒன்று தனி மனிதனையும், சமூகத்தையும் அரித்துத் தின்னும் புற்றுநோய் என்பதை உணர்க!

------- விடுதலை தலையங்கம், 08-09-2011


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]